Followers

Tuesday, June 09, 2026

கோடீஸ்வர மருந்து வர்த்தகரான தேவ்ராஜ் மாலிக்கின் மகன் ஆயுஷ் மாலிக்


 


கோடீஸ்வர மருந்து வர்த்தகரான தேவ்ராஜ் மாலிக்கின் மகன் ஆயுஷ் மாலிக், இஸ்லாம் மதத்திற்கு மாறிய முடிவு இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாத்தைத் தழுவியதாகவும், 'முகமது அலி' என்ற பெயரைச் சூட்டிக்கொண்டதாகவும் கூறிய அந்த இளைஞர், தற்போது 'கட்டாய மதமாற்றம்' செய்ததாகத் தன் தந்தையின் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.


தன் மகன், தான் திருமணம் செய்துகொண்ட மனைவி மற்றும் அவரது தந்தையால் இஸ்லாம் மதத்திற்கு மாறக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறி, தந்தை தேவ்ராஜ் மாலிக் ஒரு புகாரைப் பதிவு செய்தார்.


தந்தையின் புகாரைத் தொடர்ந்து, முகமது அலியின் மனைவியும் மாமனாரும் கைது செய்யப்பட்டனர்.


"அல்ஹம்துலில்லாஹ், நான் ஒரு முஸ்லிம், என் மதத்தை என் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தேர்ந்தெடுத்தேன்," என்று முகமது அலி அறிவித்து, தனது குடும்பத்தினரை விடுவிக்கக் கோரினார்.


இந்தியாவின் சர்ச்சைக்குரிய 'மதமாற்றத் தடுப்புச் சட்டங்கள்', இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இதுபோன்ற வழக்குகளில் கடுமையான நீதித்துறை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன.

ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு இந்திய பிராமணரை பேட்டி கண்டார்


 



ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு இந்திய பிராமணரை பேட்டி கண்டார்.

 

பத்திரிகையாளர் :

 

உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது,ஏற்படும்.

 

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை (BC,MBC,SC,ST) தங்களுக்கு கீழ் வைத்துள்ளீர்கள், அவர்கள் எண்ணிக்கை 85%. ஆக உள்ளது.இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராக, பிராமணியத்திற்கு எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை?

 

பிராமணரின் பதில் :

 

அவர்கள் (பிராமணர் அல்லாதார்) ஒரு குழந்தையை உருவாக்க முடியும், ஆனால் தங்கள் குழந்தைக்கு பெயரிட முடியாது.

அவர்கள் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது.

அந்த நபர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் நாங்கள் இல்லாமல் திருமண தேதி பெற முடியாது.

 

அந்த நபர்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியும், ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்களுக்கு நல்ல நேரம் இருக்க முடியாது.

தங்கள் வாழ்க்கையின் எந்த முடிவையும் தாங்களே எடுக்க முடியாதவர்கள் ..

 

நன்மை தீமை பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் ..

இன்றும் உழைப்பு, அறிவை விட கடவுளையும் தெய்வங்களையும் நம்புகிறவர்கள் ..

 

நாய்-பூனை, மரம்-செடிகள், விதவை போன்றவற்றில் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் ..

 

கல்வி பிறப்பிலிருந்து வருவதாக நம்புவார்கள்...

வருமானத்தை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள் ..

நோயை தெய்வத்தின் கோபம் என்று நம்புபவர்கள் ..

 

மேலும் அந்த பிராமணர் கூறியதாவது : -

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் ஆலோசனைகளை தான் இன்னும் கேட்கின்றனர், எங்களால் உருவாக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களைத் தான் கடைபிடிக்கின்றனர்.

 

ஜாதகத்தையும் ஜோசியத்தையும் நம்ப வைத்துள்ளோம். எனவே, எங்கள் மீது கோபம் எழாதவாறு நாங்கள் மதத்தையும், கடவுளர்களையும் பயன்படுத்தி பார்த்துக்கொள்கிறோம்.

 

மிக முக்கியமான உண்மை, இந்துமதம் என்பது பிராமணர்களால் பிராமணர்கள் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு மதம்.

ஆனால், இந்து மதத்தை இந்தியாவின் மதம் என்றும், இந்திய மக்களின் வாழ்க்கைமுறை என்றும், சுதந்திரமான மதம் என்றும் நாங்கள் நம்ப வைத்துள்ளோம்.

 

எங்களால் கற்பிக்கப்பட்ட பெரிய கடவுள்களின் பிடியிலிருந்து தங்களை நீக்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. வேறு மதத்திற்கு மாறவும் அவர்கள் தயாராக இல்லை.

இந்த நிலைமை மாறும் வரை பிராமணர் அல்லாதார் அப்படித்தான் இருப்பார்கள்.

 

*இந்த நாள் மாறும்*

 

அந்த நாள் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வந்து விட்டது.

 

கத்தியின்றி ரத்தமின்றி பார்பன சுரண்டலுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி ஓடி வந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் யுவன் சங்கர் ராஜா பெரியார் தாசன் என்று இன்று வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

 

Tuesday, June 02, 2026

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் அழகிய கிராமமும் அழகிய கோவிலும்.

 



பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் அழகிய கிராமமும் அழகிய கோவிலும்..


கோவிலுக்கு முன்னால் வந்து 'அல்லாஹ் அக்பர்' என்று கோஷமிடவில்லை..


புல்டோஷர் கொண்டு இந்துக்களின் வீடுகளை அநியாயமாக இடிக்கவில்லை..


'அல்லாஹ் அக்பர்  சொல்' என்று இந்துக்களை கட்டாயப்படுத்தவில்லை...


இந்திய சங்கிகளை விட பாகிஸ்தானிய முஸ்லிம்கள் பக்குவப்பட்டுள்ளார்கள்...


உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கோடா (Khoda) காலனியில்

 





உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கோடா (Khoda) காலனியில் சூர்யா பிரதாப் சௌகான் என்ற 17 வயது இளைஞர், அசத் என்ற நபருடனான தனிப்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

 

இந்தச் சம்பவம் இரு நபர்களுக்கும் இடையேயான தனிப்பட்ட பகையின் உச்சகட்டமே தவிர, இதற்கு எந்தவிதமான மதக் காரணங்களும் இல்லை என்பது காவல்துறை விசாரணையில் தெளிவாகியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக உடனடியாகச் செயல்பட்ட காவல்துறை, குற்றவாளியான அசத்தை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றதுடன், அவனது தந்தை நவாப் உள்ளிட்ட தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது.

 

இவ்வளவு தெளிவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும், சில மதவாத அமைப்பினர் இந்தக் கொலையை மத ரீதியானதாகச் சித்தரித்து, காசியாபாத் வீதிகளில் திரண்டு "ஜிகாதிகளைச் சுட்டுக் கொல்லுங்கள்" போன்ற வெறுப்புமிக்க முழக்கங்களை எழுப்பி அமைதியான சூழலைப் பதற்றமாக்க முயற்சித்து வருகின்றனர்.

 

தனிப்பட்ட குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தையே ஒட்டுமொத்தமாகச் சாடுவதும், வன்முறையைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதும் சமுதாய நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயலாகும். குற்றவாளிகள் மீது சட்டம் தனது கடமையைச் செய்துவிட்ட நிலையில், தனிப்பட்ட நபர்களின் மோதலை மதக் கலவரமாக மாற்றத் துடிக்கும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சியையும் வெறுப்பு அரசியலையும் பொதுமக்கள் உணர்ந்து அமைதியைக் காக்க வேண்டும்.

 

கொலை செய்தவர் முஸ்லிம் என்ற காரணத்திற்காக உடனடியாகவே போலீசாரால் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதுவே இந்துவாக இருந்தால் என்ன நடந்திருக்கும் அதுவும் உத்தர பிரதேசத்தில்.... முஸ்லிம் என்றால் ஒரு நியாயம் இந்து என்றால் ஒரு நியாயமா? என்று சமூக வலைத்தளங்களில் இது பற்றி பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது....

 


 

Monday, June 01, 2026

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான அலி கான்,


 





மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான அலி கான், தனது நண்பர்களான ஜெயந்த் வர்மா, சிவம் மால்வியா மற்றும் யாஷ் ஆகியோருடன் ரயில் பயணத்தைத் தொடங்கினார்.

 

பராசியா ரயில் நிலையம் அருகே, இருக்கை தொடர்பாக ஒரு இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் மற்றும் வசவுகளுக்குப் பிறகு, அவரது நண்பர்கள் நிலைமையைச் சமாதானப்படுத்தினர்.

எப்படியோ, அந்தப் பிரச்சினை தணிந்தது.

 

ஆனால், நள்ளிரவில் பேதுல் மாவட்டத்தில் உள்ள பர்தேஹி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன், 10-15 பேர் அவரை ரயிலிலிருந்து கீழே இழுத்து அடித்துத் தாக்கத் தொடங்கினர்.

 

அவரது நண்பர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மற்றொரு பெட்டிக்குத் தப்பிச் சென்றனர். இதற்கிடையில், அலி கான் உயிரிழந்தார்.

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நண்பர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

 

காவல் நிலைய அதிகாரி பிரமோத் பாட்டீல், காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

 

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அமைதி நிலவுகிறது.

 

ஒரு முஸ்லிம் இறந்ததால் மாநிலம் அமைதியாக இருக்கிறது. அதே ஒரு ஹிந்து இறந்திருந்தால் ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் இஸ்லாமிய எதிர்ப்பு குரல் வரும். கொலை செய்தவனின் வீடு புல்டோஷர் கொண்டு இடிக்கப்படும்