Followers

Saturday, May 31, 2014

'பாசிசம்' என்கிற சொல்லைப் பயன்படுத்துவது முட்டாள்தனமா?



'பாசிசம்' என்கிற சொல்லைப் பயன்படுத்துவது முட்டாள்தனமா? - அகில் பில்கிராமி
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
வேர் முதல் நுனி வரை மிகப் பெரிய மாற்றத்தை விளைவிக்கப் போகிறவராக மோடி முன்நிறுத்தப்படுகிறார். அவரை விமர்சிப்பதே அபத்தம் என்கிற அளவிற்கு இங்கே பேசப்படுகிறது.

தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்வது என்பதும், அந்த முடிவுக்காக மக்களைக் குறை கூறாதிருப்பதும் அடிப்படையான இரு ஜனநாயக நெறிகள் என்பது உண்மையே. ஆனால் அதற்காக கடும் கறைகளைச் சுமந்துள்ள ஒரு நபர் தேர்தல் வெற்றியை அடைந்து விட்டார் என்கிற ஒரு காரணத்தினாலேயே அவர் தன் இயற் பண்புகளிலிருந்து மாறி விட்டார் என நம்புவதோ, அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகி விட்டார் என்பதோ அல்ல. அப்படி ஏற்றுக் கொள்வது, அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் கொடுங் கொள்கைகளை எதிர்க்கும் அவசியத்தையும் வேகத்தையும் தணிக்கும் ஆபத்திற்கு இட்டுச் செல்லும்.

பாசிசத்தை எதிர்க்கும் நம் வேகம் தணிய வேண்டும் என்கிற நோக்குடன்தான், 'பாசிசம்' என்கிற 'ஐரோப்பியக் கருத்தாக்கத்தை' இங்கு பயன்படுத்துவதெல்லாம் முட்டாள்தனம் என மோடியை விமர்சிப்பவர்களை நோக்கி இங்கு சில பண்டிதர்கள் தேர்தலுக்கு முன்பிருந்தே அறிவுரைக்கத் தொடங்கி விட்டனர்.

1930கள் மற்றும் 40 களில் ஐரோப்பாவில் விகசித்திருந்த பாசிசத்திற்கு இரு பண்புகள் உண்டு. 1. உள்நாட்டிலேயே சில "அந்நியர்களை" அடையாளம் காட்டி அவர்களை வெறுப்பது, அவர்களுக்கு உரிமைகளை மறுப்பது, வன்முறையை ஏவுவது முதலியன. ஹிட்லர் அவ்வாறு அடையாளங் காட்டிய அந்நியர்கள் யூதர்கள், ஜிப்சிகள் முதலானோர். 2. கார்ப்பொரேட் நலன்களும் அரசு நலன்களும் பிரிக்கவொண்ணாதவை என்கிற நிலையை ஏற்படுத்துவது. முசோலினி பாசிசத்தை இப்படி வரையறுத்ததை நாம் அறிவோம்.

மோடி முஸ்லிம்களுக்குச் செய்ததையும் அவரது பொருளாதாரத் திட்டங்களையும் (அவரது பதவி ஏற்பு விழாவில் குடும்ப சகிதம் கலந்து கொண்ட அம்பானிகள், அதானிகள், இந்துஜாக்களை ஒரு கணம் நினைவிற் கொள்க) மனதில் கூட்டிப் பார்த்து பாசிசாம் என்கிற சொல்லை இங்கு பயன்படுத்துவது முட்டாள்தனமா இல்லை புத்த்சாலித்தனமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

மோடி முன்னிறுத்தும் பொருளாதார வளர்ச்சி என்பது புதிதல்ல. ஏற்கனவே சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் அவர்களின் மாநிலங்களில் செய்து தோற்றதுதான். குடிமக்களின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, பெருநகர் சார்ந்த கார்பொரேட் வளர்ச்சியை முன் நிறுத்தியவர்கள்தான் இவர்கள். பொருளாதாரத் திட்டங்களைப் பொருத்த மட்டில் மன்மோகன்-சிதம்பரம் மாடலிலிருந்து மோடி-பா.ஜ.க மாடல் இம்மியும் வேறுபடப் போவதில்லை என்கிறார் இக்கட்டுரையில் அகில் பில்கிராமி.

பொருளாதாரக் கொள்கையில் மட்டுமல்ல அயலுறவுக் கொள்கையிலும் அதுதான் நடக்கப் போகிறது.

அகில் பில்கிராமி வாழும் இந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவர். கொலம்பியா பல்களைக் கழகத் தத்துவப் பேராசிரியர்.

தமிழில் அ. மார்க்ஸ்

One pundit in the aftermath of the Indian elections has described the Prime Minister-elect as seeking to “reshape the entire political universe of India” (Ashutosh Varshney in The Guardian). It is in the nature of public life in the modern period that even just the rhetoric and pretence of “change” can bestow upon a politician an ersatz glamour. In the drumbeat of electioneering over several recent months that rhetoric and pretence on the lips of Mr. Narendra Modi was flamboyantly yet carefully cultivated and, above all, purchased at obscene expense. The media, funded and controlled by the same corporate sources that paid for this public relations achievement, acquiesced with conviction in the pretence and repeated the rhetoric each day both in print and on screen.

The strategy has paid off; the man now has the added glamour of the nation’s most exalted office which, suppressing his natural swagger, he has approached with an affectation of humility and express concern for the poor and working people of the country, the very people that the policies and politics he stands for will sink into ever-increasing poverty and insecurity.

http://www.thehindu.com/opinion/lead/change-and-continuity/article6062691.ece

Friday, May 30, 2014

நடிகை மோனிகா எம்ஜி ரஹிமாவாக மாறியது ஏன்?



http://www.youtube.com/watch?v=zh4doTCki0Y

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சுஹாசினி டைரக்ஷனில் வெளி வந்த இந்திரா படத்தில் நடித்துள்ள நடிகை மோனிகா தற்போது இஸ்லாமிய மதத்தில் ஐக்கியமாகி உள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே! சொந்த வீடு இருக்கிறது: தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து பேரும் புகழும் பணமும் இருக்கிறது. ஆனால்....

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.........

நோ பீஸ் ஆஃப் மைன்ட்! (no peace of mind) ஞான ஒளி சிவாஜி பாணியில் சொல்லிக் கொள்ளவும் :-)

ஆம். மனதில் அமைதியில்லாததுதான் இது போன்ற பிரபலங்கள் இஸ்லாத்தை தாங்களாகவே ஏற்றுக் கொள்வதற்கான காரணம். அவரது பேட்டியிலும் அதனைத்தான் பிரதானமாக கூறுகிறார்.

கோடிகள் புரளும் இந்த சினிமா துறையை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடப் போவதாக சொல்கிறார். சமூகத்தை ஆபாசத்தால் சீரழிக்கும் இந்த சினிமா தொழிலை விட்டது மிக நன்று. மற்ற தொழில்களில் இதை விட இறைவன் அதிக அபிவிருத்தியை தரலாம்.

பணத்துக்காக மாறி விட்டார்: அரபு ஷேக்கை கல்யாணம் செய்யப் போகிறார்: பைத்தியம் பிடித்து விட்டது: இந்து மதத்தில் இல்லாத தத்துவங்களா: என்றெல்லாம் பலவாறாக அவர் எள்ளி நகையாடப்படுவார். அதனை எல்லாம் ஒரு புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டு சிறந்த ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற நாமும் இந்த சகோதரியை வாழ்த்துவோம்.

'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'

-குர்ஆன் 110: 1,2,3


உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு நடிகை மோனிகாவின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17


ஆம். மோனிகா இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக அவர் ஒரு சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டு அவர் பெருமை பெறுகிறார்.

இந்து நண்பர்கள் கோபப்படாமல் எதனால் இவ்வாறு தாய் மதம் விட்டு மாறுகிறார்கள் என்று யோசிக்க வேண்டும். நேற்றைய பதிவில் கூட 14-15 வயது தலித் சிறுமிகளை கற்பழித்து கொன்று அந்த பெண்களை தூக்கிலும் ஏற்றியுள்ளார்கள். தமிழகத்திலும் தலித் வன்னியர் நாடார் தேவர் மோதல்களை தினமும் பார்த்து வருகிறோம். நரேந்திர மோடி வந்து எதனையும் சாதிக்கப் போவதில்லை. சாதி வெறியை அவர் மேலோங்கவே செய்வார். அல்லது இஸ்லாமியர்களை வம்புக்கிழுப்பார். இதைத் தவிர வேறு மாற்றங்கள் எதுவும் நிகழப் போவதில்லை. மாற்றங்கள் வேதங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.

Thursday, May 29, 2014

இர்ஷத் ஜஹானை கொன்றவர்களுக்கு மீண்டும் பதவி!



இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்கால் தற்போது பெயிலில் உள்ளார். சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையை 90 நாட்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்காததே இவரை பெயிலில் விட முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமான இந்த கேசில் சிபிஐ எவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது என்பதற்கு இந்த வழக்கே ஒரு சாட்சி. அதிகாரத்தில் இருப்போர் எந்த அளவு இனப் பற்றோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு அடுத்த படியாக ஜி.எல்.சிங்கால் குஜராத் அரசால் திரும்பவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். போலி என்கவுண்டரில் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் உயிரை பறிக்க காரணமான ஒரு அதிகாரிக்கு மீண்டும் பதவி கொடுத்து கௌரவித்துள்ளது பிஜேபி அரசு. நரேந்திர மோடி பிரதமரானதால் அவரது இடத்துக்கு வந்துள்ள ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றவுடன் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கிரிமினல்களை முக்கிய பதவியில் அமர்த்துவதன் மூலம் தானும் ஒரு மற்றொரு மோடி என்பதை இந்த முதல்வரும் நிரூபிக்கிறார்.

'இது ஒரு மட்டரகமான சட்டத்தை மீறிய செயல். இங்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பிஜேபி நீதியான ஆட்சியை கொடுப்போம் என்று மக்களுக்கு வாக்களித்தது என்ன ஆனது? ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு மீண்டும் அரசு பதவி தருவது முறைதானா?' என்று கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் வீரேந்திர குரோவர்.

மற்றொரு அநியாயமும் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் தினேஷ் என்ற போலீஸ் அதிகாரி. இவரும் தற்போது பெயிலில் உள்ளார். வசுந்தராவ் அரசு மீண்டும் அவருக்கு பதவியைக் கொடுத்து அழகு பார்த்துள்ளது. ஆட்கள் மாறினாலும் இந்துத்வாவின் நிறம் மட்டும் மாறுவதில்லை என்பது குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை மீண்டும் பதவியில் அமர்த்தியன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இங்கும் பிஜேபி தான் யார் என்பதை நிரூபித்துள்ளது.

இது போன்ற கிரிமினல்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தபபடுவதால்தான் இஸ்லாமியர்களின் மேல் போலி குற்றச்சாட்டுக்களை தைரியமாக ஆள்வோர்களால் சுமத்த முடிகிறது.

நமது நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் பொறுப்பை நமது இறைவனிடம் தான் கேட்க வேண்டும். காலம் இப்படியே சென்று விடாது. இறந்த அந்த அப்பாவிகளின் குடும்ப உறுப்பினர்களின் பிரார்தனை வீண் போகாது. இறைவனின் தண்டனையை அந்த கொடியவர்கள் நமது கண் முன்னாலேயே அனுபவிக்கும் காலமும் வரும். அதுவரை பொறுத்திருப்போம்.

http://www.ndtv.com/article/india/gl-singhal-accused-in-ishrat-jahan-case-reinstated-by-gujarat-government-532361

இரு பெண்களை கற்பழித்து தூக்கில் ஏற்றிய கொடூரம்!



உத்தர பிரதேசம் பாடாவுன் மாவட்டம் சத்கஞ்ச் கிராமத்தில் இரண்டு இளம் பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டு பிறகு அவர்களை தூக்கில் ஏற்றி உள்ளனர் காம கொடூரர்கள். இது அந்த கிராமத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களுக்குமே 14 லிருந்து 15 வயது வரைதான் ஆகிறது. வீட்டிலிருந்து இயற்கை கடன்களை கழிக்க சற்று தூரம் உள்ள மறைவான இடத்துக்கு இந்த இரண்டு பெண்களும் சென்றுள்ளனர். இரவாகியும் திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு கிராம மக்கள் காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். ஆனால் காவல்துறையோ எந்த ஒரு விசாரணைக்கும் உத்தரவிடாமல் தட்டிக் கழித்துள்ளது. கூட்டு கற்பழிப்பானதால் அந்த இரு பெண்களும் வலி தாங்காமல் இறந்துள்ளனர். இறந்த அந்த இரண்டு உடல்களையும் மறுநாள் ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டு 'கற்பழிப்பால் தற்கொலை' என்று கேஸை மூடப் பார்க்கிறது காவல் துறை என்கின்றனர் கிராம மக்கள்.

கிராம மக்களின் போராட்டத்தால் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. சர்வேஷ் யாதவ் என்ற இளைஞரையும் போலீஸ் கைது செய்துள்ளது. பணியில் அசட்டையாக இருந்ததால் நான்கு காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் மிகவும் கேள்விக் குறியாக மாறி வருகிறது. தலித் மக்களை உயர் சாதி இளைஞர்கள் கூட்டு வன் புணர்வு செய்வது பல ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது. அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலரின் பிள்ளைகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதிப்படைந்த மக்கள் கூறுகின்றனர். சட்டங்களை கடுமையாக்கி குற்றவாளிகளையும் இதே போல் தூக்கில் ஏற்றினால்தான் இது போன்ற கற்பழிப்புகளும் கொலைகளும் குறையும்.

முஸாஃபர் நகரில் காதல் என்று பொய்யாக புனைந்துரைத்து 40 முஸ்லிம்களின் உயிரை குடித்த இந்துத்வா வெறியர்கள் தற்போது எங்கு சென்று ஒளிந்து கொண்டனர். குஜராத்திலிருந்து ஓடி வந்து கலவரத்தை நடத்திய அமீத்ஷா தற்போது எங்கே? எவரும் வர மாட்டார். ஏனெனில் இது இரண்டு சாதிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. இது தான் இவர்களின் சுயரூபம்.

http://www.news18.com/news/uttar-pradesh/constable-three-others-arrested-in-dalit-sisters-gangrape-murder-case-492645.html

Wednesday, May 28, 2014

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும்!



நமது பூமிக்கு அருகிலுள்ள அன்ட்ரோமிடா என்ற கேலக்ஸியிலிருந்து நாஸாவால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. சென்ற புதன் கிழமை இதனை வெளியிட்டது நாஸா. இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதி இது போன்ற ஒரு அரிய நிகழ்வு நடந்திருக்கலாம் என்பது நாஸா விஞ்ஞானிகளின் கணிப்பு. அது பற்றிய செய்தியை ஆங்கிலத்தில் பார்ப்போம்.

A massive explosion in our nearest galaxy may have been caused by two stars colliding.

A sudden burst of gamma-rays in the Andromeda Galaxy was detected by a Nasa satellite on Wednesday morning.

There are various different types of gamma-ray emissions, and it is unclear whether it was specifically a gamma ray burst (GRB).

If it was, it may have been caused by the collision of two neutron stars.

It would be significant given that Andromeda is 2.5 million light years away – the previous nearest GRB took place 2.6 billion light years away.

By observing how the light fades over the next 24-48 hours, astronomers should be able to tell what type of gamma-ray emission it was.

Nasa's Swift Burst Alert telescope watches the skies for gamma-ray bursts and sends their locations back to stations on the ground.

It observes around 90 gamma ray events every year, but usually from much further away.

http://news.sky.com/story/1270466/massive-explosion-in-earths-nearest-galaxy

குர்ஆன் சூரா அர்ரஹ்மானில் தனது வல்லமை ஒவ்வொன்றையும் கூறி 'உங்களின் இறைவனின் அருட் கொடைகளில் எதனை பொய்யெனக் கருதுகிறீர்கள்?' என்று பலமுறை நம்மைப் பார்த்து இறைவன் கேட்கின்றான். அது போன்று ஒரு இடத்தில்

'வானம் பிளக்கும் போது எண்ணையில் தோய்த்த சிவந்த மலரைப் போன்று ஆகிவிடும் போது'
-குர்ஆன் 55:37

என்று இறைவன் கூறுகிறான். உலக முடிவு நாளில் பூமி மற்றும் அனைத்து கோள்களையும் கேலக்சிகளையும் அழித்து விடுவதாக இந்த வசனத்தின் தொடர்ச்சியாக இறைவன் கூறுகிறான். உலகம் அழிய வேண்டுமானால் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோத வேண்டும். அவ்வாறு ஒன்றோடொன்று மோதும் போது அந்த நிகழ்வானது எவ்வாறு இருக்கும் என்பதையே இந்த வசனம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தண்ணீர் நிறைந்த பெரிய குளம் ஒன்றில் மிகப் பெரிய பாறாங்கல்லைப் போட்டால் அந்த தண்ணீரானது பூ விரிவதைப் போன்ற தோற்றத்தில் மேலெழும்புவதைப் பார்க்கலாம். அதே போன்ற நிலைதான் இரண்டு கோள்கள் மோதும் போதும் நிகழ்கிறது. அந்த காட்சியையே இறைவனும் இங்கு எடுத்துக் காட்டுகிறான். ஆச்சரியமாக நமது காலத்தில் இரண்டு நட்சத்திரங்கள் மோதிய அந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா படமாக எடுத்து வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இது போன்ற படங்களை நாசா வெளியிட்டிருந்தாலும் சென்ற புதன் கிழமை வெளியிட்ட படமானது குர்ஆனின் வசனத்தோடு மிகச் சரியாக பொருந்துவதை பார்த்து வியக்கிறோம்.

-------------------------------------------------------------------

முன்பும் இதே தலைப்பில் வெளியிட்ட பதிவை இனி காண்போம்.



“வானம் பிளந்து எண்ணையில் தோய்த்த சிவந்த மலரைப் போன்று ஆகிவிடும் போது” -ஸூரா ரஹ்மான்
-குர்ஆன் 55:37





வானம் பிளந்து போகும் அதாவது வானத்து கட்டுமானப் பொருட்கள் வெடித்துப் பிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் பூ போன்றிருக்கும். அந்த பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் என்பது இறைவனே அறிந்த விஷயமாகும்.



எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை இறைவனே ஆக்கி வைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின் மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன.

விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.



இது போன்று சிறிய சிறிய வசனங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பயன் படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை அல்லாது மனிதர்களின் வார்த்தை அல்ல என்பதற்கு இது போன்ற வசனங்கள் நமக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

அணுவைப் பற்றி தமிழச்சிக்கு சில விளக்கங்கள்!

அணுவைப் பற்றி தமிழச்சிக்கு சில விளக்கங்கள்!

தமிழச்சி!

//"பொருள்கள் எல்லாம் பிரியக்கூடியவை. பகுதி பகுதியாகப் பிரிபடக்கூடியவை அனைத்தும் அழியக் கூடியவை. ஒரு பொருளை பிரித்துக் கொண்டே போனால் இனி பிரிக்க முடியாது என்னும் ஒரு நிலையை பொருள் அடைந்தே தீரும். அவ்விதம் பிரிபடாத கடைசி நிலைதான் அணு. அதுதான் உலக உற்பத்திக்கு மூலம். அது அழியாதது"

- பவுத்தம்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே

-திருமூலர்//

பவுத்த மதம், இந்து மதம் எல்லாம் அணுவைப் பற்றி சொன்னதை பின்னூட்டமிடும் போது இஸ்லாம் மார்க்கம் மட்டும் வேடிக்கை பார்க்க முடியுமா? எனவே அதற்கான ஆதாரம் இதோ!

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
-திருக்குர்ஆன் 21:30

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் எதையும் செய்வோராவோம்

-திருக்குர் ஆன் 21:104.

பிரபஞ்சம் விரிவடைகிறது:
[நமது] வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.
-திருக்குர் ஆன் 51:47

இந்த பிரபஞ்சமானது முன்பு ஒன்றாக இருந்ததாகவும் அதனை தாமே பிரித்தெடுத்ததாகவும் இறைவன் இந்த வசனத்தில் கூறுகிறான். உலக முடிவு நாளில் பிரித்த பிரபஞ்சத்தை ஒன்றாக மாற்றுவதாகவும் இதற்கு தாம் சக்தி பெற்றவன் என்றும் இறைவன் குர்ஆனிலே விவரிக்கிறான். மேலும் இந்த பிரபஞ்சத்தை விரிவாக்கம் செய்வதாகவும் விவரிக்கிறான்.

இது குறித்து 31-3-2010 தினமலரில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள்:

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, ‘பிக் பாங்’ (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.’அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்’ என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், ‘பிக் பாங் தியரி’ (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, ‘செர்ன்’ (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், ‘லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்’ எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, ‘செர்ன்’ அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.
இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் அனைத்தும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இது இறை வேதம் தான் எனபதை நிரூபிக்கின்றது.

டீ விற்றவர் இன்று இந்தியாவின் பிரதமர்!



டீ விற்ற சாதாரண ஊழியன் இன்று இந்திய நாட்டின் பிரதமராகியிருக்கிறார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். முடியாட்சியில் இது போன்ற விந்தைகள் நடக்க சாத்தியமில்லை. 'ஒரு அபிஷீனிய கருத்த அடிமை உங்களின் தலைவராக பொறுப்பேற்றாலும் அவரது நியாயமான கட்டளைகளுக்கு கட்டுப்படுங்கள்' என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப மோடியின் தலைமையை முஸ்லிம்கள் வரும் ஐந்தாண்டுகளுக்கு ஏற்கத்தான் வேண்டும். இதில் உள்ள நன்மை தீமைகளை இறைவனே அறிவான்.

சாதாரண டீ விற்றவர் பிரதமரானது ஒரு பக்கம் இருந்தாலும் அதை அடைய அவர் எடுத்துக் கொண்ட முயற்சியான மறு பக்கத்தையும் நாம் அலச கடமைபட்டுள்ளோம். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அதனை எரித்தது முஸ்லிம்கள் அல்ல: அது ஒரு விபத்து என்று அதிகாரிகள் தெரிவித்தும், இறந்த உடல்களை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதித்ததும், சொராபுதீன் என்கவுண்டர், இர்ஷத் ஜஹான் என்கவுண்டர், ஹரேன் பாண்டியா கொலை, 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, உபியில் வாக்குகளை அள்ள காதல் பிரச்னை என்று பொய்யுரைத்து அங்கு ஐம்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இறக்க காரணமானது, பீகார் குண்டு வெடிப்பு, மற்றும் நமது நாட்டில் நடந்த அனேக குண்டு வெடிப்புகள் என்று எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டு இன்று ஒரு டீக்கடைக்காரர் பிரதமராகி விட்டார்.

மன்மோகன் சிங் தலைமையில் பாகிஸ்தானோடு நட்புக் கரம் நீட்டி எல்லாம் கூடி வரும் வேளையில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டு பல அப்பாவி இந்திய, மற்றும் பாகிஸ்தானிய பயணிகள் இறக்க காரணமாக இருந்ததை மறந்திருக்க மாட்டோம். குண்டு வெடிப்புக்கு காரணமாக அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை முடிவில் அதனை செய்தது இந்துத்வா என்ற உண்மை வெளிப்பட்டது. ஆனால் அதே பாகிஸ்தானிய பிதமரை இன்று அழைத்து அவரோடு சுமூகமாக செல்ல மோடி முயற்சிக்கும் விந்தையையும் நாம் பார்க்கிறோம். கிரிக்கெட் விளையாட்டுக்கே மைதானத்தை துவம்சம் செய்த இந்துத்வா இதற்கு வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்க்கிறது. இது ஆச்சரியமில்லை. முன்பு பாகிஸ்தான் எதிர்பாகட்டும்: இன்று அதே பாகிஸ்தானோடு கூடி குலாவுவதாகட்டும் எல்லாமே திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்வுகள்:

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள அக்ஷர்தாம் ஆலயத்தில் புகுந்த தீவிரவாதிகள் 33 பேரை சுட்டுக் கொன்று, 85 பேரை காயப்படுத்தினர். என்எஸ்ஜி கமாண்டோக்கள், சம்பவத்தில் ஈடுபட்ட இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கின் புலன் விசாரணை, குஜராத் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. வெகு விரைவாக புலனாய்வு நடத்திய குஜராத் போலீஸ், ஆதாம் அஜ்மீரி, ஷாய் மியா என்கிற சந்த் கான், முப்தி அப்துல் கயூம் மன்சூரி, முகம்மது சலீம் ஷேக், அப்துல் மியான் காதிரி மற்றும் அல்டாப் ஹுசைன் ஆகியோரை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவர் மீதும் போட்டா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

ஜுலை 2006ல் போட்டா சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நீதிமன்றம் ஆதாம் அஜ்மீரி, ஷான் மியா என்கிற சந்த் கான், மற்றும் முப்தி அப்துல் கயூம் மன்சூரி ஆகியோருக்கு மரண தண்டனையும், முகம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல் மியான் காதிரிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அல்டாப் ஹுசைனுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும் விதித்து. 2008ல் இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 30 மே 2010 அன்று, குஜராத் உயர்நீதிமன்றம், போட்டா நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.

இதற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில்தான் அத்தனை பேரையும் விடுவித்த உச்சநீதிமன்றம் கீழ்கண்டவாறு தெரிவித்தது.

We intend to express our anguish about the incompetence with which the investigating agencies conducted the investigation of the case of such a grievous nature, involving the integrity and security of the nation. Instead of booking the real culprits responsible for taking so many precious lives, police caught innocent people and got imposed the grievous charges against them which resulted in their conviction and subsequent sentencing

தேசத்தின் பாதுகாப்பு குறித்த இப்படியொரு முக்கியமான வழக்கில், புலனாய்வு அமைப்புகள் தான்தோன்றித்தனமாக விசாரணை செய்ததை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, காவல்துறை அப்பாவிகளை பிடித்து அவர்கள் மீது குற்றம் சுமத்தி தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது.

இந்த அக்ஷர்தாம் வழக்கை விசாரித்த அதிகாரி யார் தெரியுமா ? சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் விவகாரத்தில் சிறையில் உள்ள அதிகாரி டி.ஜி வன்ஸாராதான். இப்படி தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு சிறையில் இருந்த இந்த ஆறுபேர் எப்படி சித்திரவதை செய்யப்பட்டிருப்பார்கள் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

2007 தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ன பேசினார் தெரியுமா ? “காங்கரஸ் காரர்கள், மோடி என்கவுன்டரில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். மோடிதான் சோராபுதினை கொன்றார் என்று கூறுகிறார்கள். மத்தியில் உங்கள் அரசாங்கம்தான் இருக்கிறது. துணிச்சல் இருந்தால், மோடியை தூக்கு மேடைக்கு அனுப்புங்கள். சோராபுதீனை என்ன செய்ய வேண்டும் ? என கர்ஜிக்கிறார். கூட்டம் பதிலுக்கு கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும், கொல்லவேண்டும் என கூச்சலிடுகிறது.

”பல ஏகே 47 துப்பாக்கிகள் சோராபுதீனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சோராபுதீனை, நான்கு மாநிலங்கள் தேடிக்கொண்டிருந்த சோராபுதீனை, காவல்துறை மீது தாக்குதல் நடத்திய சோராபுதீனை, பாகிஸ்தானோடு தொடர்பு வைத்திருந்த சோராபுதீனை, குஜராத் மீது பார்வையை பதித்த சோராபுதீனை என் காவல்துறை என்ன செய்யும் ? ஏன் காவல்துறை சோனியாவிடம் அனுமதி கேட்க வேண்டுமா ?”

இதுதான் மோடியின் பேச்சு. இப்படிப் பேசியவரின் ஆட்சியில்தான் அக்ஷர்தாம் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் என்று ஆறு பேர் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பிறகு, தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதே போல பெங்களுரு மல்லேஸ்வரம் பிஜேபி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பிலும் 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். புலனாய்வு நடந்து ஆறு மாதங்கள் கழித்து பீர் மொய்தீன், சதாம் ஹுசைன் மற்றும் தென்காசி ஹனீப் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பீர் மொய்தீன், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை வருடம் சிறையில் கழித்த இந்த அப்பாவிகளின் கேள்விக்கு பதிலை யார் வைத்துள்ளார்?
நன்றி: சவுக்கு தளம்

இது போன்று எண்ணற்ற சம்பவங்கள். டீ விற்ற இந்த மனிதர் இன்று பிரதமராக வீற்றிருக்க 3000 முஸ்லிம்கள் தங்கள் உயிரை இந்த மண்ணில் அநியாயமாக சிந்தியிருக்கிறார்கள். இனி வேக வேகமாக அனைத்து ஆதாரங்களும் திட்டமிட்டு அதிகார வர்க்கத்தால் நீக்கப்படும். சிறையில் இருக்கும் குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவர். மாயா கோட்னானி, பிரக்யாசிங், ஜெனரல் புரோகித் போன்ற குற்றவாளிகள் எல்லாம் தியாகிகளாக்கப்பட்டு இனி விடுதலையாகலாம்.

பிரதமராக எல்லோரும் கனவு காணலாம். ஆனால் அந்த எல்லோரும் தயவு செய்து நமது தற்போதய பிரதமர் அந்த கனவை மெய்ப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளை கனவிலும் கூட செயல்படுத்த முயற்சித்து விட வேண்டாம். இன்னும் சில காலம் கழித்து அவரது மனசாட்சியே அவரை தூங்கவிடாமல் தினமும் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும். அது போன்ற ஒரு நிலைக்கு நாம் யாரும் ஆளாகிட வேண்டாம்: இவ்வளவு திட்டமிட்டு ஆட்சியை பிடித்தது இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கையாலும் அந்த நம்பிக்கையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தூய எண்ணத்தினாலும் என்று யாராவது நினைத்தால் அவரைப் பார்த்து பரிதாபம்தான் பட முடியும். இது போன்ற தீவிரவாதங்களினால் எந்த மதமும் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. இஸ்லாம் வளர்ந்தது அன்பினால்தான். எனவே தான் இத்தனை எதிர்ப்புகள், கைதுகள், என்கவுண்டர்கள் இருந்தும் அசுர வேகத்தில் இஸ்லாம் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இந்துத்வாவின் நிலை இதே போல் இனியும் இந்தியாவில் தொடர்ந்தால் இந்து மதம் முற்றாக அழிவதற்கு இவர்களே காரணமாகி விடுவர்.

எவ்வளவுதான் ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் எல்லோரையும் ஆட்சி செய்து வரும் படைத்த இறைவனின் அதிகாரத்தின் முன்னால் இவை எல்லாம் தூசுக்கு சமானம். 'அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்' அந்த நாளை நாமும் எதிர் பார்த்திருப்போம்.

Monday, May 26, 2014

இரும்பை பற்றி குர்ஆன் கூறுவதென்ன? ஒரு மீள் பதிவு!

இந்த பதிவை படிக்கும் முன் ஒரு விளக்கம். குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. அது மனிதன் எவ்வாறு தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை அடங்கிய வேதம். இது இறைவனிடம் இருந்துதான் வந்ததா? அல்லது முகமது நபி தனது கற்பனையில் குர்ஆனைக் கொடுத்தாரா என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. முஸ்லிம்களை பொறுத்த வரையில் ஒரு பிரச்னையும் இல்லை. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் அவர்களிடத்தில் கிடையாது. மற்ற மதத்தவர் இந்த குர்ஆன் இறைவன் வாக்காக இருக்க முடியாது என்ற வாதத்தை வைக்கின்றனர். எனவே அந்த வாதத்தை எதிர் கொள்ள முஸ்லிம்களும் இது இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க சில அறிவியல் ஆதாரங்களை தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அந்த வகையில் முன்பு கடலுக்கடியில் உள்ள இருள்களைப் பார்த்தோம். இந்த பதிவில் இரும்பைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது. அதற்கு அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.



நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன.
-குர்ஆன் 57:25


மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.




இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும். சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது.அப்படி பூமி படைக்கப்படும் போது இரும்பு எவ்வாறு பூமியின் கட்டுமானத்தில் வந்திருக்க முடியும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.




விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.

http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

என்சைக்ளோபீடியாவின் இந்த பக்கத்துக்கு சென்று வானிலிருந்து விழுந்த இரும்பு துண்டுகளை நாடு வாரியாக படங்களோடு பாருங்கள். சில காணொளிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.




'இரும்பில் மக்களுக்கு பயன்கள் உண்டு' என்ற இந்த வார்த்தையை ஒட்டி நாம் சிறிது ஆராய்வோம். நமது மருத்துவ உலகம் மனிதனுக்கு இரும்புச் சத்து எந்த வகையில் உபயோகமாக உள்ளது என்பதை பட்டியலிடுகிறது. அதை இனி பார்ப்போம்:

இயற்கையில் அபரிமிதமாக கிடைக்கும் இரும்புச் சத்து உடலின் நலத்திற்கு மிக அவசியமாகும். பெரும்பான்மையான புரதங்கள், என்சைம்கள் போன்றவற்றிற்கு இரும்புச் சத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்ஸிஜன் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்ல இரும்புச் சத்து அவசியம். செல்கள் மேலும் பெருக, வளார்ச்சி அடைய இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச் சத்து குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்புச் சத்து அதிகமானால் விஷமாகி இறக்கவும் நேரிடலாம்.

உடலில் 3ல் 2 பகுதி இரும்புச் சத்து ஹீமோக்லோபின் ஆக இரத்த சிவப்பணுக்களில் இருக்கிறது.இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மையோ க்ளொபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். இவற்றிலும் இரும்பு சத்து உண்டு.

இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்புச் சத்து உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் என்சைம்களில் இரும்பு இருக்கிறது. ஹீம், ஹீம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். பருப்பு வகைகளில் இருக்கும் இரும்பு ஹீம் அல்லாத வகையில் இருக்கிறது. குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்க படும் இரும்புச் சத்து இந்த வகையை சேர்ந்ததே.

உலக சுகாதார மையம் இரும்புச் சத்தின் குறைவால் வரும் நோய்கள்தான் உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று கூறுகிறார்கள். உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள் அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்த சோகை கொண்டவர்கள் எனக் கூறுகிறார்கள்.

………Iron is an essential element for most life on Earth, including human beings. Most of the human body's iron is contained in red blood cells……
- http://en.wikipedia.org/wiki/Human_iron_metabolism

Without the iron atom, there would be no carbon-based life in the cosmos; no supernovae, no heating of the primitive earth, no atmosphere or hydrosphere. There would be no protective magnetic field, no Van Allen radiation belts, no ozone layer, no metal to make hemoglobin [in human blood], no metal to tame the reactivity of oxygen, and no oxidative metabolism.
-Nature’s Destiny, the well-known microbiologist Michael Denton emphasizes the importance of iron.





அமெரிக்க நாசா நிறுவனத்தில் புரபசராக வேலை செய்யும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சிறந்த அறிவியல் அறிஞர். the National Aeronautics and Space Administration என்ற நிறுவனத்தில் மிகப் பிரபல்யமானவர். 'வானியலைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?' என்று பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். உலகில் உள்ள அனைத்து திட பொருட்களும் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்ற முடிவுகளையும் அறிந்து வைத்துள்ளார். மேலும் இரும்பை உருவாக்கும் முறையை விஞ்ஞானிகள் சமீப காலங்களில்தான் கண்டு பிடித்தனர். இரும்பின் அடிப்படை உருவாக்கத்தை பெற போதிய சக்தியற்று இருந்தோம். அதாவது இரும்பை உருவாக்கும் ஒரு அணுவை உற்பத்தி செய்ய போதிய சக்தியை இந்த பிரபஞ்சம் பெற்றிருக்கவில்லை என்கிறது அறிவியல் முடிவுகள். எனவே இந்த இரும்பானது வேறு ஒரு கிரகத்திலிருந்து நமது பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்..

அதிலும் நமது பிரபஞ்சத்திலிருந்து இரும்பு வந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ கைகழுவி விட்டனர். நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு. இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம். அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.



“இரும்பையும் இறக்கினோம்”

அதிலும் கூட தனிமங்களாக இல்லாமல் முழு இரும்பாகவே இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் விஞ்ஞானிகள். இனி குர்ஆனுடைய வசனத்தைப் பார்ப்போம். 'இரும்பையும் இறக்கினோம்: அதில் பல உபயோகங்கள் மனித குலத்துக்கு உள்ளது' என்ற வசனத்தை நாம் சிந்தித்தோமானோல் தற்கால அறிவியல் முடிவோடு குர்ஆன் ஒத்து செல்வதை எண்ணி பிரமிக்கிறோம். வேறு எத்தனையோ பொருள்கள் அனைத்தும் பூமியிலேயே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்க அதை எல்லாம் குர்ஆன் சொல்லாமல் இரும்பை மட்டும் தனித்து சொல்வதால் அதுவும் தற்கால அறிவியலோடு முற்றிலும் ஒத்து போவதால் இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.


பண்டைய எகிப்தியர்களும் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்புகள் எழுதியுள்ளது கிடைக்கப் பெறுகிறது. குர்ஆனுக்கு முந்தய இறை வேதங்களிலும் இந்த செய்தி சொல்லப் பட்டிருக்க வேண்டும். எனவேதான் பண்டைய எகிப்தியர்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. பண்டைய எகிப்துக்கு மோசே என்ற இறைத் தூதர் வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேதம் தோரா என்பதும் நமக்கு முன்பே தெரியும்.

'இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. சிறிது காலத்திற்கு பிறகு இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்.'

-குர்ஆன் 38:87,88

ஆம். இந்த குர்ஆன் மனிதன் தனது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் வெற்றி பெறுவான் என்பதை விளக்கும் ஒரு வேதம். வெறுமனே மரியாதை செய்கிறோம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதை விட அதன் மொழிபெயர்ப்பை வாசித்து இறைவன் நம்மோடு என்ன பேசுகிறான் என்பதை ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறகிறான். இந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகள முகமது நபி காலத்திய மக்களுக்கு விளங்கா விட்டாலும் பின்னால் வரக் கூடிய அறிவார்ந்த சமூகம் விளங்கிக் கொள்ள பல அத்தாட்சிகள் இதில் இருக்கிறது என்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான்.

References
1.↑ Kathryn A. Bard - Encyclopedia of the archaeology of ancient Egypt (P. 526) - Routledge; Ill edition, May 14, 1999, ISBN 978-0415185899
2.↑ Kate Melville - Sun's Iron Core May Be Cause Of Solar Flares - Science a Go Go, November 3, 2003
3.Harun yahya.com
4.wikipedia
5. http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

Sunday, May 25, 2014

ஒட்டிப் பறிந்த இரட்டையர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்!



சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர். மம்தூஹ், மஹ்மூத் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் ரியாத்தில் வேலை செய்து வரும் ஒரு சூடானி தம்பதிகளுக்கு பிறந்தது. இதனை கேள்விப் பட்ட மன்னர் அப்துல்லா அரசு செலவில் அந்த குழந்தைகளை பிரித்தெடுக்க உத்தரவிட்டார்.

டாக்டர் அப்துல்லா அல்ரபிய்யா தலைமையில் ஒரு மருத்துவ குழு 13 மணி நேரம் போராடி இந்த இரண்டு குழந்தைகளையும் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது ஒன்பது கட்டங்களாக பிரிக்கப்பட்டு முடிவில் வெற்றியை சென்ற சனிக்கிழமை பெற்றுள்ளது இந்த மருத்துவ குழு. இதற்கு முன்னும் இதே போல் 34 முறை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை இந்த குழுவானது பிரித்தெடுத்துள்ளது. இந்த மருத்துவ குழுவில் 28 மருத்துவ வல்லுனர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கினர்.

ஒரு குழந்தையை சுலபமாக பிரித்து விட்டனர். மற்றொரு குழந்தையின் இதயம், லிவர், பித்தப்பை, சிறுநீரகம் போன்றவற்றை சீராக இயங்க வைக்க பெரும் சிரமப்பட வேண்டியாயிருந்தது. இறைவன் கிருபையால் இரண்டு குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர். குழந்தையின் பெற்றோர் மன்னர் அப்துல்லாவுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
24-05-2014

தர்ஹாவை எப்பய்யா விடப் போறீங்க... - பெரியார்



'எங்க ஆளுங்க மாரியம்மனுக்கு தேர் இழுத்தா, உங்க ஆளுங்க நாகூர் பாவாவுக்கு கூடு இழுக்கிறீங்க...அட வெங்காயங்களா...நீங்க எல்லாரும் எப்பய்யா திருந்தப் போறீங்க....'

---------------------------------------------

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

குர்ஆன் 72:18


ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். எந்த ஒரு சிலுவையையும் தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே, மற்றும் பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1662)

“அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)


‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
(அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)

தர்ஹாக்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதற்கு இஸ்லாம் கடுமையாக தடை விதிக்கிறது. கிறித்தவ பைபிளிலும் இதற்கு ஆதாரம் உண்டு.

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)

2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)" என்று பதில் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இறைத்தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்ப்டடு) உள்ளதா?' என்று கேட்டார். 'இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன்" என்று கூறியபடி திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்" என்றார்கள்.
Volume :3 Book :52

நபி மொழி இப்படி இருக்க நமக்கு எதற்கு தேவையில்லாத தர்ஹா வழிபாடு? சிலர் கூறலாம் இது போன்ற விழாக்கள் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கிறது என்று. இது பொய்யான வாதம். ஏனெனில் முன்பு எங்கள் ஊரில் இதே தர்ஹா விஷேச நாளில் பல தகராறுகள் வரும். பெண்கள் கூட்டத்தில் சிக்குவதால் இதைப் பயன்படுத்தி பலர் தங்களது சில்மிஷங்களை ஆரம்பிக்கின்றனர். இதைப் பார்க்கும் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தவரை அடிக்க போய் பெரும் சண்டையாக மாறிய காட்சிகளும் உண்டு. ஒவ்வொரு முறை தர்ஹா விஷேச நாள் வரும்போது ஏதாவது ஒரு தகராறு வந்து விடும். இது எதற்கு? யாரை திருப்திபடுத்த?

செந்தில் நாதன் - கண்ணீரை வர வழைத்த அவனது பாட்டு!



https://www.youtube.com/watch?v=vqscDfd9TaA

'கோழி ஒரு கூட்டிலே..... சேவல் ஒரு கூட்டிலே......

கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே....

பசுவை தேடி கன்னுக் குட்டி பால் குடிக்க ஓடுது.....

பறவை கூட இரை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது.

தாத்தா தெரியுமா?..... பாத்தா புரியுமா?.......

தனித்தனியா பிரிஞ்சிருக்க எங்களால முடியுமா?.... எங்களால முடியுமா.....

என்று இந்த சிறுவன் செந்தில் நாதன் பாடி முடித்த போது என்னையறியாமல் எனக்கு கண்ணீர் வந்து விட்டது. தனது வாழ்க்கையையே பாட்டாக பாடினானோ என்று எனக்கு தோன்றியது. கண்ணும் தெரியாது: மூளையும் சரியான வளர்ச்சி இல்லை: உடலும் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது: சாப்பிடுவது, இயற்கை கடன்களை கழிப்பது போன்ற அனைத்தையும் மற்றொருவர்தான் செய்து விட வேண்டும்: இத்தனை குறைகளையுடைய ஒரு மகன் நமக்கு தேவைதானா? என்று யோசித்த இவரது பெற்றோர் இவனை கடற்கரையில் விட்டு விட்டு சென்று விட்டனர். பசியில் அலைந்து திரிந்த இந்த சிறுவனை கூட அழைத்து வந்தவர்தான் தன்னோடு தங்க வைத்துள்ளார். இது போன்று பெற்றோர்களால் கைவிடப்பட்ட பல குழந்தைகளை பராமரித்தும் வருகிறார்.

இறைவன் இவரைப் பொன்ற நல்ல உள்ளங்களுக்கு பொருளாதார உதவி மேலும் கிடைத்து இன்னும் பல குழந்தைகளை தத்தெடுக்கும் பாக்கியத்தை தர வேண்டும். பெற்ற தாய் தந்தை உதறி விட்டாலும் ஏதோ ஒரு வகையில் இது போன்ற அனாதைகளை காக்க இந்த பெரியவரைப் போன்ற சிலரையும் இறைவன் படைத்தே வருகிறான்.

இன்னும் எத்தனையோ தாய் தந்தையர் வறுமைக்கு பயந்து கள்ளிப்பால் கொடுத்து குழந்தைகளை கொல்வதும் ஸ்கேன் போட்டு பார்த்து பெண் குழந்தை என்றால் அதனை அழித்து விடுவதும் பல இடங்களில் நடக்கிறது. படித்தவர்கள் மத்தியில் இது அதிகம் நடக்கிறது. வறுமையும், செல்வந்த நிலையும் நமது திறமையால் வந்து விடுவதில்லை. அதனை கொடுப்பது இறைவன். சிலருக்கு பொருளை கொடுத்து சோதிப்பான்: சிலருக்கு குழந்தையை கொடுத்து சோதிப்பான்: இன்னும் சிலருக்கு வறுமையைக் கொண்டு சோதிப்பான்: இதிலிருந்து எல்லாம் மீண்டு எந்த உயிருக்கும் தீங்கிழைக்காது இறைவன் சொன்னபடி தனது வாழ்வை அமைத்துக் கொள்பவனே இந்த பரீட்சையில் வெற்றியடைகிறான். அத்தகைய வெற்றி பெற்ற மக்களின் கூட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்ள முயற்சிப்போமாக!

இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5 கோடி மக்களிடம் 200 கோடி மக்களுக்குத் தேவையான செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த செல்வத்தை பகிர்ந்து கொடுத்தாலே நமது நாட்டின் வறுமையை முற்றாக ஒழித்து விடலாம். உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை. ஒரு கோழிக்குஞ்சு கோழியாக வளர்வதற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தொகை குறைவாக உள்ள போது இது தான் நிலைமை. மக்கள் தொகை பெருகிய பின் மிக விரைவாகவும் அதிக எடையுடனும் வளரக் கூடிய கோழி இனங்களைக் கண்டு பிடித்து விட்டான். சேவல் இல்லாமல் தினந்தோறும் முட்டை இடும் கோழி இனத்தையும் மனிதன் கண்டு பிடித்துள்ளான். ஒரு படி பால் கறப்பதற்கே தாளம் போட்ட நிலை மாறி 100 லிட்டர் வரை பால் கறக்கும் பசுக்களையும் மனிதன் கண்டுபிடித்து விட்டான். எனவே வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொல்வதோ குழந்தை பெற்றுக் கொள்ளாமல் முற்றிலும் தவிர்ப்பதோ ஒரு சரியான தீர்வாகாது என்பதை நாம் விளங்க வேண்டும்.

முகமது நபி இஸ்லாத்தை போதிப்பதற்கு முன் அரபு நாடுகளில் வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொல்லும் பழக்கம் இருந்தது. இது பற்றி குர்ஆன் கூறுவதாவது...

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட செய்தி கெட்டதெனக் கருதியதால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை உயிருடன் புதைப்பதா? என்று எண்ணுகிறான் கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் 16:58,59)


அறியாமைக் காலத்தில் ரபீஆ மற்றும் முளர் குலத்தார் தங்களுடைய பெண் மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்து வந்தனர். வறுமை மற்றும் இழிவைப் பயந்து பெண் மக்களை அரபுகள் கொன்று வந்தனர். இதற்குத் தடைவிதித்தே இறைவன் இவ்வசனத்தை அருளினான்.
“”உன்னுடைய குழந்தை உன்னுடன் உண வருந்துவதை அஞ்சி, அதை நீ கொலை செய்வது பெரும் பாவமாகும்.” என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி:7532 )

Saturday, May 24, 2014

தாஹிரா பானு, ஹலீமா அஃப்ரோஸ் வாழ்த்துக்கள் சகோதரிகளே!





பல ஆயிரம் மொனேஷன்: கசக்கி பிழியும் அதிகார வர்க்கம்: என்ற எந்த தொந்தரவும் இல்லாமல் அரசு பள்ளியில் படித்து இன்று தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பெற்ற இந்த மாணவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 19 பேரில், சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மாணவி பஹிரா பானுவும் சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது. மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.0% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மொத்த தேர்ச்சி விகிதம் 85.87% ஆக உள்ளது. மாணவர்கள் 81.75% பேரும், மாணவிகள் 89.72% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை, 321 பேர் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவி பஹிரா பானு சாதனை

சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.என்.பஹிரா பானு, 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம்: பஹிரா

"மாநில அளவில் முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றிக்கு என் பள்ளி ஆசிரியர்களே காரணம். அவர்கள் கடினமாக உழைத்தனர். சனி, ஞாயிறுகளில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்தினர். அவர்களது கற்பித்தல் முறையாலும், அர்ப்பணிப்பு பணியாலும்தான் இது சாத்தியமானது.

நான் இதே பள்ளியில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பேன். மருத்துவராக வேண்டும் என்பதே என் லட்சியம்" என்றார் பஹிரா பானு.

500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்த 321 பேரில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி மாணவர் எஸ்.தனசேகர் இடம் பெற்றுள்ளார்.

இதேபோல், கரூர் மாவட்டம் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி டி.சிவகார்த்திகா 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தைப் பிடித்த 125 பேரில் ஒருவர் கூட அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் இல்லை.

நன்றி: தமிழ் ஹிந்து நாளிதழ்

----------------------------------------------------------------



ஹலீமா அப்ரோஸ் 485 out of 500! 14 வயதே ஆன கண்தெரியாத மாணவி எடுத்த மதிப்பெண்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிய வேண்டும் என தன் ஆசையை தெரிவித்துள்ளார். இந்த வயதில் என்ன ஒரு சிறந்த லட்சியம் பாருங்கள். இறைவன் இவரது ஆவலை பூர்த்தி செய்வானாக!

ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?



வளி மண்டலத்தின் தோற்றம் உருவாக்கம் அதன் கால நிலை பற்றி 900 வருடங்களுக்கு முன்பு வரை மனிதனுக்கு போதிய அறிவு இல்லாமலேயே இருந்தது. பாஸ்கல் என்ற அறிவியல் அறிஞர்தான் வளிமண்டலத்தின் பல புதிர்களை அவிழ்த்தார். 1648 ஆம் ஆண்டு பாஸ்கல் தனது அறிவியல் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்தார். இவரது ஆய்வானது கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் காற்றின் அழுத்தமானது குறைந்து கொண்டே வரும் என்று தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். வளி மண்டல அளவு என்பது எண்ணிக்கையில் வராததும் நம்மால் சென்று விட முடியாத தூரமுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது சூரிய குடும்பம் மட்டும் அல்லாது இது போன்ற எண்ணற்ற கேலக்சிகள் வளி மண்டலத்தில் பயணித்த வண்ணமே உள்ளன. அவற்றை எல்லாம் சென்று அடைந்து விடக் கூடிய கண்டுபிடிப்புகளை மனிதன் இதுவரை உருவாக்கவில்லை. இனி வருங்காலத்தில் சாத்தியப்படலாம்.

ஒரு விண்வெளி வீரன் கடல் மட்டத்திலிருந்து 15000 அடியிலிருந்து 25000 அடி வரை செல்வதாக வைத்துக் கொள்வோம். அவனது இந்த பயணத்தில் சுவாசத்தைப் பொறுத்தவரையில் எந்த சிக்கலுக்கும் உள்ளாக மாட்டான். ஏனெனில் அவனுக்கு தேவையான ஆக்சிஜன் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தாராளமாக கிடைத்து விடுகிறது. ஆனால் அவன் 25000 அடிகளுக்கு மேலே சென்றான் என்றால் வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைபாட்டால் அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்சிஜன் குறைவானாதால் அவனது இதயம் இறுக்கமாக ஆரம்பிக்கிறது. சுவாச அமைப்பு சுத்தமாக சீர்குலைந்து அந்த விண்வெளி வீரனை இறப்பு வரை கொண்டு சென்று விடுகிறது. எனவேதான் விண்வெளி பயணம் மேற் கொள்ளும் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு பின்னால் கட்டிச் செல்கின்றனர்.

இது போன்று வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும் அங்கு ஆக்சிஜன் குறைவாவதால் மனிதனின் இதயம் சுருங்கி இறப்பு வரை கொண்டு சென்று விடும் என்ற உண்மையையும் கடந்த 500 வருடங்களாகத்தான் அறிந்து வருகிறோம். குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம் என்ற இரு வேறு நிலைகள் வளிமண்டலத்தில் உள்ளதே விஞ்ஞானிகளுக்கு இதே கால கட்டத்தில்தான் தெரிய வருகிறது. 30000 அடிகளுக்கு மேல் மனிதன் வளி மண்டலத்தில் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்களோடு செல்ல வேண்டும். இல்லை என்றால் இறந்து விடுவான் என்பது தற்போது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்.

இன்றும் கூட பலர் விண்வெளி பயணம் என்பது சுத்த கட்டுக் கதை: நமது பூமி தட்டையானது: உருண்டையானது அல்ல: என்று வாதிடுபவர்களை பார்க்கிறோம். மனிதன் விண்வெளி பயணம் மேற் கொள்வான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று நமக்கு இது அரிச்சுவடி பாடம். இனி குர்ஆனின வசனத்துக்கு வருவோம்.

'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'

-குர்ஆன் 6:125

எவ்வளவு அழகிய அறிவியல் முன்னறிவிப்பை மிக அலட்சியமாக சொல்லிச் செல்கிறது இந்த குர்ஆன் வசனம்! அன்றைய மக்களுக்கு இதயம் இறுக்கமாவதையும், மனிதன் விண்வெளியில் பயணிப்பான் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அது எப்படிப்பட்ட அனுபவம் என்பதும் அன்றைய மனிதர்களுக்கு தெரியாது. இன்றும் கூட விண்வெளி வீரர்களைத் தவிர மற்றவர்கள் அந்த அனுபவத்தை அறிய முடியாது. குர்ஆனை வாசிக்கும் இன்று நமக்கு அந்த இதயம் எந்த நிலையை அடையும் என்பதை விண்வெளி வீரர்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். பிற்கால அறிவியல் வளர்ச்சி பெற்ற நம்மைப் போன்ற மக்கள் இது இறை வேதம்தான் என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இது போன்ற வசனங்களை ஆங்காங்கே இறைவன் நமக்கு தந்திருக்கிறான். இது இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் நமக்கு சான்று பகன்று கொண்டிருக்கிறது.



Friday, May 23, 2014

கோச்சடையான் - சிரித்து வயிறு வலி வந்து விட்டது :-)


மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராக மாறியதற்கு பின்னால்......

தமிழச்சிக்கு....

//இந்திய இஸ்லாமியர்களிடம் 'சாதி' இருக்கிறது. இந்திய கிறிஸ்தவர்களிடம் 'சாதி' இருக்கிறது. இந்தியாவில் மனிதர்கள் 'மதம்' மாறி இருக்கலாம். ஆனால் 'சாதி'யை மறப்பதில்லை...//



(ஹிந்தி பேசும் மாநிலங்கள் பலவற்றில் தலித்களின் இன்றைய குடியிருப்பு நிலை...)

படிப்பறிவில்லாத இஸ்லாமிய மார்க்கத்தை விளங்காத ஒன்றிரண்டு முஸ்லிம்களிடம் பழைய இந்து மதத்தின் சாதிப் பற்று இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் 95 சதமான முஸ்லிம்களிடம் சாதி பாகுபாடு கிடையாது. இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ்தான் வருகின்றனர்.

மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.

'இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக'

மீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.

'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'

'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.

'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'

'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'

'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'

'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'
நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.

'அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்ட பெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள் வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீக முஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

'உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே! அவர்கள் ஏன் மாறவில்லை'

'அதற்கு நாங்கதான் காரணம் என்று சொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப் பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்'

சில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:

'மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல...அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் 'வாடா முருகேஷா' என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். 'வா முருகேஷா' என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது."

தேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.

'நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்'

மற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்

'முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா?'

'இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.

எங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் இஸ்லாமியராக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.

நன்றி பிபிசி தமிழோசை.

இதில் முஸலிம்களுக்கு ஒரு பாடம் உள்ளது. வரதட்சணை என்ற ஒரு பெரும் கேட்டை மற்ற மதத்தவரிடமிருந்து கடன் வாங்கியதால் இன்று அந்த மக்களின் இஸ்லாமிய பெண்கள் திருமணம் முடிப்பதில் சிரமம் உள்ளதை காண்கிறோம். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு இது ஒரு முட்டுக் கட்டையாக உள்ளதைப் பார்க்கிறோம். அதே போல் புதிதாக இணைந்த அந்த மக்களை அன்போடு அரவணைக்க வேண்டியது நமது கடமை. திருமண உறவுகளையும் அவர்களோடு வைத்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்னால் நமது முன்னோர்களும் ஒரு ராமசாமியாகவோ ஒரு கந்தசாமியாகவோத்தான் இருந்திருப்பார்கள். எனவே நாங்கள் பூர்வீக முஸ்லிம்கள் என்று வெற்று பெருமை பேசிக் கொண்டு இஸ்லாத்தையும் விளங்காமல் காலத்தை ஓட்டாமல் அந்த மக்களை நம்மோடு மேலும் இணைக்க இஸ்லாமியர்கள் முயற்சிக்க வேண்டும்.

வாஜ்பாய் போன்றோர் அந்த மக்களுக்கு ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இந்திய அரசின் விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் மக்கள். மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாக எடுத்து மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. இந்த அளவு தங்கள் முடிவில் உறுதியாக இருந்த அந்த மக்களை நாம் இன்னும் அதிகமதிகம் அன்பு காட்டி அவர்களின் காயங்களை போக்க முயற்சிக்க வேண்டும்.

குடும்பத்தோடு அந்த ஊர்களுக்கு சென்று அந்த மக்களோடு அன்யோன்யமாக பழக வேண்டும். அந்த மக்களையும் நம் ஊர்களுக்கு விருந்தினர்களாக வரவழைத்து நமது அன்பைக் காட்ட வேண்டும். செல்வந்தர்கள் அந்த மக்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்று அந்த சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைய வேண்டும். திருமணம் ஆகாமல் உள்ள அந்த இஸ்லாமிய புதிய சகோதரிகளை நமது சொந்தங்களாக ஆக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு இஸ்லாமிய செல்வந்தர்கள் கணக்கின்றி உதவி புரிய வேண்டும். நம் நாட்டில் உள்ள தீராத தலைவலியான தீண்டாமைக் கொடுமை அறவே ஒழிய வேண்டுமானால் இந்த மாற்றங்களை எல்லாம் முஸ்லிம்கள் தங்களின் கடமையாக நினைத்து செய்ல்பட வேண்டும். நமது நாட்டில் தீண்டாமை ஒழிவதற்கு வேறு மார்க்கமும் இல்லை.


பிபிசி யிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள

http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/tnmuslims/tnmuslims_20121106-1746a.mp3

---------------------------------------------

பல வருடங்களுக்கு முன்பு மதம் மாறிய ஒருவர் அன்று கொடுத்த பேட்டி:

ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.

Thursday, May 22, 2014

பறவைகளுக்கும் வண்டுகளுக்கும் வழியை அறிவிப்பது யார்?



'பூமியில் வாழும் உயிரினங்கள் தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!'
-குர்ஆன் 6;38


இந்த வசனத்தின் மூலம் உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் மனிதனைப் போலவே ஒரு சமுதாயமாக வாழ்கின்றன. ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சிக் கூட தனது இனம் எது? தான் யாரோடு உறவு கொள்ள வேண்டும்? தனது குழந்தை யார்? என்று பகுத்தறிந்து ஒரு சமுதாயமாகவே வாழ்கின்றது.

நிலத்தில் வாழும் உயிரினமாகட்டும்: நீரில் வாழும் உயிரினமாகட்டும்: வானத்தில் பறந்து திரியும் பறவைகளாகட்டும்: அனைத்தும் ஒவ்வொரு சமுதாயமாக வாழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

அடுத்து ஒரு குர்ஆனின் வசனத்தை ஆராய்வோம்....

'தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகிற சமுதாயத்துக்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்'
-குர்ஆன் 6:97

இந்த வசனத்தின்படி தரையிலும் வானத்தில் பறந்தும் திரிகிற உயிரினங்களுக்கு வழிகளை அறிந்து கொள்வதற்காகவே நட்சத்திரங்களை படைத்துள்ளதாக இறைவன் கூறுகிறான். கண்டம் விட்டு கண்டம் செல்லும் பல பறவைகள் சரியாக புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவதை நாம் ஆச்சரியத்தோடு பார்த்திருப்போம். இவை எப்படி வந்து தனது இருப்பிடத்தை சரியாக அடைகின்றன என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? இறைவன் படைத்து வைத்துள்ள நட்சத்திரங்களே இந்த பறவைகளுக்கு வழி காட்டுகின்றன. படகுகளில், கடலில் செல்லும் மனிதனுக்கும் நட்சத்திரங்களே வழிகாட்டிகளாக இருக்கின்றன.

'ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழிகாட்டியவனே எங்கள் இறைவன்' என்று அவர் கூறினார்.
-குர்ஆன் 20:50


உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி அது இன்ன காரியம் செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் அதற்கு தந்துள்ளான் இறைவன். அதன்படி நட்சத்திரமானது உலக உயிரினங்கள் அனைத்துக்கும் வழி காட்டியாக இன்று வரை செயல்பட்டுக் கொண்டுள்ளது. வானத்தில் இத்தனை நட்சத்திரங்கள் ஏன் என்று பலமுறை நாமே கேட்டிருப்போம். எந்த ஒன்றையும் வீணுக்காக படைக்கவில்லை என்று இறைவன் சொன்னது எந்த அளவு உறுதியாகிறது பார்த்தீர்களா?

'வானத்தையும் பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை'
-குர்ஆன் 21:16


இனி பிபிசியில் வந்த ஒரு கட்டுரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்:

'மண் உருண்டைகளை உருட்டிச் செல்லும் பல வண்டுகளை நாம் பார்த்திருப்போம். அவ்வாறு உருட்டிச் செல்லும் போது அந்த வண்டுகளின் கண்கள் சாய்ந்து அதன் பார்வை நட்சத்திரங்களை நோக்கி இருந்ததை கண்ணுற்று ஆச்சரியப்பட்டேன். உருட்டிச் செல்லப்படும் அந்த மண் உருண்டையானது எந்த திசையில் சென்றாலும் அந்த வண்டின் கண் பார்வை மட்டும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை நோக்கியே நகர்கிறது. அந்த நட்சத்திரத்தை இலக்காக வைத்து அந்த வண்டானது தனது இருப்பிடத்தை மிக இலகுவாக அறிந்து கொள்கிறது. இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் கூட தங்களின் பாதையை அறிந்து கொள்ள அவை நட்சத்திரங்களின் உதவியையே நாடுகின்றன. மனிதனும், பறவையினங்களும் வழி அறிவதற்கு நட்சந்திரங்களின் உதவியை நாடுவதை நாம் அறிந்திருப்போம். ஆனால் வண்டுகளும் கூட வழி அறிவதற்கு அதே நட்சத்திரங்களையே தங்கள் வழிகாட்டிகளாக கொள்கின்றன என்பது தற்போதய கண்டுபிடிப்பாகும்.' என்று ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் டேக்கி பிபிசியிடம் தெரிவித்தார். அதற்கான ஆய்வு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்.

Scientists have shown how the insects will use the Milky Way to orientate themselves as they roll their balls of muck along the ground.

Humans, birds and seals are all known to navigate by the stars. But this could be the first example of an insect doing so.

The study by Marie Dacke is reported in the journal Current Biology.
"The dung beetles are not necessarily rolling with the Milky Way or 90 degrees to it; they can go at any angle to this band of light in the sky. They use it as a reference," the Lund University, Sweden, researcher told BBC News.
"I think night-flying moths and night-flying locusts could benefit from using a star compass similar to the one that the dung beetles are using," she said.

http://www.bbc.com/news/science-environment-21150721

பிபிசிக்கு அளிக்கப்பட்ட மேற்கண்ட ஆய்வின் முடிவானது மனிதனும், பறவையினமும், கடல் வாழ் உயிரினங்களும், நிலத்தில் வாழும் உயிரினங்களும் தங்களின் வழியை பகலிலும் இரவிலும் அறிந்து கொள்ள நட்சத்திரங்களின் உதவியையே நாடுகின்றன என்று கூறுகிறது.

இது போன்ற எந்த ஆய்வும் இல்லாமல் அறிவியல் உண்மைகளை எந்த சலனமும் இல்லாமல் மிக அலட்சியமாக குர்ஆனானது சொல்லிச் செல்கிறது. குர்ஆனை ஆய்வு செய்ய புகுந்தால் ஒவ்வொரு நாளும் புதுப்புது உண்மைகளாக மனிதகுலத்துக்கு பல உண்மைகளை தந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த குர்ஆனை ஆய்வு செய்ய ஏனோ பல மனித மனங்கள் மறுத்து வருகின்றன.

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'

-குர்ஆன் 4 : 82

'அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுளளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப் படுத்துகிறது.

-குர்ஆன் 17 : 41


மெக்காவைப் பார்க்கும் ஆவலில் கண்ணீர் சிந்திய டி.ராஜேந்தர்!



சுவனப்பிரியனான நான் ஒரு இஸ்லாமிய தாய் தந்தைக்கு மகனாக பிறந்ததனால் இந்த இஸ்லாமிய மார்க்கமானது மிக இலகுவாக கிடைத்து விட்டது. ஆனால் உலகில் கோடான கோடி மக்கள் 'இந்த மார்க்கம் சிறந்தது: உண்மையானது: பழைய வேதங்களையும் ஒத்துக் கொள்கிறது: உலக மொழிகள் அனைத்தையும் நேசிக்கிறது: உலக மக்கள் அனைவரையும் ஒரு தாய் மக்கள் என்று அன்போடு அரவணைக்கிறது: ஆண்டியும் அரசனும் இறைவனைத் தொழும்போது அருகருகே நிற்க வைத்து இறைவனுக்கு முன்னால் அனைவரும் சமம் என்பதை பறைசாற்றுகிறது: இதை எல்லாம் உணர்ந்த நான் இஸ்லாமியனாக மாற துடிக்கிறேன். ஆனால் நான் மட்டும் இஸ்லாத்தை ஏற்றால் எனது குடும்ப வாழ்வு சிதறும்: அக்கம் பக்கத்தோரால் சீண்டப்படுவேன்: பல சவால்களை சமாளிக்க வேண்டி வரும்:அரசின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி வரும்:' என்று மனதளவில் புழுங்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகத்தான் டி.ராஜேந்தருக்கும் இன்று இஸ்லாமிய மார்க்கத்தின் பால் பற்று வந்துள்ளது. ஜெத்தா வரை சென்று மெக்காவை பார்க்க முடியவில்லையே என்று சொல்லும் போது அவர் கண் கலங்குகிறார். சன்டிவி 'சூப்பர் குடும்பம்' நிகழ்ச்சியிலும் இதே கருத்தை பிரதிபலித்தார். இவர் போன்று மன வலியுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பல கோடி மாற்று மத அன்பர்களின் வாழ்வில் அமைதியை கொண்டு வர அந்த ஏக இறைவனிடம் பிரார்த்திப்போமாக! அதற்கேற்ற சூழல் அவர்கள் குடும்பத்தில் ஏற்படட்டுமாக என்றும் பிரார்த்திக்கிறேன்.

அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்ப­ல் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, சிரம் பணிந்து விழுவார்கள்.
அல்குர்ஆன் 19 : 58


ஆம்.... குர்ஆனின் வசனங்களுக்கு அத்தகைய ஆற்றல் இருக்கிறது. இஸ்லாத்தை ஏற்கும் பல சகோதர சகோதரிகள் தாங்கள் உறுதி மொழி எடுத்து குர்ஆன் வசனத்தை ஓதும் போது தங்களையும் அறியாமல் கண்ணீர் விடுவதை நாம் காணொளிகள் பலவற்றில் பார்த்துள்ளோம். அதுதான் தற்போது டி.ராஜேந்தருக்கும் நிகழந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=kQUMNUkbapQ

Wednesday, May 21, 2014

பசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்!



திரு அரிசோனன்!

//நீங்களாகவே பசுவதை வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள், ஒவ்வொரு இந்துவும் உங்களை உயர்வாகப் போற்றுவான்.//

எங்கள் வீடுகளில் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆடு, கோழி, மீன் போன்றவைகளே சமைக்கப்படுகின்றன. மாட்டுக் கறியை சமைப்பதை பலரும் தவிர்த்தே வந்துள்ளனர். எங்கள் வீடுகளில் 'மாட்டுக் கறி' என்று சொல்வதற்கு பதில் 'பெரிய ஆட்டுக் கறி' என்று அதனை மறைமுகமாக சொல்வார்கள். இந்துக்கள் மனம் புண்படக் கூடாது என்பதனால்தான் இந்த சொற்பிரயோகம். எங்கள் ஊரில் கறி மார்க்கெட்டில் ஆட்டுக் கறி மட்டுமே கிடைக்கும். மாட்டுக் கறி வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமத்தை யொட்டிய மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் மாட்டுக் கறியை அவர்கள் தான் விரும்பி சாப்பிடுகின்றனர். விலையும் மலிவு. மேலும் பசு மாடும், அதன் சாணமும், அதன் மூத்திமும் பார்பனர்களாகிய உங்களுக்குத்தான் புனிதம். 60 சதவீதத்துக்கு மேல் இருக்கும் இந்து பிறபடுத்தப்ட்ட மக்களுக்கோ, இஸ்லாமிய மற்றும் கிறித்தவர்களுக்கோ அது புனிதம் அல்ல. மற்ற உயிர்களைப் போல அதுவும் ஒரு உயிர். நான் புனிதமாக வணங்குகிறேன். எனவே அதற்கு புனிதத்தை நீயும் கொடு என்று இந்துத்வாவாதிகள் மிரட்டுவது சுத்த தாலிபானித்துவம் இல்லையா?

உங்கள் பார்வையில் மாடு மட்டும் தான் புனிதமா? ஆடு, மீன், கோழி போன்ற மற்ற ஜீவன்கள் அதிலும் குறிப்பாக நமது சகோதரர்களான தலித் மக்கள் என்று உலகில் பல கோடி ஜீவராசிகள் உண்டு. அவர்களிடம் இதே உங்களின் கருணையை எப்போது காட்டப் போகிறீர்கள். அந்த மக்களை அக்ரஹாரத்துக்குள் எப்போது அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் கோவில்களுக்கும் அந்த மக்களை வழிபடும் உரிமையை எப்போது பெற்றுத் தரப் பொகிறீர்கள்?

அடுத்து மாடு பாலும் தரவில்லை. இனி கன்றும் ஈனாது. கிழடாகி விட்டது. இந்த நேரத்தில் அதனை பராமரிக்கும் ஒரு ஏழை என்ன செய்வான். அது தானாக இறக்கும் வரை அதற்கு தீனி போட ஒரு ஏழை விவசாயியால் முடியுமா? எனவே அதனை கசாப்பு காரனிடம் விற்று விட்டு மேற்கொண்டு பணம் போட்டு புதிய மாட்டை வாங்குகிறான். இதைத் தவிர வேறு வழியும் அவனுக்கு இல்லை இவ்வாறு விற்பதை தடை செய்ய வேண்டு மென்றால் அந்த அடி மாடுகளுக்கான தீர்வை சொல்லுங்கள்.

//ஏசு கிறிஸ்து, “Give unto Romans what is due unto them!” என்றுதான் சொல்லி இருப்பதாக விவிலிய நூல் கூறுகிறது. மேலும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியதாக்கவும்தான் நான் படித்திருக்கிறேன்.//

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
ஆதாரநூல்: அஹ்மத்

இந்த நபி மொழியானது இனத்தின் பெயரால், குலத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தான் சார்ந்திருக்கும் நாட்டையும் சமூகத்தையும் நேசிக்கச் சொல்கிறது. அநீதிக்கு துணை போனால் அதுதான் இனவெறி என்பதை விளங்குகிறோம். எனவே எந்த முஸ்லிமாவது தனது தாய் நாட்டுக்கு துரோகம் இழைத்தால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாகிறான்.

“இறைவனை பயந்து கொள்ளுங்கள்! உங்களுடைய தலைவருக்கு கட்டுப்படுங்கள்! அவர் அபிஷீனிய அடிமையாக இருப்பினும் சரியே!”
அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).

ஆப்ரிக்க அடிமை உங்களின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரின் கட்டளைக்கு கீழ்படியுங்கள் என்பது முகமது நபியின் அறிவுரை. இதன்படி ஆட்சித் தலைவராக மோடி இருந்தாலும், ஜெயலலிதா இருந்தாலும் அந்த தலைமைக்கு கட்டுப்பட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. ஒரு ஆட்சியாளன் தனது கடமையிலிருந்து தவறினால்தான் அதனை எதிர்க்க இஸ்லாம் சொல்கிறது. எனவே ஒரு உண்மையான முஸ்லிம் தாய் நாட்டையும், இந்த மக்களையும், ஆட்சியாளர்களையும் மதிக்கவே செய்வான்.

விடுதலை செய்யும் போது தமிழர்கள்



பிடிக்கும் போது இஸ்லாமிய
தீவிரவாதிகள் விடுதலை
செய்யும் போது தமிழர்கள்
விபச்சார ஊடகத் செய்தி

நமது சட்டம் இருக்க இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும்?

திரு சார் மார்!

//1. ஏன் இறைவன் தண்டிக்கவேண்டும்? மனிதனே செய்கின்றானே? ஃப்ளாஷ்ஃபமி லா போட்டு குரானை மறுத்தோரை இசுலாமிய நாடுகள் கொல்கின்றன. இல்லையா? இறைவனா கொல்கின்றான் அந்நாடுகளில்?
2. மற்ற குற்றங்களை நம் நாடு தண்டிக்கிற்தே! மரண தண்டனைகள் கொடுக்கப்படுகின்றனவே?//

குற்றவாளிகளுக்கு நமது நாடு கொடுக்கும் தண்டனைகள் உண்மையான தண்டனைகளே அல்ல. உதாரணத்துக்கு நமது நரேந்திர மோடியை எடுத்துக் கொள்வோம். அவரது ஆட்சியில் குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் 2000க்கு மேல் கத்தியால் குத்தியும், எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள். ஒரு நபரே 10லிருந்து 20 பேர் வரை கொன்றிருக்கிறார்கள். தற்போது சிறையிலும் அடைபட்டிருக்கிறார்கள். தீர்ப்புகள் வந்து அந்த கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு முறைதான் அவருடைய உயிரை எடுக்க முடியும். ஆனால் அந்த கொலையாளி கொன்றதோ 20 உயிர்களுக்கு மேல். 20 உயிர்களை கொன்றவனை ஒரு முறை தூக்கில் ஏற்றினால் அது சரியான தண்டனையாகுமா? எனவே அவனுடைய இறப்புக்குப் பிறகு அவன் கொன்ற 20 உயிர்களுக்கும் இறைவன் முன்னிலையில் உலக மக்கள் முன்னிலையில் பழி வாங்கப்படும். 20 உயிர்களின் வலியையும் அன்று அவன் உணருவான், தோல்கள் புதுப்பிக்கப்படும்: மீண்டும் உயிரும் கொடுக்கப்படும் அவனது தண்டனையை நிறைவேற்றுவதற்காக. அதுதான் நியாயமும் கூட...

//3. இறைவனின் வழிகாட்டுதல் என்றால் ஒரே ஒரு இறைவனா? பல மதங்கள் பல இறைவனைக்காட்டும்போது ஒரே ஒரு இறைவனாக அல்லாவை மட்டுமே என்பது எப்படி பல மத நாட்டில் சாத்தியாகும்? அங்கு எங்கே போயிற்ற் தோலை எரிக்கும் தணடனை? சாத்தியமா?

ஆக சுவனப்பிரியன், உலகமுழுவதும் இசுலாம் மட்டுமே இருப்பின் மட்டும் இந்த வசனம் சரி//


இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'

குர்ஆன் 17 :110

ஆக உலகம் முழுவதையும் படைத்து பரிபாலிப்பவன் ஒருவனே! அனைத்து மதங்களும் இதைத்தான் போதிக்கின்றன. ஆனால் மனிதன்தான் தனது சுய லாபத்துக்காக வேதங்களை திருத்தி தனக்கு தோதானதாக மாற்றிக் கொள்கிறான். பல வேதங்கள் மனிதக் கரங்களால் மாற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

'வாசுதேவக குடும்பம்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற நமது முன்னோர்களின் அறிவுரைகளை ஆராய்ந்து பாருங்கள்..... சுவனப்பிரியனின் வழியில் வந்து நிற்பீர்கள்.

Tuesday, May 20, 2014

தமிழச்சிக்கு குர்ஆன் வசனத்தையொட்டிய ஒரு விளக்கம்.

//குரான் வாசிக்கும் போது எனக்குள் தோன்றும் முரண்களை பற்றி பேஸ்புக்கில் விவாதத்தில் வைப்பதுண்டு. ஆனால் முரண்பாடுகள் குறித்து எப்போதுமே சரியான நகர்வை நோக்கியதாக இருக்காது. பன்முனை தாக்குதல்கள், வேற்று மத சாடல்களுக்கு இடையே சில இஸ்லாமியர்கள் மிகப் பொறுமையாக விவாதத்திற்கு மறுப்பு கருத்தாக தாங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதையே பார்த்து சலித்து போயிருக்கிறேன்.

இன்றும் குரான் வாசித்தபோது சில கருத்துக்கள் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கான பதில் சமாளிப்பு... சமாளிப்பு... சமாளிப்பு. தாங்கள் சொல்வதையே திரும்ப திரும்ப சொல்வது... இருப்பினும் விவாதத்தின் பொருட்டு அதிருப்தி கொண்ட கருத்தினை பதிவிடுகிறேன்.

குரான் வாசகத்தை மறுப்போரை அல்லா இவ்வாறு தண்டிக்கிறாராம்.

"4:56 நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனும் , ஙான மிக்கவனாகவும் இருக்கிறான். . ."
- தமிழச்சி
20/05/2014//


தமிழச்சி! நீங்கள் குர்ஆனை ஆய்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள், மனிதனின் தோலில் தான் உள்ளன, என்பது மிகச் சமீபத்திய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பதுதான் இந்த வசனம் சொல்ல வரும் மறைமுக கருத்து. . இதனால் தான் அறுவை சிகிச்சைகளில் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு அறுவை சிகிச்சை செய்கின்றனர். அந்த ஊசி மூலம் முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் இறந்து விடுவான். அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம் என்று மட்டும் கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று இறைவன் கூறுகிறான். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஞ்ஞான உண்மையைக் குர்ஆன் கூறுகிறது. நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம். (4:56)

இது இறைவனின் வார்த்தைதான் முகமது நபியின் சொந்த வார்த்தைகள் அல்ல என்பதற்கு இந்த வசனமும் ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது.

//1000 வருடங்களுக்கு மேற்பட்ட சித்த வைத்தியத்தில் சித்தர்கள் நரம்பியல் குறித்து விரிவாக பேசி இருக்கிறார்கள். கடவுளால் மட்டும்தான் மனிதனின் உடல்கூறுகள் குறித்து பேச முடியும் என்பதை சித்த வைத்தியத்தில் ஏற்கவில்லை. பல சித்தர்கள் அந்த காலங்களிலேயே பகுத்தறிந்து இருக்கிறார்கள் உளவியல் உட்பட...//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4

இந்த வசனத்தின் மூலம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நமது தமிழ் மொழிக்கும் தூதர்களும், வேதங்களும் இறைவனால் தரப்பட்டுள்ளன. அது திருக்குறளாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்மால் உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த வேதங்களிலும் இதே போன்ற வசனங்கள் வந்திருக்கலாம். அதன் அடிப்படையில் நமது சித்தர்கள் தங்கள் அறிவை உபயோகித்து பல உண்மைகளை அந்த காலத்திலேயே அறிந்திருக்கலாம்.

ஆனால் குர்ஆன் இதை மட்டும் பேசவில்லை. வானங்களின் கோள்களை பற்றியும் சூரியனின் நகர்வு பற்றியும், குழந்தை ஜனிப்பதை பற்றியும், பெரு வெடிப்புக் கொள்கையைப் பற்றியும் இன்றைய அறிவியலோடு எந்த முரணும் இல்லாது தனது வசனங்களைச் சொல்லிச் செல்கிறது.

இந்த குர்ஆன் வசனங்களின் சட்டங்களை நம் ஊர் உசிலம்பட்டியை சேர்ந்த கிராமத்தானும், ஃபிரான்ஸ், கனடா, அமெரிக்கா போன்ற நவ நாகரிக உலகில் வாழும் மனிதனும் ஒரு வரியைக் கூட ஒதுக்கித் தள்ளாமல் பின் பற்றி வாழ முடிகிறது. இந்த வசனம் இந்த காலத்துக்கு பொருந்தாது என்று எந்த வசனத்தையும் உங்களால் காட்ட முடியாது. இத்தனை தகவல்களையும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த படிப்பறிவில்லாத சமூகத்தில் வாழ்ந்த தனது தாய் மொழியை எழுதவும் படிக்கவும் தெரியாத முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது? என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன


//மனிதனின் உடல் முழுவதும் தோல்களால் ஆனதுதான். உரோமங்கள் வலிகளை ஏற்படுத்தவில்லை. நகங்களில் வலியில்லை. எல்லாவற்றையும் காட்டுமனிதன் உணர்ந்திருந்தான். இதில் எங்கே அடிப்பட்டாலும் அவனால் வலியை உணர முடியும். காட்டு மனிதனுக்கே இது தெரிந்திருக்கிறது. ஆடு மேய்க்கும் பன்பட்ட மனித காலத்தில் வாழ்ந்த நபிகளுக்கு இது தெ ரிவது வியப்பா? //

“அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம்.” வேதனையை உணர்வதற்காக நாம் தோல்களை மாற்றுவோம் - என்ற சொற்றொடர் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக கவனமாக கையாளப்பட்டுள்ளதை கவனியுங்கள். மேலும் நான் முன்பு சொன்னது போல் நகம் முடிகளைத் தவிர மற்றவை வேதனையை உணரக் கூடியவை என்பதை சாமான்யரும் விளங்கலாம் என்பதை ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொண்டாலும் 'சூரியன் நகர்கிறது, அது தனது சூரிய குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு இறைவன் வகுத்தளித்த அதனதன் பாதையில் பயணிக்கிறது' என்ற குர்ஆன் வசனத்தை உங்களால் எப்படி பார்க்க முடிகிறது?

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

இது போன்ற மெகா அறிவியல் உண்மைகளை முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது? இது போன்று நூற்றுக்கணக்கான அறிவியல் வசனங்களை என்னால் காட்ட முடியும்.

//நபிகள் வாழ்ந்த காலத்தில் பைத்தியக்கார மனிதன் என்று புறக்கணிக்கப்பட்ட மனிதன் அவர். இயேசுவுக்கும் இதே கதிதான். மார்க்கம் மதமாக மாற்றம் பெற்றபோது இவர்கள் கடவுளாக்கப்பட்டார்கள்//.

தவறான வாதம். முகமது நபியை எந்த முஸ்லிமும் கடவுளாக வழிபட மாட்டார். அதே போல் ஏசுவும் முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஒரு இறைத் தூதரே! ஏசு தன்னை வணங்க வேண்டும் என்று எங்குமே சொல்லவில்லை. ஏசுவை வணங்க ஆரம்பித்தது அவரது காலத்துக்குப் பிறகே. ஏசுவை வணங்க இவர்களால் பைபிளிலிருந்தும் ஆதாரத்தை காட்ட முடியாது.

//ஷரியா, ஷரத் உள்ளீட்ட எதுவும் நபிகளால் கூறப்பட்டதில்லை. மதமாக்கப்பட்ட இஸ்லாத்தின் மதவாதிகளால் திணிக்கப்பட்டது.//

குர்ஆனையும் அதற்கு விளக்கவுரையாக அமைந்த முகமது நபியின் போதனைகளையும் அடிப்படையாக வைத்து இஸ்லாமியரின் வாழ்வு முறையை தொகுத்ததற்கு பெயர்தான் ஷரியா. குர்ஆனுக்கு மாற்றமாக எந்த நாட்டிலும் ஷரியா இருந்தால் ஷரியா சட்டத்தைத்தான் மாற்றியமைக்க வேண்டுமேயொழிய குர்ஆனை மாற்றுவதற்கு உலகில் எவருக்கும் அதிகாரம் இல்லை. இன்று வரை அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

பெரியாரின் சிந்தனைகளை வாழ்வியலாக கொண்டிருக்கும் சமூக ஆர்வலரும் சிந்தனையாளருமான தமிழச்சி அந்த பெரியார் சொன்ன 'இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு' என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப தமது சிந்தனையை செலுத்துவாராக என்று அழைப்பு விடுக்கிறேன். உங்களின் மற்ற சந்தேகங்களுக்கும் நேரம் கிடைக்கும் போது பதிவுகளாக இடுகிறேன்.



This verse indicates that there is something in the skin which makes us feel pain. This is exactly what modern science tells us i.e. pain receptors are responsible for feeling pain. It was thought that the sense of feeling and pain was dependent only on the brain. Recent discoveries however prove that there are pain receptors present in the skin, without which a person would not be able to feel pain. When a doctor examines a patient suffering from burn injuries, he verifies the degree of burns by a pinprick. If the patient feels pain, the doctor is happy, because it indicates that the burns are superficial and the pain receptors are intact. On the other hand, if the patient does not feel any pain, it indicates that it is a deep burn and the pain receptors have been destroyed.

Prof. Tegatat Tejasen, Chairman of the Department of Anatomy at Chiang Mai University in Thailand, has spent a great amount of time on research of pain receptors. Initially he could not believe that the Qur'an mentioned this scientific fact 1,400 years ago. He later verified the translation of this particular Qur'anic verse. Prof. Tegatat Tejasen was so impressed by the scientific accuracy of the Quranic verse, that at the 8th Saudi Medical Conference held in Riyadh on the Scientific Signs of Qur'an and Sunnah, he proudly proclaimed in public: "There is no God but Allah and Muhammad (Peace Be upon Him) is His Messenger."

The sensation of pain results from communication between nerve cells in the brain, spinal cord, and elsewhere in the body. When a person experiences an injury, such as a stubbed toe, specialized cells called nociceptors (another name for pain receptors) sense potential tissue damage (1) and send an electric signal, called an impulse, to the spinal cord via a sensory nerve (2). A specialized region of the spinal cord known as the dorsal horn (3) processes the pain signal, immediately sending another impulse back down the leg via a motor nerve (4). This causes the muscles in the leg to contract and pull the toe away from the source of injury (6). At the same time, the dorsal horn sends another impulse up the spinal cord to the brain. During this trip, the impulse travels between nerve cells. When the impulse reaches a nerve ending (7), the nerve releases chemical messengers, called neurotransmitters, which carry the message to the adjacent nerve. When the impulse reaches the brain (8), it is analyzed and processed as an unpleasant physical and emotional sensation.

The Ayat under discussion mentions the burning of the skin. The severity of a burn depends on its depth, its extent, and the age of the victim. Burns are classified by depth as first, second, and third degree. First-degree burns cause redness and pain (e.g., sunburn). Second-degree burns are marked by blisters (e.g., scald by hot liquid). In third-degree burns, both the epidermis and dermis (external and internal parts of the skin) are destroyed, and underlying tissue may also be damaged. Further burn in the skin would damage the pain receptors and hence the person would not feel pain.

Word Analysis:
Quran rightly mentions this 'extreme' stage for the change of skin. The Arabic word used is نضجت which indicates the burning to the extreme stage. Ibn e Faris says that its basic meaning includes burning something to the last stage.

Hence, not only the Quran told humans that sensation is due to the pain receptors of the skin, Quran also describes accurately the type of burn that kills the pain receptors.





காந்தியின் பேரன் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம்!



பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடி அவர்களுக்கு வணக்கம்! உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நான் மிகவும் உளப்பூர்வமாகத்தான் சொல்கிறேன்; இப்படிச் சொல்வது ஒன்றும் எனக்கு அவ்வளவு எளிதான செயலல்ல. ஏனெனில், நீங்கள் இப்போது அடைந்திருக்கும் உச்சபட்ச பதவியில் உங்களைக் காண விரும்பியவர்களில் ஒருவனல்ல நான். நீங்கள் பிரதமராகியிருப்பதுகுறித்துக் கோடிக் கணக்கானோர் பரவசத்துடன் இருக்கும் அதே வேளையில், இன்னும் கோடிக் கணக்கானோர் இதே காரணத்துக்காக வருத்தமுற்றிருக்கக் கூடும் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி போன்றவர் களும், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலகட்டத்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்துக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயும், பிறகு உங்கள் அரசியல் குரு வாஜ்பாயும் உட்கார்ந்த நாற்காலிக்கு இதோ நீங்களும் வந்துவிட்டீர்கள். உங்களை இந்த இடத்தில் பார்க்க விரும்பாதவர்கள் நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த கவுரவத்தை நீங்கள் பெறுவதுகுறித்து எனக்குப் பெருமளவில் ஐயப்பாடுகள் இருந்தாலும்கூட, உங்களைப் போல் பின்தங்கிய சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வரும் ஒருவர் பிரதமர் ஆவதை நான் பெரிதும் மதிக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியமான சமத்துவம் என்பதை இது பரிபூரணமாக நிறைவுசெய்கிறது.

தேசம் என்னும் கருத்தாக்கம்

‘டீ விற்றவர்' என்று மூர்க்கமாகவும் கேலியாகவும் உங்களைப் பற்றிச் சிலர் பேசியபோது எனக்குக் குமட்டிக் கொண்டுவந்தது. பிழைப்புக்காக டீ விற்ற ஒருவர் இந்திய அரசுக்குத் தலைமை தாங்க வருவது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒருவருக்குக் கூஜா தூக்குவதைவிடப் பலருக் கும் டீ கூஜாவைத் தூக்கிச்செல்வது என்பது மேல் அல்லவா.

இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பது கோடிக் கணக்கான இந்தியர்களை ஏன் சங்கடப்படுத்துகிறது என்பது குறித்து நான் பேசியாக வேண்டும். 2014 தேர்தலில் வாக்காளர்கள் மோடிக்காகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ வாக்களித்திருக்கிறார்கள் என்பது வேறு யாரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேசத்தின் சிறந்த பாதுகாவலன், உண்மையில் அதன் ரட்சகன் என்று சொல்லி 31% மக்களை நீங்கள் கவர்ந்ததன் மூலம், பா.ஜ.க. இவ்வளவு இடங்களை வென்றிருக்கிறது. அதே நேரத்தில் 69% மக்கள் உங்களை அவர்களின் பாதுகாவலராகக் கருதவில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்த தேசம் என்பது உண்மையில் என்ன என்பதில் உங்களுக்கு உள்ள கருத்துடன் மாறுபடும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசம் என்கிற இந்தக் கருத்தாக்கம் குறித்துப் பேசும்போதுதான் இந்திய அரசியலமைப்பு, அதாவது நீங்கள் பிரதமர் பதவியில் அமர்வதற்குக் காரணமான அந்த அதிகாரம், முக்கியத்துவம் பெறுகிறது திரு மோடி அவர்களே. இந்த நேரத்தில்தான் தேசம் என்னும் கருத்தாக்கத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டுதல்

ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் பற்றிப் பேசும் போதெல்லாம் சர்தார் வல்லபபாய் படேல் பெயரையும் அவருடைய ஆளுமையையும் துணைக்கு அழைக்கிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசமைப்புச் சட்டக் குழுவுக்கு சர்தார் தலைமையேற்றிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்வி, கலாச்சாரம், மதம் போன்றவை தொடர்பாகச் சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் முக்கியமான உத்தரவாதங்களைத் தருகிறது என்றால், அதற்கு சர்தாருக்கும் அந்தக் குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். சிறுபான்மையினர் தொடர்பாக அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்கும் லட்சியத்தை உங்கள் நோக்கத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்கவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் திரு மோடி அவர்களே.

அளவுக்கு அதிகமாகவும் வெளியில் சொல்ல முடியாத வகையிலும் பலரிடத்திலும் பயம் இருக்கிறது, என்ன காரணம்?

ஏனென்றால், நீங்கள் பேரணிகளில் உரையாற்றும்போது, இந்தியக் குடிமக்கள் என்ற கருத்தாக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ஜனநாயகவாதியின் குரலைத்தான் அவர்கள் கேட்க விரும்புகிறார்களே தவிர, கட்டளைகளைப் பிறப்பிக்கும் ஒரு சக்ரவர்த்தியின் குரலை அல்ல. நீங்கள் செய்ய வேண்டியது சிறுபான்மை மக்களின் அச்சத்தைக் களைவதுதானே தவிர, ஏதோ அவர்களுக்குப் பரிபாலனம் செய்வதுபோல் நடந்துகொள்வதல்ல. ‘பாதுகாப்பு' என்பதற்கு வளர்ச்சி என்பது எந்த வகையிலும் மாற்றாகாது. ‘ஒரு கையில் குர்ஆன், மறு கையில் மடிக்கணினி’ என்ற ரீதியில் நீங்கள் பேசினீர்கள். அந்தப் படிமம் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டுவதாக அமையாது. ஏனெனில், வேறொரு படிமம் அவர்களை அச்சுறுத்துகிறது: இந்து என்ற தோற்றத்துக்குள் ஒளிந்துகொண்டு ஒருவர் இந்துப் புராணமொன்றின் டி.வி.டி-யை ஒரு கையிலும் அச்சுறுத்தும் வகையில் திரிசூலத்தை மற்றொரு கையிலும் வைத்திருக்கும் படிமம்.

உப்பு தடவிய பிரம்பு

முன்பெல்லாம், பள்ளிக்கூடங்களில் உப்பு தடவிய பிரம்பை வகுப்பறைக்கு வெளியே தலைமையாசிரியர்கள் வைத்திருப்பது உண்டு. பார்த்தாலே பயம் வரும்; தப்பு செய்தால் தலைமையாசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார் என்பதை நினைவூட்டும் விதத்தில் அந்தப் பிரம்பு வைக்கப்பட்டிருக்கும். முசாபர்நகரில் 42 முஸ்லிம்கள் 20 இந்துக்கள் இறப்பதற்கும் 50,000 பேர் வீடுவாசலை இழந்து அகதிகளானதற்கும் காரணமான கலவரங்களைப் பற்றிய மிகச் சமீப காலத்திய நினைவுகள்தான் அந்தப் பிரம்புகள். “ஜாக்கிரதை, இதுதான் உங்களுக்கு நடக்கும்!” என்ற எச்சரிக்கை கோடிக் கணக்கானவர்களின் பகல் நேர அச்சமாகவும் இரவு நேரப் பயங்கரமாகவும் நுழைந்துவிட்டிருக்கிறது.

உங்கள் கையில்தான் இருக்கிறது திரு மோடி அவர் களே, அந்த அச்சத்தை விரட்டும் பொறுப்பு. அதைச் செய்வதற் கான அதிகாரமும் சக்தியும் உங்களிடம் இருக்கிறது; அதைச் செய்யும் உரிமையும் கடப்பாடும்கூட உங்களிடம் இருக் கிறது. யார் யாரோ என்னென்னவோ சொன்னாலும்கூட, அந்த அச்சத்தை நீங்கள் போக்குவீர்கள் என்றே நம்ப விரும்புகிறேன்.

நீங்கள்தான் செய்ய வேண்டும்

முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினர் அனைவரும் தங்கள் மனதில் ஆழமான வடுக்களைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள், மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள் போலவும் காஷ்மீர் பண்டிட்டுகள் போலவும். யதேச்சையான அல்லது திட்டமிட்ட காரணங்களுக்காகத் திடீரென்று ஏதாவது கலவரம் ஏற்படும் என்றும் அதற்குப் பல மடங்கு, குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு, பழிவாங்கல் என்றெல்லாம் தொடரும் என்றும் ஒரு அச்சம் நிலவுகிறது. தலித் மக்களும் பழங்குடியினரும், குறிப்பாகப் பெண்கள், தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவமானத்திலோ, அவமானத்துக்குள்ளானதைப் பற்றிய நினைவிலோதான் கழிக்கிறார்கள். இந்நிலையைக் கருத்தில் கொண்டு, பேச்சளவிலும் செயலளவிலும் அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுங்கள் திரு மோடி அவர்களே. அவர்களுடைய நலன்களுக்காகக் குரல்கொடுக்கும் முதல் நபர் நீங்கள்தான் என்ற உறுதியை அளிப்பதன் மூலம் இதை நீங்கள் சாதிக்க முடியும்.

குடியாட்சியின் பன்மைத்துவத்திடம் முடியாட்சியின் ஒருமைத்துவ மொழியில் பேசக் கூடாது; ‘பல' என்ற சிந்தனையிடம் ‘ஒன்று' என்பதன் சொற்களில் பேசக் கூடாது. இந்தியா என்பது பன்மைத்தன்மையின் காடு. அதில் எண்ணற்ற தாவர இனங்கள் இருக்கின்றன. அவை செழித்து வளர்வதற்கு உதவும் இலைமக்கினை (ஹ்யூமஸ்) நீங்கள் போஷிக்க வேண்டுமென்று அந்தக் காடு விரும்புகிறது. ஒற்றை வண்ணம் கொண்ட ஒற்றைக் கலாச்சாரத்தை அதன் முன்னே வைத்துவிடாதீர்கள்.

ஆச்சரியப்படுத்துங்கள்!

பிரிவு 370 பற்றி நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம்குறித்த புளித்துப்போன கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோயில், இந்து அகதிகளையும் முஸ்லிம் அகதிகளையும்பற்றி நீங்கள் பேசியது, இவையெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; பயத்தைதான் ஏற்படுத்து கின்றன. வெகுஜன அச்சம் என்பது இந்தியக் குடியரசின் குணாம்சமாக இருக்க முடியாது திரு மோடி அவர்களே.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை அடைந்திருக்கிறீர்கள் திரு மோடி அவர்களே. அதற்காக மறுபடியும் வாழ்த்துக்கள்! இந்த வெற்றியை அடுத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சிக் காலம் தொடங்கட்டும். அதன் மூலம் இந்த உலகத்தின் முன் நிறைய ஆச்சரியங்களை, அதாவது உங்கள் ஆதரவாளர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்காத ஆனால், பெரும்பாலானோர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஆச்சரியங்களை அந்த ஆட்சிக் காலம் நிகழ்த்தட்டும். நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை கொண்டவர் என்பதால், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வரும் அறிவுரையை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். உங்கள் ஆதரவாளர்களிடமிருந்து வரும் கைத்தட்டல்களுக்கு வேண்டிய கைம்மாறு செய்யுங்கள். ஆனால், உங்களுக்கு ஆதரவளிக்காதவர்களின் நம்பிக்கையையும் பெறுங்கள்.

அரசாட்சிக் காலத்தைச் சேர்ந்தவையும், சித்தாந்தரீதியி லானவையுமான உதாரணங்கள் உங்களுக்குப் பிடிக்கும். எனவே, உங்கள் போராட்டத்தில் நீங்கள் ஒரு மகாராணா பிரதாப் சிங்கைப் போல இருங்கள், சாந்தத்தைப் பொறுத்த வரை அக்பராக இருங்கள். இதயத்தில் சாவர்க்கராக, அதாவது நீங்கள் விரும்பினால், இருங்கள்; ஆனால், மனதால் ஒரு அம்பேத்கராக இருங்கள். உங்கள் டி.என்.ஏ-வைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பினால், ஆர்.எஸ்.எஸ்-காரராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவீதத்தினருக்காக அவர்கள் விரும்பும் விதத்தில் இந்துஸ்தானின் வஸிர்-இ-ஆசமாக (வஸிர்-இ-ஆசம் = உருது மொழியில் ‘பிரதம மந்திரி') இருங்கள்.

நமது தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,

உங்கள் சக குடிமகன்,
கோபாலகிருஷ்ண காந்தி

கட்டுரையாளர், காந்தியின் பேரன், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர். தமிழில்: ஆசை
நன்றி: ஹிந்து தமிழ் நாளிதழ்

---------------------------------------------------------

In invoking unity and stability, you have regularly turned to the name and stature of Sardar Vallabhbhai Patel. The Sardar, as you would know, chaired the Constituent Assembly’s Committee on Minorities. If the Constitution of India gives crucial guarantees — educational, cultural and religious — to India’s minorities, Sardar Patel has to be thanked, as do other members of that committee, in particular Rajkumari Amrit Kaur, the Christian daughter of Sikh Kapurthala. Adopt, in toto, Mr. Modi, not adapt or modify, dilute or tinker with, the vision of the Constitution on the minorities. You may like to read what the indomitable Sardar said in that committee.

Why is there, in so many, so much fear, that they dare not voice their fears?

It is because when you address rallies, they want to hear a democrat who carries the Peoplehood of India with him, not an Emperor who issues decrees. Reassure the minorities, Mr. Modi, do not patronise them. “Development” is no substitute to security. You spoke of “the Koran in one hand, a laptop in the other,” or words to that effect. That visual did not quite reassure them because of a counter visual that scares them — of a thug masquerading as a Hindu holding a Hindu epic’s DVD in one hand and a minatory trishul in the other.