Followers

Thursday, August 31, 2006

இந்து - இஸ்லாம் - கிறித்தவம் - ஓர் ஒப்பீடு

இந்து - இஸ்லாம் - கிறித்தவம் - ஓர் ஒப்பீடு

இந்து என்னும் பெயரானது இடைக் காலத்தில் இடப்பட்ட பெயராகும் என்று சுவாமி விவேகானந்தரும், நேருவும், சங்கராச்சாரியாரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதியிலே அது சனாதன தர்மம் என்றும் ஷஷ்வத் தர்மம் ஸ்வ தர்மம் என்றும் அழைக்கப் பட்டுவந்தது.

சனாதன என்னும் சமஸ்கிரத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும்.ஷஷ்வத் என்பதற்கு வானையும் பூமியையும் உயர்ந்த எண்ணங்களோடு ஒன்றினைக்கும் நேர்வழி என்று பொருளாகும்.இந்த சனாதனத்தையும் ஷஷ்வத்தையும் ஒன்றினைத்தால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும்.

இறைவன் குர்ஆனிலே இஸ்லாத்தை 'தீனுல் கய்யும' என்று குறிப்பிடுகிறான். 'தீனுல் கய்யும்' என்ற அரபி வார்த்தையைத் தமிழ்ப் படுத்தினால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும். இதன் மூலம் இரண்டு மதத்தின் பெயர்களும் ஒரே விளக்கத்தைக் கொடுக்கின்றன என்று நம்மால் அறிய முடிகிறது.

ஸ்வதர்மம் என்று பகவத் கீதை (18: 45: 47) குறிப்பிடுகிறது.

ஸ்வப்ஹவ நியாக் கர்மம் - 'மார்க்கம் இயற்கையானது. பெற்றோர்களது அல்ல' என்பது இதன் பொருள்.

இதையே தான் 'தீனுல் ஃபித்ரத்' என்று 'இயற்கையான முறையிலான மார்க்கம்' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதிலிருந்து சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம், என்பதெல்லாம் சமஸ்கிரத மொழியிலமைந்த இஸ்லாத்தின் மறு பெயர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஓரிறைக் கொள்கை!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரத்தை அறியாத தமிழர் எவரும் இல்லை எனலாம். 'நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள் இருக்கையில்' என்ற சித்தர்கள் பாட்டையும் இன்றும் நாம் மறந்து விட வில்லை. எனவே ஆரியர்கள் சனாதன தர்மத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பே திராவிடர்களாகிய நம் முன்னோர்கள் ஒரே இறைவனை வணங்கியும், சிலை வணக்கத்திற்கு எதிரான கொள்கையையும் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.
ஆரியர்களின் வணக்க வழிபாடுகளும் ஆதியில் ஓரிறையைச் சார்ந்தே இருந்துள்ளது. பிற்பாடு ஏற்பட்ட வழக்கம் தான் பல தெய்வ வணக்கம் என்பதை முன்பு பல ஆதாரங்களோடு பார்த்தோம்.

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை 'லா இலாஹா இல்லல்லாஹ்' இதன் பொருள் 'வணக்கத்துக்குரியவன் இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதாகும்.

'அல்லாஹ்' என்றதும் ஏதோ அரபு நாட்டுக் கடவுள். முஸ்லிம்களின் குல தெய்வம் என்று எண்ணி விட வேண்டாம். இந்த பிரபஞ்சத்தை படைத்து காத்து அருள் செய்யும் மாபெரும் ஆற்றலுடையவனை தமிழிலே கடவுள் என்றும், ஆங்கிலத்திலே காட் என்றும், ஹிந்தியில் பகவான் என்றும், பார்ஸியிலே குதா என்றும், ஹீப்ரூவிலே எலோய் அல்லது எலோஹிம் என்றும், அராமிக்கில் ஏலோய் அல்லது எல்லோய் என்றும் அழைப்பது போல் அரபி மொழியில் அல்லாஹ் என்று அழைக்கிறோம்.

முஸ்லிம்கள் ஒரே இறைவனை 'அல்லாஹ்' என்னும் பெயர் கொண்டு அழைப்பதற்கு காரணம் அரபு மொழி விசுவாசத்தால் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் என்னும் பெயர் ஏக இறைவனால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு பெயராகும். இன்னும் அனைத்து மத வேதங்களில் அறிமுகப் படுத்தப் பட்டு அங்கீகரிக்கப் பட்ட பெயராகவும் இருக்கிறது.

இந்து மதத்தின் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் இறுதியில் 'அல்லாஹ் உபநிஷர்' என்னும் தலைப்பில் ஒரு உபநிஷத்தே இடம் பெறுகிறது. அதில் ஒரு சுலோகம் கூறுகிறது.

'இல்லாம் தபர இல்லாம் இல்லல்லே. இல்லல்லாம் ஓமல்லாம் இல்லல்லாம் தியான நிஸ்வரூபாயா'

இதன் பொருள் : 'அல்லா - அந்த ஏக தெய்வத்திற்கு யாதொரு இணையுமில்லை. சத்திய தெய்வத்தின் ஓம்கார சப்தத்தை வாழ்த்துங்கள்'

பைபிள கூறுகிறது

'அல்லேலூயா' கர்த்தருடைய ஊழியக் காரரே துதியுங்கள். கர்த்தருடைய நாமத்தை துதியுங்கள்.'
113 : 1 - சங்கீதம்

ஹிப்ரு மொழியில் கர்த்தருடைய திரு நாமம் 'அல்லேலூயா' என்று பைபிள் கூறுகிறது. கிறித்தவர்கள் 'அல்லேலூயா' என்று ஜெபிப்பதைப் பார்க்கிறோம்.

'அல்லேலூயா' எனும் பெயரின் இறுதியில் இடம் பெறும் 'யா' என்பது விளிவேற்றுமை சொல்லாகும் யா = (ya)…

'அல்லேலூயா' என்பதை 'யா அல்லோலு' என்று எழுதினாலும் கூறினாலும் பொருள் மாறுவதில்லை.

ஹிப்ரு மொழி என்பது அரபு மொழிக்கு சகோதர மொழியாகும். ஹிப்ரு மொழியிலான 'அல்லேலூயா' அல்லது 'யா அல்லேலு' என்பதற்கு இணையான அரபு மொழி வார்த்தை 'யா அல்லாஹ்' என்பதாகும்.

கிறித்தவர்கள் ஏகஇறைவனை 'யாஅல்லேலு' என்றழைக்கிறார்கள். முஸ்லிம்கள் அதே ஏக இறைவனை 'யா அல்லாஹீ' என்றழைக்கிறார்கள்.

இன்னும் அல்லாஹ் என்னும் சொல்லுக்கு ஆண்பால், பெண்பால கிடையாது. பன்மை கிடையாது. ஆனால் அல்லாஹ் என்னும் சொல்லுக்கு மாற்றமாகப் பயன் படுத்தப்படும்எல்லா சொற்களுக்கும் பண்மையும் பாலும் கற்ப்பிக்கப் படுவதைக் காண்கிறோம். கடவுள் என்பதை கடவுளர்கள் என்றும் ஆண்டவன்என்பதை ஆண்டவர்கள் என்றும GOD – GODS – GODDESS என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். ஆகவே ஏக இறைவனின் தனித்துவத்தைக் காட்ட அந்த இறையை அல்லாஹ் எனும் பெயர் கொண்டு அழைக்கிறோம்.

அந்த இறைவன் எங்கிருக்கிறான்?

ஏழு வானங்களுக்கு அப்பால் அவனுடைய சிம்மாசன (அர்ஷ்) த்தின் மீதிருக்கிறான் என்று இஸ்லாம் கூறுகிறது.

அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான்.
20 : 5 - குர்ஆன்

அவனுடைய குர்ஸியும் வானங்களிலும் பூமியிலும் பரவி இருக்கிறது.
2 : 255 - குர்ஆன்

'அவனுடைய குர்ஸி என்பது இறைவனின் பாதத்தின் ஸ்தலமாகும். அர்ஷ் என்பதன் பெறுமதி பற்றி இறைவனைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்.' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : தாரகுத்னீ, ஹாகிம்

கிறித்தவ வேதமான பைபிள் கூறுகிறது

'கர்த்தருடைய சிம்மாசனம் பரலோகத்தில் இருக்கிறது.'
11 : 4 - சங்கீதம்

இந்து மதம் கூறுகிறது

எங்கு சென்று எதுவும் திரும்புவதில்லையோ அது என்னுடைய உயர்ந்த உறைவிடம் அதை சூரியன் பிரகாசிக்கச் செய்வதில்லை. சந்திரனும் இல்லை. அக்கினியும் இல்லை.
15 : 6 - பகவத் கீதை

மூன்று மார்க்கங்களும் இறைவனின் இருப்பிடத்தைப் பற்றிய செய்தியை ஒன்றாகவே சொல்கின்றன.

இத்தகைய உயர்வான இடத்தில் இருக்கும் ஏக இறைவனை யாரும் கண்டதுண்டா?

'என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது'
7 : 143 - குர்ஆன்

'பார்வைகள் அவனை அடைய முடியாது'
6 : 103 - குர்ஆன்

'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை'
1 : 18 - யோவான்

'அவன் மகாத்மா காணுதற்கரியவன்'
7 : 19 - பகவத் கீதை

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

'அர்ஜீனா! சென்று விட்டனவும் நிகழ்வனவும், இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான்.'
7 : 25,26 - பகவத் கீதை

மூன்று மார்க்கங்களுமே இறைவனைக் காண முடியாது. அதற்குரிய சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று கூறுகிறது. ஆனால் மூன்று மதங்களிலும் உள்ள மத குருமார்களில் சிலர் இறைவனை என் கண்ணால் பார்த்தேன் என்றெல்லாம் அவ்வப்போது புருடா விடுவார்கள். பாவம் அவர்களுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கு மக்களிடம் எதையாவது சொல்ல வேண்டும் அல்லவா!

'இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை'
32 : 3 - அதர்வண வேதம்

'யார் இயற்கையை வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்.'
40 : 9 - அதர்வண வேதம்

'அண்டத்தின் முக்கூறு மூலமான மண்ணுலகையும், விண்ணுலகையும் ஆக்கி பொருளனைத்தினையும் தனித்தியங்கி ஆதரவளிப்பவன் அவனே.'
1 : 15 : 4 - ரிக் வேதம்

'அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்.'
10 : 190 : 3 - ரிக் வேதம்

'ஒப்பாரிக்கு உலகை ஆள்பவன், இயங்கும் இயங்காப் பொருள்களுக்கும் தலைவன். ஆன்மாவுக்கு அகத் தூண்டல் அளிப்பவன்.'
1 : 89 : 5 - ரிக் வேதம்

'வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்'
8 : 1 : 1 - ரிக் வேதம்

'அந்த வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவன்தான்'
6 : 45 : 16 - ரிக் வேதம்

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்ட இறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்' என்று மேரியின் மகன் ஏசு கூறியதை நினைவூட்டுவீராக.

61 : 6 - குர்ஆன்

ஏசுநாதர் தன் மக்களிடம் 'தனக்குப் பிறகு அகமது என்ற பெயரில் ஒரு தூதர் வர இருக்கிறார்' என்று போதித்ததை இறைவன் இங்கு கோடிட்டுக் காட்டுகிறான்.

Shwetashvatara Upanishad Chapter 4 verse 20

It is mentioned in Shwetashvatara Upanishad

“na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam”.
“His form cannot be seen, no one sees Him with the eye”.
(Shwetashvatara Upanishad 4:20)

(The Principal Upanishad by S. Radhakrishnan pg. 737)
(And in Sacred books of the East Volume 15, the Upanishad part II, Page no. 253)

BHAGWAD GEETA 7:20

The most popular amongst all the Hindu Scriptures is the Bhagwad Geeta.

Bhagwad Geeta mentions
“Those whose intelligence has been stolen by material desires worship demigods” that is “Those who are materialistic, they worship demigods” i.e. others as deities besides the True God.
(Bhagwad Geeta 7:20)

It is mentioned in Bhagavad Gita
“He who knows Me as the unborn, as the beginning-less, as the Supreme Lord of all the worlds...”
(Bhagwad Geeta 10:3)

YAJURVEDA
Vedas are the most sacred amongst all the Hindu Scriptures. There are principally 4 Vedas: Rig Ved, Yajur Ved, Sam Ved, and Atharva Ved.

i. Yajurveda Chapter 32, Verse 3

It is mentioned in Yajurveda
“na tasya pratima asti”
“There is no image of Him”

It further says, “as He is unborn, He deserves our worship”.
(Yajurveda 32:3)

(The Yajurveda by Devi Chand M.A. pg. 377)

ii. Yajurveda Chapter 40 Verse 8

It is mentioned in Yajurveda Chapter 40 verse 8
“He is bodiless and pure”.
(Yajurveda 40:8)

(Yajurveda Samhita by Ralph I. H. Griffith pg. 538)

iii. Yajurved Chapter 40 Verse 9

It is mentioned in Yajurved
“Andhatma pravishanti ye assambhuti mupaste”
“They enter darkness, those who worship natural things.”
E.g. worship of natural elements air, water, fire, etc.
(Yajurveda 40:9)

It further continues and says
“They sink deeper in darkness those who worship sambhuti i.e. created things”
E.g. created things such as table, chair, idols, etc.

(Yajurveda Samhita by Ralph T. H. Griffith pg. 538)



மேற்கண்ட வேத வசனங்களின் மூலம் நம் அனைவரையும் படைத்தது ஒரே இறைவன் தான் என்ற முடிவுக்கு வருகிறோம். எனவே நம் கைகளால் படைத்தவைகளை விடுத்து நம்மை படைத்த அந்த ஒரே இறைவனையே வணங்குவோம். இறப்புக்குப் பிறகு சுவனத்தையும் பரிசாக பெறுவோம்.

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்.

மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!

மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'

17 : 37 - குர்ஆன்

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.

மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் முன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.

மலைகளின் உயரத்தை....

உலகின் மிக உயரமான மலை இமய மலை ஆகும். இம் மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இமய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட்டான். ஆனால் அந்த உயரத்திற்கு பூமியை துளையிட்டு மனிதனால் செல்ல முடியுமா என்றால் முடியாது என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. வலைப் பக்கத்திலேயே ஒரு சிலர் இறைவனை விட மனிதன் சக்தி படைத்தவன் என்று நாத்திக வாதம் பேசுவதைப் பார்க்கிறோம். அப்படிப் பட்டவர்களைப் பார்த்து இறைவன், 'இது போன்று ஆணவத்தில் பிதற்றி திரியாதே! உன்னால் பூமியைப் பிளந்து மலைகளின் அளவை அடையவே முடியாது' என்று எச்சரிக்கின்றான்.

விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் உயரத்திற்கு போக முடியாது என்று அடித்துச் சொல்கிறது.

தன் இனத்தை விட மற்ற இனம் தாழ்ந்தது என்று இன்றும் எழுதியும் பேசியும் வருபவர்களைப் பார்க்கிறோம். அதேபோல் நான் பெரும் சிந்தனையாளன், நான் இந்த நாட்டின் அதிபதி, நான் பெரும் கோடீஸ்வரன் என்றெல்லாம் இறுமாப்போடு உலகில் வலம் வருவோரையும் இன்றும் பார்க்கிறோம். இது போன்ற எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட குர்ஆனிய வசனம் அமைந்துள்ளது.

நீ வானத்துக்கு மேலே போகலாம், கணிணித் துறையினால் உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வரலாம். ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. எனவே வீண் பெருமை பேசி கர்வத்துடன் உலகில் நடக்காதே என்பது இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம். அதே போல் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு சொன்ன இந்த கருத்து இன்றும் இனி என்றும் மெய்ப்பிக்கப் படுவதால் இது நம்மைப்படைத்த இறைவனின் வார்த்தைதான் என்ற முடிவுக்கும் வருகிறோம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Friday, August 25, 2006

ஜிஸ்யா வரியும் மன்னர் ஒளரங்கஜேப்பும்!

ஜிஸ்யா வரியும் மன்னர் ஒளரங்கஜேப்பும்!

நம்முடைய வரலாற்றுப் பாட நூல்களில் எத்தனையோ பொய்களை அரங்கேற்றி இன்று வரை மாணவர்களுக்கு போதித்து வருகிறார்கள். இயற்கையாகவே ஒரு சில இந்துக்கள் எந்த காரணமும் இன்றி முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உமிழ காரணம் இளம் வயதில் படித்த இத்தகைய வரலாற்று பாட நூல்களே! அவற்றுள் ஒரு பொய் ஒளரங்கஜேப் முஸ்லிம அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியைப் புகுத்தி கொடுமை படுத்தினார் என்பது. இதை நாமும் நம்பி விடுகிறோம்.

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும் பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாக ஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான் ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

அடுத்து ஒளரங்கஜேப் மத வெறி உடையவரஇந்துக்களை கொடுமைப் படுத்தினார் என்ற கருத்தும் வரலாறுகளில் காணப்படும். ஒளரங்கஜேப் எப்படிப் பட்டவர் என்று தெரிந்து கொண்டால் இதற்கும் விடை கிடைக்கும்.

ஒளரங்கஜேப்பின்் உயில்மௌலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி ஒளரங்கஜேப்பின்் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து:

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும் என்பது என் விருப்பம். வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்து வைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன், தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்த பணத்தில்தான் (என் உடல்மூடும்) க·பன் துணி வாங்கப்பட வேண்டும். இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம்.
(என் கையால் எழுதப்பட்ட) குர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3. என்னுடைய சாமான்கள் அனைத்தும் -- துணிமணிகள், மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸமிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஒரு அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும். என்னைப் புதைத்த பிறகு, என்னுடைய முகத்தைத் திறந்து வைக்க வேண்டும். என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்துக்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5. எனது க·பன் துணி தடித்த கதர்த்துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவவேண்டாம். என் உடல்மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது.

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது. வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.

7. பல மாதங்களுக்கு என்னால் என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. நான் இறந்தபிறகு, என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளங்களும் கொடுக்கப்பட வேண்டும், ஏனெனில் கஜானா காலியாக இருக்கிறது. நிஅமத் அலீ எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன்தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயிலை.

8. என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்தக் கல்லும் வைக்கக் கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியில்லை.

9. எனது மகன் ஆஸம் டெல்லியிலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பிஜாபூர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பக்ஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.

கி.பி. 1658-லிருந்து 1707-வரை இந்தியாவை ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆண்ட ஆறாவது முகலாய மகா சக்கரவர்த்தியின் மரண விருப்பங்கள் இவை! அவருடைய விருப்பப்படியே சாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை இன்றும் ஔரங்காபாத்-தில் காணலாம்.
மேற்கண்ட உயிலின் வாசகங்கள், நவம்பர் மாதம் 7-ம் தேதி, 1976-ம் ஆண்டு தேதியிடப்பட்ட '·பதஹ்' என்ற வார இதழில், எஸ். அஜ்மீர் சிங் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்துப் போடப்பட்டது.

தன் முகத்தை மண்ணுக்குள் புதைக்க வேண்டாம் என்றும் திறந்த முகத்தோடு இறைவனை சந்திப்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் ஒளரங்கஜேப் கூறியிருப்பது அவருடைய சொந்தக் கருத்தே! மனிதர்களை புதைக்கும் போது உடல் முழுவதும மண்ணுக்குள் சென்று விட வேண்டும் என்று தான் முகமது நபியின் வாக்கு உள்ளது. ஒளரங்கஜேப்புக்கு தவறான தகவலை இது விஷயத்தில் யாரும் தந்திருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன்.

தமிழகம் வரை தமது ஆட்சியை ஒளரங்கஜேப்்விரிவு படுத்தியிருந்தார். இவ்வளவு எளிமையாகவும் குர்ஆனின் போதனைப் படியும் தன் வாழ்க்கையை அமைத்துக் ் கொண்டவர் இந்து மக்களை கொடுமைப் படுத்தியிருப்பாரா? அப்படியே கொடுமை படுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமே! மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! மேலும் மொகலாயர்களின் ஆட்சிக்கு முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விட முஸ்லிம்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 800 வருடம் இந்தியாவை அவர்களால்ஆள முடிந்தது.
ஒளரங்கஜேப் ஒரு விளக்கம்!

ஒளரங்க என்ற சொல்லிற்கு 'அரசு சிம்மாசனம்' என்று பொருள் வரும். 'ஜேப்' என்ற சொல்லுக்கு அழகு என்றும் பொருள். இவ்விரு பார்சிய சொல்லுக்கும் 'அழகிய அரசு சிம்மாசனம்' எனறு பொருள் வரும். ஆனால் 'ஒளரங்கஜேப்' என்று அழைப்பதற்கு பதிலாக 'ஒளரங்கசீப்' என்றே பலரும் கூறி வருகின்றனர் நமது நாட்டு பாடநூல்களிலும் ஒளரங்கசீப் என்றே இவர் பெயரை குறிப்பிடுகிறார்கள். ஒளரங்கஜேப்பின் பெயரையே மாற்றி அமைத்தவர்கள் அவரது வரலாற்றில் எந்த அளவு பொய்களை கலந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு திரு செ. திவான் எழுதிய Aurangazeb In The Light Of History எனும் நூலை பார்வையிடலாம்.

-தந்தையை சிறையில் தள்ளியவர்
-சகோதரர்களை கொன்று விட்டு சக்ரவர்த்தியானவர்
-இந்துக்களை வேலை நீக்கம் செய்தவர்
-சிவாஜியை அழிக்க முயன்றவர்
-இராஜபுத்திரர்களின் விரோதி
-சீக்கியர்களின் விரோதி
-மத வெறியர்

போன்ற பல குற்றச்சாட்டுகளும் கடைந்தெடுத்த பொய் என்பதை வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டள்ளது.
பாடப் புத்தகங்களில் வரலாறுகளை எழுதும் வரலாற்றாசிரியர்கள் இனி மேலாவது வரலாறுகளில் உண்மையை எழுதட்டும். அது முடியாத காரியம் என்கிறீர்களா?

நம்பிக்கையில் தானே நம் வாழ்க்கை ஓடுகிறது.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Monday, August 21, 2006

கவிதை அரங்கேறும் நேரம்! - சுட்டவைகள்

கவிதை அரங்கேறும் நேரம்! - சுட்டவைகள்

எப்பொழுது பார்த்தாலும் மதத்தை பிடித்தே தொங்கிக் கொண்டு இருக்கிறீர்களே! கதை கவிதை என்றெல்லாம் வித்தியாசமாக பதிவு போடக் கூடாதா? என்று தனி மடலில் சில நண்பர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கதைக்கு பிரச்னை இல்லை. குர்ஆனிலிருந்தே பல சிறிய வரலாறுகளை அவ்வப்போது கொடுத்து வருகிறேன். இந்த கவிதை மாத்திரம் நமக்கு வராதுங்க. ஆனால் கவிதைகளை ரசிப்பேன். அவவ்ப்போது படித்து ரசித்து நினைவில் நிற்கும் ஒரு சில கவிதைகளை பட்டியலிடுகிறேன். கவிஞர்களின் பெயர் நினைவில் இல்லை.

ரசித்த கவிதைகள்!

‘நான்கு வேளை சாப்பாடு அளவில்லா நொறுக்குத் தீனி நாலு காலு ஜீவன்கள் ஆடு, மாடு, என்று உள்ளே தள்ளி, நிலை தடுமாறி விழும்வரை பட்டை அடித்து நீராவி இஞ்ஜின் கணக்கா புகை விட்டு நெஞ்சுவரை வயிறு பெருக்கினால் நல் இதயம் எங்கே கிட்டும்?’


இயற்கை கொடுத்ததெல்லாம்இயல்பாய் கொடுத்திடமனசில்லாமல்போயிடுச்சுதண்ணீரோ தாய்பாலோதடைபோட்டு நிறுத்தியாச்சுகள்ளமில்லாபயிரும் வயிரும்காய்ஞ்சுதான் போச்சுமரத்தயெல்லம்வெட்டியாச்சுமாடிவீடும் கட்டியாச்சுதொல்லுலகில்நல்லோர் இருந்தும்எப்படி பெய்யும் மழை?


காவிரி

காவிரியைக் கடக்க

ஓடம் தேவையிலலை...- இனி

ஒட்டகம் போதும்

-------------------------------

கால காலமாய.....

காலிலே சலங்கை பூட்டி
கோவிலிலே ஆட விட்டீர்கள்

முதுகிலே சூடு வைத்து
அந்தப் புரத்திற்குள்
அனுப்பினீர்கள்!

உப்பில்லா உணவு கொடுத்து
மூலையிலே அமர்த்தினீர்கள்

சந்தேகம் வந்தபோதெல்லாம்
நெருப்பிலே இறக்கினீர்கள்

இப்போது.....
வேலைக்கு அனுப்பிவிட்டு
வேவு பார்க்கிறீர்கள்!

--------------------------------

பல்லவி

குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய்
குடங்களோடு அலைந்தோம்...

எங்கள் துயரம் தீர்க்க
எம்.எல.ஏ வைத் தேடினோம்

தொலை பேசியில்
எப்போது கேட்டாலும்
கிடைத்த பதில்...

'தூங்குகிறார்...'
'குளித்துக் கொண்டிருக்கிறார்....'

----------------------------------

மாற்று

கிராமத்து
வீடுகளில் கூட
ஹார்லிக்ஸ்,
காம்ப்ளான்
பாட்டில்கள்...

ஒன்றில் உப்பும்
இன்னொன்றில்
ஊறுகாயுமாக!

-----------------------------

அவதாரம்

வேலு நாச்சியாராய்
குதிரை மீது ஏறி வந்தேன்

இராணி மங்கம்மாளாய்
வீரவாள் சுழற்றினேன்

ஜான்ஸி ராணியாய்
எதிரிகளைப் பந்தாடினேன்...

குக்கர் சத்தம் கேட்டது
சமயலறைக்குள்
ஓடினேன்!

---------------------------

நன்றி

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.

இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்...
கைப்பிள்ளையின்
கால் கொலுசை
தடவியபடி!

-------------------------

விநாயகர்

வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்

நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்

மருத்துவ மனையில்
வினை தீர்க்கும் விநாயகர்

வழியோரங்களில்
வழிவிடும் பிள்ளையார்

குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்

அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்

நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

ஆஹா... கவிதை சம்பந்தமாக ஒரு பதிவு போட்டாச்சு.... இப்போ திருப்திதானே! J

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

இந்து மதத்தில் காணப்படும் மறுமை வாழ்வு!

இந்து மதத்தில் காணப்படும் மறுமை வாழ்வு!

எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். நம் அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட ஒன்று. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டா? இல்லையா? இஸ்லாம் மறுமைக்குப் பின் வாழ்வு உண்டு என்று குர்ஆனில் பல இடங்களில் தெளிவாக்குகிறது. இதைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

1)'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்

2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்
மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

3) சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

இறைவனை அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தரப்படும். அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் பொகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும்இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடத்திலிருந்து மன்னிப்பும் உண்டு.
47 : 15 - குர்ஆன்
இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற் செய்தி.கீழ்பகுதியில்ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.
57 : 12 - குர்ஆன்

4). யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்

கெட்டவர்கள் நரகத்தில் வீழ்த்தப் படுவார்கள்
11 : 106 - குர்ஆன்
நரகம் மிகக் கெட்ட தங்கும் இடமாகும்.
67 : 6 - குர்ஆன்

5). நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

அவர்களுடைய தலைகளுக்கு மேலிருந்தும் அவர்களுடைய பாதங்களுக்கு கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக் கொள்ளும்.
29 : 55 - குர்ஆன்
நரக நெருப்பு எரித்து மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்
74 : 30 - குர்ஆன்
நரக வாசிகளின் தேகத்திலிருந்து வடியும் சீழ்தான் அவர்களுக்கு குடி நீராக புகுட்டப் படும்.
14 : 16 - குர்ஆன்
கொதிக்கும் ஓர் ஊற்று ஜலம் புகட்டப் படும். முட்களைத் தவிர வேறு ஆகாரம் கிடையாது. அதனால் அவர்களுடைய தேகம் தழைக்கவும் மாட்டாது. பசியும் தீராது. நரகத்தில் வாழவும் மாட்டான். சாகவும் மாட்டான்.
20 : 74 - குர்ஆன்

மேற்கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் வசனங்களைப் படிக்கும் போது இவ்விரண்டையும் ஆக்கியவன் ஒருவனே என்பது தெளிவாகிறது. மேலும் பல விபரங்களை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

the Brahma Sutra of Hindu Vedanta is:

‘Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan”
“Bhagwan ek hi hai dusara nahi hai, nahi hai, nahi hai, zara bhi nahi hai”.
“There is only one God, not the second, not at all, not at all, not in the least bit”.


இறைவனே மிக அறிந்தவன்

தகவலுக்கு நன்றி

ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Thursday, August 17, 2006

குர்ஆனும் இந்து மத வேதங்களும் !

குர்ஆனும் இந்து மத வேதங்களும் !

ஒரு கதையை எடுத்துக் கொண்டாலே அதன் நடையை வைத்து இது சுஜாதா, இது பாலகுமாரன், இது தமிழ்வாணன் என்று கண்டு பிடித்து விடுவோம்.ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இலக்கியத்தில் ஒரு மரபாகவே கடைபிடிக்கப் படுகிறது. இதே போன்ற சில நியதிகள் இறைவன் கொடுத்த வேதங்களிலும் ஆங்காங்கே தென்படும்.இது போன்ற சொற்றொடர்கள் குர்ஆனிலும், இந்து மத வேதங்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்பதை இனி பார்ப்போம்.

1.' மாருத்பிஹி ராக்னா ஆஹாஹி'
'அக்னியின் ரகசியம் பாலைவன மக்களுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்டது'
1 : 19 : 1-9 -ரிக் வேதம்

இவை ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள சுலோகங்கள். இந்த சுலோகமானது திரும்ப திரும்ப ஒன்பது இடங்களில் தொடராக இடம் பெறுகிறது.

'ஃபபி அய்யி ஆலாயி ரப்பிகும் மாது கத்திபான்'
'உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்'
55 : 13 - குர்ஆன்

குர்ஆனிலும் மேலே குறிப்பிட்ட வசனம் 'அர்ரஹ்மான' என்ற அத்தியாயத்தில் திரும்ப திரும்ப 31 இடங்களில் வருகிறது.

2).'வைலுய் யௌமயிதில் லில்மகத்திபீன்'
'பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடுதான்'
77 : 15, 19, 24,28 - குர்ஆன்

மேற்கண்ட வசனம் குர்ஆனில் ஒரே அத்தியாயத்தில் பத்து தடவை திரும்ப திரும்ப வருவதைப் பார்க்கிறோம்.

'நா பான்ற மன்யசி ஷாம் ஜயக அத்ஹித் அனு அஸ்'
10 : 133 - ரிக் வேதம்

மேற்கண்ட சுலோகம் ரிக் வேதத்தில் ஐந்து இடங்களில் திரும்பத் திரும்ப வருகிறது.

3). 'இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி உள்ளோம். படிப்பினை பெறுவோர் எவரும் உண்டா?'
54 : 17 , 22, 32, 40

சந்திரன் என்ற அத்தியாயத்தில் மேற் சொன்ன வசனம் நான்கு இடங்களில் திரும்ப திரும்ப வருவதைப் பார்க்கிறோம்.

'கஷ்மி தேவயா ஹவிஷ வித்ஹெம் '
12 அத்தியாயம், யஜீர் வேதம்

மேற் கண்ட சுலோகம் யஜீர் வேதத்தில் ஒன்பது இடங்களில் திரும்ப திரும்ப வருகிறது.

'விட்டான்மி அஸ்யரோதசி'
1 : 105 - ரிக் வேதம்

மேற்கண்ட சுலோகம் ரிக் வேதத்தில் பதினெட்டு இடங்களில் தொடர்ச்சியாக வருகிறது.

குர்ஆன் மூல மொழியில் இருப்பது போல் இந்துக்களின் ஆதி கிரந்தங்களும் ஓரளவுக்கு மூல மொழியில் இருப்பதால் இந்த ஒற்றுமையைக் காண முடிகிறது. ஏசுவக்கு அருளப்பட்ட பைபிள் மூல மொழியான அராமிக்கிலும், யூதர்களின் வேதமான தோரா மூல மொழியான ஹீப்ரூவிலும் இன்று இருந்திருக்குமானால் குர்ஆன், பைபிள், தோரா, இந்து மத வேதங்கள் அனைத்தும் ஒரே நடையிலும் ஒரே கருத்தையும் கூறுவதைக் கண்டிருப்போம்.

துரதிர்ஷ்ட வசமாக அந்த வேதங்களெல்லாம் புரோகிதர்களால் மாற்றப் பட்டு விட்டது. அதே போல் ஆதி கிரந்தங்களான ரிக், யஜீர், சாம,அதர்வண வேதங்களிலும் வர்ணாசிரமக் கொள்கைகள் ஆங்காங்கே புகுத்தப் பட்டு விட்டது. 'வேதங்களில் சாதி' என்ற தலைப்பில் தங்கமணியும் இது சம்பந்தமாக விரிவாக விளக்கி இருந்தார். இத்தகைய இடைச் செருகல்களை வேதங்களைத் தொகுத்த வியாசரோ அல்லது இந்து மதத்தை இடையில் சீர் செய்த ஆதி சங்கரர் காலத்திலோ யாராவது ஏற்றி இருக்கக் கூடும். இது பற்றிய உண்மையை இறைவனே அறிவான்.

கல்கி அவதாரம்

1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி வந்து விட்டார் என்று பண்டிட் வேத பிரகாஷ் உபாத்யா 'கல்கி அவதார்' என்ற நூலிலே மிகவும் விரிவாக அலசி இருக்கிறார். இவர் இதற்காக வைக்கும் எட்டு ஆதாரங்களை என்னுடைய முந்தய 'இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற பதிவில் விரிவாக விளக்கி இருக்கிறேன்.

வெறும் வாய் வார்த்தையாக இதை இவர் கூறவில்லை. வேதங்களையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் ஆராய்ந்து அந்த விபரங்களை எல்லாம் ஆதாரங்களோடு தொகுத்துதான் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். வங்காளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இந்நூலை அலகாபாத் பல்கலைக் கழகத்திலிருந்து எட்டு பண்டிதர்கள் பார்வையிட்டு ஆதாரபூர்வமான செய்திகளையே தொகுத்து வழங்கியுள்ளார் என்று கூறி மதிப்புரை வழங்கி தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

'அந்த அராபியர் தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக (இறுதியாக) இருப்பார்'
1 : 163 : 1 - ரிக் வேதம்

'இறைவனின் தூதராகவும் தூதர்களில் முத்திரை (இறுதி) யாகவும் முகம்மது இருக்கிறார்'
33 : 40 - குர்ஆன்.

இரண்டு வேதங்களுமே முகமது நபி இறுதித் தூதர் என்று ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக விளக்குகின்றன.

'ஒரு மிலேச்ச புனிதமான ஆசாரியார் தனது சீடர்களுடன் தோன்றுவார். அவரத பெயர் முகமது ஆகும். அந்த அரபு மகா தேவரை (வானவர் போன்றவரை) 'பஞ்சஹவ்யா' விலும் கங்கை நீரிலும் நீராட்டி (அவரது அனைத்து பாவங்களையும் கழுவி) மனமார்ந்த பெரு மதிப்பையும் பக்தியையும் முன் வைத்துக் கூறுவர்.நான் உமக்குக் கீழ்படிகிறேன். மனித சமுதாயத்தின் பெருமையே! அரபு வாசியே! நீர் தான் சாத்தானை ஒழிக்க ஒரு பெரும் படையை திரட்டி உள்ளீர். நீர் மிவேச்ச நாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பட்டவராகவும் உள்ளீர்.நீர் அந்த மேலான பரம் பொருளின் மீது பக்தி கொண்டவருமே அவனின் அம்சமுமாய் இருக்கின்றீர். நான் உமது அடிமை. உமது காலடியில் என்னை ஏற்றுக் கொள்ளும்.'

3 : 3 : 5 - 8 பவிஷ்ய புராணம்

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபூ ஆசியா,

Thursday, August 10, 2006

இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?

இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?

ஒரே இறைவனையும் அவனால் அனுப்பப் பட்ட முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாமிலிருந்து கடைசி தூதரான முகமது நபி வரையுள்ள அனைத்து தூதர்களையும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்துக்கள் எந்த இறை தூதர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இறைத் தூதர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களை வைத்திருக்கின்றார்கள். மனிதர்களைப் பிரிக்கும் சாதி அமைப்புகளை உண்டாக்கும் வர்ணாசிரமத் தத்துவம் பிற்பாடு மனிதக் கரங்களால் ஏற்றப் பட்டிருக்க வேண்டும். வர்ணாசிரமக் கருத்துக்களை நீக்கி விட்டுப் பார்த்தால் குர.ஆன், பைபிள், தோரா, ரிக், யஜீர்,அதர்வண வேதங்கள் அனைத்தின் கருத்துக்களும் பெரும்பாலும் ஒத்துப் போவதைப் பார்க்கிறோம்.

யூத வேதமான தோரா அல்லது பென்ட்டாஸ் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு யூதரிடம் கேட்டால் அவர் மோஸஸ் மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.

கிறித்தவ வேதமான சுவிஷேஷம் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு கிறித்தவரைக் கேட்டால் இயேசு கிறிஸ்து மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.

இஸ்லாமிய வேதமான திருக் குர்ஆன் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு முஸ்லிமைக் கேட்டால் முகமது நபி என்று உடன் கூறி விடுவார்.

இதே கேள்வியை பழம் பெரும் வேதங்களுக்குச் சொந்தக் காரர்களான இந்துக்களிடம் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்கள் யார் மூலமாக அருளப் பட்டது என்று கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியாது.

இந்து வேதங்களை பகுத்து தொகுத்தவர் வியாசர் என்று சிலர் சொல்வர். வியாசர் எனும் சமஸ்கிரத சொல்லின் பொருளே தொகுப்பாளர் என்பதாகும். ஆனால் இங்கு தொகுப்பாளரைக் கேட்கவில்லை. வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்பதுதான் கேள்வி. இதே போல் தான் இஸ்லாமியரின் வேத நூலான குர்ஆனை முகமது நபிக்கு பிறகு புத்தக வடிவில் தொகுத்தவர் உஸ்மான் என்று வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிகிறோம்.

வேதம் என்றால் அது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும். எனவேதான் அதற்கு நாம் உயர்ந்த மதிப்பைக் கொடுக்கிறோம். மதம் என்று ஒன்று இருந்தால் அதற்கு வேதம் என்று ஒன்று இருக்க வேண்டும். அந்த வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்ற தெளிவு இருந்தாக வேண்டும். சாதாரணமாக அனுப்புனரோ பெறுநரோ இல்லாத ஒரு கடிதம் எவ்வளவு தான் உயர்ந்த நடையில் இருந்தாலும் மக்களிடம் எடுபடுவதில்லை. பழம் பெருமை வாய்ந்த இந்து சமுதாயம் நேர் வழிக் காட்ட வந்த வேதம் யாரால் அருளப் பட்டது என்ற தகவலை தொலைத்து விட்டு நிற்கிறது.

'ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு நேர் வழி காட்டியுண்டு' -(13 : 7) என்று குர்ஆன் கூறுகிறது.

அப்படியானால் இந்து சமுதாயத்திற்கு வந்த இறைத் தூதர் யாராக இருக்க முடியும்?

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது

ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”NOW OR NEVER” – written by Shames Navad

இதிலிருந்து இந்து சமூகத்துக்கு என்று வந்த தூதர்களில் வேதம் கொடுக்கப் பட்ட தூதர் நோவா என்று அறிய முடிகிறது.

இந்து வேதங்களில் எழுபத்தைந்து இடங்களில் தூதர் நோவாவுடைய குறிப்பு காணப்படுகிறது. இஸ்லாமியரின் வேதமான குர்ஆனில் முகமது நபியின் பெயர் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே குறிப்பிடப் படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் முகமது நபியை இறைத் தூதர் என்று நம்புகிறார்கள். எழுபத்தைந்து இடங்களில் நோவாவின் குறிப்பை தங்கள் வேதங்களில் வைத்திருக்கும் இந்துக்களோ நோவாவை ஏற்க மறுக்கிறார்கள்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் - குறிப்பிட்ட இனத்தினருக்கும் மட்டுமே உரியவர்கள் ஆவார்கள். ஆப்ரஹாம், இஸ்மாயீல் போன்றோர்கள் அரபு இனத்தவருக்காகவும், மோஸஸ், தாவூது, ஏசு போன்றோர் இஸ்ரவேல் இனத்தவருக்காகவும் நோவா அவர்கள் ஜலப் பிரளயத்திற்கு முன்பும், ஜலப் பிரளயத்திற்கு பின்பு சில காலமும் அன்றைய ஆதிக்கத்தின் சந்ததிகள் அனைவருக்கும் பொதுவான தூதராக இருந்தார். பிற் காலத்தில் அவர்கள் குமாரர்கள் மூலமாக சந்ததி பிரிந்த போது ஆரிய சமுதாயத்தினருக்கு மட்டுமான தூதராக நோவா இருந்திருக்கிறார்.

'நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'

4 : 163 - குர்ஆன்

இதன் மூலம் நோவாவுக்கு அருளப் பட்ட வேதத்தைப் போலவே அதற்கு பின் வந்த தூதர்களுக்கும் வேதம் அருளப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதத்திற்கும் முகமது நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்க வேண்டும் என்று தெளிவாகிறது. இந்த ஒற்றுமையைப் பற்றி 'இந்து மதம்போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற தலைப்பில் முன்பே எழுதியிருக்கிறேன். அது அல்லாமல் மேலும் சில ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்

அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்

3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்

அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்

கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்

இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்

6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்

இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்

8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்

அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்

9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்

ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.

10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்

அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்

11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்

12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்

இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்

மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்னளை தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.

ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இலக்கியத்தில் ஒரு மரபாகவே கடைபிடிக்கப் படுகிறது. இதே போன்ற சொற்றொடர்கள் குர்ஆனிலும், இந்து மத வேதங்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்பதை இனி பார்ப்போம்.


இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபூ ஆசியா,

Tuesday, August 08, 2006

உசிலம்பட்டி கொடுமைகளும் குர்ஆனின் எச்சரிக்கையும்!

உசிலம்பட்டி கொடுமைகளும் குர்ஆனின் எச்சரிக்கையும்!

'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்ட பெண் குழந்தை விசாரிக்கும் போது'

-குர்ஆன் 81 :8,9

'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.'

-குர்ஆன் 17 : 31

உசிலம் பட்டியிலும், சேலம் போன்ற பகுதிகளிலும் பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப் பால்,அல்லது நெல் மணிகளைக் கொடுத்து கொன்று விடும் பழக்கம் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இப்படிகொல்லப் பட்ட பெண் குழந்தைகள் மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் தன் பெற்றோர்களின் மேல் 'எந்த காரணத்திற்காக ஒரு பாவமும் அறியாத நாங்கள் கொல்லப் பட்டோம்' என்று வழக்கு தொடர்வார்கள் என்று மேற் சொன்ன வசனம் சொல்லிக் காட்டுகிறது. அனைவருக்கும் உணவளிக்கக் கூடியவன் இறைவன். அப்படி இருக்க உங்களுக்கு கொல்லும் உரிமையைக் கொடுத்தது யார்? என்றும் இறைவன் குர்ஆனில் கேட்கிறான்.கிராமங்களில் இந்த கொடுமை என்றால் நகரங்களிலோ ஸ்கேன் போட்டுப் பார்த்து வயிற்றிலேயே சமாதி கட்டும் பழக்கம் இன்றும் நடந்து வருகிறது.

இஸ்லாம் அரபு நாடுகளுக்கு வருவதற்கு முன்பு இதே போல் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து விடுவார்கள். பெண் குழந்தை பிறந்ததைக் கேள்விப் பட்டால் அவன் ஊருக்குள் வர வெட்கப் பட்டுக் கொண்டு இரண்டு மூன்று மாதங்கள் வெளியூர் சென்று விடுவானாம். அந்த அளவு மூடர்களாக அன்றைய அரபுகள் இருந்திருக்கின்றனர்.

முகமது நபிக்குப் பிறகு இரண்டாவது கலீபாவாக பொறுப்பேற்ற உமரைப் பற்றி நாம் அறிவோம். அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அன்றைய அரபியர்களின் மூட பழக்கத்தின் படி தன் குழந்தையை கொன்று விடுவது என்று உமர் முடிவு செய்கிறார். அதன்படி அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆளரவமற்ற இடத்துக்கு வருகிறார். பிறகு அங்கு தன் குழந்தையை உயிரோடு புதைப்பதற்காக குழியைத் தோண்டுகிறார். அப்பொழுது அவரது தாடியில் மண் ஒட்டிக் கொள்கிறது. இதைப் பார்த்த அந்த குழந்தை தன் கையால் அந்த மண்ணைத் தட்டி விடுகிறாள். குழி வெட்டி முடிந்தவுடன் அந்த குழந்தையை குழியில் இறக்குகிறார் உமர். அப்பொழுது அந்த சிறுமி 'நீங்களும் வரவில்லையா?' என்று அப்பாவியாக கேட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்ட உமர் மண்ணைத் தள்ளி அந்தக் குழந்தையை உயிரோடு சமாதியாக்குகிறார். எந்த அளவு அன்றைய சமூகம் கல் நெஞ்சம் படைத்ததாக இருந்திருந்தால் இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றியிருக்கும்.

பல வருடங்கள் கழித்து முகமது நபியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு உமர் இஸ்லாத்தை ஏற்கிறார். ஒரு நாள் முகமது நபியிடம் தன் பெண் குழந்தையை தன் கையாலேயே கொன்றதை நினைவு கூர்ந்து தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அவரைத் தேற்றிய முகமது நபி அறியாமைக் காலத்து பாவங்களை இறைவன் மன்னித்து விடுவதாக வாக்களித்துள்ளான் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.

உமருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்த காந்திஜி காங்கிரஸ் காரர்களைப் பார்த்து 'நீங்கள் நீதமான ஆட்சி நடத்த வேண்டும் என்றால் உமருடைய ஆட்சியைப் போன்று இந்தியாவை நடத்துங்கள்' என்று சொல்லும் அளவுக்கு உமருடைய இஸ்லாத்திற்கு பிறகான கடைசி காலங்கள் இருந்தன.

” எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அள வையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.”
-இது பெரியாருடைய எண்ணங்களாகும். இறைவன் சம்பந்தமாக பல மாற்றுக் கருத்துக்கள் நமக்கும் அவருக்கும் இருந்தாலும் சில விஷயங்களில் அவர் இஸ்லாத்தோடு ஒத்துப் போவதை பல இடங்களில் பார்க்கிறோம்.

//” எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய,//

எந்த ஒரு நூலும் அதன் உண்மையான மதிப்பு மனித குலத்துக்கு அதனால் விளைந்த நன்மையை வைத்தே என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்துகள் இல்லைதன் குழந்தையை தன் கையாலேயே கொன்ற உமர், முகமது நபியை கொல்வதற்காக வாளை எடுத்து வந்த உமர் குர்ஆனின் போதனைகளுக்குப் பிறகு எந்த அளவு பண்படுத்தப் பட்டார் என்பதை நினைத்து ஆச்சரியமடைகிறோம். அதே போல் எவ்வளவுதான் வறுமை ஏற்படினும் தமிழகத்தில் தன் குழந்தையை தன் கையாலேயே கொல்லத்துணியும் மாபாதகச் செயலை செய்யமுஸ்லிம்கள் துணியாததற்கு மேற் கண்ட குர்ஆனிய வசனங்களே காரணம். இஸ்லாத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதற்கும் குர்ஆனில் தீண்டாமைக்கு எதிராக வரும் வசனங்களே காரணம். அந்த அளவு குர்ஆனின் வசனங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துள்ளது.

பெண் குழந்தை கொல்லப் படுவதற்கு மூல காரணம் என்ன? வரதட்சணை கொடுமை. இந்த கொடுமையை அகற்றுவதற்கு நம் அரசாங்கமும், படித்தவர்களும், இளைஞர்களும் முயற்ச்சிக்க வேண்டும். இன்று அரபு நாடுகளில் மாப்பிள்ளை பெண்ணுக்கு சீதனமாக ஒரு லடசம்,இரண்டு லட்சம் என்று நம் நாட்டுக்கு நேர் மாறான வகையில் கொடுப்பதால் தற்போது பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு கொடுத்து சந்தோஷிப்பதை நாம் நேரிடையாகப் பார்க்கிறோம்.

'ஒரு மனைவியை விவாகரத்து செய்து இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள். அக்கிரமாகவும்,பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப்பிடுங்கிக் கொள்கிறீர்களா?' - குர்ஆன்(4 :20)

மேற்கண்ட வசனத்தின் மூலம் மணப் பெண்ணின் விருப்பத்தில் ஒரு பொற்குவியலையே தரலாம் என்று விளங்குகிறோம்். ஒருக்கால் பிணக்கு வந்து பிரியும் படி நேர்ந்தால் பெண்ணுக்கு கொடுத்த எந்த பொருளையும் திரும்ப வாங்கக் கூடாது என்றும் அது அக்கிரமம் என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது. இதை எல்லாம் உள் வாங்கிக் கொண்ட அரபு சமூகம் இன்று ஆண்கள் பணம் கொடுத்து திருமணம் முடிப்பதை பார்க்கிறோம். குர்ஆனின் போதனை அவர்களை அந்த அளவு மாற்றியிருக்கிறது. இதே போன்று பெண்ணுக்கு பணம் கொடுத்துதிருமணம் முடிக்கும் பழக்கத்தை தமிழகத்தில் கொண்டு வர இளைஞர்கள் முயற்ச்சிக்க வேண்டும். வரதட்சனை கொடுமை மட்டும் ஒழிந்து விட்டால் பெண் குழந்தைகள் கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் காட்டுமிராண்டித் தனம் முற்றிலுமாக ஒழிந்து விடும்.

'தங்க கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்!- பொருள்
தந்து மணம் பேசுவார்!

மாமன் தங்கை மகளான மங்கை
உனக்காக உலகை விலை பேசுவார்....
உலகை விலை பேசுவார்.....

தன் தங்கை மகளை தன்மகனுக்கு மணம் முடிக்க நினைக்கும் மாமன் பெண்ணுக்கு சீதனமாக உலகையே விலை பேச தயாராகிறான். இதன் மூலம் அன்றைய தமிழர்கள் பெண்ணுக்கு பணம், பொன் போன்றவற்றைக் கொடுத்தே மணம் முடித்திருக்கிறார்கள் என்று விளங்குகிறோம். பிறகு ஆரியர்களின் வருகையால் இந்த பழக்கம் மாற்றப் பட்டு அவர்களின் வழக்கமான வரதட்சனை இன்று தமிழர்களிடத்திலும் வேரூன்றி விட்டது.

சனாதன தர்மத்தையும், வரதட்சனைக் கொடுமையையும் தமிழுலகுக்கும் நம் பாரத நாட்டுக்கும் தந்த புண்ணியம் நம் நாட்டு ஆரியக் கலாசாரத்தையே சாரும்.


இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Sunday, August 06, 2006

திப்பு சுல்தான் - ஒரு பொருளாதார மேதை!

திப்பு சுல்தான் - ஒரு பொருளாதார மேதை!

1758 -ல் மராட்டியரிடமிருந்து மைசூரை ஹைதர் அலி கைப்பற்றுகிறார். அந்த நேரத்தில் ஆங்கிலேயரும் இந்தியாவில் கால் ஊன்ற இடம் தேடிக் கொண்டிருந்தனர். 1782-ல் ஆங்கிலேயருடன் நடந்த போரில் ஹைதர் அலி கொல்லப் பட்டுஅவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிக்கு வருகிறார். பதினேழு ஆண்டுகள் திப்புவின் ஆட்சி மைசூரில் நிலை பெற்றிருந்தது. திப்பு ஆங்கிலேயரின் பல சூழ்ச்சிகளையும் மிகவும் திறமையாக கையாண்டு அவர்களை வெற்றி கொண்டு வந்தார்.நீதிபதி கிருஷ்ணய்யர் கூட 'கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டில் ஊடுருவ விடாமல் தடுத்ததில் திப்புவுக்கு அதிக பங்குண்டு' என்று கூறுகிறார்.

ஆங்கிலேயருக்கு பெருத்த தலைவலியாய் திப்பு இருந்ததால் அவரைப் பற்றிய அவதூறுகளை வரலாறுகளில் நிறைய பரப்பினர். அதை முறியடிக்கும் விதமாகத்தான் sword of Tippu Sultan என்ற புத்தகத்தை எழுத நேர்ந்தது என்று அதன் ஆசிரியர் பகவன் எஸ் கித்வாய் கூறுகிறார்.

திப்பு சுல்தான் நீதியை நிலை நாட்டிய நீதிமான். நியாயத்தின்படி நடக்காத ஹைதராபாத் நிஜாம்களான முஸ்லிம்களையும் எதிர்த்தார். வெள்ளையருக்கு உதவிய இந்து மராட்டியர்களையும் எதிர்த்தார். கிறித்தவ வெள்ளையர்களையும் வீழ்த்திட களம் கண்டார்.

மிகச் சிறந்த ஆட்சியாளரான திப்பு பொருளாதார சீர்திருத்த சிற்பி. நம் நாட்டின் அடிப்படையே கிராமம் சார்ந்த விவசாயம் தான் என்பதை நன்கு உணர்ந்திருந்த திப்பு விவசாயம் செழிக்க உழவு மேம்பட அரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார்.

பூரண மது விலக்கில் உறுதியாக நின்றார். வாய்க்கால் வரப்புகள் தகராறுகளைத் தீர்த்திட கிராம பஞ்சாயத்துகளை உருவாக்கினார். இதனால் தேவையற்ற அலைச்சல் விவசாயிகளுக்கு இல்லாமல் போனது. குளங்களை வெட்டி நீர் வளம் காத்தார். புதிய அணைகளை வாய்க்கால்களை உருவாக்கி பசுமை குன்றாமல் செழிப்பான தேசத்தை ஏற்படுத்தினார்.

தரிசு நிலங்களை விளை நிலங்களாக ஆக்குவோருக்கு அவற்றை உரிமை ஆக்கினார். விவசாயிகளின் தேவைகளுக்காக உடனடியாக கடன்கள் வழங்கிட வகை செய்தார். விளை பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரிடையாக அரசே கொள்முதல் செய்யும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடச் செய்தார்.

அமல்தார் எனும் பிரதேச அதிகாரிகளுக்கு 'உங்கள் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குஅபராதம் விதிப்பதற்கு பதிலாக இரண்டு மா மரங்கள், இரண்டு பலா மரங்கள் இவற்றை இரண்டு கிராமங்களில் நட்டு அவை மூன்றடி உயரம் வளரும் வரை நீர் விட்டு பராமரிக்க வேண்டும் என்ற ஒரு விதியை (மைசூர் ஹாஸின் நிதி விதி எண் 126) அறிமுகப் படுத்தினார்.

1788- ல் தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு அவர் தெரிவித்த கருத்துக்கள் திப்புவின் தூர நோக்கான பொருளாதார சிந்தனைகளுக்கு சிறந்த எடுத்துக் காட்டு. 'நமது பொருளாதார மற்றும் தொழில் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நமது பாரம்பரிய பொருள்களின் உற்பத்தியை மட்டும் பெருக்கிப் பயனில்லை. நம்முடைய மண்ணின் தன்மை மக்களின் திறன் இவற்றை முற்றாகப் பயன் படுத்தும் வகையில் புதிய பொரள்களை உற்பத்தி செய்ய வேண்டும்'

திப்புவின் இந்த அறிவிப்பு அன்றைய உலகின் மிகப் பெரும் புரட்சி சிந்தனை என்பதில் ஐயமில்லை.

வெள்ளைக்கார வல்லூருகள் இந்த தேசத்தின் வளங்களைச் சுரண்டிக் கொள்ளையடித்து அள்ளிச் சென்று கொண்டிருந்த போது திப்பு சுல்தான் தன்னுடைய மறுமலர்ச்சி சிந்தனைகளால் வெளி நாடுகளில் தொழிற்சாலைகளை நிறுவி லாபம் ஈட்டி இந்தியாவுக்கு வளம் சேர்த்தார். வெள்ளைக்காரக் கம்பெனியிடம் எந்த உதவிக்காகவும் போய் நிற்கக் கூடாது என்று தன் மானத்துடன் திட்டங்கள் தீட்டினார்.

கட்ச், மஸ்கட், பெகூ, ஒர்மஸ், ஜித்தா போன்ற வெளி நாட்டு துறைமுகங்களின் அருகில் தொழிற்சாலைகளை நிறுவினார். துருக்கி, பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகளிலிருந்து தொழில் வல்லுனர்களையும் கைவினைக் கலைஞர்களையும் மைசூருக்கு வரவழைத்து தொழில் நவீனம் வளர வகை செய்தார். நுண்ணிய கருவிகள் கண்டு பிடிக்கப் படாத அக் காலத்திலேயே திப்புவின் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில் பீரங்கிகள், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் மட்டுமல்லாது, காகிதம், கடிகாரம், கண்ணாடிப் பாத்திரங்கள் போன்றவை அந்த வெளி நாட்டுக் கலைஞர்கள் மூலம் தயாரிக்கப் பட்டன.

பொருளாதார தன்னிறைவு பெற்ற தேசமாக திப்புவின் ஆட்சி திகழ்ந்தது.

தொழிற்சாலைகளை நிறுவும் போது சுற்றுச் சூழல் மாசுபாட்டை மெத்தக் கவனத்துடன் கருத்தில் கொண்டார். இதனால்

விவசாயமும் நவீனத் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக் கொன்று எதிரானவை என்ற நிலை அங்கே ஏற்படவில்லை. தொழிற் சாலைகளின் பெருக்கத்தால் விவசாயம் பாதிக்கப் படவில்லை.

மஸ்கட்டிலிருந்து முத்துக் குளிப்பவர்களை அழைத்து வந்து மலபாரில் முத்துச் சிப்பிகளை வளர்த்திட ஏற்பாடு செய்தார்.

இந்தியக் குதிரைகள் மற்றும் கோவேறுக் கழுதைகளின் தரத்தினை உயர்த்திட அரபுலகத்திலிருந்து உயர் இனக் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் இறக்குமதி செய்து இன விருத்தி செய்யும் ஆர்வமுள்ளவருக்கு அவற்றை விற்காமல் இலவசமாகவே தந்தார்.

மிளகு, மிளகாய் வற்றல், சந்தன மரம், ஏலக்காய், அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு ஊக்கம் தந்தார். இதனால் பெங்களூர் நகரம் ஒரு முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. பாரம் ஏற்றப் பட்ட சுமார் இருநூறு மாட்டு வண்டிகள் தினந் தோறும் மைசூர் எல்லையிலிருந்து கேரளாவுக்குச் சென்றன.

இந்தியாவின் வளங்களை சூறையாடத் துடிக்கும் ஆங்கிலேயர் மீது அவருக்கு ஆயிரம் வெறுப்பு இருந்தாலும் அவர்களின் ஆட்சி முறையில் உள்ள சிறந்த அம்சங்களை உள் வாங்கி சிறப்பாகச் செயல்பட்டார். முகலாயச் சக்ரவர்த்திகள், பிரெஞ்சுக் காரர்கள் ஆகியோரின் சிறப்பம்சங்களையும் பயன் படுத்தத் தவறவில்லை திப்பு.

திப்புவின் ஆட்சி நடைபெற்ற போது மைசூரைச் சுற்றிப் பார்த்த ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் மூர் கூறுகிறார் 'எங்கும் செழிப்பு, பசுமை, சாகுபடிப் பயிர், தரிசு நிலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆக்கப் பூர்வமான உழைப்பில் கவனம் சிதறாமல் ஈடுபடும் மக்கள். புதிய நகரங்களின் தோற்றம். வர்த்தக வளர்ச்சி. எங்கும் மகிழ்ச்சி சந்தோஷம். இவற்றை தமக்கு முன்னறிமுகம் இல்லாத நாட்டில் ஒருவர் கண்டால் அங்கே மக்கள் விரும்பும் நல்லாட்சி நடக்கிறது என்றே கூறுவார். திப்புவின் பூமியில் நான் கண்டதுவும் இதுவே. திப்புவின் அரசு பற்றி என் கருத்தும் இறுதி முடிவும் அதுவே.'

திப்புவின் மீது வெறுப்பை உமிழும் ஆங்கிலேய வரலாற்றாய்வாளரின் கருத்தே அது. இப்படி எதிரியும் போற்றும் வண்ணம் வாழிந்தவர் மாவீரர் திப்பு சுல்தான்.

இப்படி மண்ணின் வளம் கெடாமல் மக்களை வாழ வைத்து, எதிரிக்கு இடம் கொடாமல் தன் மானம் காத்த வரலாற்று நாயகனை 1799 மே நான்காம் நாள் வஞ்சகப் பேய்களின் இசைவோடு வெள்ளையர் வீழ்த்தினர். தப்பித்து ஓடிட எல்லா வகைகளும் விசாலமாகவே இருந்தன. எனினும் வெட்டுக் காயங்களையும் துப்பாக்கிக் குண்டுகளையும் ஏந்திக் கொண்டு உயிரை விட்டார் திப்பு சுல்தான். அந்தப் பெரு வீரன் தன் இறுதி மூச்சை விட்டு விட்டான் என்று உறுதியான பிறகு ஸ்ரீரங்கப் பட்டினத்தை வேட்டைக் காடாக்கினர் வெள்ளையர்கள்.

வீட்டுக் கதவுகளை உடைத்தனர். அசையும் சொத்துக்களை எடுத்தனர். பெண்களின் மானமும் கொள்ளைப் பொருளாயின.எங்கும் பிணம். மரண ஓலம். 120000 உடல்கள் ஆங்காங்கே கிடந்தன.

வரலாறு வஞ்சம் தீர்க்காமல் விடவில்லை. திப்புவின் வீழ்ச்சியால் குடி மக்களின் எழுச்சி வந்தது. வெள்ளையர் அரசு வீழ்ந்தது. திப்புவின் நோக்கம் அவர் இறந்த பின் நிறைவேறியது இறைவனின் உதவியால். எனவே அவர் இறந்த பின்னரும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திப்புவின் தூர நோக்கின் பலன்களை அனுபவித்துக் கொண்டே அவரின் வரலாற்றை புதைக்க முற்படுவது பெரும் பாவமன்றோ!

இந்தியா என்றொரு தேசம் வாழும் வரை திப்புவும் வாழ்வார். வாழ வேண்டும். வாழ விட வேண்டும். அதுவே திப்புவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

உதவிய நூல்கள்

திப்பு விடுதலைப் போரின் முன்னோடி

மாவீரன் திப்பு சுல்தான்.

Tuesday, August 01, 2006

சுஷ்மா சுவராஜ் - தாவூத் இப்றாகீம்

சுஷ்மா சுவராஜ் - தாவூத் இப்றாகீம்

பா.ஜ.க வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜீக்கும், பயங்கரவாதி தாவூத் இப்றாகீமுக்கும் இடையே பல ரகசிய தொடர்புகள் இருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைச் சொல்பவர் வேறு யாரும் அல்ல. பா.ஜ.க வின் முண்ணனி தலைவராக இருந்து விலகிய முன்னாள் டெல்லி முதல்வர் மதன்லால் குரானா இந்தக் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளார்.

டெஹல்கா, ஆபாச வீடியோ, போதை மருந்து, தேச விரோதிகனோடு தொடர்பு என்று பாஜக வின் முன்னணி தலைவர்களின் யோக்கியதைகள் சந்தி சிரிக்கும் வேளையில் சுஷ்மா சுவராஜ் மீது வெடித்துள்ள இந்தக் குற்றச்சாட்டு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வுக்கு அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் கலவரங்களும் குண்டு வெடிப்புகளும் ஏற்படுவது மதன்லால் குரானா பகிரங்கமாக கூறியுள்ள சுஷ்மா சுவராஜ் - தாவூத் இப்றாகீம் தொடர்புகள் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் பலமாக எழுந்துள்ளது.

மும்பையில் சமீபத்தில் ரயில்களில் தொடர் குண்டு வெடிப்புககள் நடந்துள்ளது. இச் சூழ்நிலையில் தாவூத் இப்றாகீமுக்கும், சுஷ.மா ஸ்வராஜீக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளி வந்துள்ளன. இதனை உளவுத் துறை அலட்சியப் படுத்தி விடக் கூடாது. உளவுத் துறை உன்னிப்பாக தேச விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண் காணித்து, உண்மை வெளியாவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- 'உணர்வு' வார இதழ்
21 - 27 ஜுலை, 2006