புர்காவை வீசி இந்திய
ஓட்டுனரை காப்பாற்றிய அரபு பெண்!
ராஸல்கைமா: வாகன விபத்தில்
சிக்கி உயிருக்கு போராடிய ஹிர்திக் சிங் என்ற இந்தியரை காப்பாற்றிய அமீரக பெண் சைஃப்
அல் குமைதி.
'நான் மருத்துவ மனை
சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வாகன விபத்தில் சிக்கி
ஓட்டுனர் ஒருவர் தீக்காயங்களோடு துடித்துக் கொண்டிருந்தார். என்னிடம் வேறு துணிகள்
இல்லை. உடன் எனது தோழியின் புர்காவை எடுத்து அந்த ஓட்டுனரின் மேல் போட்டேன். பற்றிய தீ குறைய
ஆரம்பித்தது. வலியால் அந்த ஓட்டுநர் துடித்தார். காவல் துறையினருக்கு தகவல் சொல்லி
அவர்கள் வந்த பிறகு அந்த இடத்தை விட்டு சென்றேன்.' என்று கல்ஃப் நியூஸூக்கு பேட்டி கொடுத்துள்ளார் சைஃப் அல் குமைதி.
தற்போது அந்த ஓட்டுனர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.
தகவல் உதவி
கல்ஃப் நியூஸ்
29-09-2017
இஸ்லாமிய வீடுகளையும்
கடைகளையும் அடையாளமிட்டு கூட்டமாக வந்து அழிக்கும் சங் பரிவார கும்பல் இந்நிகழ்வை கண்டு
வெட்கி தலை குனியட்டும்.


well done. This news item has got published
ReplyDeletein all leading newspapers.Hats off to the sister.
தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து பத்திாிகையிலும் இந்த செய்தி வந்து விட்டது. சமயோசித புத்தி என்பது இதுதான். நமக்கென்ன என்று வாழாமல் மற்றவா்கள் நலன் ?குறித்து நினைத்து செயல்பட்ட இப் பெண் பிறாமண வருணத்தைச் சோ்ந்தவா்.
ReplyDeleteஅந்தணா் என்போா் அறவோா்.எவ்உயிருக்கும் செந்தண்மை புண்டு ஒழுகலான் என்ற குறளுக்கு பொருத்தமான செயல்.