Tuesday, September 18, 2018

அப்பாவி இந்துக்களே ... விழித்துக் கொள்ளுங்கள்.....

அப்பாவி இந்துக்களே ...
விழித்துக் கொள்ளுங்கள்.....
ஆரியர்கள் வருகின்றார்கள்.......
நாம் மதத்தை காப்பாற்ற வேண்டுமென்று
அவர்கள் உங்களிடம் கூறுவார்கள்.
உங்களை கல் எரிய சொல்வார்கள்,
கலவரம் செய்ய தூண்டுவார்கள்,
நீங்கள் எரியும் ஒவ்வொரு கல்லுக்கும்
ஒரு பிராமண குழந்தை ஐ.ஐ.டிக்குள் போகும் !
நீங்கள் வீசும் ஒவ்வொரு பெட்ரோல் குண்டுக்கும், ஒவ்வொரு நிறுவனத்தில் OBC/MBC/BC இட ஒதுக்கீடு காணாமல் போகும் !
நீங்கள் கொலுத்தும் ஒவ்வொரு சர்ச்சுக்கும் அவாளின் பிள்ளை
அமெரிக்க குடியுரிமை பெறும் !
நீங்கள் நடத்தும் ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு பிராமணர் அமைச்சராவார் !
நீங்கள் இடிக்கும் ஒவ்வொரு மசூதிக்கும்
ஒவ்வொரு பிராமணர் நீதிபதியாவார். !
நீங்கள் இந்தியாவை காவி மயமாக்க கனவு காணுவீர்கள்;
உங்கள் கனவுகளின் ஊடே புகுந்து
நீட் தேர்வையும், இந்தியையும் அவர்கள் கட்டாயமாக்குவார்கள் !
நீங்கள் நாடு் முன்னேற வேண்டும் என்று அவா கொள்வீர்கள்;
ஆனால் உங்களுக்கு அல்வா மட்டுமே கிடைக்கும்; பிராமண பனியாக்களுக்கு பல ஆயிரம் கோடி இலவச கடனும்
இங்கிலாந்து பாஸ்போட்டும் கிடைக்கும் !
அவர்கள் உங்கள் பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். மூளைசலவை செய்வார்கள்
வன்முறை செய்ய தூண்டுவார்கள்!
ஜெயிலுக்கு அனுப்புவார்கள். வழக்குகளை வாங்கி தருவார்கள்.
ஆனாலும் இந்த கலவரங்களுக்கு இடையே அவர்கள் அதிகாரிகளாகவும், தலைமை செயலாளராகவும் தொடர்வார்கள்.
அப்பாவி இந்துக்களே விழித்து கொள்ளுங்கள்,
ஆரியர்கள் வருகின்றார்கள்.
நீங்கள் காப்பாற்றி கொண்டிருப்பது
இந்துக்களின் நலனை அல்ல,
நீங்கள் காப்பாற்றி கொண்டிருப்பது
பார்ப்பன-பனியாக்களின் நலனை. !!
*கவிஞர். தமிழ்மறவன்*
இவண்,
சுப.நீலகண்டன் அமைப்புச் செயலாளர், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், இராணிப்பேட்டை.

14 comments:

  1. மிகச்சரி

    ReplyDelete

  2. பஞ்சாயத்து அளவில் சாதி ஆதிக்க சக்திகள் செயல்பட்டு வருகின்றன்.கோவையில் கவுண்டா்கள் என்றால் காயல்பட்டணத்தில் மேலப்பாளையயத்தில் முஸ்லீம்கள் ஆதிக்க சக்திகள்..ராமநாதபுரத்தில் ...... ஆதிக்க சக்திகள். இதில் பார்ப்பனா்களை மட்டும் தனியாக குற்றம் சாட்டுவது ஏன் ? திசைதிருப்புவது ஏன் ?

    பார்ப்பனா்கள் அரசு அலுவலகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது.100/100 மதிப்பெண் பெற்ற பார்பனனுக்கு அரசு கல்வி உதவித்தொகை கிடையாது.படிப்பதற்கு கல்லூரியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு. பொது வகுப்பினா் இடத்திற்கும் அனைத்து சாதி மக்களும் உயா் மதிப்பெண் பெற்று விடுவதால் பார்பனா்களுக்கு இடம் கிடைப்தும் சிரமம் தான். பார்பபனா்களுக்கு எதிராக மிகக்கொடுரமான தாக்குதலை அரசு தொடா்ந்து வருகின்றது.

    சுதந்திர இந்தியாவில் உவே சாமிநாத ஐயருக்கு இணையாக தமிழ்தொண்டு செய்த ஒருவரை சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம் சுவனப்பிரியன்.ற சிறந்த கவிஞா் வழிகாட்டி சமுக நீதிக்கு வழிகாட்டி போன்ற சிறந்த தகுதிகளைப்பெற்றவா் பாரதியாா்- அவரும் ஒரு பார்ப்பனா்தான்.

    தியாகங்கள் பல செய்து சமூகத்திற்கு அதிக அளவு பயன்பட்ட அற்புதமான மக்கள் பார்ப்பனா்கள். தமிழ்நாடு பிறாமண சங்கத்தார் அரும் பணி ஆற்றிய அந்தணா்கள் என்ற புத்தகம் வெளியிட்டுள்ளாா்கள் படித்து தெளிவு பெறுங்கள்.

    ReplyDelete
  3. இங்க பாருங்க காமெடிய, 69% போக மீதி உள்ள 31% இட ஒதுக்கீடு யாருக்கு? ஆண்டாண்டுகளாக மக்களை அடிமைப்படுத்தி (அன்புராஜ் போன்றோரை சூத்திரன் என்று சொல்லி, பெண்களுக்கு மேலாடையை களைந்து, முலை வரி இட்டு) படிக்கவிடாமல் செய்த பார்ப்பனரை இன்றும் தூக்கி பிடிப்பது நியாயமா? 3% உள்ள பார்ப்பனர்கள் ஒவ்வொரு துறையிலும் 60-90% ஆக்கிரமித்து இருக்கிறார்கள். நீர் ஒரு அக்மார்க் அடிமை என்பதை எல்லா பதிவுகளிலும் நிரூபிக்கிறீர்

    ReplyDelete

  4. இசுலாமிய வெறுப்பிற்கு காரணம் குரான் போதிக்கும் அரேபிய வல்லாதிக்க கருத்துக்கள்.
    பார்பன வெறுப்பிற்கு என்ன காரணம்.இந்துக்களை பிரித்தாளும் சுழ்ச்சியின் ஒரு அங்ககம்.பார்பனர்களின் தகுதியை நாங்கள் நன்கு அறிவோம்.
    வள்ளலாரையும் ஸ்ரீநாராயணகுருவையும் சுவாமி விவேகானந்தரையும் அனைத்து இந்துக்களுக்கு கற்றுக்கொடுக்க மறுக்கும் அனைவரும் இந்து துரோகிகள்தாம். சமூக விரோதிகள்தாம்.

    ReplyDelete

  5. அகநானூறு நல்ல காரியம் செய்ய விழைந்த ஒரு பார்ப்பானின் பரிதாபத்திற்குரிய கதையை பாடல் எண் 337இல் விவரிக்கிறது.

    பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் பாலை பற்றிப் பாடுதலில் சிறந்த கவிஞர்.

    அந்தக் காலத்தில் அந்தணர்கள் வேதம் ஓதுவது, யாகம் முதலியன இயற்றுவது தவிர போரை நிறுத்துவது, நல்ல காரியம் நடப்பதற்காக தூது செல்வது போன்ற நற்பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

    அப்படி தூது செல்லும் நற்பணியில் ஈடுபட்ட பரிதாப்பத்திற்குரிய ஒரு பார்ப்பான் மிகுந்த ஏழை. அவன் வற்றிய உடலைப் பார்த்தாலே அது தெரியும். அவன் கையிலே வெள்ளோலை என்பப்படும் தூதுச் செய்தி அடங்கிய ஓலையைக் கொண்டு செல்கின்றான்.


    அதைப் பார்த்த மழவர்கள் அவன் ஏதோ ப்ரிசுப் பண்ம் தான் கொண்டு வருகிறான் என்று அவனை இடைமறித்துக் கொல்கின்றனர். ஒரே குத்து. குடல் வெளியே வருகிறது. ஆனால் எதிர்பார்த்தபடி அவனிடம் பணம் இல்லை. ஓலை தான் இருக்கிறது. கையைச் சொடுக்கி தம்மை நொந்து கொண்டு மழவர் செல்ல, உருவிக் குடல் சரியச் செத்துக் கிடக்கும் பார்ப்பனனை ஆண் நரி ஒன்று அணுகுகிறது. அது அந்தக் குடலைத் தின்ற படியே க்ள்ளி மரத்தின் நிழலில் ஓலமிட்டுக் கூக்குரலிடுகிறது.

    இந்த கடுமையான் காட்டு வழி நிகழ்வின் வர்ணனையை பாலை பாடிய பெருங்கடுங்கோ அழகுற மொழிகிறார்.

    இந்தச் சம்பவம் பாடலில் ஏன் வருகிறது?

    தலைவன் ஒருவன் தலைவியைப் பிரிந்து முன்னொரு காலத்தில் ஊரை விட்டுச் சென்று பொருள் ச்மபாதித்து வருகிறான். இப்போதும் அது போலச் செல்ல எண்ணும் போது தன் நெஞ்சைப் பார்த்துச் சொல்லும் பாடலாக இது அமைகிறது.

    வெம்மை மிகுந்த காட்டு வழியில் பார்ப்பானுக்கு நேர்ந்த கதியை அவன் நினைவில் கொண்டு வருகிறான். காதலி படவிருக்கும் துயரை எண்ணுகிறான். தான் செல்லும் எண்ணத்தை கை விடுகிறான்.

    பாடலை முழுதுமாகப் படித்து கருத்தை அறிந்து இன்புறலாம்.

    பார்ப்பனர்கள் வெள்ளோலை ஏந்தி அஞ்சாது காட்டு வழியே தூது செல்வதையும் இடை வ்ழியில் ஏற்படும் ஆபத்தில் தன் இன்னுயிரை விடுவதையும் படிக்கும் போது நெஞ்சம் உருகுகிறது.
    ....2

    ReplyDelete
  6. பாடல் இதோ:



    சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த

    மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனிப்

    பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய

    ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்

    அவணதாகப் பொருள் என்று உமணர்

    கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்

    தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்

    படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

    ‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது

    பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே

    தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்

    திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்

    செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்

    கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ

    வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை

    வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்

    கள்ளி நீழற் கதறுபு வதிய

    மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை

    எமியம் கழி தந்தோயே – பனி இருள்

    பெருங்கலி வானம் தலை இய

    இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே





    பொருள்

    மலைச்சாரலிடத்தே ஆச்சா மரத்தின் உச்சிக் கிளைகளில் மழை காலத்தில் துளிர்த்த தண்மையான தளிரை ஒத்த மேனி உடையவள் தலைவி. அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் வருந்தி தன் அழகு கெடுமாறு இந்த இடத்திலேயே நம்மைப் பிரிந்து அவள் தனித்து இருக்கும்படி நாம் செல்லுதல் இனிதல்ல. ஆதலால் நெஞ்சே! நீ க்ருதும் பொருளான அதனை அடைதலை நாம் விரும்போம்.(சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த

    மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனிப்

    பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய

    ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்

    அவணதாகப் பொருள் என்று)





    உப்பு வாணிகரின் பொதிகளைச் சுமந்து செல்லும் கழுதைகளைப் போல குறும்பாறைகள் வரிசையாக அமைந்திருக்கும் இடத்தினூடே , வழக்கமாகத் தூது செல்லும் பார்ப்பான் தன் மடியிலே வெள்ளிய ஓலைச் சுருளுடன் வருகிறான். அவன் வருவதை மழவர்கள் நோக்குவர். ‘உண்ணாமல் இருப்பதினால் வாடிய விலா எலும்பு தெரிய இருக்கின்ற இவன் கையில் இருப்பது பொன்னாக இருக்கும் போலும்’ என்று அவர்கள் கருதுவர். உடனே அவனை வீணாகக் கொன்று வீழ்த்துவர்.கையில் சிவப்புத் தடிகளையும் அம்புகளையும் உடைய அவர்கள் அந்தப் பார்ப்பானுடைய வறுமையை நோக்கித் தன் கைகளை நொடித்துக் கொண்டு அங்கிருந்து செல்வர்.

    ReplyDelete
  7. கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்

    தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்

    படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

    ‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது

    பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே

    தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்

    திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்

    செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்)





    நீள ஒழுகுகின்ற இரத்தத்துடன் சரிந்து கிடக்கும் அப்பார்ப்பானின் குடலை வரிகளை கொண்ட் வெண்மையான கண்ணைப் பறிக்கும் கூழாங்கற்கள் மின்னும் வழியினூடே ஆண் நரி ஒன்றுக் கடித்துத் தின்றபடியே கள்ளி மரத்தின் நிழலின் கீழ் கூக்குரலிட்டுத் தங்கி இருக்கும்



    மழையே இல்லாமல் வெம்மை மிகுந்திருக்கும் அந்தக் காட்டு வழியில் முன்பொரு காலத்தில் நடுங்க வைக்கும் இராப் பொழுதில் ஆரவர்ரம் கொண்ட மேகத் திரள் திரண்டு மழை பொழிய, குளிரோடு கூடிய வாடையும் வீச அப்போது நம் தலைவி நம்மை நினைத்து வருந்துவாளே! ஆகவே நீ செல்ல வேண்டாம்!





    (கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ

    வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை

    வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்

    கள்ளி நீழற் கதறுபு வதிய

    மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை

    எமியம் கழி தந்தோயே – பனி இருள்

    பெருங்கலி வானம் தலை இய

    இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே)



    பொருள் ஈட்ட விழையும் ஒரு தலைவனை காட்டு வழியும் அங்கு அந்தணன் ஒருவனுக்கு நேர்ந்த கதியும் கலங்க வைக்கிறது. அவன் அந்த வழியே முன்பொரு முறை சென்றவன் தான். என்றாலும் கடும் வழியை எண்ணியும் பிரிவை எண்ணியும் அவன் தான் செல்லுகின்ற எண்ணத்தை விடுகிறான்.

    நமக்குக் கிடைப்பது, அஞ்சாது காட்டு வழியே சென்று தூதுப்பணி ஆற்ற விழைந்த அந்தணனின் சோகமான முடிவும் தலைவன் தலைவி காதலும் தான்!

    ReplyDelete
  8. கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்

    தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்

    படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

    ‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது

    பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே

    தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்

    திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்

    செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்)





    நீள ஒழுகுகின்ற இரத்தத்துடன் சரிந்து கிடக்கும் அப்பார்ப்பானின் குடலை வரிகளை கொண்ட் வெண்மையான கண்ணைப் பறிக்கும் கூழாங்கற்கள் மின்னும் வழியினூடே ஆண் நரி ஒன்றுக் கடித்துத் தின்றபடியே கள்ளி மரத்தின் நிழலின் கீழ் கூக்குரலிட்டுத் தங்கி இருக்கும்



    மழையே இல்லாமல் வெம்மை மிகுந்திருக்கும் அந்தக் காட்டு வழியில் முன்பொரு காலத்தில் நடுங்க வைக்கும் இராப் பொழுதில் ஆரவர்ரம் கொண்ட மேகத் திரள் திரண்டு மழை பொழிய, குளிரோடு கூடிய வாடையும் வீச அப்போது நம் தலைவி நம்மை நினைத்து வருந்துவாளே! ஆகவே நீ செல்ல வேண்டாம்!





    (கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ

    வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை

    வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்

    கள்ளி நீழற் கதறுபு வதிய

    மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை

    எமியம் கழி தந்தோயே – பனி இருள்

    பெருங்கலி வானம் தலை இய

    இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே)



    பொருள் ஈட்ட விழையும் ஒரு தலைவனை காட்டு வழியும் அங்கு அந்தணன் ஒருவனுக்கு நேர்ந்த கதியும் கலங்க வைக்கிறது. அவன் அந்த வழியே முன்பொரு முறை சென்றவன் தான். என்றாலும் கடும் வழியை எண்ணியும் பிரிவை எண்ணியும் அவன் தான் செல்லுகின்ற எண்ணத்தை விடுகிறான்.

    நமக்குக் கிடைப்பது, அஞ்சாது காட்டு வழியே சென்று தூதுப்பணி ஆற்ற விழைந்த அந்தணனின் சோகமான முடிவும் தலைவன் தலைவி காதலும் தான்!

    ReplyDelete
  9. பிறாமணா்களில் விஞ்ஞானிகள் Scientists
    Aryabhata – Mathematician, Astronomer (Identity theft by Brahmins for racial promotion will be exposed in this blog soon)
    Charaka – Medicine (Identity theft by Brahmins for racial promotion will be exposed in this blog soon)
    Sushruta – Medicine (Identity theft by Brahmins for racial promotion will be exposed in this blog soon)
    Jogesh Pati– Theoretical Physicist
    Varahamihira – Mathematician, Astrologer, Astronomer (Identity theft by Brahmins for racial promotion will be exposed in this blog soon)
    Brahmagupta – Mathematician, Astronomer (Identity theft by Brahmins for racial promotion will be exposed in this blog soon)
    Ramanujan – Mathematical Genius
    C.V.Raman – Physicist
    Subrahmanyan Chandrasekhar – Physicist
    Yellapragada Subbarao – BioChemist
    M S Swaminathan (Agriculture Scientist)
    Freedom Fighters
    Gopal Krishna Gokhale – political guru of Mahatma Gandhi
    Pachlegaonkar Maharaj: Rashtra Sant, Founder of Mukteshvar Dal, Hindu Rashtra Sena. Social Activist. leader of Hyderabad Liberation Struggle.
    Yogendra Shukla – Revolutionary
    Baikuntha Shukla – Revolutionary
    C. Rajagopalachari – Last Governor-General of India, Ex-Chief Minister of Madras State
    Chandra Shekhar Azad – Was part of Hindiustan Republican Association
    Lokmanya Tilak – Was also part of Indian national congress
    Mangal Pandey – Associated with 1857 rebellion
    Rani Lakshmibai – Associated with 1857 rebellion
    Subramanya Bharathi – Revolutionary Tamil poet
    Swami Sahajanand Saraswati freedom fighter, peasant leader
    Vasudev Balwant Phadke
    Vanchinathan
    Wunnava Venkata Varaha Buchi Ramalingam
    V.V.S. Iyer
    Vinayak Damodar Savarkar
    Shivaram Rajguru– associate of Bhagat Singh and Sukhdev
    Babarao Savarkar
    Anant Kanhere -killed collector Jackson
    Chapekar brothers
    Mahadev Govind Ranade
    Senapati Bapat
    Tanguturi Prakasham
    Bhogaraju Pattabhi Sitaramayya
    Nana Sahib Peshwa – Associated with 1857 rebellian.
    Nobel Prize
    Rabindranath Tagore – Literature
    C. V. Raman – Physicist
    Subrahmanyan Chandrasekhar – Physicist
    Venkatraman Ramakrishnan – Medicine/Physiology
    Kailash Satyarthi – Nobel Peace Prize

    ReplyDelete
  10. ராணுவ தளபதியாக பிறாமணா்கள்
    Defence forces
    Padmapani Acharya: Kargil War hero
    Kambampati Nachiketa: Kargil War hero and first Indian POW during the war
    Devendra Kumar Joshi :Admiral,Chief of Naval Staff of the Indian Navy(2012-2014)
    Arun Shridhar Vaidya : First Army General who was assassinated
    Bipin Chandra Joshi : Army General
    Jayant Ganpat Nadkarni : Chief of the Naval Staff (1987-1990)
    Subroto Mukerjee : Air Chief Marshal (1954-1955)
    Pradeep Vasant Naik : Air Chief Marshal (2009–2011)

    ReplyDelete

  11. ராணுவத்தில வீர தீர செயல்கள் செய்தவா்கள்
    Recipients of the Gallantry awards
    Param Veer Chakra: Somnath Sharma– First recipient of India’s highest gallantry award
    Param Veer Chakra: manoj Kumar Pandey

    ReplyDelete
  12. உயரிய விருது பெற்றவா்கள்
    Recipients of the Civilian awards
    Bharat Ratna: Atal Bihari Vajpayee – Former PM of India, BJP founder
    Bharat Ratna: Madan Mohan Malaviya – Educationalist, Founder of Banaras Hindu University(BHU)
    Bharat Ratna: Pandurang Vaman Kane – Sanskrit Scholar
    Bharat Ratna: Maharshi Dhondo Keshav Karve – Social Service
    Bharat Ratna: Acharya Vinoba Bhave – Social Service (Bhudan Movement)
    Bharat Ratna: Varahagiri Venkata Giri– civilian decoration, Indian fourth President
    Bharat Ratna: Sachin Tendulkar-Indian Cricketer
    Bharat Ratna: Lata Mangeshkar – Famous Playback singer
    Bharat Ratna: Pandit Ravi Shankar – Famous Sitar player
    Bharat Ratna: Chakravarti Rajgopalachari – Independence Activist
    Bharat Ratna: C. V. Raman – Physicist
    Bharat Ratna: Sarvepalli Radhakrishnan – Philosopher
    Bharat Ratna: Bhagwan Das – Author
    Bharat Ratna: Mokshagundam Visvesvarayya – Civil Engineer
    Bharat Ratna: Gopinath Bordoloi – Former Assam Chief Minister
    Bharat Ratna: Pandit Bhimsen Joshi – Hindustani Classical Music Vocalist
    Bharat Ratna: C N R Rao – scientist
    Padma vibhushan: Nanaji Deshmukh – Socia Activist, Founder of Bharatiya Jana Sangh Party, MP of BJP.
    Padma Vibhushan: Sitakant Mahapatra
    Padma Vibhushan: Prof. M M Sharma– Scientist
    Padma Vibhushan: Raghunath Mashelkar– Scientist
    Padma shree: Vempati Chinna Satyam– Dancer
    Padma Bhushan: S.P.Balasubramanyam– Singer
    Padma Bhushan: J B Joshi– Scientist
    Padma Bhushan: Rahul Dravid-Indian Cricketer
    Padmashree & Padma Bhushan: Kamal Hassan -Actor
    Padmashree: Kaasinathuni Viswanath – Actor
    Recipients of the Gallantry awards

    ReplyDelete
  13. நன்றி.சுவனப்பிரியன். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தை சதா இழிவு படுத்தும் விதமாக திராவிட கழகத்தவா்கள்தான் செயல்படுகின்றாா்கள் எனில் முஸ்லீம்ஆன தாங்கள் ஏன் நியாயமற்று பதிவுகளை தவறான தகவல்களை பரப்ப வேண்டுமா ? பாவம்.
    --------------------------
    பிறாமணா்களை முன்மாதிரியாகக்கொண்டு பிற வகுப்பைச்சோ்ந்த இந்துக்களே உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.பிறாமண துவேசம் வேண்டாம். என்று சுவாமி விவேகானந்தா் சொல்லியுள்ளாா்.
    ------------------------------------------
    இன்றும் மகாத்தான சாதனைகள் தியாகங்கள் செய்யும் தகுதியை பிறாமண சமூகம் கொண்டுள்ளது. பிறாமண வெறுப்பாதல் இழந்தவா்கள் பிற்பட்ட வகுப்பினா்கள்தாம். தரமான ஆசிரியா்கள் இல்லை.காரணம் பட்டம் பெற்ற பின் படிக்காதவா்கள்தாம் ஆசிரியதாக உள்ளார்கள். விளைவு கல்வித்துறை மிகவும் பின்தங்கி விட்டது. ஆசிரியா்கள் கிழவா்களாக மாறுகின்றாா்கள். ஸீனியா்களாக மாற வில்லை. பிறாமணனை அரசுப்பணியில் இருந்து விரட்டி பாவத்திற்கு இன்று தகுதியான ஆசிரியா்கள் பள்ளிக்கு ஒருவா் கூட இன்றி அல்லல்படுகின்றோம். Science today ,physics today chemistry today Maths today கலைக்கதிா் போன்ற பத்திாிகைகள் படிக்கும் ஆசிரியா்கள் எத்தனை போ்கள் தெரியுமா ? 1 சதம் கூட தேறாது. ஆசிரியா் நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லாமல் நியமனம் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.

    ReplyDelete
  14. காலம் காலமாக படித்தால் நாக்கை அரு, கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்று சொன்னார்களால் இந்த சாதனை கூட செய்யமுடியவில்லை என்றால் எப்படி

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)