Followers

Sunday, April 30, 2023

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சூன்யக்காரி சொல்வதைக் கேளுங்கள்.

 

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சூன்யக்காரி சொல்வதைக் கேளுங்கள்.

 

'பலரும் எங்களிடம் தங்களின் பிரச்னைகளை தீர்க்க வருகின்றனர். நாங்களும் எங்களின் சக்தியைக் கொண்டு அவர்கள் சொல்வதை செய்து கொடுக்கிறோம். ஆனால் முஸ்லிம்களிடம் மட்டும் எங்களின் சக்தி தோற்றுப் போகிறது. அவர்கள் ஐந்து நேரம் தொழுது கொண்டு தங்களின் மன உறுதியை வலிமையாக்கி வைத்துள்ளனர். எனவே எங்களின் சூன்யம் இஸ்லாமியரிடத்தில் தோற்றுப் போகிறது'

 

எல்லா புகழும் இறைவனுக்கே!

 

சூன்யக்காரர்கள் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது. அதையும் பார்ப்போம்.

 

20:69. இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான் (என்றும் கூறினோம்).

 

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/547995367537362




Saturday, April 29, 2023

*நாடா இது..?*

*எந்த நாட்டிலோ பிறந்த மவுண்ட்பேட்டனுக்கு* *பூரி ஜெகந்நாதர் கோயிலில் பூரணகும்ப மரியாதை...* *இந்த நாட்டிலே பிறந்த "அம்பேத்கர்" கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார்.* *நாடா இது..?* *அம்பலப்படுத்துகிறார் அய்யா "சுகிசிவம்"*




Thursday, April 27, 2023

சோழர்கள் பல்லவர்கள் ஆட்சி பற்றி

 சோழர்கள் பல்லவர்கள் ஆட்சி பற்றி

பல்லவ ஆட்சி நடந்த போது தான் பார்பனர்கள் அதிக அளவில் தமிழக மண்ணில் குடியமர்த்தப்படுகின்றனர். கூட்டம் கூட்டமாக இங்கு வந்தனர். வந்த பார்பனர்களுக்கு மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வளம் கொழிக்கும் நிலங்கள் பார்பனர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது.
கம்பலை என்ற விவசாயி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தனது வளமான நிலத்தை பார்பனர்களுக்கு தர முடியாது என்று கூறுகிறார். உடனே அரசன் படையை அனுப்பி அந்த விவசாயியின் தலையை வெட்டி எதிர்ப்பவர்களை மண்டியிட செய்கிறான். உயிருக்கு பயந்து எதிர்ப்பு குறைகிறது. தமிழர்களின் பெரும்பாலான நிலங்கள் பார்பனர் வசமாகிறது. இளையான்குடி செப்பேடு இந்த நிகழ்வுகளை விவரிக்கிறது.
சோழர்கள் ஆட்சியிலும் இது தொடர்ந்து பார்பனர்கள் வளமாக வைக்கப்பட்டனர். தமிழகத்தில் பார்பனர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை கேள்வி பட்ட பார்பனர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். தமிழர்களின் வாழ்வு முறை குலங்கள் அழிந்து அது சாதியாக உருவெடுக்கிறது.

கழிவுநீர் மேலாண்மை வசதியோட வாழ்ந்தவனுக்கு

 

//ஆக பாலைவனத்துல கழுவ தண்ணி கிடைக்காம அறுத்துகிட்டு சுத்துன காலகட்டத்துலேயே இங்குன இருக்குறவன் கழிவுநீர் மேலாண்மை வசதியோட வாழ்ந்தவனுக்கு சுகாதாரம் பற்றி பாடம் எடுக்குற// -Raman

 

ஹா...ஹா... பண்டைய தமிழரின் வரலாறு சரியாக உனக்கு தெரியவில்லை ராமன்...

 

முலை வரி கட்டச் சொல்லி அழகு பார்த்தது பண்டைய தமிழகம்...

 

கோவில்களில் பார்பனரல்லாத பெண்களை தேவரடியாராக மாற்றி அவர்களின் கற்பை சூறையாடியது பண்டைய தமிழகம்.

 

மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வளமான நிலங்களை எங்கிருந்தோ வந்த பார்பனர்களுக்கு தாரை வார்த்து கொடுத்தது தமிழகம்.

 

அடிமை முறையை ஊக்குவித்து பார்பனர்களுக்கு தமிழர்களை விற்றது பண்டைய தமிழகம்.

 

அனல்வாது புனல்வாது என்று கூறி எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றியது பண்டைய தமிழகம்

 

பார்பனரல்லாத பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்றும் ஆண்கள் செருப்பு அணியக் கூடாது என்றும் சட்டமியற்றியது பண்டைய தமிழகம்.

 

பொது குளத்தில் தலித்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று சட்டமியற்றி மீறியோரை தண்டித்தது பண்டைய தமிழகம்...

 

பார்பனரல்லாதவன் கல்வி கற்றால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லி எழுதி வைத்தது பண்டைய தமிழகம்.

 

தவம் புரிந்த சம்புகனை கோழைத்தனமாக தலையை சீவி சாதி பெருமையை பறை சாற்றியது பண்டைய தமிழகம்.  இப்படி வரிசையாக பண்டைய தமிழனின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

இவை எல்லாம் பார்பனர் ஊடுருவலுக்கு பின்பு   நடந்தவை. பார்பனர் வருகைக்கு முன்பு தமிழகம் மிக செழிப்பாகவும் அறிவியலில் முதிர்ச்சி பெற்றும் இருந்தது. கீழடி ஆய்வுகள் அதனை மெய்ப்பிக்கின்றன. ஆனால் இந்துத்வா முகமூடி அணிந்து பார்க்கும் உனக்கு இதெல்லாம் அவ்வளவு எளிதில் ஏறாது ராமா!