Followers

Wednesday, July 31, 2019

வெறுப்பின் நெருப்பை ப்பூவென ஒதுக்கித் தள்ளிய கொள்கைக் குன்று!

வெறுப்பின் நெருப்பை ப்பூவென ஒதுக்கித் தள்ளிய கொள்கைக் குன்று!
உணவு கொண்டு வந்தவர் முஸ்லிமாக இருந்ததால் வெறியும் வன்மமும் நிறைந்த ஆசாமி ஒருவர் ஆர்டரையே ரத்து செய்ய, உணவைக் கொடுத்து அனுப்பிய ஜோமாட்டோ நிறுவனமோ ‘உணவுக்கு மதம் இல்லை. உணவுதான் மதம்’ என ஓங்கி முழங்க, சமூக வலைத்தளங்களில் இந்த பதில் காட்டுத் தீயாகப் பரவ, இன்னும் ஒரு படி மேலாக அந்த நிறுவனத் தலைவர் தீபிந்தர் கோயலோ பன்மைத்தன்மையைக் கொண்டாடுவதற்காக வணிக இழப்பையும் ஏற்கத் தயார் என்று அறிவித்திருக்கின்றார்.
‘பன்மைத்தன்மையைத் தன் தனித்தன்மையாகக் கொண்ட தேசம்தான் இந்தியா என்பதிலும் வெவ்வேறு தனித்தன்மைகளையும் அடையாளங்களையும் கொண்ட எங்களின் பல்வகையான வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதிலும் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். நாங்கள் பெரிதும் போற்றுகின்ற மாண்புகளைத் தூக்கிப் பிடிப்பதற்காக வணிகத்தை இழப்பதில் எங்களுக்கு வருத்தமில்லை’ என்று ட்விட் செய்திருக்கின்றார் தீபிந்தர்.
வெறுப்பும் வன்மமும் பிடித்த வெறியர்கள் மூர்க்கத்தனமாக பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற இன்றையச் சூழலில் ‘நாட்டின் பன்மைத் தன்மையைக் கொண்டாடுகின்ற’ எண்ணத் தெளிவுடனும், ‘வணிக இழப்பையும் சந்திக்கத் தயார்’ என்கிற தீரத்துடனும் வெறுப்புக்கும் வன்மத்துக்கும் சிவப்புக் கொடி காட்டி நின்று தலை சிறந்த இந்தியராக மிளிர்கின்றார் தீபிந்தர் கோயல்.
தீபிந்தர்கள் பெருகட்டும்.
தீபிந்தர்களே வெல்லட்டும்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.


இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் நிலை என்ன ?

இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் நிலை என்ன ?

இஸ்லாத்தில் பெண்களை பற்றிய கருத்து என்ன ?

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்திறதா ...??

டாக்டர் ஜாகிர் நாயக் தரும் விளக்கம்

நான் சவுதி அரேபியா ரியாத்திலிருந்து பேசுகிறேன்.....

'நான் சவுதி அரேபியா ரியாத்திலிருந்து பேசுகிறேன். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். நேற்று இவருடைய வாடகை காரில் நானும் எனது மகனும் பயணித்தோம். அவசரத்தில் எனது கைப் பையை வாடகை வண்டியிலேயே விட்டு விட்டேன். அதில் எனது பாஸ்போர்ட் எனது மகனின் பாஸ்போர்ட் அமெரிக்க டாலர்கள், ரியால்கள் என்று அந்த கைப் பையில் இருந்தது. முக்கிய ஆவணங்கள் பணம் தொலைந்ததால் மன உளைச்சலில் இருந்தேன். ஆச்சரியமாக இன்று இந்த பாகிஸ்தானி டிரைவர் அனைத்தையும் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பித்தார். முஸ்லிம்கள், பாகிஸ்தானிகள் என்றால் பலர் வெறுப்பதை பார்த்திருக்கிறேன். அது தவறு என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.'




படிக்க விடுவியா ? மாட்டேன்

படிக்க விடுவியா ? மாட்டேன்
ஊருக்குள்ள விடுவியா ? மாட்டேன்
தொட விடுவியா? மாட்டேன்
கோயிலுக்குள் விடுவியா ? மாட்டேன்
பிடிச்ச வேலையை செய்ய விடுவியா ? மாட்டேன்
Atleast தண்ணி தருவியா? மாட்டேன்
" அடச்சி போ நாயே, நான் வேற மதத்துக்கு போறேன் "
இந்துத்வாக்கள் : "ஐயோ ஐயோ இந்த பாவாடைகள் மதமாற்றம் செய்து மக்களை எல்லாம் ஏமாற்றங்களே, நம்ம உயர்ந்த கலாச்சாரம் பாழாகுதே! என்ன செய்யறது?"


Tuesday, July 30, 2019

சாக்கிரதையாக இருப்போம் ! விழிப்போடு இருப்போம் !

சாக்கிரதையாக இருப்போம் ! விழிப்போடு இருப்போம் !
பாஜக வை இனியும் குறைத்து மதிப்பிட முடியாது , இது தமிழ் மண் , பெரியார் மண் என்று சொல்லிக்கொண்டு அசட்டையாக இருந்துவிடக்கூடாது!
நமது தமிழகத்திலும் அவர்கள் தங்களுக்கான வேர்களை ஊன்றி வருகின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது !
அடுத்த 25 ஆண்டுகளில் இந்த தேசம் எப்படி இருக்கவேண்டும் எனபதை இன்றே அவர்கள் திட்டமிடுகிறார்கள் !
அவர்கள்து நோக்கம் வெறும் ஆட்சி அதிகாரம் மட்டும் அல்ல , அவர்களது கர்வாப்சி கொள்கையை நாடெங்கும் திணிப்பதே அவர்களின் எண்ணம் !
ஒரே நாடு , ஒரே மொழி & ஒரே கலாச்சாரம் என்பதை உருவாக்கவே திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் !
எந்த வொரு - எதிர்ப்பு விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் வேகமே நாட்டை துண்டாடி வருகிறார்கள் !
அவர்கள் கனவெல்லாம் - இந்திய தேசத்தை இந்துக்களின் தேசமாக மாற்றிவிடவேண்டும் என்பதே !
அவர்கள் உருவாக்க நினைக்கும் இந்தியா - எப்படி பட்டதாக இருக்க போகிறது என்பதை - இன்று நாம் உணர தவறினால் - நமது அடுத்த தலைமுறை பிள்ளைகள் மிக பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் !
அடுத்த 50 ஆண்டுகளில் அவர்கள் விரும்பும் விடயங்களை - இந்தியாவில் அவர்கள் நிலைநாட்ட விரும்பும் - புதியக்கல்வி கொள்கையால் எட்டமுடியும் !
ஆம் - கல்வி என்பது வரலாற்றையே மாற்றி வடிவமைத்து விடும் சக்தி படைத்தது !
கடந்த தேர்தலில் அவர்களது வெற்றி - ஏமாற்றுத்தனமான வெற்றி என்றாலும் - அவர்கள் வென்றுவிட்டார்கள் என்பதே நிதர்சனம் !
மிருக பலத்தோடு 303 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஆட்சி அமைத்துவிட்டார்கள் எனபதே கசப்பான உண்மை !
கடந்த நாட்களிலேயே - மக்களுக்கு விரோதமான பல்வேறு மசோதாக்களை ( NIA , RTI & UAPA & முத்தலாக் உட்பட பல்வேறு மசோதாக்களை ) தங்களது பலத்தினால் நிறைவேற்றிவிட்டார்கள் !
அதே மக்களவையில் எம் போன்றோர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறோம் என்றாலும் - வலிமையற்ற எங்களால் - எதிர்த்து குரல் மட்டுமே கொடுக்க முடிந்தது !
அதனால் - சனநாயக சக்திகள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து - பாஜக வின் மக்கள் விரோத கொள்கைகளை - பட்டி தொட்டியெல்லாம் பரப்ப வேண்டிய கடமையுள்ளது !
மக்களவையில் செய்ய முடியாததை - மக்கள் மன்றத்தில் செய்து காட்டுவோம் தோழர்களே !
-தொல் திருமாவளவன் பேச்சு

Monday, July 29, 2019

ஏன் பெண்கள் பாலியல் வன்முறை பத்தி பேச மாட்டேங்கிறாங்க

From Brinda Ponni
ஏன் பெண்கள் பாலியல் வன்முறை பத்தி பேச மாட்டேங்கிறாங்க - ஒரு உதாரணம் ----------------------------
June 2017: ஒரு 17 வயசு பொண்ணு பாஜக எம்.எல்.ஏவால உனோ நகரத்தில் பாலியல் வன்கொடுக்கு ஆளாகுறா
June 2017 - April 2018: போலிஸ் புகாரை வாங்க மறுக்குறாங்க. பெற்றோர்கள் கோர்ட்டுக்கு போறாங்க
April 3, 2018: அப்பாவை எம்எல்ஏ ஆட்கள் அடிக்கிறாங்க
April 3, 2018: போலிஸ் அப்பாவை கைது செய்றாங்க
April 8, 2018: உத்திரப்பிரதேச முதல்வர் யோகி வீட்டுக்கு முன்னாடி அந்த பொண்ணு தற்கொலை செய்ய முயற்சிக்கிறா
April 9, 2018: அப்பா கொலை செய்யப்படுறார்
April 10, 2018: போலிஸ் எம்.எல்.ஏ அடி ஆட்கள் 4 பேரை கைது செய்றாங்க. CBIகு கேஸ் மாறுது.
April 13, 2018: அலகாபாத் கோர்ட் எம்.எல்.ஏவை கைது செய்ய உத்தரவு இடுது
11 July 2018: CBI பாலியல் வன்கொடுமைக்கும், அப்பாவோட கொலைக்கும் chargesheet file செய்றாங்க.
18 August, 2018: அப்பாவின் கொலையை பார்த்த witness தீடீர்னு இறந்து போறார். அவர் மாமா அவர் விஷம் குடுத்து கொல்லப்பட்டதா சொல்றார்.
21st November 2018: அவர் மாமா 18 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்துக்காக கைது செய்யப்படுறார்.
26 December 2018: பிறந்த நாள் மாற்றி சொன்னதாக பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், அவ மாமா மேல FIR போடப்படுது.
28th July 2019: மாமாவை பார்க்க ஜெயிலுக்கு போகும் போது, ஒரு வண்டி இந்த பொண்ணோட கார் மேல மோதுது. பொண்ணு, அவளோட வக்கில் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. கூட வந்த 2 அத்தைங்க இறந்திடுறாங்க.
ஆக அப்பா அடிச்சி கொலை, மாமா கைது, அத்தைகள் இறந்திட்டாங்க. Witness கொலை. பொண்ணும் வக்கிலும் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.
கேளுங்க, ஏன் இந்த முட்டா பெண்கள் பாலியல் வன்முறைகளை பத்தி பேச மாட்டேங்கிறாங்க
* ஓரு ஆங்கில பதிவின் தமிழாக்கம்


இஸ்லாத்தை நோக்கி அழைக்கிறார்களே? இது ஏன்?"

"முஸ்லிம்களில் பலர் மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைக்கிறார்களே? இது ஏன்?"
என்ற கேள்விக்கு ஜாகிர் நாயக் அளித்த பதில்.....


அப்துல் கலாம் அவுலியாவாக ஆக்கப்படுகிறார்....

அப்துல் கலாம் அவுலியாவாக ஆக்கப்படுகிறார்....
நம் ஊர்களில் உள்ள தர்ஹாக்கள் எவ்வாறு உருவாயின என்பதற்கு தற்போதய அல்துல் கலாம் அவர்களின் சமாதியே ஒரு சிறந்த உதாரணம்.
--------------------------------------
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள்
அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது நபி(ஸல்) 'அவர்கள், "தங்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள்.
அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 427


#இரத்ததான_முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் 28-7-19 அன்று நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்......






அழகிய பதிலைக் கொடுத்து அசத்தினார் ஜாகிர் நாயக்!

பைபிளில் இருந்து மேற்கோள்களைக் காட்டி ஜாகிர் நாயக்கை மடக்க நினைத்த பெண்! அந்த பெண்ணுக்கு அழகிய பதிலைக் கொடுத்து அசத்தினார் ஜாகிர் நாயக்!

மனங்களை வெல்லும் இம்ரான் கான்.

இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின் முதன் முதலாக திறக்கப்படும் பாகிஸ்தான் இந்து கோவில் - மனங்களை வெல்லும் இம்ரான் கான்.
1947 இந்தியா எனும் தேசம் பாகிஸ்தான் இந்தியா என இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது, மூடப்பட்ட இந்து கோவில் சியால்கோட் நகரில் உள்ள சாவ்லா தேஜ் சிங் கோவில். இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
இக்கோவில் பொது மக்களின் வழி பாட்டிற்கு 1947ல் இருந்து திறந்து விடப்படாது இருந்தது. ஆனால், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து, அவர் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தானின் அனைத்து தரப்பு மக்களுடைய மனதை கவரும் வண்ணம் செயல்பட்டு வருவதோடு மட்டும் அல்லாது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அதன் வெளிப்பாடாக, நாக் பஞ்சமி தினமான வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சாவ்லா தேஜ் சிங் கோவில் பொது மக்கள் வழிபாட்டிற்கு திறக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது பற்றி கூறுகையில் சியால்கோட் துனை ஆணையர் பிலால் ஹைதர், “ இது விடயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள். இனி எல்லா நேரங்களிலும் பொது மக்கள் செல்லலாம்” எனக் கூறினார்.
அதே போன்று மூல்தான் மற்றும் லாகூர் போன்ற இடங்களில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்க்க பாகிஸ்தானிற்கான உயர் ஆனையர் அஜய் பிசாரியா அவரது மனைவி பாரதி சதுர்வேதி ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் கவர்னர் முஹம்மத் சர்வர்,” இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்ல உறவையே விரும்புகிறது” எனக் கூறினார்.
Thanks to
Neutral Today




ஏழை மக்களுக்கு மதிய உணவு

ராஜகிரி டிஎன்டிஜே கிளை சார்பாக இன்று (29-07-2019) ஏழை மக்களுக்கு மதிய உணவு தயாராகிக் கொண்டுள்ளது.
இதற்காக பொருளுதவி செய்தும் உடல் உழைப்பையும் தருபவர்களுக்கு தக்க கூலியை இறைவன் தந்தருள்வானாக!
------------------------------------
'அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்' (அல்குர்ஆன் 59:9)
'எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும், அவர் தூதருக்கும் மாறு செய்தவராவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா, இப்னு அப்பாஸ்
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


இது கோவை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரோட்டி,,,

இது #கோவை_மாவட்டத்தில்  ஒட்டப்பட்டுள்ள சுவரோட்டி,,,
#பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி பொருளாளர் யார்னு பார்த்தீங்கனா குஜராத்தை சேர்ந்த நம்ம #ஹரீஸ்பட்டேல்,,,,மாவட்ட செயற்குழு உறுப்பினர் யார்னு பாத்தீங்கனா நம்ம பஜன்லால் சேட்டோட ஒன்னுவிட்ட ரிலேசன் #சோஹன்லால்,,,,
இது ஒன்னும் எதர்ச்சியா நடந்தது இல்ல,,,அப்படியே ஒரு 20 வருசம் பின்னாடி வாங்க,,,
#1997கோவை_கலவரம்,,, பெரிய வணிக நிறுவனங்கள் துவங்கி,சிறு கடைகள் வரை அனைத்தும் இஸ்லாமியர் கடைகளும் இந்துத்துவ தீவிரவாதிகளால் வேட்டையாடப்பட்டுச்சு,,,
யாரோ ஓரு டிராபிக் போலீஸை சில இளைஞர்கள் கொன்றதற்கு , எதற்காக எல்லா #இஸ்லாமியர்களும் இலக்காக்கபட்டாங்க???
ஏன்னா அந்த ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும்,நம்ம பஜன்லால் சேட்டுகளுக்கும் ஒரே தொழில் தான்,,,வணிகம் செய்வது,,,
ஆக நம்ம பஜன்லால் சேட்டுகளுக்கு கோயம்புத்தூர்குள்ள வணிகம் செய்ய நுழையனும்னா, முதல் தொழில் எதிரிக நம்ம இஸ்லாமியர்கள் தான்,,,
ஆக அந்த இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க வேண்டிய தேவை நம்ம பஜன்லால் கும்பலுக்கு இருந்தது,,,
கரைக்டா அந்த நேரம் பார்த்து, இப்படி ஒரு கொலை நடக்க அது நம்ம பணியா,மார்வாடி கும்பலுக்கு வசதியா போச்சு,,,
உடனே தெருப் பொறுக்கிகளா சுத்தீட்டு இருந்த #இந்துத்துவகும்பலுக்கு பெரும் அளவுள பைனாஸ் பண்ணி, அந்த கலவரத்துல அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களையும் குறிவெச்சு அழிச்சாங்க,,,
( காஸ் சிலிண்டரை கட்டத்திற்குள் உருட்டி விட்டு வெடிக்க வைக்கும் டெக்னிக் ,#குஜராத்_கலவரத்துக்கு முன்னாடியே சோதனை செஞ்ச இடம் கோவை தான்னா பாத்துகோங்களே !! )
அந்த கலவரத்துக்கு அப்பறம் அப்படியே கோவை முழுக்க மார்வாடி கும்பல் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுது,,, இன்னைக்கு குண்டூசி துவங்கி வைரம் வரைக்கும் அனைத்து ஹோல்சேல் கடைகளும் #மார்வாடிகள் கைல தான்,,,
கோவையில் செழிப்புமிக்க பகுதிகளான #ஆர்எஸ்புரம்_ரேஸ்கோர்ஸ் போன்ற பகுதிகளே அவுங்களுக்காக தான்,,, நீங்க எல்லாம் அங்க வேடிக்கை வேணா பார்க்க போலாமே ஒழிய, #ஒரு_இஞ்ச்_இடம் கூட வாங்க முடியாது,,,அவ்வளவு ஆடம்பரமான பகுதிகள்,,,
ஆக இவங்களுக்கு இந்த வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்த பொறுக்கி கூலிப்படைகளான இந்துத்துவ கும்பலுக்கு #விநாயகர்சதுர்த்தி துவங்கி, கட்சி நடத்த பன்டிங் செய்வது வரை அனைத்தும் இந்த #பஜன்லால்_கும்பல் தான்,,,
#ஆக_கட்சிக்கே_படி_அளக்கறவங்க சாதாரண பொருளாளர்,செயற்குழு உறுப்பினர் பதிவியில் இருப்பது எல்லாம் பெரிய விசயம் இல்ல ஜீ !!
Manoj kumar
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
நன்றி & படம் உதவி :- Jp Prakash
மீள்பதிவு
Ksb Boobathi


Sunday, July 28, 2019

கிருத்தவ மதத்தில் இருப்பதால் நரகத்துக்குத்தான் செல்வேனா?

'நான் கத்தோலிக்க கிருத்தவ மதத்தில் இருப்பதால் நரகத்துக்குத்தான் செல்வேனா?'

'சகோதரியே! ஏசு நாதர் தனது வாழ்நாளில் எதை போதித்தாரோ அதனை நீங்கள் பின் பற்றினால் கண்டிப்பாக இறைவன் நாடினால் நீங்கள் சொர்க்கத்துக்கு செல்வீர்கள்' - ஜாகிர் நாயக்


Saturday, July 27, 2019

ஆர்எஸ்எஸின் உண்மை முகம் - முன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.


ரங்கராஜ் பாண்டே பேசிய பேச்சுக்களிலேயே மிக உண்மையான பேச்சு.

ரங்கராஜ் பாண்டே பேசிய பேச்சுக்களிலேயே மிக யதார்த்தமான உண்மையான பேச்சு.
இஸ்லாமியர்களை இந்த நாட்டை நேசிக்க வைத்து இம் மண்ணின் மைந்தர்களாக அவர்களை உணர வைத்து அவர்களை அரவணைக்காமல் உள் நாட்டு பாதுகாப்பு என்பது சாத்தியமே இல்லை. இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இஸ்லாமியனை 'நீ பாகிஸ்தானுக்கு போ, ஆப்கானிஸ்தானுக்குப் போ' என்று கூறும் கெட்ட பழக்கம் நம்மிடம் உள்ளது. இது மாற வேண்டும்.


இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

இவ்வருட ஹஜ்ஜுப் பயணிகளின் தேவையை முன்னிட்டும் மற்றும் இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பாக நேற்று (26.07.2019) 20-வது *இரத்ததான முகாம்* ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முகாமில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், சூடான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளிலிருந்து ஆர்வமுள்ள சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 130 நபர்கள் கலந்துகொண்டனர். அதில் 116 நபர்களிடமிருந்து குருதிக்கொடை பெறப்பட்டது.
இம்முகாமில் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றினர்.




புலிக்கு பிறந்தது பூனையாகுமா?... ஆகாது....


Friday, July 26, 2019

பள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்!

இது ஒரு மீள் பதிவு ( 27-07-2018)
பள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்!
நேற்று நான் தங்கியுள்ள வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கு இரவு தொழுகைக்காக சென்றேன். தொழுகை முடிந்தவுடன் ஒரு உருது அறிஞர் சொற்பொழிவு உருது மொழியில் ஆற்றினார். சொற்பொழிவு முடிந்தவுடன் சில கேள்விகள் கேட்டார். யாரும் பதிலளிக்காமல் அமர்ந்திருந்ததால் தமிழனான நான் எழுந்து அதற்கு பதிலளித்தேன்.
கேள்வி:
எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபிகள் நாயகம் அவர்கள் கூறியவை எவை?
பதில்:
1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3) இறை வழியில் நடந்திட கணவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)
இந்த பதிலை கேட்டவுடன் பாகிஸ்தானிய அறிஞர் எனக்கு அன்பளிப்பாக ஒரு அழகிய டிபன் பாக்ஸை அளித்தார். இதே போல் வேறொரு கேள்வி கேட்க மற்றொரு பாகிஸ்தானிக்கும் ஒரு பரிசு பொருள் கிடைத்தது. ஒரு அந்நிய தேசத்தில் அந்நிய மொழியில் கேள்வி கேட்டு அதற்கு பதிலும் அளித்து பரிசு வாங்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது என்னைப் போன்ற இளைஞர்களுக்கு  மேலும் ஆர்வத்தை அதிகரிக்கும்.
பள்ளிவாசல்கள் வெறும் தொழும் இடமாக மட்டுமே நபிகள் காலத்தில் இருந்ததில்லை. அரசாங்கமே பள்ளியில்தான் நடக்கும். கல்வி கற்பித்தல், உடற்பயிற்சி, போன்றவைகளையும் பள்ளியிலேயே நடத்த பழக வேண்டும். பள்ளியோடு தொடர்புடைய சிறுவர்களின் வாழ்வும் பிரகாசமாக இருக்கும்.
மேலும் மொழியை பொருத்த வரை உலக மொழிகள் அனைத்தும் மனிதர்கள் விளங்கிக் கொள்ள இறைவனால் படைக்கப்பட்டவையே. தாய் மொழிப் பற்று இருக்கலாம். அது வெறியாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் மொழி அழியாமல் மற்ற உலக மொழிகளையும் ஆர்வமுடன் கற்க வேண்டும்.


Thursday, July 25, 2019

சவுதி அரேபியால் ஹிந்துகளை அல்லாஹ் அக்பர்

வடநாட்டில் ஜெய்ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி முஸ்லீம்களை தாக்குவது போல்.....
சவுதி அரேபியால் ஹிந்துகளை அல்லாஹ் அக்பர் என்று சொல்லச் சொல்லி தாக்குதல் நடக்கிறதா? அப்படி பதிலுக்கு நடந்தால் நிலைமை என்னவாகும்?
இதற்கு எதிராக மோடி ஏன் வாய் திறப்பதில்லை?என்று கேட்கும் சீமான்


Wednesday, July 24, 2019

'இஸ்லாம் என்றால் என்ன?' என்ற விளக்கத்தை தெரிவிக்கிறோம்.

நைரோபியிலுள்ள பள்ளி வாசலுக்கு மாற்று மதத்தவர்களையும் அழைத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்ற விளக்கத்தை தெரிவிக்கிறோம். அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகின்றனர்.


23 வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று விடுதலை!

காஷ்மீர் முஸ்லிம்கள் 23 வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று விடுதலை!

காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த இம்மூவரும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெய்ப்பூர் நீதி மன்றம் 'இவர்கள் குற்றமற்றவர்கள்: நிரபராதிகள்' என்று கூறி விடுதலை செய்துள்ளது.

இழந்து போன 23 வருடங்களை திருப்பித் தரப் போவது யார்?

இறைவா! அக்கிரமக்கார ஆட்சியாளர்களிடம் இருந்து எங்களை காத்திடுவாயாக!

இது வட நாடு அல்ல. இது எங்கள் #தமிழ்நாடு

மாட்டு இறைச்சி🐂 வாங்குவதால் இஸ்லாமியருக்கு நடக்கும் சோகம்😪
அழகிய குறும்படம். இது வட நாடு அல்ல. இது எங்கள் #தமிழ்நாடு
எங்கள் உணவு🥩 எங்கள் உரிமை


23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!
நாங்கள் விடுதலையாகிவிட்டோம் ஆனால் நாங்கள் இழந்த 23 வருடங்களை யார் தருவார்? 1996 குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையான 5 பேர் குமுறல்!
கடந்த 1996ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஆக்ராவில் இருந்து பிகனேர் நோக்கி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில், சம்லெட்டி கிராமம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 37 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பனது டெல்லி லாஜ்பத் நகர் குண்டுவெடிப்புக்கு மறுநாள் நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு மற்றும் சவாய் மன் சிங் விளையாட்டு அரங்கில் 1996ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு உள்ளிட்ட சில குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் புரட்சி முன்னணி என்ற அமைப்பு பொறுப்பேற்றது. சம்லெட்டி குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சதித்திட்டம் நடந்ததற்கான ஆதாரங்களை அரசுத்தரப்பு கொடுக்க தவறிவிட்டது. இந்த குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான டாக்டர் அப்துல் ஹமீதுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிறுவ தவறிவிட்டது என்று கூறிய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 6 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதையடுத்து நேற்று மாலை 5:30 மணிஅளவில் லத்திப் அகமது பாஜா(42), அலி பாத்(48), மிர்சா நிசார்(39), அப்துல் கோனி(57), ரயீஸ் பெக்(56) ஆகிய ஐந்துபேரும் ஜெய்ப்பூர் மத்தியசிறையில் இருந்து வெளியேறினர். இந்த ஆறு பேரும் 1997 ஜூன் 8ம் தேதி முதல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறையில் இருந்து வெளியேறிய அவர்கள் 5 பேர், குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை தங்கள் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டும்வரை ஒருவரை ஒருவர் தங்களுக்கு யார் என்றே தெரியாது என்று தெரிவித்தனர். இந்த வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள ரயீஸ் பெக் ஆக்ராவையு, கோனி ஜம்மு காஷ்மீரையும், மற்றவர்கள் ஸ்ரீநகரையும் சேர்ந்தவர்கள். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன் பாத் பாய் வியாபாரம் செய்துவந்தார். கோனி பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். பாஜா காஷ்மீரி கைவினை பொருட்களை டெல்லி மற்றும் காத்மாண்டு ஆகிய இடங்களில் விற்பனை செய்துவந்தார். நிசார் 11ம் வகுப்பு பள்ளி மாணவன். இந்த நிலையில் தான் 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
“நாங்கள் எந்த உலகத்திற்குள் அடியெடுத்துவைக்கிறோம் என்றே தெரியவில்லை; நாங்கள் எங்களது உறவினர்களை இழந்துவிட்டோம்; எனது தந்தை மற்றும் தாய், மாமா ஆகியோர் இறந்துவிட்டனர். நாங்கள் சிறையிலிருந்து குற்றமற்றவர்கள் என்று விடுதலையாகிவிட்டோம். ஆனால் சிறையில் இருந்த 23 ஆண்டுகளை எங்களுக்கு யார் திரும்ப தருவார்” என்று ரயீஸ் பெக் கேள்வியெழுப்பியுள்ளார்.
“இந்த வழக்கில் என்னை கைது செய்யும்போது எனக்கு 16 வயது தான்; ஆனால் எனக்கு 19 வயது என்று கூறி என் மீது குற்றம்சுமத்தி சிறையில் அடைத்தனர். தற்போது எனக்கு 39 வயது ஆகிறது. ஆனால் சிறையில் இருந்த காலத்தில் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. இனிமேல் தான் புதிய வாழ்க்கையை தொடங்கவேண்டும்” என்று சலீம் தெரிவித்தார்.
சம்லெடி நகர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரில் 2014ல் ஒருவரும், நேற்று 6 பேர் என இதுவரை 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் திகார் சிறையில் உள்ள ஜவீத் கான் மீது லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதால் அவர் வெளியேறவில்லை. 1997ல் கைது செய்யப்பட்டாலும் இந்த வழக்கின் மீதான விசாரணை 2011ம் ஆண்டில்தான் தொடங்கியது. 23 ஆண்டு வாழ்க்கையை இழந்துவிட்டார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர் இவர்களது உறவினர்கள்.
தகவல் உதவி
நியூஸ் 7
24-07-2019


Monday, July 22, 2019

காவி வேட்டில கரை பட்டிருக்கு

'காவி வேட்டில கரை பட்டிருக்கு. ஒன்னு தொவச்சு போடு. இல்ல கழட்டி போடு'
சென்சாரில் இந்த சீனை அனுமதிக்க மாட்டார்கள். இணையம் இருக்கிறதே.... பகிருங்கள்..... உண்மையை மக்கள் உணரட்டும்.


பொய் சொல்வதற்கு கூச்சமாக இல்லையா ஜீயர் அவர்களே!

காஞ்சிபுரம் முன்பு யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?
அத்தி வரதர் சிலையை குளத்தில் மூழ்கடித்தது இஸ்லாமியருக்கு பயந்துதான் என்ற உலக மகா பொய்யை ஜீயர் சொன்னது அறிவோம். வட நாட்டில் இஸ்லாமியர் ஆட்சி பரவலாக நடந்து வந்தது. ஆனால் தென்னாட்டில் அந்த அளவு இஸ்லாமியரின் ஆதிக்கம் இருந்ததில்லை. தமிழகத்தில் இஸ்லாமியர் ஆட்சியானது மதுரை பக்கத்தில்தான் 25 ஆண்டுகள் நடந்துள்ளது. காஞ்சிபுரம் அந்த காலம் தொட்டு இந்துக்கள் கையில்தான் இருந்துள்ளது. பவுத்த நகரமாக இருந்த காஞ்சியை இந்து நகரமாக மாற்றியது சைவர்கள். அத்தி வரதர் சிலை கூட புத்தரின் சிலை போல தான் தெரிகிறது. காஞ்சிபுரம் எவ்வாறு சைவ சமயமாக வன்முறையால் மாற்றப்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களை வரிசையாக தருகிறேன். இதற்கெல்லாம் ஜீயர் பதில் சொல்வாரா?
கும்பகோணம் விநாயகர் ஆலயம்!
கும்பகோணம் நாகேசுவரசாமி திருமஞ்சன வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் கோவில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோவில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோவிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் நாற்பத்தி ஐந்து.
காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே பல்லவபுரம் என்ற பல்லாவரத்திற்கு அருகில் 'கணிகிலுப்பை' என்ற ஊரில் புத்தர் கோவிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். அத்தோடு அங்கிருந்த புத்த உருவங்களையும் ஏரிக் கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்,பக்கம் நாற்பத்தி ஐந்து.
காஞ்சிபுரம்!
காஞ்சிபுரத்தில் முக்கியமானவைகளாகக் கருதப்படும் எல்லாவற்றிலும் காமாட்சி அம்மையார் கோயில்ஒன்றாகும்.
'காமாட்சி அம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.'
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் ஐம்பத்து ஐந்து.
'ஸ்ரீ ஆச்சாரியாள் பௌத்தமத நிரஸனம் செய்து வேத மதத்தை நிலை நாட்டிக் காஞ்சியில் ஷண்மத ஸ்தாபனம் செய்தபோது 'சத்தி' மதத் தலைமை ஸ்தாபனமாகப் பிரதிஷ்டை செய்ததே இந்தக் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.'
-எம்.கே.ஸ்ரீநிவாசன்,காஞ்சிக் கோவில்கள், காஞ்சிபுரம், பக்கம் முப்பத்தது ஐந்து.
காஞ்சிபுரத்திலுள்ள 'புத்தர் கோவில் தெரு' இப்போது 'காமாட்ஷி அம்மன் சந்நிதித் தெரு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
-சோமலெ,செங்கற்பட்டு மாவட்டம்,சென்னை, 1963, பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
காஞ்சி காமாட்சி!
“scholars have for long opined that the idol now worshipped as Sankaracharya in the present Kamatchi Temple, originally represented the Buddha.”
'காமாட்சியம்மன் ஆலயமே பௌத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று பலர் கருதுகிறார்கள்.'
-k.r.venkatraman, Devi Kamatchi in kanchi, Tirunelveli, 1973, Page 39.
-எம் ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழ் வளர்த்த கோவில்கள், சென்னை,
1989, Page 50,51.
கச்சீஸ்வரர் கோவில்!
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சீஸ்வரர் கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டிடத்தில் சில புத்த உருவங்களும் உள் மண்டபத்திலும் சில கல் தூண்களிலும் புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இவைகளால் இந்த ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவிலெனத் தெரிகிறது.
-பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து மூன்று, ஐம்பத்து நான்கு.
ஏகாம்பரேஸ்வரர் கோவில்!
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளி மதில் சுவர்களில் சில புத்த உருவங்கள் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும் என்பர் மயிலை சீனி வேங்கடசாமி.
-பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து நான்கு.
இவ்வாறு பவுத்த கோவில்களை இடித்து சைவ கோவிலாக மாற்றி விட்டு அதில் இருந்த புத்தரின் சிலைகளை ஏரியில் தூக்கி போட்டு விட்டு அதற்கு அத்தி வரதர் என்ற பெயரையும் சூட்டி விட்டு அதற்கு காரணம் இஸ்லாமியர்தான் என்று பொய் சொல்வதற்கு கூச்சமாக இல்லையா ஜீயர் அவர்களே!


அழுது புலம்பும் உறவினருக்கு ஆறுதல் சொல்வது யார்?

மாடு திருடினார்கள் என்று கூறி இரு தலித் ஒரு முஸ்லிம் ஆக மூன்று பேர் பீகார் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த உடலின் மீதும் வன்மம் கொண்டு கம்புகளைக் கொண்டு அடித்துச் சென்றுள்ளது காட்டு மிராண்டி இந்துத்வா கும்பல்.
எந்த திருட்டு செயலிலும் ஈடுபடவில்லை அநியாயமாக பொய்க் குற்றம் சாட்டி மூன்று உயிர்களை எடுத்துள்ளது இந்துத்வா கும்பல்.
அழுது புலம்பும் உறவினருக்கு ஆறுதல் சொல்வது யார்?


இந்த குரங்குகள் மனிதனை விட மேலானதாக தெரிகிறது.

தனது இனம் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்ட போது எத்தனை பதை பதைப்போடு இந்த மிருகங்கள் அதன் உயிரை காக்க போராடுகின்றன.
இந்த குரங்குகளுக்கு இருக்கும் இரக்கக் குணம் கூட இந்துத்வாவாதிகளுக்கு இருப்பதில்லை. ஆர்எஸ்எஸின் சித்தாந்தம் அந்த அளவு அவர்களின் மூளையை மழுங்கடித்துள்ளது.
அடித்து கொன்று போட்ட மனித பிணத்தின் மீதும் வன்மத்தை கக்கும் மனித மிருகங்களுக்கு மத்தியில் இந்த குரங்குகள் மனிதனை விட மேலானதாக தெரிகிறது.


Sunday, July 21, 2019

பண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியின் நிலை

பண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியின் நிலை
மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பை படித்து கொண்டிருந்தேன்.அதில் பெண்களுக்கு இருந்த உயர்ந்த நிலையை பார்க்கும் போது மெய் சிலிர்த்து விட்டது .
அரச குடும்பத்துக்கு வாரிசு இல்லாத சூழலை எப்படி சமாளிக்கலாம் என்று பீஷ்மர் தன் செவிலி தாய்க்கு கூறிய நிகழ்வு
மிகுந்த சக்தி வாய்ந்த ரிஷி வ்ரிஹஸ்பதி.அவர் அண்ணனும் ஒரு ரிஷி .அவர் பெயர் உதத்ய ரிஷி.உதத்ய ரிஷியின் ரிஷி பத்தினியின் மீது வ்ரிஹஸ்பதிக்கு மோகம் பிறந்து விட்டதால் அவர் மீது பாலியல் வன்முறைக்கு தயார் ஆகிறார்.உங்கள் அண்ணனின் குழந்தை என் வயிற்றில் வளருகிறார். அவர் அங்கிருக்கும் போதே அனைத்து வேதங்களையும் கற்றுணந்தவர் .இன்னொரு விதைக்கு இப்போது இடம் இல்லை என்று ரிஷி பத்தினி மன்றாடுகிறார்.
வயிற்றில் இருந்த ஞான குழந்தையும் இங்கு இடம் குறைவாக உள்ளது.வேண்டாம் தந்தையே என்று ரிஷி வ்ரிஹஸ்பதியிடம் மன்றாடுகிறது.அதனை பொருட்படுத்தாமல் பாலியல் வன்முறையில் ஈடுபடும் சக்தி வாய்ந்த ரிஷி,எனக்கு இன்பம் பொங்கும் நேரத்தில் இப்படி மூடை கெடுத்த குழந்தையே நீ பார்வை அற்று விளங்குவாய் என்று சாபம் அளிக்கிறார்.
பார்வை அற்ற குழந்தை மிகுந்த அறிவாளியாக வளர்ந்து ரிஷி திரகதமஸ் ஆக பெயர் பெற்று கல்வியில்,அழகில் சிறந்த பார்ப்பன பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல குழந்தைக்கும் தந்தையாகிறது.
தாய் மற்றும் குழந்தைகள் தன்னை மதிக்காத சூழலை உணர்ந்த ரிஷி திரிகதமஸ் அதனை மனைவியிடம் கேட்க உங்களால் எந்த பயனும்,இன்பமும் இல்லை என்று மனைவி சொல்கிறாள்.என்னை க்ஷத்ரியர்களிடம் அழைத்து செல்லுங்கள். பெரும் பொருள் பெற்று தருகிறேன் என்கிறார் ரிஷி.அது எல்லாம் எனக்கு முக்கியம் அல்ல,உன்னை இனிமேல் பார்த்து கொள்ள முடியாது என்று மனைவி சொல்ல ரிஷி திரகதமஸ் பார்ப்பன பெண்கள் இனிமேல் இருந்தாலும் இறந்தாலும் ஒரே ஒரு கணவனை கொண்டவர்களாக மட்டுமே வாழ வேண்டும்.கணவன் இல்லாத பெண் பெரும் பாவியாக கருதப்படுவாள் ,அவளால் எதனையும் அனுபவிக்க முடியாது என்று சாபம் இடுகிறார்.
இதனால் கோபமடைந்த மனைவி ரிஷி த்ரிகதமஸை கங்கையில் தூக்கி போட மகன்களிடம் உத்தரவிடுகிறாள்.கங்கையில் கட்டி போடப்பட்டு தூக்கி எறியப்பட்ட ரிஷியை கங்கை கரையில் மலஜலம் கழிக்க வந்த வாலி மன்னன் கண்டு மீட்டு எடுக்கிறான். ரிஷியின் அறிவில் மயங்கிய மன்னன் ரிஷி மூலம் தனக்கு குழந்தைகள் தர வேண்டுகோள் விடுகிறான்.ரிஷியும் அதற்கு சம்மதிக்கிறார்.
ஆனால் வயதான பார்வை அற்ற ஒருவரிடம் பாலியல் வன்முறை மூலம் குழந்தை பெற்று கொள்ள செல்வதா என்று எண்ணிய மன்னன் வாலியின் ராணி அவருக்கு பதிலாக சூத்திர பணிப்பெண்ணை அனுப்புகிறார்.சூத்திர பணிப்பெண்ணுக்கு 11 குழந்தைகளை அருளுகிறார் ரிஷி. ரிஷியை சந்திக்க வரும் மன்னன் குழந்தைகளை கண்டு மகிழ்ந்து என் குழந்தைகளா என்று கேட்க ,ரிஷி இல்லை என்று உண்மையை கூற பதறி போன மன்னன் ரிஷியிடம் மீண்டும் தனக்கு தன் ராணியின் மூலம் குழந்தைகள் அருள மன்றாடுகிறான்.
மனமிரங்கிய ரிஷி அதற்கு சம்மதித்து ராணியிடம் செல்கிறார். ராணி ஏமாற்ற முடியாத சூழல் காரணமாக ரிஷியின் பாலியல் வன்முறைக்கு தயாராக இருக்கிறாள் .ராணியை தொட்டே ஐந்து குழந்தைகளை அருளுகிறார் கைம்பெண் மறுமணம்,மணவிலக்கு பெரும் குற்றம்,பாவம் என்றாக்கிய அற்புத ரிஷி திரகதமஸ்
எந்த வர்ணமாக இருந்தாலும் பண்டைய பாரதத்தில் இருந்த பெண்களின் நிலையை மிக அற்புதமாக விளக்கும் பகுதி இது என்றால் மிகை ஆகுமா

Poovannan Ganapathy


ஜோரம் வான்' இஸ்லாதில் இணைந்தார்.

ஜோரம் வான்' இஸ்லாதில் இணைந்தார்.
----------------------------------------------------------------
உலகத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் எவரையும் புரட்டிப்போட்டு அவர்களை அடிமையாக்கும் விஷயம் குர்ஆனில் எது?
100 வருஷங்களாக நாட்டை பாதித்துக் கொண்டிருக்கும் மனநோயின் பெயர் தான் இஸ்லாம் என்று உரக்க சொன்னவர்,
இஸ்லாத்தை தடை செய்ய வேண்டும் என மிகப்பெரும் மக்கள் திரளை திரட்டியவர்ஃபர்தாவை தடை செய்ய வேண்டும் என போராடியவர்,
பள்ளிகளின் மினாராக்கள் இடித்து நொறுக்கப்பட வேண்டும் என்று பார்லிமென்டில் முழங்கியவர்
தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
டச் பார்லிமென்ட் எம்.பியாக இருந்த ஜோரம் வான் கிளாவரென். (Joram van Klaveren -Dutch politician)
தற்போது இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ளார்.
இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக புத்தகத்தை எழுத துவங்கியவர், பாதியிலேயே அதை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டதாக சொல்கிறார்.
இஸ்லாத்தை படிக்கும் போது தான் அதன் யதார்த்தத்தை உணர முடிகிறது.
இதுவரை இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன். இஸ்லாம் பற்றி இனி எழுதப் போகிறேன் என்கிறார்.
அல்லாஹ் அக்பர்
(இறைவன் மிகப் பெரியவன்!)
பதிவு : Anbu Chelvan


இவர்கள் மீதெல்லாம் என்ஐஏ தனது பார்வையை செலுத்தாது

இவர்கள் மீதெல்லாம் என்ஐஏ தனது பார்வையை செலுத்தாது. அவர்கள் இஸ்லாமிய பெயர்களில் இருந்தால் மட்டுமே 'தமிழகத்தை தகர்க்க சதி' என்று செய்தி போடுவார்கள்.


18 குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்..

இந்தியாவில் நடைபெற்ற 18 குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்... முஸ்லிம்கள் தவறாக மீடியாக்களால் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டனர்.
- ஓய்வு பெற்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஜி.கோல்சே பாட்டீல்
இதனை பகிரங்கமாக சொன்னது ஓய்வு பெற்ற நீதிபதி. நாட்டு நலனில் அக்கறை கொண்ட என்ஐஏ எப்போது அந்த ஆர்எஸ்எஸ் தேச விரோதிகளை கைது செய்யப் போகிறது?