Sunday, October 04, 2020

யோகியின் தாக்கூர் சாதி இளைஞனின் மிரட்டல் வீடியோ!

 யோகியின் தாக்கூர் சாதி இளைஞனின் மிரட்டல் வீடியோ!


பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்திக்கவிருக்கிறார். அவருக்கு மிரட்டல் விடும் முகமாக கோபத்தோடு பேசும் உயர்சாதி இளைஞன். காவல் துறையும் இவனுக்கு காவல் காக்கிறது.

என்ன ஒரு வன்மம்?

என்ன ஒரு தலைக்கனம்?

என்ன ஒரு சாதி வெறி?

இதனை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை என்பதையும் கவனியுங்கள்....

இதற்கெல்லாம் காரணம் இந்த இளைஞன் அல்ல. சிறு வயதிலிருந்து இவனது வீட்டில் புராணங்களையும் இதிகாசங்களையும், மனு ஸ்மிருதிகளையும் சொல்லியே வளர்த்து வந்துள்ளார்கள். நாமெல்லாம் உயர்ந்தவர்கள்: அவர்களெல்லாம் கீழானவர்கள் என்று இளம் வயதிலேயே நஞ்சு விதைக்கப்படுகிறது.

இதெல்லாம் தவறு என்றே அவனுக்கு விளங்கவில்லை. ராமாயணத்திலிருந்து மகாபாரதம் வரை இந்த சாதி விலக்கல் அவர்கள் வணங்கும் தெய்வங்களாலேயே போதிக்கப்படுகிறது. எனவே இதனை தவறாக எண்ணுவதில்லை. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இந்த வன்மம் குறையப் போவதில்லை. தமிழகத்துக்கு ஒரு பெரியார் கிடைத்த மாதிரி உபிக்கும் ஒருவர் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் ஒட்டு மொத்தமாக மதம் மாற வேண்டும். இது இரண்டும் நடக்காத பட்சத்தில் தினமும் இதுபோன்ற கொடுமைகளை நாம் காண பழகிக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.

இதில் ஒரு நல்ல காமெடி என்னவென்றால் இவன் தீண்டத்தகாதவன் என்று தலித்களை ஒதுக்கினால் மற்றொரு நேரத்தில் பார்பனர்கள் தாக்கூர்களையும், யாதவர்களையும் அதே போன்று கீழானவர்களாக நினைத்து ஒதுக்குகிறார்கள். ஏற்கெனவே இவன் தலித்களுக்கு செய்துள்ளதால் இந்த அவமானத்தை கொஞ்சமும் வெட்கமின்றி துடைத்து விட்டு சென்று விடுகின்றான். 🙂

தமிழகத்திலும் இதுதான் நடக்கிறது. படையாச்சியும், தேவரும், கவுண்டரும் தலித்களை ஒதுக்கினால் அதே போல் பார்பனர்கள் இவர்களை ஒதுக்குகிறார்கள். அக்ரஹாரத்தில் நுழையக் கூட விடுவதில்லை. அவ்வளவு ஏன்? வீட்டில் கூட ஏற்றுவதில்லை... 🙂



11 comments:



  1. அனைத்திற்கும் ஒரே தீா்வு ஆா்எஸஎஸ முகாம்.

    இந்தியாவில் பிறந்த ஹிந்து குழ்நதைகள் அனைவரும் ஆாஎஸஎஸ அளிக்கும் அனைத்து பயிற்சி முகாம்கள் கட்டாயம் என்று செய்து நடைமுறைப் படுத்தினால் அனைத்து கோணல்களும் கோட்டங்களும் நிமிா்ந்து விடும்.

    ReplyDelete
  2. சாதி மோதனை ஒழிக்கக் கூடிய தா்ம நூல்கள் ஆயிரம் ஆயிரம் உள்ளது இந்தியாவில் 1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

    2. ஆறுவது சினம் - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

    3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

    4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.

    5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

    6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

    7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.

    8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

    9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

    10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

    11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

    12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

    13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

    14.கண்டொன்று சொல்லேல்-. கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

    15.ஙப் போல் வளை -. 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

    16.சனி நீராடு -.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

    17.ஞயம்பட உரை- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

    18.இடம்பட வீடு எடேல்-உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

    19.இணக்கம் அறிந்து இணங்கு -ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

    ReplyDelete
  3. 0.தந்தை தாய்ப் பேண் -உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

    21.நன்றி மறவேல் - ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

    22.பருவத்தே பயிர் செய் - எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

    23.மண் பறித்து உண்ணேல் -பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

    24.இயல்பு அலாதன செய்யேல் - நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

    25.அரவம் ஆட்டேல். -பாம்புகளை பிடித்து விளையாடாதே.

    26.இலவம் பஞ்சில் துயில் -இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.

    27.வஞ்சகம் பேசேல் -படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே.

    28.அழகு அலாதன செய்யேல் -.இழிவான செயல்களை செய்யாதே

    29.இளமையில் கல்- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

    30.அறனை மறவேல். தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

    31.அனந்தல் ஆடேல்- மிகுதியாக துங்காதே.

    32.கடிவது மற-யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

    33.காப்பது விரதம்- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

    34.கிழமை பட வாழ்-உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.

    35. கீழ்மை யகற்று-இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

    36. குணமது கைவிடேல்- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

    37. கூடிப் பிரியேல்- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.

    38. கெடுப்ப தொழி -பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

    39. கேள்வி முயல்-கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்.

    40. கைவினை கரவேல்-உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

    ReplyDelete
  4. 41. கொள்ளை விரும்பேல்- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

    42. கோதாட் டொழி-குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

    43.கௌவை அகற்று-வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்க.

    44. சக்கர நெறி நில்- அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் ).

    45.சான்றோ ரினத்திரு-அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

    46. சித்திரம் பேசெல்- பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.

    47. சீர்மை மறவேல்- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

    48. சுளிக்கச் சொல்லேல்-கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.

    49. சூது விரும்பேல்- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

    50. செய்வன திருந்தச் செய்- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.

    51.சேரிடமறிந்து சேர்-நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

    52. சையெனத் திரியேல்-பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.

    53. சொற்சோர்வு படேல்- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.

    54. சோம்பித் திரியேல்-முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

    55. தக்கோ னெனத்திரி-பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

    56. தானமது விரும்பு-யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

    57. திருமாலுக்கு அடிமை செய்-நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.

    58. தீவினை யகற்று-பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

    ReplyDelete
  5. 59.துன்பத்திற் கிடங்கொடேல்-முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

    60. தூக்கி வினைசெய்-ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.

    61. தெய்வ மிகழேல்-கடவுளை பழிக்காதே.

    62. தேசத்தோ டொத்துவாழ்- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.

    63. தையல்சொல் கேளேல்-மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

    64. தொன்மை மறவேல்- பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

    65. தோற்பன தொடரேல்-ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

    66. நன்மை கடைப்பிடி-நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.

    67. நாடொப் பனசெய்- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.

    68. நிலையிற் பிரியேல்-உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

    69. நீர்விளை யாடேல்-வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.

    70. நுண்மை நுகரேல்-நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

    71. நூல்பல கல்- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

    72.நெற்பயிர் விளை- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

    73. நேர்பட வொழுக- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

    74. நைவினை நணுகேல்-பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

    75. நொய்ய வுரையேல்-பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

    76. நோய்க்கிடங் கொடேல்-மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

    77. பழிப்பன பகரேல்-பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

    78. பாம்பொடு பழகேல்-பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

    79. பிழைபடச் சொல்லேல்-குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

    80. பீடு பெறநில்-பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

    81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்-உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

    82. பூமி திருத்தியுண்-விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

    ReplyDelete
  6. 83. பெரியாரைத் துணைக்கொள்-அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

    84. பேதைமை யகற்று-அறியாமையை போக்க.

    85. பையலோ டிணங்கேல்-அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

    86. பொருடனைப் போற்றிவாழ்-பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

    87. போர்த்தொழில் புரியேல்-யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

    88. மனந்தடு மாறேல்-எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

    89. மாற்றானுக் கிடங்கொடேல்-பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

    90. மிகைபடச் சொல்லேல்- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

    91. மீதூண் விரும்பேல்-மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

    92. முனைமுகத்து நில்லேல்- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.

    93. மூர்க்கரோ டிணங்கேல்- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

    94. மெல்லினல்லாள் தோள்சேர்-பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

    95. மேன்மக்கள் சொற்கேள்-நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

    96. மைவிழியார் மனையகல்- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.

    97. மொழிவ தறமொழி-சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.

    98.மோகத்தை முனி-நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.

    99. வல்லமை பேசேல்-உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

    100. வாதுமுற் கூறேல்-பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.

    ReplyDelete
  7. 101. வித்தை விரும்பு- கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

    102. வீடு பெறநில்-முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.

    103. உத்தமனாய் இரு-உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

    104. ஊருடன் கூடிவாழ்-ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.

    105. வெட்டெனப் பேசேல்-யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.

    106. வேண்டி வினைசெயேல்- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.

    107. வைகறை துயிலெழு- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.

    108. ஒன்னாரைத் தேறேல்-பகைவர்களை நம்பாதே.

    109. ஓரஞ் சொல்லேல்-எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

    ReplyDelete
  8. புதிய ஆத்திசூடி
    அச்சம் தவிர்
    ஆண்மை தவறேல்
    இளைத்தல் இகழ்ச்சி
    ஈகை திறன்
    உடலினை உறுதிசெய்
    ஊண்மிக விரும்பு
    எண்ணுவது உயர்வு
    ஏறுபோல் நட
    ஐம்பொறி ஆட்சிகொள்
    ஒற்றுமை வலிமையாம்
    ஓய்த லொழி
    ஓளடதங் குறை
    கற்ற தொழுகு
    காலம் அழியேல்
    கிளைபல தாங்கேல்
    கீழோர்க்கு அஞ்சேல்
    குன்றென நிமர்ந்து நில்
    கூடித் தொழில் செய்
    கெடுப்பது சோர்வு
    கேட்டிலும் துணிந்து நில்
    கைத்தொழில் போற்று
    கொடுமையை எதிர்த்து நில்
    கோல்கைக் கொண்டு வாழ்
    கவ்வியதை விடேல்
    சரித்திரத் தேர்ச்சிகொள்
    சாவதற்கு அஞ்சேல்
    சிதையா நெஞ்சு கொள்
    சீறுவோர்ச் சீறு
    சுமையினுக்கு இளைத்திடேல்
    சூரரைப் போற்று
    செய்வது துணிந்து செய்
    சேர்க்கை அழியேல்
    சைகையிற் பொருளுணர்
    சொல்வது தெளிந்து சொல்
    சோதிடந் தனையிகழ்
    சௌரியந் தவறேல்
    ஞமலிபோல் வாழேல்
    ஞாயிறு போற்று
    ஞிமிறென இன்புறு
    ஞெகிழ்வ தருளின்
    ஞேயங் காத்தல் செய்
    தன்மை இழவேல்
    தாழ்ந்து நடவேல்
    திருவினை வென்று வாழ்
    தீயோர்க்கு அஞ்சேல்
    துன்பம் மறந்திடு
    தூற்றுதல் ஒழி
    தெய்வம் நீ என்றுணர்
    தேசத்தைக் காத்தல் செய்
    தையலை உயர்வு செய்
    தொன்மைக்கு அஞ்சேல்
    தோல்வியிற் கலங்கேல்
    தவத்தினை நிதம் புரி
    நன்று கருது
    நாளெலாம் வினை செய்
    நினைப்பது முடியும்
    நீதிநூல் பயில்
    நுனியளவு செல்
    நூலினைப் பகுத்துணர்
    நெற்றி சுருக்கிடேல்
    நேர்படப் பேசு
    நையப் புடை
    நொந்தது சாகும்
    நோற்பது கைவிடேல்
    பணத்தினைப் பெருக்கு
    பாட்டினில் அன்பு செய்
    பிணத்தினைப் போற்றேல்
    பீழைக்கு இடங்கொடேல்
    புதியன விரும்பு

    ReplyDelete
  9. பூமி இழந்திடேல்
    பெரிதினும் பெரிது கேள்
    பேய்களுக்கு அஞ்சேல்
    பொய்மை இகழ்
    போர்த் தொழில் பழகு
    மந்திரம் வலிமை
    மானம் போற்று
    மிடிமையில் அழிந்திடேல்
    மீளுமாறு உணர்ந்துகொள்
    முனையிலே முகத்து நில்
    மூப்பினுக்கு இடங் கொடேல்
    மெல்லத் தெரிந்து சொல்
    மேழி போற்று
    மொய்ம்புறத் தவஞ் செய்
    மோனம் போற்று
    மௌட்டியந் தனைக் கொல்
    யவனர்போல் முயற்சிகொள்
    யாரையும் மதித்து வாழ்
    யௌவனம் காத்தல் செய்
    ரஸத்திலே தேர்ச்சிகொள்
    ராஜஸம் பயில்
    ரீதி தவறேல்
    ருசிபல வென்றுணர்
    ரூபம் செம்மை செய்
    ரேகையில் கனி கொள்
    ரோதனம் தவிர்
    ரௌத்திரம் பழகு
    லவம் பல வெள்ளமாம்
    லாகவம் பயிற்சி செய்
    லீலை இவ் வுலகு
    (உ)லுத்தரை இகழ்
    (உ)லோக நூல் கற்றுணர்
    லௌகிகம் ஆற்று
    வருவதை மகிழ்ந்துண்
    வானநூற் பயிற்சிகொள்
    விதையினைத் தெரிந்திடு
    வீரியம் பெருக்கு
    வெடிப்புறப் பேசு
    வேதம் புதுமை செய்
    வையத் தலைமை கொள்
    வௌவுதல் நீக்கு
    -----------------------------------------------------------------
    தங்கச் சுரங்கத்தில் இருந்து கைப்பிடி அளவிற்கு பதிவு செய்துள்ளேன்.
    அரேபிய குப்பைகளோடு ஒப்பிடும் போது இவைகள் தங்கம்.

    ReplyDelete
  10. அன்பு ராஜ்!

    நீ நீட்டி முழக்கி அனுப்பிய அனைத்தும் எனது முன்னோர்களான தமிழர்களின் அழகிய அறிவுரை. என்று பார்பனர்கள் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்று பிடித்தது சனியன். நீயும் பார்பன அடிமையாக மாறிப் போயுள்ளதால் நான் சொல்வது எதுவும் உன் மூளையில் ஏறப் போவதில்லை. என்று இந்துத்வா சிந்தாந்தத்தால் நீ தனிப்பட்ட முறையில் பாதிப்படைவாயோ அன்றுதான் ஆர்எஸ்எஸின் உண்மை முகத்தை அறிந்து கொள்வாய். உன்னை நினைத்தால் பரிதாபம்தான் மேலிடுகிறது.

    ஐயோ.. பாவம்... :-)

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)