Followers

Monday, May 31, 2021

உத்தர பிரதேசம், உன்னாவ், புக்ஸார்.

 உத்தர பிரதேசம், உன்னாவ், புக்ஸார்.


இன்றும் கூட புனித கங்கை நதியில் வயிறு உப்பிய கொரோனா பிணங்கள் மிதந்து வந்து கொண்டுள்ளன. அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகமானால் இந்த அழுகிய உடல்கள் ஊருக்குள் வரும். பல தொற்று வியாதிகளை உண்டாக்கும்.


ராம ராஜ்யம் நடத்துவதாக கூறிக் கொள்ளும் யோகி புனித கங்கையின் புனிதம் கெட சம்மதிக்கலாமா? உண்மையான பக்தி இருந்திருந்தால் இவ்வாறு கங்கையை அசிங்கப்படுத்துவார்களா?




முதல்வரும் கூட இருந்தவர்களும் பேச்சிழந்து நின்றனர்

 


டெல்லியில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் அனஸ் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

 

26 வயதே ஆன இளம் மருத்துவர் மரணம் அடைந்த சம்பவம் அந்த வட்டாரத்தில் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

 

கோவிட் சிகிச்சை அளிக்கும் பணியில் டாக்டர் இறந்தால் அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் உதவி வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்து இருக்கிறது.

 

அதன்படி, டாக்டர் அனசின் வீட்டுக்கு போய் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆறுதல் கூறி, ஒரு கோடி ரூபாய் செக் வழங்கினார்.

 

டாக்டரின் தந்தை முஜாஹித் இஸ்லாம் அதை வாங்க மறுத்து விட்டார். அவரும் ஒரு டாக்டர்.

 

நாட்டுக்காக சேவை செய்து மரணம் அடைந்து இருக்கிறான் என் மகன். கடமையை செய்த அவனுடைய உயிருக்கு இழப்பீடு வாங்க என்னால் முடியாது. இந்த பணத்தை நான் வாங்கமாட்டேன்என முதல்வரின் முகத்துக்கு நேராக கம்பீரமாக சொன்னார் அந்த தந்தை.

 

முதல்வரும் கூட இருந்தவர்களும் பேச்சிழந்து நின்றனர். அந்த பெரியவர் அதோடு நிற்கவில்லை.

 

எனக்கு இன்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அவர்களையும் நாட்டுக்கு மக்களுக்கு சேவை செய்யவே தயார் படுத்தி வருகிறேன். இதைவிட எனக்கு எந்த பெருமையும் தேவையில்லைஎன்று முஜாஹித் இஸ்லாம் சொன்னார்.

 

ஒரு மகத்தான இந்தியனை சந்தித்ததில் மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் கூறிவிட்டு திரும்பினார் முதல்வர்.





 

Saturday, May 29, 2021

இந்தியாவுக்காக அடுத்த கட்ட உதவிகளை சவுதி அரேபியா அனுப்பி வைத்துள்ளது.

 இந்தியாவுக்காக அடுத்த கட்ட உதவிகளை சவுதி அரேபியா அனுப்பி வைத்துள்ளது. திரவ ஆக்சிஜனை கொரோனா பாதித்த நமது நாட்டுக்கு இரண்டாவது தவணையாக அனுப்புகிறது சவுதி அரேபியா. இதனை யும் லேபிள் மாற்றி விநியோகிப்பார்களோ

🙂
தகவல் உதவி
சவுதி கெஜட்
29-05-2021
#PICTURES: The Kingdom of #SaudiArabia will be increasing its aid to #India by shipping another shipload of liquid oxygen, as the Asian country battles a second wave of #COVID19.




Friday, May 28, 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழகிய உரை!

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழகிய உரை!

 

'ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..... ஏக இறைவனான அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானவல்ல.... உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவன்.  நபிகள் நாயகம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானவரல்ல.... அகில உலக மக்களுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள்.'

 

'நமது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை காக்க வேண்டியது பெரும்பான்மை மக்களின் கடமையாகும். அவர்களின் அச்சத்தை போக்கி சமூகத்தில் இரண்டற கலக்க வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.'

 

'எனக்கு ஒரு விஷயம் கவலை அளிக்கிறது. சில இடங்களில் ஹிந்து பெண்களை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தப்படுவதாக கேள்விப்படுகிறேன். இது யார் கற்றுக் கொடுத்த இஸ்லாம்? குர்ஆனில் இறைவன் 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு: மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என்று கூறுகிறான். 

 

'மற்றொரு இடத்தில் 'நபியே! உனது வேலை மார்க்கத்தை சொல்வதுதான். அவர்களுக்கு நேர் வழி காட்டுவதும் காட்டாமல் இருப்பதும் எனது வேலை. அதற்காக நீர் சிரமப்படவோ கவலைப் படவோ வேண்டாம்' என்கிறான். இறைத் தூதருக்கே அந்த நிலை என்கிறபோது நாமெல்லாம் எங்கே?'

 

'அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நம் நாட்டில் வசிக்கும் ஹிந்து, கிருத்தவ, சீக்கிய, பவுத்த மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முஸ்லிம்களாகிய நமது கடமை. இதனை மறந்து விட வேண்டாம்'

 

என்ன ஒரு அழகிய பேச்சு! பல மதத்தவர்கள் வாழும் நாட்டில் தவறாக ஒரு சிலர் வழி நடத்தப்பட்டால் அந்த மக்களை தலைவன் கண்டிக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற நாடு என்று பெருமை பேசும் நமது நாட்டின் நிலை என்ன? பிரதமரும் உள்துறை மந்திரியும் திட்டமிட்டு கலவரங்களை தூண்டி விடுவதும், முஸ்லிம்களின் சொத்துக்களை சூரையாடுவதும், முஸ்லிம் இளைஞர்களை கும்பலாக கோழைத்தனமாக தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தாவது சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் நிலையை மாற்றிக் கொள்ளட்டும்.




 

 

Thursday, May 27, 2021

'பாகிஸ்தான் சதி செய்கிறது... எனக்கு ஓட்டு போடுங்க'

 


காவலரின் மனிதாபிமானம்!

 காவலரின் மனிதாபிமானம்!

திருச்சிக்கு அருகில் உள்ள குக் கிராமத்திலிருந்து தனது மனைவியை பிரசவ வலியோடு கொண்டு வருகிறார் ஒரு கிராமவாசி. மருத்துவ மனையில் இவரது மனைவிக்கு பலஹீனமாக உள்ளதால் உடன் ரத்தம் ஏற்ற வேண்டும் என்கிறது நிர்வாகம். லாக் டவுன் என்பதால் மனைவிக்காக ரத்தத்துக்கு அலைகிறார். இவர் அங்கும் இங்கும் அலைவதைப் பார்த்த காவலர் ஒரு 'என்ன பிரச்னை' என்கிறார். தனது பிரச்னையை காவலரிடம் சொல்லவே ''தனக்கும் அதே வகை ரத்தம் தான். நான் தருகிறேன்'' என முன் வருகிறார் காவலர். கர்ப்பிணி மனைவியும் காப்பாற்றப்படுகிறார்.
காவலரின் மகத்தான சேவையை கேள்விப்பட்ட போலீஸ் கமிஷனர் 25000 ரூபாய் அன்பளிப்பு அளிக்கிறார். கர்ப்பிணி மனைவியை கூட்டி வந்தவர் மிகவும் ஏழை என்பதால் அந்த 25000 ரூபாயையும் மருத்துவ மனைக்கு தந்து விடுகிறார் காவலர். அந்த காவலர் பெயர் சையத் அபு தாஹிர்.
A poor man from a village in Trichy district of Tamil Nadu brought his pregnant wife to Trichy for delivery. The hospital doctor told him that his wife was very weak and would need B+ blood immediately. The Blood bank was closed due to the lockdown.
The man started roaming around town looking for a donor.
A state police constable noticed him and stopped him and asked why he was out during a curfew? When that police constable heard his story, he immediately offered to donate his blood. Both mother and child were saved.
When the incident was reported to the police Commissioner, that constable was awarded Rs 25000. The Constable reimbursed the poor man's hospital bill with that amount. He handed over the remaining amount to the woman and her family.
The name of the constable is Syed Abu Tahir




Wednesday, May 26, 2021

பொய் செய்தி பரப்புபவர்களை கைது செய்து கும்ம வேண்டும்!

 


ஐயர் எதற்கு பொய் செய்தி பரப்ப வேண்டும்?

மருத்துவரின் ஆலோசனை....

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிறிய அறிகுறிகளுடன் வீட்டில் தனிமை படுத்தப்படுபவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..
& அவர்களுடன் வீட்டில் உடன் இருப்பவர்கள் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவைகள் என்னென்ன..
மருத்துவரின் ஆலோசனை....



Tuesday, May 25, 2021

லட்சத் தீவுகளைப் பற்றி சகோ ஆசிக் வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்.

 லட்சத் தீவுகளைப் பற்றி சகோ ஆசிக் வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்.

மற்றொரு காஷ்மீராக மாறி விடாமல் இருக்க அங்குள்ள அதிகாரியை மத்திய அரசு மாற்ற வேண்டும். அந்த மக்களின் வாழ்வாதாரங்களில் கை வைக்காமல் இருக்க வேண்டும்.



சாட்டையை சுழற்றும் தற்போதய நிதி அமைச்சர்.

 'எங்கள் வரிப் பணத்தை அநியாயமாக திருடிக் கொண்டு அதில் குறைந்த அளவுக்குக் கூட திருப்பி தராமல் ஏமாற்றுகிறார்கள். மேலும் ஹிந்தி திணிப்பு, நீட், பேரிடர் காலங்களில் நிதி ஒதுக்காமை என்ற கொடுமையை அரங்கேற்றும் மத்திய அரசை என்றாவது முந்தய நிதி அமைச்சர் கேள்வி கேட்டுள்ளாரா?'

-சாட்டையை சுழற்றும் தற்போதய நிதி அமைச்சர்.



லட்சத் தீவு மக்களையும் நிம்மதியாக விடாத மோடி அரசு!

லட்சத் தீவு மக்களையும் நிம்மதியாக விடாத மோடி அரசு!
90 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம்கள் மக்கள் தொகை. அமைதியான தீவு. சுற்றுலா துறை மூலம் நல்ல வருமானம். அந்த தீவின் எம்பி முஹம்மது ஃபைஸல்.
இவ்வாறு அமைதியாக சென்று கொண்டுள்ள ஒரு தீவின் மீது தற்போது புதிய சட்டங்கள். மாட்டுக் கறியை அந்த மக்கள் நேரிடையாக வாங்கவோ விற்கவோ கூடாது. இனி கார்பரேட்டுகள் என்ன சொல்கிறார்களோ அந்த விலை கொடுத்துதான் வாங்க விற்க முடியும். மேலும் சாலைகளை விரிவாக்குகிறோம் என்ற பெயரில் அந்த மக்களின் சொத்துக்களை எந்த கேள்வியும் கேட்காமல் பிடுங்குகிறது மத்திய அரசு. 'எங்களுக்கு எதற்கு ஐந்து வழிச் சாலை: எங்களுக்கு தேவையில்லை' என்கின்றனர் அந்த மக்கள். எம்பி ஃபைஸலும் 'எங்களை கலக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறது' என்கிறார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். 'அந்த மக்களின் கலாசாரத்திலும் மதத்திலும் மூக்கை நுழைத்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' என்று கடுமையாக விமரிசித்துள்ளார். அந்த மக்களை கருத்துக் கேட்ட பின்புதான் எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்கிறார்.
நியாய விலைக் கடைகள் 30க்கு மேல் பூட்டியாகி விட்டது. குழந்தைகளின் மதிய உணவில் மீன், கறி போன்றவை கூடாது. காய்கறிகள் மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்ற சட்டம்.
கேரள முதல்வர் பினராய் விஜயன் 'லட்சத் தீவு எங்களோடு பல தலைமுறையாக தொடர்புடைய தீவு. அந்த மக்களின் உரிமைகளில் கை வைப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது' என்கிறார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தீவின் நிம்மதியை கெடுப்பதே அமித்ஷா மோடிக்களின் திட்டம்.
நரேந்திர மோடியின் ஆட்சியில் ஹிந்துக்களும் நிம்மதியாக இல்லை: முஸ்லிம்களும், கிருத்தவர்களும், சீக்கியர்களும், தலித்களும் நிம்மதியாக இல்லை. நாட்டு மக்களை கொடுமைபடுத்தி அதில் சுகம் காணும் இப்படி ஒரு சைகோவை நமது வாழ்நாளில் நாம் பார்க்கப் போவதில்லை. இறைவன் இந்த கொடியவர்களை இழிவுபடுத்துவானாக!
ஆக்கம்
சுவனப்பிரியன்
Priyanka Gandhi Vadra
@priyankagandhi
4h

The people of Lakshadweep deeply understand and honour the rich natural and cultural heritage of the islands they inhabit. They have always protected and nurtured it. The BJP government and its administration have no business to destroy this heritage, to harass the people of Lakshadweep or to impose arbitrary restrictions and rules on them. Dialogue sustains democracy. Why can’t the people of Lakshadweep be consulted? Why can’t they be asked what they believe is good for them and for Lakshadweep? How can someone who knows nothing about their heritage be allowed to use his power to destroy it? I extend my full support to the people of Lakshadweep. I will always stand by you and fight for your right to protect your heritage. It is a national treasure that we all cherish. 





நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே...நீங்களே இப்படி பேசலாமா??!

 


பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே...நீங்களே இப்படி பேசலாமா??!

 

பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா.பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.

 

ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.

 

மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல

 

(டாக்டர் ஷர்மிளா தற்போதய விசிக எம்எல்ஏ வின் மனைவி. கணவர் பாலாஜி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள எல்லா பிராமணர்களும் டாக்டர் ஷர்மிளா போன்று பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் இந்தியா முழுவதும் அமைதிப் பூங்காவாக மாறி விடும்.)

உபி அலஹாபாத் (பிரயாக்ராஜ்)

 

உபி அலஹாபாத் (பிரயாக்ராஜ்)

 

கொரோனாவால் ஆயிரக்கணக்கான உயிர்கள் கங்கை கரையில் புதைக்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டி விடக் கூடாது என்பதற்காக வேக வேகமாக அடையாளத்துக்கு வைக்கப்படும் குச்சிகளையும் பிணத்தின் மேல் போர்த்திய காவி துண்டுகளையும் நீக்குகிறார்கள்.

 

இறந்து அவர்களுக்கு புதைக்க சரியான இடத்தை கொடுக்காத அரசு இன்று அடையாளங்களையும் அழிக்கிறது. எத்தனை காலத்துக்கு இப்படி இறப்புகளை மறைத்து உலகை ஏமாற்ற முடியும்?




Monday, May 24, 2021

பத்மா சேஷாத்திரியில் படித்த மாணவன் ஏ ஆர் ரஹ்மான்!

 பத்மா சேஷாத்திரியில் படித்த மாணவன் ஏ ஆர் ரஹ்மான்!


தந்தை சேகர் திடீரென்று இறந்து விடவே ஏ ஆர் ரஹ்மான் படித்து வந்த பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை. இவரது தாயாரிடம்  நிர்வாகம் 'கோடம்பாக்கம் தெருக்களில் சென்று பாடினால் பணம் கிடைக்கும். உங்கள் மகனை அழைத்துச் செல்லலாம்' என்று அவமானப்படுத்தி அனுப்பியது.


அங்கிருந்து ரோஷத்தோடு வெளியேறிய ஏ ஆர் ரஹ்மான் இன்று உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்.


பத்மா சேஷாத்திரியிலேயே இவர் படித்திருந்தால் இவரது திறமை உலகுக்கு தெரியாமல் போயிருக்கும்.




முறுக்கு மீசை வைத்ததால் தாக்கப்பட்ட தலித் இளைஞன்!

 முறுக்கு மீசை வைத்ததால் தாக்கப்பட்ட தலித் இளைஞன்!


குஜராத் அஹமதாபாத்துக்கு அருகில் கரக்தல் கிராமம். இங்கு குடும்பத்துடன் வசித்து வரும் சுரேஷ் வகேலா 22 வயது தலித் இளைஞன். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இளைஞர் அல்லவா? எனவே அழகுக்காக முறுக்கு மீசை வைத்துள்ளார். (விருமாண்டி போல) இது மேல் சாதியினருக்கு கோபத்தை வரவழைத்தது. தாமா பாய் தாக்கூர் என்பவன் தலைமையில் ஒரு கும்பல் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை எழுப்பி 'முறுக்கு மீசையெல்லாம் நீ வைக்கலாமா?' என்று கேட்டு அடித்துள்ளனர். தடுக்க வந்த அவரது சகோதரியையும் தாக்கியுள்ளனர். சுரேஷூம் அவரது சகோதரியும் தற்போது மருத்துவ மனையில். 


மீசையை தனக்கு பிடித்த அளவில் வைப்பதற்குக் கூட இந்திய நாட்டில் அனுமதியில்லை. இப்படி ஒரு நிலை உலகில் எந்த நாட்டிலாவது இந்த அறிவியல் உலகில் கேள்விப்பட்டுள்ளோமா? 


தகவல் உதவி

அஹமதாபாத் மிர்ரர்

25-05-2021




காயத்ரி ரகுராம் ஏன் பொங்குது விளக்கம் இதோ

 பதிவை படித்து தலை சுற்றி மயக்கமடைந்தால் நான் பொறுப்பல்ல...

🙂
காயத்ரி ரகுராம் ஏன் பொங்குது விளக்கம் இதோ
காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். பார்த்தசாரதியின் சகோதரி வசுந்தராதேவி அந்தகாலத்து புகழ்பெற்ற சினிமா நடிகை.
வசுந்தராதேவியின் மகள்தான் தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய வைஜயந்திமாலா. இவருடைய மகன் சுசிந்தீராவும் நடிகர்தான். ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி, சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக குமுதம், இந்து பத்திரிகைகளில் பணிபுரிந்த பத்திரிகையாளர் இவர்.ராஜலட்சுமியின் பாட்டனார் ரங்கச்சாரி அவர்கள்தான் இந்தியாவில் சென்ஸார் போர்டையே கொண்டுவந்தவர். ராஜலட்சுமியின் சகோதரர் கே.பாலாஜி, புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர். பாலாஜியின் மகன் சுரேஷ்பாலாஜியும் அப்பாவை போலவே புகழ்பெற்ற தயாரிப்பாளர்.
கே.பாலாஜியின் மகள் சுசித்ரா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இப்போது ஹீரோவாகி இருக்கிறார். கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர். மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா.
இவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணந்துக்கொண்டு லதாரஜினிகாந்த் ஆனார். சென்னையின் புகழ்பெற்ற ஆஸ்ரம் பள்ளியின் நிறுவனர் இவர். லதாவின் மகள் ஐஸ்வர்யா, இளம் நடிகர் தனுஷை மணந்தார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்குகிறார். லதா ரஜினிகாந்தின் இன்னொரு மகள் செளந்தர்யாவும் தயாரிப்பு, இயக்கம் என்று திரைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார். தனுஷின் அண்ணன், செல்வராகவன், தமிழகத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை மணந்திருக்கிறார். லதாரஜினிகாந்தின் தம்பி ரவிராகவேந்திராவும் நடிகர். ராகவேந்திராவின் மகன் அனிருத், இப்போது பிரபலமான இசையமைப்பாளர்
அனிருத்தின் சித்தி மகன் ரிஷிகேஷும் நடிகரே. ரிஷிகேஷின் அப்பா எஸ்.வி.ரமணன், அந்தகாலத்தில் ரஜினியை பேட்டியெடுத்து தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பிய பத்திரிகையாளர். எஸ்.வி.ரமணின் அப்பா கே.சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் ஆரம்பகால இயக்குநர்களில் முக்கியமானவர்.
கே.சுப்பிரமணியத்தின் மகள் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம். கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர் இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ ராம்ஜி. கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளான பாமாவின் மகன்தான் நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர். ரகுராம் மாஸ்டரின் மனைவி கிரிஜாவும்
நடன இயக்குநர்தான். கிரிஜாவின் சகோதரிகள் ஜெயந்தி, கலா, பிருந்தா ஆகியோரும் நடன இயக்குநர்களே. ரகுராம் – கிரிஜா தம்பதியினரின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். இப்போது பாஜகவில் முக்கியப் பிரமுகராக இருக்கிறார்.
டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார். தலை சுத்துதா? மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் என்றுகூட தோன்றுமே? ரஜினியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தியது எந்தப் பின்னணி என்று புரிகிறதா?
பார்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த சினி துறையை பாரதிராஜா, இளையராஜா, வைர முத்து கூட்டணி உடைத்தது என்றால் மிகையில்லை. அதைத் தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் யுவன் சங்கர் ராஜா என்று இன்று வரை தொடர்கிறது.
இந்த பதிவின் தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுத்தேன்.