ஹரியானாவில்,
பிரீத்தி இஸ்லாம் மதத்திற்கு மாறி கதீஜா ஆனார்.
அந்த வலதுசாரி பத்திரிகையாளர்
இதை எந்த அளவு கடுமையாக பார்க்கிறார்?
'எதனால் நீ இஸ்லாத்தை
தேர்ந்தெடுத்தாய்..... குர்ஆனில் எத்தனை தவறான வழிகாட்டுதல் இருக்கிறது தெரியுமா?
நாங்களெல்லாம் அறிவு
இல்லாதவர்கள்... உனக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறதா?
இந்து மதத்தில் இல்லாதது
இஸ்லாத்தில் என்ன இருக்கிறது? பதில் சொல்?'
அந்த பெண் எந்த பதிலும்
சொல்லவில்லை… அந்த பெண்ணின் மவுனம் எந்த அளவு தனது நிலைப்பாட்டில் உறுதியாக
இருக்கிறார் என்பதை காட்டுகிறது.
இப்படி அந்த பெண்ணை
மிரட்டுவது சரிதானா?
மாட்டுக் கறி பிரச்னையால்
முஸ்லிம்களை கொல்வது...
பள்ளிவாசல்கள்,
தர்ஹாக்கள் மதரஸாக்களை இடிப்பது...
சிறு குற்றம் புரிந்தாலும்
முஸ்லிம் வீடுகளை புல்டோஷர் கொண்டு இடிப்பது...
புர்ஹா அணிந்த பெண்களை
பொது வெளியில் கேவலப்படுத்துவது...
வர்ணாசிரமம் சரிதான்
என்று இன்றும் வாதாடி சாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப்டுத்துவது...
மாட்டு சாணியையும்
மாட்டு மூத்திரத்தையும் பொது வெளியில் குடிப்பது..
இதை எல்லாம் பார்த்துக்
கூட படித்த அந்தப் பெண் வெறுத்துப் போய் இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம்.
இஸ்லாத்தில் இருந்து
கூட பலர் இந்து மதத்துக்கு சென்றுள்ளார்கள். யாரும் இவ்வாறு நடிகை குஷ்புவிடம் சென்று
கேள்வி கேட்பதில்லை