கடலின் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வு கண்டுள்ள ஹாஸிக் காஜி!
உலகம் முழுக்க கடலில் 5 ட்ரில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றிக் கொண்டுள்ளன. நாம் பயன் படுத்தும் உணவு உப்பில் அபாயகரத்தை தாண்டி பிளாஸ்டிக் துகள்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்துள்ளன. நாமும் தினமும் சாப்பிட்டு பல வியாதிகளை பெற்றுக் கொள்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை உண்ட பறவைகளும் மீன்களும் ஆங்காங்கே கடலில் செத்து மதிக்கின்றன. பிறகு கரையோரம் செத்து ஒதுங்குகின்றன.
மும்பையின் புனேயில் இந்தூஸ் பன்னாட்டு பள்ளியில் படிக்கும் ஹாஜிக் காஜி(Haaziq Kazi - Age 12) இதற்கொரு தீர்வைக் கண்டு பிடித்துள்ளார். . இந்த சிறுவன் படிக்கும் பள்ளியில் 'பிளாஸ்டிக் கழிவுகளை சமாளிப்பது எப்படி?' என்ற தலைப்பில் ஒரு ப்ராஜக்ட் கொடுத்துள்ளனர். ஒரு முறை தனது கைகளை வாஷ் பேஸினில் கழுவும் போது அதன் தண்ணீர் எவ்வாறு செல்கிறது என்று கூர்ந்து நோக்கியுள்ளார். இதனை அடிப்படையாக வைத்து சில 3D பொறியாளர்களின் துணை கொண்டு அருமையான தீர்வை கண்டு பிடித்துள்ளார். ஆசிரியர்களும் மாணவனுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
இந்த கண்டு பிடிப்புக்கு உந்து சக்தியாக இருந்தது இவரது தந்தை சொன்ன ஒரு அறிவுரை. 'உலகில் பிரச்னைகளை உருவாக்குவதற்கென்றே சிலர் உள்ளனர்: அந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கென்றே சிலர் உலகில் உள்ளனர்' - தந்தையின் அறிவுரைக்கேற்ப பிரச்னைகளை தீர்க்கும் சக்தியாக ஹாஸிக் காஜி உருவெடுத்துள்ளார். மேலும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலக மக்களுக்கு நன்மை செய்யட்டும் என்று நாமும் வாழ்த்துவோம்.
தகவல் உதவி
இந்தியா டைம்ஸ்
24-11-2018
இந்தியா டைம்ஸ்
24-11-2018



he
ReplyDeleteதம்பி என்ன கண்டிபிடித்தாா் என்ற ிபரம் /