Followers

Monday, March 30, 2026

உபி - பித்தளையிலான கோவில் மணிகளை திருடி மாட்டிக் கொண்ட மேல் சாதி இந்துக்கள்

 




உபி - பித்தளையிலான கோவில் மணிகளை திருடி மாட்டிக் கொண்ட மேல் சாதி இந்துக்கள்

 

உபி – ஜான்பூர்

 

கோவில் மணிகளை திருடி மாட்டிக் கொண்ட சங் பரிவார கும்பல்.

 

கோவிலில் அடிக்கடி மணி திருடு போனது. காவல் சிசிடிவி கேமரா வைத்து காத்திருந்தனர். ஐந்து இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து கோவில் மணிகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

பித்தளையில் செய்யப்பட்ட மணி என்பதால் இது சற்று விலை அதிகம். இவ்வாறு 50 மணிகளை பல கோவில்களில் திருடியுள்ளது இந்த சங் பரிவார கூட்டம்.

 

திருடியவர்களின் பெயர்கள் முறையே பிரிஜேஸ் கவுதம், பியாரிலால், ஹரிஸாம் இந்த மூவரையும் கைது செய்துள்ளது காவல் துறை.

 

இதில் ரிங்கு பண்டிட், அருண் இந்த இருவரும் தப்பி ஓடி விட்டனர். இவர்களை தேடி வருகின்றனர் காவல் துறையினர்.

 

ஐந்து பேருமே மேல் சாதி இந்துக்கள். சங் பரிவாரத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள்.

 

'இந்து மதம் ஆபத்தில் உள்ளது' என்று மோடி அடிக்கடி கூறுவார். தற்போது யாரால் ஆபத்தில் உள்ளது என்று தெரிகிறதா?

 

 

 

 

 

 


Sunday, March 15, 2026

இஸ்ரேல், இப்பகுதியில் உள்ள நாடுகள் மீதான தாக்குதல்களில் எதிர்பாராத சவாலை எதிர்கொண்டுள்ளது: இடம்பெயர்வு பறவைகள்.

 


இஸ்ரேல், இப்பகுதியில் உள்ள நாடுகள் மீதான தாக்குதல்களில் எதிர்பாராத சவாலை எதிர்கொண்டுள்ளது: இடம்பெயர்வு பறவைகள்.

இஸ்ரேலிய ஊடகங்கள், நாட்டின் விமானப்படை, வருடாந்திர வசந்த கால இடம்பெயர்வின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் வானத்தை கடக்கும் மில்லியன் கணக்கான பறவைகளால் ஏற்படும் "அச்சுறுத்தல்கள்" குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

பறவைகளுடன் காற்றில் அதிவேக மோதல்கள் இஸ்ரேலிய விமானங்களை சேதப்படுத்தும் என்பதை அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ரேடார் திரைகளில், பெரிய பறவைகள் எப்போதாவது "சந்தேகத்திற்கிடமான பொருட்களாக" கூட காட்டப்பட்டுள்ளன, இதனால் வீரர்கள் அவற்றை ட்ரோன்கள் என்று தவறாக நினைத்து சுட்டு வீழ்த்தினர்.

பறவைகள் மீதான விளைவுகள், காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் லெபனான் மற்றும் ஈரான் மீதான போர்களால் ஏற்பட்ட பாரிய சுற்றுச்சூழல் சேதத்தின் ஒரு பகுதி மட்டுமே.

Saturday, March 14, 2026

ஆயத்துல்லா அலி கமனி அவர்கள் நின்று கொண்டிருக்கும் இந்த கல்லறை பற்றி தெரிந்து கொள்வோமா?


 




ஆயத்துல்லா அலி கமனி அவர்கள் நின்று கொண்டிருக்கும் இந்த கல்லறை பற்றி தெரிந்து கொள்வோமா?

 

ஆயத்துல்லா அலி கமனி அவர்கள் நின்று கொண்டிருக்கும் இந்த கல்லறை என்பது இன்றைய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வெள்ளை இனவெறி நாய்களுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் ஈரானிய ஏவுகணை தொழில் நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹசன் டெஹராணியின் கல்லறை..

 

இன்று வளைகுடா நாடுகள் எப்படி எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட வெள்ளையின நாடுகளிடம் காசுக்கு அனைத்தையும் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றதோ அதே போன்றுதான் ஈரானும் இருந்தது.. ஈரானுக்கு எதிராக வெள்ளை இன வெறி நாய்கள் ஈராக்கை பயன்படுத்திய போருக்கு பின்பு அந்த நிலை ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு இன்று உலகத்தின் வல்லமை கொண்ட ஏவுகணை சக்தி கொண்ட நாடாக மாற்றியதற்கு சொந்தக்காரர்தான் ஹசன் அவர்கள்..

 

2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொண்டிருந்த பொழுது கொல்லப்பட்டார்.. இவரது மரணத்திற்கு வெள்ளை இன வெறியர்களின் பங்கு உள்ளதாக நம்பப்படுகிறது.. இவர் கொல்லப்பட்டாலும் இவரால் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளின் பலம் என்பது இன்று ஒட்டுமொத்த வெள்ளையனை குறிப்பாக இஸ்ரேலை குலை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதே எதார்த்தமான உண்மை.. 

 

அதை மெய்ப்பிக்கும் வண்ணம் இவரது கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் என்பது "இஸ்ரேலை  நடுங்க வைத்த ஒருவரின் கல்லறை" என்று பொறிக்கப்பட்டுள்ளது..

 

Thursday, March 12, 2026

ஈரானியர்கள் கல்வி கற்பதில் திறமையானவர்கள் என்று அன்றே நபிகள் நாயகம் கணித்தார்கள்.

 



ஈரானியர்கள் கல்வி கற்பதில் திறமையானவர்கள் என்று அன்றே நபிகள் நாயகம் கணித்தார்கள்.

 

உலகிலேயே மிகச்சிறந்த அறிவாளிகள் "இஸ்ரேலியர்" என்று யார் பரப்பினார்கள் தெரியாது. தற்போது பேசுபொருளாக இருக்கும் ஈரான்  "பாரசீகர்கள்" குறித்து நபிகளாரின் கருத்து:

 

​"கல்வியை 'ஸுரய்யா' (அடர்மீன் கூட்டம்/Pleiades) எனும் விண்மீனில் இருந்தாலும், பாரசீகத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் அதனை அங்கிருந்து பெற்றுக் கொள்வார்கள்."

 

(ஆதாரம்: ஸஹீஹ் புகாரி - 4897, ஸஹீஹ் முஸ்லிம் - 2546)

 

மேற்சொன்ன ஹதீஸில் பாரசீக/ஈரான் மக்களின் அறிவுத்திறன் மற்றும் மார்க்கப் பற்றை நபி அவர்கள் முன்னறிவிப்பாகப் பாராட்டியுள்ளார்கள்.

 

பிற்காலத்தில் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் அபூ ஹனீபா போன்ற மாபெரும் அறிஞர்கள் பாரசீகப் பின்னணியிலிருந்து தோன்றி இஸ்லாமிய அறிவியலுக்கு ஆற்றிய தொண்டு இந்த ஹதீஸை மெய்ப்பிப்பதாக உள்ளது.

 

பாரசீகப் பின்னணி கொண்ட நபித்தோழர்களில் முதன்மையானவர் ஸல்மான் அல்-பாரிஸீ (ரலி) அவர்கள். "ஸல்மான் நம்மைச் சேர்ந்தவர்; அவர் (என்) குடும்பத்தைச் சேர்ந்தவர்" என்று அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.

 ஈமான் அல்லது கல்வி என்பது விண்மீனில் இருந்தாலும் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் அதனைப் பெற்றுக்கொள்வார்கள் என்ற ஹதீஸ் கூறப்பட்டபோது, நபிகளார் ஸல்மான் (ரலி) அவர்களின் தோள் மீது கை வைத்து இவரையே அடையாளப்படுத்தினார்.

Pleiades (பிளியடீஸ்) என்பது வானவியலில் மிகவும் பிரபலமான ஒரு விண்மீன் கூட்டமாகும். இதனைத் தமிழில் 'அறுமீன்' அல்லது 'கார்த்திகை விண்மீன் கூட்டம்' என்று அழைப்பார்கள்.

 

​நபிகள் நாயகம் அவர்கள் இந்த விண்மீனை உதாரணமாகக் காட்டியதற்குப் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் உண்டு.

 

பூமியிலிருந்து சுமார் 444 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு திறந்த விண்மீன் கொத்தாகும் (Open Cluster). வெறும் கண்ணால் பார்க்கும்போது ஆறு அல்லது ஏழு நட்சத்திரங்கள் மிக நெருக்கமாக ஒரு கொத்தாகத் தெரியும்.

 

மனித வரலாற்றில் மிகப்பழங்காலத்திலிருந்தே (கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே) இந்த நட்சத்திரக் கூட்டம் கடற்பயணிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளது.

 

அக்கால அரபு இலக்கியங்களில் 'ஸுரய்யா' என்பது எட்ட முடியாத மிக உயர்ந்த இடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு.

 

துருக்கி அதிபர் எர்தோஹன் பாராளுமன்றத்தில் ஷியா சன்னி பிரிவுகள் குறித்த அழகிய உரை..

 




துருக்கி அதிபர் எர்தோஹன் பாராளுமன்றத்தில் ஷியா சன்னி பிரிவுகள் குறித்த அழகிய உரை..

 

'ஷியா சன்னி பிரிவு குர்ஆனில் இல்லை. நபிகள் நாயகமும் நமக்கு சொல்லித் தரவில்லை.

 

அலி அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்..

 

ஃபாத்திமா அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்..

 

தாய் ஆயிஷா அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்.

 

நபிகளின் பேரர்கள் ஹஸன் ஹூசைன் இருவரும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.

 

கலிபா உஸ்மான் அவர்கள் நம் அனைவருக்கும் பொதுவானவர்..

 

சென்றது சென்று விட்டது. யார் சரி யார் தவறு என்பதை இறைவன் முடிவு செய்து கொள்வான்.

 

சென்று போன நபி தோழர்களை குறை கூறி நாம் பாவத்தை சம்பாதிக்க வேண்டாம்.

 

அந்த காலத்தில் அதிகார போட்டியில் நிகழ்ந்த தவறான வழிமுறைகளை தூரமாக்குவோம்.

 

இறைவன் சொல்லித் தராத ஷியா சன்னி பிரிவுகளை தூரமாக்கி நாமெல்லாம் முஸ்லிம்கள் என்ற ஒரு குடையின் கீழ் வருவோம்.'

 

என்று உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரது உரையை ஆமோதித்தனர்.

 

இனி வரும் காலங்களிலாவது பழைய காயங்களை மறந்து அனைவரும் முஸ்லிம் என்ற ஒரு குடையின் கீழ் வருவோம்.

 

யூதர்களின் சூழ்ச்சிகளிலிருந்து இறைவன் நம் அனைவரையும் காப்பானாக!