Followers

Thursday, March 12, 2026

ஈரானியர்கள் கல்வி கற்பதில் திறமையானவர்கள் என்று அன்றே நபிகள் நாயகம் கணித்தார்கள்.

 



ஈரானியர்கள் கல்வி கற்பதில் திறமையானவர்கள் என்று அன்றே நபிகள் நாயகம் கணித்தார்கள்.

 

உலகிலேயே மிகச்சிறந்த அறிவாளிகள் "இஸ்ரேலியர்" என்று யார் பரப்பினார்கள் தெரியாது. தற்போது பேசுபொருளாக இருக்கும் ஈரான்  "பாரசீகர்கள்" குறித்து நபிகளாரின் கருத்து:

 

​"கல்வியை 'ஸுரய்யா' (அடர்மீன் கூட்டம்/Pleiades) எனும் விண்மீனில் இருந்தாலும், பாரசீகத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் அதனை அங்கிருந்து பெற்றுக் கொள்வார்கள்."

 

(ஆதாரம்: ஸஹீஹ் புகாரி - 4897, ஸஹீஹ் முஸ்லிம் - 2546)

 

மேற்சொன்ன ஹதீஸில் பாரசீக/ஈரான் மக்களின் அறிவுத்திறன் மற்றும் மார்க்கப் பற்றை நபி அவர்கள் முன்னறிவிப்பாகப் பாராட்டியுள்ளார்கள்.

 

பிற்காலத்தில் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் அபூ ஹனீபா போன்ற மாபெரும் அறிஞர்கள் பாரசீகப் பின்னணியிலிருந்து தோன்றி இஸ்லாமிய அறிவியலுக்கு ஆற்றிய தொண்டு இந்த ஹதீஸை மெய்ப்பிப்பதாக உள்ளது.

 

பாரசீகப் பின்னணி கொண்ட நபித்தோழர்களில் முதன்மையானவர் ஸல்மான் அல்-பாரிஸீ (ரலி) அவர்கள். "ஸல்மான் நம்மைச் சேர்ந்தவர்; அவர் (என்) குடும்பத்தைச் சேர்ந்தவர்" என்று அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.

 ஈமான் அல்லது கல்வி என்பது விண்மீனில் இருந்தாலும் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் அதனைப் பெற்றுக்கொள்வார்கள் என்ற ஹதீஸ் கூறப்பட்டபோது, நபிகளார் ஸல்மான் (ரலி) அவர்களின் தோள் மீது கை வைத்து இவரையே அடையாளப்படுத்தினார்.

Pleiades (பிளியடீஸ்) என்பது வானவியலில் மிகவும் பிரபலமான ஒரு விண்மீன் கூட்டமாகும். இதனைத் தமிழில் 'அறுமீன்' அல்லது 'கார்த்திகை விண்மீன் கூட்டம்' என்று அழைப்பார்கள்.

 

​நபிகள் நாயகம் அவர்கள் இந்த விண்மீனை உதாரணமாகக் காட்டியதற்குப் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் உண்டு.

 

பூமியிலிருந்து சுமார் 444 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு திறந்த விண்மீன் கொத்தாகும் (Open Cluster). வெறும் கண்ணால் பார்க்கும்போது ஆறு அல்லது ஏழு நட்சத்திரங்கள் மிக நெருக்கமாக ஒரு கொத்தாகத் தெரியும்.

 

மனித வரலாற்றில் மிகப்பழங்காலத்திலிருந்தே (கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே) இந்த நட்சத்திரக் கூட்டம் கடற்பயணிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளது.

 

அக்கால அரபு இலக்கியங்களில் 'ஸுரய்யா' என்பது எட்ட முடியாத மிக உயர்ந்த இடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு.

 

துருக்கி அதிபர் எர்தோஹன் பாராளுமன்றத்தில் ஷியா சன்னி பிரிவுகள் குறித்த அழகிய உரை..

 




துருக்கி அதிபர் எர்தோஹன் பாராளுமன்றத்தில் ஷியா சன்னி பிரிவுகள் குறித்த அழகிய உரை..

 

'ஷியா சன்னி பிரிவு குர்ஆனில் இல்லை. நபிகள் நாயகமும் நமக்கு சொல்லித் தரவில்லை.

 

அலி அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்..

 

ஃபாத்திமா அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்..

 

தாய் ஆயிஷா அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்.

 

நபிகளின் பேரர்கள் ஹஸன் ஹூசைன் இருவரும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.

 

கலிபா உஸ்மான் அவர்கள் நம் அனைவருக்கும் பொதுவானவர்..

 

சென்றது சென்று விட்டது. யார் சரி யார் தவறு என்பதை இறைவன் முடிவு செய்து கொள்வான்.

 

சென்று போன நபி தோழர்களை குறை கூறி நாம் பாவத்தை சம்பாதிக்க வேண்டாம்.

 

அந்த காலத்தில் அதிகார போட்டியில் நிகழ்ந்த தவறான வழிமுறைகளை தூரமாக்குவோம்.

 

இறைவன் சொல்லித் தராத ஷியா சன்னி பிரிவுகளை தூரமாக்கி நாமெல்லாம் முஸ்லிம்கள் என்ற ஒரு குடையின் கீழ் வருவோம்.'

 

என்று உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரது உரையை ஆமோதித்தனர்.

 

இனி வரும் காலங்களிலாவது பழைய காயங்களை மறந்து அனைவரும் முஸ்லிம் என்ற ஒரு குடையின் கீழ் வருவோம்.

 

யூதர்களின் சூழ்ச்சிகளிலிருந்து இறைவன் நம் அனைவரையும் காப்பானாக!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Wednesday, March 11, 2026

ஐ.நா சபையை உலுக்கிய ஈரானின் பகிரங்கக் குற்றச்சாட்டு:

 


.நா சபையை உலுக்கிய ஈரானின் பகிரங்கக் குற்றச்சாட்டு: "அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் அமில மழை; 4 தூதுவர்கள் படுகொலை!"

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்கள், பாரிய போர்க்குற்றங்களாகவும் மனிதநேயப் பேரவலமாகவும் மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதுவர் அமீர் சயீத் இரவானி (Amir Saeid Iravani) .நா பாதுகாப்புச் சபையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் விநியோக நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், .நா சபையின் மௌனத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நச்சு கலந்த அமில மழையும் சுகாதாரப் பேரவலமும்
மார்ச் 7 ஆம் திகதி இரவு, ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஏனைய நகரங்களில் அமைந்துள்ள பாரிய எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டன. இதன் விளைவாகக் காற்றில் கலந்த அபாயகரமான நச்சு வாயுக்களால், மார்ச் 8 ஆம் திகதி காலை ஈரானில் அமில மழை (Acid Rain) பெய்துள்ளதாக ஈரானியத் தூதுவர் சபையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

இந்த நச்சு மழையினால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்குக் கடுமையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், டெஹ்ரானில் உள்ள மருத்துவமனைகள் உச்சக்கட்ட அவசர நிலையில் இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் கட்டமைப்புக்கள் மற்றும் குடிநீர் நிலையங்கள் அழிப்பு
இராணுவ இலக்குகளைத் தாண்டி, பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 7 ஆம் திகதி அதிகாலை டெஹ்ரான் மெஹ்ராபாத் (Mehrabad) விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல பயணிகள் விமானங்களும், சிவில் கட்டமைப்புக்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

மேலும், ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் கெஷ்ம் (Qeshm) தீவில் அமைந்துள்ள பாரிய நன்னீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்கா வேண்டுமென்றே தாக்கி அழித்துள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

பெய்ரூட்டில் ஈரானியத் தூதுவர்கள் படுகொ*லை
மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ரமாடா (Ramada) ஹோட்டல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், அங்குத் தங்கியிருந்த 4 ஈரானிய இராஜதந்திரிகள் படுகொ*லை செய்யப்பட்டுள்ளனர்.

லெபனான் வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடனும், ஒருங்கிணைப்புடனும் பாதுகாப்பிற்காக குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த தூதுவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலானது, .நா சாசனம் மற்றும் வியன்னா மாநாட்டு விதிகளை அப்பட்டமாக மீறும் பச்சையான போர்க்குற்றம் என ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.

.நா பாதுகாப்புச் சபையின் மௌனமும் ஈரானின் எச்சரிக்கையும்
அப்பாவிப் பொதுமக்களையும், தூதுவர்களையும் இலக்குவைத்து நடத்தப்படும் இந்தப் படுகொலைகளைக் கண்டும் காணாமல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மௌனம் காப்பது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அமீர் சயீத் இரவானி கொந்தளித்துள்ளார்.

ஆக்கிரமிப்பாளர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாக்கும் வகையிலான பக்கச்சார்பான தீர்மானங்களை .நா முன்னெடுப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், "இன்று இது ஈரானுக்கு நடந்துள்ளது; நாளை உலகின் வேறெந்தவொரு சுதந்திர நாட்டிற்கும் இது நிகழலாம்," என உலக நாடுகளுக்குப் பாரிய எச்சரிக்கையொன்றை விடுத்துத் தனது உரையை நிறைவு செய்தார்.