Followers

Saturday, April 11, 2026

பாகிஸ்தான் வந்த அப்பாஸ் அராக்சியின் விமான இருக்கைகளில் இறந்த பள்ளிக் கூட குழந்தைகளின் படங்கள்.


 



பாகிஸ்தான் வந்த அப்பாஸ் அராக்சியின் விமான இருக்கைகளில் இறந்த பள்ளிக் கூட குழந்தைகளின் படங்கள்.

 

எதற்காக நாங்கள் கொல்லப்பட்டோம் என்று மறுமையில் ட்ரம்ப், நெதன்யாஹூக்கு எதிராக இந்த குழந்தைகள் மறுமையில் வழக்கு தொடுப்பார்கள்.

 

கண்டிப்பாக அதனை நாம் அனைவரும் காண்போம் இறைவன் நாடினால்..

 

 

நம் நாட்டில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் பிரச்னைகள்...

 

நடக்கும் விபத்துகளுக்கு மாடுகளையா நாம் அரஸ்ட் பண்ண முடியும்?

 

 

ஏழைகளுக்கு உதவுவதைக் கூட புது மாதிரியாக செய்கிறார் இந்த இஸ்லாமிய பெண்மணி

 

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப் படும் மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

(புகாரி: 5177) 

ஏழைகளைப் புறக்கணித்து விட்டுப் பணக்காரரை மட்டும் விருந்துக்கு அழைப்பதை இன்றைய சமூகம் மரியாதையாகக் கருதுகின்றது. ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ அதைப் பாவமாக்கி இந்த அநாகரிகச் செயலைக் கண்டித்து சமூக நலன் காக்கின்றது.

 

பக்தர்கள் 11,000 லிட்டர் பாலை டேங்கர் லாரி மூலம் நர்மதை ஆற்றில் கொட்டியுள்ளனர்

 




பக்தர்கள் 11,000 லிட்டர் பாலை டேங்கர் லாரி மூலம் நர்மதை ஆற்றில் கொட்டியுள்ளனர்

 

பாலை ஆற்றில் கொட்டுவதால் ஆக்சிஜன் குறைந்து மீன்கள் பெரும் அளவில் இறக்க வாய்ப்புள்ளது

 

மத்திய பிரதேசத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் அரங்கேறிய ஒரு செயல் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், ஆற்றில் உள்ள மீன்களுக்கு “பால் புகட்டும்” விசித்திரமான நேர்த்திக்கடனுக்காகவும் பக்தர்கள் 11,000 லிட்டர் பாலை டேங்கர் லாரி மூலம் நர்மதை ஆற்றில் கொட்டியுள்ளனர்

 

ஆற்றில் வெண்ணிற அலைகள் எழும்பி ஓடிய இந்தத் துயரக் காட்சி, பார்ப்பவர்களை ஒருபுறம் வியக்க வைத்தாலும், மறுபுறம் இயற்கை ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

 

நன்னீர் நிலையில் இவ்வளவு பெரிய அளவில் பால் கலப்பது, ஆற்றில் உள்ள ஆக்சிஜன் அளவை முற்றிலுமாகக் குறைத்து, அங்குள்ள மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களை மூச்சுத்திணறச் செய்து ஒட்டுமொத்தமாக அழிக்கும் “சுற்றுச்சூழல் பேரழிவை” ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

 

இதைச் சொன்னால் நம்மை தேச துரோகி என்பர் சங்கிகள்.

 

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில்  இறைவன் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

குர்ஆன் 7:31

 

 

ஈரானில் 50000 நபர்கள் தொழக் கூடிய பிரம்மாண்டமான சன்னி பள்ளிவாசல்

 

 

அரசு தண்ணீர் தொட்டியில் தலித்களை தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பிராமணர்கள்.

 

இந்தியாவில் இஸ்லாம் இந்த அளவு வளர்ந்ததற்காகன காரணத்தை தெரிந்து கொண்டீர்களா?

 

Thursday, April 09, 2026

உயிரை விட்டாலும் விடுவோமே தவிர அமெரிக்காவுக்கு தலை வணங்க மாட்டோம். - ஈரானிய சிறுவனின் பேச்சு

 




உயிரை விட்டாலும் விடுவோமே தவிர அமெரிக்காவுக்கு தலை வணங்க மாட்டோம். - ஈரானிய சிறுவனின்  பேச்சு 

--------------------------------------------------------------------------

 

சிறுநீர் கழித்து சுற்றுப் பறத்தை மாசுபடுத்துபவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது அரசு நிர்வாகம்.

 

மல ஜலம் கழிப்பது பற்றி நபிகள் நாயகம் என்ன சொல்கிறார்கள்?

 

1)“உங்களில் எவரும் சுவர்களிலோ, பூமியிலோ உள்ள பொந்துகளில் சிறுநீர் கழிக்கவேண்டாம்.” என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (அறிவிப்பாளர்:

 

ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஸர்ஜஸ் (ரலி), நூல்: அபூதாவூது)

 

பொந்துகள், பூச்சிகள் மற்றும் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் வீடுகள். அதில் சிறுநீர் கழிப்பதால் அவைகளுக்கு தீங்கு நேரிடுகிறது. சில சமயம் விஷ ஜந்துக்கள் வெளியே வந்தால் சிறுநீர் கழிப்பவருக்கு தீங்கு நேரிட வாய்ப்புள்ளது. எனவே தான் நபிகள் நாயகம் அவர்கள் இதை விட்டும் தடுத்துள்ளார்கள்.

 

2) “சாபத்தை பெற்றுத் தரக்கூடிய இரண்டு விஷயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் கூற, அவை எவை? என்று தோழர்கள் வினவினார்கள்” (1) நடமாடும் பாதையில் மலம், ஜலம் கழிப்பது, (2) மக்கள் ஓய்வெடுக்கும் மர நிழலில் மலம், ஜலம் கழிப்பது” என்று நபிகள் நாயகம் அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

 

 

 

ஈரானில் இஸ்லாமிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பெண்கள் பின்தங்கியுள்ளனர் -ட்ரம்ப்

 

அமெரிக்க பெண்கள் ஈரானிய பெண்கள் ஒப்பீட்டளவில் அறிக்கைகள் கூறுவதென்ன?

 

 

 

Wednesday, April 08, 2026

கடினமாக உழைக்கும் தெஹ்ரான் மாநகராட்சி ஊழியரின் நெற்றியில் கலாச்சார அமைச்சர் முத்தமிட்டார்.


 


கடினமாக உழைக்கும் தெஹ்ரான் மாநகராட்சி ஊழியரின் நெற்றியில் கலாச்சார அமைச்சர் முத்தமிட்டார்.

 

எனது அலுவலகத்தின் பின்னால் இருக்கும் பள்ளியில் நேற்று மதிய நேர (லுஹர்) தொழுகைக்கு போனபோது எடுத்த புகைப்படம் தான் இது. துப்புரவு தொழிலாளியாக தெருக்களை கூட்டி பெருக்கும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பள்ளியில் அமர்ந்திருப்பதைப்பதைத்தான் நாம் பார்கிறோம். இந்த பள்ளிக்கு தொழ வரக் கூடியவர்கள் பெரும்பாலும் மல்டி மில்லினர்களான சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள். விலையுயர்ந்த உடைகளோடு மிக உயர்ந்த வாசனை திரவியங்களோடு மிகவும் சுத்தமாக வந்து தொழுகைக்கு அமர்வர்.

அதே பள்ளியில் கம்பெனி சீருடையான மஞ்சள் நிற அழுக்கு படிந்த உடையோடு அந்த பங்களாதேஷத்து முஸ்லிம் உரிமையோடு பள்ளி வாசலின் மத்தியில் அமர்ந்திருப்பதை பார்கிறோம். இது உலக பள்ளி வாசல்கள் அனைத்திலும் சர்வ சாதாரணமாக பார்கலாம். இது மட்டுமா... தொழுகை ஆரம்பமானவுடன் அந்த பங்காளி எங்கு விரும்புகிறாரோ அங்கு சென்று நின்று கொள்ளலாம். முதல் வரிசையிலும் பல முறை இவர் நின்று பார்துள்ளேன். அதோடு வரிசையில் நிற்கும் போது இவரது அழுக்கு உடையினால் சங்கோஜப்பட்டுக் கொண்டு சற்று விலகி நிற்பார். ஆனால் பக்கத்தில் நிற்கும் மல்டி மில்லினர் சவுதியோ அந்த இளைஞனின் தோள் பக்க துணியை பிடித்து இழுத்து தனது தோளோடு நெருக்கி நிறுத்திக் கொள்வார். ஏனெனில் தொழுகையில் இடைவெளி விட்டு நின்றால் அந்த தொழுகையின் நன்மையில் குறைவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். எனவே அந்த சவுதிகளுக்கு விருப்பம் இல்லா விட்டாலும் தொழுகையில் நன்மை குறைந்து விடக் கூடாது என்பதற்காக அந்த பங்காளியை தனது அருகில் இழுத்து நிறுத்திக் கொள்கின்றனர். அதிக நேரம் வெயிலில் அந்த இளைஞர் வேலை செய்வதால் உடையிலிருந்து வியர்வை வாசமும் சில நேரங்களில் வரும். பல நேரங்களில் அதை நானும் உணர்ந்திருக்கிறேன். அதையும் மீறித்தான் அந்த சவுதிகள் அந்த இளைஞனை தனதருகில் இழுத்து நிறுத்திக் கொள்கிறார்கள்.

 

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஈரானிய தியாகிகளின் குடும்பங்கள்

 

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சட்ட அமலாக்கத் தளபதியான அஹ்மத் ரெஸா ரதான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஈரானிய தியாகிகளின் குடும்பங்களுக்கு முன்னால் நிற்கிறார்.

 

அவர் நன்றிக்கடனாக இறைவனுக்கு சிரம் தாழ்த்தினார். அவர் கூறுகிறார்:

 

 "தியாகிகளின் குடும்பங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன், கடமைப்பட்டிருக்கிறேன். மரியாதை மற்றும் சேவையின் அடையாளமாக, நான் என் தலைகளை அவர்கள் திசையில் தாழ்த்த விரும்புகிறேன். மேலும், எல்லாம் வல்ல, மேலான இறைவனுக்கு முன்பாக, இந்த அன்புக்குரியவர்களுக்கு முன்னால் நான் வெட்கப்படாமல் இருப்பதற்காக, நன்றிக்கடனாக இறைவனுக்கு  சிரம் தாழ்த்துகிறேன்."

 

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அந்த தியாகிகளுக்கு இறைவன் மேலான பதவிகளை மறுமையில் வழங்குவானாக...

 

 

கூகுளில் 'இடியட்' என்று டைப் செய்தால் டொனால்ட் ட்ரம்பின் படம் விழுகிறதே ? இது எப்படி சாத்தியம் - சுந்தர் பிச்சை விளக்கம்

வருமானமின்றி இருந்த ஈரானை சீண்டி இன்று ஹூர்முஸ் நீர்நிலை மூலம் கோடிக் கணக்கில் வருமானம் வர வழி ஏற்படுத்திக் கொடுத்ததே ட்ரம்பின் ஆணவப் பேச்சுதான்.

 பொருளாதார தடையும் நீங்கியது. எண்ணை பல நாடுகளுக்கு தற்போது ஈரான் ஏற்றுமதி செய்கிறது.

இந்த 15 நாள் இடைவெளியில் அணுகுண்டையும் ஈரானால் தயாரித்து விட முடியும்.

இந்த சண்டையினால் பெரும் லாபம் அடைந்தது ஈரான்தான்.

இப்போது சொல்லுங்கள். இடியட் என்ற பெயருக்கு பொருத்தமான நபரின் பெயர் யாராக இருக்க முடியும்?