Followers

Monday, July 13, 2026

ஹரியானாவில், பிரீத்தி இஸ்லாம் மதத்திற்கு மாறி கதீஜா ஆனார்.


 


ஹரியானாவில், பிரீத்தி இஸ்லாம் மதத்திற்கு மாறி கதீஜா ஆனார்.

 

அந்த வலதுசாரி பத்திரிகையாளர் இதை எந்த அளவு கடுமையாக பார்க்கிறார்?

'எதனால் நீ இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தாய்..... குர்ஆனில் எத்தனை தவறான வழிகாட்டுதல் இருக்கிறது தெரியுமா?

 

நாங்களெல்லாம் அறிவு இல்லாதவர்கள்... உனக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறதா?

 

இந்து மதத்தில் இல்லாதது இஸ்லாத்தில் என்ன இருக்கிறது? பதில் சொல்?'

 

அந்த பெண் எந்த பதிலும் சொல்லவில்லை…  அந்த பெண்ணின் மவுனம் எந்த அளவு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

 

இப்படி அந்த பெண்ணை மிரட்டுவது சரிதானா?

 

மாட்டுக் கறி பிரச்னையால் முஸ்லிம்களை கொல்வது...

 

பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் மதரஸாக்களை இடிப்பது...

 

சிறு குற்றம் புரிந்தாலும் முஸ்லிம் வீடுகளை புல்டோஷர் கொண்டு இடிப்பது...

 

புர்ஹா அணிந்த பெண்களை பொது வெளியில் கேவலப்படுத்துவது...

 

வர்ணாசிரமம் சரிதான் என்று இன்றும் வாதாடி சாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப்டுத்துவது...

 

மாட்டு சாணியையும் மாட்டு மூத்திரத்தையும் பொது வெளியில் குடிப்பது..

 

இதை எல்லாம் பார்த்துக் கூட படித்த அந்தப் பெண் வெறுத்துப் போய் இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம்.

 

இஸ்லாத்தில் இருந்து கூட பலர் இந்து மதத்துக்கு சென்றுள்ளார்கள். யாரும் இவ்வாறு நடிகை குஷ்புவிடம் சென்று கேள்வி கேட்பதில்லை

 

 

வெள்ளத்தில் சிக்கிய இந்து குடும்பத்தை மீட்ட இஸ்லாமிய இளைஞர்கள்

 


வெள்ளத்தில் சிக்கிய இந்து குடும்பத்தை மீட்ட இஸ்லாமிய இளைஞர்கள்

 

உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபாவில்

 

ரோஹித்தின் திருமணக் காரில் 6 பேர் பயணம் செய்தபோது, ​​அவர்கள் கார் வெள்ளம் சூழ்ந்த ஆற்றில் விழுந்தது.   

இரவு நேரம் ஆனதால் அக்கம் பக்கம் யாரும் இல்லை.

 

தங்களை காப்பாற்றும் படி குரல் எழுப்புகிறார்கள்.

 

அதிர்ஷ்டவசமாக அந்த சாலையில் வந்த  தௌசீஃப், ஷஃபிக், இர்ஃபான் மற்றும் ஜம்ஷெட் ஆகியோர் ஆற்றில் குதித்து, அந்தக் குடும்பம் முழுவதையும் மீட்டனர்.

 

இந்தியாவில் மனிதாபிமானம் இன்னும் இருக்கிறது.

பிள்ளைகளை அழைத்து சென்று ஆர்எஸ்எஸ் ஷாகாவில் பங்கேற்க வைக்கின்றனர்.

 


ராஜஸ்தானின் துங்கர்கரில், ஒரு அரசு ஆசிரியர், சுற்றுலா செல்வதாகக் கூறி குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ் கிளைக்கு அழைத்துச் சென்றதால், பெற்றோர்கள் கடும் கோபமடைந்தனர்.

 

அந்த அரசு ஆசிரியர் ஒரு ஆர்.எஸ்.எஸ் கிளையை நடத்தி வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

 

குழந்தைகளை சங்கத்தில் சேர்ப்பதற்காக அரசு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறதா?

 

அந்த பள்ளி சிறுவனிடம் உறவினர் கேட்கிறார் 'உன்னை என்ன சொல்லி அழைத்து சென்றார்கள்?'

 

சிறுவன் சொல்கிறான் 'சுற்றுலா என்று ஆசிரியர் கூறினார்'

 

சுற்றுலா என்று கூறி பிள்ளைகளை அழைத்து சென்று ஆர்எஸ்எஸ் ஷாகாவில் பங்கேற்க வைக்கின்றனர். இனி அந்த சிறுவனுக்கு படிப்பு ஏறுமா? இஸ்லாமிய வன்முறையை போதிக்கும் ஷாகாவுக்கு சென்றால் அவனது எதிர்காலம் பாழ்.

 

'இந்து மதம் ஆபத்தில் உள்ளது என்று மோடி அடிக்கடி கூறுகிறாரே? யாரால் ஆபத்து என்று இப்போது புரிகிறதா?

Sunday, July 12, 2026

"கீழடிக்குச் சவுக்கடி"

 




"கீழடிக்குச் சவுக்கடி"

 

கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிறுவிடும் கீழடியின் தொல்லியல் ஆய்வறிக்கையை, இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை.

அவ்வறிக்கை "முழுமையற்றது" என்று தொல்லியல் துறையின் 'மதிப்பீட்டுக் குழு' கருத்துக் கூறியதை அடுத்து, அதில் திருத்தம் செய்யுமாறு, கீழடி, தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றியத் தொல்லியல் துறை வற்புறுத்தி வந்தது.

 

அதற்குப் பதிலளித்த திரு அமர்நாத், "மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையில், ஏற்புடைய காரணங்களும் இல்லை; தகுந்த நியாயமும் இல்லை" என்று கூறியிருந்தார். இதனை அடுத்து இந்தியத் தொல்லியல் துறையின் ஐவர் கொண்ட உள்நிலைக் குழு, கீழடிக் களத்திற்கே சென்று மறு ஆய்வு செய்யும் முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர், ஒன்றிய அரசின் கருத்துப் படி, அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய அரசாங்கம் அமைந்த 50 நாட்களில், ஆர் எஸ் எஸ் இன் முக்கியமான ஐந்து திட்டங்கள், தற்போது நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட உள்ளன. அவையாவன:

 

1.மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு இனி கிடையாது.

 

2.திருப்பரங்குன்றத்தில் இணை அளவைக் கணக்கீடு செய்வதற்கும், அதற்கான கால அவகாசத்திற்கும் அனுமதி.

 

3.கோவையில் சைவ, வைணவக் கோயில்களுக்கு அருகில் கிறிஸ்துவ சர்ச் கட்டுவதற்கு அனுமதி மறுப்பு.

 

4.சிறுபான்மையினரின் நிறுவனத் திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதி உதவி மறுப்பு.

 

5.பக்ரீத் அன்றோ அல்லது வேறு நாட்களிலோ பசுவதை செய்யக்கூடாது. பசு மாமிசக் கடைகள் திறக்கப்படக்கூடாது.

 

 

தமிழ்நாட்டில், திமுக அரசாங்கம் இருந்த வரை, மேற்கண்ட பாசிச வெறிச்செயல்கள், செயல்படுத்த முடியாமல் இருந்தன. அரசாங்கம், அரசியல் இவையெல்லாம் என்னவென்றே தெரியாதவர்களின் அரசாங்கம் அமைந்தவுடன் அவர்கள் துணையோடு ஒன்றிய அரசும், ஆர்எஸ்எஸும் தாங்கள் நினைத்த "ஒரே நாடு ஒரே மொழித்" திட்டத்தை நிறைவேற்றத் துடித்துக் கொண்டுள்ளனர்.

இனி, கீழடி நாகரீகத்தின் காலம் 2000 க்குக் கீழே இறக்கப்படும். தமிழ் மொழி, தமிழ் எழுத்துருவின் (தமிழி) காலமும் 2600 லிருந்து குறைக்கப்பட்டு விடும். இதை ஏற்காமல் நீதிமன்றம் சென்றால், அங்கே சாம்பு மவன்களும், அரசு வழக்குரைஞர்களும் இதற்காகவே காத்துக் கொண்டிருப்பார்கள்....!..

 

தமிழர்களுக்குச் சாதி, மதச் சண்டைகளுக்கே நேரம் போதவில்லையே............

 

என் செய்வது?

 

தமிழன் என்று சொல்லடா!

தலை குனிந்து நில்லடா!

 

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

 

Tuesday, July 07, 2026

நமது நாடு எங்கு போய்க் கொண்டுள்ளது? எங்கு திரும்மினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு!

 




நமது நாடு எங்கு போய்க் கொண்டுள்ளது? எங்கு திரும்மினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு!

 

ஒரு பெண், தன் கணவர் கண்முன்னே நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

போதையில் இருந்த அவரது கணவரை அடக்கி, குற்றவாளிகள் அப்பெண்ணை அருகிலுள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

 

📍சூரஜ்பூர், சத்தீஸ்கர்

 

கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகள்: ரிது யாதவ் (30), ராம்ஜி (25), கபில் மற்றும் ராமேஷ்வர்.