கங்கை நதியின் தூய்மைக்காக மோடி அரசு ஏதாவது செய்யுமா?கங்கை நதியை புனிதமானது என்று நினைத்து குடிக்கும் பலர் வியாதியை வில...
Posted by Nazeer Ahamed on Tuesday, December 29, 2015
கங்கை நதியின் தூய்மைக்காக மோடி அரசு ஏதாவது செய்யுமா?
கங்கை நதியை புனிதமானது என்று நினைத்து குடிக்கும் பலர் வியாதியை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அவசியம் குடிக்க வேண்டும் என்றிருந்தால் நன்கு கொதிக்க வைத்து மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே குடிக்கவும். ஏனெனில் அழுகிய இறந்த மனித உடல்களின் சதைத்துண்டுகளையும் நீங்கள் புனிதம் என்று கரைத்து குடிக்கிறீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம். கங்கை நீரை குடிப்பதால் புற்று நோய் மிக எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
இறை வணக்கமாக இருந்தாலும் உடல் நலம் முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எரிந்த பிணங்களை கங்கை ஆற்றில் அரை குறையாக இறக்கி விடுவதை தடுத்தாலே சில ஆண்டுகளில் கங்கையை தூய்மை படுத்தி விடலாம். கங்கை ஆற்றில்தான் இறக்க வேண்டும் என்றால் ஒரு அரை பர்லாங் தூரத்தை கங்கை நீரை கொண்டு வந்து தடுப்பு ஏற்படுத்தி அங்கு பிணங்களை இறக்கலாம். அந்த ஓடை கங்கை ஆற்றில் கலந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த ஓடையில் மீன்கள் முதலைகளை வளர்த்தால் அவை சாப்பிட்டு அந்த நீரை தூய்மையாக்கி விடும். உலக வங்கி கங்கை நீரை தூய்மை படுத்த பல கோடிகளை வாரி இறைக்கிறது. அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக போய்க் கொண்டுள்ளது. இந்துக்களுக்காக பெரும் சேவை செய்வதாக சொல்லிக் கொள்ளும் மோடி அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இதற்காக நம் நாடு பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)