Followers

Thursday, September 03, 2026

'நாங்கள் அப்போ இந்து இல்லையா' - அப்பாவியாக கேட்கும் தலித் இளைஞர்

 


'நாங்கள் அப்போ இந்து இல்லையா' - அப்பாவியாக கேட்கும் தலித் இளைஞர்

 

இந்தியாவில் இஸ்லாம் வளர்கிறது என்றால் அதற்கு உண்மையான காரணம் இதுதான்.

 

இந்த ஆண்டு மே மாதம், ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான தலித் இளைஞர் விஷ்ணு பாலாய், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைவர் மோகன் பகவத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். தனது கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாகப் பணியாற்றுவதைத் தடுக்க, தலித் விரோத நபர்களும் RSS உடன் தொடர்புடையவர்களும் முயற்சிப்பதாக பாலாய் கூறியிருந்தார். இதுகுறித்து பகவத்தின் உதவியை அவர் கோரியிருந்தார்.

 

 

"நீங்கள் ஒட்டுமொத்த இந்து சமூகத்தைப் பற்றியும் நல்லிணக்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். நீங்கள் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரானவர். மேலும், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் 'ஒரே கிணறு, ஒரே சுடுகாடு, ஒரே கோவில்' என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. ஆனால், சங்கத்தின் ஸ்வயம்சேவக்குகள், ஒரு தலித் பூசாரியான என்னிடமிருந்து எனது கோவிலை அபகரித்துவிட்டனர்..." என்று பாலாய் தனது கடிதத்தில் பகவத்திடம் எழுதியிருந்தார்.

 

 

"...இப்போது அவர்கள் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் பொய் வழக்குகளைச் சுமத்தி, எங்களைச் சிறைக்கு அனுப்பவும், எங்களைக் கொல்லவும் கூட விரும்புகிறார்கள். உங்கள் சுயம்சேவகர்கள் நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராக நடந்துகொள்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

 

'தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனே, உனக்கு அசுத்தமான சிறுநீரைக் குடிக்க வைப்போம்'

ஜூலை 16 அன்று, ககுல் தேவ் கோவிலுக்கு அருகில் பிரார்த்தனைகளை நடத்தத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​பாலாய் ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

"...ஆயுதங்கள், இரும்புக் கம்பிகள், இரும்புக் குழாய்கள், மூங்கில் குச்சிகளுடன் வந்து சட்டவிரோதமாக ககுல் தேவ் கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் என் கணவரிடம், 'தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனே, உனக்கு அசுத்தமான சிறுநீரைக் குடிக்க வைத்து, கோவிலிலிருந்து வெளியே தூக்கி எறிவோம்' என்று கூறினர்," என பாலாயின் மனைவி சீதா தேவி அளித்த புகாரின் அடிப்படையில் ஜூலை 16 அன்று அசிந்த் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தகவல் உதவி

 

The Wire

19-07-2026


மோகன் பிரசாத் - 'தான் இறந்தால் இஸ்லாமிய முறைப்படித்தான் அடக்கம் செய்ய வேண்டும்'

 




மோகன் பிரசாத் - 'தான் இறந்தால் இஸ்லாமிய முறைப்படித்தான் அடக்கம் செய்ய வேண்டும்' என்று பிடிவாதமாக சொல்லியிருந்தார்.

 

உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள சோனுகாட் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான தலித் இந்துவான மோகன் பிரசாத், கோரக்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் காலமானார்.

 

அவரது மரணத்தைத் தொடர்ந்து, பாரம்பரிய இந்து தகனச் சடங்குகளைச் செய்வதற்குப் பதிலாக, உள்ளூர் முஸ்லிம் மயானத்தில் அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் தயாரானதால், அவரது இறுதிச் சடங்குகள் தொடர்பாக கிராமத்தில் ஒரு பொது சர்ச்சை எழுந்தது.

 

 அவரது மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, மோகன் பிரசாத்தும் அவரது மனைவியும் நீண்ட காலமாக இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றி வந்தனர். தனது வாழ்நாள் முழுவதும், தகனம் செய்யப்படுவதற்குப் பதிலாக இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தனது உறுதியான இறுதி விருப்பத்தை அவர் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

 

 சில கிராமவாசிகள் பாரம்பரிய சமூக வழக்கங்களைக் காரணம் காட்டி அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உள்ளூர் காவல்துறை தலையிட்டு அப்பகுதியைப் பாதுகாத்தது.

 

குடும்பத்தினரின் முழு சம்மதத்துடனும், இறந்தவரின் இறுதி விருப்பத்திற்கு இணங்கவும், அவரது உடல் வெற்றிகரமாக உள்ளூர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஜனாஸா தொழுகை (இறந்தவர்களுக்காக நடத்தப்படும் தொழுகை) நடத்தப்பட்டு, அவர் அமைதியாக நல்லடக்கம் செய்யப்பட்டார்.

 

Tuesday, September 01, 2026

இரண்டு வாரம் முன்பு சவுதி திரும்புவதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ....


 


இரண்டு வாரம் முன்பு சவுதி திரும்புவதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் முடித்து விட்டு விமானத்துக்காக காத்திருந்தேன். மதிய நேரம். ஆரிய பவனில் ஒரு தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு வெள்ளிக் கிழமை ஜூம்ஆ என்பதால் தொழுது விடலாம் என்று அங்குள்ள பணிப் பெண்ணிடம் 'இங்கு தொழுகைக்கு இடம் உள்ளதா?' என்று கேட்டேன்.

 

'இல்லை சார். இங்கேயே ஒரு ஓரமாக தூய்மையான இடத்தில் தொழுது கொள்ளுங்கள்' என்று அந்த பணிப்பெண் சொன்னார்.

 

வேறு வழியின்றி காத்திருப்புக்கான இடத்தில் தொழுது கொண்டு எனது கடமையை நிறைவேற்றினேன். அதன் பிறகு விமானம் ஏறி கொழும்புவில் இறங்கி ரியாத் ஃபிளைட் பிடிக்க நடந்து போகும் போது ஒரு தகவல் பலகை கண்ணில் பட்டது.

 

'பிரார்த்தனைக் கூடம்' என்று தமிழில் சற்று தப்பும் தவறுமாக எழுதப்பட்ட ஒரு அறிவிப்பு பலகையை பார்த்தேன். மூன்று மொழிகளில் எழுதப்பட்டடிருந்தது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தவறை சரி செய்வார்களாக.. நமது சென்னை விமான நிலையத்தில் இப்படி எந்த ஒரு அறிவிப்பு பலகையும் இல்லாதது வருத்தமாக இருந்தது. பயணிகளின் தேவை அறிந்து செயல்படும் இலங்கை விமான நிலையத்துக்கு பாராட்டுக்கள்.

 

ரியாத் செல்ல இமிக்ரேஷனில் அமர்ந்திருந்தபோது 'சுவனப்பிரியன் ... சவுக்கியமா?' என்று ஒரு குரல்.. யாரென்று பார்த்தால் ரியாத் நண்பர். 'என் பையன் 'அதோ சுவனப்பிரியன் வரிசையில் நிற்கிறார்' என்று என் பையன் சொன்னவுடன்தான் உங்களை கண்டு பிடித்தேன்' என்றார். ஆஹா.. நம் பதிவுகளை சிறுவர்களும் படிக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டேன். உண்மையான பெயரை விட புனைப் பெயர்தான் அதிக நபர்களால் அறியப்படுகிறது. இது இணையத்தில் எழுதுவதால் கிடைக்கும் அங்கீகாரம்...

 

எல்லா புகழும் இறைவனுக்கே...

 

 

 

 

 

 

 

Saturday, August 29, 2026

உடல் ஊனத்தை பொருட்டாக மதிக்காமல் உழைத்து உயர்ந்த ஸாலிஹ் வாலாஞ்சேரி.

 





உடல் ஊனத்தை பொருட்டாக மதிக்காமல் உழைத்து உயர்ந்த ஸாலிஹ் வாலாஞ்சேரி.

 

காலத்தை குறை கூறி உழைக்காமல் வாழ்நாளை கழிக்கும் பலருக்கு ஸாலிஹிடம் படிப்பினை உண்டு.

 

காதல் மனைவியையும், இரண்டு பிள்ளைகளையும் தவிக்கவிட்டு இறையழைப்பை ஏற்று மறுமைப் பயணத்தில் முந்தினார் ஸாலிஹ் வாலாஞ்சேரி Swalih Valancherry

 

கேரளம் மலப்புரம் மாவட்டம் வாளஞ்சேரி சேர்ந்த சாலிஹ் 80 சதவீதம் அங்கஹீனமுள்ள மாற்றுத்திறனாளி.. நடக்க முடியாத நிலையில் வீட்டுக்குள் உருண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்தவர்.

 

தனது இயலாமையையே முதலீடாக வைத்து மலையாளிகளின் மனம் கவர்ந்த யூட்டூபராக வலம் வந்தவரை குறுகிய காலத்தில் பத்து லட்சம் பேர் பின்தொடர்ந்தது ஆச்சரியம்..

 

ஆரம்பத்தில் தனது அன்றாட வாழ்வை காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பது,  ஃபஜ்ரு(அதிகாலை) தொழுகைக்கு ஒழு செய்து தொழுவது, படுத்தபடியே உண்பது, உடைமாற்றுவது, வெள்ளிக்கிழமை தனது நண்பர் யூசுப் உதவியுடன் ஜும்மா பள்ளிவாசல் செல்வது உட்பட வீடியோ பதிவு செய்து வெளியிட்டது ஸாலிஹை ஒரு செலிபிரிட்டி ஆக்கியது..

 

படிப்படியாக ஸாலிஹ் யூட்பூப் சேனல் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பத்து லட்சம் கடந்தது.

 

மலபார் பகுதி நிறுவனங்கள் சாலிஹை அழைத்து தங்கள் தயாரிப்புகளை அவர் மூலம் ப்ரமோட் செய்ததன் மூலம் ஓரளவு வருமானம் வந்தது..

 

கேரளாவின் அரசியல், சினிமா, மார்க்க அறிஞர்கள் உட்பட பலரும் சாலிஹின் நெருங்கிய தொடர்பில் வந்தனர்..

 

ஆறு வருடங்கள் முன்பு ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்மணி அவரின் உடல்நிலை தெரிந்தும் ஸாலிஹை விரும்பி திருமணம் செய்து கொள்ள அதன்பின் அவரின் வாழ்க்கையில் வசந்தம் வீசத்துவங்கியது.

 

இரண்டு குழந்தைகளுடன் ஸாலிஹ் தம்பதியர் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக கடந்து சென்றது.

 

ஒருவாரம் முன்பு வரை அவரின் சமூக வலைத்தள பக்கங்கள் செயல்பட்டு வந்த நிலையில் காய்ச்சல் பாதித்த ஸாலிஹ் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மதியம் இறந்தார். இந்த செய்தி வெளியாகி மலையாள சமூக வலைத்தளங்களில் நிறைந்து காணப்படுகிறார்...

 

அவரின் மனைவி பிள்ளைகளுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக ..

 

அவருக்கும் சிறந்த இடத்தை இறைவன் வழங்குவானாக!

 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள்.

நமது நாட்டில் இந்து ராஷ்ட்ரா நடைமுறைபடுத்தப்படுவதாகவே உணர்கிறேன்

 

நமது நாட்டில் இந்து ராஷ்ட்ரா நடைமுறைபடுத்தப்படுவதாகவே உணர்கிறேன்.

 

#பாஜக ஆளும் மராட்டியத்தில், தலித் நபரை மாட்டு சாணம் உண்ண வைத்து #RSSorg குண்டர்கள் அட்டூழியம்! மூன்று மாதங்கள் கழித்து வழக்கு பதிவு!

 

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில், ஒரு தலித் நபரை ‘பசு பாதுகாவலர்கள்’ என்று கூறிக்கொண்ட குண்டர்கள் தாக்கி, பின்னர் அவரை வலுக்கட்டாயமாக மாட்டுச் சாணம் உண்ண வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆறு ‘பசு பாதுகாவலர்கள்’ மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பானதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பரமேஷ்வர் சுஹாஸ் ஹிவாலே என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையை அணுகினார்.

 

மே 23 அன்று, டியூல்காவ்ன் ராஜா பகுதியில் நடைபெற்ற வாராந்திர கால்நடைச் சந்தையில் ஒரு காளையை வாங்கிய பிறகு, தனது 11 வயது மகன் மற்றும் நாராயண் மரோதி காம்ப்ளே என்ற அறிமுகமான ஒருவருடன் ஜால்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாக ஹிவாலே அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கன்ஹையாநகர் பகுதியில் அவரது வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், தாங்கள் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு, அந்தக் காளையை ஒரு முஸ்லிம் இறைச்சிக் கடைக்காரருக்கு விற்க ஹிவாலே திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டியதாக அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

 

இந்தக் குற்றச்சாட்டை ஹிவாலே மறுத்ததோடு, காளையை வாங்கியதற்கான ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காட்டியுள்ளார். இருப்பினும், அந்த ‘பசு பாதுகாவலர்கள்’ அவரை அறைந்ததாகவும், அவரது பெயர் மற்றும் சாதியைக் கேட்டறிந்த பிறகு சாதி தொடர்பான இழிவுச் சொற்களால் திட்டியதாகவும், பின்னர் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மாட்டுச் சாணத்தைத் திணித்ததாகவும் ஹிவாலே குற்றம் சாட்டியுள்ளார் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது.

 

நமது நாட்டில் இந்து ராஷ்ட்ரா நடைமுறைபடுத்தப்படுவதாகவே உணர்கிறேன்.