Thursday, July 23, 2020

ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
முன்பு இஸ்லாமியர்களுக்கும் சில இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிரான சட்டத்தை ட்ரம்ப் கொண்டு வந்தார். இதனால் சுதாரித்த இஸ்லாமிய சமூகம் அனைத்து எம்பிக்களையும் சந்தித்தது. பல வழக்காடு மன்றங்களுக்கும் இஸ்லாமிய வழக்கறிஞர்கள் இந்த வழக்கை கொண்டு சென்றனர். முடிவில் நேற்று 233 பேர் ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. எதிராக 183 பேர் வாக்களித்தனர்.
போராடாமல் எதுவும் கிடைத்து விடாது. நமது நாட்டிலும் அதே பாசிச எண்ணம் கொண்டவர்கள்தான் ஆட்சி நடத்துகின்றனர். எந்த வகையிலாவது முஸ்லிம்களை இரண்டாந்தர குடி மக்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். உலக முடிவு நாள் வரை மோடியின் எண்ணம் பலிக்கப் போவதில்லை. அதே நேரம் நாமும் சோர்வாக அமர்ந்து விடாமல் அமைதி வழியில் போராட வேண்டும். ஒத்த கருத்துடைய கம்யூனிஸ்டுகள், பகுத்தறிவாதிகள், சமூக ஆர்வலர்களையும் துணைக்கழைத்து கொண்டு இறைவன் வெற்றியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் போராடுவோமாக!
ஆக்கம்
சுவனப்பிரியன்
Thanks to
clarionindia


1 comment:

  1. அண்டப்புளுகு புளுகுவதில் சு..ன் வல்லவா்.

    படிப்பவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு இணையம் நடத்தும்

    புண்ணியவான்.

    அமெரிக்க ஜனாதிபதி திரு.டிரம்பு அவர்கள் என்ன சட்டம் கொண்டு வந்தாா்? அதன்

    சரத்துக்கள் என்ன ? எந்த சரத்து முஸ்லீம்களுக்கு எதிரானது என்ற விபரத்தை பதிவு

    செய்யமல் முஸ்லீம்களை எதிா்த்தால் .....தோல்விதான் என்ற அகம்பாவத்தை ஆணவத்தை

    மதவெறி கொக்கரிப்பை பதிவு செய்கிறாா். பிறமதத்தவர்களை பயம் காட்டுகின்றாா்.

    மிரட்டுகின்றாா்.

    அகதியாக கடலில் முழ்கிச் செத்த சிரியா யேமன் ....நாடுகளின் முஸ்லீம்கள் எத்தனை போ்

    என்று கணக்கு உள்ளதா ?

    சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 45 தாலிபான்கள்

    சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.தாலியான்கள் அரேபிய மத காடையர்கள்தானே!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)