

நேற்று ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் கிளையில் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் மரணம் என்ற தலைப்பில் மிக அழகிய உரையை நிகழ்த்தினார்கள். மதினாவிலிருந்து அவர் பேச வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அந்த அழகிய பேச்சை நாங்கள் கேட்டோம். அறிவியல் முன்னேற்றத்தை இது போன்ற ஆக்க பூர்வ காரியங்களுக்கு பயன் படுத்துவோம்.
பொழுது போக்கு சாதனங்கள் நிறைந்து விட்ட இந்த உலகில் இறைவனின் மார்க்கத்தைப் பற்றி கேட்க தங்களின் நேரத்தை செலவழித்து வந்தமர்ந்து இறைவனின் பொருத்தத்தை பெற்றுக் கொள்ளும் சகோதரர்களைப் போன்று நாமும் நமது நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க உறுதிபூணுவோமாக!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)