Sunday, April 06, 2014

மரத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்வார்கள்!



சமீப காலமாக தவ்ஹீத்வாதிகளை சில அரசியல் முடிவுகளை முன் வைத்து பல அவதூறுகளை இணையமெங்கும் சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் தமிழகத்தில் ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிலும் தவ்ஹீதின்(ஓரிறைக் கொள்கையின்) வளர்ச்சியை அந்த எதிரிகளால் தடுத்து விட முடியாது. தவ்ஹீதை வீழ்த்த முன்பு நினைத்தவர்கள் இறைவனால் வீழ்த்தப்பட்டதாகத்தான் முந்தய வரலாறுகள் சொல்கின்றன. அதுதான் வருங்காலங்களிலும் இறைவன் நாட்டப்படி நடந்தேறும்.

6 comments:

  1. தவ்ஹீதை யாராலும் அழிக்க முடியாது அண்ணே... ஆனால் தவ்ஹீத் பேசும் ஜமாத்கள் தவறிழைத்தால் அழிவது சாத்தியம் தான்.....

    ReplyDelete
  2. //தவ்ஹீதை வீழ்த்த முன்பு நினைத்தவர்கள் இறைவனால் வீழ்த்தப்பட்டதாகத்தான் முந்தய வரலாறுகள் சொல்கின்றன. அதுதான் வருங்காலங்களிலும் இறைவன் நாட்டப்படி நடந்தேறும்.//

    அல்லாஹும்ம ஆமீன்..!

    ReplyDelete
  3. Ruknudeen11:38 AM

    அல்லாஹ் ஒருவனே என்ற ததஜவின் கொள்கையை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முட்டாளும் கூட எதிர்க்க வில்லை..!

    பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய நாடாளுமன்ற தேர்தலில், அந்த பதவிக்கு மோடி வேட்பாளராக நிற்க, அதை முறியடிக்க எந்த முயற்சியும் எடுக்காமல்... அதுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல்... மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட தம் மனுவை ஜெ ஆணையத்துக்கு ஃபார்வேர்ட் செய்த காரணத்துக்காக அதிமுகவை முஸ்லிம்கள் நாடாளுமன்ற தேதலில் ஆதரிக்கணும் என்ற ததஜவின் முட்டாள்த்தனமான விபரீத முடிவைத்தான் தமிழகத்தின் அனைத்து அறிவாளிகளும் எதிர்க்கிறார்கள்..!

    ததஜவின் மேற்படி முட்டாள்த்தனமான முடிவுக்கும்...
    ததஜவின் இறைவன் ஒருவனே எனும் தவ்ஹீது கொள்கைக்கும் ஒரு மண்ணும் சம்பந்தம் இல்லை..!

    விஷமத்தனமாக மார்க்கத்தை அரசியல் சாக்கடையில் கலக்காதீர்கள் சகோ. Suvanappiriyan.thanks Mohammed Ashik

    ReplyDelete
  4. Anonymous12:04 PM


    AnonymousApril 6, 2014 at 10:39 PM
    அண்ணே. நீங்க சொல்வது தவ்ஹீத பற்றி. ஆனால் விமர்சனம் முழக்க அழிந்து போறதை பற்றி
    ஆதலால் தவ்ஹீதை பற்றி அடிவருடிகள் கவலை பட தேவை இல்லை . தவ்ஹீது பாது காவலன் ரப்புல் ஆலமீன்

    Reply

    ReplyDelete
  5. ஆனந்த் சாகர்10:03 PM

    இருப்பது ஒரே ஒரு யதார்த்தம்(Single Reality) தான். அதை தவிர வேறு எதுவுமே உண்மையில் இல்லை. இருப்பதாக தோன்றுகிற அனைத்துமே அந்த ஒரே யதார்த்தத்தின் பல வகையான வெளிப்பாடுதான்(manifestation). எனவே இருக்கிற அனைத்துமே ஒரே யதார்த்தத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கின்றன.

    இந்த ஒரே யதார்த்தத்தை கடவுள், சக்தி, மூலம், பிரபஞ்சம், பிரபஞ்ச மனம், விழிப்புணர்வு, ஒளி, அன்பு என்று எந்த பெயரிலும் அழைக்கலாம். இந்த ஒரே யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக, வெளிப்பாடாக இருக்கிற பௌதீக பிரபஞ்சங்கள், நம் பௌதீக புலன்களுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சங்கள்,அவற்றில் இருக்கிற அனைத்து விதமான படைப்புகள், மனிதர்களாகிய நாம் உட்பட, அனைத்துமே கடவுள்தான்.

    இந்த உண்மையை அறியாதவர்கள்தான் நாம் வேறு , கடவுள் வேறு என்று நினைத்துக்கொண்டு கடவுள் என்று தனியாக ஒன்றை வணங்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

    உண்மை இப்படி இருக்க, ஓரிறை கொள்கை(தவ்ஹீத்) என்று கத்திக்கொண்டு சக மனிதர்களை முஷீரிக்குகள்(இணை வைப்பவர்கள்), காஃபிர்கள்(நிராகரிப்பாளர்கள்) என்று அழைத்து அவர்கள் மேல் வெறுப்பை வளர்ப்பவர்களை அறியாமையில் மூழ்கி உள்ள மனிதர்கள் என்று தான் கூற வேண்டும்.

    ReplyDelete
  6. Anonymous6:47 PM

    I second

    //Ruknudeen said...
    அல்லாஹ் ஒருவனே என்ற ததஜவின் கொள்கையை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முட்டாளும் கூட எதிர்க்க வில்லை..!

    பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய நாடாளுமன்ற தேர்தலில், அந்த பதவிக்கு மோடி வேட்பாளராக நிற்க, அதை முறியடிக்க எந்த முயற்சியும் எடுக்காமல்... அதுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல்... மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட தம் மனுவை ஜெ ஆணையத்துக்கு ஃபார்வேர்ட் செய்த காரணத்துக்காக அதிமுகவை முஸ்லிம்கள் நாடாளுமன்ற தேதலில் ஆதரிக்கணும் என்ற ததஜவின் முட்டாள்த்தனமான விபரீத முடிவைத்தான் தமிழகத்தின் அனைத்து அறிவாளிகளும் எதிர்க்கிறார்கள்..!

    ததஜவின் மேற்படி முட்டாள்த்தனமான முடிவுக்கும்...
    ததஜவின் இறைவன் ஒருவனே எனும் தவ்ஹீது கொள்கைக்கும் ஒரு மண்ணும் சம்பந்தம் இல்லை..!

    விஷமத்தனமாக மார்க்கத்தை அரசியல் சாக்கடையில் கலக்காதீர்கள் சகோ. Suvanappiriyan.thanks Mohammed Ashik//

    In addition to that, MMK has supported DMK so choose the opposite.. seems to be this logic for PJ. They are ready to join hands with kaffirs but not with fellow muslims ... you understand why RSS n hindutva's hands are gaining upper hand over muslims ..coz of our enmity among ourselves.....

    Habib

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)