Followers

Wednesday, January 25, 2012

குருதிக் கொடை ரியாத் மாநகரில்!

இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா ரியாத் மாநகரில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் பல்வேறு கிளைகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள், இரத்த தான முகாம்கள், பாதிக்கப்பட்டோருக்கு அவசர கால நிவாரண உதவிகள், கல்வி விழிப்புணர்வு முகாம்கள், மார்க்க சிறப்பு நிகழ்ச்சிகள், ஜகாத் உதவிகள், உடற்பயிற்சி முகாம், கல்வி உதவிகள் போன்றவற்றை செய்து வருகின்றது. இந்திய குடியரசின் அரசியலமைப்பு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, ரியாத் மாநகரில், கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் மாபெரும் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இது ரியாத் மண்டலம் நடத்தும் 16 ஆவது மெகா இரத்த தான முகாம் ஆகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிந்ததும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். எகிப்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது, TNTJ வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது. அவர்களுள் பலருக்கு பி.ஜெ. அவர்களின் தர்ஜுமா குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



முகாம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் குறிப்பிடும் போது, "இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வெறுமனே கொடியேற்றிவிட்டு கலைவதும், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையுமே பெரும்பாலோர் செய்து வருகின்றனர். தொலைக்காட்சிகளோ சினிமா நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்புவதில்தான் தத்தமது கவனத்தை செலுத்துகின்றன. இந்த நாட்களில் அனைவரும் பயன்பெறும் வகையில் TNTJ பயனுள்ள நல்ல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அதில் ஒரு பாகம் தான் இன்றைய இரத்த தான முகாம். இந்த இரத்த தான முகாம் குறித்த செய்திக்குப் பிறகாவது, நமது குடியரசு தின கொண்டாட்டங்களை மக்கள் பயனுறும் முறையில் அமைத்துக் கொள்ள அனைவரும் உறுதி பூண வேண்டும்" என தெரிவித்தார்.

நாம் அளித்த இந்த குருதிக்கொடை இந்திய விடுதலைக்கு வித்திட்ட முஸ்லிம்களையும் அவர்களது தியாகங்களையும் நினைவுபடுத்தும் விதமாக அமையட்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேரமின்மை மற்றும் இதர காரணங்களால் 270 நபர்கள் பதிவு செய்ததில், 248 நபர்களால் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.

ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன், சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் ஏற்பாட்டிலும், மண்டல தலைமை நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகளும் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்ததானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன.

மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வடிவமைத்திருந்த இரத்த தான முகாம்களுக்கான மென்பொருள் (Software) கொடையாளிகளுக்கிடையே வரவேற்பினைப் பெற்றது. கொடையாளிகள் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதி நாட்டைச் சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் ரியாத் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இச்செய்தி பிரபல நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது.

நன்றி: http://riyadhtntj.blogspot.com/2012/01/riyadthtntj-republic-blood-donation.html

15 comments:

கூடல் பாலா said...

மாபெரும் சேவை !

suvanappiriyan said...

திரு கூடல் பாலா!

//மாபெரும் சேவை !//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ...தொடரட்டும் சேவைகள்...நன்றி...

Anonymous said...

/// தியேட்டர் இல்லாத தமிழகத்தையும் நமது நாட்டையும் பார்ப்பது எந்நாள்? ///

கேட்கவே கொடூமரா இருக்கே! விட்டா தாலிபான் ஆட்சி வேணும்பிங்க போல!

நெல்லை கபே said...

மிக நல்ல யோசனை குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு!

சிராஜ் said...

சலாம் சகோ,
சமூக சேவை பற்றி எழுதி இருக்கிறீர்கள். 5 பின்னூட்டங்கள் தான் வந்துள்ளன. நீங்கள் ஒரு தவறு செய்து விட்டீர்கள். இஸ்லாமிய வழியில் சவுதியில் இரத்ததானம் என்று தலைப்பு வைத்திருந்தீர்கள் என்றால் பதிவு பிச்சிகிட்டு போய் இருக்கும்.
இந்த நல்ல விசயமும் நாலு பேருக்கு தெரிஞ்சிருக்கும்.
பேசாம நான் சொன்ன தலைப்பில் நாளைக்கு பதிவிட்டுவிடவா??????

sakthi said...

""குடியரசு தின வாழ்த்துக்கள்!

குடியரசு தினத்தை இது போன்றும் கொண்டாடலாமே!""

அருமையான கொண்டாட்டம் சகோதரரே !
உயர்திரு பி.ஜே .மீது நல்ல மரியாதையை எனக்கு உண்டு .அவர்கள் சொற்பொழிவு பல கேட்டுள்ளேன் .
நட்புடன் ,
கோவை சக்

suvanappiriyan said...

திரு சக்தி!

//அருமையான கொண்டாட்டம் சகோதரரே !
உயர்திரு பி.ஜே .மீது நல்ல மரியாதையை எனக்கு உண்டு .அவர்கள் சொற்பொழிவு பல கேட்டுள்ளேன் .
நட்புடன் ,
கோவை சக்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு மாயன்!

//மிக நல்ல யோசனை குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//சலாம் சகோ...தொடரட்டும் சேவைகள்...நன்றி...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//இஸ்லாமிய வழியில் சவுதியில் இரத்ததானம் என்று தலைப்பு வைத்திருந்தீர்கள் என்றால் பதிவு பிச்சிகிட்டு போய் இருக்கும்.
இந்த நல்ல விசயமும் நாலு பேருக்கு தெரிஞ்சிருக்கும்.
பேசாம நான் சொன்ன தலைப்பில் நாளைக்கு பதிவிட்டுவிடவா??????//

நல்ல விஷயம் செய்வதற்கு அனுமதில்லாமா கேட்கனும்! பதிவிடுங்கள்.டீக் கடை பக்கம் வந்தால் சூடாக பஜ்ஜி கிடைக்குமா? :-)

நீங்கள் பின்னூட்டம் போட்டவுடன் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பின்னூட்டம் வருகிறது. இதை படிக்கும் சகோதரர்கள் அடுத்த சுதந்திர தினத்திலாவது கூத்தாடிகளை கொண்டு வந்து கூத்தடிக்காமல் பொது சேவை செய்ய முனைவார்களாக!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

குடியரசு தினம் என்கிற பெயரில் மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யாமல் மக்களுக்கு உதவினால் நல்லதுதான்.

PUTHIYATHENRAL said...

குடியரசு தினம் என்கிற பெயரில் மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யாமல் மக்களுக்கு உதவினால் நல்லதுதான்.

ttpian said...

why don't u advise Abdul(llah) kalam not to support racist srilanka?
why he is going behind Mahindha&company?

suvanappiriyan said...

//why don't u advise Abdul(llah) kalam not to support racist srilanka?
why he is going behind Mahindha&company?//

இங்கு நான் சொல்லி என்ன ஆகி விடப் போகிறது? ஒன்று பட்ட இலங்கையில் அதிகார பகிர்வு மூலம் தான் இனப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடியும். யாழ்ப்பாணத்தை தனி நாடாக தனி ஈழமாக அங்கீகரித்தால் அங்குள்ள உயர்சாதியினரானர்தான் பலன் பெறுவர். மலையக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையிலும் யாழ்ப்பாண உயர்சாதி இந்துக்கள் மற்ற சாதி இந்துக்களையோ அல்லது முஸ்லிம் கிறித்தவர்களையோ அண்ட விடுவதில்லை. இன்னும் அதிகாரம் கைக்கு வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். எனவெ விடுதலைப் புலிகளின் கோரிக்கையை அன்றிலிருந்து இன்று வரை நான் ஆதரிக்கவில்லை.

மஹிந்த தவறுகள் செய்தால் அதை கண்டிப்பதை நான் ஆதரிக்கிறேன். அதற்காக இந்திய அரசு மூலமாக முயற்சி எடுக்கலாம். தவறுகள் நடந்தால் தமிழகத்தில் போராடி மத்திய அரசை இணங்க வைக்கலாம். அப்துல் கலாம் சில நன்மைகள் நமது தமிழ் சமூகத்துக்கு செய்வதையும் தடுக்க வேண்டாமே!