Followers

Saturday, February 29, 2020

சங்கிகளோடு விவாதம் செய்யாதீர்கள்.

படித்ததில்_பிடித்தது....

சங்கிகளோடு விவாதம் செய்யாதீர்கள்.

டெல்லியில் கலவரம் தொடங்கிய பிறகு நடந்த உயிரிழப்புகளும் அதை தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களும், நியாய உள்ளம் கொண்டோர் அனைவரையும் பாதித்து உள்ளன.  ஆனால் சங்கிகள் இதற்கும் முட்டுக் கொடுக்கிறார்கள்.  கொடுப்பார்கள்.   

கலவரத்தை தூண்டியது இஸ்லாமியர்கள்தான் என்பார்கள்.. அவர்கள்தான் அதிக அளவில் இறந்திருக்கிறார்கள் என்றால், ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப் பட்டிருக்கிறார் என்பார்கள்.  இதேபோல உத்தரபிரதேசத்தில் RSS பசு காவலர்களால் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொல்லப்பட்டார் அதைப் பற்றி பேசமாட்டார்கள்..

பலத்த உயிர் மற்றும் பொருட்சேதம் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால், சிறு சம்பவம் பெரிது படுத்தப்படுகிறது என்பார்கள். 

ஒரு மசூதி இடிக்கப்பட்டு, அதில் அனுமன் கொடி கட்டப்பட்டுள்ளது என்றால், அது போலி வீடியோ என்பார்கள்.  டெல்லி கலவரம், உயிர்சேதம், பொருட்சேதம் பற்றிய கட்டுரைகளை பகிர்ந்தால், பாகிஸ்தானில் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் தெரியுமா என்பார்கள். 

டெல்லியில் நடந்த கலவரம் தவறே அல்ல.  இஸ்லாமியர்கள் சி.ஏ.ஏவை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டம் நடத்துவது தவறு.  சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.  அதனால்தான் பிரச்சினை என்பார்கள்.   

மோடி – அமித் ஷா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு முட்டுக் கொடுப்பதுதான் இந்த முரட்டு சங்கிகளின் வேலையே.   இவர்களோடு விவாதம் செய்து, இவர்களுக்கு புரிய வைப்பது சாத்தியமே அல்ல. இவர்கள் தலையை மண்ணில் புதைத்த நெருப்புக் கோழிகள். 

நாளை அனைவரும் கோமியம் குடிப்பது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டால், கொஞ்சம் கூட கூசாமல் அதை நியாயப்படுத்துவார்கள். 

இவர்களோடு விவாதிப்பதோ, பதில் சொல்லுவதோ நேர விரயம்.  இவர்களை உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து விலக்குங்கள்.   இவர்களிடமிருந்து நீங்களும் விலகி இருங்கள். 

நீங்கள் இஸ்லாமிய ஆதரவாளர்.  இந்து மத விரோதி என்பார்கள். 

ஆமாண்டா  @ நியாயவானே என்று பதில் சொல்லுங்கள்.

By Sankar A
Jp Prakash

அதானே... பெரியார் சரியாகத்தானே கேட்டுள்ளார்!


ஆர்எஸ்எஸ் ஷாகாவில் எடுத்த பயிற்சி கை கொடுக்கிறது.

ஆர்எஸ்எஸ் ஷாகாவில் எடுத்த பயிற்சி கை கொடுக்கிறது.
எல்லோருமே இளைஞர்கள். கிடைக்கும் பொருட்களை கொள்ளையடிப்பதும் உணவுப் பொருட்களை கீழே கொட்டி ஆனந்த மடைவதையும் பாருங்கள்.
இவர்களை இப்படியே விட்டால் சைக்கோக்களாக மாறி சொந்த தாய் தந்தை தம்பி தங்கைகளையும் கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுவார்கள்.
உலகிலேயே மிக ஆபத்தான காட்டுமிராண்டி இளைஞர்களை இந்துத்வா உருவாக்கிக் கொண்டுள்ளது.
மோடி, அமித்ஷாவின் ஆட்சியில் இந்து மதம் மிகப் பெரும் அழிவை சந்தித்துக் கொண்டுள்ளது. இதன் தாக்கத்தை சில ஆண்டுகளிலேயே இந்துக்கள் உணரத் தொடங்கி விடுவார்கள்.


டெல்லியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள்:

டெல்லியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள்:

டெல்லியின் நடந்தேறிய வன்முறைகளை வீடியோக்களாகவும் செய்திகளாகவும் பதிவுகளாகவும் பார்த்து, மனம் நொந்து பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு.  நிச்சயமாக பிரார்த்தனைகள் தீர்வு கொடுக்கும்.

ஆட்டோ ஓட்டுனராகவும் - பழைய பொருட்கள் சேகரிக்கும் தொழில் - பிளாஸ்டிக் தொழில் - சிறிய கடைகள் - ஓட்டல்கள் - சுவீட் கடைகள் - என்று சிறு தொழில்கள் நடத்தி, ஒரு தலைமுறைக்குப் பிறகு வீடு பொருட்கள் எல்லாம் சேர்த்து , முன்னேறியவர்களின் பொருட்கள் சொத்துக்கள் ஒரே நாளில் தீக்கிரையானது.

இவ்வளவு நாட்கள் வாழ்ந்த வந்த வீடு , பொருளாதாரம் எல்லாம் ஒரே நாளில் அழிந்து போக, மறுபடியும் அவர்களது வாழ்க்கை ஜீரோவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

மனிதர்களாக நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்வதே , அவர்களை கை தூக்கி விடுவதே நமது தலையாய கடமை. இதனை நமக்கான அரசாங்கம் என்று நம்பிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் செய்ய மறுக்கும்போது , மக்களாகிய நமது கடமை இது.

இயற்கை பேரிடர்வுகளோ இதுபோன்ற பயங்கரவாதிகளின் பேரிடர்வுகளோ , நாம் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் நம்பிக்கையளித்தால் , கைதூக்கி உதவி செய்தால், நிச்சயமாக அவர்களது வாழ்வாதாரத்தை கொஞ்சமாகவேனும் மீட்டு விடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

பாதிக்கபட்டவர்கள் உள்ள பகுதிகளில் இந்து முஸ்லிம் குடும்பங்கள் உண்டு. உதவிகளும் நிவாரணங்களும் இந்தியர்களுக்கு என்கிற உணர்வுகளில் கொடுங்கள் .

WeCanDo-Group - சார்பாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநெல்வேலியில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகின்றது.  சென்னையில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜே என் யு மாணவர்கள் நடத்தும் நிவாரண முகாம் வழியாக நேரிடையாக கொடுக்கப்படப்போகிறது.

பணத்தை விடவும் கீழ்கண்ட பொருட்கள் அனுப்புதல் மிகவும் அவசியம்.

கீழுள்ள தன்னார்வலர்களுக்கு போன் செய்து  நிவாரணப் பொருட்களை வழங்குங்கள். மார்ச் 5 ம் தேதிக்குள் [ வரும் வியாழக்கிழமை ] வழங்கினால் நாங்கள் அனுப்பி வைப்பதற்கு உதவியாக இருக்கும்

1. அடிப்படை முதலுதவி: டெட்டோல் ஃ சவ்லான் பேண்டேஜ் காட்டன் வலி ​​நிவாரணி மருந்துகள்.

2. குழந்தைகளுக்கான டயப்பர்கள் மற்றும் சானிட்டரி பேட்கள்

3. பிஸ்கட், கேக் போன்ற பேக் செய்யப்பட்ட உணவு.

4. குழந்தை உணவு - பால் பவுடர்

5. துண்டுகள்,  துப்பட்டாக்கள்

6. சோப்புகள்

7. போர்வைகள் மற்றும் தினசரி அணியும் ஆடைகள் ( மிகவும் பழைய ஆடைகளை தவிர்க்கவும்.)

8. பல் துலக்கும் பிரஷ் மற்றும் பேஸ்ட்

திருநெல்வேலி மற்றும் சென்னையில் உள்ள தன்னார்வலர்களின் தொடர்பு எண்கள்:

திருநெல்வேலி [மேலப்பாளையம்]:
==============================

காஜா நிஜாமுத்தீன் - 97877 27687

ஃபைசல் -  78456 78983

சையது முனாவர் - 9176881046

அஹ்மது தௌஃபில் -  7200134426

அஃபான் அஹ்மது -  9843062324

சென்னை : 
=========

பீர் சாதிக்-  98402 32595

#WeCandDo #DelhiReliefMaterial #Support #WeAreONE





உன்னால் பள்ளி வாசல்களைத்தான் இடிக்க முடியும். எங்களின் ஏக இறை நம்பிக்கையை அல்ல.


சொந்தங்களை இழந்த அந்த பெண்களின் நிலை?


டெல்லியில் சங்கிகளாலும் காவல் துறையினராலும் துப்பாக்கியாலும் அடித்தும் கொல்லப்பட்ட முஸ்லிம்களை அடக்கம் செய்து விட்டு பிரார்த்தித்த உறவினர்கள்!
'யா அல்லாஹ்... அனைத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். அக்கிரமக்காரர்களை கண்டு நாங்கள் சிறிதும் அஞ்சவில்லை! அப்படி அஞ்சியிருந்தால் இந்த இடத்தில் நின்றிருக்க மாட்டோம். நீ குர்ஆனில் கூறியுள்ளது போல் அக்கிமக்காரர்களை எதிர்க்க துணிந்து விட்டோம். நாங்கள் பின் வாங்கப் போவதில்லை ரஹ்மானே! இவை அனைத்தும் உன்னை வணங்கிய குற்றத்திற்காக கொன்றிருக்கிறார்கள் இறைவா! அவர்களை நீயே பார்த்துக் கொள். நாங்கள் எதற்கும் தயாராக வந்துள்ளோம் இறைவா! இந்த ஃபிர்அவுன் கூட்டத்தை அழித்தொழிப்பாயாக! நாங்கள் அழப் போவதில்லை. இந்த முடிவை இன்முகத்தோடு ஏற்றுக் கொள்கிறோம் இறைவா! எங்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! அப்பாவிகளை கொன்றொழித்த அக்கிரமக்காரர்களை அழித்து விடு இறைவா!'
----------------------------
இந்த பதிவை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது என்னையறிமால் கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. எனக்கே இந்த நிலை என்றால் சொந்தங்களை இழந்த அந்த பெண்களின் நிலை?
ஒவ்வொரு தொழுகையிலும் இரு கரம் ஏந்துவோம். கண்டிப்பாக இறைவன் நமது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான்!

Thursday, February 27, 2020

ஏன் இசுலாமியர்கள் இவ்வளவு விரட்டப்படுகிறார்கள்?

Shobana Narayanan
ஏன் இசுலாமியர்கள் இவ்வளவு விரட்டப்படுகிறார்கள்?
நான் போட்டித்தேர்வுகளுக்கு தயாரான காலத்தில் சிபிஎஸ்சி புத்தகத்தில் இவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியை சார்ந்த முரட்டுத்தனமான கூட்டத்தினர் என்றே அப்பட்டமாக எழுதியிருந்தார்கள்.
ஏன் இவ்வளவு வன்மம்? ஏன் இவர்கள் ஒரு நிச்சயமற்ற தன்மையுடனேயே வலம் வருகின்றனர்?
பல இசுலாமிய தோழர்கள் தோழிகள் உண்டு. எந்த வித பாகுபாடும் இன்றி பழகும் போதும் அவர்களை அறியாமல் அவர்களது இந்த நிச்சயமற்ற தன்மை மீதான உணர்வினை வார்த்தைகளாக்கியிருக்கின்றனர்.
உலக அளவில் இசுலாமியர்கள் நடத்தப்படும் விதம் அணுகப்படும் முறை என எல்லாவற்றிலும் தொடர் மாறுபாடுகளும் மறைந்திருக்கும் வன்மமும் கலந்திருக்கும்.
அதற்கு பதில் மரியாதை செய்யும் இயக்கங்களும் அவர்களுக்கு படியளக்கும் அரசுகளும் கூட உண்டு.
ஆனால் இந்தியாவில் இசுலாமியர்கள் நிலைப்பாடு என்பது என்னவோ இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல.
காந்தியன் கால வரலாற்றிற்கு முன்பான இசுலாமியர்கள் வேறு. காந்தியான் கால இசுலாமியர்கள் வேறு.
நவகாளி, பிரிவினை இதையெல்லாம் கடந்து பின் எழுபது வருடங்களுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு இன்று வரை ஆளாகி வருகின்றனர் என்பதற்கு நூறு வாதங்களும் நூறு சம்பவங்களும் உண்டு. பேசலாம்.
ஆனால் அடிப்படைக் கேள்வி இதுதான். ஏன் அவர்களை அந்நியராக்கினோம்? ஏன் அவர்களை கொடூர்ர்களாக மட்டும் சித்தரித்தோம்?
எல்லா மதங்களும் தங்களுக்கான வன்முறைகள் தங்களுக்கான கடுமைகள், தங்களுக்கான ஆள்பிடிப்புகளை தொடர்ந்து செய்த போதும் இவர்கள் மீது மட்டும் தொடர் வன்ம முத்திரை ஏன் வந்தது?
ஒரு குற்றச்செயலில் கட்டாயம் ஒரு இசுலாமியர் கூட்டாளியாக இருப்பார் என்பது இங்கு உறுதியான நம்பிக்கை.
ஆனால் இயல்பு என்னவென்றால் அதே குற்றச்செயலில் இந்துக்களும் உண்டு. ஆனால் இவர்களை நோக்கி வெளிச்சம் குவியாது.
கால காலமாக வட இந்திய மனப்பான்மை தென்னிந்திய மனப்பான்மை போல நட்புடன் இல்லை என்பது யோசித்தால் தெரியும்.
ஏன்? என்ன காரணம்?
என்வரையில் நான் உணரும் காரணம் ஒன்று உண்டு.
தென்னிந்திய இந்துக்கள் தொழிலில் இசுலாமியர்களை போட்டியாக கருதுவதில்லை. பெரும்பான்மையான இசுலாமியர்கள் அவரவரே தொழில் நடத்துபவர். அரசிடமோ தனியாரிடமோ வேலை கேட்டு நிற்பதில்லை. காரணமும் இதே இன்செக்யூர் உணர்வாக இருக்கலாம். தென்னிந்திய மக்களுக்கு தொழிலை விட கல்வி அயல்நாட்டு வேலை விவசாயம் என்பதில் ஆர்வம். நல்ல விரிந்த சமூக கட்டமைப்பு. அதனால் இவர்களால் எல்லாருடனும் கலந்து பழக முடிகிறது. மேலும் தென்னியந்தர்களுக்கு முசிலீம்களை விட சாதிப்பிரச்சனை தான் குறி.
ஆனால் வட இந்தியர்கள் பெரும்பாலும் தொழில் புரிகிறார்கள். இவர்கள் இசுலாமியர்களை கடும் தொழில் போட்டியாக கருதுகிறார்கள்.
சௌகார்பேட்டை பகுதியில் இருக்கும் வட இந்தியர்களிடம் அதிகம் பழகும் வாய்ப்பில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். தொழில் வன்மம், மத வன்மமாகி கடைசியில் நாடே உன்னுடையது அல்ல நீ அனுபவிப்பவை உனது உரிமை அல்ல உனக்கு எங்களால் வழங்கப்பட்டது என்ற உணர்வு தலை தூக்கி..
கங்கா சந்திரமுகியாக தன்னை நம்பிக்கை கொண்டது போல இவர்கள் இதை நம்பி நம்பி நம்பி அவர்கள் இந்நாட்டு குடிமக்களே இல்லை என உறுதியாக நம்பி..
தொழில் செய்யும் பெரிய பெரிய கைகள் தெளிவு. கரெக்டாக வேலை வெட்டியற்ற இந்த சங்பரிவார் கூட்டத்தை கூர் சீவி சீவி சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். முசுலீம்கள் அனைவரும் தொழிலை விட்டு விட்டு அவர்கள் கடைகளில் சம்பளம் இல்லாமல் மூட்டை தூக்க வருகிறோம் என்று சொன்னால் அப்போது பார்க்க வேண்டும் இவர்கள் தேசபக்தியை.


வாஹா அகதிகள் முகாமுக்-கு மகாத்மா வருகிறார்....

வாஹா அகதிகள் முகாமுக்-கு மகாத்மா வருகிறார்....
அங்கிருக்கும் ஆர்எஸ்எஸ் சங்கிகள் இவரை சூழ்ந்து கொள்கிறார்கள்... தங்கள் கூட்டத்திற்கு வரச்சொல்லி அழைக்கிறார்கள்...
வரும் வழியில் ஆர்எஸ்எஸ்காரர்களின் துணிவு, கட்டுப்பாடு குறித்து சிலர் மகாத்மாவின் காதில் ஓதுகிறார்கள்...
அவர்களைக் கூர்ந்து பார்த்த மகாத்மா "ஹிட்லரின் நாஜிப்படையினரும் அப்படித்தான் இருப்பார்கள்" என்று சற்று கோபமாகவே சொல்கிறார்...
பேச்சை முடித்துக் கொள்கிறார்கள்...
அரங்கிற்கு வரும் தருவாயில் அவரை கூல் படுத்த வேண்டும் என்று நினைத்து "இந்துயிசம் பிறப்பித்த மாமனிதர்" என்று முழங்குகிறார்கள்...
"உண்மைதான்... ஆனால் நான் பின்பற்றும் இந்துயிசம் பிற மதவெறுப்பையோ சசிப்புத் தன்மை அற்றதோ அல்ல" என்கிறார்...
சங்கிகளுக்கு கோபம் வந்து விடுகிறது... "தீயவர்களைக் கொல்ல இந்துயிசம் அனுமதிக்கிறதா இல்லையா? கீதையில் பகவான் கிருஷ்ணர் கவுரவர்களை கொல்ல வில்லையா?" என்று கேட்கிறார்கள்...
சரியான இடத்திற்கு வந்துவிட்டார்கள் என்று நினைத்த மகாத்மா "தீயவர் யார் என்பதில் முதலில் தெளிவு இருக்க வேண்டும். நீதிபதியாக தன்னை நினைத்துக் கொள்பவரும் தீயவராக இல்லாமல் இருக்க வேண்டும். பாவி ஒருவனுக்கு இன்னொரு பாவியை தண்டிக்கும் உரிமை கிடையாது.
தீயவரை தண்டிக்கும் உரிமையை கீதை அங்கீகரித்திருப்பது உண்மை. ஆனால் அது சட்டபூர்வமாக அமைந்த ஓர் அரசுக்கே உண்டு.
நீங்களே நீதிபதியாகவும் தண்டனை நிறைவேற்றுபவர்களாகவும் ஆனால் சர்தாருக்கும் பண்டித நேருவும் அதிகாரம் அற்றவர்களாக ஆகிப்போவார்கள்" என்றார்...
சங்கிகள் தலையை தொங்கப்போட்டுக் கொண்டார்கள்...
ஒரே மாதத்தில் அஹிம்சா மூர்த்தி படுகொலை செய்யப்பட்டார்....


ஐக்கிய அமீரகத்து அரபியின் அறிவுரை இந்துத்வவாதிகளுக்கு!

ஐக்கிய அமீரகத்து அரபியின் அறிவுரை இந்துத்வவாதிகளுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்!
இந்துத்வாவாதிகளுக்கு எனது செய்தி!
இந்தியாவில் பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கிறீர்கள். 70 சதவீதம் இந்துக்களே! காவல் துறையிலும் பெரும்பாலும் நீங்களே! இப்படி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் முஸலிம்களை இப்படியா கொடுமைபடுத்துவீர்கள்? இத்தனை முஸ்லிம் நாடுகளில் லட்சக் கணக்கான இந்துக்கள் பல வருடங்களாக குடும்பத்தோடு இருந்து வருகிறீர்களே! என்றாவது நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ தாக்கப்பட்டுள்ளீர்களா? ஏன் இந்த மிருகத்தனம் உங்களிடம். இந்துத்வ வெறியர்களே! இனியாவது திருந்துங்கள்.


உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார்!


இந்துத்வா மிருகங்களாக மாற்றியுள்ளதையும் நம் கண் முன்னே காண்கிறோம்!

'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களை தாக்குகிறான்: முஸ்லிம் வீடுகளை சூறையாடுகிறான்: வழி பாட்டு தளங்களை தாக்கி அதனை வீடியோ எடுத்து சந்தோஷமாக பகிர்கிறான்.
ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடத்தில் சென்று மாட்டிக் கொள்கிறான். அங்கு இஸ்லாமிய இளைஞர்கள் அவனை அடித்துக் கொல்லவில்லை. அந்த வீடியோவில் உள்ளது அவன்தானா என்று கேட்கின்றனர். அதற்கு 'ஆம்' என்று ஒத்துக் கொள்கிறான். பிறகு அவனிடம் நாமெல்லாம் சகோதரர்கள். ராமனின் பெயரால் இப்படி மக்களை கொல்வதையும், வீடுகளை இடிப்பதையும் கடவுள் ஒருக்காலும் மன்னிக்க மாட்டார் என்று பொறுமையாக அந்த இளைஞருக்கு புத்தி சொல்லி உயிரோடு அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இஸ்லாமிய இளைஞர்களின் பரந்த மனப்பான்மை ஒரு புறம்: மறுபுறம் ஜாதி வெறி மத வெறி உடலுக்குள் ஏறி சொந்த மக்களையே கருவறுக்க வட மாநிலங்களிலிருந்து அடியாட்களை அழைத்து வந்து கொலை செய்யும் மோடி, மற்றும் அமித்ஷாவின் குரூரத்தன்மையையும் பார்க்கிறோம்.
இஸ்லாம் ஒரு மனிதனை பக்குவப்படுத்தி யுள்ளதையும், இந்துத்வா இரு மனிதர்களையும் இவர்களை பின்பற்றுபவர்களையும் மிருகங்களாக மாற்றியுள்ளதையும் நம் கண் முன்னே காண்கிறோம்.
தற்போது ஆட்சி அதிகாரம் இருப்பதால் இந்து இளைஞர்களை பலிகடா ஆக்கும் இந்த கொடியவர்கள் இன்று தப்பி விடலாம்: ஆனால் இறை தண்டனை என்று ஒன்று உண்டு. அதனை இந்த நாசகாரர்கள் அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த வீடியோவில் வரும் இவனைப் போன்ற வெறியூட்டப்பட்ட அப்பாவி இளைஞர்கள் இனியாவது இந்த நாசகாரர்களின் சூழ்ச்சியை புரிந்து செயல்படுவார்களாக!


Tuesday, February 25, 2020

முன்னோட்டமாக அதனையும் பார்த்து விடுங்கள்.



குடியுரிமை நிரூபிக்க முடியாத இந்துக்களும் இஸ்லாமியர்களும் அகதி முகாம்களில் அடைக்கப்படுவர்.
அதன் பிறகு இந்துக்கள் யார் யார் என்று அடையாளப்படுத்தி அவர்களை பாகிஸ்தான் வந்தேறிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர்.
அதன் பிறகு முஸ்லிம்களை இந்துக்களாக மாறுங்கள் என்று அமித்ஷாவின் தேச விரோத படை மிரட்டும்.
இந்து மதத்துக்கு அப்படி மாறினால் மாட்டு மூத்திரம் எப்படி குடிக்க வேண்டும், மாட்டு சாணத்தில் எப்படி குளிக்க வேண்டும் என்ற பயிற்சியை வேறு எடுத்து தொலைக்க வேண்டியிருக்கும். முன்னோட்டமாக அதனையும் பார்த்து விடுங்கள். 


Monday, February 24, 2020

நான் செய்த குற்றம்தான் என்ன?

நான் செய்த குற்றம்தான் என்ன?
ஏக இறைவனை மட்டுமே வணங்குவது என் குற்றமா?
மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை என்று அனைவரையும் சகோதரர்களாக பாவித்தது குற்றமா?
பாகிஸ்தான் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த போது 'நான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன்' என்று மண் வாசனை பேசியது என் குற்றமா?
சூத்திரன் என்று கோவிலில் ஒதுக்கி வைத்த போது பள்ளி வாசலில் முதல் வரிசையில் சென்று அமர்ந்து இறைவனை வழிபட்டது குற்றமா?
கொத்து கொத்தாக கொல்லப்பட்டும், அநியாயமாக பாபரி பள்ளியை பிடுங்கிக் கொண்டும், தலாக் சட்டத்தில் கை வைத்தும் வன்முறையில் இறங்காமல் அமைதி காத்தது என் குற்றமா?
எந்த குற்றத்திற்காக எங்களை வதைக்கிறீர்கள் ஆர்எஸ்எஸ் தேச விரோதிகளே!
இப்படி எல்லாம் துன்புறுத்தினால் பயந்து போய் இந்து மதம் திரும்பி விடுவேன் என்று மட்டும் கனவிலும் நினைக்காதே! உடலை துண்டு துண்டாக வெட்டினாலும் எங்களின் முழக்கம் அல்லாஹூ அக்பர் என்று தான் இருக்கும். உனது உளுத்துப் போன வர்ணாசிரமத்தின் பக்கம் எனது பார்வை சிறிது கூட திரும்பாது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.


இந்தியாவில் பிறந்த ஒரு இந்துவின் நியாயமான கேள்வி!

இந்தியாவில் பிறந்த ஒரு இந்துவின் நியாயமான கேள்வி!
சகோதரர்களே சின்ன சந்தேகம்....
CAA நான் ஆதரிக்கிறேன். பழைய NPR க்கும் புதிய NPR க்கும் கேள்விகள் 6 அதிகம். அதில் 13 வது கேள்வியில் பெற்றோர் பிறப்புச் சான்று, இடம் கேட்கப்படுகிறது. ஆவணம் என்னிடம் மட்டுமின்றி 75%பேரிடம் இருக்க வாய்ப்பில்லை.இப்ப CAA. மூலம் முஸ்லிம்களை ஒழிச்சு கெட்டியாச்சு.அடுத்து இந்து உட்பட 6 மதங்களளுக்கு 6 வருட அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டால் இந்த 75% மக்களும் வந்தேறிய குடிகள் என்றுதானே அர்த்தம்.
பாகிஸ்தானில் பிறந்த எந்த மதத்தவனும் பாகிஸ்தானியே. இதுல ஏதாவது மறுப்பு இருக்கா?

இல்லைனா இம்ரான் பிள்ளைகளுக்கு நான் தான் அப்பன்னு மோடி ஏன் சொல்றாரு? அவன் நாட்டு பிரஜைக்கு பாகிஸ்தானிக்கு நீ ஏன் CAA சட்டம் மூலம்
குடியுரிமை கொடுக்கிறாய்?
நாளை அரசியலுக்காக ஆவணம் காட்டிய இந்து, ஆவணம் காட்டாத இந்துன்னு சொல்லி பிரித்து அரசியல் செய்யும் இந்த பாசிச பாஜக.பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துவை பிரதமரா ஏற்றுக் கொள்வீர்களா?
அமித்ஷா வரலாற்றை மாற்றி அமைக்கும் நேரம்ன்னு பேசினார். டெல்லியில் ஆரியக் கூட்டத்தை பூர்வீகக் குடியாகவும், இந்தியர்களை வந்தேறிகளாகவும் மாற்றும் சட்டமே CAA.
நன்றாக சிந்திக்கவும்.தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.அரசியலுக்காக
பாசிசம் எதுவும் செய்யும் .


Sunday, February 23, 2020

மற்ற மதத்து பெண்களோடு ஒப்பிடும் போது படிப்பு அந்த அளவு இல்லை

இஸ்லாமிய பெண்கள் மற்ற மதத்து பெண்களோடு ஒப்பிடும் போது படிப்பு அந்த அளவு இல்லைதான். ஆனால் மற்ற மத பெண்களை விட துணிச்சல் மிக்கவர்கள். தைரியமாக களத்தில் நின்று போராடும் குணமுடையவர்கள். உலக மற்றும் சங்கிகளின் அரசியலையும் தெரிந்து வைத்திருப்பவர்கள். முழு ராணுவத்தையும், முழு காவல் துறையையும் இறக்கினாலும் கொஞ்சமும் சஞ்சலப்பட மாட்டார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?
ஏனெனில் அவர்கள் தங்கள் நெஞ்சில் சுமந்திருப்பது 'இஸ்லாம்' எனும் ஏக இறை மார்க்கம். சிறு வயதில் இருந்து சஹாபிய பெண்களின் வரலாற்றை படித்து வந்துள்ளார்கள். உலக பல்கலைக் கழகங்களில் கிடைக்காத தெளிவு ஏக இறைவனின் வசனங்களில் அந்த பெண்களுக்கு கிடைத்து விடுகிறது.
------------------------------------------------
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் ஒரு பல்கலைக் கழகத்தின் மாணவியை பேட்டி கண்டார்கள், அந்த மாணவி நவீன காலத்தினுடைய மாணவியாக இருந்தாலும், இறையச்சமுள்ளவளாக, தன் உடலை மறைத்து பர்தாவோடு காணப்பட்டாள். நேர்காணலில் ஈடுபட்டவர் கேட்டார் ; "உஷ்னமான காலத்தில் இந்த முக்காடையும், இந்த முழு அங்கியையும் எப்படியம்மா அணிந்திருக் கிறீர்கள்? அதன் சூட்டை எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகிறது?" என்று கேட்ட பொழுது, அந்த சகோதரி சொன்னாள் ";قل نار جهنماشد حرا நரகத்தினுடைய வெப்பம் இதை விட சூடு என்று அல்லாஹ் சொல்கிறான் [9; 81]"எனக் குறிப்பிட்டாள்.
பல்கலைக் கழகத்தில் படித்தாலும் ஈமானின் உணர்வையும் இறைவனுடைய பயத்தையும் அறிவையும் அவர் பெற்றிருந்த காரணத்தால்,இப்படி ஒரு தெளிவை அவளால் கொடுக்க முடிந்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே!



Saturday, February 22, 2020

சுப வீர பாண்டியன் அவர்களின் பேச்சின் சுருக்கம்....

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய ஆண்டு விழா நூஃபா அரங்கில் 20-02-2020 அன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆளூர் ஷாநவாஸூம், சுப வீர பாண்டியனும், இசை அமைப்பாளர் ஜேம்ஸூம் வந்திருந்தனர். மும் மதங்களின சங்கமம் என்று கூட சொல்லலாம்.
அதில் சுப வீர பாண்டியன் அவர்களின் பேச்சின் சுருக்கம்....
'திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் காந்திஜியிடம் ப்ளாங் செக்கை கொடுத்து எவ்வளவு பணம் தேவையோ அதனை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். தேசப் பற்றுக்கு இதை விட ஒரு உதாரணம் தேவையா? இன்று காலையில் ரியாத்தில் உள்ள அருங்காட்சயகத்துக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். கிமு 4500க்கு முன் உள்ள அராபிய எழுத்துக்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அந்த அளவு தொன்மையான மொழியாக அரபு உள்ளது. அதே போலவே நமது தமிழ் மொழிக்கும் புராதன வரலாறு உண்டு. இப்படி உலகில் உள்ள தொன்மையான மொழிகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம். என் மொழி மட்டுமே சிறந்தது என்ற குறுகிய நோக்கில் இல்லாமல் அனைத்து மொழிகளின் சிறப்புகளையும் பேசுவோம்.
ஹிட்லர் சுத்த சைவம்: பெரியார் சுத்த அசைவம். சைவம் மட்டுமே சாப்பிட்ட ஹிட்லரால் உலக மக்கள் அனுபவித்த துன்பங்கள் எத்தனை? அசைவமும் சாப்பிட்ட பெரியாரால் இந்த சமூகம் அடைந்த நன்மைகள் எத்தனை எத்தனை? எனவே உணவு ஒரு மனிதனின் செயல்களை தீர்மானிப்பதில்லை.
சிறுபாணாற்றுப் படையில் வரும் ஊரின் பெயர் 'போர்'. அந்த பெயர் இன்றும் பாகிஸ்தானில் வழக்கில் உள்ளது. கீழடியும் சிற்து சமவெளி நாகரிகமும் ஒத்த கலாசாரத்தையுடையவையாக இருந்திருக்க வேண்டும். சாதி வேறுபாடு அற்ற தமிழ் சமூகம் என்று சாதியின் கோரப் பிடியில் வீழ்ந்தது என்பதனை Tony Joseph எழுதிய "Early India" விரிவாக விளக்குகிறது.
ஆரிய, திராவிட போர் நடந்த சம்பவத்தை ரிக் வேதம் பாடலாக சொல்கிறது. வட மாநில பூசாரிகளின் பல டிஎன்ஏக்கள் ஈரானோடு ஒத்துப் போவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.(நம் ஊர் பார்பனர்களின் டிஎன்ஏயும் அதே தான்) இதை எல்லாம் பற்றி நிறைய விவாதிக்க வேண்டும். ஆனால் அதிகம் அரசியல் பேச வேண்டாம் என்று கடிவாளம் போடப்பட்டுள்ளதால் கோடிட்டுக் காட்டுகிறேன்.
இவ்வாறு தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். இதற்கு முன்னால் ஆளூர் ஷாநவாஸின் அருமையாக உரையும், பிறகு ஜேட்ஸ் வசந்தின் வார்த்தை விளையாட்டும் நடைபெற்றது.
சிலர் பேசி முடித்தவுடன் இன்னும் சிறிது நேரம் பேசியிருக்க மாட்டாரா? என்று எண்ணத் தோன்றும். அத்தகைய பேச்சாற்றல் மிக்கவர் சுப வீர பாண்டியன். உலக மூல மொழிகள் அதை;தையும் ஒரே தரர்தில் வைத்து பார்க்க வேண்டும்: எதுவும் தேவ மொழி அல்ல:. அனைத்தும் மனிதர்கள் புரிந்து கொள்ள இறைவனால் படைக்கப்பட்டவைகளே என்று குர்ஆன் கூறுகிறது. அதைத்தான் சுப வீர பாண்டியனும் பிரதிபலிக்கிறார்.
------------------------
முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.
'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4




Thursday, February 20, 2020

உபி பாஜக எம்எல்ஏ கற்பழிப்பு வழக்கில் கைது!

உபி பாஜக எம்எல்ஏ கற்பழிப்பு வழக்கில் கைது!
உத்தர பிரதேசத்தின் பதோகி தொகுதி பிஜேபி எம்எல்ஏ ரவீந்தநாத் திரிபாதி. இவர் 2017 ஆம் ஆண்டு வாரணாசியை சேர்ந்த ஒரு விதவைப் பெண்ணை சந்தித்துள்ளார். அதன் பிறகு அவரை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பல முறை தவறான உறவு வைத்துக் கொண்டுள்ளார். இவர் மட்டுமல்லாது இவரது ஐந்து மகன்களான சச்சின், சந்தர்பூஷன், தீபக், பிரகாஷ், நிதேஷ் அதே பெண்ணை பலமுறை சீரழித்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது இவனது மருமகன் சந்தீப்பும் அந்த பெண்ணோடு ஒரு விடுதியில் வைத்து பலமுறை கற்பழித்துள்ளார். எல்லோருமே அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லியே பல முறை வன்புணர்வு செய்துள்ளனர். தற்போது அந்த பெண்ணின் புகாரையடுத்து எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களிலேயே யோகியால் விடுவிக்கப்படுவார். 
உலகில் எந்த நாட்டிலாவது இப்படி ஒரு கொடுமையை கேள்விப்பட்டிருப்போமா? அயோக்கியர்கள் அனைவரும் புகலிடமாகக் கொள்வது பிஜேபியைத்தான் என்பதை நினைவில் இருத்துங்கள். பெண்ணியம் பேசுபவர்கள் தற்போது எங்கு சென்று ஒளிந்து கொண்டார்கள்.?
தகவல் உதவி
என்டிடிவி
20-02-2020



Wednesday, February 19, 2020

நார்வேயில் அதிகரித்து வரும் முஸ்லிம்கள!

நார்வேயில் அதிகரித்து வரும் முஸ்லிம்கள!
முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது நார்வேயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓஸ்லோ பல்கலைக் கழக ஆய்வின்படி சில ஆண்டுகளிலேயே 3000க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக கூறுகிறது. மன அமைதி இன்றி தள்ளாடும் இள வயதினருக்கு சிறந்த வடி காலாக இஸ்லாம் உள்ளது. அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் குர்ஆன் ஓதும் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளது அந்த மக்களின் ஆர்வத்தை விளக்கும்.
The recent and unfortunate episode happened in Norway paved way for Islam to enter into the heart of Norwegians who were unaware of Islam previously. The wandering souls are finally getting solutions to their problems. Yes, indeed Islam is rapidly flourishing in Norway with huge number of Christians reverting to Islam.
In 1990, it was 500 while it went to 3000 in recent years. Excluding expatriate population, the native population is projected to increase rapidly in Norway in upcoming years.
Monica Salmouk, a revert told, she chose Islam 5 years ago after researching and reading number of books about the religion.
mvslimfeed
01-01-2020


இவர்களையாடா இத்தனை நாள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்

இசுலாமியர்கள் எத்தனை ஒழுக்கங்களை கடைப்பிடிக்கிறார்கள், இந்த நாட்டின் மீது எவ்வளவு பற்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு படமே சாட்சி....
20-30 பேர் சேர்ந்தாலே குடித்து கும்மாளமிட்டு பிரியாணி அண்டாவை திருடுபவர்கள் மத்தியில்..
ஏறக்குறைய 3 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணியில் ஒரு சிறு அசம்பாவிதத்தையாவது காவல் துறையால சுட்டிக்காட்ட முடியுமா...?
துப்புரவு தொழிலாளிகளுக்கு கூட இடையூறாக இருந்து விடக்கூடாதென்று நம்ம பாய்மார்கள் செயல்பட்ட விதம் அருமையோ அருமை..
இவர்களையாடா இத்தனை நாள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று வாய்கூசாமல் சொல்லிட்டு வந்தீங்க.....


அதாகப்பட்டது டியர் சங்கிஸ்...

அதாகப்பட்டது டியர் சங்கிஸ்... நீங்க என்ன சொன்னலும் நல்லா முட்டு குடுப்பிங்க. எனக்கு தெரியும். நான் ஊதற சங்கை ஊதுறேன்.
மனிதனோட அடிப்படை உணவு ஊட்ட வகை நாலு. Carbohydrate எனும் சர்க்கரை பொருள், lipids எனும் கொழுப்புச்சத்து, proteins எனப்படும் புரதம், vitamins& minerals எனப்படும் விட்டமின்களும் தாது உப்புக்களும். ஆச்சா?
சரி. இது நாலும் ஒவ்வொரு விதங்கல்ல நமக்கு அவசியம். தேவையை பொறுத்து அளவு மாறும். உதாரணமா ஒரு நீச்சல் வீரருக்கு உடனடி ஆற்றலுக்கு அதிக சர்க்கரை தேவை ஆனால் ஒரு வளரும் குழந்தைக்கு அதிக புரதம் தேவை. இப்படியாக மாறும்.
அடிப்படையில் நம் ஜீரண மண்டலம் ஒரு என்சைமை சர்க்கரைக்கும், ஒரு என்சைமை கொழுப்பிற்கும் வைத்து, அவற்றை சீரணித்துவிடும். ஆனால் புரதங்களை முழுமையாக உட்கிரகிக்க ஐந்து என்சைம்கள் உள்ளன.
இது எதனைக் காட்டுகிறது என்றால், பரிணாம வளர்ச்சியில் மனிதன் சமைக்காத இறைச்சி உண்ட போது கடினமான ஜீரணப்பணிகளுக்காக இவை தோன்றியிருக்கலாம்.
ஆக, மனுசன் அதிகம் உண்டது இறைச்சிதான்.
நீங்கள் உண்ணும் பருப்பிற்காக இவ்வளவு என்சைம்கள் தேவைப் படாது. மேலும் பருப்பு விளைவித்து உண்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இறைச்சி உண்ணலும் அதற்குரிய என்சைம்களும் உடலில் வந்தாச்சு.
இந்த அறிவியலை ஏத்துக்கோங்க.
நீங்க என்னடான்னா இப்ப வந்து வெங்காயம், பூண்டு இல்லாத சுத்தமான சைவ சாம்பார்ங்கறிங்க. திக்குனு இருக்கு. ஏற்கனவே நோய்தடுப்பாற்றல் குறைந்து டெங்கு கொரோனானு செத்துக்கிட்டு இருக்கும்போது நீங்க சொல்ற புல்லையும் கோமியத்மையும் தின்னுட்டு நீங்க கும்புடற கோமாதா கூட வாழாது.
மேலும் எல்லாரும் சைவமா மாறினா அத்தனை பேருக்கு விளைவித்தல் என்பது சாத்தியமில்லை. அத்துனை பேர் ஆற்றல் தேவை ஊட்டச்சத்து தேவை பூர்த்தி ஆகாது. உணவுச்சங்கிலி உணவு வலை உடைபடும். அதையும் தாண்டி அதிக வேளாண்மை செய்ய தண்ணி இல்லை. அவ்வளவு அதிக வேளாண்மை செய்தால் மீத்தேன் அதிகமாகி குளோபல் வார்மிங் அதிகமாயிடும் ( மரம்தான் கார்பன் டை ஆக்சைடு எடுத்துக்கும். வயல் மீத்தேனை வெளிவிடும். அது கார்பன் டை ஆக்சைடை விட அதிக வெப்பம் தரும். மேலும் விவசாயமே நாம் கண்டறிந்த செயற்கை முறை. அதுனால விவாசயம் , ஆர்கானிக்கு வராதிங்கப்பா).
நீ சைவம் அசைவம் தின்னுட்டு இத பேசுனு எனக்கு சொல்லாதிங்க. எனக்கு சின்னதுல இருந்து பழகிருச்சு. சொல்றவள விடுங்க. விசயத்த கவனிங்க.
ஜீவகாருண்யம் அடிப்படையில் இதை சொல்பவர்களுக்கு பிராக்டிகாலிட்டி என்ற பதிலை தவிர வேறு சமதானம் இல்லை.
பாய்ங்க ரம்சானுக்கு அசைவ நோம்பு கஞ்சிதந்து மதத்தை திணிக்கறாங்கனு வராதிங்க. அவங்க எந்த சைவரையும் வற்புறுத்தல. அசைவம்னு தெரிஞ்சு தான் தேவை உள்ளவங்க வாங்கறாங்க.
எல்லாத்துக்கும் மேல அவரவர் உணவு அவரவர் உரிமை.
எனிமோர் முட்டு??

Tuesday, February 18, 2020

ஒரு கண்ணின் பார்வைத் திறனையே இழந்தவர் தான் மின்ஹாஜுத்தீன்..!

தில்லி போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் ஒரு கண்ணின் பார்வைத் திறனையே இழந்தவர் தான் மின்ஹாஜுத்தீன்..!
இன்று ஜே.என்.ஏ மாநாட்டில் மின்ஹாஜுத்தீன் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
பல்கலைக் கழக நூலகத்தில் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த போது தான் போலீஸ் கொடியவர்கள் இவரைத் தாக்கினார்கள்.
இவர் இந்த பரிசைப் பெற வந்த போது அன்சாரி ஆடிட்டோரியத்தில் இருந்தவர்கள் அனைவருமே எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டினார்கள்.


Monday, February 17, 2020

பார்பனர்களின் மற்றுமொரு சூழ்ச்சி!

பார்பனர்களின் மற்றுமொரு சூழ்ச்சி!

தற்போது வரலாற்று ஆய்வுகள் மூலமாகவும், டிஎன்ஏ முடிவுகள் மூலமாகவும் இந்தியாவில் உள்ள பார்பனர்கள் வந்தேறிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. அவர்களின் நிறம், முக ஜாடை, என்று அனைத்திலும் இந்தியர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே உள்ளனர்.

தற்போது குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி குடியுரிமையை நிரூபிக்க முடியாத இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்தவர்களும் நாடற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்கிறது சட்டம். அதன் பிறகு இந்துக்களை மட்டும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்  நாட்டிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் என்ற போர்வையில் குடியுரிமை வழங்கப்படுவார்கள். ஏனெனில் பலருக்கு தங்களின் தந்தையின் பிறப்பு சான்றிதழை தர முடியாது. 30 வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு நடைமுறையே நமது நாட்டில் இல்லை.

இதனால் மண்ணின் மைந்தர்களான இந்துக்கள் அநியாயமாக வெளி நாட்டிலிருந்து வந்த வந்தேறிகள் என்ற பெயருடன் இந்நாட்டில் வாழ வேண்டி வரும். தற்போது பார்பனர்கள் எவ்வாறு மற்றவர்களால் பார்க்கப்படுகின்றரோ அதே பார்வையில் மற்ற இந்துக்களும் பார்க்கப்படுவர். 'நான் வந்தேறி என்றால்: நீயும் வந்தேறிதான்' என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பார்பனர்கள் இனி சொல்ல முடியும்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அமித்ஷா குரங்கு பிடியாக பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.

அநியாயமாக மண்ணின் மைந்தர்களை வந்தேறிகள் என்ற அடைமொழியோடு இந்நாட்டில் உலவ விடப் போகிறது பாஜக அரசு. எனவேதான் சொல்கிறோம் இச்சட்டமானது முஸ்லிம்களை விட இந்துக்களுக்கே ஆபத்தானது.

ஆக்கம்
சுவனப்பிரியன்





அசாமில் பெரும்பான்மையாக குடியுரிமை இழந்தவர்கள் இந்துக்களே

அசாமில் பெரும்பான்மையாக குடியுரிமை இழந்தவர்கள் இந்துக்களே

அசாமில் நிகழ்த்தப்பட்ட NRCயில் 19.06 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள், அதாவது 19.06 லட்சம் பேர் சந்தேகத்திற்கு இடமானவர்கள் இவர்கள் அனைவரும் தங்களின் குடியுரிமையை இனி நிறுவ வேண்டும்.

இந்த 19,06,657 பேர் யார்???

வங்காளி இந்துக்கள் - 6.90 லட்சம்

இஸ்லாமியர்கள்- 4.86 லட்சம்
(பாங்கிளாதேஷ் / இந்தியா)

கூர்காக்கள் - 85,000
அசாமி இந்துக்கள்- 60,000
கோச் ராஜ்பன்சி- 58,000
கொரியா மரியா தேசி- 35,000
போடோ- 20,000
கர்பி- 9,000
ராஃபா-8,000
ஹஜோங்- 8,000
மிஷிங்-7,000
அஹோம்-3,000
காரோ-2500
மதக்- 1,500
திமிஷா- 1,100
சோனாவால் கராசாரி- 1,000
மாரன் - 900
பிஷ்னுபிரியா மணிப்பூர் - 200
நாகா - 125
ஹமார் - 75
குகி- 85
தாடோ - 50
பாயிட்டீ - 85

மேலே உள்ள பட்டியலில் 6,70,000 பேர் இந்துக்களும் அல்ல இஸ்லாமியர்களும் அல்ல மாறாக பல்வேறு பழங்குடி குழுக்களை சேர்ந்தவர்கள்.

மொத்தம் 19,06,657 பேரில் 4,30,000 யார் என்று இன்னும் தெரியவில்லை?? அவர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்த 4,30,000 பேரில் பெரும் பகுதியானவர்கள் வட, தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவை சார்ந்தவர்கள், இதில் பெரும் பகுதியானவர்கள் வட இந்தியாவை சேர்ந்த இந்துக்கள்.

1 கோடி பேர் பங்காளாதேஷில் இருந்து அசாமில் நுழைந்துவிட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்களாக திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். பின்னர் அவர்கள் அந்த எண்ணிக்கையை 60 லட்சம் என்றார்கள், அதன் பின்னர் 40 லட்சம் என்றார்கள். சமீபத்தில் அசாம் என்.ஆர்.சி முடிவுகள் வெளியான போது அந்த எண்ணிக்கை 19 லட்சமாக அறிவிகக்ப்பட்டது. ஆனால் இந்த 19.06 லட்சம் பேரில் பெரும் பகுதியாக குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்கள் இந்துக்களே.

இந்தியா முழுவதும் NRC,CAA வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட தொடங்கி விட்டார்கள் ஆனால் பெரும்பான்மையாக நீக்கப்பட்ட இந்துக்கள் (7 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் ) மற்றும் பழங்குடிகள் இன்னும் முழுமையாக போராட்ட களத்திற்கு வரவில்லை, ஊடகங்களும் தொடர்ச்சியாக  NRC,CAA இஸ்லாமியர்களுக்கு எதிரானது போலவே சித்தரித்து வருகிறது, ஆனால் உண்மையிலேயே அசாமில் NRC,CAA ஒட்டு மொத்தமாக அங்கு வாழும் இந்துக்களுக்கு எதிரானதாகவே இருந்துள்ளது என்பதை நமக்கு முடிவுகளும் புள்ளிவிரங்களும் காட்டுகிறது.

- முத்துகிருஷ்ணன்

வண்ணாரப்பேட்டை போராட்டகளத்தில் திருமணம்!!

வண்ணாரப்பேட்டை போராட்டகளத்தில் திருமணம்!!❤️❤️
இமாம்:
CAAவை
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:
NPRஐ
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:NRCயை
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:
மணப்பெண்ணை ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறேன்!!💞


இந்தியாவில் வரப்போகும் வர்ணாசிரம ஆட்சியில் இந்துக்களின் நிலை!


தலித் மாப்பிள்ளை குதிரையில் வந்ததால் தாக்குதல்!

தலித் மாப்பிள்ளை குதிரையில் வந்ததால் தாக்குதல்!
சென்ற ஞாயிற்றுக் கிழமை குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம், ஷரீஃதா கிராமத்தில் ஒரு திருமணம் நடந்தது. ராணுவ வீரரான ஆகாஷ் குமார் (வயது 22) தான் மாப்பிள்ளை. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். திருமணத்தன்று மாப்பிள்ளை குதிரையில் ஊர்வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தாக்கூர் சாதியினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் காவல் துறை அனுமதி கேட்கப்பட்டது. சம்பவ தினத்தன்று ஊர்வலத்தில் மாப்பிள்ளை வர தாக்கூர் சாதியினர் கற்களை கொண்டு ஊர்வலத்தை தாக்கியுள்ளனர். மாப்பிள்ளை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார். உறவினர்களில் ஐந்து பேர் தாக்குதலுக்கு உள்ளாயினர். இத்தகவலை மாப்பிள்ளையின் சகோதரர் விஜய் கோட்டியா பத்திரிக்கைகளுக்கு தந்துள்ளார்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-02-2020
தனது சொந்த செலவில் ஊர்வலம் போனால் மேல் சாதியினருக்கு ஏன் எரிச்சல் வருகிறது? உலகில் எந்த நாட்டிலாவது இந்த கொடுமை உண்டா? இது பற்றி மோடியோ அமித்ஷாவோ நம் ஊர் எச்.ராஜாவோ வாய் திறந்தது உண்டா?
இந்த அழகில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இந்துவாக இருந்தால் குடியுரிமை தருகிறேன். முஸ்லிமாக இருந்தால் தர மாட்டேன் என்று சட்டம் இயற்ற வெட்கமாகயில்லையா அமித்ஷா? உனது மதத்தில் குறைகள் இருப்பதால்தானே தலித்கள் மதம் மாறுகின்றனர். விடிவு தேடி ஓடுபவர்களையும் சட்டம் கொண்டு தடுப்பது எந்த வகை அரசியல்?
ட்ரம்ப் வருகைக்காக ஏழைகளின் குடிசையை மறைக்க சுவர் எழுப்பும் மோடியே... இந்த கல்லெறிதலை எதைக் கொண்டு மறைக்கப் போகிறீர்?


அந்த வாளுக்கா? இந்த வாலுக்கா? :-)


Sunday, February 16, 2020

மோடியும், அமித்ஷாவும் இந்நிகழ்வைக் கண்டு வெட்கித் தலைகுனியட்டும்.

சென்னை ஷாஹின்பாக் வண்ணாரப் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களுக்கு உணவு, தேநீர் கொடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்த தொப்புள் கொடி உறவுகளான இந்து மக்கள்...
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கத் துடிக்கும் மோடியும், அமித்ஷாவும் இந்நிகழ்வைக் கண்டு வெட்கித் தலைகுனியட்டும்.


இந்த தேச விரோதிகளிடமிருந்தும் எனது நாட்டை இறைவன் காப்பானாக!

இன்று (பிப். 16, 2020) சென்னை வண்ணாரப்பேட்டைப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுடன் பேசுவதற்காக மேடையிலிருந்து இறங்கியதும், அங்கே அமர்ந்திருந்த ஓர் இசுலாமியப் பெரியவர் கலங்கியக் கண்களுடன் என் கைகளைப் பற்றினார். “ஐயா, நீங்கள் கலங்காதீர்கள்; இந்த அடக்குமுறைச் சட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம்” என்று நான் தேறுதல் சொன்னேன். சுமார் 85 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவர் என்னைக் கட்டியணைத்தவாறே, தேம்பித் தேம்பி அழுதார். நானும் நிலைகுலைந்து போனேன்.
தள்ளாத வயதில் வாடும் பெரியோரை, ஏழை எளியோரை, சக்தியற்றோரை மனஉளைச்சலுக்கு, சங்கடத்துக்கு ஆளாக்குபவர்கள் நன்றாக வாழ மாட்டார்கள். அவர்கள் அருகி, கருகி, அழிந்து, ‘அய்யோ’வென்று போவார்கள்! போக வேண்டும்!
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!!
உதயகுமார்
--------------------------------------------
இந்துத்வாவாதிகளுக்கு இந்து மதத்தின் மீது பற்றோ இந்து மதத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமோ கொஞ்சமும் கிடையாது. இது போன்ற சட்டங்களின் மூலம் தங்களின் அதிகாரத்தை நிலையிருத்திக் கொள்ளவேண்டும்: வர்ணாசிரம கொள்கையை வீரியப்படுத்த வேண்டும்: முஸ்லிம்களை பயமுறுத்தி வைக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே காய்களை நகர்த்தி வருகின்றனர். இவர்கள் நினைக்கும் எந்த செயலும் நிறைவேறப் போவதில்லை.
இந்த குடியுரிமை திருத்த சட்ட குழப்படிகளால் நாடு மேலும் பொருளாதாரத்தில் சரிவை சந்திக்கும். நாடு முழுக்க கலவரங்கள் உண்டாகும். அழகிய இந்த நாடு சிதறுண்டு போகும்.
அது போன்ற நிலைகளிலிருந்தும் இந்த தேச விரோதிகளிடமிருந்தும் எனது நாட்டை இறைவன் காப்பானாக!


#ஏஆர்_ரஹ்மானின்_மகள்கதிஜா.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படத்தின் 10-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா கலந்து கொண்டு தனது தந்தையுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அப்போது மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார். இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது.
சமூக வலைதளங்களில், ‘ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டுள்ளார். வெளியில் ஒரு தோற்றமும் உள்ளே வேறு மாதிரியானத் தோற்றமும் கொண்டவராக உள்ளார்’ என்ற கருத்துகள் எழுந்து வந்தன.
இதற்கு அப்போது பதிலளித்த #கதிஜாரஹ்மான், தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘#நான்எந்த_உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனது தேர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் #என்பெற்றோர்கள்_பொறுப்பல்ல. விவரம் புரியாமல் தேவையில்லாத முடிவுகளுக்கு வரவேண்டாம்’ எனக் குறிப்பிட்டார்.
இதே சர்ச்சையை தற்போது தனது ட்விட்டர் பதிவின் மூலம் மீண்டும் எழுப்பியுள்ளார் பிரபல எழுத்தாளர் #தஸ்லிமாநஸ்ரின். இதுகுறித்த பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா பர்தா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், “எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளைப் பார்க்குப் போது எனக்கு #மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உள்ளது. பாரம்பரியமிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக #மூளைச்சலவை செய்யப்படுவது வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
#இந்தப்பதிவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்திருக்கும் #கதிஜா, ஒரு வருடமாக இந்த விவகாரம் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் ஒரு பெண் என்ன ஆடையை அணிய வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் போது #என்னுள்எரியும்_தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாகப் பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் #நான்_எடுத்த_முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன்.
நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி. என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்படி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு நான் ஏன் விளக்கமளிக்கிறேன் என்று நினைத்தால், தனக்காக ஒருவர் பேசியாக வேண்டியிருக்கிறது. அதனால் தான் இதைச் செய்கிறேன்.
#அன்புள்ள_தஸ்லிமா_நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு #நான்_மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் #எனக்கு_மூச்சுத்_திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக எனக்குப் #பெருமையாகவும் நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் #உறுதியாகவும் உணர்கிறேன்.
#உண்மையான_பெண்ணியம் #என்றால்_என்னவென்று_கூகுள்செய்து_பார்க்கவும். அது மற்ற பெண்களைத் தரக்குறைவாக பேசுவதும், #அவரது_தந்தைபெயரை_இணைத்துப் பேசுவதும் அல்ல. உங்களுடைய ஆய்வுக்காக நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாக நினைவில் இல்லை” இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார் #ஏஆர்_ரஹ்மானின்_மகள்கதிஜா.