'நாங்கள் தொப்புள் கொடி உறவுகள்' - முஸ்லிம்கள் பற்றி பேசும் போதே கண் கலங்கிய இந்து சகோதரி
'சுனாமி, பொன்ற பேரிடர் காலங்களில் எங்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்தது முஸ்லிம்கள்தான்.. அவர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள்'
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
'நாங்கள் தொப்புள் கொடி உறவுகள்' - முஸ்லிம்கள் பற்றி பேசும் போதே கண் கலங்கிய இந்து சகோதரி
'சுனாமி, பொன்ற பேரிடர் காலங்களில் எங்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்தது முஸ்லிம்கள்தான்.. அவர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள்'
பாகிஸ்தான் கராச்சியில்
இன்றும் வாழ்ந்து வரும் நமது தமிழ் சொந்தங்கள்...
காவடி எடுக்கிறார்கள்...
மாரியம்மன் கோவில்
கட்டி வழிபடுகிறார்கள்....
பொங்கல் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.
இளம் தலைமுறை தமிழை
மறந்து வருவதாகவும் அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கவலைப்படுகிறார்கள்.
100 வருடங்களாக தாங்கள்
இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இன்றி தாங்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் கூறுகின்றனர்.
மோடியும் அமித்ஷாவும்
வலிந்து அழைத்தாலும் அவர்களின் அழைப்பை புறக்கணித்து வருவதன் மூலம் மோடி அமித்ஷாவை
விட அவர்களுக்கு பாகிஸ்தான் முஸ்லிம்களே பாதுகாப்பானவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்
நமது தமிழ் சொந்தங்கள்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
மாறி விட்டால் இந்துக்களை ஒடுக்குவார்கள் என்று சங்கிகள் பரவலாக பொய்யை பரப்பி வருகின்றனர்.
சங்கிகள் சொல்வது
பொய்தான் என்பதற்கு இந்த காணொளிகள் சாட்சியம் பகர்ந்து கொண்டுள்ளன.
ஆரியர்களின் வேதங்கள் புராணங்களில் திராவிடர்களை எப்படியெல்லாம் சித்தரித்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது
அறிஞர் அண்ணா இந்து
மதம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறார்.
" இந்து
மதமென்றால், அது
எங்களுடையது என்றெண்ணி இரும்பூதி இருக்கும் தமிழ் மக்கள் பலர்நம்மைச்
சூழ்ந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம். இந்து மதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக் கப்பலை
ஓட்டிச்செல்வதற்காக வெட்டிய ஒரு அகழ் என்பதை நம்மவர் பலர் இன்னுந் தெரிந்துகொள்ள
முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். எனவே, இவ்விந்து மதத்தைப் பற்றிய உண்மைகளைத் தமிழ்
மக்கள் அனைவரும் தெரிந்து தெளிதல் பெரிதும் இன்றியமையாததாகும்.
இவ்விந்து
மதம் தமிழ்நாட்டிற் பரவிய காலம், ஆரியர்கள் நம் நாட்டில் வந்து குடியேறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத்
தொடங்கிய காலத்தைக் குறிப்பதாகும். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருமுன் இந்து மதம்
என்ற ஒரு மதமோ அன்றி வேறு மதங்களோ இருந்தனவென்று துணிவதற்குத் துளி சான்று கூடக்
கிடையாது. ஆகையால், ஆரிய மதமாகிய
இவ் இந்துமதத்தைத் தமிழ் மக்களுடைய மதம் என்றுரைக்க ஆராய்ச்சித் துறை கண்ட
அறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள்.
ஆரியர்கள் நம்
நாட்டுக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக
வாழ்க்கையை மேற்கொண்டு செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ் மக்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து
புகுத்தப்பட்ட இந்துமதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லவென்பதை
எடுத்துக்காட்டுவதே நம் குறிக்கோளாகும் ! "
திருநீறு
பூசாத நெற்றியை சுடு. சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து
திக்பஸ்ம
ரஹிதம்பாலம் திக்கிராம மசிவாலயம்
திகனீசார்சனம்
ஜன்ம திக்வித்யா மசிவாத்மிகாம்.
(இ-ள்) பஸ்மமில்லாத
நெற்றியைக்சுடு,
சிவாலயமில்லாத
கிராமத்தையுங் கொளுத்து,
சிவபூஜையில்லாத
ஐந்மத்தையுஞ்சுடு,
சிவஸ்வரூபமில்லாத
வித்தையையுஞ்சுடு என்பதாம்.
அதர்வண
வேதத்தைச் சேர்ந்த “பிருஹஜ்ஜாபாலோபநிடதம்” 1902 ஆம் ஆண்டு பதிப்பு
திருநீறு
பூசாத நெற்றியை சுடு என்பதும் சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து என்பதும் எவ்வளவு பெரிய
ஆபத்தான வார்த்தைகள். சிவனை ஏற்காதவர்கள் எந்த அளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பதை
விளங்க முடிகிறது. எனது முன்னோர்களும் எந்த அளவு கொடுமைகளை அனுபவித்திருப்பாரகள்
என்பதையும் உணர முடிகிறது.
“திருநீறில்
மருந்திருக்கு தெரியுமா?
அதை தினம்
அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா? ..”
“கந்தன்
திருநீறணிந்தால்
கண்ட பிணி
ஓடிவிடும்…”
எந்த
மதத்தவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட திருநீறு பற்றிய பாடல்களை மார்கழி மாதம்
ஒலிபெருக்கியில் கேட்காதவர்கள் இருக்க முடியாது.
இவ்வாறு தனது மதப்
பெருமைகளை கூறுவதை குறை காண முடியாது. ஆனால் சைவ மதத்தை ஏற்காதவர்களின் கிராமங்களை
கொளுத்து என்பதை ஏற்க முடியாது. தகவல் தொழில் நுட்ப வசதி இல்லாத அந்த காலங்களை நினைத்துப்
பாருங்கள். சமண பவுத்த மதத்தினர் எந்த அளவு கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்பது விளங்கும்.
இதில் இந்து மதம்
அன்பையே போதிக்கிறது என்று நமக்கு அறிவுரை சொல்ல வருவார்கள்.