ஒரு சமையல்காரர்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அவரை கட்டித் தழுவி தங்களின் அன்பை வெளிக்காட்டினர். இந்த அன்பை நமது தமிழகத்தில் காண முடியுமா? சமையல் வேலை செய்பவர்களை ஒரு சாதியாகவே ஒதுக்கி அவர்களை நாம் தொடக் கூட மாட்டோம். 50 சதவீதமான இந்திய மக்கள் சமையல் அறையில் சாதி வித்தியாசம் பார்பதாக சமீபத்திய ஒரு அறிக்கை உண்மையை வெளிக் கொண்டு வந்தது.
இஸ்லாம் வருவதற்கு முன் அரபு மொழி பேசுபவர்கள் தங்களை உயர் சாதியாக எண்ணிக் கொண்டு மற்றவர்களை ஊமை பாஷை பேசுபவர்கள் என்று எள்ளி நகையாடினர். இஸ்லாம் வந்ததற்கு பிறகு 'அந்த மக்களின் குல வெறி சாதி வெறி இன வெறி அனைத்தையும் எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று நபிகள் நாயகம் கட்டளையாக இட்டார்கள். அன்று முதல் அங்கு ஒழிந்தது சாதி வெறி: மொழி வெறி. அது இன்று வரை தொடர்கதையாக சகோதரர் சிராஜூதீன் வரை நீள்கிறது.












No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)