Followers

Sunday, August 16, 2026

நடந்து கொண்டிருப்பது இந்து மதத்தின் பண்டிகை...

 நடந்து கொண்டிருப்பது இந்து மதத்தின் பண்டிகை...


அதில் இள வயது சிறுவர்களை நடனமாட விட்டு ரசிக்கிறது ஒரு கூட்டம். நடனமாடினாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களின் வயதுக்கு மீறிய பாலியல் சேட்டைகளை செய்வதை பார்த்து அதிர்கிறோம். 


இந்து மத சிறுவர்கள்தானே .. உனக்கு என்ன கவலை என்று கேட்கலாம். இவர்கள் வளர்ந்து பெரியவனானவுடன் இந்து மதத்தோடு நின்று விடுவதில்லை. இஸ்லாமிய கிருத்தவ மார்க்கங்களை இலக்காக்கி அவர்களை வன்முறையின் பக்கம் இழுத்துவிடுகின்றனர். படிப்பு, வேலை வாய்ப்பு பற்றி கவலைப்படாமல் பத்து ரவுடிகள் காவி உடை உடுத்திக் கொண்டு 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகளை நாம் தினமும் பார்க்கிறோம். 


இதில் வழக்கம் போல தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சிறுவர்களே இதிலும் பயன்படுத்தப்படுவதை பார்க்கிறோம். தமிழகத்தில் இவர்களின் திட்டம் பலிக்கவில்லை. எனவேதான் நடிகர் விஜயை வைத்து காய் நகர்த்தி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.




'எல்லோரும் உதவி செய்கிறார்கள். ஆனால் அனாதையான நாங்கள் இறந்து விட்டால் எங்கள் உடல்?'

'எல்லோரும் உதவி செய்கிறார்கள். ஆனால் அனாதையான நாங்கள் இறந்து விட்டால் எங்கள் உடல்?'
'வெட்டியான் வேலை பார்க்கிறாய் என்று எனக்கு முதலில் பெண் கூட கொடுக்கவில்லை'
'9000 க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை புதைத்துள்ளோம்'
'இத்தனைக்கும் எனக்கு உறுதுணையாக இருப்பது என் அம்மா'



Saturday, August 15, 2026

உபியில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வைத்து காவடி யாத்திரை

 உபியில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வைத்து காவடி யாத்திரை..

இந்த யாத்திரையில் பார்பன குழந்தைகள் யாரும் பங்கேற்க மாட்டார். அவர்கள் கையில் பேனாவும் பென்சிலும் இருக்கும்.
இங்கு ஊர்வலம் போகும் 90 சதவீத பிள்ளைகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள். இதன் மூலம் இவர்களின் கல்வி மடை மாற்றப்பட்டு புனிதம் என்ற பெயரில் கற்காலத்துக்கு இழுத்து செல்கிறார்கள். இதை உணராத இவர்களின் பெற்றோர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
நமது நாடு மிகப் பெரிய அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது சங்கிகளால்.



Wednesday, July 22, 2026

கனடாவைச் சேர்ந்த ஒரு சகோதரி இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்

 


எல்லா புகழும் இறைவனுக்கே...அல்ஹம்துலில்லாஹ்!

 

கனடாவைச் சேர்ந்த ஒரு சகோதரி இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

இஸ்லாத்திற்கு நல்வரவு, அன்புச் சகோதரி ஜாஸ்மின்.

 

ஒவ்வொரு மன மாற்றமும், அல்லாஹ் எல்லா தேசங்கள், எல்லாப் பின்னணிகள் மற்றும் எல்லாத் தரப்பு மக்களின் உள்ளங்களுக்கும் தொடர்ந்து வழிகாட்டுகிறான் என்பதை நினைவூட்டுகிறது. ஒருவர் எங்கிருந்து தொடங்கினாலும், உண்மையை உளப்பூர்வமாகத் தேடுபவர்களுக்கு அல்லாஹ்வை நோக்கிய பாதை எப்போதும் திறந்தே இருக்கிறது.

 

இன்று, படைப்புகள் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ்வை மட்டுமே வணங்கத் தேர்ந்தெடுத்த மற்றொரு சகோதரியால் நமது சமுதாயம் மேலும் வலுப்பெறுகிறது.

 

நபிகள் நாயகம் முஹம்மது அவர்கள் கூறினார்கள்:

«"அல்லாஹ் யாருக்கு நன்மை செய்ய நாடுகிறானோ, அவருக்கு மார்க்கத்தைப் பற்றிய அறிவை அளிக்கிறான்."

(ஸஹீஹ் அல்-புகாரி & ஸஹீஹ் முஸ்லிம்)»

சகோதரி ஜாஸ்மின் மீது அல்லாஹ் தனது கருணையைப் பொழியவும், அவரது நம்பிக்கையை வலுப்படுத்தவும், அவருக்குப் பயனுள்ள அறிவை அதிகரிக்கவும், அவரை நல்லோர்களில் ஒருவராக ஆக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

 

அல்லாஹ் அவளுடைய அன்புப் பிள்ளைகளான ஜிப்ரீல் மற்றும் ஆலியாவையும் ஏற்றுக் கொண்டு, அவர்களை சத்தியத்தின் பக்கம் வழிநடத்தி, இஸ்லாத்தில் அவர்களை உறுதியாக நிலைநிறுத்தி, அவர்களின் குடும்பத்தைப் பாதுகாத்து, அவர்கள் அனைவருக்கும் சொர்க்கத்தின் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக. ஆமீன். 🤲

அன்புச் சகோதரியே, வீட்டிற்கு நல்வரவு.

இஸ்லாத்துடனான உங்கள் பயணம் அமைதி, வழிகாட்டுதல் மற்றும் அல்லாஹ்வின் எல்லையற்ற கருணையால் நிறைந்திருக்கட்டும்.

பிரியாணி உணவு என்பது முகலாயர்கள் கொண்டு வந்த உணவு முறை.




 //கணக்குப் பார்த்து அளவோடு உண்ட இந்து தமிழ் சமூகத்தில் இருந்து மாட்டுக்கறி புரியாணியை நித்தம் உண்ணுவதற்கும்,இந்துக்களை மதமாற்றி கை நிறைய டொலர்களை உழைக்கவும் என்றே தாய் மதத்தை விட்டு மதம் மாறிய அதிர்ஷ்ட சாலி அல்லவா நீங்கள்.//

Navaratnam Samithamby

 

இஸ்லாம் தமிழகத்துக்கு வந்தது கிபி 1400 வாக்கில். ஆனால் அதற்கு முன்பே நமது முன்னோர்கள் மாமிச உணவில் கொடி கட்டி பறந்துள்ளனர். ஆரியர்கள் சைவத்துக்கு மாறியவுடன் மற்ற தமிழர்களையும் வைசத்துக்கு மாற இன்று வரை நிர்பந்தித்து வருகின்றனர். இவ்வளவு ஏன் இந்துக்கள் கடவுளாக மதிக்கும் ராமனே புலால் உண்டுள்ளதாக சம்பூர்ண ராமாயணம் சொல்கிறது.

 

பிரியாணி உணவு என்பது முகலாயர்கள் கொண்டு வந்த உணவு முறை. அதிலும் சத்து இருக்கிறது. எதையுமே அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மருந்து மாத்திரைகளில் நமது பொருளாதாரம் வீணாகும்.

 

சங்க காலத்தில் புலால் உணவு (மாமிச உணவு) மக்களின் அன்றாட உணவு முறையின் முக்கிய அங்கமாக இருந்தது. ஐவகை நிலங்களின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) சூழலுக்கு ஏற்ப மான், காட்டுப்பன்றி, முயல், மீன் மற்றும் பறவை இனங்கள் போன்ற பலவிதமான புலால் உணவுகள் உட்கொள்ளப்பட்டன. 

·         வகைகள்: சங்க இலக்கியமான 'மலைபடுகடாம்' போன்ற நூல்களில், உடும்பின் இறைச்சி, முள்ளம்பன்றி, மற்றும் காட்டெருமை இறைச்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வேடர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இவற்றை விரும்பி உண்டனர். 

·         சமையல்: இறைச்சியை நன்கு துண்டுகளாக்கி, புளி மற்றும் பிற இயற்கை சுவையூட்டிகளுடன் சேர்த்து வேகவைத்தல் (புழுக்கல்), வறுத்தல் அல்லது நெருப்பில் சுடுதல் ஆகிய முறைகளைக் கையாண்டனர். 

 

·         நெய்தல் நிலம்: கடற்கரை பகுதியில் வாழ்ந்த மக்கள் (பரதவர்) மீன் மற்றும் நண்டு வகைகளைத் தங்களது முதன்மை உணவாகக் கொண்டிருந்தனர்.

 

வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றுகள்:

·         விருந்தோம்பல்: சங்க காலத்தில் புலால் உணவு மிகச் சிறந்த விருந்தாகக் கருதப்பட்டது. அதியமான் போன்ற மன்னர்கள் மற்றும் அரசர்கள் புலவர்களைச் சிறப்பிக்கும்போது சுவையான இறைச்சி வகைகளை வயிறாரப் பரிமாறினர்

 

·         கோப்பெருநற்கிள்ளி: அரசன் கோப்பெருநற்கிள்ளி புலவர்களுக்கு சுட்ட மான்கறியைப் பரிமாறியதாக இலக்கியச் சான்றுகள் உள்ளன.

 

·         பாலை நிலம்: பாலை நிலத்தில் வாழ்ந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் மாடுகளைக் கொன்று அதன் இறைச்சியை உண்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.