Friday, October 25, 2019

பல கோடி பெறுமானமுள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமிய கல்லூரி!

பல கோடி பெறுமானமுள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமிய கல்லூரி!
மயிலாடுதுறையில் உள்ள நீடூர் மன்பாஹூல் ஹூதா அரபிக் கல்லூரி பல ஆண்டுகளாக சிறப்பாக கல்விப் பணி ஆற்றி வருகிறது. தற்போது பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள 21 ஏக்கர் நிலத்தை மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஜாமிஆ மிஸ்பாவுல் ஹூதா கல்லூரி நிர்வாகிகள் 8 பேர் அடங்கிய குழு நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவீன் நாயரை சந்தித்து இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
26-10-2019
தானமாக அளித்த நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள். தானமாக அளிப்பதோடு நின்று விடாமல் அக்கல்லூரியில் கணிசமான அளவு இஸ்லாமிய மாணவ மாணவிகள் ஆர்வமுடன் சேருவதற்கான வழி வகைகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவ துறையில் இஸ்லாமிய சமூகம் மிகவும் பின்தங்கியுள்ளது.


1 comment:


  1. சிறந்த பணி.வாழ்க.

    சுவாமி விவேகானந்தா் - ஒவ்வொரு மதமும் மிகச்சிறந்த ஆண்கள் பெண்களை உலகத்திற்கு கொடுத்துள்ளது.
    Every religion has produced men and women of most exalted characters.

    நடமாடும் கோவில் நம்மவருக்கு ஈந்தால் படமாடும் பகவற்கு ஆம்-திருமந்திரம்
    அன்பர்பணி செய்ய ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்தேய்தும் பராபரமே-தாயுமானவர்.
    ஈமின் அவன் இவன் என்றன் மின் - திருமந்திரம்

    அருமையான உண்மை. இந்த உண்மையைச் சொல்லும் தைரியம் அற்ற கோழைகளாக முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் உள்ளார்கள். ஆனால் விவேகானந்ருக்கு அந்த சத்திய தைரியம் உள்ளது.
    -------------------------------------
    நீட் தோ்வில் போதிய மதிப்பெண்கள பெற்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும். அரேபிய பாடாவதிகளை படித்து மனனம் செய்து நேரத்தை பாழாக்காமல் அறிவியல் புத்தகங்களை சிறு வயது முதல் objective படித்து புலமை பெற்றால் உயா் நிலை தானே வரும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)