Followers

Wednesday, February 18, 2026

என்ன ஒரு சுய மரியாதையை கற்றுத் தருகிறது இஸ்லாம்!




 என்ன ஒரு சுய மரியாதையை கற்றுத் தருகிறது இஸ்லாம்!

மார்க்க அறிஞரோடு கை குலுக்கும் போது ஒருவர் தனது தலையை மரியாதை நிமித்தம் சாய்க்கிறார்.
உடனே கோபமடைந்த அந்த அறிஞர் "ஏன் தலையை சாய்க்கிறாய்? இறைவனுக்கு மட்டுமே உனது தலை சாய வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்...
சுய மரியாதை
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா . அவர் வெளியே வந்த போது அவரைக் கண்டஅப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா அவர்கள் "அமருங்கள்" என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா சொன்னார்கள்.
நூல்: அபூதாவூத் 4552
ஒரு சக்கரவர்த்திக்கே கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழவேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றுள்ளதை இந்த சரித்திரத்தில் இருந்து நாம் தெரிகிறோம்.

Tuesday, February 17, 2026

கொமைனியை நேரில் சந்திக்க ட்ரம்ப் ஆர்வம் - ஆக மொத்தம் ஈரானுக்கே வெற்றி


 


கொமைனியை நேரில் சந்திக்க ட்ரம்ப் ஆர்வம் - ஆக மொத்தம் ஈரானுக்கே வெற்றி

இஸ்ரேலில் தினந்தோறும் அரங்கேறும் வன்முறை காட்சிகள்
யூதர்களின் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு.
ராணுவத்தில் குறிப்பிட்ட சாதியினரான நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று ஒரு பக்கம் போராட்டம்.
நெதன்யாஹூ ஊழல் வழக்கில் சிக்கி தினமும் வாய்தா வாங்கிக் கொண்டுள்ளான்.
நீ சுகமாக இருக்க நாங்கள் செத்து மடிய வேண்டுமா? என்று இஸ்ரேலிய மக்ள் போர்க் கொடி.
இத்தனை பிரச்னைகளையும் சமாளிக்கத்தான் ஈரான் போரை கையிலெடுத்துள்ளான் நெதன்யாஹூ
எப்ஸ்டின் பைல்களை காட்டி ட்ரம்பை மிரட்டி எப்படியாவது ஈரானோடு போர் புரிய நிர்பந்தப்படுத்துகிறான்.
ஆனாலும் ஈரானுக்கு பக்க பலமாக சீனாவும், ரஷ்யாவும், வட கொரியாவும் அணி வகுப்பதால் தோல்வி நிச்சயம் என்பது ட்ரம்புக்கு நன்றாகவே தெரியும்.
எனவே தற்போது சமாதானத்துக்கு இறங்கி வந்துள்ளார் ட்ரம்ப். கொமெய்னியை நேரிடையாக சந்தித்து பேச ஆர்வமாக உள்ளதாக அறிக்கை விடுகிறான்.
ஆக மொத்தத்தில் தற்போது ஈரானுக்கே வெற்றி....

ரமலான் நல் வாழ்த்துக்கள்... ஒன்றே குலம் ஒருவனே தேவன் - யாதும் ஊரே யாவரும் கேளீர்


 


உலக மக்கள் அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்...


ஒன்றே குலம் ஒருவனே தேவன் - யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவு இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது.


கருப்பன், வெள்ளையன், அரபியன் ஆசியன், ஐரோப்பியன், என்று உலகின் எந்த மூலையிலும் இன்று ஒலிக்கும் ஒரே குரல் 'அல்லாஹூ அக்பர்'  'இறைவன் பெரியவன்'. ஆம் நம்மை படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவன் கொடுத்த பல கட்டளைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பை நோற்க இஸ்லாமியர்கள் தயாராகிவிட்டனர்.


கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையே பாலஸ்தீன காஸா மக்களும் ரமலானை வரவேற்க தயாராகி விட்டனர். இந்த வருடமாவது அவர்களின் துயர் நிரந்தரமாக நீங்கி அமைதியான வாழ்வை எதிர்கொள்வார்களாக....






இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தையும் காப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாட்டையும் காப்பார்கள்.


 


ஸாஹர் யூனுஸ் ஷேக்...


மஹாராஷ்ட்ரா மும்ப்ராவில் உவைஸி கட்சி சார்பில் போட்டியிட்டு எதிர்த்து நின்ற சங்கி வேட்பாளரை தோற்கடித்தார்..


'கைஸா ஹராயா?'  'எப்படி தோற்கடித்தேன் பார்த்தீர்களா? என்று அவர் நக்கலாக பேசியது பெரும் பேசு பொருளாகியது.


நெடுநாள் குப்பை கூளமாக கிடந்த ஒரு கால்வாயை ஜேஸிபி எந்திரம் கொண்டு வந்து இவரே மேற்பார்வையிட்டு தற்போது அங்கு தண்ணீர் வழித் தடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தையும் காப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாட்டையும் காப்பார்கள்.

Monday, February 16, 2026

'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்




 'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்


வட மாநிலங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நமது ஊடகங்கள் அதனை மறைக்கின்றன. அந்த போராட்டத்தில் கலந்து கொண்டஒரு பிராமணர் சொல்கிறார்.


'பிராமணர்களாகிய நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல. ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறியவர்கள்'


'அப்போ நீங்கள் இந்தியர் இல்லையா?'


'தற்போது இந்திய சட்டப்படி நாங்கள் இந்தியர்கள்தான். அதை மறுக்கவில்லை. ஆனால் எங்களை விட இந்நாட்டில் பழங்குடி மக்கள், ஆதி திராவிடர்கள், மற்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் எங்களை விட காலா காலமாக இந்த மண்ணில் வசிப்பவர்கள். அவர்களின் பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு என்பது அவர்களின் சதவீதத்துக்கு ஏற்ப கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். அதுதான் சமூக நீதி'


இவர்தான் மிகச்சிறந்த பிராமணர். இவரைப் போன்று அனைத்து பிராமணர்களும் மாறி விட்டால் நமது நாடு கூடிய விரைவிலேயே வல்லரசாக மாறி விடும்.