யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி)நூல் : முஸ்லிம்இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.முப்பது நோன்பும், ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றன. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்குக் காரணம் கூறியுள்ளனர்.இதன்படி ஷவ்வால் மாதம் முழுவதும் இந்த ஆறு நோன்பை பூர்த்தியாக்கலாம். தற்பொது பலரும் இந்த ஆறு நோன்பை வைப்பது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.நானும் மூன்று நோன்பை வைத்து விட்டேன். இன்னும் பாக்கி மூன்று நோன்பு உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் ஆறு நோன்பை அவசியம் வைத்து வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையை பெறுவார்களாக!
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)