பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுபாஷ் சந்திரா ₹2,200 கோடி கடன்களை ₹65 கோடி செலுத்தினால் போதும் என்று சட்டத் தீர்ப்பாயம் அனுமதி
- சுவனப்பிரியன்
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, August 26, 2026
சுபாஷ் சந்திரா ₹2,200 கோடி கடன்களை ₹65 கோடி செலுத்தினால் போதும் என்று சட்டத் தீர்ப்பாயம் அனுமதி
நபிகள் சொன்ன அறிவுரை ஒரு இலங்கை இந்துப் பெண்ணுக்கும் பொருந்திப் போகிறது
நபிகள் சொன்ன அறிவுரை ஒரு இலங்கை இந்துப் பெண்ணுக்கும் பொருந்திப்
போகிறது
'குறி
சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட
மாட்டாது'. என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள். முஸ்லிம்:
2230
ஜோஸியக்காரன்,
சாஸ்திரக்காரன், குடுகுடுப்பைக் காரன் என்று பல வழிகளில் இந்த ஏமாற்றுப் பேரிவழிகள்
வந்து நமது குடும்ப அமைதியையே கெடுத்து விடுவார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட
ஒரு இலங்கைப் பெண் தனக்கு நேர்ந்த சோகத்தை அழகிய தமிழும் ஆங்கிலமும் கலந்த மொழியில்
விவரிக்கிறார்.
அரபு நாட்டில் பிறந்த
முகமது நபியின் அறிவுரை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு இலங்கைப் பெண்ணுக்கும்
பொருந்தி போகிறது பாருங்கள்.
காணொளி முதல் கமெண்டில்.
Tuesday, August 25, 2026
நம் மதுரையையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த இந்த தம்பதிக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.
ஆஸ்திரேலியாலிருந்து இந்தியாவை சுற்றிப் பார்க்க மதுரை விமான நிலையம் வந்திறங்குகிறார் லொரேனா. நம் மதுரையை சுற்றிப் பார்க்க வாடகை டாக்ஸியை அமர்த்துகிறார். அந்த டாக்ஸியின் ஓட்டுனர் ரஃபீக் மதுரையை சுற்றிக் காண்பிக்கிறார்.
ரஃபீக்கின் நேர்மை நாணயம் பழகும் விதம் அனைத்தும் லொரேனாவுக்கு பிடித்துப் போக இருவருக்கும் காதல் மலர்கிறது. வழக்கம் போல் இரு குடும்பத்தாரும் எதிர்க்கவே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்கின்றனர். இவர்களுக்கு 'மர்யம்' என்ற அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. விஷா பிரச்னைகள் இருந்ததால் சில காலம் மனைவியையும் குழந்தையையும் பிரிந்திருந்தார் ரஃபீக். குழந்தை பிறந்து இரண்டு மாதம் கழித்தே ரஃபீக்கால் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள முடிந்தது.
இதைப் படித்த பலர் அந்த பெண்ணுக்கும் புர்ஹா போட்டாச்சா என்று கலாய்க்கின்றனர். இது அந்தப் பெண்ணின் உரிமை. அவர் எப்படி உடை உடுத்த வேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்க முடியும். மேலும் ஒரு பெண் புர்ஹா அணிந்து சென்றால் நம்மையறியாமல் ஒரு மதிப்பு வந்து விடுவதை பார்க்கிறோம். அந்த பெண்ணுக்கும் இது பாதுகாப்பு.
நம் மதுரையையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த இந்த தம்பதிக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.
ஒரு ஹிந்து பார்த்தான் என்றால் செருப்பால் தான் அடிப்பான்
//இந்த பதிவை கேரள மலப்புரம்
மாவட்டத்தில் வாழும் ஒரு ஹிந்து பார்த்தான் என்றால் செருப்பால் தான் அடிப்பான்//
மலப்புரம் ஹிந்து கீழே வரும் செய்தியை படித்தால்
இரு கரம் கூப்பி முஸ்லிம்களுக்கு நன்றி சொல்வான். இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டுபவனை
செருப்பால் அடிப்பான்.
மலப்புரம்: கேரள
மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் வெங்காரா நகரில் உள்ள ஸ்ரீ அம்மஞ்சேரி
பகவதி கோயிலில் கீதா மற்றும் விஷ்ணுவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு
திருமணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்
(ஐயுஎம்எல்) வெங்காரா பஞ்சாயத்து 12-வது
வார்டின் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் ஐயுஎம்எல் மூத்த தலைவரும்
வெங்காரா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பி.கே. குன்ஹாலிகுட்டி மற்றும் மாநில
தலைவர் சையது சாதிக் அலி ஷிஹாப் தங்கல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து
கொண்டனர்.
பாலக்காடு நகரில் உள்ள பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் (ரோஸ்
மனார் ஷார்ட் ஸ்டே ஹோம்) வசித்து வந்தவர் மணமகள் கீதா. பல்வேறு பிரச்சினைகளால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இல்லம் அடைக்கலம் கொடுத்து வருகிறது. இந்த இல்லத்தை
முஜாஹித் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறது. கீதா, விஷ்ணு
திருமணத்துக்கான ஏற்பாடுகளை ரோஸ் மனார் கண்காணிப்பாளர் செய்தார். ஐயுஎம்எல் இளைஞர்
அணியினர் திருமணத்துக்கான நிதியுதவியை செய்தனர். மணமகன் விஷ்ணு கோழிக்கோடு
மாவட்டம் குன்னமங்களத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மண்ணின்
ஒற்றுமைக்கு சாட்சி: இதுகுறித்து
குன்ஹாலிகுட்டி தனது முகநூலில் வெளியிட்ட பதிவில், “இன்று
கோயில் முற்றம் என் மண்ணின் ஒற்றுமைக்கும் நட்புக்கும் சாட்சியாக இருந்தது. இந்த
நிகழ்வு ஒரு நல்ல செய்தியை தருவதாக அமைந்துள்ளது. திருமண வாழ்வில் அடியெடுத்து
வைக்கும் விஷ்ணு, கீதாவுக்கு வாழ்த்துகள். அரசியல் கருத்து வேறுபாடுகளை
மறந்து இந்த திருமணத்துக்கு ஆதரவு வழங்கிய கோயில் நிர்வாகத்தினருக்கு நன்றி” என
கூறியுள்ளார்.
கேரளாவில் நீண்டகாலமாக காங்கிரஸ் கூட்டணியில் ஐயுஎம்எல்
கட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்து நாளிதழ்
11-07-2023
Monday, August 24, 2026
குர்ஆனில் உள்ள வசனங்களை சொல்வதற்கெல்லாம் கைது செய்வீர்களா?
பரேலி, உத்தரப் பிரதேசம்
சமூக ஊடகப் பிரபலம்
மாரூஃப் ரஸா கான், ஓரிறைக் கொள்கை தொடர்பாக குர்ஆனின்
சூரா அல்-இக்லாஸ் (112:3-4) வசனத்தை மேற்கோள் காட்டினார்—
“அவன் பெற்றெடுப்பதும்
இல்லை, பிறப்பதும் இல்லை; அவனுக்கு நிகர் எவரும் இல்லை.”
பூமி, வானங்கள் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தின் படைப்புகள் அனைத்தும் அவனாலேயே உருவாக்கப்பட்டவை
என்று அவர் கூறினார். இந்தப் பிரபஞ்சம் முழுவதற்கும் அவனே ஒரே உரிமையாளரும் படைப்பாளரும்
ஆவான்.
இந்தக் கூற்றைத்
தொடர்ந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக்
குற்றம் சாட்டி பரேலி காவல்துறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
குர்ஆனில் உள்ள
வசனங்களை சொல்வதற்கெல்லாம் கைது செய்வீர்களா?
ஓரிறைக் கொள்கையை
இந்து மதமும் போதிக்கிறதே? இதற்கு யாரைப் போய் கைது செய்வீர்கள்?
சங்கிகள் மன உளைச்சலின்
உச்சத்துக்கே சென்று விட்டனர்.
'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி
மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page
447&448)
(Sacred books of the east volume1> the
Upanishad part 1, page 93)
ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும்
இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page
745)
(And in sacred books of the east volume 15> The
Upanishadpart 2, page 263)
ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும்
இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page
736-737)
(And sacred books of the east volume 15, the
Upanishad part 2, page 253)
ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா
பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க
முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page
737)
(And in sacred books of the east volume 15, The
Upanishad part 2, page 253)
யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'
யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும்
பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)
யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை
வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில்
நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.


