Followers

Wednesday, September 30, 2015

மாட்டுக் கறி சாப்பிட்ட முஹம்மது அக்லாக் கொல்லப்பட்டார்!





உத்தர பிரதேசத்தில் உள்ளது தாத்ரி நகர். இங்குள்ள பிஷாரா கிராமத்தில் வசித்து வருகிறார் முஹம்மது அஹ்லாக். இவர் தனது வீட்டில் மாட்டுக் கறியை சேமித்து வைத்து சாப்பிட்டார் என்று ஊர் முழுக்க வதந்தியை பரப்பிய இந்துத்வா கும்பல் 50 வயது மதிக்கத்தக்க முஹம்மது அஹ்லாக்கை அடித்தே கொன்றுள்ளது. ஹஜ்ஜூப் பெருநாளன்று கிடைக்கும் கறியை சேமித்து வைத்து ஒரு வாரம் வரை கூட சாப்பிடுவது சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வு. இதனை ஒரு பிரச்னையாக்கி இன்று அதனை கொலை வரை கொண்டு சென்றுள்ளது இந்துத்வா. 22 வயதான அவருடைய மகனையும் தாக்கியுள்ளனர் காட்டு மிராண்டிகள். மிக அபாயகரமான சூழலை நோக்கி நமது இந்தியா சென்று கொண்டுள்ளது என்பதனையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
30-09-2015

Tuesday, September 29, 2015

சபாஷ்... சரியான போட்டி... - லல்லு பிரசாத்!



ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்வா இயக்கங்கள் இந்து பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை முழுவதுமாக தூக்க வேண்டும் என்று தற்போது பேச ஆரம்பித்துள்ளது. ஆர் எஸ் எஸ்ஸின் கவலை எல்லாம் இரண்டு சதமான பார்பனர்களின் நலனை சுற்றியே இருக்கும் என்பது நமக்கும் தெரியும். இது பற்றி பீஹாரின் லல்லு பிரசாத் யாதவ் சமீபத்தில் கூறியிருப்பதாவது..

'இந்துத்வாவாதிகளான நீங்கள் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவது பற்றி தற்போது பேசிக் கொண்டுள்ளீர்கள். நாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இட ஒதுக் கீட்டை மேலும் அதிகப்படுத்துவோம். உண்மையில் நீங்கள் தாய்ப் பால் குடித்திருந்தால் இட ஒதுக்கீட்டை அகற்று பார்போம்' என்று வசால் விட்டுள்ளார்.

சபாஷ்...... சரியான போட்டி!

Monday, September 28, 2015

சாய் ராம் பொறியியல் கல்லூரியின் சுற்றறிக்கை!



'ஈக்கள், கொசுக்கள், குரங்குகள் மற்றும் நாய்கள் கல்லூரி வளாகத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மாணவ மாணவிகள் கொண்டு வரும் புலால் உணவுகளேயாகும் என்று அறியப் படுகிறது. எனவே வரும் 21-09-2015 முதல் அனைத்து மாணவ மாணவிகளும் மாமிச உணவுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவ மாணவிகள் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'

-சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரி

தயிர் சாதம், புளி சாதம், போன்ற மற்றும் எண்ணெய் நெய்க்களால் பொறிக்கப்பட்ட பதார்த்தங்களைக் கொட்டுவதால் கொசு, ஈ பெருகாதா? குரங்கு மாமிசப் பட்சிணி அல்லவே? நாய் சைவம் அசைவம் இரண்டையும் சாப்பிடுமே...

இவர்களின் அக்கறை தூய்மையாக்குவதில் இல்லை. 'நான் என்ன சாப்பிடுகிறேனோ அதனையே நீயும் சாப்பிட வேண்டும்' என்ற அதிகார மமதை தவிர வேறொன்றுமில்லை.

இவர்கள் இனிமேலும் திருந்துவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

Sunday, September 27, 2015

ஹஜ்ஜில் மற்றவரை காப்பாற்றி தனது உயிர் ஈந்த மன்சூரி!



சவுதி அரேபியா மாகாணம் யான்பூவில் மெகானிகல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் நியாசுல் ஹக் மன்சூரி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு யான்பூவில் வசித்து வந்தவர். இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஹஜ்ஜில் வரும் வெளிநாட்டவருக்கு உதவி செய்வதில் முன்னணியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான India Fraternity Forum (IFF) ல் அங்கத்தினராக மினாவுக்கு வந்தார். 950 பேர் இவ்வாறு தொண்டு செய்ய வந்திருந்தனர். மினாவில் ஏற்பட்ட நெரிசலில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். ஆனால் தனது உயிரை காப்பாற்ற முடியவில்லை. நெரிசலில் சிக்கி இறந்துள்ளார் மன்சூரி.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

இவரது தாயும் தந்தையும் இந்த வருட ஹஜ்ஜூக்கு வந்துள்ளார்களாம். அவர்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. கூட்டத்தில் அவர்கள் எங்கு தவித்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இறைவன் இவரது தாய் தந்தையரை நலமுடன் இருப்பிடத்தில் சேர்ப்பிப்பானாக!

மன்சூரி செய்த இந்த செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். நன்மையை நாடி ஒரு செயலை செய்து அதில் இன்று உயிர் பிரிந்துள்ளது. மன்சூரியின் பாவங்களை இறைவன் மன்னித்து சுவனபதியில் சேர்ப்பானாக! இவரது தாய் தந்தையர் நலமுடன் தங்களின் இருப்பிடத்தை அடைவார்களாக! சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் பல லட்சம் ஹாஜிகளுக்கு இறைவன் நன்மையை வாரி வழங்குவானாக!

தகவல் உதவி
சவுதிகெஜட்
27-09-2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 13

அரபு எழுத்துக்கள் வார்த்தைகளில் முதலில், நடுவில் கடைசியில் எவ்வாறு உரு மாறுகிறது என்பதை முதல் பாடத்தில் பார்த்தோம். மற்ற எழுத்துக்களின் தொடர்ச்சியை இந்த பாடத்தில் பார்போம்.

ط

طَعاَمٌ ----------- தஆமுன் - உணவு

وَطَنٌ ------------ வதனுன் - நாடு

غَلَطٌ ------------ கலதுன் - தவறு

-----------------------------------

ظ

ظَرِيْفٌ - தரீஃபுன் - நேர்த்தியான

نَظِيْفٌ - நதீஃபுன் - சுத்தமான

حَفِظَ - ஹஃபீத - சேர்பித்தல்

----------------------------------

ع

عُمَرٌ - உமருன் - வயது

لاَعِبٌ - லாயிபுன் - விளையாட்டு

شاَرَع - ஸாரஅ - தெரு, சாலை

--------------------------------

غ

غُباَرٌ -------------- குபாருன் - தூசி

مَغْسَلَة ------------- மக்ஸல - கை கழுவும் இடம்

صاَيِغٌ -------------- ஸாயிகுன் - பொற் கொல்லன்.

-----------------------------------------

ف

فَرَعَ ---------- ஃபரஅ - கிளை

رَفِيْعٌ --------- ரஃபீவுன் - உயர்ந்த

لَطِيْفٌ --------- லதீஃபுன் - சிறந்த

------------------------------------------

ق

قَلَمٌ ------------- கலமுன் - எழுது கோல், பேனா

ياَقوْتٌ ----------- யாகூதுன் - சிகப்புக் கல்

وَرَقٌ ------------- வரகுன் - காகிதம்

------------------------------------------

ك

كَنِيْسَةٌ ----------- கனீஷதுன் - கிறித்தவ தேவாலயம்

مِكْنَسَةٌ ----------- மிக்னிஸதுன் - துடைப்பம், விளக்குமாறு

سَمَكٌ ------------- ஸமகுன் - மீன்

---------------------------------------

ل

لَيَنٌ ---------- லயனுன் - மிருதுவான

صَلْبٌ ---------- ஸல்புன் - கடினமான

نَحِيْلٌ --------- நஹீலுன் - மெல்லிய

----------------------------------

م

مُحاَمِيٌ ----------- முஹாமியுன் - வழக்கறிஞர்

نَمِيرٌ ----------- நமீருன் - புலி

أُمٌّ -------------- உம்முன் - தாய்

--------------------------------------

ن

نِشاَطٌ ------------- நிஷாதுன் - சுறுசுறுப்பு

تَنَكٌ -------------- தனகுன் - தகரம்

تَمْرِنٌ ------------ தம்ரீனுன் - பயிற்சி

-----------------------------------------

ه

هِلالٌ ---------- ஹிலாலுன் - பிறை

نَهْرٌ ---------- நஹ்ருன் - நதி

وَجْهٌ ----------- வஜ்ஹூன் - முகம்

------------------------------------

و

وَقْتٌ ----------- வக்துன் - நேரம்

قَوْمٌ ---------- கவ்முன் - மக்கள்

هُوَ ---------- ஹூவ - அவன் அது

-----------------------------------


ى

يَدٌ ----------- யதுன் - கை

طَباَشِيْرٌ ------ தபாஸிருன் - சாக்குக் கட்டி

كُرْسِىئٌ ------ குர்ஸியுன் - நாற்காலி


அரபு எழுத்துக்கள் தனித்து வரும் போது ஒரு உருவத்திலும், முதலில் வரும் போது ஒரு உருவத்திலும், நடுவிலும், கடைசியிலும் வரும் போதும் அதன் உருவங்கள் எவ்வாறு மாறுகிறது என்பதை இது வரை பார்தோம்.

12 மற்றும் 13 ஆம் பாடங்களை பல முறை எழுதி பழகுங்கள். ஏனெனில் இதில் சிறப்பாக பயிற்சி எடுத்தால்தான் மற்ற பாடங்கள் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

இறைவன் நாடினால் அடுத்த பாடங்களில் சந்திப்போம். ....



Saturday, September 26, 2015

10000 பேர் தொழக்கூடிய பள்ளி வாசல் - புடின் பங்கேற்பு!






ஜூம்ஆ தொழுகைகளாகட்டும், பெருநாள் தொழுகைகளாகட்டும் மாஸ்கோவில் இஸ்லாமியர்கள் இடப் பற்றாக் குறையினால் ரோடுகளில் தொழும் நிலை ஏற்பட்டது. ரஷ்ய மக்களிடையே இறைவனை தொழுவதில் ஏற்பட்ட ஆர்வமே தற்போதய இடப் பற்றாக் குறைக்கு காரணம். நாத்திகம் மறைந்து ஆத்திகம் இவர்களிடம் துளிர் விடத் துவங்கியுள்ளது.

1904 ல் கட்டப்பட்ட பள்ளி வாசலானது 2005ல் புனரமைக்கப்பட்டது. 2011ல் முழுவதுமாக இடிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் 170 மில்லியன் செலவில் கிட்டத் தட்ட 10000 பேர் ஒரே நேரத்தில் தொழத்தக்க வகையில் இந்த பள்ளி கட்டப்பட்டுள்ளது. புதன் கிழமை இதன் திறப்பு விழா நடந்தேறியது. திறப்பு விழாவுக்கு ரஷ்ய அதிபர் புடின், துருக்கி பிரதமர் எர்டோகான், பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் போன்றோர் கலந்து கொண்டனர். கம்யூனிஷ கொள்கையில் ஊறிய விளாடிமிர் புடின் கைகளாலேயே இறை இல்லத்தை திறக்க வைத்தது பார்ப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..



தகவல் உதவி
நியூயார்க் டைம்ஸ்
23-09-2015

பிள்ளையாருக்கு போட்ட பந்தலில் ஈத் தொழுகை!



மும்பையில் உள்ள குலாபா நகரில் ஈத் தொழுகைக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரவே இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. உடன் பிள்ளையார் சதுர்த்திக்காக போடப்பட்ட தற்காலிக பந்தலில் தொழுது கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ள அதனடிப்படையில் ஈத் பெருநாள் தொழுகையை முஸ்லிம்கள் நிறைவேற்றினர்.

பிள்ளையாரின் கண்காணிப்பில் ஈத் தொழுகை சிறப்பாக நடந்தேறியது

இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாகத்தான் இந்தியா முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு சதவீதமே இருக்கும் இந்துத்வாவாதிகளால்தான் எங்கும் பிரச்னையாகிறது. பெரும்பான்மையான இந்துக்கள் இஸ்லாமியர்களை சகோதரர்களாக பாவிப்பதால் இராம கோபாலன், பிரவீன் தெகோடியா போன்றோரின் பிரித்தாளும் சூழ்ச்சி இந்த மண்ணில் எந்நாளும் நிறைவேறப் போவதில்லை.

சேகர் ஆமர் - குவாண்டானோமோ சிறையிலிருந்து விடுதலை!



ஆப்கனை பூர்வீகமாக கொண்ட சேகர் ஆமர் குடும்பத்தோடு லண்டன் குடியுரிமையில் வாழ்ந்து வந்தார். தனது செல்வத்தை தனது பூர்விக நாடான ஆப்கனுக்கு செலவிட தீர்மானித்தார். குண்டு வெடிப்புகளால் சிதைந்த தனது ஊரை செப்பனிட குடும்பத்தோடு 2001 ல் ஆப்கன் நோக்கி பயணமானார். பொது சேவை செய்தால் அது அமெரிக்கர்களுக்கு பிடிக்காதல்லவா? எனவே தாலிபான்களுக்கு உதவினார் என்ற பொய் காரணத்தை ஜோடித்து குவாண்டனோமோ சிறையில் ஆமரை அடைத்தது அமெரிக்கா.

ஆனால் விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமானது. ஜார்ஜ்புஷ் இரண்டு முறை ஆமரை விடுதலையாக்க உத்தரவிட்டார். பராக் ஒபாமாவும் இவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அனால் இந்த உத்தரவுகள் குவாண்டனோமோ நிர்வாகிகளால் தள்ளி போடப்பட்டது. 13 வருட போராட்டத்துக்குப் பிறகு தற்போது விடுதலையாகிறார் சேகர் ஆமர். தொலைந்து போன இவரது 13 வருட வாழ்வை அமெரிக்காவால் திருப்பி தந்து விட முடியுமா?

இவரைப் போன்று வல்லரசுகளாலும் இந்துத்வாக்களாலும் பொய் வழக்கு போட்டு ஜோடிக்கப்பட்டு விசாரணக் கைதிகளாகவே காலம் தள்ளும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்கள் விடுதலையாக நாமும் பிரார்த்திப்போமாக! அவர்களும் தங்கள் மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்வை சுவைக்கும் சூழலை இறைவன் ஏற்படுத்திக் கொடுப்பானாக!

முதல் படம் சிறைவாசத்துக்கு முன்பு: இரண்டாவது படம் சிறைவாசத்தக்குப் பின்: சிறை வாழ்க்கை ஒருவனின் தோற்றத்தை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது?

#shakeraamer

தகவல் உதவி
பிபிசி.காம்
25-09-2015


105 வயது நூர் முஹம்மதின் ஹஜ் பயண அனுபவம்!



'ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டேயிருக்கும். இடையில் குடும்ப சூழலும் கஷ்டத்தைக் கொடுத்த போது உடைந்தே போய் விட்டேன். 100 வயதை எட்டியவுடன் திட்டமிட்டு பொருளாதாரத்தை சேகரிக்க தொடங்கினேன். நாளுக்கு நாள் ஹஜ்ஜூக்கான செலவுகள் கூடிக் கொண்டே போனது மேலும் எனக்கு சிக்கலை கொடுத்தது. எனது வாழ்நாள் கனவான ஹஜ்ஜூப் பயணத்தை இன்று இறைவன் நனவாக்கி வைத்துள்ளான். பல ஆண்டுகள் செய்த எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டுள்ளான். ஹஜ் பயணம் இந்த வயதில் மிகவும் சிரமம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எல்லா வசதிகளையும் இந்த அரசு செய்து கொடுத்து எங்களைப் போன்றவர்களின் பயணத்தை மிக இலகுவாக்கியுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!' என்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார் 105 வயதை தொட்டிருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நூர் முஹம்மது.

அவர் பேட்டியளிக்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. இது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு 'இது எனது ஆனந்த கண்ணீர்' என்று பதிலளித்தார்.

இவரைப் போன்று பல்லாயிரக்கணக்கான வயோதிகர்களின் கனவை இறைவன் நனவாக்கி வைப்பானாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
26-09-2015

Friday, September 25, 2015

மேலப் பாயைத்தில் நடந்த பெருநாள் தொழுகை!








கடந்த 30 வருடங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மன மாற்றம். ஏகத்துவ வாதிகள் 30 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு 2 பேர் மூன்று பேர் இருந்தனர். தர்ஹா வணங்கிகளால் மிரட்டப்பட்டு ஊர் விலக்கமும் செய்யப்பட்டனர். ஆனால் இன்று தமிழகத்திலேயே அதிக அளவில் மக்கள் பெருநாள் தொழுகைக்கு குழுமும் இடமாக மேலப் பாளையம் மாறிப் போயுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் ஏகத்துவ வாதிகளின் திடல் தொழுகையை நோக்கி மக்கள் வந்த வண்ணம் உள்'ளனர்.

மக்கள் ஆதரவு அதிகமானால் வழக்கமாக வரும் பெருமையும் கர்வமும் ஏகத்துவ வாதிகளை அண்டாது எந்ந நிலையிலும் இறைவனை போற்றி புகழக் கூடியவர்களாக ஏகத்துவ வாதிகளை இறைவன் மாற்றுவானாக!

எல்லா புகழும் இறைவனுக்கே!

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 12

அரபு மொழியில் ஒரு எழுத்தானது முதலிலும் இடையிலும் கடைசியிலும் எவ்வாறு உரு மாறும் என்பதை உதாரணத்தோடு இந்த பாடத்தில் பார்க்கலாம்....

ا

أبٌ ---------- அபுன் - அப்பா

ناَدِرٌ ------- நாதிருன் - அரிதான

ماَءٌ -------- மாஉன் - தண்ணீர்

---------------------------------

ب

باَسِمٌ --------- பாஸிமுன் - புன்னகை

كَبِيرٌ --------- கபீருன் - பெரிய

طَالِبٌ --------- தாலிபுன் - மாணவன்

-------------------------------

ت

تِجَارَةٌ ------------ திஜாரதுன் - வாணிகம்

كَتَبَ ----------- கதப - எழுதினான்

بَيْتٌ -------------- பைதுன் - வீடு

---------------------------

ث

ثَمَرٌ ------------ தமருன் - பேரித்தம் பழம்

كَثِيْفٌ ------------ கதீஃபுன் - தடித்த

حَرَثَ ------------- ஹரத - உழுதான்

-----------------------------

ج

جَلَسَ ---------- ஜலஸ - அமர்ந்தான்

حُجْرَةٌ --------- ஹூஜ்ரதுன் - அறை

نَاضِجٌ --------- நாதிஜூன் - பழுத்த

----------------------------

ح

حُلْوٌ ------------- ஹூல்வுன் - இனிப்பு

بَحْرٌ ------------- பஹ்ருன் - கடல்

مِلْحٌ ------------ மில்ஹூன் - உப்பு

---------------------------

خ

خَرِيْطَةٌ ----------- ஹரீததுன் - தேசப்படம்

مُخْلِصٌ ----------- முஹ்லிஸூன் - நேர்மையான

شَيْخٌ -------------- ஸைஹூன் - வயோதிகன்

-------------------------

د

دَرْسٌ -------------- தர்ஸூன் - பாடம்

مَادَّةٌ --------------- மாத்ததுன் - விஷயம்

هِنْدْ --------------- ஹிந்த் - இந்தியா

------------------------

ذ

ذَهَبَ ----------------- தஹப - சென்றான்

كِّذْبٌ ----------------- கித்புன் - பொய்

فَوْلاَّذْ ---------------- ஃபவ்லாதுன் - எஃகு

------------------------

ر

رَجُلٌ ----------- ரஜூலுன் - ஆண்

بَارِدٌ ---------- பாரிதுன் - குளிர்ச்சி

كَبِيْرٌ --------- கபீருன் - பெரிய

-----------------------

ز

زَهَرٌ --------- ஜஹ்ருன் - மலர்

وَزِيْرٌ ------- வஜீருன் - அமைச்சர்

خُبْزٌ -------- ஹூப்சுன் - ரொட்டி

------------------------

س

سُوْقٌ -------- ஸூக்குன் - கடைவீதி

اَسْوَدٌ ------- அஸ்வதுன் - கருப்பு

رَئِيْسٌ ------- ரஈஸூன் - தலைவர்

--------------------------

ش

شَمْسٌ --------- ஷம்ஸூன் - சூரியன்

كَشْكُولْ ------ கஸ்கோல் - குறிப்பேடு

حَشِيْشٌ ------- ஹஷீஷூன் - புல்

---------------------------

ص

صَدِيْقٌ ---------- ஸதீகுன் - நண்பன்

قَصِيْرٌ ---------- கஸீருன் - குட்டையான

مُخْلِصٌ ---------- முஹ்லிஸூன் - நேர்மையான

---------------------------

ض

ضَوْءٌ ---------- தவ்வுன் - வெளிச்சம்

حَاضِرٌ --------- ஹாதிருன் - வந்துள்ள

مَرِيْضٌ --------- மரீதுன் - நோயாளி

எழுத்துக்கள் முதல் இடை கடையில் எவ்வாறு அதன் உருவம் மாறுகிறது என்பதை பார்தோம். மாறும் எழுத்துக்களை பல முறை எழுதி பழகி வாருங்கள். மீதம் உள்ள எழுத்துக்களை அடுத்த பாடத்தில் பார்போம் இறைவன் நாடினால்.


Wednesday, September 23, 2015

பாபர் அலி: தலைமை ஆசிரியர்களில் தனி ஒருவர்!



நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் அடங்கிய குழுவொன்று, கல்வியின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், ஆசிரியர்களின் நிலையை உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர் ஒருவர், சாதாரண சட்டை அணிந்து அங்கிருந்த சூழ்நிலையில் இருந்து சற்றே விலகி அமர்ந்திருக்கிறார்.

சில நிமிடங்களுக்குள்ளாகவே, மேடைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

உலகின் இளம் வயது தலைமை ஆசிரியர் என்று அறியப்படும் 22 வயதான பாபர் அலி, அங்கிருக்கும் கல்வியாளர்களால் சூழப்படுகிறார். பாபருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் முண்டியடிக்கின்றனர். யார் அந்த பாபர் அலி?

மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத் நகரில் பாப்தா என்னும் பின்தங்கிய கிராமத்தில், எட்டு மாணவர்களுடன் ஒரு பள்ளியை ஆரம்பித்தபோது பாபருக்கு வயது ஒன்பது. இப்போது அதே பள்ளி 10 ஆசிரியர்கள் மற்றும் 300 மாணவர்களுடன், வெற்றி நடைபோடுகிறது. ஆனந்த சிக்‌ஷா நிகேதன் என்ற பெயரின் மேற்கு வங்க அரசின் ஆதரவோடு பள்ளி செயல்பட்டு வருகிறது.

காலையில் மாணவராக பெர்காம்பூர் கிருஷானத் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் பாபர் அலி, மதியம் ஆசிரியராய் பள்ளியில் பாடம் எடுக்கிறார். கல்வியின் தரம் குறித்த தேசிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாபர், கற்பித்தலை உன்னதமான தொழிலாகவும், ஈடுபாடாகவும் பார்க்கிறார். விழாவில் அவர் பேசியது

"பள்ளியை ஆரம்பித்தது ஏதோ ஒரு விளையாட்டு போலத்தான் இருக்கிறது. அப்போது எனது சகோதரிக்குக் கற்றுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து என்னுடைய கிராமத்தில் இருக்கும் சில குழந்தைகளும் கற்றுக்கொள்ள வந்தனர். அப்படித்தான் பள்ளி தொடங்கப்பட்டது.

இப்போது என்னிடம் படித்த ஆறு மாணவர்கள், தங்கள் கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு எங்கள் பள்ளியிலேயே வகுப்பெடுக்கின்றனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எனக்கு பெரிதும் உதவிவருகின்றனர். நன்கொடையாளர்களின் உதவியால், எங்கள் பள்ளிக்கான கனவுக் கட்டிடம் நனவாகப் போகிறது.

கர்நாடக அரசின் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான பாடப்புத்தகத்தில், என்னைப் பற்றிய பாடம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 90 சதவீதம், கர்நாடகத்தில் இருந்து எனக்கு ஈமெயிலில் வந்த பாராட்டுக் கடிதங்களே" என்றார்.

மாநாட்டில், எல்லோரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றாலும், பாபர் திருப்தி கொள்ளவில்லை. குழந்தைகளை எதற்காக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இன்னும் பலர் அவரின் கிராமத்திலேயே இருப்பதாகவும், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்னும் இலக்குக்கு தான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்கிறார்.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்
23-09-2015

சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்ஷ

நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா!



Tuesday, September 22, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 11

இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகிறது. இவ்வாறு சொற்கள் இணையும் போது எழுத்துக்களின் உருவம் சிதைந்து சற்று சிறிதாக மாறும். அவ்வாறு எழுத்துக்கள் எவ்வாறு உரு மாறுகிறது என்பதை இந்த பாடத்தில் படிப்போம்.....

எழுத்துக்களின் மேல் கீழ் உள்ள உயிர்க் குறிகளான ஃபதஹ, கஸர, தம்மஹ் (ஜேர், ஜபர், பேஷ்) குறிகளையும் கவனித்து உச்சரிப்புகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதை கவனியுங்கள்.

ق ل م - قلم - قَلَمٌ ------ காஃப் + லாம் + மீம் = கலமுன் - பேனா

ب ل - بل - بَلْ --------- பா + லாம் = பல் - ஆனால்

ع د د - عدد - عَدَدْ ------- அயின் + தால் + தால் = அததுன் - எண்

ح م ل - حمل - حَمَلَ ----------- ஹா + மீம் + லாம் = ஹமல - தூக்குதல், சுமத்தல்

ط ق س - طقس - طَقْسٌ ----------- தா + காஃப் + ஸீன் = தக்ஸ் - வெப்ப நிலை

ن ب ت - نبت نَبْتٌ ---------- நூன் + பா + தா = நப்துன் - தாவரங்கள்

م س ا - مسا - مساءٌ --------- மீம் + ஸீன் + அலிஃப் = மஸாவுன் - மாலை நேரம்

ل ب ن - لبن - لبنٌ ---------- லாம் + பா + நூன் = லபனுன் - மோர்

ل ح م - لحم - لَحَمٌ ---------- லாம் + ஹா + மீம் = லஹமுன் - இறைச்சி

ا ن ا - انا - اَناَ --------- அலிஃப் + நூன் + அலிஃப் = அநா - நான்

ر ج ل - رجل - رَجَلٌ -------- ரா + ஜா + லாம் = ரஜீலுன் - ஆண்

ك ل ب - كلب - كَلْبٌ -------- காஃப் + லாம் + பா = கல்புன் - நாய்

ن ه ر - نهر - نَهْرٌ -------- நூன் + ஹா + ரா = நஹ்ருன் - நதி

ه م - هم - هُمْ ---------- ஹா + மீம் = ஹூம் - அவர்கள்

ا ن ت - انت - اَنْتَ ------- அலிஃப் + நூன் + தா = அன்த - நீ......

ش ا ى - شاى - شايٌ ------------- ஷீன் + அலிஃப் + யா - ஷாயுன் - தேனீர்...

ஒரு எழுத்து தனித்து வரும் போது என்ன உருவில் வருகிறது. அது மற்ற எழுத்துக்களோடு சேரும் போது எவ்வாறு உரு மாறுகிறது உச்சரிப்பும் எப்படி மாறுகிறது என்பதை உதாரணங்களுடன் பார்தோம். இதனை தனித் தனியாக எழுதி பழகி வாருங்கள். இது மனதில் பதிந்தால்தான் பின்னால் வாக்கியங்களை அமைக்கும் போது படிப்பதற்கு சிரமமில்லாமல் இருக்கும்...

நீங்களாகவே சொந்தமாக வார்த்தைகளை அமைத்து அது எவ்வாறு உரு மாறுகிறது என்பதை பயிற்சியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.....

நாளை அரஃபா நோன்பை மறக்க வேண்டாம்!



இந்த வருடம் வெளி நாடுகளிலிருந்து ஹஜ் செய்ய வந்த வெளி நாட்டு ஹாஜிகள் - 1377751

விமானம் மூலம் வந்தவர்கள் - 1327751

தரை மார்க்கமாக வந்தவர்கள் - 36981

கடல் மார்க்கமாக வந்தவர்கள் - 12923


தகவல் உதவி
சவுதி கெஜட்
22-09-2015

------------------------------------

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபிகள் நாயகம் அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.

"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகள் நாயகம் அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்"

அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

Monday, September 21, 2015

தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைப் பற்றி இந்து பத்திரிக்கை புகழாரம்!



700 மருத்துவ முகாம்களை நடத்தி 10000 ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ பரிசோதனை களையும் மருந்துகளையும் பெற்றுச் செல்கின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பின்தங்கிய ஊரான மேலப் பாளையத்தில் 350 நபர்கள் தங்கள் கண்களை பரிசோதித்துக் கொண்டு மருத்துவ உதவிகளையும் பெற்றுச் செல்கிறார்கள். இது கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பக்ரீத் பெருநாளன்று திருநெல்வேலி டிஎன்டிஜே கிளை சார்பாக 15 டன் இறைச்சியை 15000 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர். மேலப் பாளையம், பாளையங்கோட்டை, ஏர்வாடி, அம்பா சமுத்திரம், பொட்டல் புதூர், கடைய நல்லூர், தென்காசி, புளியங்குடி, சங்கரன் கோவில், செங்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இந்த இறைச்சியை வருடா வருடம் பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பின்பற்றி வேறு சில அமைப்புகளும் தற்போது மருத்துவ முகாம்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

தகவல் உதவி
தி ஹிந்து நாளிதழ்
15-09-2014

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் வைத்து நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஆபரேசன் செய்ய வேண்டிய நோயாளிகளை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முதல் வேன்.. 19-09-2015



அரசியலில் ஓட்டுக்காக எவரிடம் இந்த அமைப்பு செல்வதில்லை. அரசு அதிகாரங்கள் எதுவும் இந்த அமைப்பிடம் இல்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட பல லட்சம் இளைஞர் பட்டாளம் மட்டுமே இந்த அமைப்பின் சொத்து. மக்களின் நன்கொடைகளை வைத்தே ஒரு அரசாங்கத்தைப் போன்று இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பஜ்ரங்தள் போன்ற இந்துத்வா அமைப்புகள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் இருந்து பாடம் பயின்று கொள்ளட்டும். பல சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு மத அமைப்பு எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தவ்ஹீத் ஜமாத்தை முன்னோடியாகக் கொண்டு இந்துத்வாவாதிகள் தங்களை திருத்திக் கொள்வார்களாக! மதுவிலும், மூடப் பழக்கத்திலும் சாதி வெறியிலும் சிக்கி சிதறிக் கிடக்கும் எனது சகோதர இந்து மக்களை இனியாவது அழிவின் பக்கம் கொண்டு செல்லாமல் ஆக்கபூர்வ பணிகளை இந்துத்வாவாதிகள் முன்னெடுப்பார்களாக!

Sunday, September 20, 2015

தலித் எம் எல் ஏ க்கு ஏற்பட்ட வன்கொடுமை!




புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலத்தின் பிஜேபி எம் எல் ஏ வாக உள்ளவர் காசினாத் மல்லிக்....

ஜீலை 20 ஆம் தேதி மாவட்ட வளர்ச்சி சம்பந்தமான ஒரு கூட்டத்துக்கு எம்எல்ஏ என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தார். அவரோடு சேர்த்து மேலும் மூன்று எம்எல்ஏக்களும் ஒரு எம்பியும் மாவட்ட ஆட்சியரும் அழைக்கப்பட்டிருந்தனர். மதியம் அரசு செலவில் உணவு பரிமாறப்படும் நேரமும் வந்தது. அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை பிடிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு காசிநாத் மல்லிக் கொடுத்த பேட்டியை பார்போம்:

'மற்ற மூன்று எம்எல்ஏக்கள், கண்டமால் எம்பி, மாவட்ட ஆட்சியர் என்று இந்த ஐந்து பேருக்கும் அறையின் உள்ளே கவுரமாக உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அறைக்கு வெளியே தனியாக எனக்கு மட்டும் இலையில் உணவு பரிமாறப்பட்டது. இது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக சபாநாயகரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு தொடர்ச்சியாக ஆளும் வர்க்கத்தால் அவமானம் ஏற்படுத்தப்படுகிறது' என்று பரிதாபமாக கேட்டார்.

தகவல் உதவி
NDTV.com
23-07-2015


பாவம் அந்த எம்எல்ஏ! எதனால் இவருக்கு மட்டும் இப்படி அவமானம் ஏற்படுகிறது என்பதை இன்னும் விளங்காமல் இருக்கிறார். அவர் தலித்தாக பிறந்து விட்டார் அல்லவா? அதுதான் காரணம்.

படிப்பு, ஆட்சி, அதிகாரம் கையில் கிடைத்தால் தீண்டாமை காணாமல் போய் விடும் என்று சொல்பவர்கள் இந்த சம்பவத்துக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்? ஒட்டு மொத்த மக்களின் மனதில் மாற்றம் முழுவதுமாக ஏற்படாதவரை நமது நாட்டுக்கு தீண்டாமையிலிருந்து விடுபட எந்த முகாந்திரமும் இல்லை. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் இந்த நிலை மாறப் போவதில்லை.

இங்கு இரண்டே நிலைப்பாடுதான் இருக்கிறது. ஒன்று தீண்டாமை என்ற இழிவை சுமந்து கொண்டு இந்து மதத்திலேயே இருப்பது.

மற்றது ஒட்டு மொத்தமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாம், கிருத்தவம், பவுத்தம் போன்ற மதங்களில் ஐக்கியமாகி விடுவது. இதைத் தவிர வேறு மூன்றாவது வழி இல்லை.

http://www.ndtv.com/bhubaneshwar-news/dalit-orissa-mla-served-food-separately-alleges-caste-discrimination-462586?site=full

Saturday, September 19, 2015

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சுட்டுக் கொலை!





அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக வளாகத்தில் ஆலம்கீர் என்ற பல்கலைக் கழக மாணவரை இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் சுட்டுக் கொன்றுள்ளனர். பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த இந்த கொலை நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து அவர்களை தூக்கில் ஏற்றினால்தான் இது போன்ற கொலைகளை தடுக்க முடியும்.

பெற்ற பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு இறைவன் தைரியத்தை தந்தருள்வானாக! இறந்த அந்த மாணவன் ஆலம்கீருக்கு இறைவன் சுவனத்தை பரிசாக தந்தருள்வானாக!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

10 லட்ச ரூபாயையும் பாலிவுட் நடிகையையும் தருகிறோம்!



அப்துல் வாஹித் என்ற இளைஞர் 11-07-2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டதில் அப்துல் வாஹித் குற்றமற்றவர் என்று விடுதலையாகி உள்ளார். மற்ற 12 பேரும் தினமும் கோர்ட்டுக்கு வருவதும் சிறை தண்டனை அனுபவிப்பதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அப்துல் வாஹித் எவ்வாறு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் எனபதை அவரிடமிருந்தே கேட்போம்.

'ஜூலை 11 2006 ஆம் ஆண்டு மும்ப்ராவில் உள்ள எனது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகளைப் பற்றிய செய்தி வந்து கொண்டிருந்தது. இந்த குண்டு வெடிப்பைக் கண்டு மனம் வேதனையடைந்தது. அன்றைய நாளே எனது சகோதரன் எனக்கு போன் செய்து ' குண்டு வெடிப்பு சம்பந்தமாக உன்னையும் காவல் துறை தேடுகிறது' என்று சொன்னவுடன் அதிர்ந்து விட்டேன்.

'போலீஸ் என்னை இந்த வழக்கில் சேர்ப்பதற்கு நான் (ISLAMIC MOVEMENT OF INDIA) சிமியின் உறுப்பினராக இருந்ததே முழு காரணமாகும். வேறு எந்த காரணமும் இல்லை. 2001 ஆம் ஆண்டு எங்கள் ஊர் பள்ளி வாசலில் ஒரு சிறு பிரச்னை காரணமாக சிலரோடு தகராறு ஏற்பட்டது. அப்போது காவல் துறை அந்த வழக்கில் என்னை கைது செய்தது. அதிலிருந்து நான் கட்டம் கட்டப்பட்டுள்ளேன்.'

'காவல் துறை என்னிடம் பலமுறை 'குற்றத்தை ஒப்புக் கொள். 10 லட்ச ரூபாய் பணம் தருகிறோம். பாலிவுட் சினிமா நடிகையையும் உனக்கு ஏற்பாடு பண்ணி தருகிறோம். மூன்று மாதத்தில் உன்னை குற்றமற்றவன் என்று வெளியாக்கி விடுகிறோம்' என்று கேட்டனர். ஆனால் கடைசி வரை நான் ஒத்துக் கொள்ளவில்லை. செய்யாத குற்றத்துக்கு நான் ஏன் பலி கடா ஆக வேண்டும்?' என்று கேட்கிறார் அப்துல் வாஹித்.

இவர்கள் காவல் துறையினரா? அல்லது பெண்களை கூட்டிக் கொடுக்கும் மாமாக்களா? உலகில் எங்காவது இது போன்ற அநியாயம் நடக்குமா? பொய் வழக்கு ஜோடித்து இவ்வாறு மெடல் வாங்கிக் குத்திக் கொள்வதில் உனக்கு என்ன பெருமை. பொய் வழக்கில் இஸ்லாமியரை சிறையில் அடைத்து அதன் மூலம் கிடைத்த பொருளாதாரத்தை உனது குடும்பத்துக்கு கொண்டு சென்றால் அந்த குடும்பம் விளங்குமா?

இறைவா! முஸ்லிம் என்ற ஒரு காரணத்திற்காகவே இந்த சகோதரனின் வாழ்வை சூன்யமாக்கியவர்களை இந்த உலகிலும் தண்டிப்பாயாக! மறு உலகிலும் தக்க தண்டனையை வழங்குவாயாக! அப்துல் வாஹிதைப் போல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விசாரணைக் கைதிகளாகவே காலத்தை கழித்து வருகிறார்கள். குற்றமற்றவர்களை விடுதலையாக்கும் நல் ஆட்சியை எங்களுக்கு தந்தருள்வாயாக!

தகவல் உதவி
மிட் டே.காம
16-09-2015

http://m.mid-day.com/articles/i-was-promised-rs-10-lakh-and-a-bollywood-bride-if-i-turned-approver/16537164

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 9

ஒரு நண்பர் இன் பாக்ஸில் வந்து 'ஜேர், ஜபர் என்றுதான் நான் குர்ஆனை மத்ரஸாவில் படித்துள்ளேன். நீங்கள் 'ஃபதஹ, கஸர' என்று எழுதுகிறீர்களே? குழப்பமாக இருக்கிறது என்கிறார். நானும் சிறு வயதில் மதரஸாவில் 'ஜேர், ஜபர்' என்றுதான் படித்தேன். அந்த காலத்தில் உருது தெரிந்த முஸ்லிம்களே பெரும்பாலும் அரபு ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் அரபு மொழியை உருது மொழியின் அடிப்படையில் நமக்கு விளக்கி வந்தார்கள். இதில் தவறொன்றுமில்லை. ஏதோ ஒரு வழியில் நாம் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். மொழிப் பற்று இருக்கலாம்: மொழி வெறி இருக்கக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. அரபு நாடுகளில் 'ஜேர், ஜபர்' என்றால் அரபுகளுக்கே விளங்காது. எனவே தான் உலகம் முழுவதும் அரபு எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அதனடிப்படையில் 'ஃபதஹ, கஸர' என்று விளக்கினேன். பலருக்கும் இது போன்ற சந்தேகம் இருக்கும் என்பதாலேயே இந்த விளக்கம்.

--------------------------------------------------


இனி அடுத்த பாடத்துக்குள் நுழைவோம்.

ஆங்கில மொழியில் "THE" 'த' என்ற சொல் குறிப்பிட்ட ஒரு பொருளையோ மனிதனையோ குறிப்பது போல் அரபி மொழியில் 'ال' 'அல்' எனும் சொல்லை உபயோகிப்பதுண்டு. 'அல்' எனும் வார்த்தையை 'பொது சுட்டுச் சொல்' என்று அரபியில் சொல்வர். 'அல்' என்ற பொது சுட்டுச் சொல்லானது 1.பெயர்ச் சொல்லுக்கும் 2.பெயர் உரிச் சொல்லுக்கும் முன்னால் வரும்.

1.பெயர்ச் சொல்

كتاب - ஏதோ ஒரு புத்தகம்.

ال كتاب - குறிப்பிட்ட ஒரு புத்தகம்.

2.பெயர் உரிச் சொல்

'ولد طيب' - 'வலதுன் தய்யிபுன்' (ஏதோ ஒரு) நல்ல பையன்.

'الولد طيب' - 'அல் வலது தய்யிபுன்' (குறிப்பிட்ட) நல்ல பையன்


இவ்வாறு ஒரு பொருளை அல்லது பொருளின் தன்மையை குறிப்பிட்டுச் சொல்ல 'அல்' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். தற்போது 'அல்' என்ற வார்த்தையின் பயன்பாட்டை விளங்கியிருப்பீர்கள்.

அரபு மொழியில் எழுத்துக்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். 1. சூரிய எழுத்துக்கள் 2. சந்திர எழுத்துக்கள்.

1.சூரிய எழுத்துக்கள் எவை என்பதை பார்போம்:

ﺕ ﺙ ﺩ ﺫ ﺭ ﺯ ﺱ ﺵ ﺹ ﺽ ﻁ ﻅ ﻝ ﻥ

2.சந்திர எழுத்துக்கள் எவை என்பதையும் பார்போம்.

ء ﺏ ﺝ ﺡ ﺥ ﻉ ﻍ ﻑ ﻕ ﻙ ﻡ ﻭ ﻱ ه

இதை ஏன் இவ்வாறு பிரித்தார்கள் என்பதையும் பார்போம்.

بَيْتٌ 'பைத்' என்றால் வீடு என்ற பொருளைக் பொதுவாக குறிக்கும். الْبَيْتُ 'அல் பைத்து' என்றால் 'அந்த வீடு' என்று ஒரு வீட்டை குறிப்பிட்டு சொல்கிறோம். இப்போது 'அல்' என்ற வார்த்தை இங்கு அதிகமாக சேருவதை பார்த்தோம். சேர்ந்த இந்த வார்த்தையானது பின்னால் வரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு ஒட்டவில்லை என்றால் அது சந்திர எழுத்து எனப்படும்.

التُّفَّاحُ 'அத்துஃப்பாகுன்' 'அந்த ஆப்பிள்' என்ற வார்த்தையில் 'அல்' என்ற வார்த்தை மறைந்து 'அத்து' என்று முதல் வார்த்தையோடு சேர்ந்து விடுகிறதல்லவா? இதனையே 'சூரிய எழுத்துக்களின் அடையாளங்களாக பார்கிறோம்.

அல் என்ற வார்த்தை தொடரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு சேர்ந்தால் அது சூரிய எழுத்துக்கள் என்றும் அல் என்ற வார்த்தை தொடரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு சேராது தனித்து நின்றால் அதனை சந்திர எழுத்துக்கள் என்றும் கூறுகிறோம்.

உதாரணங்களை படித்துப் பார்த்தாலே உங்களுக்கு தானாகவே எது சூரிய எழுத்து எது சந்திர எழுத்து என்பது விளங்கி விடும்.


a book كتاب கிதாப் - ஒரு புத்தகம் - the book الـكتاب அல் கிதாப் - (குறிப்பிட்ட) புத்தகம்

இங்கு கிதாபோடு அல் ஒட்டவில்லை எனவே இது சந்திர எழுத்தை சார்ந்தது என்று முடிவெடுத்து விடுவோம்.


கீழே வரக் கூடிய அல் என்ற பதத்துக்கு அடுத்து வரும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் அனைத்தும் சூரிய எழுத்துக்கள். சூரிய எழுத்துக்களை தனியாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளதை கவனியுங்கள்.


الحروف الشمسية - சூரிய எழுத்துக்கள்

the sun الـشّمس sun شّمس ش 'அஸ்ஸம்ஸ்' - சூரியன்

the man الـرّجـل man رّجـل ر 'அர்ரஜீல்' - மனிதன்

the fire الـنّــار fire نّــار ن 'அந்நார்' - நெருப்பு

the magic الـسّحـر magic سّحـر س 'அஸ்ஸிஹ்ர்' - சூனியம்

the weather الـطّـقس weather طّـقس ل 'அத்தக்ஸ்' - காலநிலை

the night الـلّـيـل night لّـيـل لّ 'அல் லைல்' - இரவு

the date (fruit) الـتّـمـر date (fruit) تّـمـر ت 'அத்தமர்' - பேரித்தம் பழம்

the hens الدّجاج hen دّجاج د 'அத்தஜாஜ்' - கோழி

the gold الذّهب gold ذّهب ذ 'அத்தஹப்' - பவுன்

the giraffe الزّرافة giraffe زّرافة ز 'அஜ்ஜூராஃபா' - ஒட்டகச் சிவிங்கி

the picture الصّورة picture صّورة ص 'அஸ்ஸூரா' - படம்

the mud الطّين mud طّين ط 'அத்தின்' - மண்

the back الظّهر back ظّهر ظ 'அத்தஹ்ர்' - பின் பக்கம்

இங்கு எழுதப்பட்டுள்ள அனைத்து உதாரணங்களையும் கவனமாக படித்துப் பாருங்கள். 'அல்' என்ற வார்த்தையானது அதற்கு அடுத்து வரும் வார்த்தையோடு இணைந்து விடுகிறது. அவ்வாறு இணைவதற்கு அடுத்து வரும் வார்த்தையின் முதல் எழுத்து சூரிய எழுத்தாக இருப்பதால் இரண்டு வார்த்தைகளும் ஒரு வார்த்தையாக உச்சரிப்பில் வந்து விடுகிறது.

-------------------------------------------------

முன்பே கூறியது போல் சந்திர எழுத்துக்களில் 'அல்' என்ற வார்த்தையானது அதற்கு அடுத்து வரும் வார்த்தையோடு ஒட்டாமல் தனித்து இருப்பதை கவனியுங்கள். அதன் உதாரணங்களை கீழே பார்போம்.

(الباب) /al-bab/ “the door”, 'அல் பாப்' - கதவு

(الجدار) /al-jadaar/ “the wall”, 'அல் ஜிதார்' - சுவர்

(الفارس) /al-faaris/ “the knight”, 'அல் ஃபாரிஸ்' - வீரன்

(المطر) /al-maTar/ “the rain”, 'அல் மதார்' - மழை

(الكلام) /al-kalaam/ “the speech”, 'அல் கலாம்' - பேச்சு

(الورد) /al-ward/ “the rose”, 'அல் வர்த்' - பூ


'அல்' என்ற வார்த்தையானது அடுத்து வரும் வார்த்தையின் முதல் எழுத்தில் ஒட்டாது பிரிந்திருப்பதை பார்க்கிறோம். இதனையே சந்திர எழுத்துக்கள் என்கிறோம்.

சில வார்த்தைகளை எழுதிப் பார்த்து எது சூரிய எழுத்து எது சந்திர எழுத்து என்று நீங்களே கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

கீழே உள்ள அட்டவணையில் சிகப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்கள் சூரிய எழுத்துக்கள். கருப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்கள் சந்திர எழுத்துக்கள்.



இறைவன் நாடினால் மேலும் சில பாடங்களை அடுத்தடுத்த நாட்களில் பார்போம்.

Friday, September 18, 2015

தொழுகையில் இமாமை அறைந்த காஷ்மீர் இளைஞன்!



மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் நிகாரா ஜூம்ஆ பள்ளியில் இன்று தொழுகை நடந்து கொண்டிருந்தபோது ஒரு இந்திய இளைஞன் முன்னேறி சென்று இமாமை தொழ வைப்பதிலிருந்து தடுக்க முயற்சித்துள்ளான். இமாம் அவனை சட்டை செய்யாது தொழுகையை தொடரவே கோபமுற்ற அந்த இளைஞன் வேகமாக இமாமை அறைந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடன் ஓடி வந்து அந்த இளைஞனை அப்புறப்படுத்தி காவல் துறை வசம் ஒப்படைத்தனர். பிறகு தொழுகை தொடர்ந்து நடந்து முடிந்தது.

ஷபீர் அஹமது கான் என்ற அந்த காஷ்மீர இளைஞன் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவனாக தெரிவதாக போலீஸார் கூறுகின்றனர். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசுகிறானாம். அவனிடம் தங்குவதற்கான ஒழுங்கான எந்த ஆவணங்களும் இல்லை.

இவன் யார்? இவன் உண்மையில் மன நலம் பாதிக்கப்பட்டவனா? அல்லது இஸ்லாமிய எதிரிகள் ஏதேனும் சதி செயலை நிறைவேற்ற இவனை அனுப்பியுள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏனெனில் சமீப காலமாக மேற்குலகின் பார்வை மலேசியாவின் மேல் விழுந்துள்ளது. விமானங்களை மறைய வைத்து மலேசியன் ஏர்லைன்ஸை நட்டத்திற்கு உள்ளாக்கினர். மேற்குலகுக்கு அடிபணியாது மலேசிய ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்வதால் அதனை எப்படியாவது சீர்குலைக்க எதிரிகள் மயற்சித்த வண்ணமே உள்ளனர். எதிரிகள் யார் என்பது நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.உங்களுக்கு நன்றாகவே தெரியும் :-)

Thursday, September 17, 2015

முன்பு போதைக்கு அடிமையானவர்கள் இன்று ஹஜ் பயணத்தில்!



இந்த வருட ஹஜ் பயணத்தில் திருத்தப்பட்ட போதைக்கு அடிமையானவர்களை அரசு செலவில் ஹஜ்ஜூக்கு அனுப்பி வைக்கிறது துபாய் காவல் துறை. இந்த வருட ஹஜ் பயணத்தில் நான்கு பேர் அரசு செலவில் வருகின்றனர்.

'தாருல் பர்' என்ற பெயரில் துபாய் காவல் துறையில் ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இதன் பணி போதைக்கு அடிமையானவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு அன்பான முறையில் சிகிச்சை அளித்து அவர்களை சமூகத்தில் ஒன்றர கலக்க விடுவதே. 2009 ஆம் ஆண்டு ஆரமபிக்கப்பட்ட இந்த பணி 2015 வரை 69 ஆட்களை போதை பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்து முடிவில் அவர்களை அரசு செலவில் ஹஜ்ஜூக்கும் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளது.

போதை மருந்துக்கு அடிமையான இரண்டு துபாய் நாட்டவர் அதிலிருந்து விடுபட்டு தங்களின் படிப்பையும் முடித்து அரசிடமிரந்து சான்றிதழ்களை பெறுவதையும்தான் நாம் மேலே பார்க்கிறோம்.

தகவல் உதவி
கல்ஃப் நியூஸ்
13-09-2015

போதை மருந்துக்கு அடிமையான ஒரு துபாய் வாசியின் வாக்கு மூலம்

“I tried to kill myself when I was 18, but failed. Then I tried again at 22, but failed again. My last attempt was at 25. I tried hanging myself, cutting my veins and burning myself — all because I was high and depressed,” Salman (full name withheld upon request) told Gulf News.

மதுவினால் நமது தமிழகம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலான கூலி தொழிலாளிகள் தங்கள் வருமானத்தில் பெரும்பாலானவற்றை மதுவுக்கே அர்பணிக்கின்றனர். பள்ளி குழந்தைகள் கூட இன்று குடிக்கு அடிமையாகி உள்ளனர். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அரசு தனது அதிகாரிகளை மதுவின் விற்பனையை அதிகமாக்குங்கள் என்று அதிகாரத்தால் மிரட்டவும் செய்கிறது. தமிழகத்தின் வருங்காலத்தை நினைத்தால் திகிலாக இருக்கிறது. இறைவன்தான் எனது நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: –

“நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: –

நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபிகள் அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: –

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்கள் உடல் அடக்கம்!





இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 654, 721, 2829,

------------------------------------------------

இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப் படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!

இந்த துஆவை நபிகள் நாயகம் அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 1600

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 8

படம் ஒன்றில் உள்ள தனி எழுத்தைப் பாருங்கள். தமிழில் நாம் எழுதும் எழுத்தான 'ய' வை ஒத்துள்ள இந்த குறியானது அரபு எழுத்துக்களின் மேல் வந்தால் அதற்கு 'ஷத்த' என்று சொல்வர். ஒரு மெய் எழுத்தும் ஒரு உயிர் மெய் எழுத்தும் ஒரே எழுத்தாக அடுத்தடுத்து வந்தால் அதனை ஒரு எழுத்தாக சுருக்க இந்த குறியை பயன் படுத்துகிறோம். மெய்யெழுத்தின் மீது ஷத்த குறியை இடுவதின் மூலம் அந்த எழுத்தானது இரட்டிப்பாகும்.

دَرَّسَ என்ற எழுத்தை முழுவதுமாக எழுத வேண்டுமானால் دَرْرَسَ என்றுதான் எழுத வேண்டும். ر என்ற எழுத்தானது இங்கு இரண்டு முறை வந்துள்ளது. இங்கு ஷத்த என்ற குறியை பயன்படுத்தி அந்த வார்த்தையை மூன்று எழுத்துக்களாக சுருக்கியுள்ளோம். இதே போல் அட்டவணையில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் படித்து மனனம் செய்து கொள்ளுங்கள். அட்டவணையில் உள்ள எழுத்துக்களை முறையே ஃபர்ருன், லல்லுன், பBர்ருன், ஸத்துன் என்று வரிசையாக படித்து பழகி வாருங்கள்.

'ألله' அல்லாஹ் என்ற வார்த்தையில் 'ல்லா' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.

مُحَمَّدٌ முஹம்மதுன் என்ற வார்த்தையில் 'ம்ம' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.


الرَّسُوْلُ 'அர்ரசூலுன்' என்ற வார்த்தையில் 'ர்ர' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.

الرَّحِيمِ 'அர்ரஹீம்' என்ற வார்த்தையில் 'ர்ர' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.

الرَّحْمَٰنِ 'அர்ரஹ்மான்' என்ற வார்த்தையில் 'ர்ர' என்ற இரண்டு எழுத்துக்களை ஷத்தாவின் உதவியோடு ஒரு எழுத்தாக எழுதுகிறோம்.

இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.







Wednesday, September 16, 2015

கடிகாரம் செய்த சிறுவனை விலங்கிட்ட அமெரிக்க போலீஸார்!





14 வயதான அஹமத் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரு பள்ளியில் படித்து வந்தான். அறிவியல் கண்டு பிடிப்புகளில் அதிக ஆர்வம் உடைய அவன் விட்டிலேயே தனது சொந்த முயற்சியில் ஒரு கடிகாரத்தை செய்துள்ளான். ஆர்வ மிகுதியால் அதனை தனது வகுப்பு ஆசிரியர்களிடம் காட்ட பள்ளிக்கும் எடுத்து வந்துள்ளான். இதனை பார்த்த ஆசிரியர் பயந்து போய் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவலர்கள் மாணவன் அஹமதை பள்ளி வளாகத்திலேயே கை விலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவன் அஹமத் அதிர்ச்சியில் உறைந்தே போனான். 14 வயது இளைஞனை பலரின் முன்னிலையில் கை விலங்கிட்டு அழைத்துச் செல்வது எவ்வளவு பெரிய கொடுமை. காரணம் அவனது பெயர் அஹமத். அவன் ஒரு முஸ்லிம்.

இந்த செய்தி அமெரிக்கா மற்றும் உலகெங்கும் பரவவே பலரும் அஹமதுக்கு ஆதரவாக களமிறங்கினர். #IStandWithAhmed என்ற பெயரில் ஹேஸ் டேக் உருவாக்கி அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் அனைத்து மக்களும் சிறுவனுக்கு ஆதரவாக களமிறங்கினர். முடிவில் சிறுவன் விடுவிக்கப்பட்டான். இன்று விடுவிக்கப்பட்டாலும் அந்த சிறுவனின் மனதில் இந்த செயல் மாறாத வடுவை எற்படுத்தியிருக்கும் அல்லவா?

'Cool clock, Ahmed. Want to bring it to the White House? We should inspire more kids like you to like science. It's what makes America great.'

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனது ட்விட்டர் தளத்தில் அஹ்மதை வெள்ளை மாளிகைக்கு கடிகாரத்தோடு வரவேற்றுள்ளார்.

ஒரு முஸ்லிமாக இந்த உலகத்தில் வாழ்வது எந்த அளவு சிரமமான காரியம் என்பதை அஹமதின் இந்த கைது நமக்கு விளக்குகிறது. இந்த உலகம் இன்று அஹமதையும் அவன் சார்ந்த மார்க்கத்தையும் ஏசலாம்: இழிவுபடுத்தலாம்: குர்ஆனில் இறைவன் கூறுவது போல் :இந்த உலகம் உண்மையான இறை விசுவாசிகளுக்கு ஒரு பரிசோதனைக் கூடம்' என்ற வாக்கியம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

எத்தனை சோதனைகள் அவச் சொற்கள் வந்தாலும் இறை நம்பிக்கையை மட்டும் ஒரு முஸ்லிம் விட்டு விட மாட்டான் என்பதை உரக்கச் சொல்வோம் இந்த உலகுக்கு!

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு இறை நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” என்று நாம் ஆறுதல் கூறினோம்.

குர்ஆன் 2:214



தகவல் உதவி
கார்டியன்
16-09-2015

வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகை வழங்க மன்னர் உத்தரவு!



சென்ற செப்டம்பர் 11 அன்று நடந்த மெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்கு வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகையை வழங்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். போன உயிர் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் சொந்தங்களை இழந்தவர்களுக்கு இந்த பொருளுதவியானது மிக உதவிகரமாக இருக்கும்.

பின் லாடன் குரூப்பின் பாக்கர் பின் லாடன் முதல் முக்கிய அதிகாரிகள் வரை எவரும் நஷ்ட ஈட்டுத் தொகையை அளிக்காமல் சவுதியை விட்டு வெளியேற முடியாது என்ற கண்டிஷனும் போடப்பட்டுள்ளது.


- இறந்தவர்களின் எண்ணிக்கை : 111

- காயமுற்றவர்கள் : 238+

- இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு - 1 கோடி, 78 லட்ச ருபாய்

- காயமடைந்தவர்களுக்கு - 89 லட்ச ருபாய்

- இந்த நஷ்ட ஈடு, பாதிக்கப்பட்ட மக்கள் கோர்டில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வதை தடுக்காது

- சவுதி அரசு செலவில், இறந்து போனவர்களின் குடும்பத்தினர் இருவர் அடுத்த வருடம் ஹஜ் செய்யலாம்

- இந்த வருடம் ஹஜ் செய்ய முடியாத நிலையில் காயமுற்றவர்கள், அடுத்தவருடம் மன்னரின் விருந்தினராக ஹஜ் செய்யலாம்

- காயமுற்றவர்களின் குடும்பத்தினருக்கு சவுதியில் தங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள பயண விசா அளிக்கப்படும்

" "என்னுடைய 50 வருட ஊடக துறையில், எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான நஷ்ட ஈடு அளித்ததாக நான் கேள்விபட்டதே இல்லை", என்று அமெரிக்காவை சார்ந்த, பத்திரிக்கையாளர் கமர் அப்பாஸ் ஜாப்ரி கூறியுள்ளார்.

போபாலில் நடந்த விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனம் இன்று வரை முழுமையான இழப்பீட்டுத் தொகையை அந்த மக்களுக்கு வழங்கவில்லை. அதே நேரம் விபத்து நடந்த சில நாட்களிலேயே அதற்கு முடிவையும் கண்ட மன்னர் சல்மானுக்கு இறைவன் மேலும் அபிவிருத்தியை தந்தருள்வானாக!

துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு

ஒரு முறை நபிகள் நாயகம் அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது...

"தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது" என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள்,

"யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா?" என்று கேட்டபோது,

"ஆம்," என்று கூறி விட்டு "என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர" என்று கூறினார்கள்.

ஆதாரம் : (புஹாரி-969, திர்மிதி-688)

துல் ஹஜ்ஜின் முதல் 10 நாட்களில் நம்மால் முடிந்த நல்ல அமல்களை அதிகம் அதிகம் செய்து இறைவனின் நெருக்கத்தைப் பெறுவோமாக!

ஃப்ரான்சில் மேலாடையை கழற்றி பெண்கள் ஆர்ப்பாட்டம்!



சென்ற சனிக்கிழமை ஃப்ரான்ஸில் இஸ்லாமிய கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது. திடீரென 'ஃபெமின்' என்ற பெண்கள் அமைப்பைச் சார்ந்த இரண்டு பெண்கள் மேலாடை இன்றி மேடையினுள் புகுந்து மைக்கை வீசி எறிந்தனர். 'எங்களை யாரும் கட்டுப் படுத்த முடியாது' 'நான் தான் எனக்கான இறைத் தூதர்' என்ற வாசகங்களை உடலில் எழுதிக் கொண்டு காட்டுக் கூச்சலை எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விழா குழுவினர் உடன் அந்த இரண்டு பெண்களையும் அரங்கத்திலிருந்து கட்டாயப் படுத்தி வெளியேற்றினர்.

இஸ்லாம் இவர்களை எந்த அளவு கோபப்படுத்தியுள்ளது என்பது தெரிகிறது. மேலாடையின்றி அரங்கினுள் புகுந்த இந்த விபசாரிகளுக்கு பெயர்தான் பெண் உரிமையை பேணுபவர்கள் என்ற பெயராம். இதுதானா பெண்ணுரிமை. தாய்மைக்கே களங்கத்தை ஏற்படுத்தும் கழிசடைகள் இவர்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காத விஷமிகள் இந்த பெண்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள். இந்த பெண்களுக்கும் நேர் வழி கிடைக்க நாம் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி
க்ளோபல் நியூஸ்
14-09-2015

Tuesday, September 15, 2015

குர்ஆனை வியந்து போற்றிய இந்தி நடிகர் நானா படேகர்!



மகாராஷ்ட்ராவில் வறுமையினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த விவசாயிகளுக்கு உதவும் முகமாக மகாராஷ்ட்ராவில் உள்ள மராத்வாடா மாவட்டத்தில் லாட்டூர் மற்றும் உஸ்மானாபாத்தில் உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த உதவியை இந்தி குணசித்திர நடிகர் நானா படேகர் தனது சொந்த செலவில் வழங்குகிறார். சென்ற ஆகஸ்ட் 10 ந் தேதி 62 ஏழை விவசாயிகளுக்கு தலா 15000 வீதம் ஏழை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 113 ஏழை விவசாயிகளுக்கு தலா 15000 ரூபாயை நன்கொடையாக அளித்தார் நானா படேகர்..

அந்த விழாவில் அவர் பேசும் போது ....

'விவசாயிகளே! தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்! வாழ்க்கையில் போராட பழகிக் கொள்ளுங்கள். இஸ்லாமிய விவசாயிகளையும் பாருங்கள். அவர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உங்களைப் போல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஏனெனில் புனித குர்ஆன் தற்கொலை செய்து கொள்வதை பாவம் என்று அவர்களுக்கு போதிக்கிறது. இந்த அறிவுரையானது எனது மனதை மிகவும் தொட்ட ஒன்று.

சரத் பவார், நாராயண் ரானே போன்ற தலைவர்கள் அரசியல் பாகுபாடுகளை தூரமாக்கி ஏழை விவசாயிகளின் துயர் துடைக்க முன் வருவார்களாக! அவர்களின் விளைந்த பொருட்களின் விலையை ஸ்திரப்படுத்த முயற்சிக்க வேண்டும்' என்று தனது உரையில் கேட்டுக் கொண்டார்.

தகவல் உதவி
பிஸினஸ் ஸ்டேண்டர்ட்
06-09-2015

எதற்கெடுத்தலும் குர்ஆனையே பிடித்து ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு நானே படேகரின் இந்த விளக்கம் சிறந்த பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குர்ஆனின் மகிமையை அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழும் முஸ்லிம்கள் நன்கு உணர்ந்ததாலேயே அதனை இந்த அளவு மதிக்கின்றனர். குர்ஆனின் அருமையும் பெருமையும் அதனை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

On the percentage of suicide of Muslim farmers being negligible, Patekar said, "This is because Holy Quran terms suicide as a sin and the betrayal of God's will. This teaching of Quran touches my heart," the actor added.


http://www.business-standard.com/article/pti-stories/nana-patekar-gives-aid-to-kin-of-farmers-who-committed-suicide-115090600617_1.html

ஏ ஆர் ரஹ்மான் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார்!



இந்த கடிதமானது என்னைப் பற்றி சமீபத்தில் வெளியான ஃபத்வாவைப் பற்றியது.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

இறைவன் நமக்கும் நபிகள் நாயகத்துக்கும் தனது அளப்பரிய கருணையைப் பொழிவானாக!

"ஒருபோதும் இறைவன் விதித்ததைத் தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று நபியே! நீர் கூறும்; நம்பிக்கையாளர்கள் இறைவனின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக

குர்ஆன் 9:51


'மெசஞ்சர் ஆஃப் காட்' படத்துக்கு நன்னம்பிக்கையின் அடிப்படையில்தான் இசையமைத்தேன் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல


"முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்

ராஸா அமைப்பைச் சேர்ந்த நூரி என்பவர், 'இப்படியான படத்தை ஏன் தடுக்கவில்லை' என அல்லா, என்னிடம் கேட்டால் என்ன செய்வது?' என்று பேசியிருந்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் இதே மாதிரியான காரணத்துக்காகத்தான். மறுமையில் அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்று, மனித இனத்தை ஒன்றிணைப்பது, தவறான புரிதல்களை சரிசெய்வது, அன்பைப் பற்றிய போதனைகளை, ஏழைகளின் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளை பரப்புவது, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை விடுத்து மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன செய்வது?

இன்று நபிகள் நாயகம் குறித்த பல தவறான கருத்துக்களை இணையத்தில் காண முடிகிறது. சரியான புரிதல் இல்லாததால்தான் இந்த நிலை. இத்தகைய விஷயங்களை அன்பாலும் கனிவாலும் எதிர்கொள்ள வேண்டும்.

மேலும், காட்சி ஊடகத்தின் வாயிலாக மக்களிடம் சரியான விஷயங்களை கொண்டு சேர்த்து புரியவைக்க வேண்டும் என்றும் நான் எப்போதும் நினைத்திருந்தேன்.

மத சுதந்திரம் இருக்கும் இந்திய நாட்டில் வாழும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்துள்ளது. இங்கே அனைவரது நோக்கமும் அமைதியான, வன்முறையில்லாத வாழ்க்கையை வாழ்வதே.

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். இங்கும், மேற்கிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.

பிரச்சினையை கருணையோடும், கண்ணியத்தோடும் கையாள்வோம்; வன்முறையால் அல்ல. மன்னிப்புக் கோருவோம், உலகில் துன்புறுபவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நபிகளின் இயல்பை பிரதிபலிப்பது போலவே பிரார்த்தனை செய்வோம்"

வணங்கும் மக்களுக்கு இதில் இக்குர்ஆனில் நிச்சயமாகப் போதுமான வழிகாட்டுதல் இருக்கிறது.

குர்ஆன் 21:107


என்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது முக நூல் பக்கத்தில் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

----------------------------------------------------

ரஹ்மானுக்கு ஃபத்வா கொடுத்த நூரி காதிரியிடம் சில கேள்விகளை நானும் முன் வைக்கிறேன்.


நூரி அவர்களே,

1) நபிகள் நாயகம் அவர்களுக்கே கொடுக்க கூடாத வழிபாட்டு முறையை தர்காகளில் இறைநேசர்கள் என்று கூறி அவர்களுக்கு ஏன் கொடுத்தீர்கள், அதை ஏன் தடுக்கவில்லை என்று அல்லாஹ் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

2) பெண்ணுக்கு மஹர் கொடுக்காமல் மணமகன் வரதட்சனை வாங்கும், திருமணத்தை ஏன் முன் நின்று நடத்தி வைத்தீர்கள் என்று அல்லாஹ் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

3) தலாக்குக்கு குர்ஆனில் அல்லாஹ் சொல்லியதற்கு மாற்றாக கூறப்படும் முத்தாலக்கை ஏன் தடுக்கவில்லை என்று அல்லாஹ் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். இப்படி எத்தனையோ கேள்விகள் நம்மை நோக்கி மறுமையில் வர இருக்கிறது. எனவே இந்த கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இருக்கிறதா எனபதை சிந்தித்து பாருங்கள்.

Monday, September 14, 2015

நேபாளம் இந்து ராஷ்ட்ராவாக மாற உறுப்பினர்கள் எதிர்ப்பு!



'ஹிந்து நேஷனல் டெமாக்ரடிக் பார்டி' என்ற இந்துத்வா அமைப்பு நேபாளத்தை 'இந்து ராஷ்ட்ராவாக' அறிவிக்கச் சொல்லி கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஒட்டி பேரணியும் நடத்தியது. நேபாள பாராளுமன்றத்தை நோக்கி கோஷங்களை எழுப்பிச் சென்றது. ஆனால் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்துத்வா கோரிக்கைக்கு ஆதரவு இல்லை. மூன்றில் இரண்டு சதமான உறுப்பினர்கள் தங்கள் நாடு 'இந்து ராஷ்ட்ராவாக' மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர். முடிவில் இந்துத்வாவாதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மத சார்பற்ற நாடாகவே இனி நேபாளம் தொடரும்.

'இந்து ராஷ்ட்ராவாக' நேபாளத்தை மாற்றினால் மாடு அறுக்க தடை போடுவர். நேபாளிகளின் முக்கிய உணவே மாட்டுக் கறிதான். இதனை இங்கு சவுதியிலும் நான் நேரிலேயே பார்கிறேன். மேலும் பெரும்பாலான நேபாளிகள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்கின்றனர். புதிய பள்ளி வாசல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேபாளம் இந்து ராஷ்ட்ராவாக மாறினால் மத மாற்ற தடை சட்டத்தையும் கண்டிப்பாக கொண்டு வருவர். எனவே நேபாள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலை நாமும் வரவேற்போம்.

இந்துத்வாக்களின் கோரிக்கை தோல்வியடைந்த ஆத்திரத்தில் இந்துத்வாவாதிகள் பாராளுமன்றத்தை நோக்கி ஆக்ரோஷமாக வருவதைத்தான் நாம் புகைப்படமாக பார்கிறோம். பார்கிறோம். எந்த நாட்டிலும் இவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
14-09-2015

ஹிந்தி சமஸ்கிரதம் தெரியாததால் சிரமப்பட்டேன்!



"ஹிந்தி சமஸ்கிரதம் தெரியாததால் சிரமப்பட்டேன்!" - மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன்.

ஆமா...ஆமா.... அப்படியே நீங்க ஹிந்தியையும் சமஸ்கிரதத்தையும் கரைத்து குடித்து விட்டாலும் அவாளுக்கு சரி நிகர் சமானமாக உட்காரவாவது முடியுமா? ஒரு மத்திய அமைச்சருக்கே இந்த நிலை. இதில் சமஸ்கிரதம் வாழ்ந்து இந்துக்களுக்கு என்ன பயனை தந்து விடப் போகிறது?

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119

இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் 80 சதமான பேர் உண்மையான இஸ்லாம் என்ன என்பதை விளங்காமல் பல பிரச்னைகளை தங்களுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்துக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் 'இவை எல்லாம் எங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சென்று விட்டு விடும்' என்று வேறு சொல்கிறார்கள்..

மேலே உள்ள நபி மொழியில் சில நல்லறங்களை நான் செய்யாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பதிலை நாம் பார்க்கிறோம். ஷியாக்களுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் பகை: இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை: கிறித்தவர்களுக்கும், பவுத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை: தவ்ஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வணங்கிகளுக்கும் பகை: என்று எங்கு நோக்கினாலும் பிரச்னைகளே!

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை. இதற்கு அவர்களின் வேதங்களே தடையாக இருப்பதை ஏனோ இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை: முதலில் சக மனிதனை நிம்மதியாக வாழ வைத்தால்தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்று உலக மதங்கள் அனைத்துமே கூறுகிறது. ஆனால் மனித மனம் இதனை சிந்திப்பதில்லை. தலைவர்கள், இயக்கங்கள், குழுக்கள் என்ற பெயரில் அவரவர்க்கு தோதான வசனங்களை பிடித்துக் கொண்டு தினமும் ரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே! இவர்கள் நல்லது செய்யா விட்டாலும் சும்மா இருந்தாலே போதும்: பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். அதாவது உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமில்லையா?

சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்:

Sunday, September 13, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 7

தமிழின் மெய் எழுத்துக்களின் மேல் சிறு சுழி அல்லது புள்ளியிடுவதைப் போல க், ங், ச், ஞ், ட், ண் அரபியில் எழுத்துக்களின் மேல் புள்ளியிடுவதை சுக்குன் - Sukūn – سُكُون என்கிறோம். தமிழைப் போலவே இதற்கும் அரை மாத்திரை அளவே உச்சரிப்பில் வரும்.




---------------------------------------------


இகர வரிசையில் உள்ள எழுத்துக்களை இகர நெடிலாக மாற்றுவதற்கு எழுத்துக்களுக்கு பின்னர் சுக்கூன் பெற்ற யா ي சேர்த்தால் அந்த எழுத்தை இகர நெடிலாக படிக்கவேண்டும் ஈ, பீ, தீ, சீ இதைப்போன்று.


اِيْ ஈ

بِيْ பீ

تِيْ தீ

ثِيْ சீ

جِيْ ஜீ

سِيْ ஸீ

رِيْ ரீ

زِيْ சீ

سِيْ ஸீ

شِيْ ஷீ

ضِيْ ழீ

தற்போது இகர நெடிலில் சுக்கூன் எவ்வாறு பயன்படுகிறது என்று விளங்கிக் கொண்டோம். அகரம், இகரம், உகரம் சுக்கூன், ஃபதஹ என்ற இலக்கண வார்த்தைகள் உங்களுக்கு புரிவதில் சிரமம் ஏற்பட்டால் எழுத்துக்களை மட்டும் மனனம் செய்து கொள்ளுங்கள். ஒன்றுக்கு இரண்டு முறை எழுதி பழகுங்கள். தானாகவே உங்களுக்கு மொழி புரிய ஆரம்பிக்கும்.

உகர வரிசையில் உள்ள எழுத்துக்களை உகர நெடிலாக மாற்றுவதற்கு எழுத்துக்களுக்குப் பின்னர் சுக்கூன் பெற்ற و என்ற எழுத்து வர வேண்டும். அதன் உதாரணங்களைப் பார்போம்.

اُوْ ஊ

بُوْ பூ

تُوْ தூ

ثُوْ சூ

جُو ஜூ

حُوْ ஹூ

دُوْ தூ

رُوْ ரூ

سُوْ சூ

شُوْ ஷூ

ظُوْ ழூ

இப்போது சுக்கூன் இங்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை விளங்கிக் கொண்டோம். சொல்லப்பட்ட பாடங்களை தொடர்ந்து எழுதியும் படித்தும் வாருங்கள். விளங்காத சில இடங்களை நண்பர்களிடம் கேட்டு விளங்கிக் கொள்ளுங்கள்.

இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.





மத்திய பிரதேச உயிரிழப்புக்கு காரணம் ராஜேந்திர கேசவா!



மத்திய பிரதேசம் ஜபுவா மாவட்டம் பெட்லவாடா டவுனில் 104 பேர் இறக்க காரணமாயிருந்த வெடி விபத்துக்கு முக்கிய காரணகர்த்தா ராஜேந்திர கேசவா. இவனுக்கு எதிராக மத்திய பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இவன் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளான். விவசாய சம்பந்தமான அலுவலகம் என்று கூறியுள்ளான். ஆனால் எண்ணிலடங்கா ஜெலட்டின் குச்சிகளை தனது அலுவலகத்தில் சேகரித்து வைத்துள்ளான். இதன் காரணமாக அனைத்தும் வெடித்து சிதறியுள்ளது. உடல்களும் தூக்கி எறியப்பட்டுள்ளன. கீழே உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களும் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

விவசாய பண்ணை நடத்துபவருக்கு இத்தனை ஜெலட்டின் குச்சிகள் எதற்கு? இவனுக்கு அதனை கொடுத்தவர்கள் யார்? எந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக இவ்வளவு ஜெலட்டின் குச்சிகளை இவன் சேகரித்து வைத்தான் என்று அரசு தீர விசாரிக்க வேண்டும்.

பக்ரீத் பண்டிகையும் நெருங்குகிறது. அதனை குறி வைத்து இவன் இத்தனை வெடி மருந்துகளை பதுக்கினானா என்பதையும் விசாரிக்க வேண்டும். இவ்வளவு பெரிய உயிரிழப்பு நடந்துள்ளது. ஆனால் நமது ஊடகங்களோ முக்கிய சூத்திதாரியான ராஜேந்திர கேசவனைப் பற்றிய எந்த செய்தியும் வெளியிடவில்லை. இதே ஒரு முஸ்லிமின் பெயராக இருந்திருந்தால் கண் காது மூக்கு வைத்து திரைக் கதை வசனமெல்லாம் எழுதப்படடிருக்கும்.

இறந்தவர்களுக்கு 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50000 மும் அரசு தரப்பில் தரப்படும் என்று முதலமைச்சர் சவுஹான் அறிவித்துள்ளார். ராஜேந்திர கேசவன் யார்? அவனுக்கும் இந்துத்வாவுக்கு உள்ள தொடர்புகள் என்ன என்பதை சவுஹான் ஆர்எஸ்எஸ் பாசத்தை தூரமாக்கி தீர விசாரிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அப்பாவிகளின் உயிர் இனிமேலாவது காப்பாற்றப்படும்.

தகவல் உதவி
ஆசியன் டைம்ஸ்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
12-09-2015

Saturday, September 12, 2015

பாலஸ்தீன் கொடி இனி ஐநாவில் பறக்கும்!





193 உறுப்பினர்களில் 119 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாலஸ்தீன் கொடியை ஐநாவில் பறக்க விட அனுமதி பெறப்பட்டது. வழக்கமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இவர்களோடு சேர்த்து எட்டு ஐரோப்பிய நாடுகளும் எதிராக வாக்களித்தன. ஆனால் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன் பக்கம் நின்றதால் வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்தது. ஃப்ரான்ஸ் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.

'இந்த முயற்சியானது வருங்காலத்தில் ஐநாவில் முழு அங்கீகாரத்துடன் தனது கோரிக்கைகளை பாலஸ்தீன் வைக்க மிக ஏதுவாக இருக்கும். இது அதற்கான முதல் படி' என்கிறார் பாலஸ்தீன் பிரதமர் ரமி ஹம்துல்லா.

ஐநாவின் அமெரிக்க தூதர் தனது கருத்தாக சொல்லும் போது 'கொடி பறந்து விடுவதாலேயே இஸ்ரேலிய மக்களும் பாலஸ்தீன மக்களும் ஒற்றுமையாகி விட மாட்டார்கள்' என்று சொல்லியுள்ளார். இவர்களுக்கு அமைதி என்பதே உலகில் இருக்கக் கூடாது. எந்த குடி கெட்டாலும் அதில் தனது நாடு சுரண்டி கொழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலைபவர்கள் இந்த அமெரிக்கர்கள். இந்த அரசியல் சூழ்ச்சிகள் ஒரு நாள் அமெரிக்காவுக்கு எதிராகவே திரும்பக் கூடும். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை. நம் காலத்திலேயே அமெரிக்காவுக்கு தக்க பாடத்தை இறைவன் புகட்டுவானாக!

தகவல் உதவி
கார்டியன்


Friday, September 11, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 6

இந்த பாடத்தில் 'தன்வீன்' என்றால் என்ன என்பதையும் அதனை எவ்வாறு உச்சரிப்பது என்பதனையும் பார்போம்.



ﺑَﻦْ ---- بً

பன் - BAN என்ற இரண்டு எழுத்தை சுருக்கி ஒரு எழுத்தாக இங்கு பார்கிறோம். இரட்டை பதஹ குறியை எழுத்தின் மேல் எழுதினால் அங்கு இரண்டு எழுத்துக்கள் மறைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.

كِتـَابًا (ki-taa-ban) கி - தா - பன் ---------- கிதாபன் என்று உச்சரிக்க வேண்டும்.

படம் ஒன்றில் உள்ள எழுத்துக்களை அன், பன், தன், ஸன், ஜன், ஹன்....என்று உச்சரிக்க வேண்டும்.

-------------------------------------------------

ﺑُﻦْ ----- بٌ

புன் - BUN என்ற இரண்டு எழுத்தை சுருக்கி ஒரு எழுத்தாக இங்கு பார்கிறோம். இரட்டை தம்மஹ் குறியை எழுத்தின் மேல் எழுதினால் அங்கு இரண்டு எழுத்துக்கள் மறைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.



படம் இரண்டில் உள்ள எழுத்துக்களை முறையே உன், புன், துன், ஸீன், ஜீன் என்று படிக்க வேண்டும்.

كِتـَابٌ (ki-taa-boon) கி - தா - புன் -------- கிதாபுன் என்று உச்சரிக்க வேண்டும்.
-----------------------------------------------

ﺑِﻦْ ---- بٍ

பின்- BIN என்ற இரண்டு எழுத்தை சுருக்கி ஒரு எழுத்தாக இங்கு பார்கிறோம். இரட்டை கஸர குறியை எழுத்தின் மேல் எழுதினால் அங்கு இரண்டு எழுத்துக்கள் மறைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.



படம் மூன்றில் உள்ள எழுத்துக்களை இன், பின், தின், ஸின், ஜின், ஹின்..... என்று அனைத்தையும் உச்சரித்து பழகுங்கள்.

كِتـَابٍ (ki-taa-bin) கி - தா - பின் ------- கிதாபின் என்று உச்சரிக்க வேண்டும்.

மேலே கொடுத்துள்ள உதாரணங்களை எழுதியும் படித்தும் வாருங்கள். மேலும் விரிவாக இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் தொடர்வோம்......

ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக ஃபத்வா!





பிரபல இரானிய திரைப்பட இயக்குனர் மஜீத் மஜீதியின் 'இறைவனுடைய தூதுவர்' என்ற பெயரில் வெளிவந்துள்ள படம் தற்போது உலகமெங்கும் பேசப்படுகிறது. இந்த படத்தில் பணி புரிந்துள்ள இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராகவும் .பத்வா கொடுக்கப்பட்டுள்ளது. சுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த 'ரஜா அகாடமி' என்ற அமைப்பு இந்த ஃபத்வாவை கொடுத்துள்ளது. இதற்கு ஆதாரமாக மும்பையின் தலைமை முஃப்தி முஹம்மது அக்தர் கொடுத்த ஃபத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளது.

மஜீத் மஜீதியும், ஏ ஆர் ரஹ்மானும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்களாம். இவர்கள் செய்த திருமணமும் செல்லாதாம். புதிதாக கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைய வேண்டுமாம். இதற்கு இவர்கள்' கூறும் காரணம் 'படத்தில் முகமது நபியின் இளமைக் காலத்தை ஒரு நடிகனை வைத்து காட்டுகிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகன் வெளியில் யோக்கியமாக இருப்பானா? இது இஸ்லாத்துக்கு புறம்பானது'என்று இதற்கு காரணத்தை சொல்கின்றனiர்.

ஒருவரை இஸ்லாத்தை விட்டு நீக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. இது சம்பந்தப்பட்டவருக்கும் இறைவனுக்கும் இடையிலான பிரச்னை. வெளிப்படையாக ஒருவர் ஏக இறைவனை மறுக்கிறார். முகமது நபி கடைசி இறைதூதர் என்பதையும் பகிரங்கமாக மறுத்தாலேயே ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராக கருத முடியும். இது அல்லாமல் சகட்டு மேனிக்கு முல்லாக்கள் கொடுக்கும் எந்த ஃபத்வாவும் எவரையும் கட்டுப்படுத்தாது.

மேலும் மஜீத் மஜீதி தனது பேட்டியில் 'ஷியா சன்னி இரண்டு பிரிவினரும் ஒத்துக் கொள்ளக் கூடிய சம்பவங்களையும் ஆதாரபூர்வமான ஹதீதுகளையும் கொண்டே இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். இதுவரை இஸ்லாம் சம்பந்தமாக மேற்குலகம் வைத்திருக்கும் பார்வையானது இந்த படத்தின் மூலம் தகர்த்தெறியப்படும்' என்று கூறியுள்ளார். ஆஸ்காருக்கே பரிந்துரைக்கப்பட்ட உலக அளவில் பிரசித்திப் பெற்ற இயக்குனர் மஜீத் மஜீதி. எனவே சிறந்த முறையில் படத்தை இயக்கியிருப்பார் என்றே எண்ணுகிறேன்.

படத்தை பார்த்து விட்டு வந்த ஈரானியர்கள் மிக சிறப்பாக படம் வந்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்கள். சினிமா என்பது மிகச் சிறந்த சாதனம். அதனை இது வரை நாம் சரியாக பயன்படுத்தவில்லை. முயற்சி எடுக்கும் ஓரிருவரையும் இவ்வாறு காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நபியாவதற்கு முன்பு அன்றைய அரபுலகம் எவ்வாறு இருந்தது என்பதையே பிரதானமாக இதில் காட்டியுள்ளார்கள். நபியாக ஆனதற்கு பிறகு உள்ள சரித்திரக் குறிப்புகள் அடுத்த பாகத்தில் வரும். அதில் நபிகள் நாயகத்தை காட்ட மாட்டார் என்றே நினைக்கிறேன். 'தி மெஸ்ஸேஜ்' படத்தைப் போன்றுதான் அதுவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும் இசையை பொறுத்தவரை குர்ஆன் நேரிடையாக தடையை விதிக்கவில்லை. சில ஹதீதுகள் இசையை தடுக்கின்றன. சில ஹதீதுகள் இசையை ஆதரிக்கின்றன. இதன் மூலம் நாம் இசைக்கு அடிமையாகி விடாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து புலனாகிறது. நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாளின் நேரம் மிக முக்கியமானது. சிலர் பெருமபாலான நேரத்தை இசையை கேட்பதிலேயே செலவிடுகின்றனர். அதிலிருந்து நம்மை கட்டுப்படுத்திக் கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏ ஆர் ரஹ்மான் அவர்களே!

ஃபத்வாக்களைப் பற்றி கவலைபட வேண்டாம். நீக்குவதாக இருந்தால் பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் பல லட்சம் இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டி வரும். அப்பாவிகளின் கழுத்தை அறுக்கும் ஐஎஸஐஎஸ், போகோ ஹராம், லஸ்கர் ஏ தொய்பா போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு எதிராக இவர்கள் என்றாவது ஃபத்வா வெளியிட்டுள்ளார்களா? முதலில் அதற்கல்லவா இவர்களின் ஃபத்வாவை வெளியிட்டிருக்க வேண்டும்?

இந்த பதிவை ஏ ஆர் ரஹ்மான் அவர்களே! உங்களின் இன்பாக்ஸிலும் கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை என்று நான் ஃபத்வா கொடுக்கிறேன். உங்களின் பணிகளை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். இவர்கள் பண்ணும் அளப்பறையில் படத்துக்கு இன்னும் விளம்பரம் கூடும். உங்களுக்கு இதன் மூலம் மற்றொரு ஆஸ்கார் விருதும் காத்திருக்கிறது.

படத்தின் டிரெய்லரை நானும் பார்த்தேன். அசந்து விட்டேன்..... படத்தைப் பார்த்த ஒருவரின் விமரிசனம்...

I saw the movie yesterday in cinema, it was really great. The cinematic were incredible. The musics used on the film (by A.R.Rahman ) bring it to the next level! I was a fan of Hobbit and Lord before this movie, but i can tell you that this movie in almost all aspect is as good as them with a simple difference which is that the historic behind it is totally true! that makes a really great feeling. I cried in a lot of scenes of it and goosebumps in the miracles scenes. I repeat that the best positive point of the movie is the music which has been successfully joined with the film.
مزيد من المعلومات

Thursday, September 10, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 5

அரபு இலக்கணத்தில் 'குறில் உயிர்க் குறிகள்' எவ்வாறு எழுத்துக்களில் அமரும் என்று போன பாடங்களில் பார்தோம். இனி அரபு இலக்கணத்தில் 'நெடில் உயிர்க் குறிகள்' எவை என்பதை பார்போம்

أ - அலீஃப், و - வாவ், ي - யா ஆகிய இந்த மூன்று எழுத்துக்களும் அரபி மொழியில் 'நெடில் உயிர்க்குறி' களாக செயல்படும். அது எவ்வாறு என்பதை இனி பார்போம்.

1. அரபு எழுத்துக்குப் பின் 'ا' என்ற உயிர்க்குறி சேரும் போது எழுத்து நெடிலாக எப்படி மாறுகிறது என்று பாருங்கள்.

ب + ا = با ------------ ப + அ = பா

ج + ا = جا ---------- ஜ + அ = ஜா

ح + ا = حا ---------- ஹ + அ = ஹா

ن + ا = نا ----------- ன + அ = னா

د + ا = دا ------------ த + அ = தா

و + ا + وا ----------- வ + அ = வா

ك + ا = كا ----------- க + அ = கா

س + ا = سا --------- ஸ + அ = ஸா

2. அரபு எழுத்துக்குப் பின் 'و' என்ற நெடில் உயிர்க் குறி சேரும் போது அந்த எழுத்து எவ்வாறு உரு மாறுகிறது என்பதையும் இனி பார்போம்.

ب + و = بو ------------- போ - BO

ج + و = جو ------------- ஜோ

ح + و = حو ------------- ஹோ

ن + و = نو ------------- நோ

د + و = دو ------------- தோ - DOW

ك + و = كو ------------ கோ

س + و = سو ------------ ஸோ


அரபு எழுத்துக்குப் பின் 'و' வும் 'தம்மஹ்' குறியீடு அதாவது ஒரு சிறிய சுழி மேலே போடப்பட்டால் 'நெடில் ஊகாரமாக' மாறும்.

بوُ ---- பூ

جوُ ---- ஜூ

حوُ ---- ஹூ

نوُ ---- நூ

دوُ ---- தூ

كوُ ---- கூ

سوُ ---- ஸூ

இப்போது உச்சரிப்பு எவ்வாறு மாறுகிறது என்பதை விளங்கியிருப்பீர்கள்.

3. நெடில் உயிர்க் குறியான 'ي' என்ற எழுத்தும் கஸரவும் சேர்ந்து வந்தால் நெடில் ஈகாரம் உண்டாகும். அதன் உதாரணங்களைப் பார்போம்.

بيِ --------- பீ BEE

جيِ --------- ஜீ

نيِ --------- நீ

كيِ --------- கீ

سيِ --------- ஸீ

இது வரை நாம் படித்ததை ஒன்றுக்கு மூன்று தடவை தொடர்ந்து எழுதி பழகி வருவோம். இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்......








சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம் - அம்பேத்கர்



ஒருவேளை கிறிஸ்த்துவ மிசனரிகள் பழங்குடியினருக்காகச் செய்யும் ஊழியங்களை இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவனால் அதைச் செய்ய முடியாதா?

முடியாது என்றே பனிவுடன் கூறுவேன்.

காரணம் இந்தப் பழங்குடி மக்களை நாகரிக மக்களாக ஆக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினராக நடத்த வேண்டும். அவர்களுள் ஒருவராக வாழ வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்களை நேசிக்க வேண்டும். ஓர் இந்து இவற்றை எல்லாம் செய்வது சாத்தியப்படுமா?

தன் சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம்; தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்கவொண்ணாத பெரும் சொத்து; எப்பாடு பட்டாவது ஒவ்வொரு இந்துவும் அதைக் காப்பாற்றியேத் தீர வேண்டும். வேதகாலத்து ஆரியரல்லாதவர்களின் வழிவந்த பழங்குடிமக்களோடு தொடர்பு கொள்வதன் மூலம் சாதி என்னும் உடைமையை இழக்க எந்த இந்துவாலும் முடியாது..

பாபாசாகேப் அம்பேத்கர்
நூல் தொகுப்பு
தொகுதி 1, பக்கம் 76-77.
(நன்றிஅம்பேத் ரங்கா.
கீழா100 பகுஜன் சமாஜ் கட்சி.)

இந்து - பவுத்த மாநாட்டில் நரேந்திர மோடி சொன்ன கதை!



புதுடெல்லியில் நடைபெற்ற "போராட்டத் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுக்கான இந்து-பவுத்த முனைப்பு" என்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி நேற்று பேசியதாவது....

இந்தியாவில் அக்காலத்தில் இப்படித்தான் பல முக்கிய பிரச்சினைகளுக்கு அறிஞர்களிடையே வாதங்கள் நடைபெற்றன என்றாலும், அவை வீதிக்கு வரவில்லை. ஆதிசங்கரரும் மண்டன மிஸ்ராவுக்கும் இடையே நடந்த வாதங்களில் சங்கரரே வெற்றி பெற்றார். இதில் மிக முக்கியமானது வாதங்கள் பற்றியது அல்ல. ஆனால், அவை எவ்வாறு நடத்தப்பட்டன என்பதுதான். மனித இனம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வாதங்களில் மிக உயர்ந்தவை என்பதை இந்நிகழ்ச்சி விளக்கும்.

இந்த வாதங்களில் மண்டன மிஸ்ரா தோற்றுப்போனால், அவர், இல்லறத்தை விட்டு துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆதிசங்கரர் தோல்வியடைந்திருந்தால், துறவறத்தை விட்டுவிட்டு இல்லறத்திற்கு அவர் மாறவேண்டும்.

மண்டன மிஸ்ரா ஒரு சிறந்த அறிஞர். அவர், ஆதிசங்கரர் இளைஞனராக இருந்ததால், தமக்கு சமமாக அவரை கருதவில்லை ஆகவே தீர்ப்பு கூற சங்கரரே முடிவெடுக்க வேண்டும் கூறினார். அப்போது மண்டன மிஸ்ராவின் மனைவியும் அறிஞருமான அவரை தீர்ப்புக்கூற அழைத்தார்.

மண்டன மிஸ்ரா தோல்வியடைந்தால் அவரது மனைவியை அவர் இழப்பார். ஆனால் என்ன நடந்தது என்று பாருங்கள். மண்டன மிஸ்ராவின் மனைவி. சங்கரரையும், மிஸ்ராவையும் புதிய மலர் மாலைகளை அணியச் சொல்லி அவர்கள் வாதத்தை துவக்குமாறு கூறினார்.

யாருடைய மலர் மாலை வாடிப்போகிறதோ அவர்களே இந்த வாதத்தில் தோற்றவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். ஏன்? ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவரது உடல் உஷ்ணம் அடைகிறது. அதனால் மலர் மாலைகள் வாடிப்போகின்ற நிலை ஏற்படும். கோபம் என்பது தோல்வியின் அடையாளம். இதன் அடிப்படையில் மண்டன மிஸ்ரா வாதத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே அவர் துறவறத்தை மேற்கொண்டு சங்கரருக்கு சீடரானார். இந்த வாதங்களிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், பேச்சுவார்த்தைகளின் தன்மையும், அப்போது கோபத்திற்கு இடம்கொடுக்காமல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்

10-09-2015


'கோபம் என்பது தோல்வியின் அடையாளம்' என்கிறார் நரேந்திர மோடி. 2002ல் குஜஸராத்தில் இவரும் இவரது சங்பரிவாரும் கோபப்பட்டு வன்முறை இறங்கியதை இந்துத்வாவின் தோல்வி என்பதை ஒத்துக் கொள்கிறாரா?

ஊருக்கு உபதேசம் செய்யும் நரேந்திர மோடி அவர்கள் இதே பொறுமையை குஜராத் கலவரத்தில் காட்டியிருந்தால் 3000 முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். கோதரா ரயில் எரிப்பு ஒரு விபத்து என்பது அறிக்கை. ஆனால் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள அந்த விபத்தை முஸ்லிம்கள் செய்ததாக கற்பனையாக ஜோடித்து நாட்டு மக்களை மோத விட்டு அன்று வேடிக்கை பார்தார் இதே நரேந்திர மோடி. அப்பாவிகளின் சாபம் யாரையும் சும்மா விடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை இறைவன் கண்டிப்பாக கொடுப்பான்.