என்ன ஒரு சுய மரியாதையை கற்றுத் தருகிறது இஸ்லாம்!
- சுவனப்பிரியன்
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, February 18, 2026
என்ன ஒரு சுய மரியாதையை கற்றுத் தருகிறது இஸ்லாம்!
Tuesday, February 17, 2026
கொமைனியை நேரில் சந்திக்க ட்ரம்ப் ஆர்வம் - ஆக மொத்தம் ஈரானுக்கே வெற்றி
கொமைனியை நேரில் சந்திக்க ட்ரம்ப் ஆர்வம் - ஆக மொத்தம் ஈரானுக்கே வெற்றி
ரமலான் நல் வாழ்த்துக்கள்... ஒன்றே குலம் ஒருவனே தேவன் - யாதும் ஊரே யாவரும் கேளீர்
உலக மக்கள் அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் - யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவு இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது.
கருப்பன், வெள்ளையன், அரபியன் ஆசியன், ஐரோப்பியன், என்று உலகின் எந்த மூலையிலும் இன்று ஒலிக்கும் ஒரே குரல் 'அல்லாஹூ அக்பர்' 'இறைவன் பெரியவன்'. ஆம் நம்மை படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவன் கொடுத்த பல கட்டளைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பை நோற்க இஸ்லாமியர்கள் தயாராகிவிட்டனர்.
கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையே பாலஸ்தீன காஸா மக்களும் ரமலானை வரவேற்க தயாராகி விட்டனர். இந்த வருடமாவது அவர்களின் துயர் நிரந்தரமாக நீங்கி அமைதியான வாழ்வை எதிர்கொள்வார்களாக....
இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தையும் காப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாட்டையும் காப்பார்கள்.
ஸாஹர் யூனுஸ் ஷேக்...
மஹாராஷ்ட்ரா மும்ப்ராவில் உவைஸி கட்சி சார்பில் போட்டியிட்டு எதிர்த்து நின்ற சங்கி வேட்பாளரை தோற்கடித்தார்..
'கைஸா ஹராயா?' 'எப்படி தோற்கடித்தேன் பார்த்தீர்களா? என்று அவர் நக்கலாக பேசியது பெரும் பேசு பொருளாகியது.
நெடுநாள் குப்பை கூளமாக கிடந்த ஒரு கால்வாயை ஜேஸிபி எந்திரம் கொண்டு வந்து இவரே மேற்பார்வையிட்டு தற்போது அங்கு தண்ணீர் வழித் தடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தையும் காப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாட்டையும் காப்பார்கள்.
Monday, February 16, 2026
'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்
'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்
வட மாநிலங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நமது ஊடகங்கள் அதனை மறைக்கின்றன. அந்த போராட்டத்தில் கலந்து கொண்டஒரு பிராமணர் சொல்கிறார்.
'பிராமணர்களாகிய நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல. ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறியவர்கள்'
'அப்போ நீங்கள் இந்தியர் இல்லையா?'
'தற்போது இந்திய சட்டப்படி நாங்கள் இந்தியர்கள்தான். அதை மறுக்கவில்லை. ஆனால் எங்களை விட இந்நாட்டில் பழங்குடி மக்கள், ஆதி திராவிடர்கள், மற்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் எங்களை விட காலா காலமாக இந்த மண்ணில் வசிப்பவர்கள். அவர்களின் பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு என்பது அவர்களின் சதவீதத்துக்கு ஏற்ப கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். அதுதான் சமூக நீதி'
இவர்தான் மிகச்சிறந்த பிராமணர். இவரைப் போன்று அனைத்து பிராமணர்களும் மாறி விட்டால் நமது நாடு கூடிய விரைவிலேயே வல்லரசாக மாறி விடும்.