Tuesday, June 19, 2018

தோழர் அருணனின் இஸ்லாம் பற்றிய புரிதல்!


https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/962587477255527/

2 comments:


  1. ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் நெய் சோற்றுக்கு தன்னை விற்பன் இவன்.இவனையெல்லாம் பதிவு செய்ய வேண்டுமா ?
    வ.உ சிதம்பரம் பிள்ளை செய்த பணிகளை சற்று நினைப்போமே
    வ.உ.சி. (தோற்றம் 5-9-1872 மறைவு 18-11-1936)



    கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தத்ரூபமாக வ.உ.சி-ஐ நம் மனக்கண் முன்னே நிறுத்தினார்.



    பார்த்தவர்கள் மனம் கலங்கியது.

    செக்கிழுத்த செம்மலை எப்படிப் புகழ்வது?

    மஹாகவி பாரதியாருடனான அவரது நெருங்கிய தொடர்பை யாரும் மறக்க முடியாது.

    அழியாத அமர வரிகளால் பாரதியார் அவரை தனது பாடல்களில் சித்தரித்து விட்டார்:

    கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லியது



    ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி

    நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை

    நாட்டினாய், கனல் மூட்டினாய்,

    வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே

    மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி)

    கூட்டம் கூடி வந்தே மாதரமென்று

    கோஷித்தாய், - எமை தூஷித்தாய்,

    ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்

    ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி)

    கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்

    கூறினாய், - சட்டம் மீறினாய்,

    ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே

    ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி)

    அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்

    ஆக்கினாய், - புன்மை போக்கினாய்,

    மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை

    மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி)

    தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்

    தூண்டினாய், - புகழ் வேண்டினாய்,

    கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்

    காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி)

    எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை

    ஏவினாய், - விதை தூவினாய்,

    சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்

    செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி)

    சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்

    சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன்

    தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே

    தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி)

    ReplyDelete
  2. கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி

    சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே

    துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோ ம்

    எந்த நாட்டினும் இந்த அநீதிகள்

    ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ?

    வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை

    வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்

    எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்

    ஈனமோ? - அவ மானமோ?

    பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு

    போகவோ? - நாங்கள் சாகவோ?

    அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்

    அல்லமோ? - உயிர் வெல்லமோ?

    நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்

    நாய்களோ? - பன்றிச் சேய்களோ?

    நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத்

    நீதமோ? - பிடி வாதமோ?

    பார தத்திடை அன்பு செலுத்துதல்

    பாபமோ? - மனஸ் தாபமோ?

    கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது

    குற்றமோ? - இதில் செற்றமோ?

    ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது

    ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோ ம்

    மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்

    மலைவு றோம்; - சித்தம் கலைவுறோம்.

    சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்

    சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?

    இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி

    ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ

    பாடலை விளக்கவும் வேண்டுமோ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)