Followers

Friday, August 21, 2026

இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது வல்லரசுகளின் ரத்த வர்த்தகத்திற்கான முதலீடு மட்டுமே...


 



இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது வல்லரசுகளின் ரத்த வர்த்தகத்திற்கான முதலீடு மட்டுமே...

 

கருப்புத் திரைகளும், இரத்தம் தோய்ந்த கத்திகளும், முகமூடி அணிந்த கொடிய பயங்கர வாதிகளுடன் இணையதளங்களை உலுக்கிய கொடூர மரண தண்டனை வீடியோக்களும் உலக நாடுகளின் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது.

 

பாலைவனப் புழுதியில் இருந்து கிளம்பிய அந்தப் பெருநெருப்பு, தேசங்களின் எல்லைகளைத் தகர்த்து உலகையே நடுநடுங்க வைத்தது.

 

தங்களை இறைவனின் ஒரே காவலர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு, அநீதிக்கு எதிரான இறுதிப் போர் என்று முழங்கியவர்கள் அவர்கள்.

 

அவர்கள் தான் ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாதிகள்.

ஆனால் இன்று, காசாவின் வானம் சாம்பலாலும் இரத்தத்தாலும் மூடப்பட்டு, கான்கிரீட் இடிபாடுகளுக்கு அடியில் பிஞ்சுக் குழந்தைகளின் குரல்கள் மூழ்கிப்போயின.

 

உலகமே திகைத்துப் போய் நிற்கும் இந்த வரலாற்றுப் பேரழிவின் நடுவே, எப்போதும் வன்முறையைச் சுவாசித்த அந்தப் பயங்கரப் பேய்களின் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை;

 

எந்த ஒரு பழிவாங்கும் தாக்குதலும் நிகழவில்லை.

இஸ்ரேலை நோக்கி ஒரு தோட்டா கூட இவர்களால் சுடப்படவில்லை.

 

நீதிக்காகப் போரிடுவதாகச் சொன்னவர்கள் எங்கே போனார்கள்?

இஸ்ரேலியப்படை முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக கொல்லும் பொழுது ஒரு சிறு எதிர்வினை காட்டாமல் அமைதிகாப்பதன் மர்மம் பற்றி எவராவது சிந்தித்திருக்கிறீர்களா?

 

அந்த மர்மமான அமைதியின் பின்னணியில், பல தசாப்தங்களாக விளையாடப்பட்டு வரும் சர்வதேச அதிகாரச் சதுரங்கத்தின் கொடூர நிஜம் ஒன்று ஒளிந்திருக்கிறது.

 

மத்திய கிழக்கிலும் தெற்காசியாவிலும் உதிர்ந்த இரத்தத் துளிகள் எதுவும் தற்செயலானவை அல்ல;

 

தாலிபான், அல்-கொய்தா முதல் ஐஎஸ்ஐஎஸ் வரை இந்த உலகில் முளைத்த எந்த ஆயுதக் குழுவும் வெறும் மத உணர்ச்சியால் மட்டும் உருவானவை அல்ல.

 

அவை வல்லரசுகளின் ரகசிய உளவுத் திட்டங்கள்,

‘Proxy Wars’ எனப்படும் மறைமுகப் போர்கள் மற்றும் பில்லியன் டாலர் ஆயுத வர்த்தகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டவை.

ஈராக் மீதான படையெடுப்பு சதாம் ஹுசைனின் ஆட்சியைத் தகர்த்து, அந்த நாட்டை நிர்வாகமற்ற பெருங்குழப்பத்திற்குள் தள்ளியது;

 

அமெரிக்கா விட்டுச் சென்ற பலவீனமான கைப்பாவை அரசாங்கத்தின் இடிபாடுகளில் இருந்து, மேற்குலக உளவுத்துறைகளின் திட்டமிடலில் ஒரு கொடிய அசுரனாக ஐஎஸ்ஐஎஸ் வடிவெடுத்தது.

 

மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றியமைத்து இஸ்ரேலுக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதே இதன் அடித்தளம்.

சிரியாவின் ஆசாத் ஆட்சியை வீழ்த்தி, அரபு உலகில் எஞ்சியிருந்த வலுவான எதிர்ப்புக் குரலை அடக்கவும், சிரியா மற்றும் லெபனானில் ஈரானின் செல்வாக்கைத் துண்டிக்கவும் CIA, MI6 மற்றும் மொசாட் போன்ற அமைப்புகள் காய்களை நகர்த்தின.

கோலன் குன்றுகள் முதல் மத்திய தரைக்கடல் வரை தடையற்ற ஆதிக்கத்தை நிலைநிறுத்த, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் நிதியும், துருக்கியின் பயிற்சி முகாம்களும் களம் அமைத்துக் கொடுத்தன.

 

சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு போர்க்களத்திற்கு இழுக்கப்பட்டனர்.

 

அமெரிக்க அரசு “Combined Joint Task Force – Operation Inherent Resolve” என்ற புதிய ராணுவக் கட்டளையகத்தை அமைத்து போரை நடத்திய அதே வேளையில், போர்த் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பிரம்மாண்ட தனியார் நிறுவனங்களுக்கு ( Military Industrial complex)அது தொடர்ந்து பில்லியன் கணக்கான டாலர்களைக் கொட்டும் வருமான ஆதாரமாக மாறியது.

 

இந்த நாடகத்தின் உச்சக்கட்ட திரைமறைவு ஆட்டமாக உலாவரும் தகவல்கள் இன்னும் அதிரவைக்கின்றன.

 

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக (Caliph) உலகை அச்சுறுத்திய அபு பக்கர் அல்-பாக்தாதி என்பவன், Edward Snowdon மற்றும் ஈரானிய ஊடகத் தகவல்களின்படி ‘சைமன் எலியட்’ (Simon Elliot / Elliot Shimon) என்கிற மொசாட் உளவாளியின் வேடம் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.

 

தீவிரவாதக் குழுக்களை ஒரே குடையின் கீழ் திரட்டி, அரபு நாடுகளை உள்ளிருந்தே சிதைக்க நிகழ்த்தப்பட்ட ஒரு உளவியல் போரின் ( psy-op) உச்சக்கட்ட முகமாகவே அவன் வலம் வந்தான்.

இந்த பயங்கரவாத அமைப்பு தாங்கள் உண்மையில் யார் என்பதை தெளிவாக அவர்களின் பெயரான ஐஎஸ்ஐஎஸ்(ISIS) ஊடாக உலகிற்கு தெளிவாக அறிவிக்கின்றனர்.

 

ஒற்றைக் கண் (The All-Seeing Eye)

 

பண்டைய எகிப்திய புராணங்களில் 'ஐசிஸ்' (Isis) மற்றும் ஹோரஸின் 'ஒற்றைக் கண்' (Eye of Horus) என்பது உலகளாவிய ரகசிய அதிகாரக் குழுக்களாலும் (Illuminati/Freemasonry) ஆதிக்க சக்திகளாலும் ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

புவிசார் அரசியலில் இது, உலக நிகழ்வுகளையும் யுத்தங்களையும் திரைமறைவில் இருந்து கவனித்து, முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் "மறைமுகக் கண்காணிப்பு மற்றும் பேரதிகாரத்தின்" அடையாளமாகப் இந்த ஒற்றைக்கண. பார்க்கப்படுகிறது.

 

அதுமட்டும் அல்ல, ISIS என்பது வெறும் தீவிரவாத இயக்கத்தின் சுருக்கம் மட்டுமல்ல; அது Israeli Secret Intelligence Service (இஸ்ரேலிய ரகசிய உளவுத்துறை) என்றும் பொருள்படும்.

 

இன்று ஆட்டத்தின் இறுதிக்கட்டம் எட்டியுள்ளது.

 

ஆரம்பத்தில் பொதுமக்களைக் கொன்றதற்காக சர்வதேச அளவில் "ஐஎஸ்ஐ௭ஸ் பயங்கரவாதிகள்" எனத் தடை செய்யப்பட்டவர்கள், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரில் பயனுள்ள சக்தியாக மாறியவுடன்:

 

அவர்கள் "Syrian Rebels” என பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்படுகின்றனர்.

 

ஈரானிலிருந்து சிரியா வழியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்கள் செல்வதைத் தடுக்கும் நிலப்பரப்புக் கட்டுப்பாட்டை ( ground control) முன்னர் ஐஎஸ்ஐஎஸ் என்று அழைக்கப்பட்ட இந்தக் “சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்கள்” கையில் வைத்துள்ளன.

 

சிரியாவின் இத்லிப் (Idlib) போன்ற பகுதிகளில் உள்ளூர் நிர்வாகத்தை நடத்துவதால், அவர்களைத் தவிர்க்க முடியாத "Partners for Stability” என்ற தொனியில் மேற்கத்திய அரசியல் வட்டாரங்கள் பார்க்கத் தொடங்கின.

 

கொலையாளி தூதராக மாறுவதும், பயங்கரவாதி கூட்டாளியாக மாறுவதும் இந்த அதிகார அரசியலில் மிகச் சாதாரணம்.

காசாவின் பிணக்குவியல்களுக்கு முன்னால் ஐஎஸ்ஐஎஸ் இன்று மெளனம் காப்பது ஒன்றே, அந்த இயக்கத்தின் உண்மையான நோக்கத்தையும் அதன் எஜமானர்கள் யார் என்பதையும் அம்பலப்படுத்துகிறது.

 

புனிதப் போர் என்பது உலகை ஏமாற்றப் போர்த்தப்பட்ட ஒரு போலி முகமூடி; அதன் பின்னணியில் இயங்கியது சர்வதேச உளவு அமைப்புகளும், ஆதிக்க வல்லரசுகளும் தான்.

 

இறுதியில் வெளிப்படும் நிதர்சனம் என்னவென்றால், ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலே உலகளாவிய அதிகாரப் போட்டியில் ஒரு மூலோபாயக் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இஸ்லாமியக் கோட்பாடுகளின் பெயரால் உலகம் முழுவதும் தூண்டிவிடப்பட்ட வன்முறை அலைகள் இயல்பானவை அல்ல,

அவை மேற்கத்திய உளவு அமைப்புகளின் திட்டமிடலாலும், சியோனிச ஊடகங்களின் உளவியல் பிரச்சாரங்களாலும், பெருமளவு நிதியை இறைத்து உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான பூதாகரம் தான் “ இஸ்லாமிய பயங்கரவாதம்”.

 

பிராந்தியங்களைச் சிதைக்கவும், வளங்களைச் சூறையாடவும், எதிரி நாடுகளைப் பலவீனப்படுத்தவும் மதத்தின் பெயரால் ஒரு அசுரன் தேவைப்பட்டான்.

 

அந்தத் தேவைக்கேற்ப ஆயுதக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன, வளர்க்கப்பட்டன, வேலை முடிந்ததும் கழற்றி எறியப்பட்டன.

இஸ்லாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் ஒரு துளி தொடர்பு கூட கிடையாது.

 

வரலாற்றின் எந்தப் பயங்கரவாத அமைப்பின் வேர்களைத் தோண்டினாலும், அதன் பின்னால் ஒரு சக்திவாய்ந்த தேசத்தின் நிழலும், தீராத அதிகாரப் பசியும் மறைந்திருப்பது புலப்படும்.

ஏனென்றால், இந்த ஆதிக்க உலகிற்கு அமைதியை விட யுத்தமே அதிக லாபம் தரும் சந்தையாக இருக்கிறது.

 

"War is a good business".

 

ஆயுத வியாபாரிகளின் பெட்டகங்களை நிரப்பவும், புவிசார் வரைபடங்களைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்கவும் மனித உயிர்கள் வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமே மாற்றப்படுகின்றன.

 

காசாவின் அழிவும், ஐஎஸ்ஐஎஸ் குழுவின் மர்மமான மௌனமும் இந்த அதிகார நாடகத்தின் முகமூடியை முற்றிலுமாக அகற்றிவிட்டன.

 

பயங்கரவாதம் என்பது ஒரு மதத்தின் வெளிப்பாடு அல்ல, மாறாக அது வல்லரசுகளின் ரத்த வர்த்தகத்திற்கான முதலீடு மட்டுமே.

 

Wednesday, August 19, 2026

பாகிஸ்தான் என்ற நாடே உருவாகியிருக்காது

 அந்த இரண்டு மருத்துவர்கள் மட்டும் அன்று இந்த உண்மைகளை வெளியே கசிய விட்டிருந்தால் பாகிஸ்தான் என்ற நாடே உருவாகியிருக்காது. காந்தியும் உயிரோடு இருந்திருப்பார். லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கும். ஆர்எஸ்எஸ் பாஜக போன்ற பாசிசவாதிகளும் காணாமல் போயிருப்பர். இந்த பிராந்தியத்தில் ஆயுத வியாபாரமும் படுத்திருக்கும். இந்தியா ஒரு வல்லரசாகவும் மாறியிருக்கும்.

முகம்மது அலி ஜின்னா அவர்களின் ஒரே வாரிசுகள் தற்போது சிறந்த இந்திய குடிமகன்களாகவும், இந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறார்கள்...
ஹேராம் படத்தில் கூட ஒரு வசனத்தை கமலஹாசன் வைத்து இருப்பார், கமல், ஷாருக்கைப் பார்த்து “பாக்கிஸ்தான் போ” என்கிற பாணியில் மத அடிப்படையில் கருத்து தெரிவிக்க, அதற்கு ஷாருக் பதில், "ஜின்னா மகளே பாக்கிஸ்தான் செல்லாத போது, நான் காந்தியின் மகன்(அவர் வழிநடப்பவன்) நான் ஏன் பாக்கிஸ்தான் செல்லவேண்டும்" என்பார்..
ஆம் ஜின்னாவின் ஒரே வாரிசு டினா பாக்கிஸ்தான் போகாமல் செளராஷ்டிரா மதத்தவரை மணந்து இந்தியாவிலேயே தங்கினார். பின்னர் அமெரிக்கா சென்று வந்தார், அவரது பிள்ளைகள் பேரன்கள் எல்லாம் மும்பையில் டாப் 10 பணக்கார்ரகள், இந்தியாவில் 44வது இடத்தில் இருக்கும் குடும்பம்.
இந்தியா இரு துண்டுகளாக மாற காரணமான ஒருவரின் வாரிசுகள் இந்திய பொருளாதாரத்தில் டாப்பில் இருக்கும் போது.... இந்த பிரிவினைக்கு சற்றும் சம்பந்தமில்லாத இந்திய முஸ்லிம்களை இன்று வரை குறை சொல்லித் திரியும் சங்கிகள் திருந்துவது எப்போது?



Tuesday, August 18, 2026

மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.

 மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:
"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".
இப்படி எழுதி வைத்துக் கொண்டு அதனை தடை செய்ய கோரிக்கையும் வைக்காமல் மனுவுக்கு சிலை அமைத்து பூஜித்தால் எந்த சூத்திரன் வேதம் படிக்க வருவான். எனவேதான் வேதத்தை வாங்க மறுக்கிறார்கள்.
அடுத்து குர்ஆனை எடுத்துக் கொள்வோம்.....
குர்ஆனின் பல வசனங்கள் 'மனிதர்களே' என்று தான் ஆரம்பிக்கும். அதில் தமிழன், அரபி, அமெரிக்கன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன் என்று அனைவரும் வருவர். எனவே தான் அங்கு குர்ஆன் இலவசமாக வழங்கும் போது அனைத்து நாட்டு மக்களும் போட்டி போட்டுக் கொண்டு குர்ஆனை வாங்கிச் செல்கின்றனர்.
நபிகள் நாயகம் கூறினார்கள் “மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.”
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)



போபாலில் விரைத் திருட்டுக் கும்பல் தீவிரமாகச் செயல்படுகிறதா?


 



போபாலில் விரைத் திருட்டுக் கும்பல் தீவிரமாகச் செயல்படுகிறதா?

 

போபாலைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகஸ்ட் 6 அன்று காணாமல் போனான். காணாமல் போனவர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 11 அன்று, சோட்டா தலாப்பில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 14 அன்று, அவனது உடைகள் மற்றும் செருப்புகளை வைத்து குடும்பத்தினர் உடலை அடையாளம் கண்டனர்.

 

விசாரணைக்காக சுமார் 13 சந்தேக நபர்களை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். மேலும்,

 

முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறந்த இளைஞனின் விரைகளை விற்பதற்காக ₹2 கோடி தருவதாக ஆசை காட்டி அவனை ஏமாற்றியது தெரியவந்தது. அவற்றை வெளிநாட்டிற்கு அனுப்புவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

 

பிரேதப் பரிசோதனையின் போது, ​​அவனது உடலில் விரைகள் கண்டறியப்படவில்லை.

 

தற்போது, ​​இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் அவற்றை வெளிநாட்டிற்கு அனுப்பும் முழுத் திட்டம் குறித்தும் போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முன்னதாக, மற்றொரு சடலமும் விரைகள் இல்லாமல் கண்டெடுக்கப்பட்டது.

 

செய்தி: சைலேந்திர சிங் சௌஹான், கூடுதல் டிசிபி, போபால்

 

நம் நாட்டில் வெகு தூரம் பயணிப்பவர்கள் தக்க துணைகளோடு பயணிக்கவும். விரைத் திருட்டு கும்பல் தனியாக செல்பவர்களை இலக்காக்குகிறது.