Followers

Thursday, January 27, 2011

இறைவனைப் பற்றி எழும் வினாக்கள்!

இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்ற கேள்வி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எழுவது இயல்பே! ஏனெனில் இறைவனை யாரும் பார்த்தது கிடையாது. இறைவனின் பேச்சை நம்மில் யாரும் கேட்டதும் கிடையாது. அப்படி இருக்கையில் இறைவனைப் பற்றிய நம்பிக்கையை நாம் எப்படி வளர்த்துக் கொள்வது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள்.கிறித்தவர்களிலும் கர்த்தரைப் பற்றிய எண்ணத்தில் தெளிவாகவே இருப்பார்கள். சிலர் ஏசுவையும், பரிசுத்த ஆவியையும் வணங்கலாம். இந்து நண்பர்களில் பலர் ஒரு கடவுளை ஒத்துக் கொண்டாலும், தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக கடவுளாக வழிபடுவார்கள்.

கடவுள் மறுப்பில் இருக்கும் நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம். இந்த உலகம் நிலையானது என்று கடவுளை மறுப்பவர்கள் கூறுகின்றனர். இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் வினவினால் 'உலகம் தோன்றவில்லை. அது என்றும் நிரந்தரமாக உள்ளது' என்பார்கள். அதே போல் 'கடவுளும் தோற்றுவிக்கப் படவில்லை. அவன் எக்காலத்திலும் உள்ள நிரந்தரன்' என்று ஆத்திகர்கள் கேட்டால் 'அது எப்படி ஒருவன் தோற்றுவிக்கப்படாமல் இறைவன் தோன்ற முடியும்? என்னால் ஒத்துக் கொள்ள முடியாது' என்பார்கள். உலகம் பற்றிய வாதத்தில் ஒரு நிலை. இறைவன் பற்றிய வாதத்தில் வேறொரு நிலை. மானிடனின் அறிவில் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒன்றுமே எங்கும் இருக்க முடியாது என்ற தவறான எண்ணமே இதற்க்கெல்லாம் காரணம்.

வார்னர் ஹைசன்பர்க் என்ற அறிவியல் அறிஞர் ஒரு புரட்சிகரமான கோட்பாட்டை 1926-ல் ஒருவாக்கினார். அநிச்சய தத்துவம்(Uncertainity Principle) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணுவான எலக்ட்ரான் எனும் மிகமிக சூட்சுமமான துகள்கள் அணுவின் மையக் கருவைச் சுற்றி ஒளியின் வேகத்தில் சுழல்கின்றன. அத்துகள்களின் ஒரு நேரத்தில் உள்ள வேகம், அந்த நேரத்தில் சுற்றுப் பாதையில் அது இருக்கும் இடம், இவை இரண்டையும் அளக்க முயலும் போது ஏற்படும் விளைவிலிருந்து ஹைசன்பர்க் இக்கோட்பாட்டை உருவாக்கினார்.

இக்கோட்பாட்டிலிருந்து அறிஞர்கள் கண்ட உண்மை என்னவெனில் 'துகளின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக நீங்கள் அளக்க முயல்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே துகளின் வேகத்தை உங்களால் அளக்க முடியும்.' என்ற முடிவுக்கு வந்தனர். துகளின் இருப்பிடத்தையும், அத்துகளின் துல்லியமான வேகத்தையும் நம்மால் துல்லியமாக கண்டறிய முடியாது. எனவே இச் சோதனையிலிருந்து ஹைசன்பர்க் அவர்கள் 'மனிதனின் அறியும் ஆற்றலுக்கு மிக நிச்சயமாக ஒரு எல்லை உண்டு' என்பதை நிரூபித்தார்.

அற்பப் பொருளான அணுவைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக மனிதனைப் படைத்துள்ளான் இறைவன். அப்படி இருக்கையில் அந்த அணுவையும் படைத்து கோடானு கோடி கோள்களையும், உயிரினங்களையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவனைப் பற்றியும, அவன் எப்படி உண்டானான் என்பது பற்றிய அறிவும் எனக்கு இருக்க வேண்டும் என்று மனிதன் எப்படி எதிர் பார்க்க முடியும்? இறைவனைப் பற்றி எனக்கு விளங்காதவரை இறைவன் இருக்கிறான் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவது உயிர் என்றால் என்னவென்று எனக்கு புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவதற்க்கு ஒப்பாகும்.

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்.' என்று கூறுவீராக.

-குர்ஆன் 17:85

'ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்'

-குர்ஆன் 12:76

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய செய்திகளுக்கு குர்ஆன் தெளிவாக விளக்கமளிக்கிறது. ஹைசன்பர்க்கும், அறிவியல் அறிஞர் ஹாக்கிம் அவர்களும் எதை உறுதிப் படுத்துகிறார்களோ, அதை குர்ஆன் உண்மைப் படுத்துகிறது. நமக்கு குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளதால் ஒரு குற்ப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் ஆய்வு செய்ய முடியாது என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.

சரி. அப்படி என்றால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை எப்படி நம்புவது? எப்படி உயிர் என்பதை பார்க்காமல் ஒத்துக் கொள்கிறோமோ அது போல் உலகில் உள்ள இறைவனின் அத்தாட்சிகளைப் பார்த்து நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். நம்முடைய பிறப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துளி விந்திலிருந்து ஒரு குழந்தை பிறக்கிறது. தகப்பனின் நிறம்,குரல்,சாயல்,குணம் அனைத்தையும் ஒரு துளி விந்தில் ஜிப் செய்யப்பட்டிருக்கிறதே அதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? 10 நிமிடம் நம்மால் மூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. ஒன்பது மாதம் வயிற்றுக்குள் உணவும் தந்து, சுவாசிக்கவும் தகுந்த ஏற்ப்பாட்டை உண்டாக்கியது யார்? மனிதன் உண்டாக்கும் பல பொருட்களுக்கும் மூலப் பொருட்கள் உண்டு. அந்த மூலப் பொருட்களை உண்டாக்கியது யார்? பேரண்டத்தில் எத்தனையோ கோள்கள் இருக்க பூமியை மட்டும் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்தது யார்? இப்படி ஒவ்வொரு அதிசயங்களுக்கும் சூத்திரதாரி யார் என்பதை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். விடை தானாக தெரியும்.

தகவல் உதவி:

'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்."

Tuesday, January 25, 2011

இசைப் பைத்தியங்கள்!

HERE link

இசை ஒரு மனிதனை எந்த அளவுக்கு சிந்திக்க விடாமல் செய்கிறது என்பதற்க்கு இந்த காணொளி ஒரு சிறந்த உதாரணம்.


பரிசினை வாங்க ரஹ்மான மேடைக்கு வருகிறார். தொகுத்து வழங்கிய கதாநாயகர்கள் இம்ரான் ஹாஸ்மியும், குமார் கவுரவும் மேடைக்கு அருகிலேயே சாஸ்டாங்கமாக கீழே விழுந்து மரியாதை செய்தனர். அமிதாப்,ஐஸ்வர்வாய் முதற்கொண்டு அனைவரும் ஒரு கணம் எழுந்து மரியாதை செய்தனர். 'ப்ளீஸ்....ஸ்டேண்ட் அப்' என்று ரஹ்மான் மைக்கில் சொன்னவுடன்தான் இருவரும் எழுந்தார்கள். மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் இந்த பழக்கத்தை எப்பொழுது விடுவார்களோ தெரியவில்லை.

இந்திப் படவுலகின் சிறந்த கதாநாயகர்கள் நமது .ஆர். ரஹ்மானுக்கு அடிமை என்பதை எப்படி விளக்குகிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. இசை ஒரு மனிதனை எந்த அளவுக்கு ஆட்டி வைக்கும் என்பதையும் நாம் நேரிடையாகப் பார்க்கிறோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

'மதறாசிகள்' என்று ஹிந்தி தெரியாத நம்மைப் பார்த்து ஏளனம் செய்த வட நாட்டவர்களை வசியம் செய்து விட்ட நம் ரஹ்மானை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும்.

Tuesday, January 18, 2011

துல்கர்னைன் என்பவர்தான் அலெக்சாண்டரா? ஓர் அலசல்.

இறைவன் துல்கர்னைன் என்ற ஒருவரைப் பற்றி குர்ஆனிலே விவரிக்கிறான். இவரைப் பற்றி ஊர்ஜிதமாகாத பல தகவல்கள் இன்று வரை இருந்து வருகிறது. இது பற்றி நிறையவே இங்கு விவாதித்து இருக்கிறோம். இறைவன் குர்ஆனிலே இவரைப் பற்றி என்ன கூறுகிறான் என்று பார்ப்போம்.

“(நபியே!), இவர்கள்(யூதர்கள்) உங்க ளிடம் துல்கர்னைன் பற்றி கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: நான் அவரைப் பற்றிய சில விபரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்வேன்.

திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லாவிதமான சாதனங் களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந் தோம்.

அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப் போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அம்மக்கள் கூறினார்கள்: துர்கர்னைனே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் (பரவலாக) அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீங்கள் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?. அதற்கு அவர் பதிலளித்தார்: என்னடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை மேலானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவரை எழுப்பித் தருகிறேன்; இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள். இறுதியில் இரு மலைகளுக் கிடையிலான பகுதியை நிரப்பி விட்ட அவர் (மக்களை நோக்கி) கூறினார்: இப்பொழுது (நெருப்பை மூட்டுவதற்காக) ஊதுங்கள்! கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்த போது அவர் கூறினார்: கொண்டு வாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத்திரவத்தை! அதனைச் சுவற்றின் மேல் ஊற்றுவேன். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரால் அதில் ஏறி வர முடியவில்லை. அவர்களால் அதில் துளையிடவும் இயலவில்லை. (அந்த அளவுக்கு அந்தச் சுவர் உயரமாகவும் வலுவாகவும் இருந்தது.) துல்கர்னைன் கூறினார்: இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்து விட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும். (18:83-98)

எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்து விடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை. (21:96)

நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட அந்த சுவர் சம்பந்தமாக இனி ஆராய்வோம். தருமி, கும்மி போன்ற பதிவர்கள் ஏதொ குர்ஆனில் தவறு உள்ளதாகவும் அந்த சுவர் எங்கே இருக்கிறது காட்ட முடியுமா? காட்டி விட்டால் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயார் என்கிற ரீதியில் பதிவிலே பதிலளித்திருந்தார்கள். அவருக்கு பதிலளிப்பதோடு இது சம்பந்தமாக குர்ஆனும் நபி மொழியும் அரபு மக்களின் நம்பிக்கையும் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆன் தெளிவாக சொல்லி விடுகிறது அந்த சுவர் உலக முடிவு நாள் சமீபமாகத்தான் வெளிப்படுத்தப்படும். அது வரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படும். எனவே முஸ்லிம்களுக்கு அந்த சுவர் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியே தேவையில்லாதது.

ஆனால் அன்றைய அரபு மக்களிடமும்,யூத கிறித்தவர்களிடமும் துல்கர்னைனைப் பற்றி பல கதைகள் உலவி வருகிறது. தோராவிலும், பைபிளும் கூட இவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து வேதங்களிலும் இவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர், இந்த மக்களுக்காக அனுப்பப்பட்டவர்,இந்த நாட்டை ஆண்டவர் என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் இவரின் வீரத்தைப் பற்றியும், இவர் எழுப்பிய சுவரைப் பற்றியும் பலவாறான கதைகள் மக்கள் மத்தியிலே இருந்து வந்தது. ஜனாதிபதி உமருடைய காலத்தில் அவருக்கும் இந்த செய்தி எத்தி வைக்கப்படுகிறது. அவரும் அப்துல் ரஹ்மான் என்ற தோழரின் தலைமையில் ஒரு படையை ரஷ்யாவுக்கு(காகஸஸ்) அனுப்பி உண்மையை கண்டு வரச் சொல்கிறார். ஆனால் அங்கு அப்படி எந்த சுவரையும் தங்களால் பார்க்க முடியவில்லை என்று அவர்களும் திரும்பி விடுகின்றார்கள். உமரும் இது வதந்தி என்று விட்டு விடுகிறார்.

உமரைப் பற்றியோ அல்லது முகமது நபியைப் பற்றியோ ஒரு செய்தியை சொல்வதாக இருந்தால் அது ஆதாரபூர்வமாக இருக்க வேண்டும். சொல்லக் கூடியவருக்கும் முகமது நபிக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு. செய்தி சொன்னவர் நம்பகமானவர்தானா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும. முகமது நபி காலததிலேயே யூதர்களில் சிலர் முஸ்லிமாக மாறுவதாக நடித்து முகமது நபியின் வரலாற்றையும் அறிவுரைகளையும் முகமது நபியின் காலத்துக்கு பிறகு திரிக்க ஆரம்பித்தனர். ஆனால் குரஆனில் அவர்களால் கை வைக்க முடியவில்லை. அதன் பிறகுதான் அறிஞர்களெல்லாம ஒன்று கூடி எவை எல்லாம் நம்பகத் தன்மை உடையவை எவை எல்லாம் ஒதுக்க வேண்டியவை என்பதை சொல்லக் கூடிய நபர்களின் ஒழுக்கத்தை வைத்து தீர்மானிக்க ஆரம்பித்தனர். இன்று வரை அது தொடர்கிறது. ஆனால் இணையத்தில் யாரும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்ற சுதந்திரம் இருப்பதால் முகமது நபியைப் பற்றிய கதைகள் நிறைய உலா வருகிறது.

அரபு அறிஞர் இப்னு இஸாக் என்பவர் துல்கர்னைனைப் பற்றி பல தகவல்களை கூறுகிறார். ஆனால் சிலர் சொல்வது போல் அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்று இவர் வாதிடவில்லை. ஒருக்கால் இவர் எகிபதியராக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

மங்கோலியாவுக்குப் பக்கத்தில் இந்த சுவர் இருப்பதாகவும் ஒரு கதை நிலவுகிறது. மெஸடோனியா என்ற நாட்டில் வாழ்ந்த அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்கிறார் பக்ருதீன் என்ற வரலாற்றாசிரியர்.

அரிஸ்டாட்டில்தான் துலகர்னைன் என்று சொல்வோரும் உண்டு. அரிஸ்டாட்டில் ஏசுவுக்கு 300 வருடங்கள் முன்பு வாழ்ந்ததாகவும், அலெக்சாண்டர் அவையில் மந்திரியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

காகஸஸ் மலைத் தொடரில் உள்ள தார்பண்ட் என்ற இடத்தில்தான் குர்ஆன் சொல்லக் கூடிய மலை இருப்பதாக சிலர் சொல்கின்றனர். அஜர்பைஜான், ஆர்மீனியா, ஜார்ஜியா, ரஷ்யா போன்ற நாடுகள் இதன் எல்லைகளாக வருகிறது. சீனப் பெருஞ்சுவர்தான் குர்ஆன் கூறக் கூடிய சுவர் என்று சிலகாலம் குழம்பியவர்களும் உண்டு.

இத்தனையையும் நான் எடுத்துக் காட்ட காரணம் துல்கர்னைன் என்பரைப் பற்றிய கதைகள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பதை எடுத்துக் காட்டவே! அந்த நபரைப் பற்றியே நமக்கு சரியாக தெரியாத போது அந்த சுவரைப் போய் நாம் எங்கு தேடுவது? அப்படி தேடச் சொல்லி குர்ஆனும் கட்டளை இட வில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை நம்ப வேண்டும்.

மேலும் குர்ஆனில் இந்த இடத்தில் இந்த நாட்டில் அந்த சுவர் இருக்கிறது என்று கோடிட்டு காட்டியிருந்து அதை தேடி சிலர் சென்று அங்கு அந்த சுவர் தென்பட வில்லை என்றால்தான் குர்ஆனின் நம்பகத் தன்மையை நாம் அலச வேண்டியிருக்கும். அப்படி எந்த வாக்கியமும் குர்ஆனில் இடம் பெறவில்லை. எனவே இந்த சர்ச்சையே தேவையில்லாதது. உலக முடிவு நாளுக்கு சமீபமாக அந்த சுவரை யாஜுத், மாஜுத் என்ற கூட்டத்தினர் உடைத்துக் கொண்டு வெளியேறுவார்கள். அந்த நாளுக்காக நாமும், தருமியும்,கல்வெட்டும், கும்மியும் ராஜனும், சார்வாகனும் இன்னபிற பதிவர்களும் பொறுப்போம். அதுவரை நாமெல்லாம் உயிரோடு இருந்தால் அவசியம் இந்த காட்சிகள் நடந்தேறும். அதுவரை பொறுப்போமாக!

இறைவனே மிக அறிந்தவன்.

Sunday, January 16, 2011

குருதிக் கொடையளிக்கும் நல்லுள்ளங்கள்.!



RIYADH: A doctor in the Eastern Province has urged volunteer groups in the Kingdom to organize blood-donation drives in order to help save lives.

“We want more groups to participate in blood-donation so that their contributions help the sick in the Kingdom,” said Dr. Javed Iqbal, chief pathologist at Dammam Central Hospital during a blood drive at the hospital on Friday instigated by Tamil Nadu Thowheed Jamaat (TNTJ), a fraternity of southern Indians.

More than 114 volunteers donated blood during the drive while about 50 were turned away because organizers did not have sufficient facilities to store blood.

“This is the first time in the history of the hospital that such a large volume of blood has been donated by a single group of volunteers in a day,” Iqbal said.

TNTJ spokesman Toufik Ahmed said this was his group's ninth blood drive.
“The group has received three certificates of appreciation from hospital authorities for helping them in collecting blood,” he said. “Such acts are encouraged in Islam.”

Thanks
Arab News daily.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (டி.என்.டி.ஜே) என்ற இந்த அமைப்பு முஸ்லிம்களிடம் உள்ள கல்வியற்வின்மையை போக்கவும், மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் அயராது பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் இரத்த தானத்தில் இந்த அமைப்பு பல விருதுகளைப் பெற்றுள்ளது. 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல இந்து நண்பர்களின் சந்தேகங்களுக்கு அழகிய முறையில் பதிலளித்தும் வருகிறது. இதன் நிறுவனர் பி.ஜெய்னுல்லாபுதீன் என்பவரின் தமிழ் புத்தகங்கள் இங்கு சவூதியில் பல உலக மொழிகளில் அரசு செலவில் மொழி பெயர்க்கப் பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதத்துக்கு முன்பு கூட ரியாதில் ஹஜ் பயணிகளின் தேவைக்காக இதே அமைப்பு 'இரத்ததான நிகழ்ச்சியை' நடத்தியது. 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானத்தில் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டேன். இது போன்ற செயல்கள் தான் மனித நேயத்தை வளர்க்கும்.

Friday, January 14, 2011

வேலைக்குச் செல்லும் பெண்கள்!

வேலைக்குச் செல்லும் பெண்கள்!

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு'-குர்ஆன் 4:32

'தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.......அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்க்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.'-குர்ஆன் 24:31

சில குடும்பங்களில் வறுமையின் காரணமாக பெண்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் வசதியானவர்கள் கூட காலத்தின் கட்டாயம் என்று பெண்களை வேலைக்கு அனுப்புகிறோம். இதனால் எழும் பிரச்னைகளைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. தினத் தந்தியில் வந்த செய்தியை படித்துப் பார்த்தால் அதன் விபரீதம் புரியும்.

31 டிசம்பர் 2009
வீட்டில் கணவரின் சந்தேகப் பார்வை; பஸ்சில் இடிமன்னர்களின் குறும்பு; அலுவலகத்தில் உயர்
அதிகாரிகளின் காமப் பார்வை!

வேலைக்கு போகும் பெண்கள் சந்திக்கும் `செக்ஸ்' கொடுமைகள்!

போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பெண்கள் பரபரப்பு பேச்சு

சென்னை, டிச.31-

வேலைக்குப் போகும் பெண்கள், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், `செக்ஸ்' கொடுமைகள் பற்றி நேற்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர்.

பெண்களின் பாதுகாப்பு

`பாதுகாப்பான சென்னை' என்ற இயக்கத்தை கமிஷனர் ராஜேந்திரன் தொடங்கி உள்ளார். அதன்
அடிப்படையில் சென்னை நகரில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களையும் தனது அலுவலகத்துக்கு
வரவழைத்து ஆலோசனைக் கூட்டங்களை கமிஷனர் ராஜேந்திரன் நடத்தி வருகிறார். வேலைக்குப் போகும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேலைக்குப் போகும் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போகும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, வேலைக்குப் போகும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் `செக்ஸ்'
தொல்லைகள் குறித்தும் இவற்றையெல்லாம் தீர்க்க போலீசார் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஆவேசமாகவும், நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் தங்கள் கருத்துக்களையும், உள்ளக் குமுறல்களையும் கொட்டினார்கள்.

மூன்று விதம்

கமிஷனர் முன்னிலையில் இந்த பெண்கள் கொட்டிய உள்ளக்குமுறல்கள் வருமாறு:-

வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.

`பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.

வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.

மிரட்டல்

ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.

பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இருட்டான இடங்களில்...

பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப
வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள்,
உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.

பஸ்களில்

தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.

நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான்
இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான
போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.

பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.
-31 டிசம்பர் 2009

ஆண்களுடன் பெண்கள் தனித்திருக்கக் கூடாது; பெண்களின் தேவைகளுக்காக ஆண்கள்
உழைக்கவேண்டும்என்று இஸ்லாம் கூறும் அறிவுரையை பிற்போக்கான சிந்தனை என்று கூறி
அறிவுஜீவிகள் குறை கூறி வந்தனர். பெண்கள் வேலைக்குச் செல்வதில் தான்
அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்றும் வாதிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் பெண்கள் வேலைக்குச்செல்வதால் அவர்களுக்கு இருந்து வந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு
விட்டதுஎன்பதேஉண்மை. புகுந்த வீட்டாரின் அடக்கும் முறைக்கு மட்டும் ஆளான பெண்கள்
தமதுஅதிகாரிகளின் அடக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலைக்குச் சென்றதால் வீட்டு வேலையில் இருந்து அவர்கள் விடுபட முடியாததால் அவர்கள் இரட்டைச்சுமையைச்சுமந்து வருகின்றனர் என்பது இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் வாயாலேயே வெளியாகி விட்டது.

Tuesday, January 11, 2011

நண்பர் கல்வெட்டின் சந்தேகங்களுக்கு சில மாதிரிகள்!

//ஆனால் சக காலத்தில் பிறந்த சில குழந்தைகள் துரதிர்ஷ்டத்தால் , உடல் வளர்ந்திருந்தாலும் மூளை வளர்ச்சி இல்லாமல் அதே 7 வயதின் அறிவு நிலையிலேயே தேங்கிவிட்டார்கள் ( எல்லாம் இறைவன் செயல். அவன் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. சாந்தி நிலவட்டும்) அவர்கள் இன்னும் பாட்டி வடை சுடுவதாக நம்புகிறார்கள். :-(((

நான் அவர்களிடம் தோற்கவே விரும்புகிறேன்.\\

நண்பர் கல்வெட்டு தனது பின்னூட்டத்தில் முஸ்லிம்கள் எல்லாம் நிலவில் பாட்டி வடை சுடுவதாக நம்புவதாகவும் அவர் தெளிவாக இருப்பதாகவும் கூறுகிறார். இது முஸ்லிம்களின் நம்பிக்கை அல்ல நண்பரே! அது இந்துக்களின் நம்பிக்கை.

பல நல்ல கருத்துக்களை கூறிய வள்ளுவர் கூட

கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று. – குறள்

பொருள்: நான் என் காதலரைக் கண்டது ஒருநாள்தான். ஆனால் அதனால் உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.

அவர் காலத்தில் நமது நாட்டில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு நிலாவை முழுங்குவதால்தான் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வள்ளுவரும் உதாரணத்தை எடுத்தாண்டிருக்கிறார். இதற்கு என்ன பதிலை சொல்லப் போகிறார் நண்பர் கல்வெட்டு.

அதே நேரம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறக்கப்பட்ட குர்ஆனில் இது போன்ற அறிவியலுக்கு முரணான ஒரு கருத்தையும் காண முடியாது. வான் வெளியைப் பற்றி குர்ஆன் கூறும் சில கருத்துக்களைப் பட்டியலிடுகிறேன் நண்பர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

பூமியின் வடிவம் எத்தகையது?

இரவும் பகலும் மாறி மாறிவருவதைக் கண்ட மனிதன், இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'புவி மையக் கோட்பாட்டை உருவாக்கினார். அதாவது பூமியைச் சுற்றியே சூரியன், சந்திரன் போன்ற மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் இதனாலேயே இரவு பகல் ஏற்படுவதாகவும் தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். அரிஸ்டாட்டில் சொன்னதால் உலகமும் ஒத்துக் கொண்டது.

ஆனால் இவரின் ஆராய்ச்சி தவறு என்றும் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை குர்ஆன் வெளியிடுகிறது. ஆனால் அறிவியல் உலகம் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது. அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ்(1473-1543), ஜோஹன்னஸ் கெப்ளர்(1571-1630) போன்றோர் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை உணருகின்றனர்.

உலகம் கோள வடிவமானது என்ற உண்மையை நாம் கடலில் கப்பலின் வரவை வைத்தே எளிதாக கண்டு கொள்ளலாம். அந்த காலத்தில் பூமியின் வடிவத்தை காண இது ஒன்றுதான் வழியாக இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் வேண்டுமானால் கப்பலின் உதாரணம் தேவைப்படாமல் இருக்கலாம். அந்த காலத்திய மக்களுக்கு உண்மையை உணர்த்துவதற்க்கு குர்ஆன் கப்பலையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறது.

இனி குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 2:164


மேற்கண்ட குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்துகின்றன என்றும் பறை சாற்றுகிறது. இதன் மூலம் பூமி நிலைத்திருக்கவில்லை அதுவும் நீந்துகிறது என்ற உண்மையை கூறி புவி மையக் கோட்பாட்டை நிராகரிக்கிறது குர்ஆன்.

அறிவியல் அறிஞர்களையே திகைக்க வைத்த குர்ஆன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நான் சொன்னது ஒரு உதாரணம் மடடுமே! இது போல் பல நுர்று வசனங்களை என்னால் பட்டியலிட முடியும். புவியீர்ப்பு விசை, மனிதன் நிலாவுக்கு செல்ல முடியும், பெரு வெடிப்பு கொள்கை என்று அறிவியலில் எந்த துறைக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் குர்ஆனை 'நிலவில் பாட்டி வடை சுடும்' கதைக்கு கல்வெட்டு ஒப்பிடுகிறார். யாருடைய அறிவு இன்னும் வளராமல் இருக்கிறது என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகிறேன்.

Friday, January 07, 2011

நான் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருக்கிறேன்?-1

நான் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருக்கிறேன்?-1

சமீபத்தில் நண்பர் தருமியின் பதிவிற்கு சென்ற போது 'நான் ஏன் முஸ்லிமாக இல்லை?' என்ற தலைப்பில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அதிகமான குற்றச்சாட்டுகளுக்கு பலரும் பல முறை பதில் அளித்து விட்டார்கள். இன்னும் இவர்கள் அதே பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டுகளில் பல முகமது நபியின் பெயரால் புனையப் பட்ட கட்டுக் கதைகளே! இதை ஆதாரத்தோடு பல முறை விளக்கயும் இருக்கிறேன். ஆதாரப் பூர்வமான குற்றச் சாட்டுகள் சிலவற்றையும் அந்தப் பதிவிலே காண முடிந்தது. அவற்றிற்கு மட்டும் என்னால் முடிந்தவரை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிவுகளாகத் தருகிறேன். இதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை என்றாலும் எனது திருப்திக்காக இந்தப் பதிவுகள்.

//பலதார முறை, விவாகரத்து, அடிமைகள் வைத்திருத்தல் என்பவை சமுதாய தர்மத்தின் வேரினையே ஆட்டியது. தனிமனித வாழ்க்கையையும், சமூகத்தின் ஒழுங்கமைப்பையும் மாற்றியது. ஆனால் பெண்களுக்கான முகத்திரை அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. அறிவுச் சுதந்திரம், தனிமனித முடிவுகள் என்பன எல்லாமே நசுக்கப்பட்டன. (88)//

முகமது நபியின் வருகைக்கு முன்பு அரேபியாவின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெண் குழந்தை பிறந்தால் அதை உயிரோடு புதைத்து விடுவார்கள். பெண் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டால் சமூகத்திற்க்குள் வர வெட்கப் பட்டுக் கொண்டு பல நாட்கள் தலைமறைவாகி விடுவானாம் தகப்பன். (ராமநாதபுரம்,சேலம் போன்ற மாவட்டங்களில் இன்றும் கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொல்லும் வழக்கம் இருந்து வருவதை நாம் அறிவோம்.) தமிழகத்தில் பெண் குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் முஸ்லிம்களிடத்தில் இல்லை. எவ்வளவு வறுமையில் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தாலும் குழந்தையை கொல்லும் அளவுக்கு அவர்கள் செல்வதில்லை. அதற்கு காரணம் முஸலிம்கள் மறுமையை நம்புவதும் குர்ஆன் அவர்களுக்கு இடும் கட்டளையும் தான்.

'வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்' - குர்ஆன் 6:151

'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை விசாரிக்கப்படும் போது'- குர்ஆன் 81:8,9




இஸ்லாம் அரபு நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு பெண்களின் நிலையே தற்போது மாறி விட்டது. ஆண்களை ஆட்டு விப்பவர்களாக இங்கு பெண்களே இருக்கிறார்கள். சம்பளம் வாங்கிய முதல் நாள் தனது முழு ஊதியத்தையும் கொடுத்து விடும் ஆண்களே இங்கு அதிகம். தற்போது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக விகிதாச்சாரத்தில் படிக்கின்றனர். இவை எல்லாம் அரபு நாடுகளுக்கு இஸ்லாத்தினால் வந்த நன்மைகள்.



அதே நேரம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் பெண்களைப் பற்றிய கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதையும் சற்று பார்ப்போம்.

நமது பாரத திரு நாட்டில் ஒரு சமய பெரியவர் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு பலரின் கண்டனத்துக்கும் ஆளானதை நாம் மறந்திருக்க முடியாது. கணவன் இறந்தவுடன் மனைவியை அதே தீயில் சில நாட்களுக்கு முன்பு ஏன் தற்போதும் கூட தள்ளி பய பக்தியோடு கொண்டாடி வருகிறோம்.

கிறித்தவ அறிஞர் பூன பென்தூரா என்பவர் ' நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக சாத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்க்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம்தான்' என்கிறார்.

மேலும் கடந்த 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாதென சட்டமே இயற்றியது. எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் பைபிளைப் படிக்கக் கூடாது என சட்டம் இயற்றியது. (பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினர் வேதம் ஓதினால் அவர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னவர்கள்தானே நம் முன்னோர்கள்.?:-()

586 ஆம் ஆண்டு பிரெஞசுக்காரர்கள் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா என ஆய்வு செய்ய ஒரு சபையையும் நிறுவினர். அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் தான் எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்க்காகவே படைக்கப்பட்டவர்கள் என முடிவு செய்தது.

இனி 1400 ஆண்டுகளுக்கு முன்பு குர்ஆனும் முகமது நபியும் பெண்களைப் பற்றி கூறிய கருத்துக்களையும் பார்ப்போம்.

'ஆண்,அல்லது பெண் நம்பிக்கைக் கொண்ட நிலையில் நற்க்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.' - குர்ஆன் 4:124

'மனிதன் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறித்தியுள்ளோம்'-குர்ஆன் 46:15

முகமது நபியிடம் ஒரு மனிதர் வந்து மனிதர்களில் நான் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டியவர் யார்? எனக் கேட்டார். முகமது நபி அவர்கள் 'உனது தாய்' என்று கூறினார். பின்பு யார்? எனக் கேட்டார். 'உனது தாய்' என்றே கூறினார். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தந்தை எனக் கூறினார்.
-ஆதாரம் புகாரி, முஸ்லிம்.

இதை எல்லாம் நான் எடுத்து எழுதக் காரணம் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை எடுத்துக் காட்டவே. இது பொன்ற வரலாறுகள் நிறைய உள்ளது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அடிமை வியாபாரத்தைப் பற்றி எடுத்துக் கொண்டால் 'நீங்கள் நோன்பு வைக்க முடியவில்லையா? ஒரு அடிமையை விடுதலை செய்யுங்கள். மனிதன் என்ற முறையில் சில தவறுகள் செய்து விட்டீர்களா? அகற்குப் பகரமாக இத்தனை அடிமைகளை விடுதலை செய்யுங்கள்' என்று கட்டளைகளைப் பிறப்பித்து சில வருடங்களிலேயே அடிமைகளை முழுவதுமாக ஒழித்தது இஸ்லாம். பிலால் என்ற அடிமையை பணம் கொடுத்து விடுதலை வாங்கி பள்ளி வாசலில் முதன்முதலாக தொழுகைக்கு பாங்கு(அழைப்பு) கொடுக்க்ச சொன்னவர்தான் முகமது நபி. இதைப் பிற்காலங்களில் கண்ணீர் மல்க நினைவு கூர்கிறார் பிலால் என்ற அந்த கறுத்த ஆப்ரிக்கர். முகமது நபிக்கு பிரியமான தோழராகவும் கடைசி வரை இருந்தார். இன்று அரபு நாடுகளில் எங்காவது அடிமைகளை பார்க்க முடிகிறதா! ஆனால் நம் நாட்டிலே இன்றும் கொத்தடிமைகள் இருக்கிறார்களா? இல்லையா?

எனவே முகமது நபியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாத்தினால் மனித குலத்துக்கு நன்மை விளைந்ததா? தீமை விளைந்ததா? என்பதையே நாம் இங்கு சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். 'நான் ஒரு முஸ்லிம்' என்று உலகின் எந்த மூலையிலும் சென்று பெருமை பொங்க கூறுவேன். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை எனக்கு தந்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். மற்ற விமரிசனங்களுக்கு அவ்வப்போது பதிலளிக்கிறேன்.

எனவே சமூகத்தில் உள்ள பெண்களின் இந்த இழி நிலையில் உண்மையான அக்கறை தருமி போன்ற நண்பர்களுக்கு இருக்குமானால் ஒரு குழுமமாக சென்று சேலம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மக்களை திருத்த வழி வகை தேட வேண்டும். அது தான் உண்மையான பகுத்தறிவாதிக்கு அழகு.

Tuesday, January 04, 2011

என்னைக் கவர்ந்த திருமணங்கள்!

என்னைக் கவர்ந்த திருமணங்கள்!

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் எனது அத்தை மகள்களுக்கு போன மாதம் திருமணம் நடைபெற்றது. மூத்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பெஷர்வரைச் சேர்ந்த பாகிஸ்தானியர். இளைய பெண்ணுக்கு மணமகன் ஒரு எகிப்தியர். மலேசியா அனைத்து மக்களும் கலந்து வாழும் ஒரு பண்பட்ட நாடு என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. அனைத்து மக்களுக்கும் சம உரிமை கொடுத்து நாட்டின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுகின்றனர் மலேசிய ஆட்சியாளர்கள்.

நமது நாட்டில் சொந்தத்திலும் ஒரே ஊரிலும் திருமணம் முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இப்படி நாடு விட்டு, இனம் விட்டு இஸ்லாம் மார்க்கம் ஒன்றினால் மட்டுமே இணைந்திருக்கும் இந்த ஜோடிகளை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்.

என் வீடு, என் தெரு, என் ஜாதி, என் ஊர் என்ற குறுகிய எண்ணங்களை எல்லாம் விட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பழமொழிக் கேற்ப வாழ முற்ப்பட்டிருக்கும் இந்த ஜோடிகளை நாமும் வாழ்த்துவோம்.

'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்ப்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.சிந்திக்கின்ற சமுதாயத்திற்க்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'
குர்ஆன் 30:21


பாகிஸ்தானில் சொந்தம் ஏற்பட்டாலும் அதிகமான பாகிஸ்தானிகள் இந்தியாவின் மீது ஒரு அதீத வெறுப்பைக் கொட்டுவதை பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகள் அந்த அளவு அந்த மக்களை மாற்றியிருக்கிறார்கள். தினம் ஒரு குண்டு வெடிப்பு. இன்று கூட பஞ்சாப் மாகாணத்தில் குண்டு வெடிப்பில் கவர்னர் இறந்திருக்கிறார். கொடுத்த நாட்டையே நிம்மதியாக வைத்திருக்கத் தெரியாத இவர்களுக்கு மேலும் காஷமீரும் வேண்டும் என்று அடம் பிடிப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. இறைவன்தான் அந்த மக்களையும் அந்த நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.

Monday, January 03, 2011

புது வருடத்தில் பொங்கட்டும் மகிழ்ச்சி!

புது வருடத்தில் பொங்கட்டும் மகிழ்ச்சி!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் நேரமும் தனிமையும் கிடைத்திருக்கிறது. தமிழ் மணத்தின் பக்கம் வந்தால் பழைய முகம் யாரையும் காணவில்லை. அதிகம் புதிய பதிவர்களாக காண முடிந்தது. புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பழைய நண்பர்கள் கோவி கண்ணன், டோண்டு ராகவன், செந்தழல் ரவி, நல்லடியார், முப்தி, தருமி, மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

வருட கடைசி கணக்கெடுப்பதற்க்காக சவுதி நகரங்களான கஸீம், தபுக் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. முன்பு தபுக் சென்றது விமானத்தில். இந்த முறை பேருந்தில் சென்றதால் (17 மணி நேரம)சற்று சோர்வு ஏற்பட்டது. அங்கும் பழைய நண்பர்கள் அப்துல் அஜீஸ், ஜின்னா, அய்யுப்(மும்பை) போன்றவர்களை சந்தித்ததில் களைப்பும் நீங்கியது. மூன்று நாட்களுக்குப் பிறகு ரியாத் திரும்பினேன்.

நேரம் கிடைக்கும் போது இனி பதிவுகளை எழுத எண்ணியுள்ளேன். பின்னூட்டங்களின் மூலம் நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள். நன்றி.

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷடத்தில் இருக்கிறான். நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையை போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3