Followers

Thursday, March 05, 2026

இன்று உலகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது.

 


இன்று உலகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது.

 

ஒருபுறம் போர்கள், மறுபுறம் விண்ணைத் தொடும் கடன் என்ற இருமுனை வாள்களுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது அமெரிக்கா.

இது வெறும் போர் அல்ல, ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என்றே சொல்ல வேண்டும்.

 

அமெரிக்காவின் தேசியக் கடன் இன்று 37 டிரில்லியன் டாலர்களை ($37 Trillion) கடந்து சாதனை படைத்துள்ளது. இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 120% ஆகும்.

 

இந்தக் கடனுக்காக அமெரிக்கா செலுத்தும் வட்டி மட்டுமே ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலரை நெருங்குகிறது. அதாவது, அமெரிக்க மக்களின் வரிப்பணம் மக்களின் நலனுக்காகச் செலவிடப்படாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

 

மத்திய கிழக்கில் நடக்கும் போர்களில் அமெரிக்கா காட்டும் ஆர்வம் அதன் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமே இல்லை.

 

அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 3.8 பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு ராணுவ உதவியாக வழங்குகிறது. இதுமட்டுமின்றி, தற்போதைய போர்ச் சூழலில் கூடுதலாக 14 பில்லியன் முதல் 18 பில்லியன் டாலர்கள் வரை அவசர கால நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரேலின் 'Iron Dome மற்றும் 'Arrow’ பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புடையவை.

 

ஈரானின் ஒரு தாக்குதலை முறியடிக்க மட்டும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஒரே இரவில் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைச் செலவிடுகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்த நாள்தோறும் பெரும் தொகையைச் செலவிடுகிறது.

USS Gerald R. Ford மற்றும் USS Abraham Lincoln போன்ற பிரம்மாண்ட கப்பற்படைகளை (Carrier Strike Groups) ஒரு நாள் இயக்குவதற்கு மட்டும் சுமார் 6.5 மில்லியன் டாலர்கள் முதல் 8 மில்லியன் டாலர்கள் வரை செலவாகிறது.

 

அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைப் பராமரிக்கவும், அங்குள்ள வீரர்களுக்காகவும் நாளொன்றுக்கு தோராயமாக 40 மில்லியன் டாலர்கள் வரை வரிப்பணம் செலவிடப்படுகிறது.

 

அமெரிக்கா தனது டாலர் மேலாதிக்கத்தை (Dollar Hegemony) தக்கவைக்கப் போராடும் அதே வேளையில், மேலே குறிப்பிட்ட காரணிகளால் அதன் பொருளாதாரம் அழியும் பாதையை நோக்கிச் செல்கிறது.

 

முன்பெல்லாம் அமெரிக்கா தொடுக்கும் போர்களில் முன்னணியில் நிற்கும் பிரிட்டனும் பிரான்சும், இப்போது ஈரானுக்கு எதிரான அல்லது மத்திய கிழக்கு போர்களில் ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. இதற்கான காரணங்கள்.

 

பிரிட்டன் ஒரு காலத்தில் "சூரியன் மறையாத பேரரசாக" இருந்தது, ஆனால் இன்று அதன் பொருளாதார நிலை மிகவும் பலவீனமாக உள்ளது.

 

Brexit என்ற Economic Suicideற்கு பிறகு பிரிட்டனின் வர்த்தகம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

 

தற்போதைய சூழலில் ஈரானுடனோ அல்லது மத்திய கிழக்கிலோ ஒரு பெரிய போரில் இறங்கினால், பிரிட்டன் சந்திக்க வேண்டிய பணவீக்கம் (Inflation) மற்றும் எரிசக்தி விலை உயர்வு அந்நாட்டை ஒரு மிகப்பெரிய உள்நாட்டுப் புரட்சிக்கு இட்டுச் செல்லும்.

பிரிட்டனில் தற்போது ஒரு பெரிய இஸ்லாமிய சமூகம் உள்ளது. மத்திய கிழக்கு போர்களில் பிரிட்டன் நேரடியாகப் பங்கேற்பது அந்நாட்டிற்குள் சமூகக் கலவரங்களை (Social Unrest) உருவாக்கும் என அந்நாட்டு உளவுத்துறையும் அரசாங்கமும் அஞ்சுகின்றன.

பிரிட்டனின் தற்போதைய ராணுவம் மிகச்சிறியது. ஒரு நீண்ட காலப் போரைத் தாங்கும் அளவுக்கு அவர்களிடம் ஆயுதக் கிடங்குகளோ அல்லது நிதி வலிமையோ இல்லை.

 

"அமெரிக்காவுக்காக நாங்கள் ஏன் ரத்தம் சிந்த வேண்டும்?" என்ற கேள்வி பிரிட்டிஷ் மக்களிடையே எழுந்துள்ளது.

 

பிரான்ஸ் எப்போதும் அமெரிக்காவின் கட்டளைகளுக்குப் பணியும் நாடு அல்ல. அதன் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இப்போது ஒரு புதிய பாதையை வகுக்கிறார்.

 

மக்ரோன் அடிக்கடி கூறுவது போல், "ஐரோப்பா அமெரிக்காவின் அடிமையல்ல." அமெரிக்கா தனது டாலர் மேலாதிக்கத்தைக் காக்க நடத்தும் போர்களில் பிரான்ஸ் பலியாக விரும்பவில்லை. ஐரோப்பா தனது சொந்த ராணுவ வலிமையைப் பெருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

 

பிரான்ஸ் நீண்ட காலமாகவே ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்துள்ளது (குறிப்பாக எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தி). அமெரிக்காவின் தடைகளால் பிரான்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. ஈரானை அழிப்பது என்பது பிரான்ஸின் எதிர்கால வர்த்தக வாய்ப்புகளை அழிப்பதற்குச் சமம்.

பிரான்ஸ் தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் (Niger, Mali) தனது செல்வாக்கை இழந்து வருகிறது. அங்கு சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தன் வீட்டிற்குள்ளேயே (ஆப்பிரிக்கா) நெருக்கடி இருக்கும்போது, அமெரிக்காவிற்காக மத்திய கிழக்கில் வம்பை விலைக்கு வாங்க பிரான்ஸ் விரும்பவில்லை.

அமெரிக்கா தனது பொருளாதாரச் சரிவைச் சமாளிக்கத் தொடர்ந்து பணத்தை அச்சடித்துக் கொண்டே இருக்கிறது. இது உலகெங்கும் உள்ள டாலரின் மதிப்பைக் குறைக்கிறது.

 

டாலர் வீழ்ந்தால் அதன் பாதிப்பு பவுண்ட்ஸையும் , யூரோவையும் (Euro) தாக்கும்.

 

 

அமெரிக்கா போரில் ஈடுபட்டுத் தனது பொருளாதாரத்தை அழித்துக் கொண்டால், பிரிட்டனும் பிரான்ஸும் அதனுடன் சேர்ந்து அழியத் தயாராக இல்லை.

 

சீனா இன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி. அமெரிக்கா சீனாவைப் பகைத்துக் கொள்ளச் சொன்னாலும், பிரான்ஸ் போன்ற நாடுகள் சீனாவுடன் சுமூகமான உறவையே விரும்புகின்றன. ஏனெனில், அமெரிக்காவின் போர் வெறிக்குத் தீனி போடப்போய் சீனாவின் வர்த்தகத்தை இழந்தால், ஐரோப்பா பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.

 

அமெரிக்கா ஈரானைத் தாக்கியதால், ஈரான் ராணுவ ரீதியாக மட்டும் பதிலடி கொடுக்காமல் பொருளாதார ரீதியாக பதிலடி கொடுத்துள்ளது.

 

சர்வதேசக் கடல் வழிப் பாதைகளை (Hormuz & Bab el-Mandeb) மூடுவதன் மூலம் உலக வர்த்தகத்தை ஈரான் ஸ்தம்பித்துள்ளது. இதனால் ஐரோப்பாவிற்கான வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.

 

ஐரோப்பா முழுவதும் தற்போது அகதிகள் பிரச்சினை மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இன்னொரு போர் ஏற்பட்டால், அது ஐரோப்பாவிற்குள் பெரும் சமூகச் சிதைவை (Social Unrest) ஏற்படுத்தும் என்பதை பிரிட்டனும் பிரான்சும் நன்கு உணர்ந்துள்ளன.

 

சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கா ஒரு "காயம்பட்ட சிங்கம்" போலத் தட்டுத்தடுமாறுகிறது. அந்தச் சிங்கம் தன்னைக் காத்துக் கொள்ளப் பாயும்போது, அதன் காலடியில் சிக்கித் தாங்களும் நசுங்கிவிடக் கூடாது என்பதில் பிரிட்டனும் பிரான்ஸும் மிகக் கவனமாக இருக்கின்றன.

 

அமெரிக்கா போரில் மூழ்கியிருக்கும்போது, சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான BRICS நாடுகள் டாலருக்கு மாற்றாக ஒரு புதிய வர்த்தக முறையை உருவாக்கி வருகின்றன.

 

அமெரிக்கா ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கியதைப் பார்த்த மற்ற நாடுகள், "நாளை நம்மிடம் மோதினால் அமெரிக்கா நமது டாலர்களையும் முடக்கும்" என்று பயந்து, டாலரைத் தவிர்த்துவிட்டு தங்கத்தை (Gold) சேமிக்கத் தொடங்கியுள்ளன.

 

அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது விதிக்கும் பொருளாதாரத் தடைகள் (Sanctions), உலக நாடுகளை டாலரை விட்டு வெளியேறத் தூண்டுகின்றன. டாலருக்கான தேவை குறையும்போது, அமெரிக்கப் பொருளாதாரம் தானாகவே சரிவைச் சந்திக்கும்.

 

டாலருக்கான தேவை குறைந்தால், அமெரிக்காவால் இனி கடன் வாங்க முடியாது. இது அந்த நாட்டின் உள்நாட்டுக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும்.

 

அமெரிக்கா ஈரானை ராணுவ ரீதியாக அழிக்க நினைக்கலாம். ஆனால், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் அமெரிக்காவை பொருளாதார ரீதியாக (Economic Warfare) பலவீனப்படுத்தி வருகின்றன.

செங்கடல் பகுதியில் நடக்கும் போக்குவரத்துத் தடைகள் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்கள் அமெரிக்காவின் பணவீக்கத்தை (Inflation) அதிகரிக்கச் செய்கின்றன.

 

ஒரு பேரரசு தனது செல்வாக்கை இழக்கும்போது அதன் நாணயம் மதிப்பு இழக்கும். அமெரிக்கா இன்று ஈரானை அழிக்க நினைத்தாலும், புவியியல் ரீதியாக ஈரான் ஒரு கடினமான நாடு.

ஈரான் ஒரு நீண்ட காலப் போரைத் தாங்கும் வல்லமை பெற்றது.

ஆனால் அமெரிக்கா, ஏற்கனவே கடன் சுமையால் தள்ளாடிக் கொண்டிருப்பதால், ஒரு நீண்ட காலப் போர் என்பது அமெரிக்காவை உள்ளிருந்தே தகர்க்கும் "பொருளாதார வெடிகுண்டு" (Economic Time-bomb) என்பதை கணிக்க தவறிவிட்டனர்.

 

பிரபல முதலீட்டாளர் ரே டாலியோ (Ray Dalio) தனது "Changing World Order" புத்தகத்தில் ஒரு சாம்ராஜ்யம் வீழும் நிலையை விளக்கியுள்ளார்.

 

1. அதிகப்படியான கடன் உருவாக்கம்.  

 

2. உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் அதிகளவு பணத்தை அச்சடித்தல்.

 

3. போர் மூலம் தனது பொருளாதாரச் சரிவை மறைக்கவும், அதிகாரத்தைத் தக்கவைக்கவும் ஒரு பேரரசு இறுதியில் மாபெரும் போரைத் தேர்ந்தெடுக்கும்.

 

இன்று அமெரிக்கா இருக்கும் நிலை, ஒரு சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முன்னரான இறுதிப் படிநிலையாகவே பார்க்க வேண்டும்.

 

-Mukinthan Thurairajasingham

 

'குர்ஆன் கூறும் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்


 


'குர்ஆன் கூறும் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முஸ்லிம்களுக்கு அறிவுரை

 

அருமையான உரை... இன்றைய முஸ்லிம் உலகம் இஸ்லாமிய நடைமுறைகளை கை விட்டதால் தற்போது இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது.

 

அன்றைய நபிகளும் நபித் தோழர்களும் குர்ஆனை தங்களின் வாழ்க்கையாக அமைத்தக் கொண்டார்கள். வெற்றி பெற்றார்கள்.

 

அரபுலக ஆட்சியாளர்கள் அமெரிக்க ஷைத்தானின் பின்னால் செல்வதை விட ரஷ்ய அதிபர் புடினின் பின்னால் செல்வதே நல்லது.

 

'குர்ஆன் கூறும் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முஸ்லிம்களுக்கு அறிவுரை

 

அருமையான உரை... இன்றைய முஸ்லிம் உலகம் இஸ்லாமிய நடைமுறைகளை கை விட்டதால் தற்போது இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது.

 

அன்றைய நபிகளும் நபித் தோழர்களும் குர்ஆனை தங்களின் வாழ்க்கையாக அமைத்தக் கொண்டார்கள். வெற்றி பெற்றார்கள்.

 

அரபுலக ஆட்சியாளர்கள் அமெரிக்க ஷைத்தானின் பின்னால் செல்வதை விட ரஷ்ய அதிபர் புடினின் பின்னால் செல்வதே நல்லது.

 

ஒற்றுமை எனும் கயிறு உண்டா?

 

*அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.*

திருக்குர்ஆன் 3:103

 

இவ்வசனத்தில் (3:103) அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

"ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று இவ்வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக மேடைகளில் இவ்வசனம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சமுதாயத்தில் எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை.

ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அனைவரும் அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

"அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்'' என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், அதன் விளக்கவுரையான நபிவழியும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆனையும், நபிவழியையும் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.

"திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்'' என்று இவர்கள் நேர்மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.

அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும்போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டுவிடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் கடமையாகும்.

ஒற்றுமை வாதம் மனித குலத்தை நாசப்படுத்தும் நச்சுக் கிருமியாகும். அயோக்கியர்களையும், நல்லவர்களையும் சமநிலையில் நிறுத்தும் இந்த வாதம் தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது.

அல்லாஹ்வை வணங்கு எனக் கூறினால் அதனால் ஒற்றுமை கெடாது. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது எனக் கூறினால் உடனே ஒற்றுமை கெடும். ஆனால் இஸ்லாம் ஒற்றுமைக்கு எதிரான இந்த நெகடிவ் - எதிர்மறை அடிப்படையில் தான் தனது ஏகத்துவக் கொள்கையை அமைத்துள்ளது.

சிலையை வணங்காதே என சிலை வணங்குபவனிடம் கூறினாலும், தர்காவை வணங்காதே என தர்கா வணங்கியிடம் கூறினாலும், மனிதனை வணங்காதே என மனிதனை வணங்குபவனிடம் கூறினாலும் உடனே ஒற்றுமைக்குப் பங்கம் வந்து விடும். ஆனாலும் அப்படிக் கூறுமாறு தான் இஸ்லாம் மனித குலத்துக்குப் போதிக்கிறது.

தீமையைத் தடுக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நிச்சயம் இது ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கவே செய்யும்.

தீமைக்கு உதவாதீர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. இதுவும் ஒற்றுமைக்கு உலை வைக்கவே செய்யும்.

சொந்த பந்தங்களை விட கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது. இதுவும் ஒற்றுமைக்கு எதிரானது தான்.

அனைவரும் சேர்ந்து குடிப்பதை விட, அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக வரதட்சணை வாங்குவதை விட, அனைவரும் சேர்ந்து அயோக்கியத் தனங்கள் செய்வதை விட கெட்டவர்களை விட்டும் நல்லவர்களைப் பிரித்து நல்லவர்களும், கெட்டவர்களும் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று பிரகடனப்படுத்தவே இஸ்லாம் மார்க்கத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

தீமையை எதிர்க்கத் துணிவற்றவர்களும், வளைந்து கொடுப்பவர்களும் கண்டுபிடித்த பொய்யான தத்துவமே ஒற்றுமை வாதம்.

ஒற்றுமை வாதம் என்னும் இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கிருமியை ஒழித்தால் தான் சமுதாயம் உருப்படும்.