
மோடிக்கு அடுத்த அடி குஜராத்தில்!
திரு குல்திப் சர்மா (முன்னால் ஐபிஎஸ் ஆபிஸர்) ஆம் ஆத்மி பார்ட்டியில் இணைந்துள்ளார். குஜராத்தில் காவல் துறையில் நீண்ட காலமாக பல பதவிகளை திறம்பட வகித்தவர். இது போன்ற ஒரு முக்கியஸ்தர் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி பார்டியில் இணைந்திருப்பது பிஜேபி வட்டாரத்தில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி மோடியின் மறைக்கப்பட்ட மேலும் பல கொலைகளும், கொள்ளைகளும் வெளிச்சத்துக்கு வரலாம்.
பணி செய்து வந்த ஆரம்பத்திலிருந்தே மோடியோடும் அமித்ஷாவோடும் மோதிக் கொண்டிருப்பவர். இவரது சகோதரர் பிரதிப் சர்மாவையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி சஸ்பெண்ட செய்தனர். ஆனால் தீர்ப்பு ஐஏஎஸ் ஆபிஸருக்கு சாதகமாக வரவே பதவி உயர்வு பெற்று பணிக்கு திரும்பினார். குஜராத்தில் தற்போது மோடிக்கு திரும்பிய இடமெல்லாம் எதிரிகளாக மாறி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை வீண் போகாது அல்லவா!
வழக்கம் போல் இந்த செய்தியையும் 'உண்மையின் உரை கல்லான' தின மலர் வெளியிடாது. அதனாலென்ன நாம் வெளியிட்டு விடுவோம். :-)
தகவல் உதவி
ஆம் ஆத்மி
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)