Followers

Tuesday, July 07, 2026

'நாங்கள் தொப்புள் கொடி உறவுகள்' - முஸ்லிம்கள் பற்றி பேசும் போதே கண் கலங்கிய இந்து சகோதரி




'நாங்கள் தொப்புள் கொடி உறவுகள்' - முஸ்லிம்கள் பற்றி பேசும் போதே கண் கலங்கிய இந்து சகோதரி


'சுனாமி, பொன்ற பேரிடர் காலங்களில் எங்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்தது முஸ்லிம்கள்தான்.. அவர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள்'

பாகிஸ்தான் கராச்சியில் இன்றும் வாழ்ந்து வரும் நமது தமிழ் சொந்தங்கள்...




 




பாகிஸ்தான் கராச்சியில் இன்றும் வாழ்ந்து வரும் நமது தமிழ் சொந்தங்கள்...

 

காவடி எடுக்கிறார்கள்...

 

மாரியம்மன் கோவில் கட்டி வழிபடுகிறார்கள்....

 

பொங்கல் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

 

இளம் தலைமுறை தமிழை மறந்து வருவதாகவும் அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கவலைப்படுகிறார்கள்.

 

100 வருடங்களாக தாங்கள் இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இன்றி தாங்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் கூறுகின்றனர்.

 

மோடியும் அமித்ஷாவும் வலிந்து அழைத்தாலும் அவர்களின் அழைப்பை புறக்கணித்து வருவதன் மூலம் மோடி அமித்ஷாவை விட அவர்களுக்கு பாகிஸ்தான் முஸ்லிம்களே பாதுகாப்பானவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் நமது தமிழ் சொந்தங்கள்.

 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறி விட்டால் இந்துக்களை ஒடுக்குவார்கள் என்று சங்கிகள் பரவலாக பொய்யை பரப்பி வருகின்றனர்.

 

சங்கிகள் சொல்வது பொய்தான் என்பதற்கு இந்த காணொளிகள் சாட்சியம் பகர்ந்து கொண்டுள்ளன.

Monday, July 06, 2026

ஆரியர்களின் வேதங்கள் புராணங்களில் திராவிடர்களை எப்படியெல்லாம் சித்தரித்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது

 ஆரியர்களின் வேதங்கள் புராணங்களில் திராவிடர்களை எப்படியெல்லாம் சித்தரித்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது

Dr.Wilber Theodore Elmore அவர்கள் எழுதிய
“Dravidian Gods in Modern Hinduism” எனும் நூல்.
முக்கியமாக திராவிடர்கள் “non-worshipers," "priestless," not keeping sacred fires," எனக் குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்கவும்.
திராவிடர் என்ற சொல், இந்தியத் தீபகற்பத்தில் உள்ள ஆரியரல்லாத மக்கள் அனைவரையும் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. திராவிடர்கள் இவ்நிலத்தின் பூர்வகுடிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர், ஆனால் ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடமேற்குப் பகுதியிலும் கணிசமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.
திராவிடர்களின் வரலாறு பழங்காலத்தில் மறைந்துவிட்டது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்களே இங்கு வசித்த குடிமக்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் தோற்றம் குறித்து வெளிச்சம் தரும் எந்த இலக்கியத்தையும் பாதுகாக்கவில்லை, எந்த நினைவுச்சின்னங்களையும் விட்டுச் செல்லவில்லை.
திராவிடர்களின் தோற்றம் குறித்த கேள்விக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சுவது இந்த ஆய்வறிக்கையின் நோக்கம் அல்ல. ஆரியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, ​​அந்த நிலத்தை மற்றொரு இனம் உடைமையாகக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்; அந்த இனத்தை அவர்கள் படிப்படியாக அடிபணியச் செய்து, ஓரளவிற்குத் தம்மோடு இணைத்துக் கொண்டனர் என்பதைச் சுட்டிக்காட்டுவதே போதுமானது.
தென்னிந்தியாவில் ஆரியர்கள் இப்போது பெரும்பாலும் பிராமணர்களாலேயே பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறார்கள். இந்து மதத்தின் நான்கு வர்ணங்களில், சூத்திரர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், தென்னிந்தியாவில் வைசியர்கள் மற்றும் சத்திரியர்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை கோரும் மிகச் சிலரே ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
திராவிடர்களை வெல்வதில் ஆரியர்கள் மேற்கொண்ட மாபெரும் போராட்டத்தைப் பற்றி ரிக்வேதத்தின் பாடல்கள் நமக்கு மிகுந்த வெளிச்சம் தருகின்றன. இந்த மக்களை வர்ணிக்க ஆரியர்களிடம் பட்டப்பெயர்களுக்குப் பஞ்சமில்லை. அவர்கள் அவர்களை "எதிரிகள்," "அடிமைகள்," "இழிந்த பழங்குடியினர்," "அறிவற்றவர்கள்," "மனிதாபிமானமற்றவர்கள்," "அந்நிய சடங்குகளைக் கடைப்பிடிப்பவர்கள்," "தீயவர்கள்," "கொடியவர்கள்," "சடங்குகளற்றவர்கள்," "பிரார்த்தனையற்றவர்கள்," "(கடவுள்களுக்கு) காணிக்கைகள் வழங்காதவர்கள்," "பால் பலியிடாதவர்கள்," "கடவுளை வழிபடாதவர்கள்," "புரோகிதர்களற்றவர்கள்," "புனித அக்னிகளை வளர்க்காதவர்கள்," "பைத்தியக்காரக் கடவுள்களை வழிபடுபவர்கள்" என்று அழைத்ததோடு, அவர்கள் மனித மாமிசம் உண்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட வர்ணனையாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் வெற்றியாளர்களும் தங்கள் எதிரிகளைப் பற்றி, அவர்கள் மந்தைக் குவியல்களில் செல்வந்தர்களாகவும், தகர்க்க முடியாத கோட்டைகள், இரும்புக் கோட்டைகள் மற்றும் நகரங்களைக் கொண்டவர்களாகவும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த எதிரிகளாகக் காணப்பட்டனர், மேலும் ஆரியர்கள் அவர்களை "காளைத் தாடையுடையவர்கள்" என்று அழைத்ததால், அவர்கள் தங்கள் எதிர்ப்பில் பிடிவாதமாக இருந்திருக்கலாம். இருப்பினும், காலப்போக்கில், அந்த வெற்றி முழுமையடைந்தது. ஆரியர்கள் ஆட்சியாளர்களானார்கள், புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட சாதி அமைப்பில் திராவிடர்கள் ஒரு கீழ்நிலையை அடைந்தனர்.
திராவிடர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களின் மதத்திற்கு ஏதேனும் சலுகை காட்டுவது அவசியம் என்பதை வெற்றியாளர்கள் விரைவில் உணர்ந்தனர். திராவிடர்கள் 'பைத்தியக்காரக் கடவுள்களை' வழிபட்டபோதிலும், அவர்கள் தங்கள் மதச் சடங்குகளில் மிகவும் உறுதியாக இருந்தனர். ஆரியர்கள் அவர்களைத் தங்கள் தெய்வங்களைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை, மாறாக, அந்த மக்களையும் அவர்களின் மதத்தையும் இந்து மதத்தின் கீழ் கொண்டுவரும் கொள்கையைக் கடைப்பிடித்தனர். இந்தச் செயல்முறை தற்போதைய காலம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பது எல்லாப் பக்கங்களிலும் தெளிவாகத் தெரிகிறது.
மூல வேத மதத்திற்கும் நவீன இந்து மதத்திற்கும் இடையே மிகக் குறைவான ஒற்றுமைகளே உள்ளன. திராவிட தெய்வங்கள், சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் பெரும் திரளானது, இந்து மதம் என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாகிவிட்டது; மேலும் இது பிராமண இந்து மதத்தால் ஓரளவிற்கு மாற்றப்பட்டிருந்தாலும், பிந்தையது திராவிட மதத்தால் அதே அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
நூலில் உள்ள பகுதி,
Excerpts from “Dravidian Gods in Modern Hinduism” by Dr.Wilber Theodore Elmore(1915 edition)
THE CONQUEST OF THE DRAVIDIANS
————————————————————
The term Dravidian is commonly used to refer to all of the non-Aryan population in the peninsula of India. The Dravidians are considered to be the aboriginal inhabitants of the land. They predominate in the southern and eastern parts of India,but form a considerable part of the population in the northwestern part where the Aryans predominate.
The history of the Dravidians is lost in antiquity. Long before the Aryans came to India they were the domiciled inhabitants. They have preserved no literature and left no monuments which throw light upon their origin.
It is not the intention of this thesis to throw new light on the question of the origin of the Dravidians. It is sufficient to point out that when the Aryan invaders came to India they found another race in possession of the land-a race which they gradually subjugated, and to some extent assimilated.
In South India the Aryans are now represented almost exclusively by the Brahmans. It is usually understood that of the four castes of Hinduism, the Sudras only are Dravidian, but it is probable that very few people in South India who claim descent from the Vaisyas and Kshatriyas are of Aryan origin.
The hymns of the Rigveda give us much light on the great struggle of the Aryans in conquering the Dravidians. The Aryans
were not lacking in epithets with which to describe these people. They called them "enemies," "slaves," "abject tribes," "void of sense," "inhuman," "keeping alien rites," "malignant," "wicked," "riteless," "prayerless," "bestowing no gifts" (to the gods), "pouring no oblation of milk," "non-worshipers," "priestless," not keeping sacred fires," "worshipers of mad gods," and they even accused them of eating human flesh.
It is probable that this is an exaggerated description, for the conquerors also speak of their enemies as being wealthy in herds, having impregnable castles, forts of iron, and cities. They were found to be most powerful foes, and probably were stubborn in their resistance, as the Aryans called them "bull-jawed." In the course of time, however, the conquest was complete. The Aryans became the rulers, and the Dravidians took a subordinate position in the newly organized caste system.
The conquerors soon found that if they were to hold the Dravidians in subjection some consideration for their religion was neces sary. Although the Dravidians were worshipers of "mad gods," they were most tenacious of their religious rites. The Aryans did not attempt to compel them to give up their gods, but adopted the policy of bringing the people with their religion into the fold of Hinduism. This process has been going on until the present time. To what extent the effort has succeeded is evident on every hand.
The original Vedic religion finds but little in common with mod ern Hinduism. The great mass of Dravidian deities, rites, and superstitions have become a part of so-called Hinduism, and while somewhat changed by Brahmanic Hinduism, the latter has been equally changed by the Dravidian religion.



அறிஞர் அண்ணா இந்து மதம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறார்.


 



அறிஞர் அண்ணா இந்து மதம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறார்.

 

 

" இந்து மதமென்றால், அது எங்களுடையது என்றெண்ணி இரும்பூதி இருக்கும் தமிழ் மக்கள் பலர்நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம். இந்து மதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிச்செல்வதற்காக வெட்டிய ஒரு அகழ் என்பதை நம்மவர் பலர் இன்னுந் தெரிந்துகொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். எனவே, இவ்விந்து மதத்தைப் பற்றிய உண்மைகளைத் தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து தெளிதல் பெரிதும் இன்றியமையாததாகும்.

 

 

இவ்விந்து மதம் தமிழ்நாட்டிற் பரவிய காலம், ஆரியர்கள் நம் நாட்டில் வந்து குடியேறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய காலத்தைக் குறிப்பதாகும். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருமுன் இந்து மதம் என்ற ஒரு மதமோ அன்றி வேறு மதங்களோ இருந்தனவென்று துணிவதற்குத் துளி சான்று கூடக் கிடையாது. ஆகையால், ஆரிய மதமாகிய இவ் இந்துமதத்தைத் தமிழ் மக்களுடைய மதம் என்றுரைக்க ஆராய்ச்சித் துறை கண்ட அறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள்.

 

 

ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ் மக்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட இந்துமதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லவென்பதை எடுத்துக்காட்டுவதே நம் குறிக்கோளாகும் ! "

 

Sunday, July 05, 2026

திருநீறு பூசாத நெற்றியை சுடு. சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து

 




திருநீறு பூசாத நெற்றியை சுடு. சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து

 

திக்பஸ்ம ரஹிதம்பாலம் திக்கிராம மசிவாலயம்

திகனீசார்சனம் ஜன்ம திக்வித்யா மசிவாத்மிகாம்.

 

(இ-ள்) பஸ்மமில்லாத நெற்றியைக்சுடு,

 

சிவாலயமில்லாத கிராமத்தையுங் கொளுத்து,

 

சிவபூஜையில்லாத ஐந்மத்தையுஞ்சுடு,

 

சிவஸ்வரூபமில்லாத வித்தையையுஞ்சுடு என்பதாம்.

 

அதர்வண வேதத்தைச் சேர்ந்த பிருஹஜ்ஜாபாலோபநிடதம் 1902 ஆம் ஆண்டு பதிப்பு

 

திருநீறு பூசாத நெற்றியை சுடு என்பதும் சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து என்பதும் எவ்வளவு பெரிய ஆபத்தான வார்த்தைகள். சிவனை ஏற்காதவர்கள் எந்த அளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பதை விளங்க முடிகிறது. எனது முன்னோர்களும் எந்த அளவு கொடுமைகளை அனுபவித்திருப்பாரகள் என்பதையும் உணர முடிகிறது.

 

 

திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா? ..”

 

கந்தன் திருநீறணிந்தால்

கண்ட பிணி ஓடிவிடும்…”

 

எந்த மதத்தவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட திருநீறு பற்றிய பாடல்களை மார்கழி மாதம் ஒலிபெருக்கியில் கேட்காதவர்கள் இருக்க முடியாது.

 

 

இவ்வாறு தனது மதப் பெருமைகளை கூறுவதை குறை காண முடியாது. ஆனால் சைவ மதத்தை ஏற்காதவர்களின் கிராமங்களை கொளுத்து என்பதை ஏற்க முடியாது. தகவல் தொழில் நுட்ப வசதி இல்லாத அந்த காலங்களை நினைத்துப் பாருங்கள். சமண பவுத்த மதத்தினர் எந்த அளவு கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்பது விளங்கும்.

 

இதில் இந்து மதம் அன்பையே போதிக்கிறது என்று நமக்கு அறிவுரை சொல்ல வருவார்கள்.