Tuesday, November 05, 2019

சிந்திக்க்கும் மக்களுக்கு இதில் நிறைய பாடங்கள் உண்டு.

நிகழ்காலத்தில் கூட்டம் கூட்டமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் என்றால் அது ருவாண்டா மக்கள் தான். அதன் பின்னணி நம் எல்லோருக்கும் ஒரு பாடம் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ்ந்துக் காட்டுவதே மிகச் சிறந்த அழைப்பு பணியாகும். ருவாண்டாவில், இனக்கலவரங்கள் தொடங்கிய காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு சதவிதம் மட்டுமே. ஆனால் ஒடுக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு அந்த ஒரு சதவித முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
சொல்லிமாளாத துயரங்களை எதிர்கொண்டு உணவு முதலிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொடுத்தார்கள். இனக்கலவரங்கள் முடிவுக்கு வந்த போது, கணிசமான மக்கள் இஸ்லாமை ஏற்க தொடங்கினார்கள். இன்று, ருவாண்டாவில் முஸ்லிம்களின் மக்கட்தொகை, TRT World ஊடகத்தின் செய்திப்படி, சுமார் 12% - 15%.
சிந்திக்க்கும் மக்களுக்கு இதில் நிறைய பாடங்கள் உண்டு.
இதுக்குறித்த மேலதிக விபரங்களை பின்வரும் சுட்டியில் பெறலாம். https://www.trtworld.com/…/from-the-ashes-of-genocide-isla…/



1 comment:

  1. ஏகனவே உள்நாட்டு யுத்தம் இனக்கலவரம் என்று ஹீடு- ஹிட்சு இனப்போா் என்று பாழாகிய நாடு ருவாண்டா. விரைவில் சிரியா யேமன் அளவிற்கு பாழாய் போக உள்ள வழியில் இந்த நாடு செல்வது ஆபத்தானது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)