- சுவனப்பிரியன்

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது' - குர்ஆன் - 17 :37

Tuesday, October 31, 2006

துருக்கியில் இன்றும் பாதுகாக்கப்படும் நோவாவின் கப்பல்!

துருக்கியில் இன்றும் பாதுகாக்கப்படும் நோவாவின் கப்பல்!

இறைத் தூதர் நோவாவின் வரலாறு!

இறைவன் ஆதமிலிருந்து முகமது நபி வரை பல தூதர்களை மனிதர்களுக்கு வழி காட்டியாக அவ்வப்போது உலகுக்கு அனுப்பி வைத்தான். இது பற்றி குர்ஆன் கூறும்போது...

'நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த தூதர்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே! உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'
4 : 163 - குர்ஆன்

எல்லாத் தூதர்களைப் போலவே இவருக்கும் அவருடைய சமுதாயத்தவர் பல துன்பங்களைக் கொடுத்தனர்.

'நோவாவை அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே இறைவனை வணங்குங்கள். உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்க்குரியவன் வேறு யாருமில்லை. மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்.' என்று அவர் கூறினார்.
7 : 59
'நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழி கேட்டிலேயே காண்கிறோம்' என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர்.
7 : 60

'அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்றஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப் பட்டதுமில்லை.' என்றனர்.
'இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்.' என்றனர்.
23 : 24, 25 - குர்ஆன்

'என் சமுதாயமே! என்னிடம் எந்த வழி கேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்' என்று அவர் கூறினார்.
7 : 61
'என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை இறைவனிடமிருந்து அறிகிறேன்.'
7 : 62
'நீங்கள் இறைவனை அஞ்சவும் உங்களுக்கு அருள் செய்யப் படவும் உங்களை எச்சரிப்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?' என்றும் கூறினார்.
7 : 63

மேற் கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் அந்த மக்கள் நோவாவை நிராகரித்தது நமக்கு விளங்குகிறது.

நோவாவுடைய மனைவியையும், லோத்துடைய மனைவியையும் தன்னை மறுப்போருக்கு இறைவன் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் இறைவனிடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. 'இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்' என்று கூறப்பட்டது.
66 : 10 - குர்ஆன்.

இந்த வசனத்தின் மூலம் நபிமார்களின்மனைவியராக இருந்தும் தங்கள் கணவர்களின் போதனையை அந்த இரு பெண்களும் செவி மடுக்கவில்லை என்பதை அறிகிறோம். இதன் மூலம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து நபிமார்களின் மனைவியராய் இருந்தாலும் தூதர்களின் வழி நடக்கவில்லை என்றால் அவர்களும் நரகவாசிகளே என்பதை விளங்குகிறோம். இதில்குலப் பெருமையையும், குடும்ப பாரம்பரியத்தையும் காட்டி நாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்பவருக்கும் படிப்பினை உள்ளது. நல்லறங்கள் செய்யாதவர் தூதர்களின் மனைவியாய் இருந்தாலும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினை.

'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர். அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்' என்று அவர்கள் கூறினர்.
'அல்லாஹ் நாடினால் அவன்தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் அவனை வெல்ல முடியாது.' என்று அவர் கூறினார்
11 : 32,33 - குர்ஆன்.

அந்த மக்களே வரம்பு மீறி நோவாவிடம் 'இறைவனின் தண்டனையைக் கொண்டு வாரும்' என்றனர். எனவே 'இனி இந்த மக்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள்அழியும் நேரம் வந்து விட்டது என்று நோவாவிடம் கூறிய இறைவன் நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு கப்பலை தயார்படுத்த சொன்னான்.

'அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். 'நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்.' என்று அவர் கூறினார்.
11 : 38 - குர்ஆன்
'இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.' என்றும் கூறினார்.
11 : 39 - குர்ஆன்.

இறைவனின் வேதனை அந்த மக்களை சூழும் நேரமும் வந்தது.

'நமது கட்டளை வந்து தண்ணீர் பொங்கிய போது ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும் உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும் நம்பிக்கைக் கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்..'
11 : 40 - குர்ஆன்

இறைத் தூதர் நோவா மிகப் பெரிய கப்பலை செய்து அதில் அனைத்து ஜீவராசிகளில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியை இறைவனின் கட்டளைக்கொப்ப ஏற்றிக் கொண்டார். தன்னை நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களையும் அந்த கப்பலில்ஏற்றிக் கொண்டார். தன்னுடைய மகனையும் நம்பிக்கை கொள்ளுமாறும், கப்பலில் ஏறிக் கொள்ளும்படியும் உபதேசித்தார். அவனோ 'இறைவனின் கோபம் என்னை ஒன்றும் செய்யாது. நான் மலையின் மீது ஏறி தப்பித்துக் கொள்வேன்' என்று இறுமாப்போடு சொன்னான்.

'மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள். ஏக இறைவனை மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார்.
11 : 42 - குர்ஆன்

'ஒரு மலையின் மீது ஏறிக் கொள்வேன். அது என்னை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'இறைவன் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை.' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப் பட்டோரில் ஆகி விட்டான்.
11 : 43 - குர்ஆன்

ஒரு தூதரின் மகனாக இருந்தும் தன் தந்தையை இறைத் தூதர என விசுவாசம் கொள்ளாததால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விட்டான். குடும்ப பாரம்பரியத்தால் நான் சிறந்தவன் என்று சொல்லித் திரிபவர்களுக்கு பாடமாக மேற்கண்ட இறை வசனம் அமைந்துள்ளது.

'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞசிக் கொள். வானமே நீ நிறுத்து!' என்று கூறினோம். தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலையின் மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமானோர் எனவும் கூறப்பட்டது.
11 : 44

இந்த வெள்ளப் பிரளயமானது அதிகரித்து தண்ணீரின் அளவு மலைகளின் உயரத்திற்கு சென்றது. நோவா செய்த கப்பலும் தண்ணீரின் ஓட்டத்தோடு சென்று மலையின் மேல் நிலை கொண்டது.

இந்த மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் பதினாறாயிரம் அடியாகும். இதை அகிலத்தாருக்கு அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுகிறான்.

'நோவாவையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்கு சான்றாக்கினோம்.'
29 : 15 - குர்ஆன்.

இந்த வசனத்தின் மூலம் நோவாவின் கப்பல் இன்று வரைஅம்மலை மீது உள்ளது நமக்கு தெளிவாகிறது. இந்த மலை பனிப் பாறைகளால் அதிகம் சூழப் பட்டுள்ளது. தற்போது பூமியில் வெப்பம் அதிகரிப்பதால் வருங்காலத்தில் ஜூதி மலையின் மேல் படர்ந்திருக்கும் பனிப் பாறைகள் உருக ஆரம்பிக்கும். அந்த நாளில் இறைத் தூதர் நோவாவின் கப்பல் உலக மக்களின் பார்வைக்கு வரும். அப்படி கப்பல் வெளிப்படும் பட்சத்தில் அதனுள் நமக்கு பல்வேறு விபரங்கள் கிடைக்க சாத்தியம் உண்டு. அந்த கால மக்களின் வணக்கங்கள். நோவாவுக்கு அருளப்பட்ட வேதத்தின் உண்மை நிலை நமக்கு தெரிய வரலாம். அதே போல் தற்போது சர்ச்சையாகி இருக்கும் இந்துக்களின் வேதமான ரிக்,யஜூர்,சாம, அதர்வண வேதங்களின் உண்மை நிலை வரலாறு போன்றவை தெரிய வாய்ப்பிருக்கிறது. இதன் உண்மைகளை இறைவனே அறிவான்.

இந்த குர்ஆன் இறைவனின் வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

'முஹம்மதே! இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைபிடிப்பீராக! நம்மை அஞ்சுவோருக்கே நல்ல முடிவு உண்டு.'
11 : 49 - குர்ஆன்.

இது போன்ற செய்திகள் அன்றைய அரபு மக்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை காலமாகியும் இவை எல்லாம் நமக்கு புதிய செய்திகளாகவே தெரிகிறது. மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்? என்ற கேள்வி வருகிறதல்லவா?

குர்ஆன் இறை வேதம்தான். அது முகமது நபியின் வார்த்தை அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Wednesday, October 25, 2006

இறைத் தூதர் பற்றி - சகோதரர் எழிலுக்கு!

இறைத் தூதர் பற்றி - சகோதரர் எழிலுக்கு!

சகோதரர் எழில் எனக்கு அளித்திருக்கும் கேள்விகள்.


அன்பு சகோதரர் சுவனப்பிரியனுக்கு,

///சகோதரர் எழிலுக்கு!//உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள். //எந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவினேன் என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.//

மன்னிக்க வேண்டுகிறேன். இவ்வாறு நான் எழுதியதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு சில இடங்களில் நீங்கள் இவ்வாறு எழுதியது அதன் மீது தொடர்ந்து விவாதம் நடப்பதை நீங்கள் விரும்பவில்லை என்ற தோற்றத்தை தந்தது. அவ்வள்வே.

/////நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் நபிமார்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.'2 : 213 - குர்ஆன்ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல் தகுதி அவருக்கு இறைவனிடம் இருந்து வேதம் வர வேண்டும். ஒவ்வொரு தூதருக்கும் தான் வேதங்களை அருளியதாக இறைவன் குர்ஆனிலும் இதற்கு முந்திய வேதங்களிலும் குறிப்பிடுகிறான்.//
மிகச்சரியான வார்த்தை. இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல்தகுதி அவருக்கு இறைவனிடமிருந்து வேதம் வரவேண்டும். அப்படி வரும்போது அது இறைவனிடமிருந்துதான் வருகிறது என்ற அடையாளமும் வேண்டும். இல்லையெனில் அது உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்த வேதம்தானா என்ற சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது.அதற்கு கீழே இன்னொன்றும் எழுதியிருந்தேன். அதாவது "இந்த காலத்தில் உங்களிடம் குரான் அல்லது இயேசுவின் போதனைகள் இல்லை ஆகவே அதனை மேற்கோள் காட்டமுடியாது" என்று குறித்திருந்தேன். அதனை உங்கள் பதிலில் நீக்கிவிட்டீர்கள். இருப்பினும் நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்கிறேன்.

//என்னிடமும் வேதம் இருக்கிறது என்று யாரும் பொய் சொல்ல முடியாது. ஏனெனில் இறைவனின் வார்த்தைக்கும் மனிதனின் வார்த்தைக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கும். உதாரணத்திற்கு அரபி மொழி தெரிந்தவர்கள் குர்ஆனின் போதனைக்கும், முகமது நபியின் போதனைக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிதில் விளங்கிக் கொள்வார்கள். குர்ஆனின் எழுத்து நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும். முகமது நபியின் போதனைகளோ நாம் சாதாரணமாக உரையாடுவது போன்று சாதாரண மொழியில் இருக்கும். இதன் வித்தியாசத்தை மொழி பெயர்ப்புகளிலேயும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். மேலும் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளோடு மோதாமலும் அத்தகைய வசனங்கள் இருக்க வேண்டும். எல்லா காலத்துக்கும் பொருந்தியும் வர வேண்டும்.//

தயவுசெய்து குரான் உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்ததா என்று கேட்கவில்லை. இருப்பினும் அதனை உதாரணமாக பயன்படுத்துகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.ஒரு புத்தகத்தின் நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும் என்று சொல்வது subjective. ஒருவருக்கு உயர்ந்த தரமாக தோன்றுவது மற்றொருவருக்கு அப்படி தோன்றாமல் இருக்கலாம். ஒரு புத்தகத்தின் நடை மிக உயர்ந்த தரமாக இருக்கிறது என்று பத்து பேர் எழுதியதை மேற்கோள் காண்பித்தால், அதே புத்தகத்தின் நடை மிகச்சாதாரணமானது என்று இன்னொரு பத்து பேர் எழுதியதை வேறொருவர் மேற்கோள் காட்டலாம். அந்த புத்தகத்தை இறைவனின் வேதம் என்று கூறும் நபர்கள் அது மேலான நடை என்றும் அந்த இறைதூதரை ஒப்புக்கொள்ளாதவர்கள் அது கீழான நடை என்றும் சொல்லலாம். (உதாரணமாக கிரிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)காளிதாசரின் காவியங்கள் எந்த வித சமஸ்கிருதக்கவிதையையும் விட மிக மிக உயர்ந்தவை என்பது என் எண்ணமாக இருக்கலாம். அதன் கவித்துவமும் நடையும் மிகச்சிறந்தவை என்று நான் கருதலாம். நீங்கள் கருதாமல் இருக்கலாம். கம்பனின் கவி அமுது எட்டிய உயரங்களை இன்னமும் உலகத்தின் எந்த மொழிக்கவிதையும் எட்டியதில்லை என்று நான் கருதலாம். நீங்கள் அப்படி கருதாமல் இருக்கலாம். இவர்கள் இறைதூதர்களா? அவர்களது புத்தகங்களுக்கு குரான் போன்ற அந்தஸ்து உண்டா? கம்பன் சாதாரணமாக பேசுவதற்கும் கவிதையாக பொழிவதற்கும் வித்தியாசம் இருந்திருக்கும். அதனால் கம்பன் இறைதூதராக ஆவாரா? அறிவியல் சம்பந்தமாக எடுத்துக்கொள்வோம். ஒரு இறைதூதரை பின்பற்றுபவர்கள் அவரது புத்தகத்தில் உள்ளவை எல்லாம் அறிவியலை ஒத்து இருக்கின்றன என்று வாதிடலாம். மறுசாரார் அப்படி இல்லை என்று வாதிடலாம். இதனை இரண்டாம் நிலையில் வைப்போம்.ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?
//அடுத்து அந்த இறைத் தூதர்களுக்கு கொடுக்கப் பட்ட அதீத சக்திகள். அந்த மக்கள் தூதர்களிடம் அத்தாட்சியைக் கேட்கும் போது இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான். ஏசு இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறியதாக குர்ஆன் சொல்லும் போது...'உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து அதில் ஊதுவேன். இறைவனின் விருப்பப்படி அது பறவையாக மாறும். இறைவனின் விருப்பப்படி பிறவிக் குருடையும் குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன்.நீங்கள் உண்பதையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்'3 : 49 - குர்ஆன்அந்த மக்களை இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வதற்காக இறைவன் இது போன்ற சக்திகளை அந்த தூதர்களுக்குத் தருவான். இதைப் பார்த்தும் இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வர். முகமது நபி காலத்தில் சந்திரன் பிளந்த அற்புதத்தை கேரள அரசன் சேரமான் பெருமாள் தன் சாளரத்தின் வழியாகப் பார்த்து அதிசயிததார். பிறகு தன் ஆஸ்தான ஜோதிடர்களிடம் இது பற்றிக் கேட்க அவர்கள் முந்தய வேதங்களை ஆராய்ந்து அரபுலகில் தூதர்அவதரித்திருப்பதன உண்மையை விளக்குகின்றனர். அதன் பிறகு அரசர் இஸ்லாமியராக மாறி முகமது நபியைச் சந்திக்க மெக்கா நோக்கி புறப்பட்டதையும் நாம் நம் நாட்டு வரலாறுகளில் பார்க்கிறோம். கண்ணதாசனும் கல்கியில் 'சேரமான் காதலி' என்ற தொடரை எழுதியதையம் நாம் அறிவோம். இது போன்று பல அற்புதங்களினால் நாம் ஒருவரை இறைவனின் தூதர் என்று முடிவு செய்கிறோம்.//

அடுத்து, நீங்கள் குறிப்பிடுவது போன்ற வித்தைகளை செய்யும் ஏராளமானவர்கள் இந்தியாவில் இருந்தார்கள். ஏன் இன்னமும் இருக்கிறார்கள். இன்றும்கூட பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா? ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலாம். குஷ்டத்தை இன்று மருத்துவர்கள் நீக்குகிறார்கள். பிறவிக்குருடரையும் இன்று பார்வை உள்ளவராகா மாற்றும் தொழில்நுட்பம் வந்திருக்கிறது. (பரிசோதனையில் இருக்கிறது). இந்த மருத்துவர்களும் சுவிசேஷ பிரச்சாரகர்களும் இறைதூதர்களா?ஒரு மேஜிக் ஷோவின் போது, நான் வீட்டிலிருந்து எடுத்து வந்த ரூபாய் நோட்டின் எண்ணை மந்திரவாதி சரியாகச் சொன்னார். இப்படிப்பட்ட திறமையான மந்திரவாதி கூறுவதையும் இறைதூதர் கூறுவதையும் எப்படி வித்தியாசப்படுத்தி பார்க்கப்போகிறீர்கள்?சந்திரன் இரண்டாக தெரிவது முகம்மதுவின் சாட்சியம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மேலும் இன்னொரு முறை கூறுகிறேன். முகம்மது இறைதூதரா அல்லவா என்பது என் கேள்வி அல்ல. இரண்டு மூன்று நபர்கள் ஆளுக்கொரு கண்கட்டு வித்தை செய்து தனது சாட்சியமே இறைவன் அளித்தது என்று கோரினால், நாம் எப்படி உண்மையான இறைதூதரை கண்டுபிடிப்பது என்பதுதான்.(ஆனால், சந்திரனோ சூரியனோ இரண்டாக தெரிவது கானல் என்று சொல்லப்படும் மிராஜ் வகையைச் சார்ந்த ஒரு நிகழ்வு. ஒரு சந்திரன் இரண்டாக தெரிவது அதிசயமல்ல என்று உங்களுக்கு தெரியும் என்று கருதுகிறேன். வெப்பக்காற்று மேலெழும்போதோ அல்லது குளிர்காற்று மேலெழும்போதோ, அந்த காற்று ஒரு கண்ணாடி போல நின்று அந்த காற்றின் ஒரு பக்கத்திலிருக்கும் சந்திரனை பிரதிபலித்து இரண்டாக காட்டும். இதன் பெயர் லாட்டரல் மிராஜ் lateral mirage. பக்கவாட்டில் இன்னொரு சந்திரன் தோன்றும் லாட்டரல் மிராஜ் அபூர்வமாக தென்படும். ஆனால் அது அதிசயமல்ல.இன்னொருவர் சூரியன் இரண்டாக தெரியும்போது, என் சாட்சியம் இது என்று கூறினால், நாம் எப்படி அதனை புரிந்து கொள்ள வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு மிராஜ் நடக்கும்போது அதனை ஒருவர் இதுதான் என் சாட்சியம் என்று ஏமாற்றினால் நம்மால் எப்படி அடையாளம் காண முடியும்?)ஆகவேதான், எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவான அடையாளம் ஒன்றை கேட்கிறேன். இந்திய தூதுவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு இலச்சிணையை இந்திய அரசு கொடுப்பது போன்று, இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.

/////இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே? பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்//'அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.'2 : 117 -குர்ஆன்'இறைவன் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்ததாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கைக் கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.'2 : 118 - குர்ஆன்.தன்னுடைய அடியானான எழில் மற்றொரு அடியானான சுவனப்பிரியனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று இறைவனுக்குத் தெரிந்ததால்தான் பதிலை இறைவன் குர்ஆனிலேயேத் தருகிறான்.//

நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை? சாதாரண மக்களும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடியதாகத்தானே இறைதூதரின் குணாம்சங்கள் இருக்க வேண்டும்? இவ்வாறு கேள்வி கேட்கும் வரைக்கும் மக்களை வைத்திருப்பது ஒரு முக்கியமான இறைதூதரை அனுப்பிவிட்டு அதற்கு தக்க சாட்சியங்களை அனுப்பாமல், கேள்வி கேட்பவரை பார்த்து "அறியாதோர்" என்று சரியாகப்படவில்லை. இதனைப்பற்றி இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் பதிவு சம்பந்தமாக எழுதியதில் எழுதியிருக்கிறேன்.நம்பிக்கை கொள்ளும் சமுதாயம் என்றால் என்ன? யாரேனும் ஒருவர் தன்னை இறைதூதர் என்றுகூறினால் உடனே நம்பும் சமுதாயமா? அதாவது எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. எந்த ஆதாரமும் கேட்கக்கூடாது. எந்த சான்றும் கேட்கக்கூடாது. நான் இறைதூதர் என்று ஒருவர் கூறினால் உடனே நம்பிவிடவேண்டும் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் இரண்டு பேர் நான் இறைதூதர் அவர் இறைதூதர் இல்லை என்று கூறினால் யாரை நம்புவீர்கள்? இருவருமே ஒரு சில வித்தைகளை செய்து காட்டுகிறார்கள். இருவரும் எனக்கு இறைவன் கொடுத்த சான்று இது என்று கூறுகிறார்கள். யார் உண்மையான இறைதூதர் என்று நம்புவீர்கள்?
//ஒரு முதலாளி தன் வெலைக்காரனை அனுப்பி தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த முதலாளியால் கடையில் சென்று வாங்குவதற்கு இயலாது. அதனால்தான் அவர் வேலையாட்களை வைத்துள்ளார் என்று நாம் கூற மாட்டோம். அவரால் அந்தக் காரியத்தை செய்ய முடியும். என்றாலும் அவர் தனது அந்தஸ்து காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்கோ கூட வேலையாட்களை வைத்திருக்கலாம். இந்த உதாரணத்தை உங்கள் கேள்வியோடு பொருத்திப் பாருங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும். இறைவனால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் இங்கு மனிதர்களை நேர்வழிப் படுத்த வேண்டும். மனிதர்களை நேர்வழிப் படுத்த மனிதர்களைத்தான் தூதராக அனுப்ப முடியும். ஒரு மனிதன் எப்படி இறை வணக்கம் புரிவது? எப்படி திருமணம் செய்து கொள்வது? கொடுக்கல் வாங்கலை எவ்வாறு அமைத்துக் கொள்வது? மாற்று மதத்தவரோடு எவ்வாறு நடந்து கொள்வது? என்பதை எல்லாம் ஒரு மனிதன்தான் செய்து காட்ட முடியும். பிரச்சாரம் பண்ணும் போது எதிர்ப்புகள் வரலாம். நாடு கடத்தப் படலாம். சில நேரங்களில் கொலையும் செய்யப் படலாம். இதற்கு முந்திய சமுதாயங்களில் கூட சில நபிமார்கள் கொல்லப் பட்டும் இருக்கிறார்கள். சில நபிமார்களுக்கு ஆட்சி அதிகாரத்தையும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக இறைவன் மனிதனையே அனுப்புகிறான். இந்த ஏற்பாடுஇல்லாமல் வேறொரு ஏற்ப்பாட்டை இறைவன் செய்திருந்தால் 'மனிதர்களாகிய எங்களுக்கு எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக் கூடாதா?' என்று மாற்றியும் கேட்பான் மனிதன்.இறைவனே மிக அறிந்தவன்.///

கேள்வி மிக எளியது. ஒருவர் இறைதூதர் என்பது யார் யாருக்கெல்லாம் நிச்சயமாக தெரியும்? ஒன்று அந்த இறைதூதருக்குத் தெரியும். அவரை அனுப்பிய இறைவனுக்குத் தெரியும். அல்லது இறைவனிடமிருந்து வானவர் வந்திருந்து மக்களுக்கு சாட்சியம் சொன்னால், அந்த வானவருக்கு தெரியும். ஒருவர் வந்து "வானவர் வந்து சொல்ல வேண்டியதுதானே என்று கேட்கிறாய். சாட்சி கொடு என்று கேட்கிறாய். அதெல்லாம் காட்டியும் பல இறைதூதர்களை நீ கொன்றுவிட்டாய். அதனால், நான் உனக்கு எந்த விதமான சாட்சயமும் தரமாட்டேன். நீ நம்பிக்கையுள்ள சமுதாயமாக என்னை நம்ப வேண்டும்" என்று சொன்னால் நீங்கள் உடனே அவரை இறைதூதர் என்று நம்ப ஆரம்பித்துவிடுவீர்களா? ஹிட்லர் "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்று மக்களை நம்ப வைத்தார். இங்கிலாந்து பேரரசி தன்னை கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்று கூறிக்கொள்கிறார். இதே போல பிரான்ஸ் அரசர்களும் கூறிக்கொண்டார்கள். பஹாவுல்லா தன்னை இறைதூதர் என்று கூறிக்கொண்டார். ஜப்பானிய அரசர் தன்னை இறைவனின் வம்சம் என்று கூறிக்கொண்டு 1600 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வம்சத்தினராக ஆட்சி செய்துவருகிறார்கள். இப்படி கேள்வி கேட்காமல் நம்புபவர்களை, நம்பிக்கையுள்ள சமுதாயம் என்று இறைவன் போற்றுவாரா? மேற்கண்டவர்களில் யார் உண்மையைச் சொல்கிறார் என்று நாம் நம்புவது? கடவுள் உன்னை நியமித்தார் என்பதற்கு சாட்சியம் கொடு என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?சரி அப்படி ஒரு தெளிவான அடையாளத்துடன் ஒரு இறைதூதரை அனுப்பினால், மனிதன் "ஒரு அடையாளமும் இல்லாமல் எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக்கூடாதா?" என்று கேட்பானா? மனிதனையே அனுப்பட்டும். ஆனால் எந்த வித சந்தேகத்தும் இடமின்றி தெளிவான அடையாளத்துடன் அனுப்பட்டும் என்று சொல்கிறேன். பொய் இறைதூதர்களிடம் ஏமாந்து விடாமல் காப்பதற்கு மிகவும் அறிந்த இறைவன் ஏற்பாடு செய்ய வேண்டுமல்லவா? கடவுள் ஒரு சாட்சியம் கொடுத்தால் அதனை மனிதனால் மறுக்க முடியுமா? யானையை யானை என்று ஒரு குழந்தை கூட சொல்லிவிடும். புறாவை புறா என்று குழந்தை கூட சொல்லிவிடும். இதற்கு நிரூபணம் வேண்டாமே? அப்படிப்பட்ட தெளிவான குழப்பமில்லாத அடையாளத்துடன் ஒரு இறைதூதரை அனுப்புவது இறைவனுக்கு கடினமானதா என்ன?முதலாளி வேலைக்காரனை வெறுமே வைத்துக்கொள்வதில்லை. ஒரு காரணத்துடன் தான் வைத்துக்கொள்கிறார். அவருக்கு நிறைய வேலை இருக்கலாம். அவருக்கு இந்த சின்ன வேலையைச் செய்வதற்கு நாமே ஏன் செய்ய வேண்டும். இவர் செய்யட்டும் என்று ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன்.ஆனால், அந்த வேலைக்காரனை ஒருவரிடத்தில் அனுப்பி "என் சார்பாக இவனை அனுப்புகிறேன். இவன் சில விஷயங்களை எப்படி செய்வது என்று சொல்லித்தருவான். அது படி நடவுங்கள்" என்று அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த முதலாளி இந்த வேலைக்காரன், என் வேலைக்காரன் தான் என்பதற்கு அனுப்பியவரிடம் சாட்சியம் அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் கண்டவனெல்லாம் நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன் என்று சொல்லிக்கொள்வான். முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.முதலாளி உண்மையிலேயே ஒரு வேலைக்காரனை அனுப்பினால், அவர் நிச்சயம் குழப்பமில்லாமல் தன்னுடைய வேலைக்காரனை அடையாளப்படுத்திவிடுவார். அப்படி குழப்பமில்லாத தெளிவான அடையாளம் கொண்ட வேலைக்காரன் வரவில்லை என்றால், முதலாளி எந்த வேலைக்காரனையும் அனுப்பவில்லை என்றுதான் பொருள்.இந்த கருத்துக்களை யோசித்து எழுத தூண்டிய சகோதரர் இப்னுபஷீர் அவர்களுக்கும், சகோதரர் சுவனப்பிரியனுக்கும் மிக்க தாழ்மையான நன்றிகள்
Posted by எழில் on 10.21.2006 at 10:51 AM

Sunday, October 22, 2006

“Dead Sea” யும மனிதர்களின் ஓரினச் சேர்க்கையும!

“Dead Sea” யும மனிதர்களின் ஓரினச் சேர்க்கையும!

ஓரினச் சேர்க்கையைப் பற்றிய குர்ஆனின் கட்டளை!

'லூத்தையும் தூதராக அனுப்பினோம். 'உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.
7 : 80 - குர்ஆன்.
'நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கின்றீர்கள்.'என்றும் கூறினார்.
7 : 81

லோத் என்ற இறைத் தூதர் அனுப்பப்பட்ட சமுதாயத்தில் தான் முதன் முதலாக ஓரினக் சேர்க்கை ஆரம்பமானது. இந்த சமுகத்து மக்களை திருத்துவதற்காகவே இந்த இறைத்தூதர் இறைவனால் அனுப்பப் பட்டார்.

'இப்றாகீமை லூத் நம்பினார்.'
29 : 26 - குர்ஆன்

இதன் மூலம் ஆப்ரஹாமின் காலமும், தூதர் லோத்துடைய காலமும் ஒன்றாக வருவதை அறிகிறோம். இரண்டு தூதர்களும் சந்தித்தும் இருக்கிறார்கள்.

நோவாவுடைய மனைவியையும், லோத்துடைய மனைவியையும் தன்னை மறுப்போருக்கு இறைவன் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் இறைவனிடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. 'இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்' என்று கூறப்பட்டது.
66 : 10 - குர்ஆன்.

இந்த வசனத்தின் மூலம் நபிமார்களின்மனைவியராக இருந்தும் தங்கள் கணவர்களின் போதனையை அந்த இரு பெண்களும் செவி மடுக்கவில்லை என்பதை அறிகிறோம். இதன் மூலம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து நபிமார்களின் மனைவியராய் இருந்தாலும் தூதர்களின் வழி நடக்கவில்லை என்றால் அவர்களும் நரகவாசிகளே என்பதை விளங்குகிறோம். இதில்குலப் பெருமையையும், குடும்ப பாரம்பரியத்தையும் காட்டி நாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்பவருக்கும் படிப்பினை உள்ளது. நல்லறங்கள் செய்யாதவர் தூதர்களின் மனைவியாய் இருந்தாலும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினை.

'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.' என்றும் கூறினார்.
'லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!'என்று அவர்கள் கூறினார்கள்.
'உங்கள் செயலை நான் வெறுப்பவனே!' என்று அவர் கூறினார்.
'என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.
26 : 165,166,167,168,169 - குர்ஆன்.

தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. 'இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்' என்றும் அந்த மக்கள் கூறினர்.

'உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'என்று அவர் கூறினார்.
'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'என்றனர்.

11 : 80,81 - குர்ஆன்.

லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.

'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்

இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் 'பஹ்ரல் மௌத்' என்று சொல்வார்கள்

இறைவனின் சாபத்திற்குள்ளான இந்த ஊர் இன்று வரை மனிதர்கள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக இருக்கிறது. இந்த கடல் பரப்பின் தண்ணீரை நீங்கள் வாயில் வைத்து ருசி பார்த்தால் உலகில் நீங்கள் இதுவரை அனுபவிக்காத உவர்ப்புத் தன்மையை உங்கள் நாக்கு உணருவதை அறியலாம். மற்ற கடல்களை விட இந்த கடல் தண்ணீர் உவர்ப்பில் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த இடத்தை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க ஆசைப்பட்டு இறங்கினால் அவர்களின் உடல் தண்ணீருக்குள் செல்லாமல் மிதப்பதை நாம் ஆச்சரியத்தோடு பார்க்க முடியும். காற்றடைத்த ட்யூப் எவ்வாறு மூழ்காமல் மிதக்கிறதோ அதே போல் நீங்களும் தண்ணீரில் மிதப்பீர்கள். மற்ற கடல்களின் நீரின் அடர்த்தியை விட பல மடங்கு உப்பின் அடர்த்தி இங்கு அதிகமிருப்பதால்தான் உங்களால் இங்கு மிதக்க முடிகிறது. இப்படி சுற்றுலாப் பயணிகள் மிதக்கும் காட்சியை கேரள நண்பர்கள் மலையாளத்தில் வெளியிட்ட 'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி யிலும் நாம் அதிசயத்தோடு பார்க்கலாம்.

'நமது பிடியைப் பற்றி அந்த மக்களை லோத் எச்சரித்தார். அந்த மக்கள் அவரின் எச்சரிக்கையை சந்தேகித்தனர்.
'அவருடைய விருந்தினரை தீய காரியத்திற்கு (ஓரினச் சேர்க்கைக்கு) அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும் எச்சரிக்கையையும் சுவையுங்கள் என்றோம்'
அதிகாலை நேரத்தில் நிலையான வேதனை அவர்களைப் பிடித்தது.
'எனது வேதனையையும் எச்சரிக்கையையும் சுவையுங்கள்' என்று கூறப்பட்டது.
'இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?'
54 : 36,37,38,39,40 - குர்ஆன்.

தன்னுடைய எச்சரிக்கையையும், வேதனையையும் மக்கள் விளங்க வேண்டும்என்பதற்காக அந்த ஊரை அத்தாட்சியாக இறைவன் விட்டு வைத்திருக்கிறான். ஆனால் நாமோ ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்ந்து திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கலாமா? என்ற விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எந்த ஒரு தவறும் மனிதனின் கண்களுக்கு அழகாகவே தெரியும். இந்த தவறுகளில் ஈடுபடும் மக்களை கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து மக்களை நேர்வழிப்படுத்த வேண்டிய அரசாங்கம் இந்த பழக்கத்தை அங்கீகரிக்கலாமா? என்று நினைப்பது எத்தகைய மடத்தனம்!

இது போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களை மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க சிகிச்சை அளிக்க முயற்ச்சிக்க வேண்டும். இதனால்ஏற்படும் பின்விளைவான எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்களைப் பற்றிய பிரச்சாரம் அவர்களை சென்று அடைய வேண்டும். ஓரினப்் புணர்ச்சி அதிகரித்தால் சமூகத்தில் நாம் காலகாலமாக கட்டிக் காத்த தந்தை, தாய், சகோதரி,சகோதரன், குழந்தைகள் போன்ற உறவுகள் எல்லாம் சிதறி சின்னாபின்னமாகி விடும் அபாயம் உள்ளது. மதங்களை எல்லாம் கடந்து இந்த கொடுமையை தடுக்க நாம் அனைவரும் முயற்ச்சிக்க வேண்டும் என்று கூறி இப்பதிவை முடிக்கிறேன்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களையும், தீபாவளி வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன். இந்த நன்னாளில் இந்தியர்களிடையே பிளவை உண்டு பண்ணி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் சமூக விரோதிகளை ஒதுக்கி, சமூக நல்லிணக்கம்மலர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Sunday, October 15, 2006

இந்து மதத்தின் தூதர்- கால்கரி சிவாவுக்கு!

இந்து மதத்தின் தூதர்- கால்கரி சிவாவுக்கு!

நான் சில நாடகள் முன்பு 'இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?'என்ற தலைப்பில் சொன்ன சில செய்திகளுக்கு கால்கரி சிவா சில மறுப்புகளைக் கொடுத்துள்ளார். விரிவாக விளக்க வேண்டி இருப்பதால் இதைத் தனிப் பதிவாகவே போடுகிறேன்.

//முதலில் இந்து மதத்திற்கு தூதுவர்.. ..........இந்த கான்செப்டே தப்பு.அவர் முகமதிய மதத்தை ஒரு பெஞ்ச் மார்க்காக வைத்து கேள்விகள் கேட்கிறார். அதுவே தவறு. .//

சிவா சொல்வது தவறு. நான்அந்தப் பதிவில் வைத்த ஆதாரங்கள் அனைத்தும் இறை வேதமான குர்ஆனிலிருந்து அல்ல. அனைத்து ஆதாரங்களையும் நான் தந்நது ரிக், யஜீர்,சாம, அதர்வண வேதங்களில் இருந்து. உங்கள் கருத்துப்படி இந்து மதத்துக்கு இறைத் தூதர்வரவில்லை என்றால் இந்த வேதங்களை அருளியது யார் என்ற கேள்வி வருமல்லவா? இந்த நான்கு வேதங்களையும் யார் எழுதியது. எப்பொழுது எழுதப'பட்டது என்ற விபரத்தை தாருங்கள்.

//நானும் கூகுளில் தேட போக இந்துமத குப்பைகளை மட்டும் அவர்கள் கண்ணுக்குத் தெரிய அதன் பக்கத்தில் உள்ள முகமதிய மதத்தின் குப்பைகள் என் கண்ணுக்கு தெரிந்தது. சரி நானும் குப்பைகளை அள்ளி வீசலாம்.//

இந்து மத கருத்துக்களும்,இஸ்லாம் மத கருத்துக்களும் உங்களுக்கு குப்பையாக தெரிந்திருக்கிறது. ஓசோவைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு வேதங்களெல்லாம் குப்பைகளாகத் தான் தெரியும். மேலும் இணையத்தில் இஸ்லாம் சம்பந்தமாக வலம் வரும் கருத்துக்கள் முகமது நபி சொன்னதுதானா அல்லது உங்கள் பாணியில் அவை குப்பைகளா? என்று பிரித்தறிய முஸ்லிம்களிடம் குர்ஆனும், நபி மொழிகளும் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. அதில் உரசிப் பார்த்தால் அசல் எது நகல் எது என்று உடன் தெரிந்து விடும்.

//ஐயோகோ நான் செய்வது வேறு தொழில் அல்லவா.//

இங்கு தான் நம்மில் பலரும் தவறு செய்கிறோம். மதத்தின் கருத்துக்களைச் சொல்வதற்கென்று சில நபர்களை நியமித்து விட்டு நாம் நம் குடும்பத்தைப் பார்க்க சென்று விடுவதால்தான் பல மார்க்கங்களிலும் சிக்கல்கள் தலை எடுக்கிறது. புரோகிதத்தை இஸ்லாம் ஒழித்ததால் தான் இன்று முஸ்லிம்கள் தங்கள் வேதத்தைப் பற்றிய அறிவில் தெளிவாக இருக்கிறார்கள்.

//அவர் தான் நம் இணைய இஸ்லாமிஸ்ட்டுகளின் friend, philospher and guide அவர் இடுப்பில் இருந்து தான் இவர்கள் சுடுவார்கள்.//

முதலில் ஒரு கருத்தை யார் சொல்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். அந்த கருத்து சொல்ல வரும் செய்தி என்ன? அது உண்மையா? என்று பார்க்கும் மனப்பாங்கு நமக்கு வரவேண்டும். சொல்வது சுவனப்பிரியனா, ஜாகிர் நாயக்கா, ஜெய்னுல்லாபுதீனா, ரவி சங்கரா, சங்கராச்சாரியாரா என்று ஆட்களைப் பார்த்து படிக்கும் வழக்கம் நம்மில் மாற வேண்டும்.. மேலும் நாம் ஒரு கருத்தை சொல்லும் போது நம்மைவிட அறிவிற் சிறந்தவர்களின் ஆக்கங்களை மேற்கோள் காட்டுவது நமது வாதத்தை மேலும் வலுசேர்ப்பதாகவே அமையும். இதை நான் மட்டும் செய்யவில்லை. நீங்களும்தான் செய்திருக்கிறீர்கள்.

//ஆகையால் இந்த குப்பைகளை கிளறும் தலைவர் யார் என்று பார்த்தேன். இவர் எனக்கு அறிமுகமானவர்தான். இவர் பெயர் Dr. ஜாகிர் நாயக். இவர் எம்.பி.பி.எஸ் படித்தவர். பம்பாயில் உள்ளவர். (சிலபேர் எம்.பி.பி.எஸ் படித்து விட்டு வேறு வேலைப் பார்த்து கவர்மெண்ட் பணத்தை வீணடிப்பர். இவரைப் போல் இன்னொருவர் தமிழ் நாட்டில் டாக்டர் மாத்ருபூதமுடன் சேர்ந்து புதிரா புனிதமா என்ற நிகழ்சிகளை நடத்திய Dr.சர்மிளா.)//

இவர் மருத்துவராக இருப்பதால்தான் குர்ஆன் சொல்லக் கூடிய வைத்திய முறைகள், குர்ஆனுக்கும் அறிவியலுக்கும் உள்ள ஒற்றுமைகள் போன்றவற்றை விளக்கி இந்த குர்ஆன் எக்காலத்துக்கும் எந்நாட்டவருக்கும் பொருந்தும் என்பதை நிரூபித்தும் வருபவர். ஐஆர்எஃப் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தையும், இஸ்லாமிய பாடத்திட்டத்தோடு கூடிய மெட்ரிகுலேசன் பள்ளியையும் நடத்தி வருபவர். அரசு தந்த சலுகைகளில் படித்து விட்டு இன்று கனடாவே என் சொர்க்கம் என்று சொல்லி வரும் நீங்கள் ஜாகிர் நாயக்கை குறை காணலாமா சிவா! 'புதிரா? புனிதமா?' ரசிகரா நீங்கள் :-)

//இணைய இஸ்லாமிஸ்ட்கள் கையில் இந்தமதத்தின் நான்கு வேதப் புத்தகங்கள் இருக்கும் என நம்பிய நான் ஒரு முட்டாள். இவர்கள் இருப்பது சவூதி அல்லவா//

என் அலுவலகத்திலும், வீட்டிலும் திருக்குறள் முதற்கொண்டு பைபிள் வரை அனைத்து மத புத்தகங்களும் உண்டு. இதுவரை யாரும் வந்து என்னை எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. சும்மாவாச்சும் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு போகக் கூடாது சிவா!

//வானத்தில் அமர்ந்துக் கொண்டு அவ்வப்போது தூதுவர்களை அனுப்பி வேதங்களை பப்ளிஷ் செய்யும் இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி ஆளை அனுப்பி கடைசி புத்தகத்தை வெளியிட்டுவிட்டு கடையை மூடிவிட்டார் என்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு இந்துமதத்தின் சிபாரிசும் தேவைபடுகிறது//

உண்மைதான்! சனாதன தர்மத்தின் ஆதிகிரந்தம் கூறுவதைத்தான் இஸ்லாத்தின் இறுதி கிரந்தம் கூறுகிறது. ஏக தெய்வக் கொள்கையை விட்டு பல தெய்வங்களுக்குத் தாவியதாலும், இறைத் தூதர்களை இறை அவதாரங்களாகவும் இன்னும் பலரையும் பலதையும் (ஓசோ உட்பட) இறைவனாகவும் நம்பி உண்மை இறைத் தூதர்களை நிராகரித்ததாலும், மறு உலக கொள்கையை விட்டு மறு பிறவி தத்துவத்தை ஏற்றுக் கொண்டதாலும் வேதங்கள் இடைச்செருகல்களுக்கு உண்டாகி வர்ணாசிரமம் புகுத்தப் பட்டதாலும் சனாதன தர்மமானது வைதீக பிராமண மதமாகி பின் இந்து மதமானது. இந்த உண்மையை என் நண்பரான சிவாவுக்கு எடுத்துச் சொல்வதில் தப்பில்லையே!

//"உனை எனதுள் அறியும் அன்பை தருவாயே" என உருகிய அருணகிரிநாதரின் வார்த்தைகளில் என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கைஇறந்தபிறகு கடவுளுடன் ஜாலியாக பார்ட்டி செய்யவேண்டுமென்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கைஅந்த கடவுளாக மாறி அவருடன் கலப்பது என்பது என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கைஒரு புத்தகத்தில் காலை முதல் இரவு வரை ஆண் என்ன செய்யவேண்டும் பெண் என்னசெய்யவேண்டும் என உத்திரவிடுவது காஃபிரல்லாதவரின் கடவுள்//

அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்.

அன்பே உருவானவர் இறைவன் என்பதைத்தான் குர்ஆனும் விவரிக்கிறதுஅதனால்தான் இறைவனை கிண்டலடிக்கும் உங்களுக்கும், இறைவனே இல்லை என்று சொல்பவர்க்கும் தன்னால் படைக்கப் பட்ட மனிதன் தானே என்ற பெருந்தன்மையால் இறைவன் கோபப் படாமல் இருக்கிறான்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை இறைவனே உயர்த்தினான். பின்னர்ஆட்சி செய்யும் ஆசனத்தில் அமர்ந்தான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன். காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.'
'அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
13 : 2,3 - குர்ஆன்.

ஆதாம, நோவா, ஏசுஅருணகிரி நாதர் முதற்கொண்டு நம் சித்தர்களிலிருந்து நம் திருவள்ளுவர் வரை இறைவனைப் பற்றி என்ன சொன்னார்களோ அவற்றை எல்லாம் ஒன்றாக்கி வடித்து தரப்பட்டதுதான் குர்ஆன். இறைவனுக் கென்று சில தகுதிகள் சிறப்புகள் உள்ளன. இது பற்றி விரிவாக பிறகு விளக்குகிறேன்.

//இந்து மதத்தின் இறைத்தூதுவர்.............நீங்கள் தான்..........நானும் தான் //

சிவா! நீங்க ஜோக்கடிக்கிறதுக்கு ஒரு அளவே இல்லாமல் போயிடுச்சு :-(

ஆரம்பத்தில் இப்படி சொல்லி ஆசிரமம் ஆரம்பித்த இஸ்லாமிய, கிறித்தவ புரோகிதர்கள், பிரேமானந்தா, சதுர்வேதி, போன்றோரின் பித்தலாட்டங்களை நீங்கள் படிக்கவில்லையா? இன்னுமா மனிதனும தெய்வமாகலாம் என்ற நம்பிக்கை. என்றுமே மனிதன் மனிதனாகத்தான் இருப்பான் என்றுமே இறைத் தன்மையை அடைய முடியாது என்று கூறிக் கொள்கிறேன்.அதே போல் நான் துறவறம் பூண்டு இறைவனை அடையப் போகிறேன் என்றவர்களின் உண்மை முகங்கள் நாளடைவில் நமக்கு தெரிய வந்ததையும் இங்கு தெரியப்படுத்துகிறேன்.

இஸ்லாம் சொல்லும் வாழ்க்கை முறை துறவறத்துக்கும், உலக ஆசாபாசங்களுக்கும் இடைப்பட்ட நிலை. எனவே தான் இதன் கொள்கைகள் அனைத்தையும் அனேக இஸ்லாமியர்களால் வாழ்க்கையில் எந்த சிரமமும் இன்றி கடைபிடிக்க முடிகிறது.

'நோவாவுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'
4 : 163 -குரஆன்.

'எந்தஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
14 : 4- குர்ஆன்

'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் தூதர்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.'
2 : 213 - குர்ஆன்.

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது

ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”NOW OR NEVER” – written by Shames Navad

1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்

அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்

3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்

அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்

கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்

இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்

6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்

இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்

8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்

அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்

9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்

ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.

10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்

அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்

11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்

12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்

இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்

மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்களைத் தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.


இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Tuesday, October 10, 2006

பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!

பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!

யார் இந்த அஃப்ஸல்?

'1990-ல் அப்ஸல் 'ஜே.கே.எல.எஃப்' என்ற இயக்கத்தால் கஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போல் கவரப்பட்டார். பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சென்றார். இயக்கத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளால் மனம் உடைந்து டெல்லி சென்றார். டெல்லியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட முடிவு செய்தார்.அவர் எப்போதும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அதற்கு முன் அவர் எம்.பி;பி;எஸ் (மருத்துவப் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்தார். என் கணவர் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திட விரும்பினார். அதனால் நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவருடைய சான்றிதழ்களைத் தர மறுத்து விட்டனர். சான்றிதழ்களை தந்திட வேண்டும் என்றால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்திட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்தார். அதன் பின்னர் அஃப்ஸலுக்கு ஒரு சான்றிதழைத் தந்தார்கள். அதில் 'அவர் ஒரு சரணடைந்தவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். சரணடைந்த ஒருவராக கஷ்மீரில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. ஆனாலும் அவர் தன் குடும்பத்தோடு கஷ்மீரிலேயே வாழ்ந்திடுவது என முடிவு செய்தார்.'

'1997-ல் அவர் ஒரு சிறு வியாபாரத்தைத் தொடங்கினார். அது மருத்துவம் - மருந்து ஆகியவை தொடர்பான வியாபாரம். மருத்துவ கருவிகளை வாங்கி விற்பதும் இதில் அடங்கும். அடுத்த வருடம் நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டோம். அப்போது அவருக்கு வயது 28. எனது வயது 18.'

'நாங்கள் கஷ்மீரில் வாழ்ந்த காலங்கள் வரை இந்திய பாதுகாப்புப் படையினர் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கின்றதோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்திட வேண்டும். அவர்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழுத்தங்களும் அல்லல்களும் தந்து கொண்டே இருந்தார்கள். '22 ரைஃபிள்ஸ்' என்ற ராணுவப் பிரிவைச் சார்ந்த மேஜர் இராம் மோகன் ராய் என்பவர் அஃப்ஸலை சித்திரவதை செய்தார். அவருடைய மரம ஸ்தானத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தார். அஃப்ஸலை அவமானப் படுத்தினார். கேவலமான சொற்களைக் கொட்டி வைதார்.'

'சில நாட்கள் கழித்து சிறப்புக் காவல் படையினர் அவரைத் தங்களுடைய ஹம்ஹமா முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த முகாமில் வைத்து டி.எஸ்.பி.டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய் குப்தா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள். இந்த ஒரு லட்சம்ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் அல்ல. அதனால் நாங்கள் எங்களிடமிருந்தவை அனைத்தையும் விற்றுவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.என்னுடைய திருமணத்தில் கிடைத்த சிறிய தங்க நகையையும் விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இத்தனையையும் அஃப்ஸலை இந்தச் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றிட இழக்க வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸலை குளிர்ந்த நீரில் நிறுத்தி வைத்தார்கள். பெட்ரோலை அவருடைய மலத் துவாரத்தில் ஊற்றினார்கள்.ஒரு அதிகாரி சாந்தி ஷிங் என்பவர் அஃப்ஸலை கடுங்குளிரில் தலை கீழாக தொங்க விட்டார். மணிக்கணக்கில் தொங்க விட்டார். அவருடைய மறைவிடத்தில் மீண்டும் மின் அதிர்ச்சியைப் பாய்ச்சினர். இந்த சித்திரவதை ரணங்களிலிருந்து வெளியே வந்திட அவர் பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸல் ஏதேனும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் அவரை இப்படி சித்திரவதை செய்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். இப்படிச் சித்திரவதை செய்யப் பட்டது அவரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத்தான் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் கஷ்மீரில் இருக்கும் சூழலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கஷ்மீரில் வாழும்; ஒவ்வொருவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். அவர் அங்கு நடப்பவற்றில் பங்கு பெறுகிறாரோ இல்லையோ அங்கு என்ன நடக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மக்கள் அனைவரையும் தகவல் சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அண்ணனுக்கு எதிராக தம்பியையும், கணவனுக்கு எதிராக மனைவியையும், பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஃப்ஸல் தன் குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினார். ஆனால் எஸஃ.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் அதற்கு அனுமதிக்கவில்லை.'

'இது போன்ற குரூரமான சூழ்நிலையிலிருந்து அஃப்ஸல் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பினார். அவர் தக் வீட்டை விட்டு வெளியேறினார்.தன் குடும்பத்தையும் தொடர்ந்தார் டெல்லி வந்தார்.டெல்லியில் வந்து வயிறு பிழைக்க விரும்பினார். அங்கே தன்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்திட முயற்சி செய்தார். வாழ்க்கை ஓரளவுக்கு நிலை பெற்றதும் என்னையும் எங்களது நான்கு வயது மகனையும் டெல்லிக்கு அழைத்து வாழ வைப்பதாக முடிவு செய்தார்.எல்லாக் குடும்பங்களையும் போல நாங்கள் ஒன்றாய் வாழ்ந்திட விரும்பினோம். ஆனால் மீண்டும் சிறப்புக் காவல் படையினர் என் கணவரை டெல்லியிலும் துரத்த ஆரம்பித்தனர். அத்தோடு எங்களுடைய எல்லாக் கனவுகளும் தகர்ந்து தவிடு பொடியாயின.

'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '

'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எட