Followers

Monday, July 06, 2026

அறிஞர் அண்ணா இந்து மதம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறார்.


 



அறிஞர் அண்ணா இந்து மதம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறார்.

 

 

" இந்து மதமென்றால், அது எங்களுடையது என்றெண்ணி இரும்பூதி இருக்கும் தமிழ் மக்கள் பலர்நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம். இந்து மதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிச்செல்வதற்காக வெட்டிய ஒரு அகழ் என்பதை நம்மவர் பலர் இன்னுந் தெரிந்துகொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். எனவே, இவ்விந்து மதத்தைப் பற்றிய உண்மைகளைத் தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து தெளிதல் பெரிதும் இன்றியமையாததாகும்.

 

 

இவ்விந்து மதம் தமிழ்நாட்டிற் பரவிய காலம், ஆரியர்கள் நம் நாட்டில் வந்து குடியேறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய காலத்தைக் குறிப்பதாகும். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருமுன் இந்து மதம் என்ற ஒரு மதமோ அன்றி வேறு மதங்களோ இருந்தனவென்று துணிவதற்குத் துளி சான்று கூடக் கிடையாது. ஆகையால், ஆரிய மதமாகிய இவ் இந்துமதத்தைத் தமிழ் மக்களுடைய மதம் என்றுரைக்க ஆராய்ச்சித் துறை கண்ட அறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள்.

 

 

ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ் மக்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட இந்துமதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லவென்பதை எடுத்துக்காட்டுவதே நம் குறிக்கோளாகும் ! "

 

Sunday, July 05, 2026

திருநீறு பூசாத நெற்றியை சுடு. சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து

 




திருநீறு பூசாத நெற்றியை சுடு. சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து

 

திக்பஸ்ம ரஹிதம்பாலம் திக்கிராம மசிவாலயம்

திகனீசார்சனம் ஜன்ம திக்வித்யா மசிவாத்மிகாம்.

 

(இ-ள்) பஸ்மமில்லாத நெற்றியைக்சுடு,

 

சிவாலயமில்லாத கிராமத்தையுங் கொளுத்து,

 

சிவபூஜையில்லாத ஐந்மத்தையுஞ்சுடு,

 

சிவஸ்வரூபமில்லாத வித்தையையுஞ்சுடு என்பதாம்.

 

அதர்வண வேதத்தைச் சேர்ந்த பிருஹஜ்ஜாபாலோபநிடதம் 1902 ஆம் ஆண்டு பதிப்பு

 

திருநீறு பூசாத நெற்றியை சுடு என்பதும் சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து என்பதும் எவ்வளவு பெரிய ஆபத்தான வார்த்தைகள். சிவனை ஏற்காதவர்கள் எந்த அளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பதை விளங்க முடிகிறது. எனது முன்னோர்களும் எந்த அளவு கொடுமைகளை அனுபவித்திருப்பாரகள் என்பதையும் உணர முடிகிறது.

 

 

திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா? ..”

 

கந்தன் திருநீறணிந்தால்

கண்ட பிணி ஓடிவிடும்…”

 

எந்த மதத்தவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட திருநீறு பற்றிய பாடல்களை மார்கழி மாதம் ஒலிபெருக்கியில் கேட்காதவர்கள் இருக்க முடியாது.

 

 

இவ்வாறு தனது மதப் பெருமைகளை கூறுவதை குறை காண முடியாது. ஆனால் சைவ மதத்தை ஏற்காதவர்களின் கிராமங்களை கொளுத்து என்பதை ஏற்க முடியாது. தகவல் தொழில் நுட்ப வசதி இல்லாத அந்த காலங்களை நினைத்துப் பாருங்கள். சமண பவுத்த மதத்தினர் எந்த அளவு கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்பது விளங்கும்.

 

இதில் இந்து மதம் அன்பையே போதிக்கிறது என்று நமக்கு அறிவுரை சொல்ல வருவார்கள்.

 

"ஒரு முஸ்லிம் டெலிவரி ஊழியரை அனுப்ப வேண்டாம்"


 


ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர், பாகுபாடு நிறைந்த டெலிவரி அறிவுறுத்தலுக்குக் கோபத்திற்குப் பதிலாகப் பரிவுடன் பதிலளித்து, இணையத்தில் பலரின் இதயங்களைக் கவர்ந்துள்ளார்.


"ஒரு முஸ்லிம் டெலிவரி ஊழியரை அனுப்ப வேண்டாம்" என்று ஒரு ஆர்டரில் இருந்த குறிப்பைக் கண்டபோது அஃப்தாப் கான் அதிர்ச்சியடைந்தார். டெலிவரியை ரத்து செய்வதற்குப் பதிலாக, அவர் வாடிக்கையாளரைச் சந்தித்து, அந்தச் செய்தி ஏன் எழுதப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிவு செய்தார்.


அஃப்தாப் அந்தக் குறிப்பைப் பற்றி பணிவுடன் கேட்டபோது, ​​அந்த வாடிக்கையாளர் மன்னிப்புக் கேட்டதாகவும், அது தனது வாழ்க்கையின் ஒரு கடினமான காலகட்டத்தில் சேர்க்கப்பட்ட பழைய அறிவுறுத்தல் என்றும் விளக்கினார். அதை நீக்க மறந்துவிட்டதாகவும், அதை எப்படி நீக்குவது என்று தெரியவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.


வாக்குவாதம் செய்வதற்குப் பதிலாக, அஃப்தாப் வாடிக்கையாளரின் தொலைபேசியை வாங்கி, செயலியில் இருந்து அந்தச் செய்தியை நீக்கி, அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். கைகுலுக்கல் மற்றும் ஒரு குவளை தண்ணீருடன் அந்த உரையாடல் முடிந்தது.


இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அஃப்தாப், "எல்லோரும் தவறு செய்கிறார்கள். அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார், அது என் மனதிற்கு நிம்மதியை அளித்தது. நாட்டில் அன்பைப் பரப்புவதே எங்கள் நோக்கம்" என்றார்.


இந்த நெகிழ்ச்சியான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும், அந்த டெலிவரி ஊழியரின் இரக்க குணத்தையும், வாடிக்கையாளர் தனது தவறை ஒப்புக்கொண்ட விதத்தையும் பாராட்டி வருகின்றனர்.

Saturday, July 04, 2026

அடா தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண தேவியார்

 


 


 

 

அடா தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண தேவியார்

 

"நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை ‘வீரக் கற்கள்’ என்றும் கூறுவர். உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன.

 

சதிக்கல் என்பது இறந்துவிட்ட கணவனோடு தீப்பாய்ந்து (உடன்கட்டை ஏறுதல்) உயிரை மாய்த்துக் கொண்ட மனைவிக்கும், அவரது கணவனுக்கும் சேர்த்தே நடப்படும் நினைவுச் சின்னம் ஆகும். எனவே இங்கு காணப்படுவது நடுகல்லுடன் கூடிய சதிக்கல்லாகும்.” என்று கூறினார்.

"’ஸ்ரீ வீரபாண்டிய தேவருக்கு யாண்டு 14வது துலுக்கர் பூசலில் பட்டார் அடா தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண தேவியார் இ ஊரிலே தீப்பாய்ந்தாள்’ என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த கல்வெட்டானது, 'அவிரியூர் சிவன் கோவில் கற்களில் சேர்ந்தார் போல் சுமார் 5 அடி உயரம் கொண்ட தூணில் சிற்பங்களுடன் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.'" என்றார்.

 

 

"கல்வெட்டில் பிற்கால பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் 14-ஆவது (பொதுஆண்டு-1311) ஆட்சி ஆண்டில் துலுக்கர் (துருக்கியர்) சண்டையில் அடாதெல்லா ராவுத்தர் என்பவர் இறந்ததையும், இதனால் இவருடைய மனைவி மல்லண தேவி என்பவர் இவ்வூரில் தீப்பாய்ந்து இறந்தார் என்பதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.” என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ்.

 

 

இந்த கல்வெட்டு நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

 

மன்னர் ஆட்சிக் காலங்களில் இஸ்லாமியர் முக்கிய பொறுப்புக்களில் இருந்ததையும் துருக்கிய முஸ்லிம்களை எதிர்த்து இங்குள்ள இஸ்லாமியர் போரிட்டு மடிந்துள்ளனர் என்ற உண்மையும் வெளிப்படுகிறது... இங்கு மதம் குறுக்கே வரவில்லை என்பதையும் நோக்குங்கள்.

ஆனால் உடன்கட்டை ஏறுதல் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று. மறுமணம் செய்து கொள்ளவே வலியுறுத்துகிறது. தமிழகத்தின் அந்த கால வழக்கத்தினபடி அவர் உடன் கட்டை ஏறியுள்ளார் என்றே இதனை நாம் பார்க்க வேண்டும்.

மேலும் அடாதெல்லா ராவுத்தரின் மனைவி மல்லண்ண தேவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாத்தை ஏற்றாலும் இந்த பெண் தமிழ் பெயரிலேயே இருந்துள்ளார். இஸ்லாமும் இதனை தடுக்கவில்லை. பிற்காலத்தில் வர்ணாசிரமம் தலைவிரித்தாடிய போது தான் முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபியில் வைக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று விளங்க முடிகிறது.

 

-பிபிசி தமிழ்

 

 

Monday, June 29, 2026

சீனாவின் அசுர வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது


 



சீனாவின் அசுர வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது

 

 

பிலிப்பைன்ஸிலிருந்து வரும் அபாக்கா வாழை தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

 

முழு தயாரிப்பு வரிசையும் பிரமிக்க வைக்கிறது (வாழை தண்டுகளிலிருந்து ஜீன்ஸ் வரை) மற்றும் ஒரு மனிதர் கூட கண்ணில் படவில்லை!

 

சாதி மதம் என்ற பெயரில் மக்களை பிரித்து சீனாவில் அரசியல்வாதிகள் வாழ்வை ஓட்டவில்லை...

                             

போலி தேசபக்தியை ஊட்டி நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட சீனா முயற்சிப்பதில்லை.

 

எனவே அந்த நாடு மேலும் மேலும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.