Followers

Wednesday, July 29, 2020

*பக்ரீத் பொருளாதாரம்*

*பக்ரீத் பொருளாதாரம்*
-----------------------------------
20 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடுவர்.
10% முஸ்லிம்கள் குறைந்தபட்சம் ரூ.5000/- மதிப்புள்ள ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள்.
*2 கோடி x ரூ.5000 = ரூ.10000 கோடி*
இந்த அளவிலான பொருளாதாரத்தால் யார் பயனடைவார்கள்...?
இவை சீன தயாரிப்புகளோ
பெருநிறுவன தயாரிப்புகளோ அல்ல,
100% தேசிய கிராமப்புற பொருளாதாரம்.
இதனால் பயன் அடைவது இந்திய விவசாயிகள் மட்டுமே...
ஒரு விவசாயி ஆண்டுக்கு சராசரியாக 10 ஆடுகளை வளர்த்தால்
*2 கோடி ÷ 10 ஆடு = 20 லட்சம் குடும்பங்கள்* வேலைவாய்ப்பு பெறும்.
எனவே பக்ரீத் பண்டிகை, 10000 கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது மற்றும் சுமார் 20 லட்சம் சிறு விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.
ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, குறைந்தது 20 பேர் சாப்பிடுகிறார்கள்.
*2 கோடி x 20 பேர் = 40 கோடி மக்களுக்கு* உணவு வழங்குகிறார்கள். (முஸ்லிம் ஏழைகள் மட்டும் அல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளும் பயனடைகின்றனர்)
*பக்ரித்தின் முக்கிய பொருளாதார நன்மைகள்:*
வணிகம் - ரூ.10000 கோடி
இலவச உணவு - 40 கோடி மக்கள்
வேலைவாய்ப்பு - 20 லட்சம் பேர்.
இது குறைந்தபட்ச மதிப்பீடு, உண்மையானது இரு மடங்காக இருக்கலாம்.
கால்நடைகள் மூலம் கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அதன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பல இந்துக்கள் தாங்கள் இந்த தொழிலில் இருப்பதே பக்ரீத் பண்டிகையை நம்பித்தான் என்கின்றனர். பக்ரீத் வந்தால் இருக்கும் அனைத்து ஆடுகளும் நல்ல விலையில் விற்று அடுத்த முறைக்கு தயாராகி விடுகிறார்கள். இந்திய பொருளாதாரத்தை மறைமுகமாக தாங்கிப்பிடிக்கிறது பக்ரீத் பண்டிகை என்றால் மிகையாகாது. இந்த கணக்கெல்லாம் சங்கிகளுக்கு விளங்கப் போவதில்லை 






பாபரி பள்ளி விவகாரத்தை ஐநாவுக்கு கொண்டு செல்கிறார் குவைத் வழக்கறிஞர்!

பாபரி பள்ளி விவகாரத்தை ஐநாவுக்கு கொண்டு செல்கிறார் குவைத் வழக்கறிஞர்!
'வரும் ஆகஸ்ட் 5 அன்று முஸ்லிம்களிடமிருந்து அபகரித்த நிலத்தில் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்ட வருகிறார். அநியாயமாக முஸ்லிம்களிடமிருந்து பிடுங்கப்பட்ட இடத்தில் கோவில் கட்டினால் அது வளைகுடா பிராந்தியம் முழுக்க இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். சென்ற பிப்ரவரி மாதம் டெல்லியில் அரசே முன்னின்று நடத்திய இஸ்லாமிய இன அழிப்பு சம்பந்தமான வழக்கையும், பாபரி மசூதி வழக்கையும் ஐநாவுக்கு கொண்டு செல்கிறேன். '
என்கிறார் குவைத் வழக்கறிஞர் மஜ்பல் அல் ஷரிகா.
المحاميمجبل الشريكة
@MJALSHRIKA
·
Jul 27
Muslims around the globe are waiting for the reconstruction of the illegally demolished #BabriMasjid Any attempt to forcefully construct any other structure at the site’ll badly effect our our relationship . Middle East wants justice with Indian Muslims . #Muslims_are_one .
Using the hashtag #Muslims_are_one, Sharika said, “Middle East wants justice with Indian Muslims.”


நமக்கும் அதனை காண ஆவலாக உள்ளது...


வின்ஸ்டன் சர்ச்சில் - இந்திய பார்ப்பனர்கள் பற்றி....

1940 லிருந்து to 1945 வரையிலும் 1951 லிருந்து to 1955 வரையிலும் பிரிட்டனின் பிரதமரான‌ வின்ஸ்டன் சர்ச்சில் :
“இந்திய பார்ப்பனர்கள் எப்போதும் மேலை நாடுகளின் ஜனநாயகம் சுதந்திரம் தத்துவம் பற்றி எல்லாம் உரத்த குரலில் பேசுவார்கள். . ஆனால் அதே பார்ப்பனர்கள் தங்கள் நாட்டில் உள்ள அறுபது கோடிக்கும் மேலான மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று அந்த மக்களின் உயிர்வாழும் உரிமையை கூட மறுத்தே வந்துள்ளார்கள். அதை விட கொடுமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக‌ அந்த ஒடுக்குமுறையை அவர்கள் ஏற்று கொள்ளும் மனோ நிலையில் வைத்துள்ளார்கள்.”




கிருஸ்துராஜ் பாஸ்டராக இருந்து முஹம்மதாக மாற்றிக் கொண்டவர்.

கிருஸ்துராஜ் பாஸ்டராக இருந்து முஹம்மதாக மாற்றிக் கொண்டவர்.

சவுதியில் பணியில் இருக்கும் போது இஸ்லாம் இவருக்கு அறிமுகமாகியுள்ளது. அங்கேயே இஸ்லாத்தை தழுவி தனது பெயரை முஹம்மதாக மாற்றிக் கொண்டவர். ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர். தமிழகத்தில் பல இடங்களில் தனது இஸ்லாமிய பிரசாரத்தை மேற்கொண்டிருந்தவர். இஸ்லாத்தை ஏற்ற குறுகிய காலத்திலேயே அல்குர்ஆனை கற்று குர்ஆன் வகுப்புகள் நடத்தும் அளவிற்கு அல்லாஹ் அவருக்கு கல்வி ஞானத்தை வழங்கினான்.

இன்று இவர் நம்மிடம் இல்லை.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவன் இவரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!


Tuesday, July 28, 2020

பாகிஸ்தான் இந்து கோவில் - மனங்களை வெல்லும் இம்ரான் கான்.

இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின் முதன் முதலாக திறக்கப்படும் பாகிஸ்தான் இந்து கோவில் - மனங்களை வெல்லும் இம்ரான் கான்.
1947 இந்தியா எனும் தேசம் பாகிஸ்தான் இந்தியா என இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது, மூடப்பட்ட இந்து கோவில் சியால்கோட் நகரில் உள்ள சாவ்லா தேஜ் சிங் கோவில். இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
இக்கோவில் பொது மக்களின் வழி பாட்டிற்கு 1947ல் இருந்து திறந்து விடப்படாது இருந்தது. ஆனால், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து, அவர் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தானின் அனைத்து தரப்பு மக்களுடைய மனதை கவரும் வண்ணம் செயல்பட்டு வருவதோடு மட்டும் அல்லாது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அதன் வெளிப்பாடாக, நாக் பஞ்சமி தினமான வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சாவ்லா தேஜ் சிங் கோவில் பொது மக்கள் வழிபாட்டிற்கு திறக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது பற்றி கூறுகையில் சியால்கோட் துனை ஆணையர் பிலால் ஹைதர், “ இது விடயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள். இனி எல்லா நேரங்களிலும் பொது மக்கள் செல்லலாம்” எனக் கூறினார்.
அதே போன்று மூல்தான் மற்றும் லாகூர் போன்ற இடங்களில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்க்க பாகிஸ்தானிற்கான உயர் ஆனையர் அஜய் பிசாரியா அவரது மனைவி பாரதி சதுர்வேதி ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் கவர்னர் முஹம்மத் சர்வர்,” இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்ல உறவையே விரும்புகிறது” எனக் கூறினார்.
Thanks to
Neutral Today




அடி மாட்டு விலைக்கு பசுக்களை வாங்க இப்படி ஒரு திட்டம்!


தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.

அன்பார்ந்த உறவுகளே...
பசியினால் வறுமையினால் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் அருகிலுள்ள முஸ்லிம்களாகிய எங்களை நீங்கள் அணுகுங்கள். இருப்பதை பகிர்ந்து உண்போம்.
உயிர் விலை மதிப்பற்றது. அதை ஒருபோதும் அநியாயமாக இறக்க விடமாட்டோம்.
கடைக்கோடி ஒரு இஸ்லாமியன் உயிரோடு இருக்கும் வரை.
வாழும் போதும், மரணிக்கும் போதும் உங்களோடு இருப்போம். தனியாக விட்டு விட மாட்டோம்.
இன்ஷா அல்லாஹ்
---------------------------------------
நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)
'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'
குர்ஆன் 13:28


தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படிக்கட்டு!

தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படிக்கட்டு!
'எனது தலைமையில் நடந்த ஆய்வில் தோல்வி ஏற்பட்ட போது அதற்கு தலைமை ஏற்று அதனை தன்மேல் போட்டுக் கொண்டார்: அடுத்த வருடம் 1980 ல் வெற்றி ஏற்பட்ட போது என்னை முன்னிறுத்தி பத்திரிக்கையாளர்கள் முன்னால் கொண்டு சென்றார் சதீஷ் தவன். தலைமைக்கு சிறந்த எடுத்துக் காட்டு சதீஷ் தவன்'
-ஏபிஜே அப்துல் கலாம்.
Failure is the best way to learn and succeed.. like Dr A P J Abdul Kalam sir spoke about, he made a decision and stuck by it. He then again made the same decision year later and it was a success. ISRO chairman needs to be congratulated also, he was honest and only wanted the best


'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பிக் கொண்டுள்ளனர்.

'என் வீட்டுக்கு முன்னால் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பிக் கொண்டுள்ளனர். எனது தாயாரையும் மிரட்டுகின்றனர். உடனடி உதவி தேவை'
-சாஹெத் கோகலே
நடுநிலையாக சிந்திக்கும் நாட்டு நலனில் அக்கறையுள்ள இந்துக்களை ஆர்எஸ்எஸ் தேச விரோத கும்பல் எவ்வாறு மிரட்டி பணிய வைக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்று.
அன்று காந்தியை கொன்று நாட்டை ரண களமாக்கினர். இன்று பாபரி பள்ளியை இடித்து ராமர் கோவில் கட்டப் போகின்றனர். நாடு இருக்கும் மோசமான பொருளாதார சூழலில் மொடியின் கைங்கர்யத்தால் மற்றொரு உள் நாட்டு கலகம் ஏற்படுத்த தேச விரோதிகள் ஆயத்தமாகிறார்கள். நமது நாட்டை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
-----------------------------------------------------
Saket Gokhale
@SaketGokhale
·
Jul 24
URGENT:
RSS WORKERS ARE OUTSIDE MY HOUSE CHANTING JAI SHRI RAM.
THEY JUST THREATENED MY MOTHER.
Request urgent assistance
@AnilDeshmukhNCP
ji.


தேச விரோதிகளிடமிருந்து காக்கும் பெரும் பொருப்பு

நமது நாட்டை தேச விரோதிகளிடமிருந்து காக்கும் பெரும் பொருப்பு நமக்கு இருக்கிறது.



தனியா ஒரு பாஷை வச்சிருக்காங்க.

இப்படி மக்கள் கேட்டுடக் கூடாதுன்னுதான், தனியா ஒரு பாஷை வச்சிருக்காங்க. அந்த மொழி மட்டும்தான் கடவுளுக்குப் புரியும்னு நம்ப வச்சிருக்காங்க.
-----------------------
இஸ்லாம் பற்றி பெரியார்.....
“ஆனால் நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமன கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கிறமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள்”
(சாத்தான்குளம், 28.7.1931).
என்று சொல்கிற பெரியார் அத்தகைய மூட நம்பிக்கைகளாகச் சமாதி வணக்கங்கள், பஞ்சா அடித்தல், சந்தனக்கூடு, தீமிதி, கூண்டு உற்சவம், கொடிவணக்கம், அல்லாசாமி பண்டிகை முதலியவற்றைப் பட்டியலிடுகிறார். இத்தகைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமியருக்குரியவையல்ல என இன்று பல இஸ்லாமிய மத அறிஞர்களே குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத்தக்கது. இறுதியாக,
“இவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்ல இயலும்? கோபிப்பதில் பயனில்லை. மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் மேலானது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிது கூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் முரண்பட்டவன்”
(களக்காடு, 23.12.1950).


73 வருடங்களுக்குப் பிறகு சீக்கியர்களுக்கு கிடைத்த குருத்வாரா!

73 வருடங்களுக்குப் பிறகு சீக்கியர்களுக்கு கிடைத்த குருத்வாரா!
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நகரம் குவெட்டா. இங்கு பிரிவினைக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் இந்தியா சென்று விட்டனர். எனவே பயன்பாடு இல்லாத இந்த 200 வருட பழமையான குருத்வாரா பெண்கள் பள்ளியாக மாற்றப்பட்டது. ஹையர் செகண்டரி படிக்கும் பெண்கள் பள்ளியாக இந்த குருத்வாரா இதுவரை கடந்த 73 வருடங்களாக பயன்பாட்டில் இருந்தது.
தற்போது அங்கு கணிசமாக சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். தாங்கள் வழிபாடு செய்ய எங்களின் குருத்வாரா திரும்ப வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீக்கியர்களுக்கு சொந்தமான குருத்வாராவை திரும்ப ஒப்படைக்கும் படி உத்தரவிட்டனர். அதன்படி சென்ற வாரம் சீக்கியர்களிடம் குருத்வாரா முறையாக ஒப்படைக்கப்பட்டு தற்போது வழிபாடுகளும் நடந்து வருகிறது.
இங்கு ஏற்கெனவே படித்து வந்த பெண் குழந்தைகள் அருகில் உள்ள வேறொரு அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
'இது மிகச் சிறந்த முடிவு' என்று பலுசிஸ்தான் சிறுபான்மை பிரிவு ஆலோசகர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.
'எங்களின் கனவு நனவானது' என்று ஜக்பீர் சிங் என்று சீக்கியர் சந்தோஷத்தோடு கூறுகிறார்.
14000 ஸ்கொயர் ஃபீட் உள்ள இந்த இடமானது பல பில்லியன்கள் பெருமானமுள்ளது. ஆனால் உரியவர்கள் வழக்கு தொடுத்ததால் நியாயம் நிலை நிறுத்தப்பட்டது. இஸ்லாம் கட்டளையிடுவதை பாகிஸ்தான் நீதிமன்றம் செயல்படுத்திக் காட்டியுள்ளது. மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட பலுசிஸ்தான் அரசுக்கு எமது நன்றிகள்.
ஆக்கம்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
கல்ஃப் நியூஸ் &
முஸ்லிம் மிர்ரர்
25-07-2020
---------------------------------------------------------
1123. ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட பிறர் தவறவிட்ட பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதனுடைய பையையும் அதன் சுருக்குக் கயிற்றையும் அறிந்து பாதுகாத்து வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து அதை அடையாளம் சொல்லக் கேட்டுவிட்டால் அவரிடம் கொடுத்து விடு. இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள்.
அதற்கு அவர், ‘பிறரின் தொலைந்து போன ஆடு நம்மிடம் வந்து சேர்ந்தால்…?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அது உனக்குச் சொந்தமானது. அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது. அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது” என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அவர், ‘தொலைந்து போன ஒட்டகம் நம்மிடம் வந்து சேர்ந்தால்?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர் பையும் (குடலும்) அதன் கால் குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ளும் வரை. எனவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு” என்று கூறினார்கள்.
புஹாரி : 2372 ஜைது பின் காலித் (ரலி).




Monday, July 27, 2020

எந்த முகத்தோடு பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல நமது நாடு முயல்கிறது?



பாகிஸ்தானின் லாகூரில் நவ்லாஹா பஜாரில் பிரசித்தி பெற்ற ஷாஹிதி அஸ்தான் என்ற பிரசித்தி பெற்ற குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் இந்த இடத்தில் மஸ்ஜித் ஷாஹித் கஞ்ச் என்ற மசூதி உள்ளது.
எனவே பிரசித்தி பெற்ற குருத்துவாரா, மசூதிக்கு சொந்தமானது எனவும், அங்கு குருத்துவாராவை மசூதியாக மாற்ற ஏற்பாடு நடந்து வருவதாக புகார் எழுந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு பூட்டிக் கிடந்த பல குருத்வாராக்களை சீக்கியர்களிடம் ஒப்படைத்துள்ளது இம்ரான் கான் அரசு. தற்போதய அரசு மிக சிறப்பாக மாற்று மதத்தவர்களை நடத்துவதாக அங்குள்ள இந்து கிருத்தவர்கள் சீக்கியர்கள் சொல்வதை நாம் காணொளியாகவே பார்த்தோம்.
அது முஸ்லிம்களுக்கு சொந்தமானதா அல்லது சீக்கியர்களுக்கு சொந்தமானதா என்பதை அந்த நாட்டு அரசும், நீதிமன்றமும் மக்களும் முடிவு செய்து கொள்வர். இதில் நமது நாடு ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?
ஏற்கெனவே பாபரி பள்ளியை அநியாயமாக பிடுங்கிக் கொண்டீர்கள். ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்துக்களிடமிருந்து பிடுங்கி பள்ளி கட்டியதாகவும் எந்த ஆவணமும் இல்லை. பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் என்பதாலேயே அநியாய தீர்ப்பை சொல்ல வைத்தது மோடி அரசு. நாட்டில் அமைதி நிலவட்டும் என்பதற்காக முஸ்லிம்களும் அதிக எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. வரும் ஐந்தாம் தேதி கள்ளத்தனமாக கைப்பற்றப்பட்ட பாபரி பள்ளி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட மோடி அடிக்கல் நாட்ட செல்கிறார்.
இத்தனை அநியாயங்களையும் செய்து விட்டு எந்த முகத்தோடு பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல நமது நாடு முயல்கிறது? கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா?


ஆர்எஸ்எஸ் மன நோயாளிகளின் அடுத்த அநியாயம்!

ஆர்எஸ்எஸ் மன நோயாளிகளின் அடுத்த அநியாயம்!

ஒரு நேபாளியை பிடித்து அவனுக்கு மொட்டை அடித்து அவனை 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு 'நேபாள பிரதமர் ஒளி ஒழிக ' என்று சொல்லு என்று நிர்பந்தப்படுத்துகிறார்கள். இதனால் எதனை சாதிக்கப் போகிறார்கள். அந்த நேபாளி இந்து இல்லையா?

ஒருவன் மனதளவில் ஒரு தெய்வத்தை ஏற்றால்தான் அவன் வாழ்நாள் முழுக்க அந்த மார்க்கததில் நிலைத்திருக்க முடியும். இவ்வாறு கட்டாயப்படுத்தி இந்து மதத்தை வளர்த்து விட முடியுமா? இந்து மதத்தில் உள்ள சாதி வர்ண பேதங்களை ஒழித்தாலே போதுமே? எந்த இந்துவும் மதம் மாற மாட்டார்களே! மோடியும் அமித்ஷாவும் அராஜக ஆட்சி நடத்தி வரும் இந்த கால கட்டத்திலும் இஸ்லாத்தில் இந்துக்கள் கூட்டம் கூட்டமாக சேருகிறார்களே? ஏன் என்று என்று என்றாவது இந்த ஆர்எஸ்எஸ் மூளை மழுங்கிய  கும்பல் சிந்தித்திருக்குமா?


பட்டை உரியும் சுடுகாட்டில் கட்டை எரியும்.....

பட்டை உரியும் சுடுகாட்டில் கட்டை எரியும்.....

ஆஹா... தமிழ் விளையாடுகிறது....

இன்று தீர்ப்பு வந்த நாள்.......


தனது மருமகனுக்கு 101 வகையான உணவு பதார்த்தங்கள்!

தனது மருமகனுக்கு 101 வகையான உணவு பதார்த்தங்கள்!
இதனை நேற்று செய்தியில் கூட பார்த்தோம். இந்த பதார்த்தங்களில் கால்வாசி கூட அவர் சாப்பிடப் போவதில்லை. இதற்கு பதில் இந்த கொரோனா காலத்தில் 50 ஏழைகளுக்கு உணவளித்திருந்தால் அந்த ஏழைகளின் வயிறும் நிரம்பியிருக்கும்: இறைவனும் சந்தோஷப்பட்டிருப்பான்.
“உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை”

மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர்

மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர் பெயரில் திருட்டுத்தனமாக சாலை பெயர் மாற்றம்..


உயிர் காத்த அந்த துபாய்வாசி மனிதாபிமானி!

துபாயில் வீசிய காற்றில் டெலிவரி செய்யும் நபருடைய இருசக்கர வாகனம் விழுந்து தடுமாறிய போது,அந்த வழியாக சாலையில் சென்ற துபாய் குடிமகன் தன் வாகனத்தை கொண்டு அவரை பாதுகாத்த காட்சி..
வெளி நாட்டுக்காரன் நமக்கென்ன என்று செல்லாமல் உயிர் காத்த அந்த துபாய்வாசி மனிதாபிமானி!
மாட்டுப் பெயரைச் சொல்லி நம் நாட்டில் மனித உயிரை எடுப்பவர்களையும் தினமும் பார்த்து வருகிறோம்.




ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தலித் பெண்ணை...

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தலித் பெண்ணை காவல்துறை அதிகாரி நடத்தும் விதத்தைத்தான் பார்க்கிறோம். திருமணம் முடித்து வைக்க அந்த பெண் கோரிக்கை வைக்கிறார். ஆனால் காவல் துறையினரோ அவரை அடித்து விரட்டுகின்றனர். இந்தியா முழுக்க தலித்களின் நிலை படு மோசமாக உள்ளது.


வாழ்த்துக்கள் சோனு!

தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி நாகேஷ்வரராவ் தனது இரண்டு மகள்களை கொண்டு ஏர் உழுவதை நேற்று பார்த்திருப்போம். இதைப் பார்த்து பதறிப் போன நடிகர் சோனு அவர்கள் வீட்டுக்கு ஒரு ட்ராக்டரையே அனுப்பி வைத்து அந்த விவசாய குடும்பத்தை சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டார்.

வாழ்த்துக்கள் சோனு!




பெற்றோரின் சிறப்பு!

பெற்றோரின் சிறப்பு!
‘இன்னும் இரக்கம் கொண்டு பணிவு எனும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னைப் (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக! எனப் பிரார்த்திப்பீராக!
(அல்-குர்ஆன் – 17 : 24)
“ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதரே! நான் அழகிய நட்பு கொள்வதற்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டான். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனது தாய் என்றார்கள். பின்பு யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு யார்? என நான் கேட்டேன். உனது தாய் என்றார்கள். பிறகு யார்? எனக் கேட்டேன். உனது தந்தை என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)


Sunday, July 26, 2020

யாரடா சொன்னது எங்களை அந்நியன் என்று

பாபர் மசூதி தீர்ப்பு அநியாயமாக வந்த போதும் இந்த நாட்டின் ஒற்றுமைக்காக அமைதி காத்தோம். அதே நேரம் சிஏஏ எனும் முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கும் சட்டம் வந்தபோது பெண்கள் முதற்கொண்டு வீதிக்கு வந்து போராடினோம். இந்த நாட்டை நேசிப்பதால்தான் வீதிக்கு வந்து போரடினோம். யாரடா சொன்னது எங்களை அந்நியன் என்று.


பிராமினர்கள் வேறு காவிகள் வேறு ..!!

பிராமினர்கள் வேறு காவிகள் வேறு ..!!
பிராமணனாகப் பிறந்த நான் என் மனசாட்சிப்படி உளப்பூர்வமாக இதை எழுதியுள்ளேன். மனசாட்சியின் குரலுக்குச் செவி மடுக்கும் பிராமணர்கள் எல்லோரும் இப்படித்தான் எழுதுவார்கள் என்று நம்புகிறேன்
எந்தக் காரணத்தைக் கொண்டும் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கத் தேவையில்லை. அதுவும் தமிழகத்தில் தேவையே இல்லை. எவ்வளவு ஏழை என்றாலும் ஒரு பிராமணர் பிழைத்துக்கொண்டு கெளரவமான வாழ்வு வாழ்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன. எந்த வேலையும் கிடைக்காத பிராமணர்கூட பிராமணர் என்பதால் மட்டுமே த்விஜஸ்தம்பம் இல்லாத வைதீகப் பிரதிஷ்டை கோயில்கள் (தனியார் கோயில்களில்) அர்ச்சகராக இருக்க முடியும். புரோகிதம், வைதீக காரியங்களுக்குச் சென்று பிழைத்துக்கொள்ள முடியும்.
இட ஒதுக்கீட்டால் வாழ்க்கையை இழந்த பிராமணர் யாருமே இல்லை அதிகபட்சம் அவர் படிக்க விரும்பிய உயர்க்லவியை, பெற விரும்பிய அரசுப் பணியை இழந்திருப்பார். 69% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட பிறகும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் அரசுப் பணிகளிலும் உயர்கல்விகளிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் பல துறைகளில் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் அவர்களே அதிகமாக இருக்கிறார்கள்். இதற்கெல்லாம் அவர்கள் திறமையும் அறிவும் காரணமாக இருக்கும் என்றாலும் இவற்றுக்கான திறமையையும அறிவையும் பெற்றுக்கொள்வதற்கான சமூகச் சூழல் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.
ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறக்கும் பிராமணருக்கு எதைப் படித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்று சொல்லிக்கொடுக்க அவரது சுற்றத்தில் யாரேனும் ஒருவராவது இருப்பார்கள். எனக்கு குடும்பத்திலேயே இருந்தார்கள். முதல் தலைமுறைப்பட்டதாரிகளான் என் அப்பாவும் சித்தப்பாவும் அத்தைகளும் மாமாக்களும் ஆங்கிலப் படிக்க வேண்டியதன் அவசியத்தை எனக்குப் புகட்டிக்கொண்டே இருந்தார்கள் இன்று நான ஓரளவு நல்ல நிலையில் இருப்பதற்கு அது பெருமளவில் காரணம்.
மாறாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த பலருக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. பல சாதிகளில் இப்போதுதான் முதல்தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். சில சாதிகளில் இன்னுமும்கூட உருவாகவில்லை. எனவே சமூகரீதியாக இன்னும் பின்தங்கியுள்ள சாதிகளைக் கண்டறிந்து இட ஒதுக்கீடு பலன்கள் அவர்களைச் சென்றுசேவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரிக்க வேண்டும் உள் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் கலைஞர் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு கொடுத்தது அத்தகையதுதான்.
ஆனால் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டை வகுப்புவரி இட ஒதுக்கீடு பெறாத பிரிவினருக்குக் கொடுப்பது பச்சையான அயோக்கியத்தனம். அதுவும் பல மாநிலங்களில் அவர்கள் இருக்கும் விகிதத்தைவிட அதிகமான விகிதத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மேலும் 8 லட்சம் வருமான வரம்பை நிர்ணாயித்திருப்பது உண்மையிலேயே பொருளாதாரத்தில் பின் தங்கிய பிராமணர்களைக் காட்டிலும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க பிராமணர்கள். மற்றும் இதர உயர்சாதியினருக்கே அதிக சாதகத்தைக் கொடுக்கும். ஸ்டேட் பாங்க் கட் ஆஃப் விவகாரத்தைப் பார்த்தால் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை திரும்பிவிடும் போலிருக்கிறது. அதாவது பிராமணர்களே அதிக அரசு பதவிகளில் வருவார்கள் போலிருக்கிறது. இது துளியும் நியாயமற்றது. இத்தனை ஆண்டு சமூக நீதி அரசியலுக்கும் அவற்றால் விளைந்த நன்மைகளுக்கும் சாவுமணி அடிப்பதைப் போன்றது.
அன்புள்ள பிராமணர்களே அரசு பணிகளிலும் உயர்கல்வியிலும் உங்கள் முன்னோர்கள் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தைப் பிடித்து வைத்திருந்தனர். அதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு இன்னுமும் கூட முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்குக் கொஞ்சம் வழிவிடுங்கள்.
நன்றி : Gopalakrishnan Sankaranarayanan


இராவணனை தங்கள் தலைவனாக வழிபடுபவர்கள்!

திராவிட இனத்தை சேர்ந்த கோண்டி பழங்குடி மக்கள் இராவணனை தங்கள் தலைவனாக வழிபடுபவர்கள்!

Rally of Gond tribals calls for an end to the custom of Ravan effigy burning

On October 11, when most of central and northern India was busy celebrating Vijayadasami-Dasara in remembrance of Lord Rama’s victory over the Lankan king Ravan by setting the latter’s effigies on fire, Gond tribals were gathering in large numbers in the Gadchiroli district of Maharashtra to revere their “God Ravan”, and to demand that the practice of demonising him be stopped.
Over 3,000 people organised a rally in the Korchi town of Gadchiroli where a prayer meeting was held in front a photo of the ‘Ravan God’, and a memorandum was given to the district administration that the practice of Ravan dahan (burning of Ravan’s effigy) should be stopped.



இராமனைப் போல் எதற்கும் பின்னால் தான் இருப்பார்கள்.


பார்ப்பனர்கள் எப்போதும் மரத்திற்கு பின் மறைந்து நின்று செயல்படும் இராமனைப் போல் எதற்கும் பின்னால் தான் இருப்பார்கள்.
நமது சுக்ரீவர்களும் விபீஷ்ணர்களும் அனுமர்களும் தான் குதியாட்டமும் கும்மாளமும் போடுவார்கள்.
இது இராமாயணக் காலந்தொட்டு இன்றைய இராவணலீலா காலம் வரை பளிங்கு போல்

என் பெயர் சூத்திரன்!

என் பெயர் சூத்திரன்!

சத்தீஸ்கரைச் சேர்ந்த இந்த இளைஞனுக்கு அவரது அம்மாவும் அப்பாவும் வைத்த பெயர் சூத்திரன். இதன் அர்த்தம் என்ன என்று தெரியாமலேயே இவருக்கு இந்த பெயரை வைத்துள்ளனர். நமது தமிழகத்தில் மறந்தும் இந்த பெயரை தனது குழந்தைகளுக்கு வைக்க மாட்டார். ஏனெனில் பெரியார் அந்த அளவு வர்ணாசிரம தீமையை இந்த மக்களுக்கு போதித்துள்ளார்.

மேலும் சத்தீஸ்கர் பூர்வீக மொழியானது நமது தமிழை ஒத்திருப்பதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியானது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் ஓரிரு சொற்களை பார்க்க முடிகிறது. பரந்து விரிந்த இந்த தமிழ் மொழிதான் ஆரிய படை எடுப்பால் சிதிலமடைந்தது.


சவர்க்கார் பாணியில் மன்னிப்பு கேட்டு கொண்டான் சங்கி!

பிரச்னை விஸ்வரூபம் எடுத்தவுடன் சவர்க்கார் பாணியில் மன்னிப்பு கேட்டு கொண்டான் சங்கி!


முஸ்லிம்களை சங்கிகள் ஏன் வெறுக்கின்றனர்?


நாட்டின் வரிப்பணம் வீணாகுவதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது - மோடி

நாட்டின் வரிப்பணம் வீணாகுவதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது - மோடி
10 லட்சத்துக்கு கோட் போடுங்க..,
மாசம் 25 லட்சம் மேக்கப் போடுங்க...
3000 கோடியில் சிலை வைங்க......
பிறகு தேர்தல் வரும்போது வாய்ல வடை சுடுங்க..

உபியின் ஒளரங்காபாத்தில் பூமிக்கு அடியில் பள்ளிவாசல்!

உபியின் ஒளரங்காபாத்தில் பூமிக்கு அடியில் பள்ளிவாசல்!

அரசர்கள் மறைவிடத்திற்காக இவ்வாறு கட்டியிருக்கலாம். அல்லது அங்குள்ள பூமி மட்டம் உயர்ந்திருக்கலாம். எப்படியோ பூமிக்கு அடியிலும் பள்ளிவாசல் ஆச்சரியமளிக்கிறது. ஒளரங்காபாத்தில் மைந்திருப்பதால் மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.

அரசும் கவனிக்கவில்லை. ஊர் மக்களும் இதனை கவனிக்கவில்லை. கேட்பாரற்று ஆளரவமின்றி இருக்கிறது இந்த பள்ளிவாசல்.

இந்தியாவும் இஸ்லாமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணையப்பட்டது என்பதற்கு இந்த பள்ளி வாசலும் ஒரு சான்று.


13 வயது மாணவி மற்றும் தொழிலதிபரின் உதவியால்....

13 வயது மாணவி மற்றும் தொழிலதிபரின் உதவியால் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 68 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலரும் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்காக சில சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொருளாதார நெருக்கடியால் பலரும் விமான டிக்கெட்டிற்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 13 வயது மாணவி மற்றும் தொழிலதிபரின் உதவியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 68 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த 13 வயது சிறுமி ஷார்ஜாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தானும் உதவி செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். அதனால் ஐக்கிய அரசு அமீரகத்தில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கு உதவியுள்ளார். தான் சேமித்து வைத்திருந்த ரூ.61,000 பணத்தை வைத்து இரண்டு பேருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார்.
மேலும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான அஜ்மல் ரூ.20 லட்சம் செலவு செய்து 66 பேருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார்.
இந்திய மக்கள் பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ளதை அறிந்து அவர்களுக்கு உதவுவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். அவர்கள் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேர்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் தரவுகள் படி, 4,50,000க்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்ப அனுமதி கோரி பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,.
தகவல் உதவி
நியூஸ் 7
26-07-2020


Saturday, July 25, 2020

கோடிக்கணக்கில் மோசடி செய்து போலிஸில் சிக்கியவருக்கு தமிழக பா.ஜ.க இளைஞர் அணி பதவி!

கோடிக்கணக்கில் மோசடி செய்து போலிஸில் சிக்கியவருக்கு தமிழக பா.ஜ.க இளைஞர் அணி பதவி!
பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு 900 புதிய .2000 ரூபாய் நோட்டுகள் உட்பட ரூ.20.5 லட்சம் ரொக்கத்துடன் இருந்த பா.ஜ.க இளைஞர் பிரிவு தலைவரை தமிழக போலிஸார் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட நபருக்கு பா.ஜ.க மாநில அளவிலான முக்கிய பதவியை வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜே.வி.ஆர் அருண். இவர் பா.ஜ.க-வின் மாவட்ட இளைஞர் பிரிவு செயலாளராக இருந்து வந்தார். பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு சேலம் அருகே ஒரு வழக்கமான சோதனையில் போலிஸார் ஈடுப்பட்டனர்.
அந்த சோதனையின் போது, அருணின் வாகனத்தை சோதனை செய்த போது அவரின் காரில் இருந்து ரூ .20.5 லட்சம் மதிப்புள்ள பல மூட்டைகளை போலிஸார் மீட்டனர். அந்த மூட்டையில் 926 புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், 1,530 எண்ணிக்கையிலான 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 1000 என கைப்பற்றப்பட்டது.
மேலும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக முறையான ஆதாரம் எதுவும் சமர்பிக்கப்பட்டாததல் காவல்துறையினர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு வருமான வரித்துறை விசாரணையில் இறங்கின.
இதுகுறித்து விளக்கமளிக்கக் கோரி பாஜகவின் மாநிலப் பிரிவு அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுகுறித்து பேசிய கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இளைஞர் செயலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து கட்சி பணிகள் பலவற்றில் அருண் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் இதுபோல குற்ற செயலில் ஈடுபட்ட அருண் என்பவருக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து மாநில பா.ஜ.க இளைஞரணி செயலாளர் பதவிக் கொடுத்துள்ளார். இது பலரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது குற்ற செயலில் ஈடுபட்டவருக்குதான் பதவி உயர்வு என்ற புதிய விதிமுறைகளை பா.ஜ.கவினர் மட்டுமே தொடர்ச்சியாக பின் பற்றி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தகவல் உதவி
கலைஞர் செய்திகள்
26-07-2020




பார்பனருக்கு உதவிய இஸ்லாமிய இளைஞர் முஹம்மது ஆஷிஃப்!

பார்பனருக்கு உதவிய இஸ்லாமிய இளைஞர் முஹம்மது ஆஷிஃப்!

கர்நாடகாவில் உள்ள மூட்பித்ரியில் வசித்து வந்தவர் வேணுகோபால் என்ற பார்பனர். வயது 62. பொருள் இருந்தபோது ஒட்டி உறவாடிய உறவுகள் கடைசி காலத்தில் தூரமாயினர். எனவே ஒரு அனாதை ஆசிரமத்தில் தனது கடைசி காலத்தை கழித்து வந்தார். ஒரு நாள் இவருக்கு திடீரென கொரோனா தொற்று தாக்கியது. தனக்கு முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் இறக்கும் போதாவது தனது பிள்ளைகளை உறவினர்களை காண ஆசைப்பட்டார்.

ஆனால் இவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த இவரது உறவினர்கள் கடைசி வரை இவரை பார்க்க வரவில்லை. மிகவும் மனம் நொந்தபடியே இறந்து போனார். இவரது உடலை எடுத்து ஈம கிரியைகள் செய்ய எவரும் முன் வரவில்லை. இதனை அறிந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முஹம்மது ஆஷிஃப் தனது நண்பர்கள் உதவியோடு அந்த பெரியவருக்கு செய்ய வேண்டிய கடைசி ஈம கிரியைகளை செய்து முடித்தார்.

பல உறவுகள் வசதியாக வாழ்ந்தும் அனாதை பிணமாக எரியூட்டப்பட்டார் வேணு கோபால். இதுதான் உலகம். வேணுகோபாலை ஒரு ஆதமுடைய மகனாக ஆஷிஃப் பார்த்ததால்தான் மனித நேயத்தோடு உதவ முன் வந்தார். இங்கு நெற்றியில் பிறந்தவன், தோளில் பிறந்தவன் என்ற வர்ணாசிரம பெருமை எல்லாம் எங்கு போனது.

இந்த நாட்டை விட்டு முஸ்லிம்களை துரத்தி விட அல்லும் பகலும் உழைக்கும் சங்கிகளே! முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து முற்றாக சென்று விட்டால் இது போன்ற மனித நேய பணிகளை மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் உதவிகள் செய்வது யார்? இன்று ரத்ததானத்தில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

இதை எல்லாம் செய்யஆர்எஸ்எஸ் முன் வருமா? இந்து முன்னணி முன் வருமா? யோசித்து பாருங்கள் சங்கிகளே!