Followers

Monday, March 02, 2026

பெண்கள் ஈரானில் கொடுமைப்படுத்தப்படுவதாக கிருக்கன் ட்ரம்ப் சொன்னான்.


 


பெண்கள் ஈரானில் கொடுமைப்படுத்தப்படுவதாக கிருக்கன் ட்ரம்ப் சொன்னான்.


ஆனால் இங்கோ கொமெய்னி மரணத்திற்கு அதிகம் அழுது அவரை கண்ணியமாக வழி அனுப்பி வைத்தது பெண்களே..


அமெரிக்காவை எதிர்த்து போர் புரிய தயார் என்று வெளியே அதிகம் வருவதும் பெண்களே..


அடுத்து ஈரானின் ஏவுகணை டென்ஷனை குறைக்க நடனமாடி பங்கருக்குள் பொழுதை கழிக்கும் யூதர்கள்.

ஈரான் மக்களுக்கான ஆயிஷா கடாபியின் முழுமையான உரை..

 


ஈரான் மக்களுக்கான ஆயிஷா கடாபியின் முழுமையான உரை..

 

உறுதிமிக்க மற்றும் சுதந்திரத்தை நேசிக்கும் ஈரான் மக்களே..

 

அழிவு, வேதனை மற்றும் துரோகத்தால் நிறைந்த ஒரு இதயத்தோடு நான் உங்களிடம் பேசுகிறேன்.

 

தனது நாடு சிதைந்து போவதைக் கண்கூடாகப் பார்த்த ஒரு பெண்ணின் குரல் இது..

 

அதுவும் வெளிப்படையான எதிரிகளால் அல்ல, மேற்கத்திய நாடுகளின் வஞ்சகமான புன்னகையையும், அவர்களின் பொய் வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்ததால் ஏற்பட்ட விளைவு இது.

 

மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் ஏமாற்று வார்த்தைகளையும் முழக்கங்களையும் நம்பி ஒருபோதும் விழுந்துவிடாதீர்கள் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.

 

அவர்கள் ஒருமுறை என் தந்தை கர்னல் கடாபியிடம் சொன்னார்கள் :

நீங்கள் உங்கள் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட்டால் உலகத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்படும்” என்று.

 

என் தந்தை நல்லெண்ணம் மற்றும் பேச்சுவார்த்தையின் மீது கொண்ட நம்பிக்கையினால் விட்டுக்கொடுக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

 

ஆனால் இறுதியில் நேட்டோவின் (NATO) குண்டுகள் எங்கள் நிலத்தை எப்படிச் சாம்பலாக்கின என்பதை நாங்கள் பார்த்தோம். லிபியா ரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டது அதன் மக்கள் வறுமை, புலம்பெயர்தல் மற்றும் அழிவுக்குள் தள்ளப்பட்டார்கள்.

 

எனது ஈரானிய சகோதர சகோதரிகளே..

 

தடைகள், உளவாளிகள் மற்றும் பொருளாதாரப் போருக்கு மத்தியிலும் நீங்கள் காட்டும் துணிச்சலும், கண்ணியமும், விடாமுயற்சியும் உங்கள் தேசத்தின் கௌரவத்திற்கும் உண்மையான சுதந்திரத்திற்கும் சான்றாகும். எதிரிக்கு விட்டுக்கொடுப்பது என்பது அழிவு, பிளவு மற்றும் துன்பத்தைத் தவிர வேறெதையும் தராது.

 

ஒரு ஓநாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆட்டைக் காப்பாற்றாது அல்லது நிரந்தர அமைதியைக் கொண்டுவராது அது அடுத்த வேளை உணவிற்கான நேரத்தை மட்டுமே குறிக்கும்”

 

கியூபா, வெனிசுலா, வடகொரியா முதல் பாலஸ்தீனம் வரை உறுதியுடன் நின்றவர்கள், உலகின் மாவீரர்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார்கள் மற்றும் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்து மாவீரர்களாக மாறியுள்ளனர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

 

ஆனால் சரணடைந்தவர்கள் சாம்பலாக்கப்பட்டார்கள்,

 

அவர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டன.

 

தைரியமிக்க ஈரான் மக்களுக்கு எனது சல்யூட்.

 

ஈரானியப் போராட்டத்திற்கு (Resistance) எனது சல்யூட்..

 

பாலஸ்தீன மக்களுடனான உலகளாவிய ஒற்றுமைக்கு எனது சல்யூட்.

 

அன்புடனும் கருணையுடனும்,

ஆயிஷா கடாபி..

 

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மோடியைப் பார்த்து கேட்கிறார்.

 




இது போன்ற (komaini) ஒரு தலைவரின் படுகொலை நிகழும்போது, ​​இந்தியா துக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் எதைப் பற்றி பயப்படுகிறீர்கள்? இஸ்ரேலைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா? அல்லது ஜனாதிபதி டிரம்பைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா?”

 

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மோடியைப் பார்த்து கேட்கிறார்.

 

மோடி பயப்படுவது அதிகம் எஃப்ஸ்டீன் பைலை நினைத்தே... அதை காட்டி மிரட்டியே நமது நாட்டின் பொருளாதாரம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் டெல்அவிவ் நகர் உருக்குலைந்து கிடக்கின்ற காட்சி...




 இஸ்ரேலின் டெல்அவிவ் நகர் உருக்குலைந்து கிடக்கின்ற காட்சி...


உயிருக்கு பயந்து தற்போது பல நாடுகள் சுற்றி தற்போது ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ளானாம் நெதன்யாஹூ.


உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அவனை கொன்று பழி தீர்க்கும் ஈரான்.


ஏற்கெனவே நெதன்யாஹூ இறந்து விட்டதாக செய்தி வருகிறது. அது உண்மையாக இருந்தால் சந்தோஷம்.


வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுள்ளது ஈரான்.


தற்போது சீனாவும் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்க உள்ளது.


பல மாதங்கள் நீடித்தால் விலைவாசி பன்மடங்கு உயரும். 


பொதுமக்களாகிய நாம்தான் கஷ்டப்பட போகிறோம்.

14,000 கோடி "வங்கி வட்டி" இந்தியாவுக்கு ஈரான் பரிசாக வழங்கியது..

 



★★ 14,000 கோடி "வங்கி வட்டி" இந்தியாவுக்கு ஈரான் பரிசாக வழங்கியது..
அது ஒரு வரலாற்று கதை..
~2010-12, UCO வங்கி சிக்கலில் இருந்தது. மேலும் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே UCO வங்கியின் பிரச்சினைகளை களைய உபாயத்தை தேடிக் கொண்டிருந்தார்.
~ ஈரான் மீது அமெரிக்க தடை விதிக்கப்பட்டது...
ஆனால் இந்தியா ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் என டாக்டர் அறிவித்தார்.
👉 டாக்டர் மன்மோகன் சிங் UCO வங்கியை "ஈரானின் பிரத்யேக கட்டண நுழைவாயில்" ஆக்கியதால் , UCO வங்கி இதில் சாதித்தது என்ன..?
~ இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரானில் இருந்து எண்ணெய் வாங்கி UCO வங்கியில் பணம் போட ஆரம்பித்தார்கள்..
இந்த மொத்த பணமும் "வட்டியில்லா" இருந்தது..
ஈரானின் அனுமதியுடன் இது சாத்தியமானது..
~ அமெரிக்க தடை காரணமாக ஈரானுக்கு பணம் செலுத்த முடியாது.. UCO வங்கியில் பல்லாயிரம் கோடி ₹ "வட்டி இல்லா" டெபாசிட் செய்யப்பட்டது.
👉 UCO வங்கி இந்த "வட்டியில்லா" பணத்தை முதலீடு செய்தது..
UCO வங்கி சுமார் 14,000 கோடி சம்பாதித்தது..
கற்பனை செய்து பாருங்கள்..
👉2014ன் 14,000 கோடியா அல்லது இன்றைய சுமார் 50-60 ஆயிரம் கோடியா அல்லது அதற்கு மேல்..
ஈரான் அப்படியே விட்டுருச்சு..
👉 நஷ்டத்தில் இயங்கும் UCO வங்கி லாபத்தில் வந்தது..
UCO வங்கி பங்கு விலை உயர இருந்தது..
◆◆ ஈரானின் தலைசிறந்த தலைமையை ஒன்றாக வைத்து இந்த "வியூகங்களை" உருவாக்கியுள்ளார் டாக்டர் சிங்.
◆◆ தங்கள் பணம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உபயோகமாக இருந்தால் அது அவர்களின் அதிர்ஷ்டம் என்று ஈரான் கூறியிருந்தது..
◆ மேலும் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் நாக்கு பூட்டப்பட்டுள்ளது.!!
மோடி கமேனிக்கு அஞ்சலி கூட செலுத்தவில்லை..
நாம் ஏன் "துரோகிகள்" ஆனோம் என்பதே கேள்வி?.
நாம் சாதிப்பது என்ன..?
✋ இந்தியா ஈரானின் நட்பு ஒருவருக்கொருவர் கடன்.. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் கமேனையின் கடனை இரு நாடுகளும் ஒருபோதும் அடைக்க முடியாது..
💐 டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் ஆசீர்வாதங்கள் நிலைத்திருக்கட்டும்.. இந்தியா ஈரான் நட்பு வாழ்க.. ஜெய் ஹிந்த்
படித்ததில் பிடித்தது