Followers

Saturday, October 23, 2021

என்று ஒழியும் இந்த சாதி வெறி?

 தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு முடி வெட்ட மாட்டார்களாம்....


அதே சாதியினர் வயலில் கால் வைத்து உழுது பயிரிட்டு தரும் அரிசியை மட்டும் சாப்பிடுவார்களாம்.


எந்த அளவு சாதி வெறி இந்த மக்களின் மனதில் ஊறியுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்....


என்று ஒழியும் இந்த சாதி வெறி? 




Monday, October 18, 2021

குஜராத் மாநிலத்தில் ஆர் எஸ் எஸ் ன் பெண் சிங்கம்

 குஜராத் மாநிலத்தில் ஆர் எஸ் எஸ் ன் பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்ட செளமியா தேசாய் கடந்த 5:10:2021 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காண காரணத்தை வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நான் 8 வயதில் சாகா (ஆர் எஸ் எஸ்) வகுப்பில் இணைந்தேன். அன்றுமுதல் ஆர் எஸ் எஸ் கொள்கைகளை கடைபிடிக்கத்தொடங்கினேன். நாட்டில் ஒரு முஸ்லீமிற்கு துன்பம் ஏற்பட்டால் அதை நினைத்து சந்தோசபடுவேன். பல நிகழ்வுகளைக்கண்டு சந்தோசமடைந்திருக்கிறேன்.
சாகா வகுப்பில் எங்களுக்கு இஸ்லாமியர்களின் குர் ஆன் என்று ஒரு புத்தகம் கொடுக்கபட்டது. அதில் முஸ்லீம்கள்,கிறஸ்தவர்கள் பற்றிய பொய் தகவல்கள் அதிகமிருந்தன.
எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது சாகாவில் கொடுக்கப்பட்ட புத்தகத்தில் சொல்லியிருப்பது எப்படி உண்மையாக இருக்க முடியும் உலக அளவில் இஸ்லாம் வளர்ந்திறுக்கின்றது எப்படி என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.
பிறகு இஸ்லாமிய மதகுருமார்கள் சிலரை சந்தித்து விபரம் அறிந்துகொண்டேன். அதன் பின் இஸ்லாமியர்களின் உண்மையான குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன்.
சமத்துவத்தையும்,சகோதரத்துவத்தையும் போதிக்கும் மதம் இஸ்லாம் என்று உணர்ந்துகொண்டு என்னை இஸ்லாத்தின்பால் இணைத்துக்கொண்டேன் என்கிறார்.
இஸ்லாம் மட்டுமல்ல தங்களுக்கு பிடித்த மதத்தை ஏற்றுக்கொள்வதென்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் மதவெறியை மட்டுமே மூலதனமாக கொண்டு இயங்ககூடிய ஒரு தீவிரவாத அமைப்பிலிருந்து ஒருவர் வெளிவருகிறார் என்றால் அதைப்பற்றி பேசத்தான் வேண்டும்.
செளமியா தேசாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் இஸ்லாத்தை ஏற்ற ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் என்ன சொன்னார்களோ அதைத்தான் இவரும் சொல்லியிருக்கிறார்.
நன்றி, My name is Red
“I want to tell the RSS that you lost your ‘Bhakt’ today because Islam is Peace and you cannot stop the truth from spreading in our Samaj” – Saumya Desai
They say “Truth can only be seen by those with truth in them” – Indeed, the truth cannot be revealed to those having a gram or an inch of lies within – and when the truth is revealed to you, how far can you run, denying it? How long can you refuse to accept it? Sometimes, you just have to take a leap of faith and left everything behind to find the path of enlightenment – to make a spiritual journey within, which involves going beyond hope and fear and stepping into unknown territory continually moving forward. This story is of a young girl who found her inner peace in chaos, who witnessed that divine light amid the darkest of times.




Saturday, October 02, 2021

மோடி காண விரும்பிய டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பக்கம்.

 'எனக்கு வயது 21 ஆகிறது... எனக்கும் அக்கா தங்கைகள் உள்ளனர். என் சாதியை தாண்டி வேறொரு சாதியில் கலப்பு திருமணம் செய்தால் வெட்டுவேன்'


ஆஹா வருங்கால இந்திய குடிமகன். அடுத்த தலைமுறையையும் கெடுத்து வைத்துள்ளார்கள். சாதிகளற்ற சமூகம் பிறக்கும் என்ற நம்பிக்கை இனி யாருக்காவது உண்டா?


மோடி காண விரும்பிய டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பக்கம்.