Thursday, October 24, 2019

ஹரியானா, மஹாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள் சொல்ல வருவது!

ஹரியானா, மஹாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள் சொல்ல வருவது!
ஹரியானா, மஹாராஷ்ட்ரா தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா காந்தி செல்லாதது எனக்கு மர்மமாக உள்ளது. ஆனானப்பட்ட ப.சிதம்பரத்தையே என்ன பாடு படுத்துகிறோம். ராபர்ட் வதேராவுக்கும் இதே நிலையை கொண்டு வர எங்களால் முடியும் என்ற மிரட்டல் பாஜக தரப்பிலிருந்து வந்திருக்கலாம். பிரியங்கா காந்தியும் அதிக அளவு பிரசாரத்துக்கு செல்லவில்லை. ராகுல் காந்தியும் ஏனோ தானோ என்றுதான் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
அடுத்து வாக்கு எந்திரங்களில் செய்த தில்லுமுல்லுகள். 'எங்கு அழுத்தினாலும் தாமரைக்குத்தான் வாக்குகள் விழும்' என்று பாஜக தலைவர் பேசிய வீடியோவும் வைரலானது.
இத்தனை பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகும், இவ்வளவு வேலை வாய்ப்புகளை மக்கள் இழந்த பின்பும் பாஜக ஆட்சி அமைக்கிறது என்றால் இந்த நாடு நாசமாகப் போவதை இனி தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு நமது வேலைகளை பார்க்கப் போக வேண்டியதுதான்.
அழகிய நமது நாடு சோமாலியா ரேஞ்சுக்கு போன பிறகு சங்கிகளே விழித்துக் கொண்டு மோடியையும் அமீத்ஷாவையும் அதிகாரத்திலிருந்து எடுக்க முயற்சிப்பார்கள். இன்னும் சில ஆண்டுகளில் அரபு புரட்சியைப் போன்ற ஒரு புரட்சியை நமது நாடு எதிர் கொள்ளுமோ என்று அச்சப்படுகிறேன்.


3 comments:

  1. இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு நமது வேலைகளை பார்க்கப் போக வேண்டியதுதான்.

    அந்த சிவன்தான் நம்மை இந்த பாடு படுத்துகிறான். அல்லாவின் திட்டம் திரு.மோடி பிரதமா் ஆனது. அல்லாவின் திட்டம் திரு.அமித்ஷா உள்துறை அமைச்சா் ஆனது. அல்லாவின் திட்டப்படிதான் அனைத்தும் நடக்கின்றது.

    அவனன்றி ஓா் அணுவும் அசையாது- இந்துஅமிாத் வசனம்.

    ReplyDelete
  2. So reson for Arab spring is illegitimate and dictator leadership. Thank u suvi for avcepting the fact

    ReplyDelete
  3. காங்கிரஸ் காரன் நாட்டை கொள்ளையடித்து மக்களை கெடுத்து நாடடை பாழாக்கி விட்டான். மோடிஜி வந்து கருப்பு பணம் வைக்காதே.அரசுக்குள்ள வரியை கட்டிவிடு லஞ்சம் லாவண்யம் ஒழிக்க வேண்டும் என்று சட்டம் பேசினால் அதை எதிர்ப்பவர்களுக்கு காங்கிரஸ் உதவுகின்றது.
    ஆக நீதிமான்-பாரதிய ஜனதாக -களுக்கு எப்பவும் சோதனைதான்.

    இறைவன் கருணையால் அதையும் பாரதிய ஜனதாக சமாளிக்கும்.தவம் புண்ணியம் மிகுந்தவர்களிடம் இறைவன் இருப்பான்.திரு.மோடியிடம் இறைவன் இருக்கின்றான். அடுத்த நகா்வுஅவன் திட்டபடிதான்.
    ஆட்டுவித்தால் ஆடுகின்றேன்.ஓட்டுவித்தால் ஓடுகின்றேன்-அப்பர்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)