Followers

Saturday, September 25, 2021

மத்திய பிரதேசம்.

 மத்திய பிரதேசம்.

முஸ்லிம்கள் சொந்தமாக தொழில் செய்யக் கூடாதாம். கூலி வேலைக்கு வேண்டுமானால் இருக்கலாமாம். இந்துத்வா குண்டர்கள் இதற்காக ஊர்வலம் போகிறார்கள். போகிற வழியில் ஆட்டோ டிரைவர்கள், சிறு குறு தொழில் செய்யும் முஸ்லிம்களை அடித்து துன்புறுத்தி விட்டு சென்றுள்ளார்கள்.
பிஜேபியிடமிருந்து மக்களிடம் கொள்ளையடித்த பணம் கொட்டிக் கிடக்கிறது. அந்த பணத்தை மாதா மாதம் இது போன்ற இந்துத்வா பொறுக்கிகளுக்கு படி அளந்து நாட்டு மக்களை சிந்திக்க விடாமல் மதத்தை வைத்து பிழைப்பு நடத்தகிறது பிஜேபி. இது பிற்காலத்தில் அவர்களுக்கே வினையாக முடியும்.



யார் தீவிரவாதி?

 


Wednesday, September 22, 2021

துப்பாக்கி, கல், கம்புகளால் இரண்டு உயிர் போனது. ராம ராஜ்யம்.

 

உ.பி.யின் மிர்சாபூரில், சத்யம் படேல் என்ற இளைஞர் ஒரு சிறிய தகராறு காரணமாக ரிஷப் பாண்டேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 



சிறிது நேரம் கழித்து, ஒரு கும்பல் ரிஷப்பை மறித்து கொடூரமாக செங்கல் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி அடித்து கொன்றது.

 



இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? அல்லது மிருகங்களா?

 



இந்தியாவுக்கே உபி ரோல் மாடல் என்றார் யோகி. இதோ துப்பாக்கி, கல், கம்புகளால் இரண்டு உயிர் போனது. ராம ராஜ்யம்.




 

Tuesday, September 21, 2021

கர்நாடக மாநிலம் - கோப்பல்.

 


கர்நாடக மாநிலம் - கோப்பல்.

 

இந்த கிராமத்தில் தனது 2 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஒரு தலித் ஹனுமான் கோவிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இவர் வெளியில் நின்றுதான் சாமி கும்பிட்டுள்ளார். தீட்டு பற்றி அறியாத அந்த சிறுவன் உள்ளே கோவிலின் உள்ளே ஓடியுள்ளான்.

 

உடனே அந்த கிராமத்து மக்கள் நேற்று ஒன்று கூடி கோவில் தீட்டு பட்டு விட்டதாகவும் அதனை சரி செய்ய பையனின் தந்தை 23 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர் கிராம பஞ்சாயத்தில்.

 

கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி நடக்கிறது. அந்த தலித்துக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை.

 

ராம ராஜ்யம் தொடங்கி விட்டதாகவே எண்ணுகிறோம்.😞😞😞😞

 

Koppal: In a shocking incident, a Dalit family was fined Rs 23,000 after their two-year-old son entered a Hanuman temple in Miyapura village in Koppal district of Karnataka.

 

The incident took place on September 4 when the father of the toddler took him to the temple to seek blessings on his birthday. He was careful not to enter the temple as it was “forbidden” by the members of the upper caste. However, the boy ran inside the temple to pray and came back.

 

Infuriated with this, members of the upper caste held a meeting on September 11. They said that the temple was desecrated by the Dalit boy’s entry and sought Rs 23,000 from the parents of the boy to perform purification rituals.

 

However, the district administration which came to know about the development has sent police, revenue and social welfare department officials to the village. The officers have conducted an awareness programme with regard to untouchability for all villagers.

 

Zee News

21-09-2021

தந்தி டிவியின், சிறப்பானதொரு, நேர்காணல்.

 தந்தி டிவியின், சிறப்பானதொரு, நேர்காணல்.


நான்கே கேள்வி., நான்குக்கும், நச்சு என பதில்!


அதிலும், எப்பொழுதும், ஏன் ஆயுதங்களுடன், சாலையில், சுற்றுகிறீர், என்ற கேள்விக்கு, காஷ்மீரை, ஒப்பிட்டது அல்டிமேட்.,


அதேபோல், கல்வியில், இரு பாலரும், ஏன் சேர்ந்து படிக்ககூடாது, என கேள்விக்கு, மார்க்கத்தின், நிலைபாட்டை, நிலை நிறுத்திய, தாலிபான்ஸ்,






Friday, September 17, 2021

விசி அப்பாராவ் கைகளால் பிஎச்டி பட்டம் வாங்க மாட்டேன்

 'ரோஹித் வெமுலாவை கொன்ற விசி அப்பாராவ் கைகளால் பிஎச்டி பட்டம் வாங்க மாட்டேன்'

-வேல்புலா சன்கண்ணா....
இவ்வாறு தேச விரோதிகளையும், கொலைகாரர்களையும் பட்டம் அளிக்க தேர்ந்தெடுத்தால் கல்வியின் தரம் மேம்படுமா?
கொலைகாரன் கையால் பட்டம் வாங்க மறுத்த அந்த மாணவருக்கு ஆயிரம் சல்யூட்கள்.



Thursday, September 16, 2021

பாழாய்ப்போன பாஷையாம்.

 'என்ன மாமி தண்ணீர் என்று சொல்கிறீர்கள்... தீர்த்தம் என்று சொல்லுங்கோ'

'என்ன செய்றது.. பஸ் ரயில் ஏறி போறச்சே மத்தவாளோட பேசியே அந்த பாழாய்ப் போன சனியன் பாஷை என்னையறியாமல் வந்துடுது'
பாழாய்ப்போன பாஷையாம்.
கலப்பு திருமணம் பண்ணா குழந்தை ரவுடியா பிறக்குமாம்.. சாதி அவசியம் இருக்க வேண்டுமாம்... என்ன திமிர் பாருங்கள்.



பள்ளியை இடித்து விட்டு அங்கு கோவில் கட்டுவதும் அல்ல பக்தி

 ஒரு ஹிந்துவின் வீட்டுக்கு தொழில் நிமித்தமாக செல்கிறார் நிஸாத். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே தொழுகைக்கான நேரம் வந்து விட்டது. அருகில் பள்ளி இல்லை. உடனே அந்த இந்து சகோதரர் தனது பூஜை அறையில் அவரை தொழ வைக்கிறார். இது தான் உண்மையான பக்தி.


மாட்டுக் கறி தின்பவனை கொல்வதும், பாபரி பள்ளியை இடித்து விட்டு அங்கு கோவில் கட்டுவதும் அல்ல பக்தி. அது கடைந்தெடுத்த அரசியல்.




Saturday, September 11, 2021

மிகச் சிறந்த காணொளி... பார்த்து விட்டு பகிருங்கள்.

 


நெகிழ வைத்த பதிவு

 

Viruthagiri A பதிவு இது. நெகிழ வைத்தது

 

சில நிகழ்வுகள் ஆச்சரியமளிக்கின்றன.... நம்ப முடியாமல் இருக்கின்றன... ஆனால் உண்மை....

 

நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு...

 

பந்தர் தெரு அக்பர்அலி ஸ்டோர் காரர் பேசினார்

 

சார்... கடையை காலி செய்யச் சொல்கிறார்கள்... காலி செய்கிறேன்... நாளைக்கு வந்து சிரமம் பாராமல் உங்கள் மீதி சரக்கை எடுத்துக் கொண்டு கணக்கை முடியுங்கள்..

 

என் வியாபார அனுபவத்தில் இப்படிச் சொல்பவர்கள் மிகவும் அபூர்வம்... சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்து விட்டுப் போய் விடுவார்கள். ஆள் அட்ரஸ் இருக்காது.... கொடுத்த சரக்கிற்குப் பணம அம்பேல்தான்...

 

இன்று விரைவாகவே பந்தர் தெரு போய்விட்டேன். கடை காலி செய்து கொண்டிருந்தார்கள்... எங்கள் பேப்பர் பிளேட்டுகளை எடுத்து கணக்குப் பார்த்தோம்... அவர் 3 பில்கள் 12000/- ரூபாய்.. எடுத்தது போக 9900/- அவர் கொடுக்க வேண்டியிருந்தது....

 

எங்கே வரப் போகிறது என்று நினைத்தேன்....

 

சார் 4 மணிக்கு வாங்க... எனக்கு வர வேண்டிய பார்ட்டி வர்றதா சொன்னாங்க... எனக்கு அவங்க பத்தாயிரம் தரணும்... அது வந்தவுடன் மொத்தமாக தந்து விடுகிறேன்.... என்றார்...

 

சரி என்று சொல்லி விட்டு மலைய பெருமாள் தெரு ஆண்டர்சன் தெரு வசூலை எல்லாம் முடித்து விட்டு 4 மணிக்குப் போனேன்.... என்ன அதிர்ச்சி... கடையில் ஸ்டுல் போட்டு 2 நரிக் குறவர்கள் அம்மா பெண்ணுமாக உட்கார்ந்து கொண்டு சப்தமாக கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்....

 

நான் வெளியில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்...(எப் சி கடை முதலாளி கூட ஆளை விட்டு அனுப்பி கடையில் வந்து உட்காரச் சொன்னார்) பரவாயில்லை என்று சொல்லி விட்டு நின்று கொண்டிருந்தேன்... ஒரு மணி நேரம்.... அந்த நரிக்குறவ அம்மா பெண்ணும் சுருக்குப் பையில் இருந்து ரூபாயை எடுத்துக் கொட்டினார்கள்...

 

கடைக்காரர் என்னை அழைத்து ரூபாய் எண்ணி கொடுத்தார் - மொத்த தொகை 9900/- ரூபாய்...

 

நம்புங்கள் நண்பர்களே... எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை...

 

அக்பர் அலி கடைக்காரர் சொன்னது இன்னும் அதைவிட ஆச்சரியம்

 

வருடா வருடம் அந்த நரிக்குறவர்கள் அவரிடம் பிள்ளையார் சதுர்த்தி குடை வந்து வாங்குவார்களாம்... விற்று ரூபாய் கொண்டு வந்து கொடுப்பார்களாம்... நரிக்குறவர்கள் அட்ரஸ் எதுவும் தெரியாமல் கொடுத்து வியாபாரம் செய்திருக்கிறார்.... அவர்களும் நாணயமாக திருப்பி கொடுக்கிறார்கள்....

 

அக்பர் அலி கடைக்காரர் சொன்னததுதான் நெகிழ்ச்சியாக இருந்தது...

 

சார் உங்களை இன்னைக்கு நான் ஏமாத்தி விடலாம்..

 

ஆனால் நாளை அல்லாவிற்கு பதில் சொல்ல வேண்டும் நாம் நாணயமாக இருந்தால் நம் கடன் தானாக திரும்பி வரும்...

 

கோடி கோடியாக கடன் வாங்கி டிமிக்கி கொடுத்து நாட்டை விட்டுச் சென்று மறையும் மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு நாணயஸ்தர்களை காண்பது பிரமிப்பாக இருந்தது.... அவர்களை குறைவாக எடைபோட்ட என் மனது தன்நெஞ்சே தன்னைச் சுட்டது.....

 

படம் பிடிக்கும் போது நல்லா பிடிப்பா என்று குழந்தைத் தனமாக வேண்டுகோள் விடுத்தது மகிழ்வாக இருந்தது..

 

இந்தப் பதிவு சாதாரணமானததுதான்... ஆனால் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம்....

 

எளியோரைத் தாழ்த்தி... வலியோரை வாழ்த்தும்...

 

உலகே உன் செயல்தான் மாறாதா....?


--------------------------------------------------

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில் நுழைந்துவிடும்'' என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: சவ்பான் (ர­லி) நூல்: இப்னுமாஜா (2403)