Tuesday, December 10, 2019

இன்னொரு பாரதியார் தற்கால சூழ்நிலைக்கு தேவைப்படுகிறார்

'இன்னொரு பாரதியார் தற்கால சூழ்நிலைக்கு தேவைப்படுகிறார்' - இல கணேசன் (11-12-2019)
ஆம்... இல கணேசன் சொல்வது உண்மைதான். தற்போதய கால கட்டம் இந்தியாவின் மிக இருண்ட காலம். அனைத்து மட்டத்திலும் பார்பனியம் அமர்ந்து கொண்டு இந்தியாவை மிக கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது. பார்பனராக பிறந்திருந்தாலும் பார்பனியத்தின் ஆபத்தை மிக அழகாக பாரதியார் அன்றே தைரியமாக சொல்லி விட்டு சென்றுள்ளார். இன்னொரு பாரதியார் இக்கால கட்டத்துக்கு தேவை என்ற இல கணேசனின் வாதத்தில் உடன்படுகிறேன்.
இனி பாரதியாரின் வரிகளைப் பார்போம்.
---------------------------------------------
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப்
பிச்சுப் பணம் கொடு எனத் தின்பான்
----------------------------------------------
“சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,
சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.
----------------------------------------------
எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் குலம் – எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே — வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே — ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – சுப்பிரமணிய பாரதி
----------------------------------------------------
“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே”
----------------------------------------------------
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு
பாயும் கடி நாய்ப் போலீசு – காரப்
பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு (fees)”
-------------------------------------------------
“முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் – ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் — இவர்
ஏதுசெய்தும் காசு பெறப் பார்ப்பார்.
பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்


8 comments:

  1. பாரதியாரின் கவிதைகள் சிலவற்றை பதிவு செய்து அசத்தியமைக்கு நன்றி. பாரதியாா் இப்படியும் அரேபிய மணி குரான் வழி தொண்டர்கள் சிலரைப்பற்றி இப்படியும் பாடியிருக்கின்றாா்.
    தேசிய இயக்கப் பாடல்கள் - சத்ரபதி சிவாஜி (தன் சைனியத்திற்குக் கூறியது)

    ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
    ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
    வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
    சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
    யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!

    அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
    எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
    வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
    கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர்.
    மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்

    செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
    யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
    தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
    மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
    ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!

    வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
    பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
    வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
    பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
    தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும்

    நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
    வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
    ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
    பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
    நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

    பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
    நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
    வானக முட்டும் இமயமால் வரையும்
    ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
    காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்

    தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
    இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
    உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
    பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
    மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!

    தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
    ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
    ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
    வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
    பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?

    நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
    தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
    பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும்
    ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
    வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

    இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
    ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
    பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
    மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
    ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!

    சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார்
    கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார்
    எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
    கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர்,
    பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்

    திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,
    பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
    சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
    வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
    ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.

    மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
    வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
    மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
    மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
    தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை

    ReplyDelete
  2. 2
    மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
    மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்
    ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
    தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
    நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?

    பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
    அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்,
    புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு
    அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
    மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

    ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
    ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
    யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
    படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
    கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!

    சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
    மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க,
    நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
    வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
    தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்

    பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
    நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
    ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க!
    ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
    வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.

    ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
    வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
    மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
    ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
    தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!

    மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
    புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
    கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
    ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
    சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்!

    தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
    பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
    உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
    கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
    வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!

    ReplyDelete
  3. 3
    நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
    புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
    மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
    இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
    பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

    வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
    ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
    நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்!
    வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!
    பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்

    செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்!
    ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
    நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
    வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
    ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்

    உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
    உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
    நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்
    (வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ
    ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்

    வானுறு தேவர் மணியுல கடைவோம்,
    வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
    தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
    போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்!
    பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ?

    ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
    வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
    நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
    வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்
    வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை!

    தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை!
    முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
    தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
    மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
    காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

    இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
    தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
    ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
    வையகத் தரசும் வானக ஆட்சியும்
    போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

    மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f
    கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
    வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
    ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும்,
    வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

    ReplyDelete
  4. 4
    சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
    எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
    சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
    எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
    கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

    சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
    தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
    வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
    புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
    அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

    செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
    உண்மையை அறியாய் உறவையே கருதிப்
    பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
    வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
    நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

    தம்மொடு பிறந்த சகோதரராயினும்
    வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
    ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
    பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
    அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

    பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
    பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
    ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
    மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
    குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

    அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
    மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
    சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
    பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
    விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்

    இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
    ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
    தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
    நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
    செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்

    பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
    சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.

    ReplyDelete
  5. 1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
    குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
    நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
    நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

    2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
    வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
    விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)
    . கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
    வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
    வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)

    6. பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
    எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
    இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)

    7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
    வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
    சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
    சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி)

    8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
    காரியம் யாவினும் கைகொடுத்து,
    மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
    மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி)

    ReplyDelete
  6. அச்சம் தவிர்.
    ஆண்மை தவறேல்.
    இளைத்தல் இகழ்ச்சி.
    ஈகை திறன்.
    உடலினை உறுதிசெய். 5

    ஊண்மிக விரும்பு.
    எண்ணுவ துயர்வு.
    ஏறுபோல் நட.
    ஐம்பொறி ஆட்சிகொள்.
    ஒற்றுமை வலிமையாம். 10

    ஓய்த லொழி.
    ஔடதங் குறை.
    கற்ற தொழுகு.
    காலம் அழியேல்.
    கிளைபல தாங்கேல். 15

    கீழோர்க்கு அஞ்சேல்.
    குன்றென நிமிர்ந்துநில்.
    கூடித் தொழில் செய்.
    கெடுப்பது சோர்வு.
    கேட்டிலும் துணிந்துநில். 20

    கைத்தொழில் போற்று.
    கொடுமையை எதிர்த்து நில்.
    கோல்கைக் கொண்டு வாழ்.
    கவ்வியதை விடேல்.
    சரித்திரத் தேர்ச்சிகொள். 25

    சாவதற்கு அஞ்சேல்.
    சிதையா நெஞ்சு கொள்.
    சீறுவோர்ச் சீறு.
    சுமையினுக்கு இளைத்திடேல்.
    சூரரைப் போற்று. 30

    செய்வது துணிந்து செய்.
    சேர்க்கை அழியேல்.
    சைகையிற் பொருளுணர்.
    சொல்வது தெளிந்து சொல்.
    சோதிடந் தனையிகழ். 35

    சௌரியந் தவறேல்.
    ஞமலிபோல் வாழேல்.
    ஞாயிறு போற்று.
    ஞிமிரென இன்புறு.
    ஞெகிழ்வத தருளின். 40

    ஞேயங் காத்தல் செய்.
    தன்மை இழவேல்.
    தாழ்ந்து நடவேல்.
    திருவினை வென்றுவாழ்.
    தீயோர்க்கு அஞ்சேல். 45

    துன்பம் மறந்திடு.
    தூற்றுதல் ஒழி.
    தெய்வம் நீ என்றுணர்.
    தேசத்தைக் காத்தல்செய்.
    தையலை உயர்வு செய். 50

    தொன்மைக்கு அஞ்சேல்.
    தோல்வியிற் கலங்கேல்.
    தவத்தினை நிதம் புரி.
    நன்று கருது.
    நாளெலாம் வினைசெய். 55

    நினைப்பது முடியும்.
    நீதிநூல் பயில்
    நுனியளவு செல்.
    நூலினைப் பகுத்துணர்
    நெற்றி சுருக்கிடேல். 60

    நேர்படப் பேசு.
    நையப் புடை.
    நொந்தது சாகும்.
    நோற்பது கைவிடேல்.
    பணத்தினைப் பெருக்கு. 65

    பாட்டினில் அன்புசெய்.
    பிணத்தினைப் போற்றேல்.
    பீழைக்கு இடங்கொடேல்.
    புதியன விரும்பு.
    பூமி யிழந்திடேல். 70

    பெரிதினும் பெரிதுகேள்.
    பேய்களுக்கு அஞ்சேல்.
    பொய்ம்மை இகழ்.
    போர்த்தொழில் பழகு.
    மந்திரம் வலிமை. 75

    மானம் போற்று.
    மிடிமையில் அழிந்திடேல்.
    மீளுமாறு உணர்ந்துகொள்.
    முனையிலே முகத்து நில்.
    மூப்பினுக்கு இடங்கொடேல். 80

    மெல்லத் தெரிந்து சொல்.
    மேழி போற்று.
    மொய்ம்புறத் தவஞ் செய்.
    மோனம் போற்று.
    மௌட்டியந் தனைக் கொல். 85

    யவனர்போல் முயற்சிகொள்.
    யாவரையும் மதித்து வாழ்.
    யௌவனம் காத்தல் செய்.
    ரஸத்திலே தேர்ச்சிகொள்.
    ராஜஸம் பயில். 90

    ரீதி தவறேல்.
    ருசிபல வென்றுணர்.
    ரூபம் செம்மை செய்.
    ரேகையில் கனி கொள்.
    ரோதனம் தவிர். 95

    ரௌத்திரம் பழகு.
    லவம் பல வெள்ளமாம்.
    லாகவம் பயிற்சிசெய்.
    லீலை இவ் வுலகு.
    (உ)லுத்தரை இகழ். 100

    (உ)லோகநூல் கற்றுணர்.
    லௌகிகம் ஆற்று.
    வருவதை மகிழ்ந்துண்.
    வானநூற் பயிற்சிகொள்.
    விதையினைத் தெரிந்திடு. 105

    வீரியம் பெருக்கு.
    வெடிப்புறப் பேசு.
    வேதம் புதுமைசெய்.
    வையத் தலைமைகொள்
    வௌவுதல் நீக்கு. 110

    ReplyDelete

  7. தமிழுக்கு அழகு இலக்கணம் தந்த தொல்காப்பியா் ஒரு பார்ப்பனன்.

    பாரதியாரும் பார்ப்பனன் தான் சத்திய மூர்த்தியும் பார்பனர்தாம்.


    தமிழ் தொண்டாற்றிய தமிழ் தாத்தாவும் கீவா ஜெகந்நாதன் கல்கி போன்றவர்களும்

    கணிதம் தந்த இராமானுஜம் சமூக புரட்சி செய்த இராமானுஜரும் பார்ப்பனர்கள்தாம்.

    இப்படி ஆயிரும் ஆயிரம் நன்மைகள் இருக்க .... அக்ரஹாரத்து குப்பைகள் மீது

    கண்வைப்பது ஏன் சுவனப்பிரியன்

    இந்தியாவில் பார்பனா் அல்லாத மக்கள் அதிக பேரை கொன்று அழித்தது அரேபிய தத்துவம்தான்.

    ReplyDelete
  8. மேலே திரு அன்புராசு, கலக்கி குழப்பி பார்ப்பனர் நல்லோர் என பிராமணீயத்தைச் சேர்த்து பொய்த் தோற்றம் காட்ட முயல்வது, தமிழுக்கும் அதன் நெறிக்குத் தன்னை மாற்றிய பிராமணரான பாரதியின் நோக்குக்கும் எதிரானது..

    பார்ப்பனர் ஆதி தமிழ் குடி, ஆனால் வந்தேறிய ஐரோப்பிய வெள்ளையர் கலப்பினக் குடியான பிராமணரும் அவர் சார்ந்த பிராமணீயத் திரிபு கோட்பாட்டை யும் அவர் தெளிவுறுத்தினார்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)