Monday, May 14, 2012

ரஜினி காந்திடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சல்மான்கான்!

ரஜினி காந்திடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சல்மான்கான்!



ரஜினியின் பஞ்ச் டயலாக்!

'சச்சின் அடித்தால் சிக்ஸர்: ரஜினி அடித்தால் ஸ்ட்ரெச்சர்'

“camera does not shoot Rajini: Rajini shoots the camera”


ஹா..ஹா...ஹா...

இது எப்படி இருக்கு!:-)

------------------------------------------


80 வயதை நெருங்கும் இந்த முதியவருக்கு உள்ள வலிவு தற்கால இளைஞர்களுக்கு இருக்கிறதா என்பது கேள்விக் குறியே! குவாலியரில் காய்கறி கடையை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வரும் இந்த முதிவரைப் பார்த்து ஃபராகான் கேட்கிறார்:

ஃபராகான்: சாச்சா! இன்று என்ன ஸ்பெஷல் செய்யப் போகிறீர்கள்?

சாச்சா: இரண்டு இளைஞர்களை கீழே தள்ளி அவர்களை வெல்லப் போகிறேன், கத்தியைக் கொண்டு சில சாகஸங்களை நடத்தப் போகிறேன். கயிற்றினால் இளைஞர்களை கீழே தள்ளப் போகிறேன்.

ஃபராகான்:முதல்ல ஒரு மருத்துவரை நமது பக்கத்தில் வைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

சல்மான் கான்: சாச்சா! உங்ககிட்டே எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை இப்பொழுது நிரூபியுங்கள். தொடங்கட்டும்....

----------------------------------------


இசை அறிவை அடகு வைக்குமா?



இசை ஒரு மனிதனை ஒரு கூட்டத்தை எந்த அளவு தன்னிலை மறக்கச் செய்யும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சிறந்த உதாரணம். ராக் ஸ்டார் இசை அறிமுக விழாவில் பெரியோர் வரை சிறியவர் வரை எந்த அளவு தங்களை மறந்து இசையில் லயித்துள்ளார்கள் என்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.

unbelievable music,although i couldn't understand the words .AR rahman is a god of music..
ஒரு ரசிகரின் வெறித் தனமான பின்னூட்டம். இதுதான் கூடாது.

--------------------------------------



பஞ்சாபி மொழியில் அமைந்த பாடல்கள் எப்போதும் நமது மனதை தாலாட்டும் வகையில் அமைந்திருக்கும். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியா விட்டாலும் அந்த பாடல்களில் உள்ள மனதை தொடும் ராகங்கள் நம்மை அந்த பாடல்களை சிறிது நேரம் கேட்க வைத்து விடுகிறது. உள் மனத்தில் இருந்து வெளிப்படும் கபடமில்லாத எண்ண ஓட்டங்களை நமது கிராமிய பாடல்களில் நிறைய கேட்டிருக்கிறேன். இந்த பஞ்சாபி பாடல்களில் உள்ள சில ராகங்கள் நமது தமிழ் நாட்டு கிராமிய பாடல்களை ஒத்திருப்பதை பல இடங்களில் பார்க்கலாம். உருது மொழியிலேயே சில மாற்றங்களை செய்து ஒரு தனி மொழியாக்கியிருக்கிறார்கள். உருது மொழியைப் போலவே பஞ்சாபியும் மொகலாயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

டிஸ்கி: பதிவு வெளியிடும் அவசரத்தில் 'போலி ரஜினி' என்பதை தலைப்பில் குறிப்பிட மறந்து விட்டேன். ஹி...ஹி...ஹி....





8 comments:

  1. சுதே சமுத்திரன் போன்ற பழைய தினசரி பத்திரிக்கைகள்

    ஜாம்பவான்களாக திகழ்ந்த காலத்தில் தினத்தந்தி நாளிதழ்

    வெளி வர துவங்கிய காலம் பாமர மக்களை கவர கடைகளை

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்புக்கள் சவனபிரியனைபோல்

    தான் ஆதித்தனாரும் கையாண்டாராம் ..சிறு செய்தி பெரும் பரபரப்பு

    செய்தியாலனுகே உள்ள (குசும்பு ) திறமை ..வாழ்த்துக்கள்

    அக்காலத்தில் அரசியல் கலந்தாய்வு வெளிநாட்டு செய்திகள் தான்

    பத்திரிக்கைகளில் இடம் புடிக்கும் தினத்தந்தி வந்த பிறகுதான்

    சின்ன நிகழ வுகள் செய்தியாக வர துவங்கின ரிகச்சா வண்டி இழுக்கும்

    தொழிலாளி ஒவோருவர் கையிலும் தந்திபேப்பர் அவசியம் இருக்கும்

    பேப்பர் படித்து விட்டு படுப்பதர்க்கும் உ தவும் என்பதால்

    ReplyDelete
  2. சகோ அதிரை சித்திக்!

    //அக்காலத்தில் அரசியல் கலந்தாய்வு வெளிநாட்டு செய்திகள் தான்

    பத்திரிக்கைகளில் இடம் புடிக்கும் தினத்தந்தி வந்த பிறகுதான்

    சின்ன நிகழ வுகள் செய்தியாக வர துவங்கின//

    70 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு வயதானவர் எந்த அளவு உடல் வலிவோடு உள்ளார். தற்கால நமது இளைஞர்கள் எந்த அளவு தங்களது உடலை பாவிக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டவே அந்த காணொளியை இணைத்தேன். இடையில் வந்ததால் ரஜினியையும் சேர்த்துக் கொண்டேன். சினிமா சமூக அவலங்களுக்கு முதற் காரணியாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    அடுத்து நீங்கள் சொல்வது போல் தினத்தந்தியைப் போல் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகளை தர வேண்டும். எனவே தான் தினமணியை விட தினத் தந்தியை சாமான்யனும் விரும்புவது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  3. Anonymous3:38 AM

    السلام عليكم

    சகோதரர் சுவனப்பிரியன் அறிய,

    இந்தப் பதிவின் தலையங்கத்தைப் பார்த்தவுடன், அதில் என்ன உள்ளது என்று படிக்காமலே எனது ஆதங்கத்தை எழுதுகிறேன்.

    அறிவு சார்ந்த எத்தனையோ விடயங்கள் உலகத்தில் இருக்க, இந்த சினிமாக் கழிசடைகளைப்பற்றி எழுதி என்ன பயனை அடையப் போகிறீர்கள்? யார் பயனடையப் போகிறார்கள்?

    சமூக தீமைகளுக்குக் காரணமான இந்த கூத்தாடிகளைப்பற்றி, அவ்வப்போது எழுதாமல் இருக்க தங்களால் முடியவே முடியாதா?

    நீங்கள் திருந்துவதற்கு துவாச் செய்கிறேன்.


    - Ismath

    ReplyDelete
  4. Anonymous4:34 AM

    السلام عليكم சகோதரர் சுவனப்பிரியன் அறிய, இந்தப் பதிவின் தலையங்கத்தைப் பார்த்தவுடன், அதில் என்ன உள்ளது என்று படிக்காமலே எனது ஆதங்கத்தை எழுதுகிறேன். அறிவு சார்ந்த எத்தனையோ விடயங்கள் உலகத்தில் இருக்க, இந்த சினிமாக் கழிசடைகளைப்பற்றி எழுதி என்ன பயனை அடையப் போகிறீர்கள்? யார் பயனடையப் போகிறார்கள்? சமூக தீமைகளுக்குக் காரணமான இந்த கூத்தாடிகளைப்பற்றி, அவ்வப்போது எழுதாமல் இருக்க தங்களால் முடியவே முடியாதா?. - Ismath

    ReplyDelete
  5. சலாம் சகோ இஸ்மத்!

    //அறிவு சார்ந்த எத்தனையோ விடயங்கள் உலகத்தில் இருக்க, இந்த சினிமாக் கழிசடைகளைப்பற்றி எழுதி என்ன பயனை அடையப் போகிறீர்கள்? யார் பயனடையப் போகிறார்கள்? சமூக தீமைகளுக்குக் காரணமான இந்த கூத்தாடிகளைப்பற்றி, அவ்வப்போது எழுதாமல் இருக்க தங்களால் முடியவே முடியாதா?.//

    சமூகத்தில் சினிமாவும் நாம் விரும்பா விட்டாலும் ஒரு முக்கிய அங்கத்தை வகிக்கிறது. அதில் உள்ள குறை நிறைகளையும் அவ்வப்போது எழுதுவதால் அந்த துறையைப் பற்றியும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும். இந்த ரீதியில்தான் 10 பதிவு எழுதினால் இடையில் சினிமாவைப் பற்றியும் ஒரு பதிவு எழுதுவது. மற்றபடி சினிமா சமூக கேடுகளை அதிகம் வளர்க்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. ஊடக ..கண்ணோட்டத்துடன் .சுவனப்பிரியன்

    வெளியிட்டிருக்கும் இந்த செய்தியை மார்க்க பின்னணயில்

    விமர்சனம் செய்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை

    ஊடகமே செய்தானின் ஒரு பகுதிதான்.., கோல் சொலுதல்

    சிறிய விசயத்தைதூண்டி விடுதல் ..நேரத்தை வீண் விரயம்

    செய்தல்.., செய்ய வைத்தல்.., எனவே ஊடகத்தில் இதெல்லாம்

    சகஜம் ..ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன் ..

    ReplyDelete
  7. Anonymous3:59 PM

    சகோதரர் சுவனப்பிரியன் அறிய,

    ///சமூகத்தில் சினிமாவும் நாம் விரும்பா விட்டாலும் ஒரு முக்கிய அங்கத்தை வகிக்கிறது. அதில் உள்ள குறை நிறைகளையும் அவ்வப்போது எழுதுவதால் அந்த துறையைப் பற்றியும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.///


    சினிமாக் கழிசடையில், நிறை ஏது? நாம் விரும்பாத ஷைத்தான்களை உங்கள் பதிவுகளில் கூடியளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

    - Ismath

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)