Wednesday, April 11, 2012

'மைனஸ் ஓட்டு குத்த ஓட்றாங்களாம்!'



----------------------------------------------



'யாரும் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு சிக்கலை உண்டாக்காதீங்க...எனக்கு இருக்கிற பிரச்னையில பேசாம பொருப்பை தம்பி ராகுலிடம் கொடுத்து விட்டு அரசியலிலிருந்தே ஓய்வு பெறலாம் என்றிருக்கிறேன். இப்போ சந்தோஷந்தானே!'

51 comments:

  1. ஸலாம்
    ஹாஹாஹாஹா
    மைனஸ் வோட் களின் எண்ணிக்கையை வைத்து பல ஆட்கள் என நினைக்காதீர்கள் ஒருவரே அத்தனை வோட் களையும் பல பெயர்களில் போடா வாய்ப்பு உள்ளது சகோ

    ReplyDelete
  2. AHAMED4:46 AM

    முஸ்லீம் பதிவர்கள் என்றாலே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி கீபோர்ட் உடைய மவுஸ் தேய மைனஸ் ஓட்டு போடுவோர்களுக்கு ஒரு "ஓ" போடுவோம்.

    மதவாதிகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழ்மணம் ! என்று பொறாமையால்
    பதிவிட்டு ஆரம் பிய்த்து வழக்கம் போல் குட்டை குழப்பி குளிர் காய்வது அனைவருக்கும் விளங்காதா என்ன?

    எப்பாடு பட்டும் முஸ்லீம் பதிவர்களை வலைப்பதிவுலக‌த்திலிருந்து

    குறைந்த பட்சம் தமிழ்மணத்திலிருந்தாவது அகற்றிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள் என்பதும் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் தெள்ளத்தெளிவாகிவிட்டது.

    விட்டு தள்ளுங்க.

    ReplyDelete
  3. சலாம் சகோ

    ஹி..ஹி..ஹி..

    செம கலக்கல் ஜோக்!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஹா ஹா ஹா....செம செம...சிரிசுசு சிரிச்சு மாலல...

    ஆனா ஒரு திருத்தம். உங்களுக்கு என்ன பல பேரா மைனஸ் ஒட்டு போடுறாங்க. ஒரே ஆளு தானே போடுறாரு :) :)

    வஸ்ஸலாம்,

    ReplyDelete
  5. சலாம் சகோ சுவனப்பிரியன்,

    ஹா..ஹா..ஹா...ஹா..ஹா..ஹா.ஹா...ஹா....

    சூப்பர்... நல்ல காமெடி...கொஞ்ச நாளைக்கு இதே மாதிரி போஸ்ட் டா போடுங்க...
    அவனுக கடுப்பாகணும்... இதுக்கெல்லாம் மைனஸ் போடறதான்னு...

    ReplyDelete
  6. மைனஸ் கள்ள ஒட்டு போடுவோர் சங்கம்6:00 AM

    ஹலோ சு . பி

    ரொம்ப நக்கலா போச்சு ....

    கார்டூன் நீங்களா வரஞ்சது ????.....

    ReplyDelete
  7. செம...செம...செம...

    ReplyDelete
  8. எனக்கே நான் சொன்னது ...!!!!

    என்னைய மிஞ்சுரதுக்கு என் அளவில் எவனுமே இல்லையே அப்பு ....

    ரொம்ப கலக்கல் + நக்கல் பதிவு ...

    மைனஸ் ஓட்டுக்கு பூட்டு போடா போடுறேன் ...

    அப்பையாவது மைனஸ் ஒட்டு விளுகுதான்னு பாப்போம் ...


    எனக்கே நான் சொன்னது .....!!!!

    ReplyDelete
  9. //சுவனப்பிரியன் said...

    எனக்கே நான் சொன்னது ...!!!!

    என்னைய மிஞ்சுரதுக்கு என் அளவில் எவனுமே இல்லையே அப்பு ....

    ரொம்ப கலக்கல் + நக்கல் பதிவு ...

    மைனஸ் ஓட்டுக்கு பூட்டு போடா போடுறேன் ...

    அப்பையாவது மைனஸ் ஒட்டு விளுகுதான்னு பாப்போம் ...

    எனக்கே நான் சொன்னது .....!!!!//

    ஹி...ஹி....என் பெயரில் போலியாக அதுவும் எனது பதிவிலேயே பின்னூட்டமா!

    இதற்க்கெல்லாம் மூளையை செலவழிப்பதற்கு பதில் ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். :-)

    ReplyDelete
  10. assalamu alaikum wrh

    :)

    ReplyDelete
  11. கார்டூன் நல்ல இருக்கு சகோ

    ReplyDelete
  12. ஹா.. ஹா.. அசத்தல் காமெடி கார்ட்டூன் சூப்பர் சகோ! சம்பந்தப்பட்ட‌வர்களுக்கு உரைத்தால் சரிதான்..

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. bro rabbani!

    //மைனஸ் வோட் களின் எண்ணிக்கையை வைத்து பல ஆட்கள் என நினைக்காதீர்கள் ஒருவரே அத்தனை வோட் களையும் பல பெயர்களில் போடா வாய்ப்பு உள்ளது சகோ//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  15. Bro Ahmed!

    //குறைந்த பட்சம் தமிழ்மணத்திலிருந்தாவது அகற்றிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள் என்பதும் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் தெள்ளத்தெளிவாகிவிட்டது.

    விட்டு தள்ளுங்க.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  16. Sister Amina!

    //சலாம் சகோ

    ஹி..ஹி..ஹி..

    செம கலக்கல் ஜோக்!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  17. சலாம் சகோ சுவனப்பிரியன்,
    Salam Bro Siraj!


    //ஹா..ஹா..ஹா...ஹா..ஹா..ஹா.ஹா...ஹா....

    சூப்பர்... நல்ல காமெடி...கொஞ்ச நாளைக்கு இதே மாதிரி போஸ்ட் டா போடுங்க...
    அவனுக கடுப்பாகணும்... இதுக்கெல்லாம் மைனஸ் போடறதான்னு...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  18. Bro Rahim Gazali!

    //அருமை//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  19. Bro Basith!

    //செம...செம...செம...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  20. Waalaikkum Salam! Bro Gulam.

    //assalamu alaikum wrh

    :)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  21. Bro Rabbani!

    //கார்டூன் நல்ல இருக்கு சகோ//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  22. Sister Asma!

    //ஹா.. ஹா.. அசத்தல் காமெடி கார்ட்டூன் சூப்பர் சகோ! சம்பந்தப்பட்ட‌வர்களுக்கு உரைத்தால் சரிதான்..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  23. Salam Bro ashiq!

    //ஹா ஹா ஹா....செம செம...சிரிசுசு சிரிச்சு மாலல...

    ஆனா ஒரு திருத்தம். உங்களுக்கு என்ன பல பேரா மைனஸ் ஒட்டு போடுறாங்க. ஒரே ஆளு தானே போடுறாரு :) :)//

    ஒரு ஆளாக இருக்கத்தான் சாத்தியம். இன்னும் நெடுநேரம் நம் பதிவுகளில் வந்து மைனஸ் ஓட்டுக்களை அள்ளி வழங்கிக் கொண்டே இருக்கட்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  24. மைனஸ் கள்ள ஓட்டு போடுவோர் சங்கம்!

    //ரொம்ப நக்கலா போச்சு ....//

    இப்பவாவது புரிஞ்சுகிட்டா சரிதான்.

    //கார்டூன் நீங்களா வரஞ்சது ????.....//

    நானே...நானே வரைந்தது தான்.

    ஒன்று தெரியுமா! முன்பை விட எனது பதிவு தற்போது அதிக ஹிட் வாங்க காரணமே உங்களைப் போன்றவர்கள் போடும் கள்ள மைனஸ் ஓட்டுகள் தான். இன்னும் 20, 30 ஐடிக்களை உருவாக்கி 50 க்கு மேல் போகுமாறு பார்த்துக் கொள்ளவும். நன்றி! :-)

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    முதல் படமும் & வசனங்களும் அருமை.
    இவர்கள் தீவிரமாக கண்கானித்தார்களாம் மைனஸ் ஓட்டுகள் எல்லாம் அரபுநாட்டிலிருந்துதான் வருகின்றதாம்.அதனால் அனைத்திற்கும் முஸ்லிம்கள்தான் பொறுப்பாம்.எடக்கு மடக்கு தளத்தில் சொல்றாங்க சாரி திணிக்கின்றார்கள்.
    /////ஹி...ஹி....என் பெயரில் போலியாக அதுவும் எனது பதிவிலேயே பின்னூட்டமா!//////என்ன பண்றது தமிழ்மணத்திலிருந்து நீக்கவேண்டுமென்று முடிவெடுத்துட்டார்கள்.உங்கள் பெயரில் மைனஸ் ஓட்டு போட்டார்கள் இப்பொழுது உங்கள் பெயரில் பின்னூட்டம் போடுகின்றார்கள் ஆச்சர்யப்படுவதற்கில்லை உங்கள் பெயரிலேயே ஒரு blogspot ஆரம்பித்துவிடுவார்கள்.

    ReplyDelete
  26. படம் அருமை!

    ஏற்கனவே ஏப்படி கள்ள ஓட்டு போடலாமுன்னு 15 நாள தூக்கம்மில்லமா இருப்பனங்கா இப்படி தாக்கனா தூங்கவே மாட்னுங்கா

    ReplyDelete
  27. சலாம் சகோ ஷஃபி அப்துல் அஜீஸ்!

    //என்ன பண்றது தமிழ்மணத்திலிருந்து நீக்கவேண்டுமென்று முடிவெடுத்துட்டார்கள்.உங்கள் பெயரில் மைனஸ் ஓட்டு போட்டார்கள் இப்பொழுது உங்கள் பெயரில் பின்னூட்டம் போடுகின்றார்கள் ஆச்சர்யப்படுவதற்கில்லை உங்கள் பெயரிலேயே ஒரு blogspot ஆரம்பித்துவிடுவார்கள்.//

    என்னென்ன கோல்மால் பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணிக் கொள்ளட்டும். இதற்க்கெல்லாம் அசருபவர்களா நாம்?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  28. சலாம் சகோ நிஜாம்!

    //படம் அருமை!

    ஏற்கனவே ஏப்படி கள்ள ஓட்டு போடலாமுன்னு 15 நாள தூக்கம்மில்லமா இருப்பனங்கா இப்படி தாக்கனா தூங்கவே மாட்னுங்கா//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  29. சகோ ஸ்மிதா!

    //Pirriyan,
    U can claim a 1000 times that castes are not mentioned in the Koran. But what is happening in real life cannot be denied.
    Let me ask 1 simple question. Women are generally not allowed in mosques, but shias allow women to pray in mosques. How? They have their own mosques. How?//

    குலங்கள் கோத்திரங்கள் என்பது உலக அளவில் மக்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக அனைவராலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் அதையே சாதியாக மாற்றி ஒருவன் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை மார்க்கத்தின் பெயரால் நிறைவேற்றுவது இஸ்லாத்தில் இல்லை. அதற்கு எதிரான கருத்துகள்தான் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. முஸ்லிம்களிலும் சிலர் சாதி பார்த்தார்களேயானால் அவர்கள் இன்னும் இஸ்லாத்தில் முழுமையாக நுழையவில்லை என்றுதான் அர்த்தம்.

    குர்ஆனிலோ முகமது நபியின் கட்டளைகளிலோ பெண்கள் பள்ளியில் வந்து தொழுவதை தடுக்கவில்லை. சிலருக்கு குழந்தை குடும்பம் என்று இருந்தால் வீட்டிலேயே தொழுது கொள்ள அனுமதி உண்டு. அந்த பெண் பள்ளியில் வந்து தொழ விரும்பினால் அதை யாராலும் தடுக்க முடியாது.

    //I understand from a muslim friend that other than Prophet Mohammed & Ur God Allah, no can issue fatwas. But how come every muslim leader issues fatwas left, right & centre?//

    இஸ்லாமிய அரசு இருந்தால்தான் ஃபத்வா கொடுக்க முடியும். அதுவும் குர்ஆனின் அடிப்படையில்தான் கொடுக்க முடியும். தனிப்பட்ட நபர்கள் கட்டை பஞ்சாயத்து செய்வதை மார்க்கம் அனுமதிக்கவில்லை. தற்போது நிலைமை மாறி வருகிறது.

    //A muslim is supposed to visit mecca at least once in his lifetime that too with his own money. Then why do muslims clamour for govt assisted trips in this regard?//

    எந்த முஸ்லிமும் இதற்காக போராடுவதில்லை. சில அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக செய்யும் கூத்துகள். படிப்பிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தாலே போதுமானது.

    //Koran itself is interpreted differently by different sects. How do u respond to this?//

    மொத்த குர்ஆனிலும் இரண்டு சதவீதம்தான் மொழி பெயர்ப்பில் சில கருத்து வேறுபாடுகள் சிலரிடம் உள்ளது. மற்ற அனைத்து குர்ஆனிய கருத்துக்களும் முகமது நபி தனது காலத்திலேயே முழு விளக்கமும் அளித்து விட்டதால் ஒரு குழப்பமும் இல்லை.

    //It is just that the caste system in hinduism gets lots of media coverage whereas in case of islam, it is not, for various reasons.
    Islamists are still very backward in their thinking. First try to change before accusing other religions.//

    இந்து மதகருத்துக்கள் இந்த காலத்துக்கு ஏற்றதாக இல்லாததும் வேதங்களில் மனிதர்களின் கருத்துகளும் புகுந்ததும் காரணமாக இருக்கலாம். இஸ்லாத்தில் இத்தகைய நிலை இல்லை.

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும்
    ஆயிரம் தான் இருந்தாலும் விழுற மைனஸ் ஒட்டு கம்மி தான் சுவனப்பிரியன் ஜி. கள்ள ஒட்டு போடணும் என்று முடிவு செஞ்சுட்ட அந்த "பெயரில்லாத" தண்டம் ஒரு அம்பது நூறுன்னு மைனஸ் ஒட்டு போட்டா தான் என்னவாம்? குறைஞ்சா போய்டும். சிராஜ் பாய் சொன்ன மாதிரி அப்பபோ இந்த மாதிரி மொக்கை பதிவும் போடுங்க. இதுக்கும் நாம மைனஸ் ஒட்டு போடுரோமேனு அந்த பெயரிலி வெட்கப்பட வேண்டும். ஆனாலும் பாருங்க, கள்ள ஒட்டு ஐடிகளை இன்னும் தமிழ்மணம் நீக்கலை. அதை நீக்கவும் செய்யாது. ஏன்னா தமிழ்மணமும் இந்த கூத்துல கூட்டு களவாணி என்றே நெனைக்கிறேன்.

    ReplyDelete

  31. கேள்வி இங்கே பதில் எங்கே ???


    //கார்டூன் நீங்களா வரஞ்சது ????.....//

    நானே...நானே வரைந்தது தான்.

    இஸ்லாத்தில் உயிருள்ள உருவத்தை வரையலாமா ???

    அப்படி வரையகூடாது என்றால் அது உங்களுக்கு நிர்பந்தமா என்ன ??

    நீங்க தான் வரைந்தேன் என்று பெருமையா பீத்திகிறீங்க ...

    மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் முன் நீங்க செயல் படுத்துங்க ..

    சுவன்பிரியன் இப்போ ஏதோ நரகப் பிரியர் ஆக மாறுகிறார் போல ..

    ‘மறுமையில் அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனைக்குரியவர்கள் உருவங்களைத் தீட்டுபவர்களே’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.

    ‘நான் படைப்பதைப் போன்று படைக்க முற்படுபவனை விட அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? ஒரு வித்தையேனும் அல்லது ஒரு சிறு எறும்பையேனும் அவர்கள் படைக்கட்டுமே! (முடியுமா?)’ என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

    ‘உருவங்கள் வரையக் கூடியவர்கள் அனைவரும் நரகம் செல்வர். அல்லாஹ் அவன் வரைந்த ஒவ்வொரு உருவத்துக்கும் உயிரைக் கொடுப்பான். பிறகு அது அவனை நரகில் வேதனை செய்யும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நீ வரைந்து தான் ஆக வேண்டுமென்றால் மரங்களையும், உயிரற்றவைகளையும் வரைவீராக!’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

    நான் சொல்வது சரி என்றால் வரைந்த கார்ட்டூனை delete செய்து விடவும் .. இல்லை என்றால் உங்கள் விளக்கத்தை சொல்லவும் ...

    ReplyDelete
  32. Bro
    happy to know that there is no restriction in islam to draw a painting :)

    ReplyDelete
  33. திரு கண்ணாடி!

    //நான் சொல்வது சரி என்றால் வரைந்த கார்ட்டூனை delete செய்து விடவும் .. இல்லை என்றால் உங்கள் விளக்கத்தை சொல்லவும் ...//

    நான் வரைந்த கார்ட்டூன் சம்பந்தப்பட்டவர்களை ரொம்பவுமே சிந்திக்க வைத்துள்ளதை அறிகிறேன்.

    "As for the issue of allowing kids to play with toys and dolls, we'd like to cite for you the words of the eminent Muslim scholar Sheik Yusuf Al-Qaradawi, in his well-known book, The Lawful and the Prohibited in Islam:

    "There are some kinds of three-dimensional figures which are not intended to be accorded respect or to be displayed as an expression of high living. Islam does not close its mind to them, nor does it see any harm in their use.

    Children's playthings such as dolls, in the form of humans, animals, and the like fall into this category. Said the Prophet's wife `A'ishah (may Allah be pleased with her): I used to play with dolls in the house of the Messenger of Allah (peace and blessings be on him) and my friends would come over to play with me. They would hide when they saw the Messenger of Allah (peace and blessings be upon him) approaching, but he was in fact very happy to see them with me, and so we played together. (Reported by al-Bukhari and Muslim)

    `A'ishah also reported, "One day the Messenger of Allah (peace and blessings be upon him) asked me, 'What are these?' 'My dolls,' I replied. 'What is this in the middle?' he asked. 'A horse,' I replied. 'And what are these things on it?' he asked. 'Wings,' I said. 'A horse with wings?' he asked. 'Have not you heard that Solomon, the son of David, had horses with wings?' I said. Thereupon the Messenger of Allah (peace and blessings be upon him) laughed so heartily that I could see his molars. (Reported by Abu Dawud)

    The dolls mentioned in the above hadith are the dolls with which children play, as `A'ishah was quite young when she married the Prophet (peace and blessings be upon him). Ash-Shawkani says that these ahadith are sufficient proof of the permissibility of children's playing with statue-like three-dimensional figures (i.e., dolls of human or animal shape). It is reported that once Imam Malik saw a man buying dolls for his daughter and he disliked it, but Qadi `Iyad says that it is permissible for girls to play with dolls. (Because girls are more likely to play with dolls than boys, only girls have been mentioned here. However, this does not imply any prohibition for boys to do so.)

    This permission also applies to figures made of sweets for festive occasions since they are used only as food.""

    ஒரு முறை உருவங்கள் வரையப்பட்ட திரைச் சீலையை பார்த்த முகமது நபி அவர்கள் அதனை அகற்ற சொல்கிறார்கள். அதன் பின் அந்த துணியை படுக்கைக்கு தலையணை உரையாக பயன்படுத்திய போது அதை அனுமதிக்கிறார்கள். முகமது நபியின் மனைவி அன்னை ஆயிஷா அவர்கள் பொம்மைகளை வைத்து விளையாடியதை அனுமதித்ததையும் மேலே நாம் பார்த்தோம். இதிலிருந்து நாம் விளங்குவது மதிப்பு தரத் தக்க உருவங்களை வரைவதையே முகமது நபி கண்டித்திருப்பதாக விளங்குகிறோம். இந்து கடவுள்களான கண்ணன், ராமன், மற்றும் கிறித்தவர்களின் ஏசு போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். கார்ட்டூன் என்பது ஹாஸ்யத்துக்காக வரையப்படுவது என்பதையும் அதற்கு சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுவதில்லை என்பதாலும் அந்த தடையில் இது அடங்காது என்று விளங்குகிறோம் அதைப் போல் மாணவர்கள் அறிவியல் பாடங்களை பயில்வதற்காக உருவங்களை வரைவதும் அந்த தடையில் அடங்காது. முகமது நபி தடை செய்ய காரணமே அந்த உருவங்கள் வணங்கப்படுபவையாக ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தான். எனவே இங்கு நோக்கத்தைப் பார்த்து அந்த தடையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

    இறைவனே அறிந்தவன்.

    ReplyDelete
  34. சலாம் சகோ ஷேக்தாவுத்!

    //அஸ்ஸலாமு அலைக்கும்
    ஆயிரம் தான் இருந்தாலும் விழுற மைனஸ் ஒட்டு கம்மி தான் சுவனப்பிரியன் ஜி. கள்ள ஒட்டு போடணும் என்று முடிவு செஞ்சுட்ட அந்த "பெயரில்லாத" தண்டம் ஒரு அம்பது நூறுன்னு மைனஸ் ஒட்டு போட்டா தான் என்னவாம்? குறைஞ்சா போய்டும். சிராஜ் பாய் சொன்ன மாதிரி அப்பபோ இந்த மாதிரி மொக்கை பதிவும் போடுங்க. இதுக்கும் நாம மைனஸ் ஒட்டு போடுரோமேனு அந்த பெயரிலி வெட்கப்பட வேண்டும். ஆனாலும் பாருங்க, கள்ள ஒட்டு ஐடிகளை இன்னும் தமிழ்மணம் நீக்கலை. அதை நீக்கவும் செய்யாது. ஏன்னா தமிழ்மணமும் இந்த கூத்துல கூட்டு களவாணி என்றே நெனைக்கிறேன்.//

    எத்தனையோ எதிர்ப்புகளை சமாளித்திருக்கிறோம். இந்த அனானி போடும் கள்ள ஐடி ஓட்டுக்களால் நாம் சோர்ந்து விடுவோமா என்ன? இன்னும் வீரியமாகவே காரியமாற்றுவோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  35. Anonymous11:28 PM

    நீங்கள் கூறியிருக்கும் ஹதீசை வைத்துப் பார்க்கும் போது, பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியான ஆயிஷாவிற்கு 5 அல்லது 6 வயது இருந்திருக்கும். நபி அவர்கள், அச்சிறுமியையா மணம் புரிந்தார் ?

    ReplyDelete
  36. அனானி!

    //நீங்கள் கூறியிருக்கும் ஹதீசை வைத்துப் பார்க்கும் போது, பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியான ஆயிஷாவிற்கு 5 அல்லது 6 வயது இருந்திருக்கும். நபி அவர்கள், அச்சிறுமியையா மணம் புரிந்தார் ?//

    அன்றைய அரபுலகத்தில் குழந்தை திருமணம் எல்லா குடும்பத்திலும் நடந்து வந்தது. ஆனால் தாம்பத்ய உறவு என்பது பெண் பருவ வயதை அடைந்த பிறகுதான் நடைபெறும். பெண்ணை சிறு வயதிலேயே சொந்தங்களுக்குள் இன்றும் பேசி வைத்துக் கொள்கிறோம் அல்லவா!

    பருவ வயதை அடைந்த பிறகே அன்னை ஆயிஷா அவர்கள் முகமது நபி அவர்களின் வீட்டிற்கு வருகை தந்தார்கள்.

    ReplyDelete

  37. சுவனபிரியர்

    உங்கள் பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை .. காரணம் .....

    மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் நல்லாவே முடிச்சு போடுறீங்க ...

    //இதிலிருந்து நாம் விளங்குவது மதிப்பு தரத் தக்க உருவங்களை வரைவதையே முகமது நபி கண்டித்திருப்பதாக விளங்குகிறோம்.//

    நீங்கள் சொல்வது என்ன .. ???

    ஒரு முறை உருவங்கள் வரையப்பட்ட திரைச் சீலையை பார்த்த முகமது நபி அவர்கள் அதனை அகற்ற சொல்கிறார்கள். அதன் பின் அந்த துணியை படுக்கைக்கு தலையணை உரையாக பயன்படுத்திய போது அதை அனுமதிக்கிறார்கள். முகமது நபியின் மனைவி அன்னை ஆயிஷா அவர்கள் பொம்மைகளை வைத்து விளையாடியதை அனுமதித்ததையும் மேலே நாம் பார்த்தோம். //இதிலிருந்து நாம் விளங்குவது மதிப்பு தரத் தக்க உருவங்களை வரைவதையே முகமது நபி கண்டித்திருப்பதாக விளங்குகிறோம்.//

    சுவனா இப்படி லாமா விளக்கம் அளிப்பீர்கள் .. வியப்பாக உள்ளது ..!!!!

    மேலே நீங்கள் நீங்கள் சொன்ன விஷயம் உருவம் உள்ள பொருளை பயன்படுத்துவது, அனுமதியை தான் தருமே தவிர வுருவம் வரைவதை பற்றி ஏதும் இல்லை .. நீங்களா இழுத்து செரூகுகுறீங்க ...

    பயன்படுத்துவது வேறு ... வரைவது வேறு ...

    வரைவதற்குரிய அனுமதியை காட்டுங்கள் ... அப்படியே அனுமதி இருந்தாலும்

    ‘உருவங்கள் வரையக் கூடியவர்கள் அனைவரும் நரகம் செல்வர். அல்லாஹ் அவன் வரைந்த ஒவ்வொரு உருவத்துக்கும் உயிரைக் கொடுப்பான். பிறகு அது அவனை நரகில் வேதனை செய்யும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நீ வரைந்து தான் ஆக வேண்டுமென்றால் மரங்களையும், உயிரற்றவைகளையும் வரைவீராக!’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

    இந்த ஹதீஸ் க்கு என்ன சொல்றீங்க !!!!

    வரைவது வேறு .. அதை பயன்படுத்துவது வேறு ...

    பின் வரும் புகாரி ஹதீஸ் தெள்ள தெளிவாக உள்ளது ...

    நபி அவர்கள் பயன்படுத்துறாங்க ஆனால் வரைந்தவர்களை சபிக்குறாங்க .. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் ...



    ஆயிஷா (ரலி) அவர்கள் உருவப் படங்கள் பொறித்த திரைச்

    சீலை ஒன்றை வாங்கியிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்)

    அவர்கள் வந்து உள்ளே நுழையவில்லை. இதைக் கண்டதும்,

    ஆயிஷா (ரலி) அவர்கள், நான் செய்த தவறு (எதுவாயினும்)

    அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடுகிறேன்''

    என்றார்கள். இது என்ன திரைச் சீலை'' என்று நபிகள் நாயகம்

    (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அதன் மேல்

    அமர்வதற்கும், சாய்ந்து கொள்வதற்காகவும் வாங்கினேன்''

    என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இந்த உருவத்தை

    வரைந்தவர்கள் கியாமத் நாளில் வேதனை செய்யப்படுவார்கள்.

    நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள் என்று அவர்களிடம்

    கூறப்படும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

    கூறினார்கள்.

    நூல் : புகாரி 3224

    சாய்ந்து கொண்டார்கள்'' என்று வருகின்ற ஹதீஸை இந்த

    ஹதீஸ் மாற்றி விட்டது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

    இந்த வாதம் இரண்டு காரணங்களால் சரியானதல்ல.

    வரைந்தவர்களைத் தான் இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்)

    அவர்கள் கண்டனம் செய்கிறார்கள். அதை வைத்திருந்த

    ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்டிக்கவில்லை.

    உருவப் படம் உள்ள தலையணையில் நபிகள் நாயகம் (ஸல்)

    அவர்கள் சாய்ந்து கொண்டிருந்ததை நபிகள் நாயகம் (ஸல்)

    அவர்களின் காலத்திற்குப் பின்பே ஆயிஷா (ரலி)

    அறிவிக்கிறார்கள்.


    நான் ஓவியங்கள் வரைகிறேன். அது பற்றி எனக்குத்

    தீர்ப்பளியுங்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்

    ஒருவர் கேட்டார். எல்லா ஓவியர்களும் நரகில் தான்.

    ஓவியங்களுக்கு உயிரளிக்கப்பட்டு அவை அவனை நரகில்

    வேதனைப்படுத்தும். நீ அவசியம் செய்தாக வேண்டும்

    என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளைச் செய்து கொள்!''

    என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

    நூல் : புகாரி 2225


    ஆகவே நீங்கள் வரைந்தவர் ... நீங்கள் தான் பதில் சொல்லி ஆக வேண்டும் ...

    மேலும் தெரிந்து கொள்ள

    http://onlinepj.com/books/naveena-prechanaigalum/

    நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் : நூலின் பெயர் ..

    நீங்கள் பதில் சொல்வதை வைத்து தான் மற்ற கேள்வி

    இறைவன் மிக்க அறிந்தவன் ...


    ReplyDelete
  38. i dont expect some replies from you an account of vote matter. i hope that you know well when to talk and whenever not to talk about any one of mattar.

    leave it ! its all in the game of life ( blog)

    ReplyDelete
  39. Anonymous3:46 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  40. திரு கண்ணாடி!

    //நீங்கள் பதில் சொல்வதை வைத்து தான் மற்ற கேள்வி

    இறைவன் மிக்க அறிந்தவன் ...//

    ஹதீது கிரந்தம் அபூதாவுத் 4884 ஹதீதில் உருவச்சிலையைக் கண்ட பின்பும் முகமது நபி அவர்கள் கண்டிக்காததது மட்டும் அல்ல தமது சிரிப்பின் மூலம் அதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள்.

    'குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காக உருவங்களை வரைந்து கற்றுக் கொடுப்பதை தடை செய்ய முடியாது' என்று நீங்கள் கொடுத்த சுட்டியிலேயே வரும் வாசகத்தையும் பாருங்கள்.

    தற்போது நீங்கள் என்னை எதிர்க்க காரணம் என்ன? நமக்குள் கொடுக்கல் வாங்கலோ மற்ற எந்த பிரச்னையும் இல்லை. நான் இஸ்லாத்தின் உண்மை முகத்தை பதிவுகளாக இடுவதைக் கண்டு பொருக்காமல் எனது எழுத்து மற்றவர்களை சென்றடையாமல் தடுக்கிறீர்கள். ஆனால் இங்கு உங்கள் நோக்கமும் நிறைவேறவில்லை. முன்பை விட அதிகமாக எனது பதிவு மக்களிடம் தற்போது சென்றடைகிறது. எனவே இதை ஒரு ஹாஸ்யமாக எடுத்துக் கொண்டு நகைச்சுவைப் பட்டியலில் சேர்த்துள்ளேன்.

    'ஒரு மனிதனுடைய செயல் அவனது எண்ணத்தைப் பொறுத்தது' என்ற முகமது நபியின் பொன்மொழியையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன். இஸ்லாத்துக்கு எதிரான ஒரு செய்கையை முறியடிக்க வரைந்ததுதான் இந்த கார்ட்டூன். அடுத்து மன்மோகன் சிங் படத்துக்கும் வருவோம். அவரது கார்ட்டூனை மரியாதை செய்து பிரேம் செய்து யாரும் மாட்டுவார்களா? பார்த்து விட்டு ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு சென்று விடுவோம். ஒரு கார்ட்டூனுக்கு அவ்வளவுதான் மதிப்பு. இதைப் புரிந்து கொண்டால் உங்களுக்கு குழப்பம் வராது.

    ஒரு முறை அரபு விவசாயிகள் ஒட்டுமுறையில் பேரித்த மரங்களை பயிரிடுவதை பார்த்த முகமது நபி 'என்ன செய்கிறிர்கள்?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இரு மரங்களை இணைத்து ஒட்டு முறையில் விவசாயம் செய்தால் மகசூல் அதிகம் கிடைக்கும். அதைத்தான் செய்கிறோம்' என்றனர். அதற்கு முகமது நபி 'இறைவன் நாடினாலே மகசூல் அதிகரிக்கும். ஒட்டு முறையினால் அல்ல' என்று சொல்லி சென்று விட்டார்கள். அரபு விவசாயிகளும் அந்த வருடம் ஒட்டு முறையை கைவிட்டு விட்டனர். அந்த வருடம் விளைச்சல் குறைவாக ஆனது. 'உங்கள் பேரித்த மரங்களுக்கு என்ன ஆனது?' என்று முகமது நபி விவசாயிகளைப் பார்த்து கேட்க அவர்களோ 'நீங்கள் தானே ஒட்டு முறையை கைவிடச் சொன்னீர்கள்' என்று பதிலளித்தனர். 'உலக விஷயங்களில் என்னை விட நீங்களே அதிகம் தெரிந்தவர்களாக இருக்கிறீர்கள். மார்க்க விஷயங்களைத் தவிர்த்து உலக விஷயம் சம்பந்தமாக நான் ஏதும் சொன்னால் அதை பின் பற்ற வேண்டாம். உங்கள் அறிவை உபயோகித்து முடிவுக்கு வாருங்கள்' என்று முகமது நபி சொன்ன ஒரு ஹதீதின் சுருக்கத்தைப் பார்க்கிறோம்.

    இதன் மூலம் இஸ்லாமிய அடிப்படையை தகர்க்காத வண்ணம் சில நவீன பிரச்னைகளுக்கு நம் அறிவைக் கொண்டு முடிவெடுக்கலாம் என்பதை முகமது நபியின் சொல் நமக்கு தெளிவாக்குகிறது.

    இதன் உண்மையை இறைவனே அறிந்தவன்.

    ReplyDelete
  41. திரு ஷர்புதீன்!

    //i dont expect some replies from you an account of vote matter. i hope that you know well when to talk and whenever not to talk about any one of mattar.

    leave it ! its all in the game of life ( blog)//

    எனவே தான் இந்த பதிவை நகைச்சுவையாக பதிவிட்டுள்ளேன். இதனை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  42. Anonymous6:31 AM

    அன்புடன் சுவனப்பிரியன்,

    கண்ட கண்டவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. நீங்கள் நல்ல விடயங்களை மாத்திரம் எழுதுங்கள். பொறாமைக்காரர்கள் தொண்டை கிழியக் கத்திக் கத்தித் தாமே கேவலப்பட்டுச் செத்து மடியட்டும். உங்களது எழுத்துக்கள் அவர்களைப் பாதிக்குமானால், எழுத்திலேயே பதிலளிக்கத் துணிவில்லாத கோழைகள் கள்ளத்தனம் செய்கிறார்கள். நேர்மையும் நெஞ்சுறுதியும் கொண்டோர் ஒருக்காலும் கயமை செய்யவோ கிறுக்குத்தனம் பண்ணவோ மாட்டார்கள். அவர்களால் முடிந்தால் நேர்மையான எழுத்தின் மூலமே மோதிப் பார்க்கட்டும்.

    இவண்,
    முஹம்மது

    ReplyDelete
  43. திரு புனை பெயரில்!

    //அது சரி இந்து மதம் வேற்றுமை சொல்கிறது என்கிறீர்களே, நாளைக்கு ஆபிஸ் போனவுடன் உங்கள் மேலதிகாரியை , “தோ பாரு கொஞ்சம் இந்த சேரில் குந்திக்கோ ..” என்று அவர் இருக்கையில் உட்காருங்கள்…. வட்ட மேஜை என்றாலும் அதிலும் ஒரு தொடக்க நிலை இருக்கவே செய்யும்…//

    இந்த காலத்திலும் இப்படி ஒரு வாதத்தை வைப்பது இந்து மதத்தில் மட்டுமே சாத்தியப்படும். எனது மேலதிகாரி என்னை விட அதிகம் படித்து தனது நிலையை உயர்த்திக் கொண்டார். எனவே அவருடைய இருக்கையை நான் கேட்பது அறிவீனம். ஆனால் எந்த படிப்பும் இல்லாமல் நான் உயர் குலத்தில் பிறந்து விட்டேன் எனவே கோவிலும் மற்ற இடங்களிலும் எனக்கு முதல் மரியாதை தர வேண்டும் என்று நினைப்பது சம்பந்தப்பட்டவரின் அறிவீனம் அல்லவா? அதை வேதங்களின் பெயரால் எழுதி இன்றும் போற்றி பாதுகாப்பது எந்த வகை நியாயம். இதனால் தாழ்த்தப்பட்ட இனம் என்ற ஒன்றை உருவாக்கி இன்று வரை அவர்களை கொடுமைப்படுத்துவது எந்த வகை நியாயம். இதை கடவுள் சொல்லியிருக்க முடியுமா? என்ற சிந்தனை ஏன் உங்களுக்கு வரவில்லை.?

    ReplyDelete
  44. சகோ ஸ்மிதா!

    //U say if a woman wants, she can come & pray in the mosque. The question is are they really allowed?.
    The answer is that a variety of sects do not allow it.//

    வெளியில் எங்கும் செல்ல வேண்டாம். எனது மனைவியும் தாயாரும் இன்றைய நாள் வரை பள்ளியில் சென்றுதான் தொழுது வருகிறார்கள். தற்போது கட்டப்படும் புதிய பள்ளிகள் அனைத்தும் பெண்கள் தொழுவதற்கு வசதியாக பிரத்யேகமாகவே கட்டப்படுகிறது. இங்கு சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் பெண்கள் தொழுவதற்கு ஏற்ற வகையிலேயே கட்டப்பட்டிருக்கும். மெக்காவில் உள்ள கஃபாவில் ஆண்களும் பெண்களும் இன்றும் தொழுதுவருவதை தொலைக்காட்சியில் தினமும் நீங்கள் பார்க்கலாம்.

    //If there are only small difference in interpreting Koran as U say, then why so much confusion in issues like talaq, rape etc.,. I have quoted real time incidents here.//

    சட்டத்தை விளங்காதவர்கள் கொடுக்கும் ஃபத்வாவுக்கு குர்ஆனோ இஸ்லாமோ எப்படி பொறுப்பாக முடியும்? டெலிபோன் தலாக், தலாக் தலாக் தலாக் என்று மூன்றுமுறை ஒரே தடவையில் கூறுவது எல்லாம் இஸ்லாம் காட்டித் தராத வழிகள். அடுத்து இந்தியாவை பொறுத்த வரை மற்ற மதத்தவரை விட விவாகரத்து முஸ்லிம்களிடம் குறைவாக நடப்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    //But do not go around killing innocent people & justifying your action as jehad – holy war.//

    இதை எனக்கு சொல்வதை விட நரேந்திர மோடியிடமும் சாது பிரக்யாசிங்கிடமும், சுவாமி அசிமானந்தாவிடமும் அத்வானியிடமும் சொல்லுங்கள். நாங்கள் வன்முறை கூடாது என்று போராட்டம் என்ற வழியை தேர்ந்தெடுத்ததால் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமியரிடத்தில் வன்முறை குறைந்துள்ளதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். உண்மையாகவே அவர்கள் குர்ஆனை விளங்கியதால்தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடிந்தது. குர்ஆன் அநியாயமாக ஒரு உயிரை கொன்றவர் முழு மனித உலகையும் கொன்றவராவார் என்று போதிப்பதால் உண்மை முஸ்லிம் ஆயுதத்தை அப்பாவிகளின் பக்கம் திருப்ப மாட்டான். அப்படி யாராவது திருப்பியிருந்தால் பணத்துக்கு ஆசைப்பட்டு மற்றவர்களின் தூண்டுதலால் நடந்தவையாக இருக்கும். இதுதான் உண்மை.

    ReplyDelete
  45. சகோ புனை பெயரில்!

    //எல்லோரும் சமம் என்பது பிதற்றல்… வேறு வேறு ரூபத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கவே செய்யும்… எல்லோரும் சமம் என்றால் கடவுளும் இறை தூதர்களூ படைப்புகளுக்குச் சமமே…அதை தான் இந்து மதம் சொல்கிறது… அனைத்தும் இறைவனின் அங்கம் என்று…புரியும் வரை குழப்பமே…//

    வர்ணாசிரமத்தை நன்றாக உள் வாங்கியிருப்பதால் உங்களால் இப்படி எல்லாம் சாதியை தூக்கிப் பிடிக்க முடிகிறது.

    //அதிகமாக கடத்தல், வழிப்பறி, எதேச்சிகாரம், ஹவாலா என்பதை யார் செய்கிறார்கள். பெருவாரியான பின்பற்றாளார்கள் அடுத்தவரை நிம்மதி வாழ வைக்க முடியாத தத்துவங்களால் என்ன பயன்…?//

    குற்ற செயல்களில் எல்லா சமூகத்தவருமே ஈடுபடுகின்றனர். இதற்கு சாதி மத வித்தியாசம் இல்லை. பெரும்பாலான மீடியாக்கள் உங்கள் சார்பாக இருப்பதால் ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அதை பெரிது படுத்தி அதற்கு மதத்தையும் சம்பந்தப்படுத்தி தங்கள் வேகத்தை தணித்துக் கொள்கிறார்கள்.

    மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு அனைத்திற்கும் முஸ்லிமகளை முதலில் கைது செய்தீர்கள். ஹேமந்த் கர்கரே வந்து அனைத்து உண்மைகளையும் வெளிக் கொணர்ந்தார். அவரையும் தீர்த்து கட்டியாகி விட்டது. ராஜா, கனி மொழி, ஜெயலலிதா போன்றவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் அதற்கு மதசாயம் பூச மாட்டீர்கள். ஒரு தாவுது இப்றாகிம் கள்ள கடத்தல் செய்தால் அந்த கிரிமினலை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்துவீர்கள். ஆனால் மக்கள் தற்போது உண்மையை விளங்கி வருகின்றனர்.
    //எல்லோரும் ஒரே இடத்திற்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்பது வணிக புத்திசாலித்தனமே… கடவுள் உலகை படைத்தான் என்றால் அதன் எல்லா பாகத்திலும் அவன் இருக்கிறான்… அனைத்தையும் அடக்கும், பார்க்கும், நினைக்கும், மாற்றும் மனதே அதீத வலிமையானது என்பதை அகம் பிரம்மாஸ்மி.. என்று இலகுவாக சொல்லப்பட்டது.//

    தவறான புரிதல்! உலக மக்கள் அனைவரையும் ஒரே உடையில் ஒரே முழக்கத்தில் ஒன்று கூட்டுவது மக்களுக்கிடையே சகோதர பாசத்தை உண்டாக்குவதற்காக. மக்களுக்கிடையே உள்ள 'நான் வெள்ளையன்: நீ கருப்பன்' என்ற பாகுபாட்டை போக்குவதற்காக! அங்கு எந்த வொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எந்த புரோகிதரும் கிடையாது. யாருக்கும் தட்சணை கொடுக்க தேவையில்லை.

    உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதால் சவுதி அரசுக்கு வருடந் தோறும் பல மில்லியன் டாலர் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டியதாக இருக்கிறது. பெட்ரோல் பணம் மிதமிஞ்சி இருப்பதால் இறை வழியில் அந்த பணத்தை செலவு செய்கிறார்கள். எனவே ஹஜ்ஜூக்கு வருபவர்களால் சவுதி அரசுக்கு வருமானம் என்று ஏதும் இல்லை.

    நீங்கள் திருப்பதியில் ஆளுக்கு தக்கவாறு தரிசனத்துக்கு பணம் வசூலிப்பதை பார்த்து சவுதியிலும் அப்படி இருக்குமோ என்று நினைத்து விட்டீர்கள்

    'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
    -குர்ஆன் 14:4

    இதன் மூலம் உலக மொழிகள் அனைத்துக்கும் வேதங்களும் தூதர்களும் வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது..

    ReplyDelete
  46. unmaikalai evanaalum-
    thadukka midiyaathu!

    ReplyDelete
  47. Anonymous7:00 AM

    //இந்து கடவுள்களான கண்ணன், ராமன், மற்றும் கிறித்தவர்களின் ஏசு போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.//
    அப்படியா? இந்துக்கள் கண்ணனையும் ராமரையும், கிறிஸ்தவர்கள் ஏசுவையும் ஏன் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி தவிர்த்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுதா? அப்படி சொல்லுகிறது என்றால் அதை சொல்வதற்கு இஸ்லாம் யார்? சுவனப்பிரியன் யார்?
    ////But do not go around killing innocent people & justifying your action as jehad – holy war.//

    இதை எனக்கு சொல்வதை விட நரேந்திர மோடியிடமும் சாது பிரக்யாசிங்கிடமும், சுவாமி அசிமானந்தாவிடமும் அத்வானியிடமும் சொல்லுங்கள்.//

    நரேந்திரா மோடியிடமும் அசிமனந்தாவிடமும் சொல்ல நாங்கள் தயார்.அதுபோல ஊரெங்கும் தாவா கூடாரங்கள் நிறுவி மத மாற்ற நடவடிக்கையில் ஈடுபடும் உங்கள் தாவா கூட்டங்களிடம் அதை நிறுத்த சொல்ல நீங்கள் தயாரா. ஏன் என்றால் நரேந்திரா மோடியும் அசிமனந்தாவும் அந்த வழிக்கு செல்ல காரணமே நீங்கள் தான். என்னை பொறுத்தவரை உங்களுடையதை நீங்கள் பொத்திக்கொண்டு இருந்திருந்தால் அவர்களும் அவர்களுடையதை பொத்திக்கொண்டு இருந்திருப்பார்கள். இவ்வளவு தைரியமாக மதம் மாற்றுகிறீர்களே, இதே மதமாற்றத்தை ஒரு இந்துவோ ஒரு கிறிஸ்தவனோ சவூதியிலோ அல்லது ஈரானிலோ செய்தால் அவர்களுக்கு விசிறி எடுத்து வீசுவீர்களா, உங்களுக்கு உங்கள் நியாயம் சரியாக இருக்கும்போது அவர்களுக்கு அவர்களின் நியாயம் சரியாக தானே இருக்கிறது.

    //அன்றைய அரபுலகத்தில் குழந்தை திருமணம் எல்லா குடும்பத்திலும் நடந்து வந்தது. ஆனால் தாம்பத்ய உறவு என்பது பெண் பருவ வயதை அடைந்த பிறகுதான் நடைபெறும். பெண்ணை சிறு வயதிலேயே சொந்தங்களுக்குள் இன்றும் பேசி வைத்துக் கொள்கிறோம் அல்லவா!//
    அப்படியா? ஆனால் இந்த மாதிரி கேவலமான பழக்கவழக்கங்களை மாற்றி மக்களை நாகரீகபடுத்ததானே அல்லா முகமதுவை தேர்ந்தெடுத்தாராம் அப்புறம் ஏன் அதே படுகுழியில் அவரும் விழுந்தார்.


    -Anandan-

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)