பொன்னியின் செல்வனை (ராஜராஜ சோழன்) பாதுகாத்த முஸ்லிம்கள்
- சுவனப்பிரியன்
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, July 19, 2026
பொன்னியின் செல்வனை (ராஜராஜ சோழன்) பாதுகாத்த முஸ்லிம்கள் P.சிராஜுதீன் எழுத்தாளர்.
Wednesday, July 15, 2026
கேதரின் மேயோ அவர்களின் Mother Indi’a தமிழாக்கமே “இந்திய மாதா”.
கேதரின் மேயோ அவர்களின் Mother Indi’a தமிழாக்கமே “இந்திய மாதா”. இந்நூலில் அவரது சென்னை அனுபவத்தினை “பிராமணீயக்
கொடுமை” எனும் கட்டுரையில் விளக்குகிறார்.இந்தக் கட்டுரையில் மேயோ சந்தித்த
தாழ்த்தப்பட்ட தலைவர்,செல்வந்தர்
அரசியல் தலைவர் யார் எனத் தெரியவில்லை. அவர் பனகல் ராஜா எனும் குறிப்புகள் உள்ளதை
பின்னாளில் அறிந்தேன்.
இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம்
கிடைத்தால் மட்டும் போதாது social
freedom வேண்டும் என்பதை தமிழக அரசியல் தலைவர்கள் நூற்றாண்டுகளுக்கு
முன்பிருந்தே குரல் கொடுக்க ஆரம்பித்ததை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
இனி கட்டுரைக்குள் செல்வோம்.
பிராமணீயக் கொடுமை:
வங்காளத்திலிருந்து ரயில் மார்க்கமாக
சென்னைக்குப் பிரயாணமானோம். காடு, மலை, வனாந்தரம் முதலியவைகளை யெல்லாம் தாண்டிக்கொண்டு ரயில் வாயுவேகம், மனோ வேகமாக வந்து கொண்டிருந்தது. இருபுறமும் ஆகாயத்தை யளாவி
நிற்கும் மரங்களையும், கருமை
நிறமுள்ள மலைகளையும் குன்றுகளையும், கரைபுரண்டு வெள்ளம் ஓடும் ஆறுகளையும், பசுமையான நிலங்களையும், கடந்து வந்தோம். ஆங்காங்கே சிறு கிராமங்களும், மண் குடிசைகளும், மந்தை மந்தையாய் ஆடுகள் மேய்வதும், தென்னை, பலா, புன்னை மருது, புரசு, புளி, அத்தி, ஆல், அசோகம், இலவு, மா, கருந்தேங்கு, வாழை, எலுமிச்சை
முதலியமரங்களடர்ந்த சோலைகளும், மரங்களில்
குரங்கு முதலிய விலங்கினங்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி விளையாடுவதும், குயில், மயில்
போன்ற பறவைகள் இனிமையாகப் பாடுவதும், எங்கள் மனதைக் கவர்ந்தன. இவற்றையெல்லாம் கடந்து சென்னை
வந்து சேர்ந்தோம். சென்னை ராஜதானி தான் பிராமணீய ஹிந்து மதத்தின் இருப்பிடமாகும்.
பூர்வீக குடிகளான கருநிறமுள்ள திராவிட மக்களின் இருப்பிடமும் சென்னை ராஜதானியே.
பிராமணீய ஹிந்து மதம் திராவிடர்களை சின்னாபின்னப் படுத்தி, அவர்களை பலஜாதிகளாகப்பிரித்து, பறையர்களெனவும், கீழ் ஜாதியார்களெனவும் கூறி அடிமையாக ஒதுக்கி வைத்ததுடன்
அவர்களை அறிவில்லாதவர்களாயும், கல்வி
இல்லாதவர்களாயும் செய்து நசுக்கி வைத்தது. பிரிட்டிஷாரும் வந்து சேர்ந்தனர். நாட்டில்
அமைதியை ஏற்படுத்தினர். ஜனங்களும் கொஞ்சங் கொஞ்சமாக தங்கள் உரிமையைப் பெற்றனர்.
ஜனநாயக ஆட்சி நிலவ ஆரம்பித்தது.
திராவிட மக்களும் காலக் கிரமத்தில்
தாங்கள் நெடு நாளாகத் தூங்கிக் கொண்டிருந்த உறக்கத்திலிருந்து கண் விழித்துக்
கொண்டனர். திராவிட மக்களைக் கண்டு மற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தாரும் தலை தூக்கத்
தொடங்கினர். பிராமணர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதார் கட்சி என்ற பெயருடன் ஒரு
கட்சி தோன்றியது. இக்கட்சிக்கு அதிக பலமிருப்பதால், சென்னை சட்டசபையில் பிராமணர் வகித்திருந்த அரசியல்
ஆதிக்கத்தை பறிமுதல் செய்து, அதிகாரங்களை
பிராமணரல்லாதார் கைப்பற்றிக் கொண்டனர். பிராமணர் ஆதிக்கத்தை ஒழித்து
பிராமணரல்லாதார் அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டது இந்து தேச சரித்திரத்தில்
எழுதப்பட வேண்டிய முக்கியமானதொரு சம்பவமாகும்.
தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவரும், செல்வந்தரும், அரசியல் துறையில் வேலை செய்து வருபவரும், பொது ஜனங்களால் நன்கு மதிக்கப்பட்ட வருமான ஒருவரை
சென்னையில் சந்தித்தேன். அவர் மிகவும் ஊக்கமும், உற்சாகமும் உள்ளவர். தாராளமாகப் பேசும் இயல்புள்ளவர்.
அவருடன் நான் வெகுநேரம் அந்தரங்கமாக சம்பாஷித்துக் கொண்டிருந்தேன்.
பிராமணர்களைப்பற்றி விவரமாகக் கூறும்படி அவரை வேண்டிக்கொண்டேன். அவர் பண்டைக்காலத்தில்
எல்லா மனிதர்களும் அவரவர்கள் விருப்பப்படி வாழ்ந்து வந்த பொழுது பிராமணன் மட்டும்
கல்வி கற்கத் தொடங்கினான், பிராமணன்
இயற்கையிலேயே மிகவும் தந்திரசாலியாதலால், அவன் கல்வி கற்றதும், புராண சாஸ்திரங்களை யெல்லாம் தன்வசமாக்கிக் கொண்டு பிராமணனே
எல்லா ஜாதியாரிலும் உயர்ந்தவன், பிராமணனே
அனைவருக்கும் குரு என அந்த சாஸ்திரங்களில் எழுதி வைத்து விட்டான்.
ஆண்டுகள் பல கழிந்தன. பிராமணர்களைத்
தவிர வேறு எவரும் கல்வி கற்கவில்லை. பிராமணன்தான் கல்வி கற்றவன். அவனைத் தவிர வேறு
எவரும் புராணங்களையும் சாஸ்திரங்களையும் கண்ணடுத்துக் கூட பார்க்கக் கூடாதென
பிராமணன் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டபடியால் பிற ஜாதியார் அவைகளில்
நம்பிக்கைவைத்து அவனை 'பூதேவன்*
என மதித்து அவனுக்குக் கீழ்படிந்து நடக்க ஆரம்பித்தனர். ஆகவே எல்லா ஹிந்துக்களுக்கும்
பிராமணனே தலைவனானான்.
அவன் கூறிய மொழிக்கு எதிர்மொழிகூற
எவருக்கும் தைரியமில்லை. அவன் ஆணைக்கு மறுமொழி கூறாமல் அவனிட்ட வேலைகளையெல்லாம்
தாள் பணிந்து, இருகை
கூப்பி, செய்து
வந்தனர். ஆங்கிலேயர் வந்து, எல்லா
ஜாதியார்களும் கல்வி பயிலலாமென்ற உரிமையை அளித்து, பள்ளிக்கூடங்கள் ஸ்தாபிக்கும் வரை, ஹிந்து இந்தியா மேற்கூறிய நிலைமையிலேயே இருந்து வந்தது.
சென்னை மாகாணத்திலோ நாங்கள்
பிராமணர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகளாக பிராமணன்
உயர்ந்த நிலைமையிலிருந்து
வந்ததனாலும், பேய்க்
கூட்டங்களைப் போல் தந்திரமும், சூழ்ச்சியுமுள்ளவனாக
விருந்தபடியாலும், அவனை
எதிர்த்துப் போராடி வெல்வது அதிக கஷ்டமாகத்தானிருக்கிறது.
பத்திரிகைகள் பிராமணர்
வசமிருக்கிறது. சர்க்கார் உத்தியோகங்களில் 100-க்கு 80 பிராமணன் கையிலிருக்கின்றது. நீதி ஸ்தலங்கள், கச்சேரிகள் எல்லாம் பிராமணனுக்கே சொந்தம். கீழ்த்தர
குமாஸ்தா உத்தியோகத்திலிருந்து உயர்தர நீதிபதி உத்தியோகம் வரை பிராமணன் வசமே
யிருக்கின்றது. அதிகாரங்கள் தங்கள் கையில் அகப்பட்டுக்கொள்ளவே ஜனங்களை விசேஷமாக
பெண்களை அதிகமாக பயமுறுத்த ஆரம்பித்தனர். ஏனெனில் நாங்களெல்லாம் ஏழைகள், கல்வியில்லாதவர்கள். பிராமணர்களுடைய சூழ்ச்சியை அறியாமல்
அவர்கள் கூறிவந்த மூட பழக்க வழக்கங்களில் நம்பிக்கை வைத்து விட்டோம். ஆகவே 'பூதேவர்' களாகிய
பிராமணர்களுக்கு நாங்கள் அடிமைகளாகிவிட்டோம்.
எங்களை நசுக்கி, கசக்கிப் பிழிவதற்கு பிரிட்டிஷார் தடையாயிருப்பதால்
பிரிட்டிஷார் மீது பிராமணன் சீறி விழுகின்றான். ஆத்திரத்துடன் துள்ளிக்
குதிக்கின்றான். பெரிய தேசாபிமானிபோல் போலி வேடந்தரித்து மேடைகள் மீது
நின்றுகொண்டு பிரிட்டிஷார் நாட்டை விட்டு போய்விட வேண்டுமென்று உரக்கக்
கத்துகிறான். போதும்! போதும்! பிரிட்டிஷார் போய்விட்டால் பிராமணனுக்குக் கொண்டாட்டந்தான்.
எங்கள் மீது நன்றாகக் குதிரை சவாரி செய்வான். எங்கள் மூச்சைப் பிடித்துக் கொல்லத்
தொடங்குவான். பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியா என்ன
நிலைமையிலிருந்ததோ அந்த நிலைமை மறுபடியும் வந்துவிடும். பண்டைக் காலத்தில்
ஆதிக்கம் பெற்றிருந்த புரோகிதராட்சி மறுபடியும் வந்து விடும். நாங்களெல்லோரும்
மீண்டும் அடிமைகளாக வேண்டியதுதான். இன்னும் மூட நம்பிக்கைகள் நம்மை விட்டபாடில்லை.
இந்நிலைமையிலேயே நமக்கு இத்துணை இன்னல்களிருக்கின்றன. இன்னும் பண்டைய
புரோகிதராட்சி வந்து விட்டால் எங்கள் பாடு திண்டாட்டந்தான். இதுமட்டுமா, இன்னும் சொல்கிறேன் தயை கூர்ந்து சற்று செவி சாய்த்துக்
கேட்க வேண்டுகிறேன்.
பணம் பறித்தல்:
சர்க்காருக்கு கொடுக்கும்
வரியைக்காட்டிலும் பிராமணனுக்கு அதிகமான வரிகளைக் கொடுக்கிறோம். பிறந்த
தினத்திலிருந்து இறக்கும்வரை ஒரு ஹிந்து பிராமணனுக்கு வரி
கொடுத்துகொண்டேயிருக்கிறான். குழந்தை பிறந்தவுடன் பிராமணனுக்கு தக்ஷணை கொடுக்க
வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை சுகமாய் வளராதாம். குழந்தை பிறந்த 16வது நாள் 'தீட்டுக்
கழியும்' சடங்கென்று
ஒரு விழா நடத்த வேண்டும். அதற்கும் பிராமணனுக்கு தக்ஷனை கொடுக்க வேண்டும். சிறிது
நாட் கழித்து குழந்தைக்குப் பெயரிட வேண்டும். அதற்கும் அவனுக்கு தக்ஷணை உண்டு. ஒரு
வருடம் கழித்து ஆண்டு நிறைவு விழா வந்துவிடும். அப்பொழுதும் பிராமணனுக்குக்
கொண்டாட்டந்தான்.
பின்பு குழந்தைக்கு சாதம் ஊட்ட
வேண்டும். அதற்கும் பிராமணனுக்குத் தக்ஷணை உண்டு. குழந்தை ஆண் குழந்தையாயிருந்தால்
குழந்தைக்குக் குடுமி வைக்க வேண்டும். அதற்கும் பிராமணனுக்கு தக்ஷணை உண்டு. ஏழாவது
வயதில் குழந்தைக்கு அக்ஷராப்பியாசம் செய்விக்க வேண் டும். அப்பொழுதும்
பிராமணனுக்குக் கொண்டாட்டந்தான். கொஞ்சம் செல்வந்தர்கள் வீடாயிருந்தால் தங்கத்தினால்
பேனா செய்து அதை பிராமணனுக்குத் தத்தம் பண்ண வேண்டும்.
பெண் குழந்தையாயிருந்தால், 16 வயதுக்குள் கல்யாணம் செய்விக்க வேண்டும். இச்
சமயத்தில் பிராமணனுக்கு கொழுத்த பணம் கிடைக்கும். கிரகண தினம் வந்தால் அப்பொழுதும்
பிராமணனுக்கு ஏராளமான தக்ஷணை கிடைக்கும். இன்னும் ருது சாந்தி முதலிய
வைபவங்களிருக்கின்றன.
இவ்விதமாக பல தடவைகளில் பிராமணனுக்கு
உயிருள்ள மட்டும் தக்ஷணை கொடுக்க வேண்டும்.
இது இத்துடன் நின்றபாடில்லை. இறந்த
பின்பும் பிராமணப் பேய் நம்மை விட்டு விடாது. பிராமணனுக்குப் பணம் கொடுக்காமல்
பிரேதத்தை அடக்கம் செய்யக் கூடாது. பிரேதத்தை அடக்கம் செய்யும் பொழுது
பிராமணனுக்குக் கொழுத்த தக்ஷணை கொடுக்க வேண்டும். ஒருவன் இறந்து ஒரு வருடம் வரை
மாதா மாதம் அவனுடைய மகன் சிரார்த்தம் கொடுக்க வேண்டும். ஏனெனில் பிராமணன் உண்பதும், உடுப்பதும், குடிப்பதும் பிதுர்களுக்கு திருப்திச் செய்யக் கூடியதாம்.
பின்பு ஒவ்வொரு வருடமும் இறந்தவனுடைய மகன் பிராமணனுக்கு, வயிறு நிறைய விருந்தளிக்க வேண்டும், ஹிந்து மதச்சாரப்படி இந்த வருமானமெல்லாம் பெற பிராமணனுக்கு
உரிமையிருக்கிறதெனக் பிராமணனுக்குக் கொடுக்க வேண்டியவைகளைக் கொடுக்காதவன்
நரகத்தில்போய் விழுந்துவிடுவான் என பிராமணன் சொல்லுகிறான். இந்த சடங்குகள்
நடக்கும் போதெல்லாம் பிராமணனுடைய பாதங்களை தண்ணீரால் கழுவி அந்த அழுக்குத் தண்ணீரை
ஜனங்கள் குடிக்க வேண்டுமாம். ஏழைகளை பல மூட வழக்கங்களில் நம்பச் செய்து, அவர்களை ஏமாற்றிப் பணம் பறித்து சோம்பேறியாக பிராமணன் வாழ்ந்து
வருகிறான்,
சர்க்கார்
உத்தியோகமோ, அல்லது
வக்கீல் உத்தியோகமோ தவிர வேறு எந்த உத்தியோகமும் பிராமணன் பார்ப்பதில்லை. சென்னை
மாகாணத்தில் 15 லக்ஷம்
பிராமணர்களிருக்கிறார்கள். இவர்களுக்கு அடிமையாக, இவர்களுக்கு உழைத்துப் போடுவதற்கு சுமார் நான்கு கோடியே
பத்து லக்ஷம் பிராமணரல்லாதாரிருக்கின்றனார். ஆகையால் நாங்கள் விடுதலை பெற்று, சுதந்திரமடைந்து, பிறர் உதவியின்றி வாழும் ஆற்றல் அடையும்வரை,நாட்டில் சமாதானத்தையும், பாதுகாப்பையுமளிக்க நம் தேசத்தை அன்னிய தேசத்தவர் ஆளுவதே
பொருத்தமானது. எங்களை ஏமாற்றி, எங்களுடைய
பணத்தை பிய்த்து, பிடுங்கித்
தின்று கொண்டே, எங்களைத்
தீண்டாதவர்களென்றும், நாங்கள்
தொட்டால் அசுத்தமாகி விடுமென்றும் கூறும் 15 லக்ஷம் பிராமணர்களுக்கு அடிமையாக நாங்கள்
வாழ்வதைவிட எங்களைப் பாதுகாத்துவரும் அன்னியர் ஆளுகை எவ்வளவோ மேலானது.
குறிப்பு: இந்திய மாதா வின் மூல
ஆங்கில நூலானது 1927 ல்
வெளியானது. அதற்கு அடுத்த ஆண்டே (1928) ல் இந்திய மாதா தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டது. இதை தமிழில் மொழிபெயர்த்தவர் கே.எஸ்.சுந்தரம் அவர்கள்.இந்த
நூலின் முகவுரையில் எஸ்.சுந்தரம் அவர்கள் கடுமையாக மேயோ அவர்களை
விமர்சித்துள்ளார். 1989 ல்
வெளியான இந்நூலின் இரண்டாம் பதிப்பிற்கு கி.ரா அவர்கள் அருமையான முன்னுரை
வழங்கியிருக்கிறார்.இதைத் தவிர இந்திய மாதா எனும் தலைப்பில் வ.ரா மற்றும் சி.எஸ்
ரங்கய்யர் மொழிபெயர்த்த நூல்களும்(காதரீன் மேயோவின் இந்திய மாதா: ஏற்பும்
மறுப்பும்) உண்டு.
அயோத்தியில் நடந்தது சாதாரண திருட்டு அல்ல
அயோத்தியில் நடந்தது சாதாரண திருட்டு
அல்ல;
காவிக் கும்பலின் திட்டமிட்ட மெகா
கொள்ளை
- கே.வசந்தன்
நாட்டில் உள்ள முன்னணி செய்தி ஊடகங்க
ளுக்கு “இதை வெளியிடக் கூடாது அல்லது அடக்கி வாசியுங்கள்” என்ற ரகசிய உத்தரவுகள்
பறந்ததால், அயோத்தி
ராமர் கோவில் விவகாரம் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மத்தியில் “இந்தக் கொள்ளைக்
கூட்டத்திடமிருந்து கடவுள் ராமராவது தப்பிப்பாரா?” என்ற நியாயமான கேள்வி இன்று வலுவாக
எழுந்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கொள்ளையும்
சங்பரிவாரின் சூழ்ச்சியும்
அயோத்தி ராமர் கோவிலில் சமீபத்தில்
நடந்துள்ள பெரும் கொள்ளை, ராமரைத்
தனது இஷ்ட தெய்வ மாகப் போற்றி வழிபடும் உண்மையான பக்தர்களைப்
பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ஏதோ இப்போது திடீரென நடந்த சாதாரண திருட்டு
அல்ல, ஆரம்பத்திலிருந்தே
திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் பெரும் கொள்ளை என்று செய்திகள் தெரி
விக்கின்றன. மதவெறியை ஊட்டி மக்களைத் திரட்டிய சங்பரிவார் கும்பல், எளிய மக்களின் கண்களை மறைத்து இவையெல்லாம் பொதுமக்களின்
கவனத்திற்கு வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. எல்லாவற்றையும் விட அதிர்ச்சி
என்னவென்றால், பிரதமர்
நரேந்திர மோடி யாரையெல்லாம் தனது ‘நம்பிக்கைக்குரியவர்கள்’ என்று கூறி கோவில்
பொறுப்புகளில் அமர்த்தினாரோ, அதே
கூட்டம்தான் இந்தத் ‘திருப்பணியைச்’ செய்துள்ளது.
ஞானேஷ்குமார் குப்தாவை நாடறியும்; அவர் பெயரைச் சொன்னாலே ‘ஓட்டுத்திருட்டு’தான் நினை வுக்கு
வரும். மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்பியபடி தேர்தல் ஆணையம்
செயல்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக நிய
மிக்கப்பட்டார். ராமர் கோவிலில் இந்தக் கொள்ளை நடந்த காலம் முழுவதிலும், அதாவது கடந்த 4 ஆண்டு களாகக் கோவில் கமிட்டியின் உறுப்பினராக மோடி யால்
நியமிக்கப்பட்டிருந்தவரும் இதே ஞானேஷ் குமார் குப்தாதான். இது குறித்துக் கோவில்
கட்டுமா னக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா வெளிப் படுத்திய கருத்து
முக்கியமானது. “குப்தா உறுப்பி னராக இருந்த காலத்தில்தான் இத்தனை கொள்ளை யும்
நடந்துள்ளது; இந்தத்
தகுதியை வைத்துத்தான் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவரை பிரதமர் நியமித்தார்
போலும்” என அவர் வெளிப் படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
அஷ்டதாது முதல் தங்கப் புத்தகம் வரை:
அடித்த கொள்ளைக்கு அளவில்லை
ஆரம்பத்தில் இந்தக் கொள்ளை
வெளியுலகிற்குத் தெரிந்தபோது ரூ. 200 கோடி மதிப்புடையது என்று சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகமாகும். ஏனெனில், திருடப்பட்டது உண்டியலில் பக்தர்கள் அளித்த காணிக்கைப் பணம்
மட்டுமல்ல; மிகப்பெரிய
அளவில் காணிக்கையாக அளிக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி
என அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உச்ச பட்சமாக ராமர் பாதத்தில் இருந்த
தங்கப் புத்தகமும் திருடப்பட்டுள்ளது.
அதுமட்டுமா? தங்கம், வெள்ளி, துத்தநாகம், செம்பு, ஈயம், தகரம், இரும்பு, பாதரசம் ஆகிய 8 உலோ கங்களின் கலவையான ‘அஷ்டதாது’ என்ற புனிதப் பொருளும்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த அஷ்டதாதுவைக் கொண்டுதான் கோவில்களில் சிலைகளும்
புனிதச் சின்னங்களும் வடிவமைக்கப்படு வது வழக்கம். இவர்களின் “ராமபக்தி” எத்தகையது
பாருங்கள்! இவை அனைத்தும் ராமர் கோவில் கட்டுவதற்காகப் பலராலும் நன்கொடையாக
அளிக்கப்பட்டவை ஆகும். இறைநம்பிக்கையோடு கொடுத்த மக்களின் உணர்வுகளுக்கு, இந்த “இந்து மதக் காவலர்கள்” இழைத்த துரோகம் அப்பட்ட மாக
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உ.பி. அரசால் கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிலரைத் தவிர, இந்தக் கொள்ளையில் பெரும் ஆதாயம் அடைந்த முக்கியப்
புள்ளிகள் இன்னும் வெளியில் சுதந்திரமாகவே உலவுகின்றனர்.
பாதுகாப்பு விதிமீறல்களும்
மறைக்கப்பட்ட உண்மைகளும்
காணிக்கைப் பொருட்களைப் பாதுகாக்கும்
பணியில் முக்கியப் பொறுப்பு வகித்த அதிகாரி செய்தி யாளர்களிடம் கூறும்போது, “தங்கம், வெள்ளி, வைரம்
போன்ற விலை உயர்ந்த காணிக்கைகள் அனைத்தும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத்
ராயிடம் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டது; இதர பொருட்கள் மட்டுமே எனது வசம் கரசேவக்புரத்தில் இருந்தன”
என்று தெரிவித்துள்ளார்.
கட்டுமானக் குழுத் தலைவர்
நிருபேந்திர மிஸ்ரா, “பரிந்துரைக்கப்பட்ட
பாதுகாப்பு விதிகள் மற்றும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடை முறைகளில் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவா கவே
செயல்படுத்தப்பட்டது; 90 சதவீதம்
கண்டு கொள்ளப்படவில்லை” என்று அம்பலப்படுத்தி யுள்ளார். கொள்ளையடிப்பதற்கு கதவைத்
திறந்து விட்ட கதைதான் இது.
குறிப்பாக, காணிக்கை எண்ணும் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள்
பொருத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தி யும், “எண்ணுபவர்கள் நம் ஆட்கள்தான், சந்தே கப்படத் தேவையில்லை” எனக் கூறி அறக்கட்டளை யின்
செல்வாக்கு மிகுந்த நிர்வாகி அதைத் தடுத்துள் ளார். எனினும், பாதுகாப்பு ஏஜென்சிகள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பொருத்தப்பட்ட
கேம ராக்கள் மூலம் விசாரணை நடத்தியதில், கோவில் ஊழியர் ஒருவரின் வீட்டு மாட்டுச் சாணக் குவிய லுக்கு
அடியில் 10 லட்சம்
ரூபாய் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய திரு
டர்களுக்குக் கோவில் நிர்வாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மறைமுகப் பாதுகாப்பு
அளிக்கப் பட்டுள்ளது. சாதாரண தனியார் நிறுவனம் கூட ஊழியர்களைப் பரிசோதித்தே
அனுப்பும் நிலை யில், இங்கு
ஒரு சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது ஏன்? உயர் காவல்துறை அதிகாரி கள் கூடக் காணிக்கை எண்ணும்
அறைக்குள் செல்ல முடியாதபடி தடுத்தது, அறக்கட்டளையின் செல்வாக்கு மிக்க அறங்காவலரின்
உத்தரவுப்படியே நடந்துள்ளது.
மோடியின் நேரடித் தலையீடும்
ஆர்எஸ்எஸ் ஆட்களின் ஆதிக்கமும்
1989-இல் கோவில் அறக்கட்டளையை உரு வாக்கியதில்
மோடிக்கு முக்கியப் பங்குண்டு. ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர இந்துத்துவக் கோட்பாடு
கொண்ட நம்பகமான உறுப்பினர்களைக் கொண்டே இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டது. சட்ட விதி
முறைக்காகப் பெயரளவில் ஒரு தலித் உறுப்பினர் மட்டும் சேர்க்கப்பட்டார். எனவே, மோடியின் ஆட்கள்தான் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.
அறக்கட்டளையின் முக்கியப் பொறுப்பில்
உள்ள சம்பத் ராய், நீண்டகால
ஆர்.எஸ்.எஸ். செயல் பாட்டாளர் ஆவார். இவர்தான் ராமருக்கு நிலம் வாங்கி யதில்
பெரும் ஊழல் செய்த உத்தம ராமபக்தர். அதாவது, ரூ.3 கோடிக்கும்
குறைவான மதிப்புள்ள நிலத்தை வாங்கி, சில நாட்களிலேயே அதனை 24 கோடி ரூபாய்க்கு அறக்கட்டளை வாங்கியதா கக்
கணக்குக் காட்டியவர். இவரது மேற்பார்வை யில்தான் அனைத்து அன்றாட வழிபாடுகளும்
நடக்கின் றன. எனவே, இவரது
கார் ஓட்டுநர் டுன்னு யாதவ் உள்ளிட்டோருக்கு இந்தக் கொள்ளையில் தொடர்பி ருப்பதும், சம்பத் ராயின் சம்மதத்துடன்தான் இவை யெல்லாம் நடந்துள்ளன
என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றிப் புலனாகிறது.
சங்கராச்சாரியார்களின் கண்டனமும்
பாஜகவின் மூடிமறைக்கும் வேலையும்
இந்த ஊழல் ஒவ்வொன்றாக
வெளிச்சத்திற்கு வந்தவுடன், பா.ஜ.க.வின்
ஐடி விங் இதனைத் திசை திருப்ப எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்தி அரசியல் சாயம்
பூசியது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தத் திருட்டைப் பற்றிப் பொதுவெளியில்
விவாதிப்பது ராமனையே அவமதிப்பதாகும்” என்று கூறி மூடிமறைக்க முயன்றார்.
இருப்பினும், சங்பரிவாரின் இந்தத் தந்திரங்கள் பலிக்கவில்லை.
சங்கராச்சாரியார்கள் மற்றும் கோவில் கட்டுமானத்தில் ஆரம்பத்தில் இருந்தே தங்களை
இணைத்துக்கொண்ட பல முக்கிய நபர்கள் இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை
களை வெளியிட்டுள்ளனர். அறக்கட்டளையின் அடுத்த தலைவராக வரக்கூடிய தகுதியுடைய மஹந்த்
கமல் நயன்தாஸ், “கடந்த
காலங்களில் சாதாரண சைக்கி ளில் சென்றவர்கள், இன்றைக்குச் சொகுசு கார்களி லும் அரண்மனை போன்ற
பங்களாக்களிலும் வாழ்கி றார்கள்; இவர்களுக்குத்
தெரியாமல் இந்தத் திருட்டு எப்படி நடந்திருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியில்
விரக்தியில், “தவறு
செய்தவர்களை அந்த ராமரே பார்த்துக்கொள்வார்” என்று கூறும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளார்.
மோடியின் மௌனமும் பாபா லால் தாஸின்
தியாகமும்
“ஆரம்பத்திலிருந்தே கோவில் அறக்கட்டளையை மோடிதான் தன்
கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்” என்று அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி பகிரங்க மாக
விமர்சித்துள்ளார். வினய் கட்டியார் போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் தீவிர விசாரணை
கோரி யுள்ளனர். ஆனால், பிரதமர்
மோடியோ இதுவரை வாய் திறக்கவில்லை.
கோவில் கட்டுமானத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை குவிந்தபோதே ஊழல்
புகார்கள் எழுந்தன. ஆனால், மக்கள்
கண்ணில் மண்ணைத் தூவி உண்மைகள் மறைக்கப்பட்டன. காவல் அரணாக நிற்க வேண்டிய ஊடகங்களோ
ஆர்.எஸ்.எஸ்.-இன் செல்லப்பிராணிகளாக மாறிவிட்டன.
இத்தருணத்தில் நாம் பாபா லால் தாஸை
நினைவுகூர வேண்டும். 1980-களில்
பாபர் மசூ திக்குள் வைக்கப்பட்ட சிலைக்குப் பொறுப்பாளராக நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்டவர் அவர். “அயோத்தி விவகாரம் ஒரு உள்ளூர் நிலப்பிரச்சனை; அதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது” என்று பகிரங்க மாக
முழங்கியவர். சங்பரிவார் தனது சுயநல அரசியலுக்காக ராமர் கோவிலைப் பயன்படுத்து வதை
எதிர்த்தார்.
அயோத்தியின் மத நல்லிணக்கத்தைக்
குலைக்க வேண்டாம் என்றும், அத்வானியின்
ரத யாத்தி ரையை எதிர்த்தும் குரல் கொடுத்தார். ஆனால், கல்யாண் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு அவரைப்
பதவியிலிருந்து நீக்கியது. ொடர்ந்து 1993 நவம்பர் 16 அன்று அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் “புரூட்டஸின் வாள் புனிதமானது” என்ற
கூற்றின்படி, துரோகம்
செய்வதும் கொல்வதும் சங் பரிவாரத்தின் புனிதமான செயல்களாகும். தங்கள்
“லட்சியத்திற்காக” அவர்கள் ராமரையே ஏமாற்றத் தயங்க மாட்டார்கள். இவ்வளவு நடந்தும்
பா.ஜ.க.வின் இரட்டையர்களான மோடி யும் அமித்ஷாவும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் மௌனம் காப்பது ஏன்?
இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்
உத்தரப் பிரதேச அரசு இந்தக் கொள்ளைச்
சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை கூடப்
பதிவு செய்யவில்லை. வெறும் கண் துடைப்பிற் ்காக ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை
மட்டுமே அமைத்துள்ளது. இறுதியில், “இது
தேசத்தையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தத் தேச விரோதி களால் புனையப்பட்ட கதை”
என்று கூறி வழக்கை முடிக்கவும் வாய்ப்புள்ளது.
ஊடகங்கள் வாய்மூடி இருப்பதாலும், அனைத்தும் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் எது
நடந்தா லும் வியப்பில்லை. இந்து மதத்தின் பெயராலும், ராமரின் பெயராலும் ஆட்சிக்கு வந்த சங்பரிவாரக் கும்பல்
தங்களின் சுயரூபத்தைக் காட்டியுள்ளது.
நன்றி : தீக்கதிர் 15 /07 /26

