மரண தண்டனை விதிப்பதற்கு
முன், இத்தாலிய நீதிபதி உமர் முக்தாரிடம்
கேட்கிறார்:
— நீங்கள் இத்தாலிய
அரசுக்கு எதிராகப் போரிட்டீர்களா?
உமர் முக்தார்: ஆம்.
— இத்தாலிய அரசுக்கு
எதிராகப் போரிடுமாறு மக்களைத் தூண்டினீர்களா?
உமர் முக்தார்: ஆம்.
— நீங்கள் எத்தனை ஆண்டுகள்
இத்தாலிக்கு எதிராகப் போரிட்டீர்கள்?
உமர் முக்தார்: சுமார்
20 ஆண்டுகள்.
— நீங்கள் செய்த செயலுக்காக
வருந்துகிறீர்களா?
உமர் முக்தார்: இல்லை.
— உங்களுக்கு மரணதண்டனை
நிறைவேற்றப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உமர் முக்தார்: ஆம்.
வியப்படைந்த நீதிபதி
கூறுகிறார்:
— உங்களைப் போன்ற ஒருவருக்கு,
இத்தகைய முடிவு மிகவும் துயரமானது...
இதைக் கேட்ட உமர்
முக்தார் பதிலளிக்கிறார்:
— முற்றிலும் அதற்கு
நேர்மாறாக! இது என் வாழ்வின் முடிவிற்கான மிக அழகான பாதை.
முஜாஹிதீன்கள் ஜிஹாதை
நிறுத்தும்படி உத்தரவிட்டு அவர் ஒரு பிரகடனத்தை எழுதினால், அவரைக் குற்றமற்றவர் என விடுவித்து நாடு கடத்துவதாக நீதிபதி
குறிப்பிடுகிறார். அதன்பின், உமர் முக்தார் அந்தப்
புகழ்பெற்ற வார்த்தைகளை உரைக்கிறார்:
"அல்லாஹ்வைத் தவிர
வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது அவர்கள் அவனுடைய தூதர் என்றும் ஒவ்வொரு தொழுகையிலும்
சாட்சி பகரும் இந்த விரல்கள், ஒருபோதும் பொய்யை
எழுதாது! நாங்கள் சரணடைவதில்லை; நாங்கள் ஒன்று வெல்வோம்: அல்லது மடிவோம். நாங்கள் இறந்தாலும், நாங்கள் வெல்வோம், நீங்கள் தோற்பீர்கள். ஆனால் வேதனையான விஷயம் இதுதான்: நீங்கள்
இறந்த பிறகுதான் இதை உணர்வீர்கள், அதுவரை இது உங்களுக்கு
எந்தப் பயனும் தராது!"
தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
எந்த சலனமும் இல்லாமல் இறப்பை எதிர் கொண்டார் உமர் முக்தார்.
இன்னாலில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.







