
நமது வெளியுறவுக் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் தளத்தில் 'இந்திய பணிப்பெண்ணின் வலது கை சவுதி முதலாளியால் வெட்டப்பட்டுள்ளது. இந்த காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்' என்று பொங்கியிருந்தார். உடனே இந்துத்வாவாதிகள் இணைய தளத்தில் மேலும் பொங்கினர். இது வழக்கமான பொய் பிரசாரம்.
இந்திய தூதரகத்தின் முக்கிய அதிகாரி அனில் நோடியல் அரப் நியூஸூக்கு அளித்த பேட்டியில் 'தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற வீட்டு வேலை செய்யும் பெண் தனது அறையை உள் பக்கமாக தாளிட்டு ஜன்னல் வழியாக கயிறு மற்றும் துணிகளை கட்டி கீழே இறங்க முயற்சித்துள்ளார். பேலன்ஸ் தவறி அந்த பெண் கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்' என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளையும் இஸ்லாமியர்களையும் அவதூறு செய்து அவப்பெயர் ஏற்படுத்த இந்துத்வாவாதிகள் என்னென்ன வழிகளை எஎல்லாம் உபயோகிக்றார்கள் என்று பாருங்கள்.
ஒரு வெளியுறவு மந்திரி செய்தியை போடுவதற்கு முன் பல முறை அதனை சரி பார்த்திருக்க வேண்டாமா? இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டாமா?
சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் தளத்தை பார்த்து இன்று உலக மீடியாக்கள் எள்ளி நகையாடுகின்றன.
இந்துத்வாவாதிகளுக்கு இது தேவையா? மோடியிலிருந்து ராமகோபாலன் வரை ஒருவர் விடாமல் பொய் செய்திகளை பரப்புவதில் கில்லாடிகள். ஆனால் அனைத்து பொய்களும் இணையம் மூலமாக ஒரே நாளில் வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது.
தகவல் உதவி
அரப் நியூஸ்
10-10-2015
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)