அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பெரும் எண்ணிக்கையிலான இந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது ஒரு பிஜேபி தலைவர் இந்த பல்கலைக் கழகத்தின் விடுதியிலிருந்து இந்து மாணவர்களை வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், இந்து மாணவர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார். ஆனால் அங்கு பயிலும் இந்து மாணவ மாணவிகள் 'இது முற்றிலும் பொய்யான தகவல். எங்களை யாரும் வெளியேற்றவில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்களாக எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்கிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று பேட்டியளித்துள்ளனர்.
சங்கிககள் எந்த வகையிலாவது இந்து முஸ்லிம் விரோதத்தை வளர்த்து அதில் அரசியல் ஆதாயம் அடைய துடிக்கின்றனர். இதற்கு நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஒற்றுமையாக இருந்து சங்கிகளுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)