Followers

Wednesday, February 25, 2026

தலித்தான நான் எனது குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்க முடிவெடுத்துள்ளேன்




தலித்தான நான் எனது குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்க முடிவெடுத்துள்ளேன்

இலகுவாக தீர்க்க வேண்டிய பிரச்னைக்காக என்னை அடித்தனர்: எனது மனைவியை எனது பிள்ளைகளை வீடு புகுந்து அடித்தனர்.
இனி மேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
நான் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறேன். என்னை தொலைபேசியில் இடத்தை சொன்னீர்கள் என்றால் குடும்பத்தோடு உங்களை வந்து சந்திக்கிறேன்..
சண்டை சச்சரவுகளில் மாட்டி என்னையும் எனது குடும்பத்தையும் இழக்க விரும்பவில்லை.
நான் நிம்மதியாகவும் சுய மரியாதையுடனும் வாழ விரும்புகிறேன்.'
இந்த தலித்தின் உள்ளக் குமுறலுக்கு நமது நாடு என்ன பதிலை வைத்திருக்கிறது. இந்து ராஷ்ட்ரா அமைந்தால் இவர்களின் கதி என்ன? பதில் இருக்கிறதா சங்கிகளே...

Tuesday, February 24, 2026

பெரியசாமி பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பினார் - ஒரு மீள் பதிவு

 








பெரியசாமி பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பினார் - ஒரு மீள் பதிவு

 

சவூதியில் கடந்த பதினெட்டு வருடங்களாக அலைகழிக்கப்பட்ட அப்பாவி தமிழகத் தொழிலாளி ஒருவருக்கு ஒருவழியாகத் தீர்வு கிடைத்துள்ளது.

 

சவூதியின் ஹைல் மாகாண ஆளுநர் இளவரசர் சவூத் பின் அப்துல் முஹ்சின் என்பவருடைய தலையீட்டால் பெரியசாமி என்னும் அந்தத் தமிழர் கஃபீல் எனப்படும் பொறுப்பாளரிடமிருந்து 85,000 ரியால்களை ஒட்டுமொத்தச் சம்பளமாகப் பெற்று ஊர்திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தில் அவருக்கான இத்தொகையை ஷாம்லி காவல் நிலையத்தார் ஒப்படைத்துள்ளனர்.

 

45 வயதான பெரியசாமியை துன்பத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்க உதவிய ஹைல் மாகாண கவர்னருக்கு இந்திய கான்சல் ஜெனரல் ஃபைஸ் அகமது கித்வாய் வெளிப்படையாக தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். "ஹைல் மாகாண கவர்னரின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், பெரியசாமி தன் துன்பச்சுரங்கத்தின் முடிவில் ஒளியைப் பார்த்திருக்க முடியாது," என்று ஃபைஸ் அஹமது சொன்னார்.

 

நன்றியறிவித்தலின் அடிப்படையில் ஹைல் மாகாண கவர்னருக்கு ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்ப உள்ளதாகவும் ஃபைஸ் அகமது கூறினார். "ஷாம்லி காவல்நிலைய அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கடிதம் வழங்கப்படும்"

 

தமிழ்நாட்டின் காரைக்குடியைச் சேர்ந்த பெரியசாமி சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக வந்த போது, எல்லோரையும் போல அவருக்கும் கனவுகள் இருந்தன.1994ல் ஆடு மேய்க்கும் வேலைக்கு வந்தவருக்கு, கல்யாணமாகி ஒரேஒரு வருடம் தான் ஆகியிருந்தது.

 

கஃபீல் எனப்படும் அந்தப் பொறுப்பாளரின் பொறுப்பற்ற தனத்தால் கடந்த 18 வருடங்களாக சம்பளமோ, விடுமுறையோ கிடைக்கவேயில்லை பெரியசாமிக்கு. மன அழுத்தத்தால் ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

 

பெரியசாமியின் அவலநிலைக்குத் தீர்வு ஒரு சவூதிக்காரர் மூலம் வந்தது. மனிதாபிமானமிக்க அந்த மற்றொரு சவூதிக்காரர் பெரியசாமியின் நிலையை ஹைல் கவர்னர் இளவரசர் சவூத் இப்னு அப்துல்முஹ்சின் கவனத்திற்கு எடுத்துச்சென்றார். இந்தியத் தூதரக அதிகாரி தட்சினா மூர்த்தியும் சக இந்தியச் சகோதரனான பெரியசாமிக்காக உதவ முன்வந்தார்

 

 

கவர்னரின் ஆணைகளின் படி விசாரணைக்குப் பின்னர், அந்தப் பொறுப்பாளர் ஊதியம் மற்றும் விமான ச் சீட்டை செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் ஊதியங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் பெரியசாமியை உடனடியாக இந்தியா திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அந்தப் பொறுப்பாளர் ஒரு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை . இறுதியாக தனக்கு சுமார் ஒரு இலட்சம் ரியால் வரவேண்டியது இருந்தும் 85,000 கிடைத்தால் போதும் என்று பெரியசாமி தெரிவித்ததன் பேரில் அத்தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், ஜெத்தா துணைத் தூதரகம் தமிழ்நாட்டில் பெரியசாமி குடும்பத்தாருடன் தொடர்பை ஏற்படுத்தியது."ஜெத்தாவில் உள்ள சில சமூக ஊழியர்கள் எங்களுக்கு அவர் குடும்பத்தார் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க உதவினர்.பெரியசாமியின் இளைய சகோதரர் கண்ணப்பன் ஊரில் அவரை வரவேற்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் என்று துணைத் தூதர் ஃபைஸ் அகமது கூறினார்.

 

மேலும் இந்திய சமூகஊழியர்கள் சிலர் இந்தியா செல்லும் பெரியசாமிக்கு உதவ 30,000 சேகரித்து உதவுகின்றனர்.

 

பாஸ்போர்ட்டும்  இல்லாத பெரியசாமிக்கு இந்திய தூதரகம் ஒருவழிப் பயணத்திற்கான சிறப்பு அனுமதி அட்டையை வழங்கியுள்ளது

Monday, February 23, 2026

முஸ்லிம்கள் தொழுகிறார்கள் - இந்துக்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக நிற்கிறார்கள்.

 


முஸ்லிம்கள் தொழுகிறார்கள் - இந்துக்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக நிற்கிறார்கள்.

 

வரலாற்று சிறப்புமிக்க லால் பரதாரிக்குள் இருந்த மசூதி ரம்ஜான் பண்டிகையின் போது முன்னறிவிப்பின்றி சீல் வைக்கப்பட்டதை அடுத்து, லக்னோ பல்கலைக்கழகத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மாணவர்கள் நிர்வாகத்துடன் மோதிக்கொண்டனர்.

 

சமாஜ்வாடி சத்ரா சபா, NSUI மற்றும் AISA ஆகிய அனைத்து இந்து மாணவர்களும், பூட்டிய வாயில்களுக்கு வெளியே தொழுகை செய்யும் முஸ்லிம் மாணவர்களைப் பாதுகாக்க மனிதச் சங்கிலியை அமைத்தனர்.

 

"கங்கா-ஜமுனி தெஹ்ஸீப்" என்று பாராட்டப்பட்ட இந்த செயலின் வீடியோ வைரலானது. புனித மாதத்தில் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகக் கூறி, அந்தக் குழுக்கள் இரவு முழுவதும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.

 

தாயாரின் ஏடிஎம் கார்டை அவரது அனுமதி இல்லாமல் எடுத்துச் சென்று அனைத்தையும் காலியாக்கிய சவுதி சிறுவன்.






 தாயாரின் ஏடிஎம் கார்டை அவரது அனுமதி இல்லாமல் எடுத்துச் சென்று அனைத்தையும் காலியாக்கிய சவுதி சிறுவன்.

மகன் எதற்காக அந்த பணத்தை செலவு செய்தான் என்பதை அறிந்து தந்தை நெகிழ்ச்சி..

பேராசிரியர் தொ. பரமசிவன் எழுதிய **'நான் இந்து அல்ல'**


 



பேராசிரியர் தொ. பரமசிவன் எழுதிய **'நான் இந்து அல்ல'**

 

பேராசிரியர் தொ. பரமசிவன் எழுதிய **'நான் இந்து அல்ல'** என்னும் நூல், இன்றைய சமூக-அரசியல் மற்றும் கலாச்சாரச் சூழலில் மிக முக்கியமான ஒரு படைப்பாகும். மானுடவியல் மற்றும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் வல்லுநரான ஆசிரியர், வரலாற்றை 'மேலிருந்து' பார்க்காமல் **'கீழிருந்து' பார்க்கும் புதிய ஆராய்ச்சி முறையை** இச்சிறு நூலில் கையாண்டுள்ளார். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், 'ஒற்றைக் கலாச்சாரம்' என்பது பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரானது என்பதை உரக்கச் சொல்லும் இப்புத்தகம், 'இந்து' என்ற பொதுவான அடையாளத்தின் பின்னால் இருக்கும் அதிகார வர்க்கத்தின் நலன்களைத் தோலுரித்துக் காட்டுகிறது.

 

இந்த நூலின் மிக முக்கியமான வாதம், "இந்து" என்ற சொல் வேதம், உபநிடதம், இதிகாசங்கள் அல்லது எந்தவொரு பண்டைய இந்திய இலக்கியத்திலும் இல்லை என்பதாகும். இச்சொல் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டு, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பிராமணர்களின் மேலாதிக்கத்திற்காக அரசியல் அங்கீகாரம் பெற்றது என்று ஆசிரியர் வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவுகிறார்.

 

 

குறிப்பாக, ஸ்மார்த்தர்கள், சைவர்கள் மற்றும் வைணவர்களுக்கு இடையிலான அடிப்படை வழிபாட்டு முறை வேறுபாடுகளையும், ஸ்மார்த்தர்களின் வேத மேலாதிக்கம் எவ்வாறு கோயில்களுக்குள் புகுந்தது என்பதையும் இந்நூல் ஆழமாக அலசுகிறது. தமிழ் மொழியை வழிபாட்டில் இருந்து ஒதுக்கி வைக்கும் போக்கைச் சுட்டிக்காட்டி, தமிழ் ஒரு 'தீட்டான மொழி' என்று கருதப்படுவதை ஆசிரியர் வன்மையாகக் கண்டிக்கிறார்.

 

கோயில் நுழைவுப் போராட்டம், தீண்டாமை மற்றும் சாதியப் படிநிலைகளைத் தக்கவைக்க மத நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகளை இந்த நூல் விரிவாக விமர்சிக்கிறது. சங்கர மடம் போன்ற நிறுவனங்களின் அரசியல் குறுக்கீடுகளையும், அவை எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்பதையும் ஆசிரியர் துணிச்சலாக விளக்குகிறார். 'இந்து' என்னும் பண்பாட்டு மாயையில் இருந்து மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதையும், அவரவர் தெய்வங்களை அவரவர் முறைப்படி வணங்கும் உரிமையைக் காக்க வேண்டும் என்பதையும் இப்புத்தகம் வலியுறுத்துகிறது. சமூக நீதி மற்றும் வரலாற்றுப் பார்வையை விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு அவசியமான ஆவணம் இது.

 

"நான் இந்து அல்ல"

ஆசிரியர்: தொ. பரமசிவன்

விலை: ₹60