Wednesday, July 12, 2006

மற்றுமொரு குண்டு வெடிப்பு!

மற்றுமொரு குண்டு வெடிப்பு!

இந்தியர்களை மோத விட்டு குளிர்காய நினைக்கும் கருங்காலிகளின் மற்றுமொரு தாக்குதல் நேற்றைய மும்பாய் குண்டு வெடிப்பு! எத்தனை வயோதிகர்கள், குழந்தைகள், பெண்கள் ரத்தம் தோய்ந்த முகத்துடன் செல்வதைப் பார்க்கும் போது குண்டு வைத்தவர்கள் மனிதப் பிறவிகள் தானா என்று சந்தேகம் வருகிறது. தங்களின் குடும்பத்தில் இது போன்ற இழப்புகளை சந்தித்தால் வலி என்னவென்று அவர்களுக்குப் புரியும்.

எட்டு இடங்களில் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள். நம் உளவுத் துறை என்ன செய்கிறது? மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போதிய பாதுகாப்பை ஏன் ஏற்படுத்தவில்லை? அரசியல் காழ்ப்புணர்ச்சியா? மத தீவிரவாதமா? வல்லராச நினைக்கும் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் மற்ற நாடுகளின் சூழ்ச்சியா? பாகிஸ்தானின் வேலையா? முஸ்லிம்களை சிக்க வைக்க சிவசேனா செய்த சூழ்ச்சியா? போன்ற கோணங்களில் விசாரணை முடுக்கி விடப் பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.அந்தக் கயவர்களை தூக்கிலும் ஏற்ற வேண்டும்.

சொந்தங்களை இழந்து சோகத்தில் இருக்கும் நம் இந்திய சகோதர சகோதரிகளுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!

2 comments:

  1. நடு நிலையான சிந்தனை.
    என்றென்றும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

    ReplyDelete
  2. Thanks Mr Muralidharan.

    Endrum Anbudan
    suvanappiriyan

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)