Followers

Tuesday, July 31, 2012

தலித் யூனிஃபார்ம் கேள்விப்பட்டிருக்கீகளா?



கௌசல் பென்வார் என்ற தலித் பெண்மணிக்கு தனது இளமைக் காலங்களில் இழைக்கப்பட்ட கொடுமைகளை அமீர்கானோடு பகிர்ந்து கொள்வதை இந்த காணொளியில் காண்கிறீர்கள். படிக்கும் பள்ளியிலும் தலித்துகளுக்கு தனி சீருடை கொடுத்து அவர்களை படுத்திய கொடுமையை என்னவென்பது. பள்ளியில் தலித்துகள் தனியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்ற தீய நோக்கில் அந்த குழந்தைகளுக்கு தனி உடை கொடுத்து சீருடையின் மேன்மையையே குலைத்திருக்கிறார்கள் அந்த மேல்சாதி வகுப்பாசிரியர்கள். சரி. படித்து முடித்து விட்டார். இனியாவது தீண்டாமை என்ற சனியனிலிருந்து விடுபடலாம் என்றால் அங்கு வேறொரு முகத்தில் தனது கோரப் பற்களை காட்டிக் கொண்டு வந்து நின்றால் ஒரு சாமான்யனால் என்ன செய்ய முடியும்? படித்தவர்களிடத்தில்தான் தீண்டாமை அதிகமாக தென்படுகிறது. படித்தவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்..

பல்வந்த்சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு கீழே வேலை பார்த்த ஒரு பிராமணன் இவருக்கு டீ கொடுக்கும் போது தனி குவளையில் கொடுத்தானாம். எவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்தாலும் தீண்டாமை நம் சமூகத்திலிருந்து அகலப் போவதில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன.

மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து பல ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் நடைமுறைக்கு வந்தபாடில்லை. சென்னையில் மட்டும் போன வருடம் நூற்றுக்கு மேற்பட்டோர் விஷ வாயு தாக்கியும் மனித மலங்களை அகற்றும் போது ஏற்படும் விபத்துகளாலும் இறந்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. இலவசங்களை வாரி வழங்கும் நமது அரசு இந்த மக்களை காப்பாற்ற ஏன் இயந்திரங்களை வாங்க யோசிக்கிறது? நாட்டு மக்களின் இழி நிலையை போக்குவது அரசின் கடமை அல்லவா?

பிராமணர்கள் தங்களின் நிறத்தாலும் தங்களின் வேலையினாலும் இந்திய மக்களை தாழ்வாக நினைப்பதற்காவது ஒரு முகாந்திரம் இருக்கிறது. ஆனால் இந்திய நிறத்தை பெற்றுக் கொண்டு இந்த மண்ணின் மைந்தர்களான அடுத்த தட்டில் உள்ளவர்களும் தலித்துகளை கேவலமாக நினைப்பது அதை விடக் கொடுமையில்லையா? பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, கீழ் வெண்மணி சம்பவங்கள் அனைத்தும் பிராமணர்களால் வரவில்லை. அதற்கும் கீழுள்ள சாதிகளாலேயே தலித்துகள் கொல்லப்பட்டனர். இன்று இலங்கை பிரச்னை இடியப்ப சிக்கலாக மாறியுள்ளது. பொது எதிரியாக ராஜபக்ஷே உள்ளவரை தமிழர்கள் ஒற்றுமையாக உள்ளது போல் நமக்கு தெரிகிறது. தனி ஈழம் கிடைத்தவுடன் அதன் பிறகு எழும் சாதி சண்டைகள் தற்போது உள்ளதை விட மோசமானதாக இருக்கும் என்று மலையக தமிழர் ஒருவர் என்னிடம் சொன்னார். இந்த கொடுமையை எங்கு போய் சொல்வது.


கிறித்தவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கிறித்தவனாக மாறினாலும் தனி கல்லறை: தனி மாதா கோவில்: என்று அனைத்திலுமே அவர்களை தனியாக்கி மிக சரியாக தாங்களும் இந்து மதத்துக்கு சளைத்தவர்களல்ல என்று பெருமிதப் பட்டுக் கொள்கிறார்கள்..

இதில் நம்ம முஸ்லிம்களும் சந்தடி சாக்கில் வட நாடுகளில் தீண்டாமையை கடைபிடிப்பதை பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சொல்லும் போது 'பள்ளிவாசலில் மிகவும் கண்ணியமாக தீண்டாமை பாராட்டாமல் நடந்து கொள்கிறார்கள். பள்ளியை விட்டு இறங்கியவுடன் ஏழை பணக்காரன் வித்தியாசத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம்கள் சாதி வித்தியாசம் பார்க்கிறார்கள்' என்று சொன்னபோது தீண்டாமை பாராட்டும் அந்த முஸ்லிம்களை பார்த்து பரிதாபம்தான் பட்டேன்.

இந்த உலகில் இன பாகுபாட்டை ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க வந்த இஸ்லாத்தின் பெயரால் எவனாவது வர்ணாசிரமக் கொள்கையை கடைபிடித்தால் அவன் இஸ்லாத்தை இன்னும் விளங்கவில்லை என்றுதான் அர்த்தம். நல்லவேளையாக தமிழகத்தில் கடந்த இருபது வருடமாக நடந்து வரும் தீவிர தவ்ஹீத் பிரசாரத்தின் வழியாக இஸ்லாமியர் மத்தியில் தமிழகத்தில் தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் வட நாடுகளில் இன்றும் மசூதிக்கு வெளியே தீண்டாமை கடைபிடிப்பதை அனைத்து முஸ்லிம்களும் ஒட்டு மொத்தமாக எதிர்க்க வேண்டும். பள்ளிக்கு இறைவனை வணங்கச் சென்றவுடன் தீண்டாமையை முற்றாக மறக்கும் ஒரு முஸ்லிம் வெளியே வந்தவுடன் ஏன் பார்க்கிறான் என்பதையும் இங்கு நாம் அலச வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள பெரும்பான்மை சமூகமான இந்துக்கள் சாதி வித்தியாசம் பார்க்கிறார்கள். இதை நோட்டமிடும் பாமர முஸ்லிம் நாமும் அப்படி இல்லா விட்டால் நம்மையும் தீண்டத்தகாதவனாக இந்துக்கள் நினைத்து விடுவார்களோ என்று நினைத்து தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொள்கிறான்.

இந்துக்கள் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்க காரணம் அவர்களின் வேதங்களும், புராணங்களும், ஸ்மிருதிகளும் சாதி ஏற்றத் தாழ்வை தூக்கிப் பிடிக்கின்றன. எனவே அவர்கள் தீண்டாமையை கடை பிடிக்க வேதத்தை ஆதாரமாக சிலர் காட்டக் கூடும். ஆனால் குர்ஆனும் முகமது நபியின் போதனையும் சாதி ஏற்றத் தாழ்வை காலில் போட்டு மிதிக்கின்றன. எனவே இஸ்லாமியர்கள் இந்துக்களை இந்த விஷயத்தில் காப்பி அடித்து மனித விரோத செயலில் ஈடுபடாமல் குர்ஆன் கூறும் வாழ்வியலுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

முகமது நபி எந்த அளவு எளிமையாகவும், எந்த வேலையையும் தாழ்வாக எண்ணாமல் பார்த்ததையும் கீழே வரும் அவரது வரலாறு நமக்கு பாடமாக உணர்த்துகிறது. எனவே இஸ்லாமியரில் எவரும் சாதி வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற பரந்த எண்ணத்துக்கு வர வேண்டும். நம்மைப் பார்த்து நமது சகோதரர்களான இந்துக்களும் கிறித்தவர்களும் அவர்களிடம் தவறாக குடி கொண்டுள்ள சாதி வேற்றுமையை ஒழிக்க முன் வர வேண்டும்..

முகமது நபியின் எளிய வாழ்க்கை:

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள். நூல் : அஹ்மத் 23756, 24176, 25039.

தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள். நூல் : தப்ரானி (கபீர்) 12494

மதீனாவுக்கு வெளியே உள்ள சிற்றூர் வாசிகள் இரவு நேரத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைப்பார்கள். பாதி இரவு கடந்து விட்டாலும் அந்த விருந்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்வார்கள்.நூல் : தப்ரானி (ஸகீர்) 41

அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. நூல் : புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். நூல் : புகாரி 3906

இப்படி எல்லா வகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள். ஒரு தடவை கூடத் தமது பதவியைக் காரணம் காட்டி எந்த உயர்வையும் அவர்கள் பெற்றதில்லை.

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில் மக்களிடம் 'மக்கா வாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான்' என்பதை அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். நூல் : புகாரி 2262, 3406, 5453

நான் அதிகாலையில் (என் தம்பி) அப்துல்லாஹ்வை நபிகள் நாயகத்திடம் தூக்கிச் சென்றேன். அவர்கள் ஸகாத் (பொதுநிதி) ஒட்டகங்களுக்குத் தமது கையால் அடையாளமிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அறிவிப்பவர் : அனஸ் பின் மாக் (ரலி) நூல் : புகாரி 1502, 5542

இந்த நிகழ்வுகளெல்லாம் தொழிலில் எதுவும் இழிந்த தொழில் இல்லை என்பதை விளக்குவதற்காகவே முகமது நபி செய்திருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தான் உயர்ந்தவன் என்று எண்ண ஆரம்பித்து விட்டாலே அவன் முகமது நபியை அவரது போதனைகளை முற்றாக புறம் தள்ளுகிறான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தீண்டாமை பாராட்டினால் அதனால் பாதிக்கப்படுபவனின் மனம் என்ன பாடுபடும் என்பதை மேலே உள்ள காணொளி நமக்கு அழகாக விவரிக்கிறது. மனிதன் இறைவனுக்கு செய்யும் குற்றங்களை தான் நாடியோருக்கு மன்னிப்பதாக கூறும் இறைவன் ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் செய்யும் கொடுமைகளை பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை தானும் மன்னிக்கப் போவதில்லை என்று குர்ஆனில் கூறுகிறான். எனவே நோன்பு, ஹஜ்ஜூ, உம்ரா, தொழுகை, தர்மம் என்று பல நன்மைகளை செய்து வரும் நாம் தீண்டாமையை கடைபிடிக்காமல் இறைவனின் அன்பை பெற முயற்ச்சிப்போமாக!

----------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு 10



இரண்டு பாகிஸ்தானிகள் என்னை அடித்து விட்டனர்!


ஒரு பாகிஸ்தானிய மாணவன் அமெரிக்க பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

ஆசிரியர்: உன் பெயர் என்ன?

மாணவன்: அஹமத்

ஆசிரியர்: தவறு. இப்பொழுது நீ அமெரிக்காவில் இருக்கிறாய். எனவே இன்றிலிருந்து உன் பெயர் ஜானி. சரியா...

பாகிஸ்தானிய மாணவன் யோசித்தபடியே வீட்டுக்கு சென்றான். வீட்டில் அவனது தாய் 'முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது?' என்று கேட்டார்.

மாணவன்: ஓ....நன்றாகவே சென்றது. இன்றிலிருந்து நான் ஒரு அமெரிக்கன். என் பெயர் இனி ஜானி.

பையனின் தந்தையும் தாயும் இஸ்லாத்தை அடி பிறழாமல் பின் பற்றுபவர்கள். எனவே கிறித்தவ பெயரை வைக்கக் கூடாது என்று போதித்தனர். பையன் கேட்பதாக இல்லை. எனவே இவ்வாறு சொன்னதற்காக பையனை திருத்துவதற்காக அவனை அடித்து விட்டனர். அடி வாங்கிய மறு நாள் அதே யோசனையோடு பள்ளியினுள் நுழைந்தான் அஹமத். இவன் யோசனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த ஆசிரியர் 'என்ன ஆச்சு உனக்கு ஜானி?' என்று கேட்டார்.

பையன் பொறுமையாக சொன்னான் "அமெரிக்கனாக மாறிய என்னை இரண்டு பாகிஸ்தானிகள் அடித்து விடடனர்"
-----------------------------------------------------
கல்வி அமைச்சர் அப்துல் கலாமா? அபுல் கலாமா?

பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது.




இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார்.

தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு, தமிழில் அனுப்பிய மடல், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.புதுச்சேரி அரசு பிரதமரின் மடலை நகலெடுத்து அனைத்து அரசு துறைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது. இந்த மடலில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர், "மவுலானா அபுல் கலாம் ஆசாத்' என்பதற்குப் பதிலாக, "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பதில் சொல்ல முடியவில்லை:இந்த பிழை கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், பிரதமரின் கையெழுத்திட்டு வந்திருப்பதால் மடலில் எந்த மாற்றமும், திருத்தமும் செய்யாமல், அப்படியே பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.வரலாறு பாடத்தில் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என குறிப்பிடப்பட்டுள்ள வேளை யில், பிரதமரின் மடலில் "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, எழுதப்பட்டுள்ளது ஏன்?இரண்டில் எது சரி என, ஆசிரியர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தின மலர்
29-07-2012


கலாம் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ல. கலாம் என்றால் பேச்சு என்று பொருள். கலாமுல்லாஹ் - அல்லாஹ்வின் பேச்சு என்று வரும் போது தான் அது வேதத்தை குறிக்கும்.வெறும் கலாம் என்பது வேதத்தை குறிக்காது. ஆக கலாம் என்றால் சொல் என்று அர்த்தம். அப்துல் கலாம் என்றால் சொல்லுக்கு அடிமை என்று பொருள். இது தடுக்கப்பட்ட பெயர் ஆகும். ஏனெனில் அடிமை என்பதற்கு அல்லாஹ்விடம் மட்டுமே அடிமையாக இருக்குமாறு அமைய வேண்டும். அடுத்து அபு என்றால் தந்தை என்று அர்த்தம். அபுல் கலாம் என்றால் சொல்லின் தந்தை என்று பொருள். சொல்லாற்றல் மிக்கவர் என்று பொருள். இது அனுமதிக்கப் பட்ட பெயர்.

நாட்டுக்காக உழைத்த ஒரு தியாகி: கல்வி அமைச்சராக இருந்த ஒருவரின் பெயரிலேயே அதிகார வர்க்கத்தில் பெரும் குழப்பம். அந்த அளவு இவரது வரலாறு திட்டம் போட்டு மறைக்கப்பட்டுள்ளது..

எனவே அபுல் கலாமுக்கும் அப்துல் கலாமுக்கும் உள்ள தொடர்பை தெரிந்திருப்போம். இதன் மூலம் நமது முன்னால் மத்திய கல்வி அமைச்சரின் பெயர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்றே குறிப்பிடுவது இஸ்லாமிய அடிப்படையில் சரியாகும்.

---------------------------------------


கர்னாடக மாநிலத்தில் இந்தியத் திருவிழாக்கள் என்று ஒரு பாடப்புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் உள்ள அனைத்து பண்டிகைகளும் இந்துப் பண்டிகைகள்
மட்டுமே.

உயர் சாதியினர் மட்டுமே கொண்டாடும் பண்டிகைகளை தொகுத்துள்ள அந்தப் புத்தகம்
மற்ற மதத்தினரின் பண்டிகைகளைப் பற்றி கண்டு கொள்ளவேயில்லை.

இந்துப் பண்டிகைகளை மட்டும் விவரிக்கும் ஒரு புத்தகத்திற்கு எதற்கு இந்தியாவின்
திருவிழாக்கள் என்று பெயர்?

இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள் என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கும் நச்சு முயற்சி.

பெரும்பான்மை இந்துக்கள் ஒத்துக் கொள்ளாத பட்சத்திலேயே இந்த ஆட்டம் ஆடுகிறதே பாஜக. இன்னும் இவர்களை அனைவரும் ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் பழையபடி வர்ணாசிரமம் வெளியே வர ஆரம்பித்து விடும். வாழ்க பாரதம்.

பாஜக என்றென்றும் ஒரு விஷப் பாம்பு என்பதை நிரூபித்துக் கொண்டே உள்ளது.

----------------------------------------------
மனக் குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 9



-----------------------------------------------

நேற்று முன் தினம் கேரளா மாநிலத்தின் கோழிகோடு மாவட்டத்தில் ஒரு குண்டு ஒன்று வெடித்தது . இது தொடர்பாக ஜோஷிராம் என்ற ஆர்.எஸ்.எஸ் .காரனை கைது செய்துள்ளனர்.

கோயிலாண்டி என்ற ஊருக்கருகில் அவனது வாடகை வீட்டில் வைத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் அவனது தாயாரே காயமடைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிட தகுந்தது. எதற்காக ஒத்திகை பார்த்து கொண்டு இருந்தானோ ? அதுவே விபத்தாகி அவனை வெளியுலகிற்கு காட்டி கொடுத்துள்ளது.

செய்தியை படிக்க இங்கு செல்க:

ஹிந்துவில் வந்த செய்தியை படிக்க இங்கு செல்க:


http://www.mathrubhumi.com/english/story.php?id=126586

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article3698903.ece





Sunday, July 29, 2012

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை – ஜவாஹிருல்லாஹ்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, ஏற்பாட்டாளர்கள் மூலம் வினவியபோது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.



வாக்களிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மேலும் பல மணித்துளிகள் நேர்காணல் நீடித்த போதும் எவ்வித சங்கடத்தையும் வெளிக்காட்டாமல் மிகுந்த பொறுமையுடனும் இன்முகத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் ஜவாஹிருல்லாஹ் விடையளித்த பாங்கு பாராட்டிற்குரிய ஒன்று.

தேர்தலுக்குப் பின் அரசியல் ரீதியான அவரின் நிலைப்பாடுகள், சமுதாயம் குறித்து அவர் எடுத்து செல்லும் நடவடிக்கைகள், சட்டசபை தொடர்பானவை, இயக்கம் தொடர்பானவை என்று தொலைநோக்கில் நாம் கேட்க நினைத்தவையும் அவரின் விளக்கங்களும் பரவலாய் விரிகின்றது.

அவருடனான நேர்காணல் -

கேள்வி: இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக எதைக் கருதுகிறீர்கள்? அதை எவ்வாறு தீர்க்கலாம்?

ஜவாஹிருல்லாஹ்: இந்திய அளவில் முஸ்லிம்களிடையே கல்வியறிவின்மை, வறுமை, அரசியல் விழிப்புணர்வின்மை, ஒருங்கிணைந்த அரசியல் தலைமை இல்லாதது ஆகிய பிரச்னைகளைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. அரசியல் விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தவேண்டியது கட்டாயமாகிறது. மக்களை விழிப்பறிவுணர்வை எட்டச்செய்வதன் வாயிலாகவே இவற்றைத் தீர்க்கலாம்


கேள்வி: மனிதநேய மக்கள் கட்சியை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் திட்டமுண்டா? மேலும், தேசிய தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ்: “இல்லை; அதற்கான சாத்தியங்களில்லை, வட இந்திய முஸ்லிம்களுக்கும், தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் அடிப்படை மனநிலையில் பெரிதும் மாற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் (வட இந்திய முஸ்லிம்கள்) ஒரு தென்னிந்திய தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அங்கு பல்வேறு கூட்டங்களில் நான் பங்குக் கொண்டு பேசியுள்ளேன். சமீபத்தில் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பீஸ் கட்சி 2007ல் தமுமுக டெல்லியில் நடத்திய பேரணியினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும். எனவே நாங்கள் அங்கு எங்கள்கட்சியை கட்டமைக்காவிட்டாலும் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்.


கேள்வி: ஜெயலலிதா அரசை எவ்விதம் மதிப்பிடுகிறீர்கள்?

ஜவாஹிருல்லாஹ்: எதிராகச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை; வக்ஃப் வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன் அளிப்பதற்கும், அதிகரிக்கப்பட்ட ஊதியத்தினால் ஏற்பட்ட ஊதிய வித்தியாசத் தொகையை அளிப்பதற்காகவும் சென்ற ஆண்டு ரூ3 கோடியை தமிழக அரசு வழங்கியது. இதே போல் இந்த ஆண்டு பள்ளிவாசல் பராமரிப்பு பணிகளுக்காக ரூ 3 கோடி அரசு வழங்கியுள்ளது. மாவட்டங்களில் இயங்கும் முஸ்லிம் மகளிர் குழுவிற்கு அரசின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. உலமாக்களின் உதவி தொகையை ரூ750லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கின்றது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


கேள்வி: குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனைப் பெற்ற அப்பாவி முஸ்லிம் கைதிகள் பல்லாண்டுகளுக்குப் பின்னரும் பிணை வழங்கப்படாமல் இருக்கிறார்களே?

ஜவாஹிருல்லாஹ்: முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஏழாண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருந்த கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஏழாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய முஸ்லிம் கைதிகளை அப்போது விடுவிக்கவில்லை. அதே நிலை இப்போதும் தொடர்கிறது.எங்கள் நிலைப்பாட்டின் படி, பத்தாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும் மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த சிறைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: ஆளுங்கட்சிக்கு, குறிப்பாக முதல்வருக்கு அளவுக்கதிகமாகத் துதிபாடுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே. மேலும் தானே புயல் நேரத்தில் நீங்கள் சட்டமன்றத்தில் பேசுகையில் “தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் துயர் நிவாரணம் பெற்றதன் பின்னால் மற்ற மாவட்ட மக்களும் ‘தானே புயல் தங்களைப் பாதித்திருக்கக் கூடாதா? என்று எண்ணத் தலைப்பட்டதாக”ச் சொல்லியிருந்தீர்கள், அதுபற்றி?

ஜவாஹிருல்லாஹ்: ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு மனநிலை உண்டு. சிலர் விமர்சித்தால் அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். இன்னும் சிலர் பாராட்டினால் மேலும் ஊக்கம் பெற்று நல்லபல திட்டங்களைச் செயற்படுத்துவார்கள். அவ்வகையில் நமது தற்போதைய முதல்வரைப் பாராட்டினால் மென்மேலும் ஊக்கம் பெற்று நல்ல பல திட்டப்பணிகளைத் தொடர்வார். இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் முதலில் பாராட்டிவிட்டு அதன்பின்பு வேண்டிய கோரிக்கைகளை வைக்கிறோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு ஓராண்டு நிறைவடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் நமது மாண்புமிகு முதல்வர் தொலைநோக்குத் திட்டம் 2023 என்று திட்டம் வகுத்திருப்பது இதே போல் தமிழக இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஆனால் தமிழகத்தில் இளம் குடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசுக்கு வருமானம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது புத்திசாலித்தனமானது அல்ல. இது எதிர்காலத்தில் வலிமையான தமிழகம் என்ற கருத்தோட்டத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டோம்..

மற்றபடி, தானே புயல் தொடர்பாக, நான் அப்படி பேசியது தவறுதான் என்று ஏற்றுக்கொள்கிறேன். நானும் மனிதன் தானே, அவ்வகையில் தவறிழைத்துவிட்டேன். இனி அவ்வாறு பேசமாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.நானும் எங்கள் கட்சி ஆம்பூர் உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை, ஒரு பைசா கூட இலஞ்சம் வாங்கியதில்லை; இன்ஷா அல்லாஹ் இனிமேலும் வாங்க மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். இங்கே நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு எம்.எல்.ஏ வாக நீங்கள் இலஞ்சம் கேட்கக் கூட வேண்டாம், எல்லா நலத்திட்டங்களிலும் எம்.எல்.ஏ பங்கு என்று அவர்களாகவே ஒரு தொகையை ஒதுக்கிவிடுகிறார்கள். நாங்கள் அதைக் கூட பெறுவதில்லை என்பதை இங்கே உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

கேள்வி: பர்மிய முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறையும், இன அழிப்புப் படுகொலைகளும் நிகழ்த்தப்படுகின்ற வேளையில், நமது எந்த அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லையே? தமுமுக எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.?

ஜவாஹிருல்லாஹ்: இன்ஷா அல்லாஹ், விரைவில் இது பற்றி ஆலோசித்து, எங்களால் இயன்றதைச் செய்வோம்

கேள்வி: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர், மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளாரே?

ஜவாஹிருல்லாஹ்: கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறை மிகவும் தவறு. மெளலவி ஷம்சுத்தீன் காஸிமி மீதான தாக்குதலை தமுமுக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது..நான் வளைகுடா சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஊர் திரும்பி இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கையை அமைப்புடன் கலந்து பேசி முடிவெடுப்போம். மேலும் இது குறித்து கலகம் செய்தவர்கள் மேல் காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்வோம்.


கேள்வி: மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கூறுங்களேன்?

ஜவாஹிருல்லாஹ் - 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை மே21 2007ல் சமர்பித்தது. 2009 டிசம்பரில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இது வரை இந்த ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்க வழங்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் முதன்மையான பரிந்துரை. இது இயலாவிட்டால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 7 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைச் செய்துள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரையை புறக்கணித்து உ.பி. தேர்தல் வரும் வேளையில் ஒத்துமொத்தமாக 4.5 விழுக்காடு முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்கும் வகையில் முஸ்லிம்களை ஏமாற்றும் வகையில் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஏமாற்று வித்தைக்கு உ.பி. முஸ்லிம்கள் சட்டமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை படித்துக் கொடுத்தார்கள்.

கேள்வி: ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு நீங்கள் பாடம் கற்ற இடம். இப்போது அந்த அமைப்பு தேசிய அளவிலான அரசியல் கட்சியொன்றை அமைத்துள்ளது. அவர்களுடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

ஜவாஹிருல்லாஹ்: சென்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட சில ஊர்களில் அவர்களுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். நாங்கள் போட்டியிட்ட இடங்களில் அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது.. அமைப்பு என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பரஸ்பரம் தேர்தல் வெற்றிக்கு இரு தரப்புமே உதவிக் கொண்டோம்.

கேள்வி: முஸ்லிம் சமுதாயத்துக்கு உங்களால் நிறைய பலன் கிடைக்க கூடும் என்று தான் உங்களை சட்டசபைக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை ஒன்றும் நீங்கள் அது குறித்து பேசியதாக ஒன்றும் தெரியவில்லையே..?

ஜவாஹிருல்லாஹ் -(சிரிக்கிறார்) என் தொகுதியில் ஓட்டு போட்ட மற்ற சமுதாயத்தினரும் இது போலதான் கேட்கிறார்கள்

நீங்கள் உங்கள் சமுதாய மக்களுக்கு மட்டுமே சட்டசபையில் பேசுவதாக தெரிகிறது. அன்றைக்கு கூட உங்கள் சட்டசபை பேச்சை கேட்டேன். 60 70 சதவீதம் உங்கள் மக்களுக்காக மட்டும்தான் பேசினீர்கள் என்று ஒருவர் என்னை கேட்டார். அவர்கள் அப்படிக் கேட்கிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். நான் என்னளவுக்கு அனைத்து சாராருக்கும் பொதுவாகவே பேசுகிறேன். தொலைக்காட்சிகளில் சட்டசபை நிகழ்வுகள் மிகவும் சுருக்கமாக ஒளிபரப்பபடுவதால் நாங்கள் பேசுவது முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை.

கேள்வி: தமிழக முஸ்லீம்களுக்கு என்று தனித்த ஒரு செய்தித் தாள் இல்லை. தொலைக்காட்சி சேனலும் இல்லை.. இவையிரண்டில் ஏதேனும் ஒன்று கொண்டு வரும் திட்டம் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ் - அவசியமான ஒன்றுதான். கேரளாவில் கூட மாத்யம் போன்ற பிரபல செய்தி தாள்கள் இருக்கின்றன. அவையெல்லாம் பெரும் முதலீட்டில் செய்ய வேண்டியவை. அந்தளவு இப்போது நம்மிடம் நிதி நிலைமை இல்லை. சமுதாயம் குறித்தான அக்கறையுள்ள பெரும் முதலீட்டாளர்கள் முன் வரும்போது இதெல்லாம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


கேள்வி: கேரளாவில் இஸ்லாமிய வங்கி போன்று அல்பரகா நிதியகம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வரும் முயற்சிகளை எடுப்பீர்களா?

ஜவாஹிருல்லாஹ்- இல்லை கேரளாவில் நீங்கள் குறிப்பிடுகிற அல்பரகா நிதி நிறுவனம் வங்கி என்பதாக ரிசர்வ் வங்கியில் பதிவிடப்படவில்லை. மாறாக அது வங்கி அல்லாத நிதி நிறுவனம் அதாவது Non Banking Financial Corporation என்றே ரிசர்வ் வங்கியில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வங்கிப் போன்று எல்லா செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் காசோலையோ, வரைவோலையோ வழங்க விதிமுறை அனுமதிக்காது. மேலும், இந்த அல்பரகா வளைகுடா வாழ் கேரள அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம். அப்படி தமிழகம் சார்ந்த வளைகுடா அமைப்புகள் அத்தனை வலிமையாக இதனை முன்னெடுக்குமா என்பதைப் பொறுத்தே இதற்கு விடையளிக்கமுடியும்.

கேரளாவிலேயே முந்தைய ஆட்சியின் முதல்வர் இது குறித்து எல்லா நடவடிக்கைகளும் எடுத்து செயல்படுத்த துவங்குமுன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

கேள்வி: சக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றல் குறித்து……….

ஜவாஹிருல்லாஹ்- சமுதாயத்திற்கு பொதுவான விஷயங்களில் பிற அமைப்புகளுடன் கடந்த காலங்களில் இணைந்தே செயல்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக சென்ற திமுக ஆட்சியில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக அனைத்து அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளோம். சமீபத்தில் 15 வயது பெண் திருமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எடுத்து நடவடிக்கையை கண்டித்து அனைத்து அமைப்பினருடன் இணைந்து போராட்டத்தில் பங்குக் கொண்டோம்.

________________________________________
ஒவ்வொரு அமைச்சரும் மானியக் கோரிக்கை விவாதத்திற்க்குப் பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு யாரும் பேசக்கூடாது. சந்தேகங்கள் விளக்கங்கள் இருப்பினும் அவர் பேசி முடித்தபிறகுதான் பேசவேண்டும் என்பது அவை மரபு. அப்படி பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை மீது அதன் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது இந்துக்கள் இராமனை வணங்குவது போல் கிறிஸ்துவர்கள் இயேசுவை வணங்குவது போல் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவது போல் .. என்று தொடரும்போதே நமது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா எழுந்து “மன்னிக்கவும் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவதில்லை.அல்லாஹ்வைத் தான் வணங்குவோம் என்று குறுக்கிட்டுக் குறிப்பிட்டார். (அப்போது நான் (ஜவாஹிருல்லாஹ்) மும்பையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழுவில் இருந்தேன்) உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து முஸ்லீம்கள் அல்லாஹ்வைத்தான் வணங்குகிறார்கள். முகமது நபியை இல்லை. அமைச்சரின் அந்த பேச்சு சபைக்குறிப்பில் திருத்தப்பட்டுப் பதியப்படும்” என்று கூறியதாக ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.

H.FAKHRUDEEN
ஃபக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

--------------------------------------------------------------


மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு -5



--------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 4




Saturday, July 28, 2012

சோமாலிய குழந்தை ஒன்றின் உள்ளக் குமுறல்.....



ஆதமுடைய மகன் ஒருவன் பசித்திருக்கிறேனே.....

ஆட்டையும், மாட்டையும், கோழியையும் ருசிப்பவரே......

ஆறுதல் கூறக் கூட எவரும் என்னிடம் வருவதில்லையே......

இதுதான் மனித நேயமா...சொல்லுங்கள் எனக்கு மட்டும்....





பலரும் இந்த நிலைக்கு வழக்கம் போல் இஸ்லாத்தை காரணமாக காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் தற்போதய நிலைக்கு யார் காரணம் என்பதை அலசுவோம்.

அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.

வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி தேசத்துடன் சேர்ந்து கொண்டது. அதன் பின் 26 ஜூன் 1960 இல் முழுமையான் சுதந்திரம் அடைந்து சோமாலிய சோசலிச குடியரசானது.எனினும் 1969 இல் நடந்த இராணுவ புரட்சி மூலம் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் ஷெர்மார்க் அதிபரானார். இதன் மூலம் சோமாலியா புரட்சிகர இராணுவம் உருவாக்ககம் பெற்று அவர்களின் சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்தக்களவு வெற்றியும் கண்டனர்.


இவ்வேளையில் தான் சோமாலியாவின் தலைவிதி மாறத்தொடங்கியது தனக்கு தானே மண் அள்ளிபோட்டது போல் வல்லரசு போட்டிக்கு தன்னை பலிக்கடா ஆக்கியது சோமாலியா. குடியேற்ற காலத்தின் போது சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எதியோப்பாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஓக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எதியோபியாவுக்கு விடுக்கப்பட்டது.


எதியோப்பா , கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய எதியோப்பியா மீது போர் தொடுத்தது சோமாலியா.1977 இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா ,சோவியத் யூனியன் -ரஷ்யா ) குளிர்காய சோமாலியாவை தளமாக பயன்படுத்ததொடங்கினர். உலக நாடுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக போரில் குதித்ததாக சோமலியாவை உலக நாடுகள பலவும் பகைத்துக்கொள்ள எதியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் , சோமாலியாவிற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்ப்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு இரையானது எதியோப்பியாவும் சோமாலியாவும்.


தொடர்ச்சியான போர் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்க, இராணுவ ஆயுதங்கள் மிக எளிதாக கிடைக்க ஆயுதக்குழுக்கள் பலவும் வகை தொகையின்றி உருவாகின. பனிப்போரின் (அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையான போட்டி ) முடிவு வரை சோமாலியாவில் அரசியல் நிர்வாகம் இயங்காமலே கிடந்தது அல்லது அமெரிக்கா அதனை இயங்காமல் செய்தது என்பதே உண்மை.

எனவே இக்பால் செல்வன் சொல்வது போல் அவர்களின் வறுமைக்கு இஸ்லாம் காரணம் அல்ல. அமெரிக்க ரஷ்யாவின் ஆதிக்க மனப்பான்மை போட்ட விதை இன்று மரமாக வளர்ந்து நிற்கிறது என்பதே உண்மை.

ஆனால் அதனை தற்போது இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட அந்த மக்களை எவ்வாறு நாம் காப்பாற்றப் போகிறோம் என்பதே நம் முன் உள்ள முக்கியமான கேள்வி.

http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/

யுனிசெஃப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண உதவி செய்ய நினைப்பவர்கள் மேற்கண்ட சுட்டியில் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம். ரமலானில் நம்முடைய தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு இந்த மக்களுக்கு நம்மவர்களின் உதவிகளை திருப்பி விடலாம்.




Tuesday, July 24, 2012

ஷாருக்கானும் இந்திய ஜனநாயகமும்!

ஷாருக்கானும் இந்திய ஜனநாயகமும்!

1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு அதே யேல் பல்கலைக்கழகத்தின் Chubb Fellowshipஐப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்த புறப்பட்டார் ஹிந்தி நடிகர் ஷாருக்கான். தனியார் விமானம் ஒன்றில் அவர் அமெரிக்காவின் வைட் பிளையின்ஸ் விமான நிலையத்தில் இறங்கினார். அவருடன் நீதா அம்பானி உள்பட பல தொழில் அதிபர்கள் பயணித்தனர். அந்த விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் உடனே சோதனைகளை முடித்து அனுப்பினார்கள். ஷாருக்கான் என்கிற இஸ்லாமியப் பெயரை இவர் கொண்டிருப்பதால் இவரை மட்டும் இரண்டு மணி நேரம் விசாரித்தார்கள், இந்தியத் தூதரகம் தலையிட்ட பின்புதான் அனுப்பினார்கள். உடனே இந்திய ஊடகங்கள் எங்கும் நெருப்பு கொப்பளிக்கத் தொடங்கியது.



அடுத்த நாள் அதிகாலை பல நாளிதழ்களில் இதுதான் தலைப்புச் செய்தி. ‘ஆபத்து ஆபத்து’ என்று, எங்கும் கூப்பாடுகள். அமெரிக்காவே மன்னிப்பு கேள் என்றும், மறுபுறம் மன்னிப்பு மட்டும் கேட்டால் போதாது என்றும் அரசு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களில் இருந்து அறிக்கைகள் பறந்தன. எஸ்.எம்.கிருஷ்ணா மாஸ்கோவில் இருந்தபடி வாளைச் சுழற்றினார். ஷாருக்கானை நடத்தியது போல் நாம் இனி அமெரிக்க அதிகாரிகளை இங்கு நடத்த வேண்டும் எனக் கண்டனக் குரல்கள் கிளம்பின. இதனைக் கண்டித்து ‘அப்படி அமெரிக்கர்களை நடத்த வேண்டும் என்பது தவறு., அபிஷ்டு அபிஷ்டு’ என்றது தி ஹிந்து தலையங்கம். அமெரிக்காவை, அமெரிக்க அரசை இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பதுவே மகாபாவம் என்று தலையங்கம் கண்ணீர் வடித்தது. வாசிக்கும் இந்திய நகர அதிகாரவர்க்க முட்டாள்கள் அனைவரின் மூளையும் பற்றி எரிந்தது. தீ தீ தீ எட்டுத் திக்கும் தீ.

இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் ஷாருக்கான் உள்பட பல ஹிந்தி நடிகர்கள் பல முறை இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்கள். ‘எனக்குத் தலைக்கனம் ஏற்படும்போது எல்லாம் நான் அமெரிக்கா செல்வேன். அவர்கள் நான் ஒரு பெரும் நட்சத்திரம் அல்ல, ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை நிரூபித்து எனக்குப் பாடம் புகட்டுவார்கள், என்று ஷாருக்கானே இந்த சம்பவத்திற்கு மாணவர்கள் மத்தியில் உரையாடுகையில் விளக்கமளித்தார். சினிமா நடிகர்கள்தான் அப்படி நடத்தப்படுகிறார்களா என்றால் இல்லை, பலரும் இப்படி அமெரிக்க விமான நிலையங்களில் நடத்தப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயமே. ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது நிர்வாணப்படுத்தி பரிசோதிக்கப்பட்ட போதும் நமக்குப் புத்திவரவில்லை. அதன் பிறகு அப்துல் கலாம் ஒருமுறை எல்லா சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏறிய பிறகு அவரது ஷூவைக் கழட்டிக் காண்பிக்கச் சொல்லி சில அதிகாரிகள் பணித்தனர். இப்படி நம் ஊரில் பல பில்டப்புகளுடன் வலம் வருபவர்களின் டவுசர்கள் அமெரிக்காவில் கழற்றப்படுவதும் அவர்கள் வடிவேல் போல அப்படியே அதை மெயின்டெய்ன் செய்து வண்டியை ஓட்டுவதும் நமக்கும் சகஜமாகிப் போச்சு.


இது போல் சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும்தான் நடத்தப்படுகிறார்களா? இல்லை, இந்தியாவுக்கு வெளியே பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்யும் அனைவரையும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கி பீதியுறச் செய்வதுதான் பல வளர்ந்த நாடுகளின் மோஸ்தராகவே உள்ளது. சமீபத்தில் வளைகுடா நாடுகளில் அங்கு கூலி வேலை, வீட்டு வேலை செய்ய இந்தியாவில் இருந்தும், தெற்காசிய நாடுகளில் இருந்தும் செல்லும் நூற்றுக்கணக்கானவர்களுடன் பல மணி நேரம் விமான நிலையத்தில் பேச, அவர்கள் நடத்தப்படும் விதத்தை நெருங்கி இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு கணமும் அவர்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள். அதுவும் வளைகுடா நாடுகளில் விமான நிலையத்தில் பணி புரியும் இந்தியர்களாலேயே துன்புறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு விமானமும் தரையிறங்கிய சில நிமிடங்களில் எங்கு செல்வது என்று கூட அறியாது கண்ணீருடன் திசைகள் தொலைத்து நிற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் முளைத்தவண்ணம் இருக்கிறார்கள்.

ஆனால் சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும் இப்படி நடத்தப்படும்போது அறிக்கை போர் நடத்திவிட்டு, சில வார்த்தைகள் மன்னிப்பைப் பெற்றுவிட்டு அதன் பின் அமைதியாக இருந்து விடுவது சரிதானா என்கிற கேள்வி அழுத்தமாக எழுகிறது. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த Racial Profilingஐத் தொடங்கியவர்கள், இப்படி சில வெற்று வார்த்தைகளில் மன்னிப்பு கேட்பது போதுமானதா? இந்த சம்பவத்தில் ஷாருக்கான் சோதிக்கப்பட்டதற்குக் காரணம் அவரது இஸ்லாமியப் பெயர்தான் என்பது உலகம் அறிந்த விஷயம். என் நோக்கம் இஸ்லாமியப் பெயர் உடையவர்களை நாம் இந்தியாவில் எப்படி நடத்துகிறோம் என்பதைப் பற்றி விவாதிப்பது மட்டுமே.



1990கள் முதல் பொடா சட்டம், 1999கள் முதல் தடா சட்டம் இந்தியாவில் யாருக்கு எதிராகப் பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டது? அந்த சட்டங்களை அதிகாரத்தில் இருந்தவர்கள் நியாயமாகத்தான் பயன்படுத்தினார்களா? இந்த இரு சட்டங்களிலும் நீங்கள் யாரையும் கைது செய்யலாம், எத்தனை ஆண்டுகளும் சிறையில் அடைக்கலாம், அவர்களின் வாக்கு மூலங்களைச் சாட்சியங்களாக ஏற்கலாம்... இப்படி இன்னும் இந்த சட்டத்தின் சிறப்புகளைப் பல புத்தகங்கள் நமக்கு விளக்குகிறது. குஜராத்தில் நரேந்திர மோடி இந்த சட்டத்தை வைத்து என்ன என்ன செய்தார்? நரோடா பாட்டியாவில் 95 பேர் உயிருடன் கொல்லப்பட்டனர். இவர்களைக் கொன்றவர்கள் மீது ஏன் எந்த சட்டமும் பாயவில்லை? உயிருடன் வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரியை எப்படிக் கொன்றோம் என்று அவர்களே விவரித்தும் இன்று வரை ஏன் எந்த சட்டமும் பாய மறுக்கிறது?


1970களில் அமெரிக்கா தொடங்கி வைத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியாவில் 1980களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சங் பரிவாரங்கள் மிக வெளிப்படையாகவும், காங்கிரஸ் அதனை அப்படியே கைகளில் மதசார்பற்ற உறையை மாட்டிக் கொண்டும் இந்திய சூழலில் உள்வாங்கிக் கொண்டன. இந்தியப் பெரும் ஊடகங்களும் முழுக்க அரசின் ஊதுகுழலாக, அமெரிக்க அடிவருடிகளாக, மேற்கில் இருந்து வரும் அனைத்தையும் அப்படியே ரகம் பிரிக்காமல் பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களாக மாறின. 1970களின் இறுதியில் பனிப்போரின் பொழுது சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களை யார் உருவாக்கியது? ஆப்கானில் எல்லைப் பகுதியில் இருந்த மதரசாக்களின் பாடத் திட்டங்களில் மாற்றம் கொணர்ந்தது யார்? 1989 வரை நீடித்த இந்தப் போரின்பொழுது ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு யார் நிதி உதவி, ராணுவ தளவாட உதவிகள் அளித்தது? இந்தப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல், இந்தோனேசியா, சீனா மற்றும் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசின் பங்கு என்ன? யார் இந்த ஒசாமா பின்லேடன்? ஒசாமா எந்தக் காலகட்டத்தில் ஒரு நாட்டின் தலைவர் போல் அமெரிக்காவின் பெண்டகன் படைகள் பாதுகாக்க அமெரிக்கா முழுவதும் உலா வந்தார்? இப்படி அடுக் கடுக்கான கேள்விகளை உருவாக்குவதும் அதன் விடைகளைக் கண்டடைவதும்தான் அறிவார்ந்த மக்கள் ஊடகங்கள் நாட்டுக்குச் செய்யும் தொண்டாக இருக்க இயலும்.

1990களில் பெர்னார் லூயிஸ் எழுதிய The Roots of Muslim Rage என்கிற புத்தகத்தில் தான் இந்த நாகரீகங்களின் மோதல் சொல்லாடல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. 1992களில் அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் ஹண்டிங்டன் முன்வைத்த நாகரீகங்களின் மோதல் சித்தாந்தத்தின் பின்னணி என்ன? அவர் 1992ல் நிகழ்த்திய ஒரு கல்லூரிப் பேச்சை எப்படி 1993ல் அமெரிக்க வெளியுறவு துறை தத்தெடுத்தது. அது எப்படி 1996ல் The Clash of Civilisations and the Remaking of the World Order - Samuel P. Huntington என்கிற பெரும் நூலாக விரிவாக்கப்பட்டு வெளிவந்ததன் பின்னணி என்ன?

இந்த சித்தாந்தங்களின் பின்னணியில் அமெரிக்கப் பிரச்சார ஊடகங்களும், ரூபர்ட் முர்டாக் வசம் உள்ள உலக ஊடகங்களும் மேற்குலக மூளைகளைச் சலவை செய்யத் தொடங்கின. இந்தியாவில் சங் பரிவாரங்கள் ஏற்கனவே ஹிந்து அபிமான உணர்வை விதைத்து அதில் இஸ்லாமிய எதிர்ப்பை பல தளங்களில் விதைத்து கச்சிதமாக இங்குள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை மூளை சலவை செய்துகொண்டிருந்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல, அது ஒரு ஹிந்து நாடு என்கிற விஷமும் சமமாக இங்கு விதைக்கப்பட்டே வந்தது. இஸ்லாமியர்கள் இங்கு இரண்டாம் பிரஜைகளே என்கிற உணர்வை மூர்க்கத்துடன் முன்வைத்தார்கள். அவர்கள் விரும்பிய இஸ்லாமியராக இருந்ததால்தான் அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவியைச் சூட்டி மகிழ்ந்தார்கள். கீதை வாசிப்பவராக, சங்கராச்சாரியார் காலில் விழுபவராக சாட்ஷாத் அப்துல் கலாம் விளங்கினார். ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை வேட்டையாடிய பொழுது அவர் தனது கண்களை மூடிக்கொண்டார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பகுதி மீனவ சகோதரர்கள் நூற்றுக்கணக்கில் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்பட்டபோது அந்தத் துயர ஓலம் கேட்காது அவர் தனது காதுகளை மூடிக்கொண்டார்.

ஹிந்து அபிமானிகள் தொடர்ந்து இந்த தேசம் இஸ்லாமியர்களால் துண்டாடப்படவிருக்கிறது என ஒரு பயத்தை சதா விதைத்துக் கொண்டு அதில் தங்களின் அரசியல் அறுவடைகளைச் செய்தவண்ணம் இருந்தனர். இந்தியா உடைபடும் என்ற ஓலத்திற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, இதை எழுதுபவர்கள் இந்தப் பயத்தைக் காட்டி வெளி நாட்டுவாழ் இந்தியர்களிடம் (NRI) பணத்தைக் கறந்த வண்ணம் உள்ளனர். இவர் களைப் பொறுத்தவரை உடையும் இந்தியா ஒரு பணம் காய்க்கும் மரம்; தங்க முட்டையிடும் வாத்து.
ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சா மசூதியை இடிக்க இஸ்ரேல் தொடர்ந்து முனைந்து வரும் நிலையில் அவர்களின் முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இங்கு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. யூதவெறியும் ஹிந்து மதவெறியும் தங்களின் பொது எதிரியாக இஸ்லாத்தைக் கருதித்தான் கைகோர்க்கிறது. இந்தக் கூட்டுதான் அணிசேரா நாடுகளின் தலைமையில் இருந்த இந்தியாவை அமெரிக்காவின் ஒரு மாகாணம் அளவிற்கு வெளியுறவுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க வழிவகுத்தது. 1992 தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர். இந்தக் கூட்டணியின் இஸ்லாமிய எதிர்ப்பிரச்சாரத்திற்கு இவை எல்லாம் நல்ல தீனியாக அமைந்தது.

இந்தியா முழுவதும் உள்ள எல்லா மொழிகளிலும் வெளிவரும் திரைப்படங்களிலும் இஸ்லாமிய எதிர்ப்பு, தீவிரவாதம் என்கிற பெயரில் நம் மீது பிம்பங்கள் தொடர்ந்து வீசப்பட்டன. பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமியர்களின் தெருக்களில் ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளனர் என்பதான சித்திரங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பதிக்கப்பட்டது. நான் லாகூர் நகரத்தில் தெருத் தெருவாக சில தினங்கள் திரிந்தேன். ஆயுதம் ஏந்திய காவல்துறை அல்லது ராணுவ வீரர்களைக் கூட காண இயலவில்லை. பாகிஸ்தானில் உள்ள வறுமையை சொற்களால் சித்தரிக்க இயலாது. அதை விட அங்கும் தினசரி குண்டுவெடிப்புகள் நிகழ்கிறது. பாகிஸ்தான் முழுதும் தீவிரவாதிகள் என்றால் அங்கே யார் குண்டு வைப்பது என்பதை அறிய அங்குள்ள நாளிதழ்களைத் திறந்து பார்த்தால் அது முழுவதும் இந்திய உளவுத் துறை, RAW என்றுதான் விரிவாகக் கூறுகிறது. இங்கு நம் நாளிதழ்களில் ISI புராணம். இரு நாடுகளும் அப்பாவி மக்களைப் பிணையமாக வைத்து ஆடும் ஒரு சதுரங்க விளையாட்டில் ஈடுபடுகின்றன.


மிக சாதாரணமாக ஆட்டோ ஓட்டும் ஒருவர், மீன் கடை வைத்திருப்பவர், கறிக்கடை வைத்திருக்கும் பாய், ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒரு அத்தா என நமக்கு அறிமுகம் இல்லாத இஸ்லாமியர்கள் அனைவரையும் நகரங்கள் தீவிரவாதிகளாகப் பார்க்க பழக்கி வருகிறது. நல்லவேளை, எங்கள் கிராமங்கள் இந்தக் கிருமியால் இன்னும் பீடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்தியர்களின் மூளையைச் சலவை செய்ய காஷ்மீர், தீவிரவாதம் என்று படம் எடுக்கும் இயக்குநர்களுக்குப் பல இடங்களில் இருந்து பணம் பெட்டிகளில் கைமாறியது. உளவுத்துறை, உள்துறை அமைச்சகம், இந்திய முதலாளிகள் என ஒரு பெரும் கூட்டு நிதி மூலதனம் இஸ்லாமிய வன்முறை பிம்ப உருவாக்கத்திற்குப் பின்னணியில் இயங்குகிறது.

2004 முதல் 2009 வரை நடந்த பல குண்டு வெடிப்புகள் இதே மனநிலையை இன்னும் இறுக்கமாக்கவே உதவியது. இந்தியாவில் ஒரு நவீன மோஸ்தர் உருவாக்கப்பட்டது. ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் அதன் செய்தி வெளியாகும் போதே அது இஸ்லாமியர்களின் கைவரிசை என எல்லா செய்தி ஊடகங்களும் எந்த ஆதாரமும் இல்லாமல் அறிவிக்கும். அத்துடன் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவித்து சில இளைஞர்களை வரிசையாக உட்காரவைத்துக் காட்டுவார்கள். இதில் இரட்டை ஆதாயம். ஒன்று, இப்படி நடந்தாலே அது இஸ்லாமியர்கள் என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவது, அடுத்து, பாருங்கள், நாங்கள் நொடிப் பொழுதில் கயவர்களைப் பிடித்துவிட்டோம் என மக்களின் நம்பிக்கையைப் பெறுவது. இந்த நடை முறைகள் எதையாவது நீங்கள் கேள்வி கேட்க முயன்றால் நீங்களும் தீவிரவாதிகள்தான் என எழுத சில ஹிந்துத்துவ கைக்கூலி எழுத்தாளர்கள் தயார் நிலையில் இங்கே.


நாந்தேடு குண்டு வெடிப்புகள், தானே குண்டு வெடிப்புகள், மேலாகாவ் குண்டுவெடிப்புகள், மெக்கா மசூதி வெடிப்புகள் என தொடர் வெடிப்புகள் இந்தியாவை உலுக்கியது. எல்லா வெடிப்புகளிலும் ஒரே நடைமுறைதான். உடனே 20 - 25 இஸ்லாமிய இளைஞர்களைக் கைது செய்வதும் அவர்களை சித்திரவதை செய்வதும், குற்றவாளிகளைப் பிடித்துவிட்டோம் என காவல் துறை பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதும் அச்சு பிசகாமல் நிகழ்ந்தது. இவை எல்லாவற்றுக்கும் பெரும் திருப்பமாக அமைந்தது. இந்தியாவில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் செயல்பாடு. அவர்தான் ஹேமந்த் கர்கரே. அவர் மாலேகாவ் குண்டிவெடிப்பு முழுவதும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் சதிவேலை என்பதைக் கச்சிதமாக நிறுவினார். அவர் தாக்கல் செய்த 4000 பக்க அறிக்கை அபிநவ் பாரத், சாத்வி பிரக்ஞயா தாக்கூர், பிரசாத புரோஹித் ஆகியோரின் வரலாற்றை விவரித்தது. கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைப் போலவே நாந்தேட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவருக்குச் சொந்தமான கிட்டங்கி ஒன்றில் சங் பரிவார் ஊழியர்களுக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சி நடந்தபோது ஏற்பட்ட விபத்தால் குண்டு வெடித்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் போலவே தானே குண்டு வெடிப்பின் முடிச்சுகளும் அவிழ்ந்தது. ஹிந்துத்துவ தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய காரணத்தால்தான் மும்பை தாக்குதல்களின் பின்னணியில் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார். Who killed Hemant Karkare என்கிற நூலை மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி.முஷ்ரில் எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வாறு ஹேமந்த் கர்கரேயின் மீது சங் பரிவார் ஒரு கண் வைத்திருந்தது என்பதை விளக்கியுள்ளார்.


அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிலும் முதலில் பழி பாகிஸ்தானின் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பின் மீதுதான் போடப்பட்டது. ஆனால் விசாரணையில் மெல்ல ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் உள்ள ஹிந்துத்துவ தீவிரவாதக் குழுக்களின் செயல் இதில் இருப்பது தெரியவந்தது. அதன்பின் இந்தக் குண்டு வெடிப்பு எப்படி எல்லாம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்பதை சுவாமி அசீமானந்தா விரிவாக நாட்டிற்கு எடுத்துரைத்தார்.
அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள். 2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள்தான் இதன் பின்னே உள்ளது என அரசு வாய்கிழிய அறிக்கைகள் விட்டு நம் மூளைகளைச் சலவை செய்தது. ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப் பதும் தெரியவந்தது. இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர்.
இதே அபிநவ் பாரத் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியைக் கொலை செய்ய தீட்டிய திட்டத்தை ஹெட்லைன்ஸ் டுடே செய்தி ஊடகம் ஆதாரங்களுடன் வெளியிட்டது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் அபிநவ் பாரத் அமைப்பிற்கும் நிகழ்ந்த உரையாடல்களின் எழுத்து வடிவை தெகல்கா இதழ் வெளியிட்டது. செப்டம்பர் 16, 2011ல் புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் கூட்டத்தில் உளவுப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் துணையுடன் நடத்தப்பட்ட 16 குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணைகளின் பட்டியலை வெளியிட்டார்.

ஹிந்துத்துவ தீவிரவாதம் என்கிற சொல் ஊடகங்களில் புழக்கத்திற்கு வந்தவுடன் சங் பரிவார் மற்றும் அதன் வெகுஜனத் தலைவர்கள் அத்வானி உட்பட தீவிரவாதம் என்று ஒன்றுதான் உள்ளது, அதில் ஹிந்து தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பிரிக்க இயலாது என்றார்கள். அமெரிக்கா தனது எண்ணெய்க்கான யுத்தத்தில் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் 20 ஆண்டுகளாக அப்பட்டமாக ஒரு போரை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதிகள் பலர் பல நேரங்களில் இதனை சிலுவைப் போர் (crusade) என்றே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். இருப்பினும் இதனை கிறிஸ்தவ தீவிரவாதம் (christion terrorism) என்று ஒருமுறை கூட எந்த ஊடகமும் அறிவிக்கத் துணிந்ததில்லை. இதுவரை இஸ்லாமியத் தீவிரவாதம், கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல்லை மிக சகஜமாகப் புழங்கியவர்களுக்கு ஹிந்து தீவிரவாதம் என்ற சொல் தொண்டையில் சிக்கிக் கொண்டது. எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் பொத்தாம் பொதுவாக இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற போர்வையில் சாமானியர்களைத் தான் இதுவரை பலியாடுகளாக மாற்றியுள்ளோம். தீவிரவாதிகளைப் பிடிக்க இயலாதபோது நாம் அப்பாவிகளை பிடித்து வழக்கை முடிப்பதை வாடிக்கையாக மாற்றியுள்ளோம். மாவோயிஸ்டுகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் பழங்குடிகளைப் பிடித்து சித்திரவதை செய்து வழக்கை முடிக்கிறோம். ஆனால் இந்தக் காலகட்டங்களில் சுவாமி அசீமானந்தா, சாத்வி பிரக்ஞயா தாக்கூர், புரோஹித் ஆகியோர் நரேந்திர மோடி முதல் அனைத்து பி.ஜே.பி. தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின.

ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி நகைக் கடை ஒன்றில் வேலை செய்து வந்த முகமத் ரயீசித்தின், மெக்கா மசூதி வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளன்றே அவனது வேலை பறிபோனது. சில தினங்கள் சித்திரவதை, அதன் பின் சில ஆண்டுகள் சிறைச்சாலை, அதன் பின் வழக்கு விசாரிக்கப்பட்டு விடுதலை. இந்திய நீதிமன்றமே இவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தும் ஹைதராபாத்தில் உள்ள எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. நீங்கள் இன்றும் ஹைதராபாத் சென்றால் முகமத் ரயீசித்தினை சந்திக்கலாம். அவர் பிளாட்பாரத்தில் வெயிலுக்குத் தண்ணீர் பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இவரைப் போல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேரின் கண்ணீர் கதைகள் உள்ளிட்ட அறிக்கையை ஆந்திர சிறுபான்மையினர் ஆணையர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ளார்.

முகமத் ரயீசித்தின்னைப் போல் ஆயிரக் கணக்கானவர்களின் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் கதைகள் எல்லாமே ஏறக்குறைய ஒரே கதையாகவே உள்ளது. எல்லா கதைகளின் நீதி ஒன்றே: இஸ்லாமியப் பெயர் ஒன்றே இவர்களின் இந்தக் கதிக்குக் காரணம். ஷாருக்கானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன? இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கி வாழ்வது தவிர வேறு ஏதும் செய்யாத இந்த இந்திய இளைஞர்களில் யாரிடமேனும் இந்திய அரசு என்றாவது மன்னிப்பு கோருமா?

- அ. முத்துக்கிருஷ்ணன் (நன்றி: உயிர்மை)

--------------------------------------------------



இந்தோனேஷியாவில் எந்த அளவு இஸ்லாத்தின் கொள்கைகள் மீது தந்திரமாக கிறித்தவர்கள் தங்கள் வலைகளை விரித்து குறிப்பிட்ட வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பதை விளக்கும் காணொளி. மர்யம் போன்ற ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காப்பாற்ற இந்த இஸ்லாமிய உலகு என்ன தீர்வை வைத்துள்ளது?

--------------------------------------------------

டிஸ்கி: இன்று மதியம் 3 மணிக்கு இறைவன் நாடினால் உம்ரா பயணமாக மெக்கா புறப்படுகிறேன். வெள்ளிக் கிழமை ஜூம்ஆ ஹரமில் தொழுது விட்டு பிறகு ஊர் திரும்புகிறோம். எனவே இறைவன் நாடினால் இணையத்தில் சனிக் கிழமை மீண்டும் சந்திப்போம்.


Monday, July 23, 2012

ஒரு சவுதி தெரு கூட்டினால் எப்படி இருக்கும்?



துப்புறவு தொழிலாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்ற அறிவுரையை கொடுப்பதற்காக ஒரு சவுதியை ஒரு நாள் முழுக்க அந்த நண்பர்களோடு பணி செய்ய வைத்தனர். ஒரு நாள் முழுக்க பங்களாதேஷை சார்ந்த அந்த சகோதரர்களோடு ஒன்றாக இருந்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சவுதிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த டாகுமெண்டரியை தயாரித்துள்ளனர்.

احترام عمال النظافة ليس ذوق فقط، و إنما ضرورة و إنسانية!

شكراً لتعاون الإدارة العامة للنظافة معنا لتصوير هذه الحلقة و الخروج معنا بكل شفافية

'துப்புறவு தொழிலாளர்களை மதித்து நடங்கள். அவர்களோடு மனித நேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்'

عشت يومي الأول كعامل نظافة.
التجربة كانت أصعب من المتوقع:
٩ ساعات عمل تحت الشمس! الله يعين العمالة على هالروتين اليومي

"முதல் முதலாக ஒரு துப்புறவு தொழிலாளியாக ஒரு நாள் முழுக்க வேலை செய்தேன். நான் எதிர் பார்த்ததை விட சிரமமான வேலைதான் இது. 9 மணி நேரம் வெயிலில் வேலை செய்து வரும் அந்த சகோதரர்களின் சிரமத்தை உணர்ந்து கொண்டேன். இறைவன் அவர்களுக்கு சிறந்த வாழ்வை அமைத்து கொடுக்கட்டும்."

இந்த காணொளிக்கு கிட்டத்தட்ட 4000 அரபிகள் பின்னூட்டம அளித்துள்ளார்கள். அத்தனை பேருமே இந்த துப்புறவு தொழிலாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் அவர்களும் முஸ்லிம்களாகிய நமது சகோதரர்கள் என்றும் ஒருமித்த குரலில் பின்னூட்டியிருந்தார்கள்.

எனது அலுவலகத்துக்கு அருகிலேயே இரண்டு பங்காளிகள் தொழுகைக்கு தொடர்ந்து பள்ளிக்கு வருவார்கள். அப்பொழுது அவர்களின் மஞ்சள் நிற யுனிஃபார்மில் சில இடங்களில் அழுக்கும் படிந்திருக்கும். எனவே சவுதிகளோடு தோளோடு ஒட்டி நிற்க சங்கோஜப்பட்டுக் கொண்டு சிலர் நகர்ந்தால் அவர்களை இழுத்து தங்கள் அருகில் நிறுத்திக் கொள்ளும் பல சவுதிகளை பார்த்துள்ளேன். அவ்வாறு தோளோடு தோள் நெருங்கி நிற்கா விட்டால் சம்பந்தப்பட்டவர்களின் தொழுகை முழுமை பெறாது. எனவே இடைவெளி விடாது அவர்களை நிறுத்திக் கொள்ளும் அழகை நான் பார்த்து ரசிப்பேன்.

இவர்களுக்கு சம்பளம் 400(5000 ரூபாய்) அல்லது 500(6000 ரூபாய்) ரியால் தான் என்றாலும் பார்ட் டைம் வேலையாக மாதம் 1000 ரியாலுக்கு மேல் சம்பாதித்து விடுவார்கள். இன்னும் சிலருக்கு தெரு கூட்டும் பொழுதே சில வீடுகளில் அன்பளிப்பாக தரும் தொகையும் கணிசமாக தேரும். உணவகங்களுக்கு இவர்கள் சென்றால் சம்பளம் குறைவு என்பதால் எவரும் பணம் வாங்குவதில்லை. இருந்தாலும் மற்ற வேலைகளோடு ஒப்பிடும் போது இவர்களுக்கு சம்பளத்தை அரசு உயர்த்த வேண்டும். அரசு ஒருவருக்கு 2000 ரியால் ஒதுக்குகிறது. ஆனால் இடையில் காண்ட்ராக்ட் எடுக்கும் கம்பெனிகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு குறைந்த சம்பளத்தில் ஆட்களை அழைத்து வந்து விடுகின்றனர்.

மன்னர் ஃபைசல் காலத்தில் துப்புறவு பணிகளுக்கு இந்தியர்களைத்தான் முதலில் தேர்வு செய்தார். ஆனால் இந்திரா அம்மையாரோ எனது நாட்டு மக்கள் ஒரு நாட்டில் சென்று துப்புறவு பணியில் ஈடுபடுவது எங்களுக்கு இழுக்கு என்று மறுத்து விட்டார். எனவே அத்தனை விஷாக்களும் பங்களாதேஷூக்கு சென்றது. எப்படியோ சில வறியவர்களின் வீடுகளில் இன்பம் தழைத்தால் நமக்கும் சந்தோஷந்தானே!

ஒரு காலத்தில் அரபிகள் என்ற திமிரில் மற்ற மொழி பேசுபவர்களை 'ஊமைகள்' என்ற அடைமொழியோடு அழைத்தனர். அதாவது நீங்கள் அழகிய தமிழில் பேசினாலும் அவனை பொருத்த வரை விலங்குகள் மொழியைப் போனற விளங்காத மொழிதான். அரபி அல்லாத மற்ற மொழிகளை விலங்குகள் மொழி அதாவது 'ஊமை பாஷை' என்றே சொன்னான். ஆனால் இஸ்லாம் வந்து இந்த மொழி வெறி இன வெறியை உடைத் தெறிந்தது.

முகமது நபியின் கடைசி உரை:

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!”
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

இதற்குப் பிறகும் ஒரு முஸ்லிம் தன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்வானா?

இதே நேரம் நம் நாட்டில் துப்புறவு தொழிலாளர்களை எந்த அளவு கேவலமாக நடத்துகிறோம் என்பதை நாம் தினமும் பார்க்கிறோம். சாதியால் இழிவாக்கப்பட்டு அவர்களை கோவிலிலும் அனுமதிப்பதில்லை. திருமண உறவுகளும் ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனித மலம் அள்ளுவதற்கும் இன்றும் இவர்களையே பயன்படுத்துகிறோம். சவுதியில் இதற்கெல்லாம் இயந்திரங்களின் உதவியையே நாடுகின்றனர். அவற்றை ஒன்றாக்கி உரமாகவும் தயாரித்து விடுகிறார்கள். ஆனால் நாமோ மொபைல் போனுக்கு செலவழித்தாலும் கழிவறை கட்ட மாட்டோம் என்று மத்திய மந்திரி குறைபட்டுக் கொள்ளும் நிலையில்தான் உள்ளோம். இது மாற வேண்டும்.

1.மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்

2.மலம் சிறுநீர் கழிக்கும் முறை (குறள் வெண்பா)
பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்

3.மலம், சிறுநீர் கழிக்கும் திசை (இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. கழிவறையின் தொன்மை வரலாறு பண்டைய இலக்கியங்களில் ஆங்காங்கு மலிந்து கிடக்கிறது.

ஆரியர்களின் ஊடுருவலுக்கு முன் தமிழர்களின் நிலை மிக சிறந்தே இருந்துள்ளதற்கு இந்த பாடல்கள் சிறந்த உதாரணமாக உள்ளது. வீட்டில் அவசியம் கழிவறை கட்டி சுகாதாரத்தைப் பேணுவோம். செல் போன்களை வசதி வரும் போது வாங்கிக் கொள்வோம். :-)







Sunday, July 22, 2012

மனக் குழப்பத்திற்கு தீர்வு! அது எங்கே?

மனக் குழப்பத்திற்கு தீர்வு! அது எங்கே?

இன்று உலக மனைத்தும் ஒரு பிரச்னை பலரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மன நோயாகத்தான் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மனநோயால் பாதிக்கப்பட்ட பலரை பார்க்கிறோம். காதலில் தோல்வி: மதிப்பெண் குறைவாக வாங்கியது: படிப்பு வரவில்லை: வியாபாரத்தில் தோல்வி: மேலதிகாரி கொடுக்கும் ஓவர் டார்ச்சரால் வரும் மனக் குழப்பம்: கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் மனக் குழப்பம். இது போன்ற தோல்விகள் ஒரு மனிதனுக்கு ஏற்படும் போது சிலர் தாங்கிக் கொள்கிறார்கள். தாங்கிக் கொள்ள முடியாத பலஹீன இதயம் உடையவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுவதை பார்க்கிறோம்.

மனக் குழப்பத்தற்கு தீர்வு - 1,2,3




இதை சில பாமர மக்கள் பேய் பிடித்திருக்கிறது என்ற காரணத்தை கற்பித்து பாதிக்கப்பட்டவர்களை ஏர்வாடி, நாகூர், வேளாங்கண்ணி, கோவில்கள் என்று அவர்களை கொண்டு சென்று கட்டி போட்டு அவர்களின் வியாதியை அதிகமாக்குவதைப் பார்க்கிறோம். ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் மனநல மருத்துவர்களை அணுகி பல வருடங்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வருவதை பார்த்து வருகிறோம். சிலருக்கு மின்சாரத்தின் மூலமாக ஷாக் கொடுத்து அவர்களை நார்மலுக்கு கொண்டு வருவதையும் பார்க்கிறோம்.

இது போன்ற மன நோய்கள் எதனால் வருகின்றன? அப்படி வந்தால் அதற்கு என்ன தீர்வு உள்ளது? குடும்பத்தில், மத விஷயங்களில், நண்பர்கள் மத்தியில், நம்மை படைத்த இறைவனைப் பற்றிய நம்பிக்கையில் என்று எங்கெல்லாம் இந்த மனக் குழப்பங்கள் வரும் என்பதை மிக தெளிவாக சகோ பி.ஜெய்னுல்லாபுதீன் இந்த ரமலான் மாதம் முழுவதும் மெகா டிவியில் தொடர்ந்து பேசி வருகிறார். சாதி மத வித்தியாசம் இன்றி அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த நிகழ்ச்சி இது என்றால் மிகையாகாது. இது வரை மூன்று நாள் பேசிய பேச்சுக்கள் onlinepj.com யில் சென்று டவுன் லோடு செய்து கொள்ளுங்கள். மெகா டிவி பார்க்க வாய்ப்புள்ளவர்கள் தொலைக் காட்சியிலும் சென்னையில் உள்ளவர்கள் நேரிடையாகவே இந்த நிகழ்ச்சியையும் பார்க்கலாம்.

நம் பதிவர்களில் தருமி, சார்வாகன், கோவி கண்ணன், நரேன், இக்பால் செல்வன் போன்றவர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. தாங்கள்தான் மிகச் சிறந்த அறிவாளிகள் என்றும் முஸ்லிம்கள் சிந்திக்க தெரியாமல் இன்னும் குர்ஆனையே அனைத்துக்கும் தீர்வாக பார்க்கிறார்கள். சொந்த புத்தியைக் கொண்டு சிந்திப்பதில்லை. நம்மைத்தான் அல்லா படைத்தார் என்றால், அல்லாவை படைத்தது யார்? என்ற கேள்விக்கு முஸ்லிம்களின் பதில் என்ன? என்றெல்லாம் பதிவுகளில் கேட்டு வருகின்றனர்.

பதிவர் தருமியோ இன்னும் ஒரு படி மேலே போய் 'எப்படி படித்தவர் முதல் பாமரர் வரை இந்த குர்ஆனை வரிக்கு வரி முக்கியத்துவம் கொடுத்து இறைவன் அருளியது தான் என்று முஸ்லிம்களால் நம்ப முடிகிறது'? என்று ஒரு முறை தனது பதிவிலே ஆச்சரியப்பட்டு கேட்டார். ஏனெனில் இந்து மதத்திலும் கிறித்தவ மதத்திலும் வேதங்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அவர்கள் கொடுப்பதில்லை. இதை எல்லாம் பார்த்த தருமி முஸ்லிம்களிடம் மட்டும் ஏன் இந்த நாத்திகம் ஊடுருவவில்லை என்று ஆச்சரியப்படுகிறார். இஸ்லாத்தை எதிர்த்து இதுவரை 30 பதிவுகளாவது எழுதியிருப்பார். நான் பதிவுலகில் நுழைந்த காலத்திலிருந்து சொர்க்கத்து கன்னிகள், கில்மான்கள் சந்தேகம் இன்னும் அவருக்கு தீர்ந்த பாடில்லை. :-)

இவர்கள் கேட்கும் இந்த கேள்வியை அன்றே நபியின் தோழர்கள் முகமது நபியிடம் நேரிடையாகவே கேட்டுள்ளனர். ஒரு நபர் முகமது நபிக்கு முன்னால் வந்து மக்கி போன மனித எலும்பை எடுத்து தனது கையில் கசக்கி தூசியாக்கி அதை தனது வாயால் ஊதுகிறார். ஊதி விட்டு 'முகம்மதே! இவ்வாறு நான் தூசியாக காற்றில் கலந்தவுடன் என்னை திரும்பவும் யார் உயிர்ப்பிப்பார்?' என்று கிண்டலாக கேட்ட வரலாறும் உண்டு. எனவே முகமது நபியின் தோழர்கள் இன்றுள்ள பகுத்தறிவாளர்களை விட அதிக விஷய முடையவர்களாகவே இருந்துள்ளனர். அன்றே பெரியார்களும் சித்தர்களும் அரபுலகில் இவர்களை விட சிறந்த கேள்விகளை கேட்டு பதிலையும் பெற்றுள்ளார்கள். தான்தான் அறிவாளி என்று சதா நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையான மன நோயே! பெரியார் தாசனிடம் (அப்துல்லா) கேட்டால் இந்த மன நோய்க்கும் ஒரு பெயரை சொல்லுவார். :-)

எனவே இந்த மாதம் முழவதும் இந்த டிவி தொடரை தொடர்ந்து பார்த்து எழும் சந்தேகங்களை அவரிடம் நேரிடையாகவே கேட்டு குர்ஆன் மூலம் தெளிவு பெற்ற மக்களாக நம்மை ஆக்க இந்த ரமலானில் அந்த ஏக இறையை பிரார்த்தித்து இந்த பதிவை முடிக்கிறேன்.





Saturday, July 21, 2012

நோன்பு : பகலே இரவாகி, இரவே பகலான விநோதம்!

நோன்பு : பகலே இரவாகி, இரவே பகலான விநோதம்!


ஆம்...சவுதியை பொறுத்த வரை ரமலான் வந்து விட்டால் பகல் இரவாகி விடும். இரவு பகலாகி விடும். 80 சதமான நபர்களுக்கு வேலை நேரமும் மாற்றலாகி விடும். என்னுடைய வேலை நேரமும் மாறி விட்டது. நோன்பு வைப்பதற்காக நடு நிசியில் 3 மணிக்கு சாப்பிட்டு விட்டு 4 மணிக்கெல்லாம் தொழுகைக்கு பள்ளிக்கு சென்று விடுவேன். தொழுது முடித்து அருமையான தூக்கம். அதன் பிறகு 11 மணிக்கு எழும்பி குளித்து விட்டு மதிய தொழுகைக்காக பள்ளிக்கு செல்வேன். அதன் பிறகு அலுவலக வேலை ஆரம்பம். 3 மணி 30 நிமிடத்தில் வேலை முடிந்து விடும். பிறகு மாலை நேரத் தொழுகை. தொழுகை முடிந்து கணிணி முன்னால் உட்கார்ந்து சிறிது டைம் பாஸ். அதன் பிறகு நோன்பு திறக்க தயாராக வேண்டும். நோன்பு திறந்தவுடன் தொழுது விட்டு பிறகு ஒரு குட்டி தூக்கம்.

பிறகு இரவு தொழுகை. தொழுது முடித்து இரவு 10 மணிக்கு வேலை ஆரம்பம். நடுநிசி 2 மணிக்கு வேலை முடியும். பிறகு சிறிது ஓய்வெடுத்து விட்டு சாப்பாடு. இது ரமலானின் எனது தொடர் வேலை. நோன்பின் களைப்பே தெரியாமல் பலருக்கு வேலை அமைந்திருக்கும். எனவேதான் நான் அதிகம் ரமலானில் சவுதியில் இருக்க பிரியப்படுவேன்.



ரமலான் வந்து விட்டால் பார்ட்டிகளுக்கும் குறைவிருக்காது. நோன்பு திறக்க தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து சிறந்த உணவு பதார்த்தங்களோடு பார்ட்டிகள் அமைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் இந்த காணொளியில் நீங்கள் பார்ப்பது.





நோன்பு வைக்க முடியாத வயோதிகர்கள், நோயாளிகள் அதற்கு பகரமாக ஒரு நபருக்கு உணவு அளிக்கும்படி குர்ஆன் கூறுவதால் பலர் தங்களின் வாகனங்களில் 100, 200 பாக்கெட்டுகள் பிரியாணி மற்றும் பழங்கள் ஜூஸ் வகையறாக்களையும் சமோசாக்களையும் ஏற்றிக் கொண்டு பள்ளிகளில் தந்து விட்டு செல்வர். அரசாங்கமும் பள்ளிகளுக்கு நோன்பாளிகளுக்காக சாப்பாட்டை அனுப்பி வைக்கும். இது பல பள்ளிகளிலும் டென்ட்களிலும் நடக்கும். அதற்கு முன்னால் அழகிய முறையில் இஸ்லாமிய போதனைகள் நடைபெறும். மேலும் சவுதி இளைஞர்கள் உணவுகளை பரிமாறுவதில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்பர். சவுதி பெண்கள் வீடுகளில் சமைத்த உணவு பதார்த்தங்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பர். பள்ளிகள் அனைத்தும் தொழுகையாளிகளால் நிரம்பி வழியும். இரவு தொழுகையில் பெண்களும் பங்கு பெற அனைத்து பள்ளிகளிலும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். பெண்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவர். தற்போது தமிழகத்திலும் பெண்கள் இரவு தொழுகைக்கு பள்ளிக்கு வருவது அதிகரித்திருக்கிறது.

எங்கு நல்லது நடந்தாலும் அங்கு மூக்கை நுழைக்கும் அமெரிக்கா 'இது போன்ற டென்ட்களில் தீவிரவாத பிரசாரம் நடக்கிறது. எனவே இதனை தடை செய்யுங்கள்" என்று மன்னரிடம் முன்பு கோரிக்கை வைத்தது. அதற்கான ஆதாரத்தை மன்னர் கேட்டார். ஆதாரம் தர இயலாது மூக்குடைபட்டனர் அமெரிக்க அதிகாரிகள்.

"நீங்கள் ஆதாரம் தரவில்லையாதலால் டென்ட்களை தடை செய்யவும் முடியாது" என்று மன்னர் மறுத்து விட்டார். எந்த நேரமும் இசையும், குடியுமாக இருக்கும் பல பிலிப்பைன் நாட்டவர் இஸ்லாத்தை ஏற்றவுடன் எவ்வளவு அழகிய வாழ்க்கை முறையை பேணுகிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.




ரமலானில் மெக்கா சென்று உம்ரா செய்தால் நன்மைகள் அதிகம் என்பதனால் இந்த மாதத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அந்த நேரங்களில் கஃபாவை பார்ப்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சி. இந்த காணொளியில் அதையும் பாருங்கள்.

பல இந்து கிறித்தவ நண்பர்கள் தாங்களாகவே விரும்பி ரமலான் மாதங்களில் இஸ்லாமியர்களோடு சேர்ந்து நோன்பிருப்பர். அது அவர்களுக்கு பெரும் மன நிறைவை கொடுப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். நோன்பில்லாத மாற்று மத சகோதரர்கள் யாரும் சொல்லாமலேயே நோன்பாளிகளுக்கு முன்னால் சாப்பிட மாட்டார்கள். 95 சதவீத மக்கள் நோன்பிருப்பதால் அந்த சூழ்நிலையே அவர்களை மறைவாக சென்று சாப்பிட சொல்லும். சிறு குழந்தைகள் நோன்பிருக்கும் பொது அவர்களுக்கு முன்னால் பெரியவர்கள் சாப்பிட்டால் குழந்தைகளின் மனது பாதிக்கப்படும் என்பதாலேயே நோன்பாளிகளுக்கு முன்னால் சாப்பிட வெண்டாம் என்று மாற்று மத நண்பர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பகல் நேரங்களில் உணவகங்கள் அனேகமாக ஆட்கள் இல்லாததால் பூட்டப்பட்டிருக்கும். இரவில் விடிய விடிய வியாபாரம்தான்.



கஃபாவை சுற்றி இரவில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காணொளி!



சவுதியில் நோன்பு திறக்க வைக்கும் பதார்த்தங்களில் சமூசா முக்கிய இடம் பிடிக்கும். சேமியானும் முக்கிய இடத்தை பிடிக்கும். அது தயாரிக்கும் முறையை விளக்குகிறது இந்த காணொளி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அல்லாஹ் கூறுகிறான்)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.1894

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.

அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

சவுதி உள்துறை அமைச்சகத்தின் ரமலான் அறிவிப்பு:

Sunday 22 July 2012

The Ministry of Interior has urged non-Muslim expatriates to understand the sentiments of Muslims and respect the sanctity of Ramadan by not eating and drinking publicly during daylight hours.

“The non-Muslim expatriates in this country should respect the sentiments of Muslims by not eating, drinking and smoking in public places, including roads and workplaces,” stated an Interior Ministry statement issued by the Saudi Press Agency.
The ministry warned that those who violated the regulations will have to face deterrent punishments such as deportation or sacking.
The statement added that eating and drinking openly during daylight hours are seen as an embarrassment to Muslims, as abstaining from foods and drinks are one of the visible features of Ramadan since fasting was made obligatory to Muslims centuries ago.

“Being a non-believer of Islam does not exempt an expatriate from being inconsiderate of the feelings of Muslims and the Islamic symbols of this country,” the ministry said.

The statement also said that the ministry hoped workers would honor the terms of their work contracts, which stipulate that anyone living in this country should follow the laws of the Kingdom, including respecting religious sentiments.
The statement also asks companies and establishments to explain these instructions to their employees.

Restaurants and eateries will only open at sunset, the time fast-breaking occurs.
The ban on public consumption will last until Aug.18, the last day of fasting if this year’s Ramadan is 30 days long.

The Ministry of Civil Service and the Ministry of Labor have set the working hours for public and private sector employees during Ramadan. The working hours for all public offices have been modified for the month of Ramadan. According to a Civil Service Ministry statement, government offices will work five hours from 10 a.m. to 3 p.m.

On the other hand, private sectors will work six hours per day during Ramadan if employers fix working hours on a daily basis. If employers fix working hours on a weekly basis, then employees will work 36 hours.

An official of the Labor Ministry said there was a provision in the Labor Law that Muslim employees need to work only six hours instead of eight during Ramadan.
There is already a ban on working in the open air from noon to early afternoon because of high summer temperature.


எல்லோருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

Friday, July 20, 2012

இந்தியாவுக்கு இஸ்லாமிஸ்டுகளால் ஆபத்தாம்!- அமெரிக்கா

இந்தியாவுக்கு இஸ்லாமிஸ்டுகளால் ஆபத்தாம்!- அமெரிக்கா

நம்ம பெரியண்ணன் சொல்லிட்டாக! இந்தியாவில் சமீப காலமாக பெரும் மோதல்களோ இனப் பிரச்னைகளோ எழவில்லை. இதனால் உடன் அமெரிக்காவின் மூக்கில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் இல்லாத பல அமைப்புகளின் பெயர் பட்டியலை தனது மக்களுக்கு கொடுத்துள்ளது அமெரிக்கா. தனது நாட்டு மக்கள் இந்தியாவுக்கு சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை கசிய விட்டுள்ளது. இனி சிஐஏ யின் ஏஜண்டுகள் சிலர் சில வறிய முஸ்லிம்களை வாடகைக்கு அமர்த்துவார்கள். இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு இத்தனை லட்சம் சென்று விடும் என்ற ஆசையும் காட்டப்படும். அமெரிக்கா சொல்லிய அனைத்து இடங்களிலும் கச்சிதமாக பல நாச வேலைகளை சிஐஏ யின் ஏஜண்டுகள் மொசாத்தின் எஜண்டுகள் உள்ளூர் ஆட்கள் உதவியோடு செய்து முடிப்பார்கள். குண்டு வெடித்தவுடன் ஏதாவது ஒரு ப்ரௌசிங் சென்டரில் சிஐஏ யின் உளவாளி 'நான்தான் இந்தியன் முஜாஹிதீன். நான் தான் குண்டு வைத்தேன்' என்று கூறுவான். நம் ஊடகங்களும் கண் காது மூக்கு வைத்து செய்திகளை இன்னும் சுவாரஸ்யமாக மக்களுக்கு தரும். அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு 20 வருடம் சிறை வாசத்துக்கு பிறகு குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்ற பழைய பல்லவியை பாடி விடுதலை செய்யப்படுவார்கள். இதற்குள் பல மில்லியன் ஆயுத வியாபாரமும் அமெரிக்காவால் நடத்தப்பட்டு விடும்.

அமெரிக்கா இவ்வாறு மற்ற நாடுகளின் ரத்தத்தில் தனது நாட்டு மக்களை சுபிட்சமாக வைத்திருப்பதற்கு பதில் உலக நாடுகள் அனைத்திலும் வருடம் இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம். மனித உயிர்களாவது மிஞ்சும். ஒபாமா நடவடிக்கை எடுப்பாரா?

சவுதி அரேபியா இதைத்தான் செய்து வருகிறது. வருடா வருடம் இத்தனை மில்லியன்கள் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அமெரிக்காவுக்கு தந்து விடுவதால் வாலை ஆட்டிக் கொண்டு சவுதி உள் நாட்டு பிரச்னைகள் எதிலும் தலையிடுவதில்லை. இதை ஏன் மற்ற நாடுகள் பின்பற்றக் கூடாது? :-)

-------------------------------------------------------

U.S. Cautions Citizens Against Overseas Travel, Including India
Thursday, 19 July 2012, 02:01 Hrs

Washington: The United States has issued a fresh travel advisory on overseas travel to its citizens, including India which "continues to experience terrorist and insurgent activities."

"India continues to experience terrorist and insurgent activities which may affect US citizens directly or indirectly," the state department said in its new worldwide travel alert for its citizens.

"Anti-Western terrorist groups, some on the US government's list of designated Foreign Terrorist Organizations, are active in India, including Islamist extremist groups such as Harkat-ul-Jihad-i-Islami, Harakat ul-Mujahidin, Indian Mujahideen, Jaish-e-Mohammed, and Lashkar-e Taiba," it said.

"Terrorists have targeted public places in India frequented by Westerners, including luxury and other hotels, trains, train stations, markets, cinemas, mosques, and restaurants in large urban areas," the state department said.

US citizens are reminded to maintain a high level of vigilance and to take appropriate steps to increase their security awareness, the state department said, adding that it remains concerned about the continued threat of terrorist attacks, demonstrations, and other violent actions against US citizens and interests overseas.

"Current information suggests that al-Qaida, its affiliated organisations, and other terrorist organisations continue to plan terrorist attacks against US interests in multiple regions, including Europe, Asia, Africa, and the Middle East," the advisory said.

http://www.siliconindia.com/news/usindians/US-Cautions-Citizens-Against-Overseas-Travel-Including-India-nid-123924-cid-49.html?utm_campaign=Newsletter&utm_medium=Email&utm_source=l1

-------------------------------------------------------

துபாய்: துபாயில், தமிழக மீனவர்களை எச்சரிக்காமல் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, ஐக்கிய அரபு எமிரேட் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பக்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பலுக்கு, எரிபொருள் சப்ளை செய்ய, "ரபானாக்' என்ற அமெரிக்க கப்பல், துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த எண்ணெய் கப்பலை நோக்கி வந்த படகு மீது, அமெரிக்க மாலுமிகள் 16ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராமநாதபுரம் மாவட்டம், தோப்பு வலசை களிமண்குண்டைச் சேர்ந்த சேகர் பலியானார். ராமேஸ்வரத்தில் உள்ள கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்து கண்ணன், முருகன் ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, ஐக்கிய அரபு எமிரேட் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயிலிருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள ஜபெல் அலி என்ற இடத்தில் தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் விடுத்த எச்சரிக்கையை மீறி, படகு வந்ததால் தான் சுட்டோம்' என, அமெரிக்க மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர்களை சந்தித்துப் பேசிய ஐக்கிய அரபு எமிரேட்டின் போலீஸ் உயர் அதிகாரி தாகி கல்பான் தமீம் குறிப்பிடுகையில், "அமெரிக்க கப்பல் மாலுமிகள் எச்சரிக்கை ஏதும் விடவில்லை. அமெரிக்க கப்பலை பார்த்து, படகில் இருந்தவர்கள் தான் வேறு திசை நோக்கி சென்றுள்ளனர். இருப்பினும், அமெரிக்க கப்பல் மாலுமிகள் திடீரென சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் உண்மையை சொல்வதாக நம்புகிறேன்' என்றார்.
தின மலர்
20-07-2012

இங்கும் அமெரிக்க படையினர் வேண்டுமென்றே ஒரு தமிழனை சுட்டு கொலை செய்துள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் பதட்டத்தை நிறுவி இன்னும் போர்த் தளவாடங்களை விற்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய குறிக்கோள்.

___________________________________________________________

வாஷிங்டன்: அமெரிக்காவில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த போது மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான் இதில் 14பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பெரும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிக்கி இறந்து போயினர் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கொலரோடாவின் டென்வர் அரோரா பகுதியில் ஒரு திரையரங்கில் பேட்மேன் ( தி டார்க் நைட் ரைடர்ஸ் ) என்ற திரைப்படம் முதல் காட்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்நேரத்தில் முகத்திரை மூடி வந்த மர்ம மனிதன் கையில் துப்பாக்கியுடன் வந்தான். சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். அனைவரும் அலறியபடி தப்பி ஓடினர். இதில் துப்பாக்கி குண்டுகளுக்கு 14 பேர் இரையாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம மனிதருக்கு 20 வயது இருக்கும் என தெரிகிறது. இவனை போலீசார் கைது செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. பயங்கரவாதியாக இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். துபபாக்கி சூடு நடத்தியதன் நோக்கம் இன்னும் போலீசாரால் அறிய முடியவில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமுற்றவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபடி இருக்கின்றன. பலரும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தியேட்டர் வளாகம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஏன் சுட்டான் ? எப்படி சுட்டான் ? : இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில்: அதிகாலை 12. 25 மணியளவில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரங்கமே முழு இருட்டாக இருந்தது. இந்நேரத்தில் பலத்த சப்தம் கேட்டது. அரங்கம் முழுவதும் ஒரே புகை மண்டலமானது. இந்த அதிர்ச்சியில் உறைந்த சில நிமிடத்திலேயே துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் கிளம்பின. அலறியபடி எங்கும் யாரும் தப்ப முடியவில்லை. பலரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தனர்.
-தின மலர்

20-07-2012

Wednesday, July 18, 2012

குடி மகனே.....பெருங்குடி மகனே..னே...னே...னே….!

குடி மகனே.....பெருங்குடி மகனே..னே...னே...னே….!



"அப்பாடா....ரொம்ப காலமா எம் பொண்டாட்டி "பிரியாணி வாங்கிட்டு வாய்யா பிரியாணி வாங்கிட்டு வாய்யா" ன்னு தொல்லை படுத்திகிட்டிருந்தா......இன்னைக்கு அவ ஆசையை நிறைவேத்திட்டேன்......."

-----------------------------------

கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், சாந்தி தியேட்டர் அருகேயுள்ள, தனியார் குடி மையம் ஒன்றில், "சரக்கு' வகைகளுக்கு, தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. "மூணு பீர் வாங்கினா... ஒரு பீர் இலவசம்; மூணு லார்ஜ் வாங்கினா... ஒரு லார்ஜ் இலவசம்; இந்த சலுகையில், சரக்கு வாங்குவோருக்கு, ஒரு பிளேட் பிரியாணி இனாம்' எனக் கொடுத்து அசத்துகின்றனர்."சரக்கு'க்கு அறிவித்துள்ள தள்ளுபடி விளம்பரம், கடந்த ஒரு வாரமாக, கோவை முழுக்க பிரபலமாகி விட்டது.



குடி மைய உரிமையாளர் சிவகுமார் கூறியதாவது:ஒரு மாதமாக, மது விற்பனை, மந்தமாக இருந்தது. அதனால், இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளோம். பீர் உள்ளிட்ட அனைத்து, "சரக்கு' வகைகளுக்கும், வெளிநாட்டு, "சரக்கு'களுக்கும், மூன்றுக்கு ஒன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, இந்தத் தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு, வழக்கமாக, எட்டு வகையான நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி திட்டத்தில், சரக்கு வாங்குவோருக்கு, கூடுதலாக சிக்கன் பிரியாணியும் இலவசமாக வழங்கப்படுகிறது.கிடைக்கும் லாபத்தில், ஒரு பகுதியை, இந்த தள்ளுபடி திட்டத்திற்கு செலவிடுகிறோம். திட்டத்தால், வருவாய் இழப்பு இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள், 20 சதவீதம் அதிகரித்துள்ளனர்.இவ்வாறு சிவகுமார் கூறினார்.

வீட்டுக்கு "டிராப்' உண்டு!ஒரு சில கடைகளில், ஆடிச் சலுகையாக, "தள்ளாடும்' வாடிக்கையாளர்களை வீட்டில் கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."மது குடித்தவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது' எனத் தடை இருப்பதால், சில வாடிக்கையாளர்கள், குடி மையங்களுக்கு, பஸ்சில் வருகின்றனர். மது குடித்ததும், அவர்களால் சீராக நடக்க முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களை வீட்டிலேயே கொண்டு விடவும், சில கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என, விற்பனையாளர்கள் நம்புகின்றனர்.
தின மலர்
17-07-2012

----------------------------------------------------------

திருமண வரவேற்பு ஒன்றில்.......



'ஏம்மா அந்த அக்கா முழு வெள்ளை டிரெஸ்ஸூல இருக்கு....'

'புதுப் பொண்ணுடா....! வெள்ளைத் துணி அன்பு பாசத்தை வெளிக் காட்டுது! இனி மேல் அந்த பொண்ணு வாழ்க்கையில ஆனந்தம் பூத்துக் குலுங்கப் போவதை சிம்பாலிக்கா சொல்றதுதான் இந்த வெள்ளை உடை...'

'அப்போ பக்கத்துல நிற்கிற மாப்பிள்ளை மாமா கருப்பு டிரஸ் போட்டிருக்காரே? அப்போ அன்பு பாசம் ஆனந்தம் எல்லாம் இவருக்கு கிடைக்காதுங்கிறியா...'

'கல்யாணத்துக்கு வந்தோமா...சாப்ட்டோமான்னு இருக்கணும்! தொண தொணன்னு கேள்வி கேட்கப்படாது...புரிஞசுதா....'

-----------------------------------------------------------

எலியைக் கண்டு இப்படியா பயப்படுவாங்க..........




Monday, July 16, 2012

சகோ சம்சுதீன் காசிமியின் திடீர் மனமாற்றம்!

சகோ சம்சுதீன் காசிமியின் திடீர் மனமாற்றம்!

ஒரு காலத்தில் தவ்ஹீத் வாதிகளுக்கு மிகப் பெரும் சவாலாகவும் எதிர்ப்புகளையும் கொடுத்துக் கொண்டிருந்தவர் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி! ஆனால் இறைவன் கிருபையால் 06-07-2012 வெள்ளிக் கிழமை ஜூம்ஆ பிரசங்கத்தில் தவ்ஹீத்வாதிகளை விட (வஹாபிகளை விட) மிக ஆணித்தரமாக தர்ஹா, சந்தனக் கூடு, மீலாது விழா, மூடப் பழக்கங்கள் போன்றவற்றை சகட்டு மேனிக்கு தாக்கி அவை அனைத்தும் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்று கூற ஆரம்பித்து விட்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தங்களுக்கு சார்பாக பேசி வந்தவர் திடீரென்று தவ்ஹீதை பேச ஆரம்பித்தவுடன் அதனால் பாதிப்படைந்த ஒரு சிலர் இமாமை பள்ளியில் தாக்க முயற்சித்து இருக்கின்றனர். குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வக்கற்றவர்கள் இமாமை தாக்க முயற்சித்தது மிக்க கண்டிக்கத்தக்கது. பாக்கரும், ஹைதர் அலியும் இமாமை சந்தித்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஆவண செய்து வருகின்றனர். பிரிந்திருந்த சில தவ்ஹீத்வாதிகள் இன்று ஒன்றாயிருப்பது பார்க்க சந்தோஷமாக இருந்தது. பி.ஜேயும் இது சம்பந்தமாக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும். சட்டத்தை கையிலெடுக்கும் எவரையும் முளையிலேயே கிள்ளி எறிந்து வன்முறைக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

அடுத்த வாரம் இதை விட அதிகமான ஆதாரங்களை தந்து தான் பேசியது குர்ஆன் ஹதீஸூக்கு உட்பட்டுத்தான் என்பதை விளக்குவதாகவும் சொல்லியிருக்கிறார். எப்படி கிறித்தவத்தில் ஓரிறைக் கொள்கையை குழி தோண்டி புதைக்க செயின்ட் பாலை யூதர்கள் கொண்டு வந்தார்களோ அதே போல் இஸ்லாத்திலும் கொண்டு வர யூதர்களின் உதவியோடு அந்த காலத்திலிருந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நபித் தோழர்கள் காலத்திலும் இவ்வாறு யூதர்கள் செய்த சதிதான் ஷியா என்ற பிரிவு உருவாகவே காரணமாக அமைந்தது. இந்தியாவிலும் பரேலிகள், காதியானிகள் என்று பலரை யூதர்கள் வளைத்து போட்டு எப்படியும் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை தகர்த்து விட பல முயற்சிகளை செய்து கொண்டே வருகின்றனர். சில மத்ரஸாக்களில் குர்ஆனுக்கு மாற்றமாக சில பாடங்கள் இன்றும் வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இஸ்லாத்துக்கு மாறுவதாக நடித்து நயவஞ்சமாக மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் சில ஆரியர்கள் உதவியோடு யூதர்கள் செய்த கைவரிசை என்பதையும் மறந்து விட முடியாது. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதால் இன்று வரை யூதர்களின் முயற்சி பலிக்கவில்லை. பிஜே போன்ற மார்க்க அறிஞர்களின் அயராத உழைப்பால் இன்று மற்ற மாநிலங்களை விட தவ்ஹீதின் வளர்ச்சி மிக சிறந்து விளங்குகிறது. தற்போது சம்சுதீன் காசிமியும் தவ்ஹீதை சொல்ல ஆரம்பித்துள்ளார்.

மதரஸா பாடம் படிக்காத நானோ நீங்களோ ஓரிறைக் கொள்கையின் பக்கம் வருவது ஆச்சரியம் இல்லை. ஆனால் ஏழு வருடம் மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு ஆலிம் தவ்ஹீதுக்கு வருவது அவ்வளவு லேசான காரியம் அல்ல. ஏழு வருடம் நாம் படித்ததை இந்த சிறுவயதுக்காரர்கள் தவறு என்று சொல்வதை நாம் ஏற்பதா என்ற ஈகோ வந்து விடும். அதற்கெல்லாம் கவலைப்படாமல் புரோகிதத்தால் வரும் வருமானத்தையும் தூக்கி எறிந்து இன்று தவ்ஹீதின் பக்கம் வந்திருக்கும் சகோ சம்சுதீன் காசிமியை இன்முகத்தோடு வரவேற்போம்.




மக்கா மஸ்ஜித் சார்பாக வெளியிட்ட அறிக்கையையும் பார்த்து விடுவோம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கப்ரு வணங்கிகளின் கொலைவெறி தாக்குதல்

சென்னை மக்கா மஸ்ஜித் மீதும், தலைமை இமாம் மீதும் கொலைவெறி தாக்குதல்
அஸ்ஸலாமு அலைக்கும் வ'ரஹ்மத்துல்லாஹ்,

கேரளாவில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு மத்தியிலே கப்ரு வணக்கம், ஷிர்க், அனாச்சாரம், காலில் விழுவது, முரீத், காலை பாலால் கழுவி குடிப்பது போன்ற எல்லா ஷிர்கியத்தான சீரழிவுகளையும் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வரும் A.P. அபூபக்கர் முசலியார் என்பவர் தற்பொழுது தமிழகத்திலும் அதே போன்ற ஷிர்கியத்தான சீரழிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில் களம் இறங்கி இதற்காக தமிழகத்தில் தனக்கு சில அடிவருடிகளை பிடித்து சூழ்ச்சி விதிகளை விதைக்க ஆரம்பித்துள்ளார்.
இதற்காக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி, அக்ரம் கான், மேலை நாசர், ஆமிர் கலிமீ, அத்தாவுர்ரசூல் போன்ற தீயவர்களின் கூட்டணியுடன் , மன்சூர் ஹாஜியார் என்ற செல்வந்தரை தூண்டிவிட்டு தமிழகத்திலே சுன்னத்வல் ஜமாஅத் என்ற பெயரிலே உண்மையான சுன்னத் ஜமாத்திற்கு மாறாக தர்கா வழிபாடு, உருஸ் கொண்டாட்டங்கள், முரீத், காலில் விழுவது, போன்ற ஷிர்க்கான காரியங்களுக்கு மக்களை வழிகெடுக்க ஆரம்பித்துள்ளார் .

இந்த சீரழிவுகளை கண்டித்து 6.7.2012 அன்று ஜும்மாவில் முஸ்லி யார்? என்ற தலைப்பில் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மௌலானா ஷம்சுதீன் கசிமீ மீது கொலை வெறி தாக்குதல் முயற்சி செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை 13.7.2012 அன்று சுமார் 300 கூலிப்படை ரவுடிகளுக்கு பணம் கொடுத்து மேலை நாசர் மற்றும் அகரம் கான் ஆகியோர் தலைமையில் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மது அருந்திய ரவ்டிகள் ஜும்மா தொழுகையின் போது பள்ளிவாசலில் நுழைந்து அத்துமீறி தாக்க வந்தார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும், மக்கா பள்ளியின் தொழுகையாளிகளின் சமயோசித நடவடிக்கையாலும் சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மவ்லான அவர்கள் பாதுகாப்பாக தங்கள் அறைக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதனால் மிகப்பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, எல்லாப் புகழும் இறைவனுக்கே!

(இது பற்றி காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது).
கொலைவெறியோடு தாக்க வந்தவர்கள் அவர்களுடைய குருநாதர்களான அஹ்மது ரசா கான் பரேலவி பற்றியோ, அபு பக்கர் முஸ்லியாரை பற்றியோ, தர்காவில் நடக்கும் அனாச்சாரங்களை பற்றியோ பேசக்கூடாது என்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்கள். மேலும் அசிங்கமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க, சாதாரண மனிதர்களே சொல்வதற்கும் கேட்பதற்கும் நாகூசும் அளவுக்கு கேவலமான வார்த்தைகளால் மலக்குமார்கள் நிறைந்திருக்கும் அல்லாஹ்வின் இறையில்லத்தையும் அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

இந்த மிரட்டலுக்கு மௌலானா அவர்கள் "நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பேர்களையும் பற்றியும் அடுத்த ஜும்மாவில் (20.7.2012) இன்ஷா அல்லாஹ் இன்னும் தெளிவாக பேசுவேன்"என்று தொழுகயாளிகளுடைய இடி முழக்க தக்பீருடன் அறிவித்தார்கள்.
அதன்படி, இன்ஷா அல்லாஹ் அடுத்த வார ஜும்ஆவில் இன்றும் விரிவாக பித்அத் மற்றும் அனாச்சாரங்களை பற்றியும் அதனை இந்தியாவில் உருவாக்கிய அஹ்மத் ரசா கான் பறேலவியின் வண்டவாளங்களையும் 20.7.2012 அன்று பேசவுள்ளார்கள் என்பதை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

http://makkamasjid.com/



டிஸ்கி: தற்போது குர்ஆன் ஹதீஸை ஆணித்தரமாக சொல்ல ஆரம்பித்து விட்டார். இன்னும் மதகுரு போன்ற தோற்றத்தில் பிரத்யேக ஸ்டைலில் தலையில் துண்டோடு காட்சி தருவதைப் பற்றி சற்று யோசிக்க வேண்டும். ஒரு முறை முகமது நபியை காண வந்த ஒரு நாட்டுப் புற அரபி 'உங்களில் யார் முகமது நபி' என்று கேட்கிறார். அப்பொழுது தோழர்கள் நபிகள் நாயகத்தை காட்டுகிறார்கள். இந்த நிகழ்வானது முகமது நபிக்கும் அவரது தோழர்களுக்கும் உடை விஷயத்தில் எந்த வேறுபாடும் இருந்ததில்லை என்று அறிகிறோம். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக அந்த நேரத்தில் இருந்தும் மக்களோடு மக்களாகத்தான் இருந்துள்ளார். போகப் போக சகோதரரின் உடைகளிலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்.

---------------------------------------------------------------



இந்த பதிவு சம்பந்தப்பட்ட தலைப்பில் சகோ பெரியார் தாசன் அவர்களின் 'சகோதரத்துவம்' என்ற தலைப்பில் இங்கிலாந்தில் பேசிய பேச்சையும் சற்று கேட்போம்.

Sunday, July 15, 2012

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

பர்மியர்களோடு நான் தபூக்கில் இருந்த போது நிறைய பழகி இருக்கிறேன். சொந்த தொழில் செய்வதில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மியான்மரில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை கருத்தில் கொண்டு அகதிகள் அந்தஸ்தில் பல லட்சம் பேர்களை சவுதி அரசு பராமரித்து வருகிறது. அவர்களுக்கு அகதிகள் என்ற தனி அட்டை ஒன்றை கொடுத்து பர்மாவில் பிரச்னைகள் முடியும் வரை சவுதியில் குடும்பத்தோடு தங்க அனுமதிக்கப்பட்டள்ளனர். அந்த வகையில் பல பர்மிய நண்பர்களை பெற்றுள்ளேன்.



சுமார் 15 இலட்சம் முஸ்லி்ம்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இதில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பர்மியர்கள். மீதமானவர்கள் வங்காளிகள். இந்தியாவில் இருந்து சென்றவர்கள். தமக்கென தனியான மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள். அராபிய மன்னன் அரகனினால் பலாத்காரமாக நாடுகடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் வணிக கலம் நடுக்கடலில் விபத்துக்கு உள்ளானதனால் பர்மாவின் பக்கம் வந்து சேர்ந்தனர். பர்மிய பெண்களை மணந்து அங்கேயே கீழைத்தேய வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது நடந்தது 9ம் நுற்றாண்டுகளில். மொகாலாய படைகள் தங்கள் எல்லைகளை விரித்த போது இவர்கள் அவர்களிற்கான வர்த்தக முகவர்களாக செயற்பட்டனர். இதன் பலனாக அதிகாரம் மிக்கவர்களாகவும், பணபலமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். இது தான் இன்றைய தினத்தில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. பர்மாவை காட்டி கொடுத்தவர்கள். பர்மாவின் செல்வங்களை அரேபியாவிற்கு சுரண்டி விற்றவர்கள், பர்மிய பெண்களை கற்பழித்தவர்கள் பலாத்காரமாக மணந்தவர்கள் போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளே இன்றைய இனவாத சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.

1950 களில் ரோகீங்கியா பிரதேசம் தனி பிரதேசமாக இனங்காணப்பட்டது. இதில் இந்திய வங்காள இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அராஜகமான தங்கள் இராணுவ அரசியல் இருப்பினை பேணிக்கொள்ள பர்மிய ஜெனரல்கள் ரோகீங்கிய முஸ்லிம்களிற்கு எதிரான இனவாத அரசியலை அதன் செயல்நெறிகளில் சுயமாக செயற்பட அனுமதியளித்தனர். பிக்குகள் சொல்லும் திசையில் சுடுமாறு போலிஸாரையும் பிக்குகள் காட்டும் பக்கத்தில் குண்டெறியுமாறு இராணுவத்தையும் பணித்தார்கள் இந்த பாசிஷ இராணுவ ஆட்சியாளர்கள்.

பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.


(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)

கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது.

பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.

இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.

மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.

கடல்களில் மீன் பிடிக்க முடியாது.

1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.

அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.

பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்ப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.

கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.


(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)

இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார்.

பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள்.


(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)

இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன. இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.




16.March.1997 - மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர். 100 பிக்குகள் கைது செய்ய்ப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள். மற்றுமொரு காத்தான்குடி)

12.February.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.


(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே!ரமலானில் நோன்பு வைத்த நிலையில் தாக்கப்பட்ட தாய் முஸ்லிம்கள்.)

15.May.2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது.


(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)

பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.

2012 June. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.


கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?

மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சில வாரங்கள் முன்பு லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூசீ ‘’ கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பர்மாவின் நிரந்தர பிரஜைகள் அல்ல’’ என்ற ரீதியில் தனது கருத்தை தெரிவித்தார். மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுணுக்கமாக கையாளா வேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார். இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.

தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்

எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.

"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.


வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன சிறு உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள்.

பர்மிய முஸ்லிம்களும், ஈழத்து தமிழர்களும், சிரிய முஸ்லிம்களும் தங்களின் சொந்த நாட்டு பிரச்னைகளை சுமுகமாக முடித்து எல்லா வளமும் பெற்று சுகமாக வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சி இந்த பதிவை முடிக்கிறேன்.

டிஸ்கி: இப்படி ஒரு பதிவை பதியச் சொல்லி வேண்டுகோள் விடுத்த குவைத்தில் உள்ள முபாரக்குக்கும், உடன் லிங்குகளை அனுப்பித் தந்த வாஞ்சூர் அண்ணனுக்கும், கைபர் தளத்துக்கும், விக்கி பீடியாவுக்கும் நன்றிகள்.


மேலும் விபரங்கள் அறிய

http://en.wikipedia.org/wiki/Rohingya_people

இந்த தளத்திற்கு சென்று உங்களின் கண்டனங்களையும் தெரிவியுங்கள்: