Saturday, August 19, 2017

இந்து பெண்களின் பெரும்பான்யோரின் உள்ளக் குமுறல்!

இந்து பெண்களின் பெரும்பான்யோரின் உள்ளக் குமுறல்!
'பிஜேபி வந்து கொடியேத்த வர்ராங்க. நாங்கள் இங்கு இந்து முஸ்லிம், கிறித்தவர் என்று தாய் பிள்ளையா பழகி வருகிறோம். நாங்க மாட்டுக் கறி திங்கிறவங்க..... பின்னால இதை எல்லாம் பிரச்னையாக்குவாங்க.... இங்க கலவரத்தை தூண்டுவாங்க.. என் வாயிவிருந்து அசிங்க அசிங்கமா வந்துடும். அவங்க இங்க வரக் கூடாது. இந்த தெருவிலேயே நுழையக் கூடாது.... கொடியையும் ஏத்தக் கூடாது'



1 comment:


  1. முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் வரவேற்பு

    தினமணி செய்தி.23.08ஃ2017

    தலாக் விவாகரத்து நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்ட ஜீனத் அலி சித்திக்கி என்ற முஸ்லிம் பெண் வரவேற்றுள்ளார்.அவரை எந்தக் காரணமும் இல்லாமலேயே தலாக் நடைமுறை மூலம் கணவர் கடந்த 2015-இல் விவாகரத்து செய்திருந்தார். அதனால் தன் இரண்டு குழந்தைகளையும் தன்னந்தனியாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஜீனத் அலிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
    தலாக் நடைமுறை காரணமாக ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள் வீட்டில் அழுது கொண்டிருக்கின்றனர். இவ்வாறு விவாகரத்து செய்யப்படும் பெண்கள்,

    மற்றவர்களால் தீய நோக்கத்துடன் கவனிக்கப்படுகின்றனர்.
    அது எவ்வாறு இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.
    ஏனெனில் எனக்கு அது நேரிட்டுள்ளது.

    சரியாக சமையல் செய்யவில்லை போன்ற அற்பமான காரணங்களுக்காக, பெண்களை ஆண்கள் தூக்கியெறியும் (விவாகரத்து செய்யும்) நடைமுறைக்கு

    நரேந்திர மோடி முடிவு கட்டியுள்ளார்.

    தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இது வரவேற்கத்தக்கது என்று ஜீனத் அலி தெரிவித்தார்.அவரைப் போலவே, நாடு முழுவதும் உள்ள முஸ்லீம் பெண்களும், மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
    எனது குறிப்பு
    பெண்களை மலினப்பட்ட பொருளாக கருதி இல்வாழ்க்கையை ஒரு ஒப்பந்தமாக கருதும் திருமணக் கொள்கையை உடைய அரேபிய கலாச்சாரம் பெண்களை இழிவு படுத்துவதாகும்.விவாகரத்தான பெண்ணும் விவாகரத்து ஆன ஒரு ஆணும் சமநிலையில் இருக்கவில்லை. அழகு பணம் பதவி இருந்தாலும் பெண் கன்னித்தன்மையை இழந்தவள் குழந்தை பெற்றவள் என்பதனால் திருமண சந்தையில் அவளுக்கு மதிப்பு குறைவுதான். திருமணம் ஒரு பிாியாத பந்தம் என்றே கருதப்படும். பல பெண்களை மணக்க உதவியாகவே விவாகரத்து சுலபமாக அரேபிய கலாச்சாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)