Followers

Sunday, October 26, 2008

உயிரைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்!

உயிரைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்!

நம் உடலின் உள் உயிர் இருந்தால் பெயர் சொல்லி அழைக்கும் மனித இனம், உடலை விட்டு உயிர் பிரிந்தால் வெறும் பிணம் என்றே அழைப்பதைப் பார்க்கிறோம். இந்த உயிரைப் பற்றிய சில ருசிகரத் தகவல்களை சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன் விடுதலை ஏட்டுக்கு பதிலாக உணர்வு இதழில் எழுதி வருகிறார். அதில் சிலவற்றை இப் பதிவில் தருகிறேன்.

உயிரைப் பற்றி ஆத்திகம் என்ன சொல்கிறது?

உயிர் என்பது இறைவனிடமிருந்து நேரிடையாக வழங்கப்படுவதும் மரணத்தின் போது இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப் படுவதுமாகிய முற்றிலும் புலனுக்கு எட்டாத பொருள் என இறை நம்பிக்கையாளர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

அனால் நாத்திகம் இதை வன்மையாக மறுக்கிறது. கடவுளின் உள்ளமையை முற்றிலுமாக மறுத்ததைப் போன்று உயிரின் உள்ளமையை நாத்திகத்தால் முற்றிலுமாக மறுக்க முடியவில்லை. புலனுக்கு எட்டாத ஏனைய பொருட்களுக்கு இல்லாத ஒரு சிறப்பான வாய்ப்பை மனித உயிர் பெற்றுள்ளதே அதற்குக் காரணமாகும்.

ஆம்! புலனுக்கு எட்டாத ஏனைய பொருட்கள் நமக்கு வெளியே இருக்கும் போது உயிருள்ள ஒவ்வொரு மனிதனையும் 'உயிர்' எனும் ஒன்று இருப்பது உண்மையே என ஒப்புக் கொள்ளும்படி ஒவ்வொருவரின் பகுத்தறிவும் அவர் மீது நிர்பந்தம் செலுத்துகிறது.

இந்த நிர்பந்தத்தை மீற முடியாமல் நாத்திகம் அதைப் பெயரளவிற்கு ஒப்புக் கொண்டு பிரச்னையைச் சமாளிக்க முயற்சி செய்கிறது. உயிர் இருப்பதை ஒத்துக் கொண்டு அதே நேரத்தில் புலனுக்கு எட்டாத உலகை மறுக்க வேண்டுமாயின் உயிர் என்பது முற்றிலும் புலனுக்கு உட்பட்ட ஒரு பொருள் எனக் கூற வேண்டி வரும்.

ஆனால் அந்தத் தந்திரமும் எடுபடாது. ஏனெனில் உயிர் என்பது புலனறிவுக்கு உட்படாத ஒன்று. உயிரைக் கண்ணால் காண முடியாது, நாவால் சுவைக்க முடியாது. கைகளால் தொடவும் முடியாது. எனவே உயிர் ஐம்புலன்களுக்கும் புலப்படாத பொருளாகும் என்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.

இவ்வாறு உயிரைப் பற்றிய பிரச்னையில் இருதலைக் கொள்ளியாக சிக்கிக் கொண்ட நாத்திகம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள கையாண்ட தந்திரம் இதுதான்.

ஆணின் விந்தனுவும் பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருவுற்ற முட்டையாக மாறுகிறது. இவை யாவும் உயிருள்ளவைகளே! எனவே மனிதனைத் தோற்றுவிக்கும் கருவுற்ற முட்டை உயிருள்ளதாக இருப்பதால் அதிலிருந்து தோன்றும் மனிதக் குழந்தைக்கு உயிர் இருப்பது இயல்பு. இதிலிருந்து கருவுற்ற என்ற வாதம் அபத்தமாகும். எனவே மனிதனுடைய உயிர் வேறு எங்கிருந்தும் வருவதும் இல்லை. இறக்கும் போது வேறு எங்கும் போவதும் இல்லை.

மனித உடல் தோன்றும் போது தொடக்கத்திலேயே உயிர் உள்ளது. அவ்வாறே உடல் இறக்கும் போது உயிரும் அழிந்து விடுகிறது. சுருங்கக் கூறின் உயிர் என்பது கரு அறையில் நாம் இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதும் மரணத்தின் போது திரும்பவும் இறைவனிடம் கொண்டு செல்லப் படுவதுமாகிய பொருள் அல்ல என்பது நாத்திகம் முன் வைக்கும் வாதமாகும்.

இந்த வாதத்திற்கு நாத்திகம் எடுத்து வைக்கும் வாதம் மானிடத் தோற்றத்தின் தொடக்கத்திலேயே கருவுற்ற முட்டையிலேயே அவனுக்குள் உயிர் இருக்கிறது என்பதாகும்.

நாத்திகத்தைத் தகர்க்கும் கருவியல் கண்டுபிடிப்பு:

பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது என்பதை சென்ற நூற்றாண்டு வரை அறிவியல் உலகம் எவ்வாறு அறியாமல் இருந்ததோ அவ்வாறே கரு வளர்ச்சி தொடர்பான அறிவியலிலும் போதிய விபரங்களை அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக நாத்திக விளக்கத்தில் ஏதோ நியாயம் இருப்பது போன்று மத நம்பிக்கையற்றவரிடம் ஒரு பிரம்மையை நாத்திகத்தால் ஏற்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் சென்ற நூற்றாண்டின் இறுதியில் கருவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் கருவுற்ற முட்டையானது உயிருள்ளதன்று. அது உயிரற்ற பிண்டம் என்ற உண்மையை வெளிப்படுத்தி நாத்திகச் சித்தாந்தத்தைத் தகர்க்கும் மற்றொரு அறிவியல் உண்மையாக வெளிப்பட்டது.

உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை பிறந்த கதை பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள். ஆயினும் மூன்று வருடம் கழித்து அவளுக்கு ஒரு சகோதரி பிறந்த வரலாறு அதிகமானோர் அறியவில்லை எனத் தோன்றுகிறது. அது ஒரு சுவாரசியமான வரலாறு.

முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து தேசத்து பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த 'ப்ரவ்ன்' தம்பதியினருக்கு மூன்று வருடங்கள் கழித்து மற்றொரு குழந்தை வேண்டும் என ஆசை பிறக்கவே அவர்கள் முதலில் அணுகிய மருத்துவக் கழகத்தை மீண்டும் அணுகி தங்களது ஆசையைத் தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் அவர்களிடம் மீண்டும் விந்தணுவையும் கரு முட்டையையும் எடுக்காமலேயே 'ப்ரவுன்' தம்பதியரின் இரண்டாவது குழந்தையைச் சோதனைக் குழாயில் நட்டு வளர்த்து பிறகு திருமதி ப்ரவுனின் கருவறைக்கு மாற்றி மற்றொரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்படிச் செய்தார்கள்.

விந்தனுவும் கரு முட்டையும் எடுக்காமல் குழந்தையை உருவாக்க எப்படிச் சாத்தியமாயிற்று? இக்கதையை எடுத்துக் கூறி அதற்கு விளக்கம் தரும் இந்தியரான டாக்டர் ஹமீத்கான் (இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவரும் அமெரிக்காவின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருப்பவர்) ப்ரவுன் தம்பதியினர் முதல் குழந்தைக்காக மருத்துவ உதவி நாடியபோதே அவர்களிடமிருந்து விந்தணு மற்றும் கரு முட்டைகளை எடுத்து அவைகளை இணையச் செய்து கருவுற்ற முட்டைகளாக ஆக்கி வைத்திருந்தவைகளில் சில மிச்சம் இருந்ததாகவும் அவற்றுள் ஒன்றை எடுத்தே இரண்டாவது குழந்தையை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.

இங்கு இயல்பாக எழும் கேள்வி உலகில் உள்ள எந்த உயிரையாவது இவ்வளவு காலம் இறந்து போகாமல் பதப்படுத்தி வைக்க முடியுமா? என்பதாகும்.

இந்த நிகழ்ச்சி கருவுற்ற முட்டை மக்கள் நினைப்பது போன்று உயிருள்ள பொருள் இல்லை என்றும் அது உயிரற்ற பொருளே என்றும் காட்டுவதாகக் கூறுகிறார் டாக்டர் ஹமீத் கான்.

கருவுற்ற முட்டை உயிரற்றது என்பதை நிரூபிக்கக் கூடிய சோதனை ஒன்றையும் அவர் கூறுகிறார். ஒரு புழுவையும் அப்புழுவின் கருவுற்ற முட்டையையும் தனித் தனியாக வேறு வேறு குழாயில் வைத்து அவைகளை மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் வைத்திருந்து பிறகு சிறிது நேரம் கழித்துப் புழுவை எடுத்துப் பார்த்தால் அப்புழு இறந்து போயிருக்கும். ஆயினும் அதன் கருவுற்ற முட்டையை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்திருந்து அதன் பிறகு அதிலிருந்து உயிருள்ள புழுவை உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் ஹமீத்கான்.

டாக்டர் ஹமீத்கான் கூறும் இந்த விளக்கத்திலிருந்து உயிரினங்களைத் தோற்றுவிக்கும் அவைகளின் கருவுற்ற முட்டை உயிரற்ற பிண்டமே என்பதை தெளிவாக விளங்குகிறோம். கருவில் வளரும் குழந்தையின் உயிர் தொடக்கத்திலேயே அதனிடம் இருக்கும் ஒன்றில்லை என்பதும் கருவறையில் அது வளரும்போது மற்றொரு விதத்தில் பெற்றுக் கொள்வதே என்பதும் தெளிவாகும்.

இதை இன்னமும் விளங்கிக் கொள்ளச் சிரமமப்படும் நாத்திக நண்பர்கள் மிகக் குறைந்தபட்சம் ப்ரவுன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தைக்கு உயிர் வந்ததைப் பற்றி மட்டுமாவது சற்று சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள எந்த உயிரினத்தையும் சற்றைக்கெல்லாம் கொன்றுவிடும் மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு எனும் தாழ்ந்த வெப்பநிலையில் மூன்று வருடம் உயிரற்ற பிண்டமாக தங்கியிருந்து அதன் பிறகு தோற்றமெடுக்கத் தொடங்கிய அக் குழந்தைக்கு உயிர் கிடைத்ததா இல்லையா என்பதையும் உயிர் கிடைத்தது என்றால் அந்த உயிர் எப்படி வந்தது என்பதையும் பற்றி மட்டுமாவது காய்தல் உவத்தல் இன்றி சிந்திப்பது மிகவும் நன்று. சிந்திப்பார்களா!

-பி.ஜெய்னுல்லாபிதீன்

படிக்கும்போது சற்று குழப்பமாக இருக்கும். ஒரு முறைக்கு இரண்டு முறை படியுங்கள். பதிவு சொல்ல வரும் கருத்தை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் பின்னூட்டமாக இட்டிருந்தனர் (அது உங்கள் தளத்திற்கு வருகை தந்தபின்னர்தான் புறிந்தது) அவைகளுக்கு நான் தக்க பதில் கூறியிருக்கிறேன். வாருங்களேன் விவாதிப்போம்.

தோழமையுடன்,செங்கொடி.

நண்பர் செங்கொடிக்கும் இந்த பதிவிலேயே பதிலும் இருக்கிறது.

Friday, October 24, 2008

மாலிகான் குண்டு வெடிப்பில் வி.ஹெச்.பி தொடர்பு!

மாலிகான் குண்டு வெடிப்பில் வி.ஹெச்.பி தொடர்பு!

சமீபத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம் மாலிகானிலும், அஹமதாபாத் மூடசா நகரிலும் நடந்த குண்டு வெடிப்பின் முக்கிய சூத்திரதாரிகள் மூன்று பேரை மஹாராஷ்ட்ரா காவல்துறை கைது செய்துள்ளது. போலீஸ் அதிகாரி சூர்ய பிரகாஷ் குப்தா இது பற்றி கூறும்போது 'குண்டு வெடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் ஒரு பெண்ணுக்கு சொந்தமானது. அவரும் இதில் சம்பந்தப்பட்ட மேலும் மூவரையும் கைது செய்துள்ளோம். இவர்கள் வி.ஹெச்.பி. யின் பிரிவான 'ஜனத் ஜாக்குதி சமிதி' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தது நினைவிருக்கலாம். இன்னும் பல குண்டு வெடிப்புகளில் இவர்கள் சம்பத்தப் பட்டுள்ளார்களா என்பதை இனி வரும் விசாரணைதான் முடிவு செய்யும்' என்றார்.

-மக்கள் தொலைக்காட்சி செய்தி

எடுத்த எடுப்பிலேயே இந்த குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று சொன்ன அறிவுஜீவிகள், பல அப்பாவி முஸ்லிம்களை உள்ளே தள்ளிய காவல் துறையினர் தற்போது என்ன பதில் வைத்துள்ளார்கள்?

Tuesday, October 21, 2008

இலங்கை எனது பார்வையில்!

ஒரு முறை சவுதியா விமானம் சென்னையில் புயல் காரணமாக இறங்க முடியாமல் கொழும்பு விமான நிலையத்தில் இறக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளானது. அப்போது அந்த குட்டித் தீவை மேலிருந்து பார்க்கும் பாக்கியம் கிட்டியது. என்ன அழகிய இயற்கை வளம் கொஞ்சும் நாடு! எங்கு திரும்பினாலும் பசுமை. இன்று அந்த நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளோ ஏராளம்.

என் தாத்தாவும் தொழில் நிமித்தமாக அடிக்கடி கொழும்பு சென்று வந்ததையும் அந்த நாட்டைப் பற்றியும் உயர்வாக என்னிடம் என் சிறு வயதில் சிலாகித்துக் கூறுவார். என் சிறு வயதில் எனது உற்ற தோழன் இலங்கை வானொலி என்றால் மிகையாகாது. கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி துரைராஜசிங்கம், போன்றோரின் குரல்கள் இன்றும் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த அமைதியான நாட்கள் மீண்டும் எப்போது வரும்?

நேற்று தொலைக்காட்சியில் தமிழ் சிறுவர் சிறுமியர் சுமார் 10 அல்லது 12 வயதிருக்கும்: பள்ளி யூனிஃபார்மோடு ஸ்ரீலங்கா படையின் வான் தாக்குதலுக்கு பயந்து பதுங்கு குழியில் கண்ணீரோடு அமர்ந்திருந்தனர். இந்தக் காட்சியைப் பார்த்து மனதை என்னவோ செய்தது. பொது மக்கள் அங்கும் இங்கும் மரண பயத்தில் ஓடுவதைக் கண்டு மிகுந்த துயருற்றேன்.

பல காலம் தொடர்ந்து வரும் இந்த பிரச்னை முடிவுக்கு வராதா? 'தனி ஈழமே எங்கள் குறிக்கோள்' என்று முழங்கும் விடுதலைப் புலிகள் ஒரு புறம். 'இலங்கை வெளிநாடு நாங்கள் தலையிட முடியாது என்று கூறும் மன் மோகன் சிங்கின் அரசின் மெத்தனம்: சொந்த நாட்டைப் பிரிந்து அகதிகளாக பிரான்சிலும், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் காலம் தள்ளும் தமிழர்கள் ஒரு புறம்: சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அகதி முகாம்களில் வருடக் கணக்கில் காலம் தள்ளும் நடுத்தர வர்க்கத்தினர்: மொழியாலும் இனத்தாலும் ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி என்று பிரச்னை ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே செல்கிறது.

1. தனி ஈழத்தைக் கை விட்டு அதிகார பகிர்வுக்கு ஒத்துக் கொள்ள விடுதலைப் புலிகளை அணுகுதல்.

2. சிங்கள ராணுவத்திற்கும் அதிகார பகிர்வை ஒத்துக் கொள்ளச் செய்தல். இதற்கு ஒத்து வராத பட்சத்தில் இந்தியா போர் தொடுத்து அதிகார பகிர்வுக்கு வழி காணுதல்.

3. மொழியாலும், இனத்தாலும் ஒன்று பட்ட இந்துக்கள், இஸ்லாமியர், கிறித்தவர் அனைவரையும் முந்தய சம்பவங்களை மறந்து ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல்.

போன்ற அவசர கால நடவடிக்கை இன்று இலங்கைக்கு மிக அவசியம். இல்லையென்றால் நம் கண் முன்னே நம் இனம் சிறுக சிறுக சுத்திகரிக்கப் படுவதற்கு நாம் அனைவருமே காரணகர்த்தாக்களாக்கப் படலாம்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Sunday, October 19, 2008

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமா!

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமா!

'பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.'
-பெரியார்-குடியரசு-08-03-1936

'நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு இருந்தேனேயில்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.'

'பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை'

'ஆனால் நாகம்மாளோ, பெண் அடிமை விஷயமாகவும், ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும், அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.'

-பெரியார்-குடியரசு-14-05-1933

மேலே உள்ள கருத்துக்கள் அனைத்துமே பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் சொந்தக் கருத்துக்களாகும். இதை இங்கு பதிவதின் நோக்கம் 'ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம்' என்ற எண்ணம் மேடைப் பேச்சுக்கும், எழுத்துக்கும் வேண்டுமானால் புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் ஒத்து வராத சித்தாந்தம். ஆனானப்பட்ட பெரியாருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதர்களுக்கோ இன்னும் சிரமமான காரியமாகவே படும்.

ஏனெனில் ஆணுக்கு சில சிறப்புகளையும் பெண்ணுக்கு சில சிறப்புகளையும் படைத்தவன் வழங்கியிருக்கிறான். மேலும் பெண்ணை விட ஆணுக்கு சில சிறப்புத் தகுதிகளையும் அதே இறைவன் கொடுத்துள்ளான். இதை எல்லா வேதங்களும் உண்மையும்படுத்துகின்றன. இதற்கு மாற்றமாக 'நாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்தான்' என்று வாதிடும் பெண்கள் உடல் உழைப்பை வெளிப்படுத்தும் வேலைகளை செய்ய முன் வருவதில்லை. அதற்கு அவர்களின் உடலும் ஒத்துழைக்காது.

தாய்மை என்ற மிகச் சிறந்த பொறுப்பை பெண்களுக்கு வழங்கிய இறைவன் அதை ஆண்களுக்கு தரவில்லை. அதே போல் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களுக்கு வழங்கிய இறைவன் பெண்களை இது விஷயத்தில் விட்டு விடுகின்றான். இதற்கு மாற்றமாக நடக்கும் மேலை நாடுகளில் குடும்ப வாழ்வு சீரழிந்து குழந்தைகள் தறி கெட்டு தவறான வழிகளில் செல்வதையும் பார்க்கிறோம்.

அடுத்து இஸ்லாமியர்களில் பெண்களை அதிகம் கல்லூரி வரை அனுப்புவதில்லை. பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் எந்த வகையிலும் தடை செய்யவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து கல்வி கற்பதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. தற்போதுதான் இஸ்லாமிய பெண்களும் அதிக அளவில் கல்லூரி வரை செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர வேண்டும்.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதில் பேராசைக் கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. இறைவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாகவே இருக்கிறான்.'
-குர்ஆன் 4:32

'பெண்களுக்கு கடமைகள் இருப்பது போல் அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு'
-குர்ஆன் 2:228

Friday, October 17, 2008

ஊடகங்களில் முஸ்லீம்கள்

ஊடகங்களில் முஸ்லீம்கள்-ச.பாலமுருகன்

இவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவைக் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது.

இந்நாட்டின் விடுதலைக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு இரத்தம் சிந்தியுள்ளனர். ஆனால் தேசபக்தி என்பது பெரும்பான்மை மதத்தவரின் உடமை போன்ற சித்திரங்கள் ஊடகங்களில் கட்டமைக்கப்படுகிறது.சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பல தமிழ் திரைப் படங்களில் முஸ்லிம்கள் வில்லன்களாகவும், பயங்கரவாதிகளாகவும், கோயில்களில் குண்டு வைப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.இந்த அருவருக்கதக்க விஷமத்தை எந்த குற்ற உணர்வுமின்றி இந்த திரைப்படங்கள் தணிக்கையில் சான்று பெற்று வெளிப்படுத்தியுள்ளது.ஆரம்ப கால 1920 ஆண்டுகளில் மேற்கத்திய திரைப்படங்களான பேச்சற்ற படங்களில் கூட தாடி வைத்த அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களே வில்லன்களாகவும், போக்கிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். இந்த அபத்தம் இன்னமும் தொடர்கிறது. பல்வேறு அமெரிக்க திரைப்படங்களில் அரேபிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.செய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தொடர்ந்து முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறது.

சிமி என்ற முஸ்லீம் அமைப்பிற்கான தடை அடிப்படையில் தவறானது என நீதிமன்றம் முடிவு செய்த செய்தி வெளிவந்தவுடன் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அகமதாபாத் குண்டு வெடிப்புக் காட்சிகளையும், செத்துக் கிடந்த மனிதர்களையும் காட்டியது. பின் சிமியின் கைது செய்யப்பட்ட ஊழியர்களைக் காட்டியது. ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் இந்தக் கொடூரத்தை செய்து முடித்தது ஆங்கிலக் காட்சி ஊடகங்கள். சராசரி மனிதனின் மனதில் பயங்கரவாத அமைப்புத் தடையை நீதிமன்றம் நீக்கினால் மீண்டும் குண்டுவெடிக்கும் என்ற கருத்தை அது ஆழமாகப் பதிய வைக்க முயன்றது. பயங்கரவாத அமைப்பு என்பது சிமி என்ற வட்டத்தை தாண்டி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் என்ற பதிவு ஏற்கனவே சராசரி பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பதிய வைத்துள்ளது.

முஸ்லீம் பயங்கரவாதத்தைப் பற்றி பேசிய ஊடகங்கள் வசதியாக இந்து வெறியின் கோரத்தை மறக்கச் சொல்லுகிறது. சிறுபான்மை என்பது பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டது என்ற எண்ணம், அரசியல் ஊடகங்களில் மேலோங்கியும் உள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது. முஸ்லீம்கள் கையில் உள்ள ஊடகங்கள் கூட இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. எனவே தான், முஸ்லீம்கள் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இச்சுதந்திரத்திற்கு தாங்களும் தியாகம் செய்தவர்கள் என நிரூபித்துள்ளனர்.

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் இந்த ஊடக வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களில் இது வெகு அதிகமாக அதிகரித்துள்ளது. சாதாரண முஸ்லீம் ஒரு பயங்கரவாதியாகவும், பயங்கரவாத செயல் புரியும் தன்மை கொண்டவனாகவே கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனது நண்பர் ஒருவர் சிறந்த மனித உரிமைப் போராளி. அவரும், அவர் மனைவியும் ஒரு மனித உரிமைப் பயிலரங்கில் பங்கேற்க வேண்டி அமெரிக்காவிற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சென்றார்கள். அவர் முகத்தில் அடர்த்தியான தாடி வைத்திருந்தார்.அமெரிக்காவின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் வேதனைக்கு உள்ளானார். சில இடங்களில் அவரின் மல வாயிலும் கூட கை நுழைத்து ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் சோதனை செய்தனர். அவரின் நிலைக்கு காரணம் அவர் தோற்றத்தில் ஒரு முஸ்லீம் போல காணப்பட்டது தான். பெங்களூரைச் சார்ந்த முஸ்லீம் மருத்துவர் & அமீது ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதி என சந்தேகப்பட்டதையும் ஊடகங்கள் அவரைப் பற்றி தாறுமாறாக சித்தரித்ததையும் பின் அவர் அப்பாவி என விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் தார்மீக உரிமையான முஸ்லீம் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை (தாடி வளர்ப்பது, குல்லா அணிவது) பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

ஒரு முறை ஊடகங்களால் பதியப்பட்ட பொய்யான பிம்பம் சராசரி மனிதர்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விடுகிறது.கடந்த 2006 ஜூலை 22ம் தேதி கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த சமயம். பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. 5 முஸ்லீம் இளைஞர்கள் கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் போலீசார் போட்ட பொய் வழக்கு என வேறு ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் முந்தைய செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தைக் கூட பிந்தைய செய்திக்கு வழங்கவில்லை.ஊடகங்களில் இந்த ஜனநாயக விரோதப் பார்வை நாட்டின் வளர்ச்சி, பண்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ஆழமான பிரதிபலிப்பை காவல் துறையில் நாம் காண முடியும். காவல் துறை எப்போதும் முஸ்லிம்களை சந்தேகத்துடனேயே பார்க்கிறது.

1996ஆம் ஆண்டு நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற முசோரியில் உள்ள ஆட்சித் துறையினருக்கான பயிற்சி கழக ஆய்வில் முஸ்லிம்களை எதிரிகளாகவும், பொது அமைதியை குறைப்பவர்களாக கருதுவதையும் கலவர சமயங்களில் இந்த சார்பு மற்றும் ஓரவஞ்சனையுடன் காவல் துறையில் பணிபுரிபவர்கள் நடந்து கொள்வதையும் வெளிப்படுத்தி உள்ளது.இந்த நாட்டின் குடிமகன் அவன் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவன் நம்பும் ஆன்மீகத்தின் வெளிப்பாடுகளால் சிறுமைப்படுத்தப்படுவதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்துக்களுக்கு அவமானகரமானது. ஊடகங்கள் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இழிவை, சுய பரிசோதனை செய்ய வேண்டும்.காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் ஆழ வேரூன்றி உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு கலவர காலங்களில் அமைதியான நிலை உருவாகுவதற்கு பதிலாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது.

வி.என்.ராய் என்ற உத்திரபிரதேசமாநில காவல்துறை மூத்த உயரதிகாரி தனது ஆய்வில் காவல்துறையில் வேரூண்றி உள்ள இந்த பாதக பார்வையை மாற்றி சில வழிவகைகளை தெரிவித்தார்.

1. காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.

2. காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகளை அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

3. மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.

நன்றி ச.பாலமுருகன்.


Saturday, October 11, 2008

கிராமத்தை காலி செய்த பொதுமக்கள்!


கிராமத்தை காலி செய்த பொதுமக்கள்


தேவதானப்பட்டி : தேனி மாவட்டம், மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையாசாமி கோயில் நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் தருமாறு கேட்டு அம்மாபட்டி தெரு பொதுமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து 2 கி.மீ., தூரம் உள்ள பாலூத்து கரட்டுப்பகுதியில் தங்கியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையாசாமி கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூன்று நாள் திருவிழா நடந்து வருகிறது. கீழத்தெரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாபட்டி தெருவை சேர்ந்த மக்களுக்கு கோயில் நிர்வாக கமிட்டியில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இப்பிரச்னை தொடர்பாக இருதரப்பினரிடையே 1997ம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. 40 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இம்மாதம் 13 முதல் 15ம் தேதி வரை கோயில் திருவிழா நடக்க உள்ளது.

திருவிழா துவங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தில் சம அளவு பிரதிநிதித்துவம் தரும் வரை ஊருக்குள் வரமாட்டோம் எனக்கூறி, அம்மாபட்டி தெரு மக்கள் 1500க்கும் மேற்பட்டோர் தங்களின் வீடுகளை காலி செய்து விட்டு ஆடு, மாடுகளையும் உடன் ஓட்டிக் கொண்டு, இரண்டு கி.மீ.,. தூரம் உள்ள பால்ஊத்து கரட்டுப்பகுதிக்கு சென்று விட்டனர். பெரியகுளம் தாசில்தார் ஷேக் அப்துல்லா சமரசம் பேச வந்தார். மக்கள் பேச மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். பெரியகுளம் ஆர்.டி.ஓ., சுப்பிரமணி, தாசில்தார் ஷேக் அப்துல்லா, தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பி விட்டனர்.

அம்மாபட்டி தெரு மக்கள் கருத்து:

எம்.ராமு, அம்மாபட்டி தெரு சமுதாய தலைவர்: பட்டாளம்மன் முத்தையாசாமி கோயில் கிராம கோயிலாகும். இதில் தனிப்பட்ட ஒரு சமுதாயத்தினர் எப்படி உரிமை கொண்டாட முடியும். எங்களது உரிமை பிரச்னையில் முடிவு ஏற்படும் வரை ஊருக்குள் வரப்போவதில்லை.

கே.சங்கரன்: திருவிழா நடக்கும் மூன்று நாட்களும் அம்மாபட்டி, கீழத்தெருவை சேர்ந்த 9 சமுதாயத்தினர் அவரவர் பகுதிகளில் விழா நடத்துவோம். கடந்த 1996ம் ஆண்டு கோயிலை நிர்வகிக்க அமைத்த கமிட்டியில் நாங்கள் ஏமாற்றப்பட்டு ஐந்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில் கீழத்தெருவிற்குள் இருப்பதாக பொய்யான தகவலை அளித்துள்ளனர்.

என்.முத்து, சமுதாய பொருளாளர்: பல ஆண்டுகளாக கோயிலுக்கு வர்ணம் பூசி வந்தோம். அந்த உரிமையையும் பறித்து விட்டனர். தற்போதுள்ள கோயில் நிர்வாக கமிட்டியை கலைத்து, கிராமத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் புதிய கமிட்டி அமைக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நகைகள் அனைத்தும் பதுக்கப்பட்டுள்ளன. சாமிக்கு அலங்காரம் செய்வதில்லை.

எஸ்.ராசு: கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பூஜாரியாக இருந்து வருகின்றனர். சுப்பிரமணியஅய்யர் என்பவரின் நிர்வாகத்தில் கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் கீழத்தெருவை சேர்ந்தவர்கள் பூஜாரி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோயில் நிர்வாகத்திற்கு ஐந்துபேர் கொண்ட கமிட்டி அமைத்தது எங்களுக்கு தெரியாது. இப்பிரச்னையில் தீர்வு ஏற்படும் வரை திருவிழா நடத்தக்கூடாது. கோயிலில் எங்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும், அல்லது அரசு ஏற்று நிர்வகிக்க வேண்டும்.

கருப்பு கொடி ஏற்றி வெளியேறிய மக்கள் : அம்மாப்பட்டி தெருவை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகள், கால்நடைகளுடன் காலை 8 மணியிலிருந்து வீடுகளை விட்டு வெளியேற துவங்கினர். வீடுகளில் கருப்பு கொடியேற்றி வைத்திருந்தனர். ஆண்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இவர்களுடன் பேச சென்ற தாசில்தார் ஷேக்அப்துலை "கெரோ' செய்து திருப்பி அனுப்பினர். ஆர்.டி.ஓ., சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் மலைச்சாமி, போலீசாரை அழைத்துக்கொண்டு மீண்டும் தாசில்தார் பேச்சு நடத்த சென்றார். ஊராட்சி தலைவரை பார்த்த மக்கள் ஆவேசம் அடைந்ததால் அவர் போலீஸ் வாகனத்திலேயே உட்கார வைக்கப்பட்டார். கிராமத்தை விட்டு வெளியேறி நடந்து சென்று கொண்டிருந்தபோது ராஜம் என்ற பெண் மயங்கி விழுந்தார். கிராம மக்கள் தங்கியிருக்கும் இடத்தில் சிறிய அளவில் மட்டும் பந்தல் போடப்பட்டுள்ளது.

பத்திரிக்கைச் செய்தி
11-10-2008

மேலே உள்ள பத்திரிக்கை செய்தியைப் பார்த்து ஆச்சரியமுற்றேன். கணிணி, இணையம், பங்கு சந்தை, அமெரிக்கா சீனாவுக்கு மாற்று என்றெல்லாம் அடிஎடுத்து வைக்கும் நமது நாட்டில் இப்படியும் சில சம்பவங்கள். சாதிப் பற்று நம் நாட்டில் அனைத்து மக்களிடத்திலும் புரையோடிப் போயுள்ளது. எத்தனை பெரியார்கள் அவதாரம் எடுத்தாலும் நிலைமை என்னமோ தொடங்கிய இடத்திலேயேதான் உள்ளது.

இந்துக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்ட மட்டும் இந்த மக்கள் இந்து மதத்துக்கு வேண்டும். இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் தாக்குவதற்கு மட்டும் இந்த அப்பாவிகள் வேண்டும். அவர்களின் வேலை முடிந்தவுடன் 'கோவிலில் உனக்கு இடமில்லை' என்று விரட்டும் இந்த போக்கு என்று மாறுமோ அன்றுதான் நம் நாடு உண்மையான சுதந்திரத்தை நுகர முடியும்.

இவர்கள் என்ன சொத்தில் பங்கு கேட்கிறார்களா? தான் பின் பற்றும் ஒரு மதத்தின் தெய்வத்தை தரிசிக்க அனுமதி மறுக்கப்படுவது நமக்கு கேவலம் இல்லையா? இதை எல்லாம் பொறுக்காமல் ஒருவன் மதம் மாறினால் அங்கும் அவனுக்கு இந்துத்துவவாதிகளால் பிரச்னை.

இந்த நேரத்தில் என் முன்னோர்களை நினைத்துப் பார்க்கிறேன். 'காசுக்காக மதம் மாறுகிறான்' 'தாய் மதத்தை விட்டு அரபு நாட்டு மதத்தை தழுவுகிறான்' என்ற நக்கல் கேலிகளை எல்லாம் பொருட்படுத்தாது இந்த அவலத்திலிருந்து நீங்க சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தார்களே! அதற்க்காக என் முன்னோர்களை வாழ்த்துகிறேன்.

என் முன்னோர்கள் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நான் ஏதாவது ஒரு சாதி சங்கத்தில் ஐக்கியமாகி இருப்பேன். அல்லது மேல் சாதியினரை எல்லாவற்றிற்க்கும் காரணமாக்கி பதிவுகள் போட்டுக் கொண்டிருப்பேன். இதற்க்கெல்லாம் அவசியம் இல்லாமல் ஆக்கிய என் முன்னோர்களை இன்னொரு முறை வாழ்த்துகிறேன்.

இது போன்ற ஒரு முடிவை எடுக்க என் முன்னோர்களின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனையும் இந்த நேரத்தில் வாழ்த்தி வணங்குகிறேன்.


'இறைவனின் ஆலயங்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றை பாழாக்க முயல்பவனைவிட பெரும் அநீதி இழைத்தவன் யார்?'
-குர்ஆன் 2:114














Friday, October 10, 2008

கணிணி மூலம் நூதன மோசடி! உஷார்..

கணிணி மூலம் நூதன மோசடி! உஷார்..

சென்னையைச் சேர்ந்த சீனிவாசனின் வீட்டுக் கதவுகள் மூடிக்கிடக்கின்றன... அடித்துக்கொண்டேயிருக்கும் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்... விடாது ஒலித்தால் வெறுத்துப் போய் எடுத்து, 'எதுவும் கேட்காதீங்க... நொந்து வெந்து போயிருக்கேன்... என்ன விட்டுடுங்க...' என்று குரல் கம்மப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் 21 லட்ச ரூபாயை இழந்துவிட்டு நின்றால் யாரால்தான் பேசமுடியும்! கம்ப்யூட்டரின் மெயின் இணைப்புவரை எல்லாவற்றையும் துண்டித்துவிட்டார். அந்த வழியாகத்தானே கொள்ளையர்கள் அவருடைய பணத்தை அள்ளிச் சென்றுவிட்டார்கள்.
'உங்கள் வங்கிக் கணக்கை அப்டேட் செய்யவேண்டும்... இந்த பட்டனை க்ளிக் செய்யுங்கள்' என்று ஒற்றை வரி இமெயிலாக வந்த தகவலை அடுத்து, சீனிவாசன் அந்த பட்டனை க்ளிக் செய்ய, அவருடைய வங்கிக் கணக்கு பற்றிய மொத்தத் தகவலும் களவாடப்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய வங்கிக் கணக்கை செக் பண்ணுவதற்காக முயற்சித்தபோது பாஸ்வேர்டு தவறு என்ற தகவலே தொடர்ந்து வந்திருக்கிறது. வங்கிக்குத் தொலைபேசி மூலமாகக் கேட்டபோதுதான் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 21 லட்ச ரூபாய் மும்பையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுவிட்ட விபரீதம் தெரிய வந்தது.

சீனிவாசன் போலீஸில் புகார் கொடுக்க... விசாரணை ஆரம்பமாகியிருக்கிறது. மும்பையில் உள்ள வங்கிக் கணக்கு ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அந்தப் பெண்மணி தொடர்ந்து வங்கிக்கு வந்து, 'ஒரு நிலம் வாங்குவதற்காக சென்னையில் இருந்து பெரிய தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்... கிரெடிட் ஆகிவிட்டதா?' என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அதனால், கிரெடிட் ஆனவுடன் அவர் பணத்தை எடுத்துச் சென்றது யாருக்கும் உறுத்தலாக இல்லை. சீனிவாசனுக்கு அந்த இமெயில் ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற அடிப்படையான தகவல்களைத் திரட்டியிருக்கும் காவல் துறை, இந்தப் புகாரை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கிறது. சைபர் க்ரைம் பிரிவின் உதவியோடு விசாரணையில் இறங்கியிருக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவின் (வங்கி மோசடி தடுப்புப் பிரிவு) உதவி கமிஷனர் பன்னீர் செல்வம், இவ்விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்.

''நெட்பேங்க்கிங் மாதிரியான விஷயங்கள் நம்முடைய வசதிக்காகத்தான் இருக்கின்றன. ஆனால், அதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது ரொம்பவே கவனமாக இருக்கணும். இப்போ 21 லட்சத்தை இழந்துட்டு நிற்கும் சீனிவாசன் ஒரு ரிட்டயர்ட் வங்கி அதிகாரி. அவருக்கே ஸ்லிப் ஆகிடுச்சு.
அவர் கணக்கு வெச்சிருக்கறது 'பஞ்சாப் நேஷனல் வங்கி'யில். அந்த வில்லங்கமான மெயில் வந்தது 'அட்மின் அட் ஐ.சி.ஐ.சி.ஐ. காம்' (admin@ICICIbank. com) என்கிற மெயில் ஐ.டியில் இருந்து. நம்முடைய வங்கிக் கணக்கை எதற்காக இன்னொரு பேங்க் நிர்வாகம் கேட்கிறதுனு ஒருகணம் யோசிச்சிருந்தா... அது போலியான இமெயில்னு புரிஞ்சிருக்கும். அவசரத்தில் பலர் இதையெல்லாம் கவனிக்கறதில்லை'' என்றார்.

''அவர்கள் எப்படி சீனிவாசனைக் குறிவைத்தார்கள்?'' என்று கேட்டபோது,

''பொதுவாக, இமெயில் மோசடிக்காரர்கள், எந்த ஒரு தனிநபரையும் குறிவைத்துச் செயல்படுவதில்லை. முதல்கட்டமாக ஆயிரக்கணக்கான இமெயில் முகவரிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறார்கள். அதில் எந்த மீன் பதில் போட்டு சிக்குகிறதோ அதை வலையில் வீழ்த்தி விடுவார்கள். இதுதான் டெக்னிக். அதனால், நாம் இதுபோன்ற இமெயில்களுக்கு பதில் சொல்லாமல் டெலிட் செய்தாலே சிக்கலைத் தவிர்த்துவிடலாம்.முன்பு, அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு கடைசியாக பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவலைக் கேட்டு ஏமாற்றினார்கள். இப்போது விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி, ஒரே க்ளிக்கில் அத்தனை தகவல்களையும் சுருட்டி விடுகிறார்கள். இதைப் பயன்படுத்துபவர்கள் படித்தவர்கள்தான் என்றாலும், ஏமாற்று வேலை மும்முரமாக நடக்கிறது'' என்றார்.

இந்த மோசடியில் ஈடுபடும் சர்வதேச கும்பலின் இலக்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான். இங்குள்ள பணத்தை நேரடியாக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லமுடியாது என்பதால், இந்தியாவில் உள்ள சிலரை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதாவது, மிகச் சுலபமாக வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க ஒரு வழி என்று சொல்லி அவர்களுடைய வங்கிக் கணக்கை வாங்கிக் கொள்கிறார்கள். ஏமாற்றி சுருட்டப்படும் தொகை அந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அவர்கள் சிறிய சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதியை வேறு கணக்கிலோ அல்லது நேரடியாகவோ கொடுத்துவிட வேண்டும். ஏதாவது சிக்கலாகி வழக்கு அதுஇதுவென்று வந்தால் ஏமாற்றுக் கும்பல் தப்பிவிடும். கமிஷனுக்கு ஆசைப்பட்டு கணக்கு எண்ணைக் கொடுத்தவர் மாட்டிக் கொள்வார்.

சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் சொல்லும் விஷயம் அதற்குச் சரியான உதாரணம்...

''என் அண்ணன் ராஜ்மோகனின் வங்கிக் கணக்குக்கான நெட்பேங்க்கிங் பாஸ்வேர்டை திருடிய இமெயில் மோசடிக் கும்பல், 12 லட்ச ரூபாயை வேறொரு கணக்குக்கு மாற்றிவிட்டார்கள். என் அண்ணன் சென்னை போலீஸூக்கு புகார் கொடுக்க, அவர்களும் விசாரணையில் இறங்கினார்கள்.
மும்பையில் உள்ள ஒரு ஆப்டிகல்ஸின் கணக்கில் அந்தப் பணம் மாற்றப்பட்டது தெரிந்து போலீஸ் அங்கே போனது. அந்த ஆப்டிகல்ஸ் உரிமையாளருக்கு எதுவும் தெரியவில்லை. அதன்பிறகு விசாரித்தபோது அந்தக் கடையின் மேனேஜர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்தக் கணக்கு எண்ணை மோசடி கும்பலுக்குக் கொடுத்திருக்கிறார். கடைசியில், அந்த மேனேஜருக்காகக் கடையைச் சேர்ந்தவர்கள் பணத்தைக் கட்டினார்கள்'' என்றார்.

விஞ்ஞானம் நமக்கு புதிதுபுதிதாக பல வசதிகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. கூடவே, மோசடிப் பேர்வழிகள் அதற்கான குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும்.

இன்னொரு சீட்டிங்!

நெட் பேங்க்கிங் மோசடியைப் போலவே இன்னொரு இமெயில் மோசடி இருக்கிறது. அது உருக்கமான கதைகளைச் சொல்லியோ, அல்லது அதிரடி பரிசுப் போட்டியைச் சொல்லியோ ஏமாற்றுவது.

'அமெரிக்காவில் 300 கோடி டாலர் சொத்து இருக்கிறது. அதை க்ளைம் செய்ய யாருமில்லை. உங்கள் பேர், இனிஷியல் உட்பட எல்லாமே அந்தச் சொத்தின் உரிமையாளருடையதைப் போல இருக்கிறது. அந்தச் சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்றிவிடலாம். அது வக்கீலாக இருக்கும் என் பொறுப்பு. புதிய டாகுமென்ட்டுகளை எழுதும் செலவு மட்டும்தான்... 1,000 டாலர் அனுப்புங்கள்' என்று மெயில் வரும். அமெரிக்காவில் சுப்பிரமணியோ, கோவிந்தசாமியோ இருக்க வாய்ப்பு இருக்கா என்று யாரும் யோசிப்பதில்லை. 300 கோடி டாலர் யோசிக்க விடாது!

ஆறு மாதம் முன்பு சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரியில் 200 கோடி டாலர் பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கு இன்கம்டேக்ஸ், கஸ்டம்ஸ் டியூட்டி ஆகியவற்றைக் கட்டவேண்டும் என்று சொல்லி பணம் கேட்டிருக்கிறது ஒரு கும்பல். அவரும் அனுப்பியிருக்கிறார்.
அதன்பிறகும் விடாமல் அது இதுவென்று சொல்லி சுமார் 18 லட்ச ரூபாய்வரை கறந்திருக்கிறார்கள். கடைசியாக உங்கள் பணமெல்லாம் கன்டெய்னரில் அனுப்பப்பட்டு மும்பையில் இருக்கிறது. கஸ்டம்ஸ் க்ளியரன்ஸூக்காக 3 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்கள். எல்லா பணத்தையும் இழந்த பிறகு போலீஸூக்குப் போயிருக்கிறார் அந்தப் பெண்!

-படித்தேன்...பகிர்ந்தேன்.....

-பத்திரிக்கைச் செய்தி




Wednesday, October 08, 2008

அமெரிக்காவில் நிகழ்ந்த சோகம்!

அமெரிக்காவில் நிகழ்ந்த சோகம்!

லாஸ்ஏஞ்சலஸ்: அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டதால், அதில் பெருமளவு முதலீடு செய்திருந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் கடும் நஷ்டமடைந்தார். இதனால், மனைவி, மூன்று மகன்கள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக, "லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்தவர் கார்த்திக் ராஜாராம் (வயது 45). எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், எந்த நிறுவனத்திலும் வேலை செய்யவில்லை. மாறாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார்.

கடும் நஷ்டம் : இவர் ஒரு காலகட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து 5.40 கோடி ரூபாய் வரை சம்பாதித்தார். இதில், ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தன் பணத்தில் பெரும் பகுதியை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். ஆனால், சமீபத்தில், அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெருத்த வீழ்ச்சி காரணமாக, பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு கடும் நஷ்டம் அடைந்தார்.

மாமியாரை சுட்டுக் கொன்று : இதனால், விரக்தி அடைந்த அவர், தன் மனைவி சுபஸ்ரீ, மகன்கள் கிருஷ்ணா (19), கணேஷா (12), அர்ஜுனா மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண் டார். இந்த சம்பவம் அவர் வசித்த வீட்டிலேயே நடந் துள்ளது. கார்த்திக் ராஜாராம் கடந்த செப்டம்பர் 16ம் தேதி துப்பாக்கி வாங்கியுள்ளார். பின் தற்கொலைக் கான காரணத்தை கடிதமாக எழுதியுள்ளார்.மொத்தம் மூன்று கடிதங்கள் எழுதியுள்ளார்.

ஒன்று போலீசாருக்கு எழுதப்பட்டுள்ளது. அதில், தனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு தன் செயல்பாடுகளே காரணம் என, கூறியுள்ளார். மற்றொரு கடிதத்தை தன் குடும்ப நண்பர்களுக்கு எழுதியுள்ளார். மூன்றாவது கடிதம் அவரின் உயில் மற்றும் மரண சாசனம் போன்று உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு தன் குடும் பத்தினரை சுட்டுக் கொன்ற அவர், பின் தனக்குத்தானே சுட்டு இறந்துள்ளார். பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்பு காரணமாகவே அவர் இப்படி நடந்து கொண்டதாக, போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.

தினமலர்-8-10-2008

Saturday, October 04, 2008

சவூதி அரேபியா- ஒரு படிப்பினை

சவூதி அரேபியா- ஒரு படிப்பினை

'இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் இவர்களுக்கு அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லலையா? வீணானதை நம்பி இறைவனின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?'

குர்ஆன் - 29:67

இந்த குர்ஆனிய வசனத்தை நாம் ஆழ்ந்து சிந்தித்தால் இதில் பல உண்மைகள் நமக்கு தெளிவாகும். இன்று நம் நாட்டிலும் இன்னும் உலகின் பல நாடுகளிலும் நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எத்தனை சட்டங்கள் போட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஒரு பெண் தன்னந்தனியாக இரவில் எந்த பயமும் இல்லாமல் சென்று வரும் காலமே நம் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்று காந்திஜி அன்று சொன்னார். இன்று வரை அத்தகைய நிலை நம் இந்திய நாட்டுக்கு கிட்டவில்லை. சட்டங்களில் உள்ள ஓட்டைகள்தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம்.

நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் சவூதி அரேபியாவில் டிரெய்லர்கள் அதிகம் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப் படுகிறது. இதில் ஓட்டுனர் ஒருவரே இருப்பார். நம் நாடு மாதிரி கிளீனர் இங்கு கிடையாது. ஓட்டுனர்கள் அதிகமாக பாகிஸ்தானிகளே உள்ளனர். ஒரு சில இந்தியர்களும் உண்டு. இவர்கள் பொருட்களை ஏற்றிச் செல்லும் போது வழியிலே டிரெய்லர்களை மடக்கி பொருட்களை கொள்ளை அடிப்பது சில காலம் நடந்து வந்தது. இதில் சில ஓட்டுனர்களின் உயிரையும் அந்த கொள்ளையர்கள் எடுத்துள்ளார்கள். இதைத் தடுக்க நினைத்த சவூதி அரசு மஃப்டியில் ஆட்களை அமர்த்தி சாமர்த்தியமாக குற்றவாளிகளான இரண்டு சவூதி பிரஜைகளை பிடித்து விட்டனர். குற்றவாளிகளைப் பிடித்து கோர்ட் கேஸ் என்று இழுத்தடிக்காமல் குற்றம் நிரூபிக்கப் பட்டதால் அந்த இருவரின் தலையையும் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் சவூதி அரசு வெட்டியது. வெட்டியதோடு அல்லாமல் எங்கு வழிப்பறி நடந்ததோ அந்த சாலைகளில் மர ஸ்டாண்டில் உடல்களை கட்டி தொங்கவிட்டு விட்டார்கள். இதை நேரில் பார்க்கும் யாருக்கும் அடுத்த முறை திருட மனம் வருமா! இந்த தண்டனை நிறைவேற்றியவுடன் இத்தகைய வழிப்பறி நடப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதே போன்று கடமையில் இருந்த ஒரு போலீஸ்காரரை கொலை செய்த எமனியை குற்றம் நிரூபிக்கப் பட்டதால் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்காக கட்டி தொங்க விட்டனர். இதை நானும் நேரில் பார்த்தேன்.

இதை யாராவது காட்டுமிராண்டித்தனம் என்று சொல்ல முடியுமா? குற்றவியல் தண்டனையைப் பொறுத்தவரை இஸ்லாம் மூன்று முக்கிய அடிப்படைகளைப் பார்க்கிறது.

1. குற்றவாளியின் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை.
2. பாதிக்கப்பட்ட தனிநபர் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரைத் திருப்திபடுத்துவதன் மூலம் பழிவாங்கல் என்ற பெயரில் குற்றங்கள் பெருகாமல் தடுப்பது.
3. ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டனையின் மூலம் மீண்டும் அதே குற்றம் நடப்பதைத் தடுப்பது.

மேலே நான் குறிப்பிட்ட தண்டனைகள் நாட்டு மக்கள் என்று பாரபட்சம் காட்டாமல் நிறைவேற்றப்படுவதால்தான் மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. நம் நாட்டிலோ நிலைமை தலைகீழ். கையும் களவுமாக பிடிபடுகிறார்கள்: வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் அரசியல்வாதிகளின் ஆசிகளால் வெளியில் விடப்படுகிறார்கள். பிறகென்ன! அதே குற்றவாளிகள் இன்னும் தைரியத்துடன் குற்றங்களை செய்வதற்கு அரசாங்கமே வழிவகை செய்து கொடுக்கிறது.

மேலே நான் குறிப்பிட்ட குர்ஆனிய வசனத்தையும் இன்றைய சவூதி ஆட்சியையும் சற்று ஒப்பிட்டு பார்ப்போம்.

Federal Bureau Of Investigation (FBI) என்ற அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையில் ஏழு குற்றங்களுக்கான அட்டவணை பெறப்பட்டது.


குற்றம் சவூதி--ஜப்பான்--அமெரிக்கா

கொலை 0.17 ---1.10-------- 5.51
கற்பழிப்பு 0.14-- 1.78 --------32.05
கொள்ளை 0.14 --4.08 --------144.92
தாக்குதல் 0.12-- 23.78------ 323.62
கொள்ளை 0.05- 233.6 ------728.42

இப்பொழுது இந்த குற்றங்களின் விகிதாச்சாரத்தை நாடுவாரியாக பாருங்கள். குர்ஆனுடைய குற்றவியல் சட்டத்தை தயவுதாட்சனியமின்றி சவூதி அரேபியா பின்பற்றுவதால்தான் அந்நாட்டு மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் கிடைக்கிறது. இந்த குர்ஆனின் சட்டத்தை கைவிட்ட மற்ற முஸ்லிம் நாடுகள் அமைதியிழந்து அல்லலுறுவதையும் நாம் பார்க்கிறோம்.

நம் நாட்டைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். அமைதியாய் இருந்த நம் இந்திய நாட்டை கேவலம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பாபரி மசூதியை இடித்த அத்வானி வருங்கால பிரதமர். தான் ஆட்சிக்கு மறுபடியும் வரவேண்டும் என்பதற்காக தன் மதத்தை சார்ந்த கரசேவகர்களை ரயிலோடு எரித்த(டெஹல்கா புண்ணியம்) நரேந்திர மோடி இன்றைய குஜராத் முதல்வர். நாளைய பிரதமராகவும் பார்த்து பூரிக்கப்படுபவர். சமீபத்தில் நடந்த ஒரிஸ்ஸா கலவரத்தின் சூத்திரதாரிகள் தைரியமாக வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நம் நாட்டுக்கு எங்கிருந்து வரும் அமைதி?

சவூதி அரேபியாவைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அத்வானி முன்பு அமைச்சராக இருந்தபோது 'நம் நாட்டுக்கு அரபு நாட்டு சட்டங்களே தேவை' என்று சொன்னார். பாம் வைப்பவனையும், மதக்கலவரத்தைத் தூண்டுபவனையும் அவன் இந்துவாகட்டும், முஸ்லிமாகட்டும், கிறித்தவனாகட்டும் இரண்டு முறை தலையை பொது மக்கள் முன்னிலையில் நம் அரசாங்கம் எடுக்கட்டும்: பிறகு பாருங்கள் நாமும் சவூதியைப் போல் அமைதி கொண்ட நாடாக மாற்றப்படுவோம்.

'நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் சகோதரர்கள்தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். இறைவனை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.'
-குர்ஆன்: 49:10

Wednesday, October 01, 2008

ஒரிஸ்ஸா மாவோயிஸ்ட்களின் பகிரங்க பிரகடனம்

ஒரிஸ்ஸா மாவோயிஸ்ட்களின் பகிரங்க பிரகடனம்


அ.மார்க்ஸ்

புகைந்து கொண்டிருக்கும் வீடுகள், எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தொழுகைத் தலங்கள், காடுகளுக்குள் பதுங்கித் திரியும் கிறிஸ்துவ தலித்கள், கத்தி முனையில் நிறைவேற்றப்படும் மதமாற்றங்கள், முன்கூட்டியே தகவல் சொல்லித் தாக்கும் மதவெறிக் கும்பல்கள்... இப்படித்தான் இருக்கிறது ஒரிஸ்ஸா. இப்படிப்பட்ட மாநிலத்தின் பிரச்னைக்குரிய 'கந்தமால்' மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றித்திரியும் வாய்ப்பு, சென்ற வாரத்தில் எனக்குக் கிடைத்தது.

ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் பாலகோபால், கர்நாட கத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாபையா ஆகியோர் ஏற்பாடு செய்த பதினாறு பேரடங்கிய உண்மை அறியும் குழுவில், தமிழகத்திலிருந்து நான் உட்பட இருவர் சென்றிருந்தோம். இன்னொருவர் மதுரை வழக்கறிஞர் கேசவன்.
எங்கள் குழு செப்டம்பர் 20, சனிக்கிழமை காலை பெர் ஹாம்பூரை அடைந்தது.
ஏற்கெனவே சுவாமி அக்னிவேஷ், நீதிபதி சுரேஷ் ஹோஸ்பெட், ஷபனா ஆஸ்மி, மகேஷ்பட் ஆகியோர் அடங்கிய குழு கந்தமாலுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்திருந்தோம் (எங்கள் வருகை குறித்தும் அனுமதி கோரியும் ஒரிஸ்ஸா அரசுக்கு அளித்திருந்த கடிதத்துக்கு இன்றுவரை பதிலில்லை!).

பெர்ஹாம்பூரிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலிருந்த தாரிங்கபாடி கிராமத்துக்குள் நுழைந்தோம். பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகிய ஒரிஸ்ஸாவிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம் கந்தமால். மலையும் காடுகளும் அடர்ந்த அந்தப் பகுதியில், மூன்றில் இருபகுதி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள்.

ஒரிஸ்ஸாவிலுள்ள மொத்த மக்களில் 95 சதவிகிதம் பேர் இந்துக்கள். இந்தியாவிலேயே அதிக இந்துக்கள் நிறைந்த மாநிலம் அது. இருந்தும்கூட மதமாற்றத்தின் மூலம் இந்துக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிடும் என்கிற அச்சம், கடந்த 50 ஆண்டுகளாக அங்கே விதைக்கப் படுகிறது. இந்த அடிப்படையில் 'கோந்த்'கள் எனப்படும் ஆதிவாசிகளுக்கும் 'பாணோ'க்கள் எனப்படும் கிறிஸ்துவ தலித்களுக்குமிடையே பகை மூட்டப்படுகிறது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவம் இந்தப் பகுதியில் காலெடுத்து வைத்தபோது, பாணோக்களில் பெரும்பாலோர் அதைத் தழுவினர். அதன்மூலம் சாதி இழிவுகளை அவர்கள் போக்கிக் கொண்டதோடு ஓரளவு கல்வி, மருத்துவ வசதிகளையும் பெற்றுக் கொண்டனர். இதன்மூலம் கோந்த்களைக் காட்டிலும் சற்று முன்னேற் றத்தையும் கண்டனர்.

பழங்குடியினர் கிறிஸ்துவர்களாக மாறினால் அவர் களுக்கு இடஒதுக்கீடு முதலிய உரிமைகள் உண்டு. ஆனால், தலித்கள் மாறும்போது அவர்கள் இந்தச் சலுகையை இழக்க நேரிடுகிறது. எனவே, பாணோக்கள் தாங்களும் கோந்த் களைப் போலவே 'குய்' மொழி பேசுகிறவர்கள் என்கிற அடிப்படையில் பழங்குடிகளுக்கான ஒதுக்கீட்டைக் கோரினர். ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றமும் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது.

இதையட்டி கிறிஸ்துவர்களுக்கு எதிராக ஆதிவாசி கள் திரட்டப்பட்டனர். கடந்த கிறிஸ்துமஸ் அன்று பந்த் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துவர்கள் அமைத்திருந்த வளை வும் பந்தலும் வீழ்த்தி எரியூட்டப்பட்டன. இந்த நிலையில், விசுவ இந்து பரிஷத்தின் முக்கிய தலைவரும், ஜாலேஸ்பேட், சக்கபாடா ஆகிய பகுதிகளில் ஆசிரமங்கள் அமைத்து, கிறிஸ்துவ எதிர்ப்பு பிரசாரமும் இந்து மதமாற்றமும் செய்து வந்தவருமான சுவாமி நிச்சலானந்த சரஸ்வதியின் கார்மீது கற்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் நாளன்று பெரும் கலவரம் வெடித்தது. மாதா கோயில்கள், கான்வென்ட்கள் தாக்கி எரியூட்டப்பட்டன. இதனால் பிராமினிகேயோன், பரக்காமா பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. பிராமினிகேயோனில் கிறிஸ்துவர்களும் திருப்பித் தாக்கினர். இந்நிலையில் சென்ற ஆகஸ்ட் 23 இரவில், புனித ஜன்மாஷ்டமி தினத்தன்று ஜீப்பில் வந்து இறங்கிய முகமூடி தரித்த சுமார் 20 நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் நிச்சலானந்த சரஸ்வதி. ஆசிரமத்திலிருந்த மேலும் நால்வரும் கொல்லப்பட்டனர். ஏ.கே&47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதம் நடந்த இத்தாக்குதலுக்கு மாவோயிஸ்ட்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனாலும், விசுவ இந்து பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் 'இதை மாவோயிஸ்ட்கள் செய்யவில்லை. கிறிஸ்துவர்கள்தான் செய்தனர்' என அடித்துக் கூறுகின்றனர்.
இறந்துபோன சுவாமிகளின் உடலை ஜாலேஸ் பேட்டிலேயே அடக்கம் செய்யாமல் 150 கி.மீ. தொலைவிலுள்ள சக்கேபேடாவுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதுவும் நேர்பாதையில் செல் லாமல் கிறிஸ்துவ கிராமங்கள் வழியாக சுமார் 250 கி.மீ. ஊர்வலம் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் கிறிஸ்துவ கிராமங்கள் சூறையாடப்பட்டன. இதற்கு பயந்தோடிய கிறிஸ்துவர்கள் காடுகளில் தஞ்சமடைந்தனர். காடுகளுக்குள்ளும் சென்று அகப் பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு வாரத்தில், அரசு கணக்கீட்டின்படி 27,000 கிறிஸ்துவ தலித்கள் அகதிகளாயினர். ஆங்காங்கு முகாம்கள் அமைக்கப்பட்டன. தாரிங்கபாடியில் சிறிய பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட முகாமில் சுமார் 500 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். ஒரிஸ்ஸாவில் இப்போது மழைக்காலம். எந்நேரத்திலும் தொற்றுநோய் அபாயம் காத்திருப்பது தெரிந்தது. வெற்றுத் தரையில் 'டென்ட்' அடித்து அங்கே மக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் அங்கே 5 பிரசவங் கள் நடந்ததாகவும் அறிந்தோம்.
அகதிகள் மறுவாழ்வு ஆணையர் சத்யபிரதா சாஹ¨விடம் தொடர்பு கொண்டு முகாம் நிலைமை யைப் பற்றிச் சொன்னபோது, அவரளித்த பதில் அதிர்ச்சியை அளித்தது. உறுதியான கட்ட டங்களில் தங்கவைப்பதை 'மற்றவர்கள்' அதாவது பஜ்ரங்தள், பரிஷத் அமைப்பினர் எதிர்க்கின்றனராம். நாங்கள் செல்லுமிடமெல்லாம் ஜீப்களில் வந்து சிலர் அவ்வப்போது நோட்டமிட்டுச் சென்றனர். ஆளும்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சருகா பிரதான் எங்களிடம், ''29 பேர் மட்டுமே கொல்லப் பட்டுள்ளதாக அரசு சொல்வது பொய். மொத்தம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்'' என்றார்.
அடுத்தநாள் ராய்கியாவை நோக்கிச் சென்றபோது, எங்கள் வேன்களை நிறுத்திய சிலர், 'இந்தப் பக்கமாகச் செல்வது ஆபத்து, கலவரம் நடந்து கொண்டிருக்கிறது' என எச்சரித்தனர். டிரைவர்களும் வண்டியைச் செலுத்த மறுத்ததால், நேரடியாகக் காட்டுப் பாதையில் ஜி.உதயகிரியை அடைந்தோம். வழியில் கிராமம் கிராமமாக சர்ச்சுகள், வீடுகள் அழிக்கப்பட்டிருந்தன. லக்கேபாடி என்னும் கிராமம் முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் கிறிஸ்துவர்களும் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
லக்கேபாடியைத் தாண்டிச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று தலித் இளைஞர்கள் எங்களை மறித்து, கிறிஸ்துவ பாஸ்டர்கள் என அறிமுகப் படுத்திக்கொண்டு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். 'உடனடியாக இந்து மதத்துக்கு மாற வேண்டும், இல்லையேல் சாகத் தயாராகுங்கள் என மிரட்டுகிறார்கள். ஜிடிங்ஷை, லோதேட், அலங்டுப்பா போன்ற கிராமங்களில் பல குடும்பங்களைக் கட்டாயப்படுத்தி இந்து மதத்துக்கு மாற்றம் செய்திருக்கிறார்கள்'' என்றனர்.
சொல்லிக் கொண்டிருந்தபோதே பதன்பாடி கிராமம் தாக்கப்படுவதாகவும் சுகுடபாடி, குந்தாமி, காமாண்டி கிராமங்கள் தாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் செய்தி வந்தது.
இதனையடுத்து ஜி.உதயகிரியில் இருந்து பெஹ்ராம் பூருக்கு விரைந்தோம். பெஹ்ராம்பூரில் தங்கியிருந்த முனிசிபல் விடுதிக்கு நாங்கள் திரும்பியபோது, யாரோ கொடுத்ததாக கவர் ஒன்று எங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒரிஸ்ஸா பொறுப்பாளர் சுனில் என்பவர் கையெழுத் திட்டிருந்த அந்த ஆங்கிலக் கடிதத்தில், 'லட்சுமணானந்த சரஸ்வதியையும் நால்வரையும் கொன்றது நாங்கள்தான். மதவெறியைப் பரப்பி மக்களைப் பிரிப்போரைத் தொடர்ந்து இப்படித் தண்டிப்போம்' எனவும் இருந்தது.

இந்துக்கள் தரப்பில் சிதிர் பிரதான் என்ற பத்திரிகையாளரைச் சந்தித்துப் பேசியபோது, அவர் ஒரிஸ்ஸாமாநிலத்தின் நிலவரத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.
ஒரிஸ்ஸா மாநிலத்தைப் பொறுத்த வரையில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் சமீப காலமாக அதிகமாகி இருக்கிறது. 'மதவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தலையை எடுப்போம்' என்பதுதான் மாவோயிஸ்ட்களின் பகிரங்க பிரகடனம். இது தெரிந்தும் நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம் கிறிஸ்துவர்கள்தான் என வம்படியாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவர்களை நோக்கி ஓயாத தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதுதான் வேதனை!


http://www.vikatan.com/jv/2008/oct/01102008/jv0203.asp