Followers

Monday, August 17, 2026

இந்து மத சடங்குகளானது ஈரானிலிருந்து பெறப்பட்டது

 தற்பொதய இந்து மத சடங்குகளானது ஈரானிலிருந்து பெறப்பட்டது என்று பலமுறை விளக்கியுள்ளோம். ஐரோப்பாவிலிருந்து கால்நடைகளை ஓட்டிக் கொண்டு வந்த ஆரியர்கள் ஈரானில் பல ஆண்டுகள் தங்குகிறார்கள். அந்த மக்களின் பழக்க வழக்கங்கள், இறை வணக்கம் போன்றவற்றை தாங்களும் கற்றுக் கொண்டு கைபர் போலன் கணவாய் வழியாக நமது நாட்டுக்குள் பிரவேசிக்கிறார்கள். 


நம் நாடு மிகச் சிறந்த செழிப்புடனும் அறிவு சார்ந்த மக்களாகவும் இருப்பதை உணர்ந்த ஆரியர்கள் நம் நாட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட முயல்கிறார்கள். அரசர்களை கைகளில் போட்டுக் கொண்டு வேள்வி போன்றவற்றை அரசர்களுக்கு சாதகமாக நடத்துகிறார்கள். சிறிது சிறிதாக மன்னர்களும் இவர்களை நம்ப வர்ணாசிரம கோட்பாட்டை நம் மக்களின் மீது புகுத்துகிறார்கள். வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம் முன்னோர்களும் இவர்களின் சதியில் வீழ்ந்து இன்று வரை மீள முடியாமல் தவிக்கிறார்கள்.


இவர்களின் சதியை சரியாக புரிந்து கொண்ட பல மக்கள் இஸ்லாம் கிருத்தவத்தை நோக்கி சென்று தங்களை பாதுகாத்து கொண்டார்கள். மீள முடியாத பெரியார், அண்ணா,அம்பேத்கர் போன்றவர்கள் இன்று வரை ஆரியர்களை வசை பாடி வருகின்றனர். வசை பாடுவதால் ஏதேனும் நன்மைகள் விளையப் போகிறதா என்ன? 




Sunday, August 16, 2026

திரு முருகன் காந்தி சொல்லும் வரலாறு சிலருக்கு சற்று கசப்பாகத்தான் இருக்கும்.

 திரு முருகன் காந்தி சொல்லும் வரலாறு சிலருக்கு சற்று கசப்பாகத்தான் இருக்கும்.


கசப்பாக இருக்கிறது என்பதனால் நாம் மருந்து உட்கொள்ளாமல் இருப்பதில்லை...


ஜின்னா அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த இந்து மதத்தில் பிறந்தவர்...


சாதிய கொடுமையினால் அதிக அளவு பாதிக்கப்பட்டது ஜின்னா குடும்பம்.


இவர்கள் மீன் பிடி தொழில் செய்ததால் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்ட்டனர்.


இதனால் வெறுத்துப் போன ஜின்னாவின் தந்தை இஸ்லாமிய மதத்தை தழுவுகிறார். ஜின்னாவும் இஸ்லாமியராகிறார்.


சாதி வெறி பிடித்த இந்துக்களோடு ஒன்றாக இருக்க முடியாது என்ற வெறுப்பின் காரணமாகவே தனி நாடு கேட்டு வாங்கிச் சென்றார் ஜின்னா.


அன்று சாதிய ஒடுக்கு முறை மட்டும் இல்லாதிருந்திருந்தால் ஜின்னாவும் முஸ்லிமாகியிருக்க மாட்டார். பாகிஸ்தான் என்ற ஒரு நாடும் நம்மிடம் இருந்து பிரிந்து சென்றிருக்காது.


ஜின்னா கோமாளித்தனமான பிரிவினை முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் லட்சக்கணக்கான உயிர்களும் பிரிந்திருக்காது









நடந்து கொண்டிருப்பது இந்து மதத்தின் பண்டிகை...

 நடந்து கொண்டிருப்பது இந்து மதத்தின் பண்டிகை...


அதில் இள வயது சிறுவர்களை நடனமாட விட்டு ரசிக்கிறது ஒரு கூட்டம். நடனமாடினாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களின் வயதுக்கு மீறிய பாலியல் சேட்டைகளை செய்வதை பார்த்து அதிர்கிறோம். 


இந்து மத சிறுவர்கள்தானே .. உனக்கு என்ன கவலை என்று கேட்கலாம். இவர்கள் வளர்ந்து பெரியவனானவுடன் இந்து மதத்தோடு நின்று விடுவதில்லை. இஸ்லாமிய கிருத்தவ மார்க்கங்களை இலக்காக்கி அவர்களை வன்முறையின் பக்கம் இழுத்துவிடுகின்றனர். படிப்பு, வேலை வாய்ப்பு பற்றி கவலைப்படாமல் பத்து ரவுடிகள் காவி உடை உடுத்திக் கொண்டு 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகளை நாம் தினமும் பார்க்கிறோம். 


இதில் வழக்கம் போல தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சிறுவர்களே இதிலும் பயன்படுத்தப்படுவதை பார்க்கிறோம். தமிழகத்தில் இவர்களின் திட்டம் பலிக்கவில்லை. எனவேதான் நடிகர் விஜயை வைத்து காய் நகர்த்தி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.




'எல்லோரும் உதவி செய்கிறார்கள். ஆனால் அனாதையான நாங்கள் இறந்து விட்டால் எங்கள் உடல்?'

'எல்லோரும் உதவி செய்கிறார்கள். ஆனால் அனாதையான நாங்கள் இறந்து விட்டால் எங்கள் உடல்?'
'வெட்டியான் வேலை பார்க்கிறாய் என்று எனக்கு முதலில் பெண் கூட கொடுக்கவில்லை'
'9000 க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை புதைத்துள்ளோம்'
'இத்தனைக்கும் எனக்கு உறுதுணையாக இருப்பது என் அம்மா'



Saturday, August 15, 2026

உபியில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வைத்து காவடி யாத்திரை

 உபியில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வைத்து காவடி யாத்திரை..

இந்த யாத்திரையில் பார்பன குழந்தைகள் யாரும் பங்கேற்க மாட்டார். அவர்கள் கையில் பேனாவும் பென்சிலும் இருக்கும்.
இங்கு ஊர்வலம் போகும் 90 சதவீத பிள்ளைகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள். இதன் மூலம் இவர்களின் கல்வி மடை மாற்றப்பட்டு புனிதம் என்ற பெயரில் கற்காலத்துக்கு இழுத்து செல்கிறார்கள். இதை உணராத இவர்களின் பெற்றோர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
நமது நாடு மிகப் பெரிய அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது சங்கிகளால்.