Followers

Tuesday, May 31, 2022

கவுண்டர்கள்.....

 கவுண்டர்கள்.....


தங்களின் ஆதி கால வரலாறு தெரியாமல் அதிகமாக சங்கிகளாக திரிகிறார்கள். இது பொன்ற காணொளிகளை பார்த்தாவது அந்த இளைஞர்கள் பெரியாரை புரிந்து செயல்பட வேண்டும்.




ரஹ்மதுல்லாகான்... அரசு ஓய்வு பெற்ற ஊழியர்.

 குஜராத் - தசுரா


ரஹ்மதுல்லாகான்... அரசு ஓய்வு பெற்ற ஊழியர். தான் பணி  புரிந்த காலங்களில் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் சேவை புரிந்தவர். இவரோடு பணியிலிருந்தவர்கள் ஆடம்பர கார்களில் பவனி வரும் போது தனது கடைசி காலம் வரை சைக்கிளிலேயே பயணித்து மிக எளிமையாக வாழ்ந்தவர். பள்ளிக்கு தொழுகைக்கு வருபவர்களுக்கு மிஸ்வாக், அத்தர் என்று தன்னால் முடிந்த அனைத்தையும் இலவசமாக கொடுத்து வந்தவர். தனது ஓய்வூதிய பணத்தையும் பல நல்ல காரியங்களுக்கு கொடுத்து வந்தவர். தஹஜ்ஜத் தொழுகையையும் தவறாமல் தொழுது வந்தவர். 


பள்ளியில் தொழுது விட்டு இறைவனிடம் பிரார்த்தித்த போதே அவரது உயிர் பிரிகிறது. இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக! நல்லோர்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக!


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே மீள வேண்டியவர்கள் நாம்.




Monday, May 30, 2022

ஒரு இந்தியர் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.

 குவைத் நபருக்கு சொந்தமான விலையுயர்ந்த காருக்கு பக்கத்தில் ஒரு இந்தியர் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். இதனை கவனித்த அந்த குவைத்தி நபர் அவரை கூப்பிட்டு காரின் உள்ளே உட்கார்ந்து செல்ஃபி எடுத்துக் கொள் என்கிறார். 'என்னைப் போல் உனக்கும் இறைவன் பொருளாதாரத்தில் அபிவிருத்தி தருவானாக' என்று பிரார்த்திக்கிறார். அந்த இந்தியருக்கோ அளவில்லா மகிழ்ச்சி. 


அதே நாள் இந்தியாவில் ஆசையோடு தரிசிக்க வந்த ஒரு பக்தரை எந்த அளவு கேவலப்படுத்துகிறார் பாருங்கள். அந்த பக்தர் தரும் காணிக்கை இனிக்கிறது. ஆனால் அந்த பக்தரை தொடுவதற்கு ஆகமம் தடுக்கிறது. இப்படி ஒரு வாழ்வு முறையைத்தான் முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று மோடியும் அமித்ஷாவும் கனவு காண்கின்றனர். 100 ஆண்டுகள் ஆனாலும் இவர்களின் கனவு பலிக்கப் போவதில்லை.




இழந்த ஒன்பது ஆண்டுகளை யார் திருப்பி தருவார்கள் ?”

 

இழந்த ஒன்பது ஆண்டுகளை யார் திருப்பி தருவார்கள் ?”

 

 

யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஐந்து பேரில் ரஷித் மற்றும் ஷாஹித் ஆகியோர் அடங்குவர்.

முஹமது ரஷீத்தின் வாடிக்கையாளர்கள் அவரை பயங்கரவாதி மற்றும் ஜிஹாதி என்று அழைத்ததால் ரஷித்தின் தந்தை தனது கடையை மூட வேண்டியதாயிற்று. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் கதவைத் தட்டியபோது இழந்த வேலையை ஷாஹித் இன்னும் திரும்பப் பெறவில்லை. அதுவே அவரது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்தது.

பயங்கரவாதி என்ற முத்திரையுடன் நான் வாழ எனது குடும்பமோ சமூகத்தால் ஒதுக்கப்பட்ட,அந்த பயங்கரமான ஆண்டுகளை ​​​​எந்த ஒன்றாலும் ஈடுசெய்ய முடியாது,” என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 35 வயதான ரஷித் கூறினார்.

சிறையில் இருந்தபோது எனது தலைவிதியை நினைத்து நான் அதிகமாக அழுதேன், என் குடும்பத்தை மீண்டும் பார்க்க முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன் என்று ஷாஹித் கூறினார். கைது செய்யப்படும் போது அவருக்கு வயது 22.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்--தொய்பா (LeT) உடன் தொடர்பு வைத்திருந்ததற்காக, ஷாஹீத். ரஷீத், மேலும் மூவருடன், 2013 ஆம் ஆண்டில், கடுமையான யுஏபிஏ சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட பணம் திரட்டுவதற்காக ஒரு தொழிலதிபரை கடத்தும் திட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றம் எந்தவொரு நம்பத்தகுந்த ஆதாரங்களைக் காட்டிலும் யூகங்கள் மற்றும் ஊகங்களின்அடிப்படையிலானதாக உள்ளதாக கூறி மே 9,2022 அன்று, ஐவரும் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

 

அனுபவித்த துயரங்கள்:

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த திரு. ரஷீத், 2013 இல் கைது செய்யப்பட்டதிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் விடுவிக்கப்படும் வரை ஒன்பது ஆண்டுகால மன உளைச்சலை நினைவு கூர்ந்தார்.

நான் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன், வீட்டிலும் டியூஷன் எடுத்தேன். போலிஸ் என்னை வழக்கில் சிக்க வைத்து என் வாழ்வின் பல ஆண்டுகளை இழந்தேன்,” என்று திரு. ரஷீத் கூறினார்.

திகார் சிறைக்குள் ஒரு சிறிய அறைக்குள் அவர் கழித்த நேரத்தைப் பற்றி பேசிய திரு. ரஷீத், நிரபராதி என்று விடுவிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, ஜாமீன் வழங்கப்படும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டிருந்ததாகக் கூறினார்.

சிறையில் இருந்த காலத்தில் “எனது குடும்பத்தினரையும், தீவிரவாதிகளின் உறவினர் என்ற அவப்பெயரை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் யோசித்து கொண்டிருப்பேன். எனது உறவினர்களும் அண்டை வீட்டாரும் எனது குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டனர். சில வருடங்களுக்கு முன்பு காலமான என் தாத்தா பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

பயங்கரவாதி” மற்றும் “ஜிஹாதி” பட்டங்கள் :

அவர் கைது செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் அவரது தந்தையின் மளிகைக் கடைக்கு வருவதை நிறுத்தினர். அவரது தந்தை “பயங்கரவாதி” மற்றும் “ஜிஹாதி” என்று அழைக்கப்பட தொடங்கினார்.

எனது தந்தை கடைசியில் தனது கடையை மூட வேண்டியதாயிற்று, ஏனெனில் நிலைமை தாங்க முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது” என்று திரு. ரஷீத் கூறினார்.

கைது செய்யப்பட்ட நாளை நினைவு கூர்ந்த ஷாஹித், :

நூஹ்வின் மீயோலி கிராமத்தில் இமாமாகப் பணியாற்றி ஷாஹித் கூறுகிறார், “நான் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது போலீசார் என் வீட்டிற்கு வந்தனர். ஒருவரின் தொலைபேசியில் எனக்கு எதிரான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் என்னை கைது செய்ய வந்திருப்பதாகவும் கூறினார்கள். என்னை தொழுகையை கூட முடிக்க விடவில்லை”.

கைது செய்யப்பட்ட ஐவரில் திரு. ஷாஹித் மட்டுமே 2018ல் டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றவர்.

கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும் கூட எந்த வழக்கின் கீழ் தம்மை கைது செய்துள்ளனர் என்பது கூட தெரியாமல் வைக்கப்பட்டிருந்ததாக கூறுகிறார் ஷாஹித்.

யுஏபிஏ இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் பெறுவது மிகவும் கடினம் என்றும் திகார் சிறையின் சட்ட உதவி மையத்தில் உள்ள வழக்கறிஞர்கள் எங்களிடம் கூறினார்கள்” என ஷாஹித் கூறுகிறார்.

விடுதலைக்குப் பின் வாழ்க்கை:

தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் தான் இழந்த ஒன்பது ஆண்டுகளை ஒருபோதும் திரும்ப பெற முடியாது என்று திரு. ரஷீத் கூறினார்.

என் மருமகள் மற்றும் மருமகன்கள் என்னை அடையாளம் காண முடியவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்புவது ஒரே நேரத்தில் வினோதமாகவும் விசித்திரமாகவும் தெரிகிறது. எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் இப்போது சொல்கிறது, ஆனால் நாங்கள் அனுபவித்த சித்திரவதை மற்றும் துன்பங்கள்.. இதற்கு என்ன பதில் ?என கேட்கிறார் ரஷீத். இழந்த ஆசிரியர் பணியும் இன்னும் திரும்ப கிடைக்கவில்லை., ரஷீதுக்கு.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜாமீனில் வெளியில் இருந்த போதிலும், அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, ​​ஷாஹிதாலும் தனது இமாம் வேலையைத் திரும்பப் பெற முடியவில்லை. “எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான ஒரே ஆதாரமாக எனது வேலை இருந்தது. இப்போது நான் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டதால், நான் மீண்டும் வேலைக்கு செல்ல முயற்சிப்பேன்,” என்று ஷாஹித் கூறினார்.

 

நன்றி: தி ஹிந்து




 

Sunday, May 08, 2022

தமிழனின் கலாசாரம் எது?

 

ஏ ஆர் ரஹ்மானின் மகளின் திருமண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ரஹ்மான். அங்கு வந்து சங்கிகள் வன்மத்தை கொட்டியுள்ளார்கள். தமிழ் கலாசாரம் எங்கே ? முக்காடு எதற்கு? பொட்டு இல்லையா? அரேபிய அடிமை என்று ஏகத்துக்கும் விமர்சனம்.

 

முதலில் தமிழனின் கலாசாரம் எது? முற்றாக ஆரியர்களால் உள் வாங்கப்பட்டு இன்று ஆரிய கலாசாரமாகவே மாறி விட்ட தமிழனுக்கு ஏது கலாசாரம்.?

 

கீழடியில் இத்தனை ஆண்டுகள் ஆராய்ந்த பிறகும் தமிழர்கள் கும்பிடும் எந்த சிலைகளையும் காண முடியவில்லையே? இப்போது கோவில்களில் உள்ள சிலைகள் எல்லாம் ஆரிய இறக்குமதி அல்லவா?

 

ரஹ்மான் இஸ்லாத்துக்கு மாறினாலும் தான் தமிழன் என்பதை மறக்கவில்லை. தமிழ் மொழி பற்றும் கொஞ்சமும் குறையவில்லை. தமிழ் முஸ்லிம்களின் ஒட்டு மொத்த நிலையும் இதுதான். ஏனெனில் உலக மூல மொழிகள் அனைத்தையும் படைத்தது தான் தான் என்று இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். அதில் தாய் மொழியின் மேல் இயற்கையாகவே ஒரு பற்று இருக்கும். அது எனக்கும் உள்ளது. குர்ஆன் அரபியில் இறங்கியதால் அந்த மொழியின் மேல் ஒரு மதிப்பு இருக்கும். மற்றபடி அது ஒரு தேவ பாஷை என்ற அளவில் தூக்கி வைத்து கொண்டாட மாட்டோம். இதுதான் உலக முஸ்லிம்களின் நிலை.

 

மற்றபடி தமிழ் கலாசாரம் ஏன் பேணப்படவில்லை என்ற கேள்வி வருகிறது. எது தமிழ் கலாசாரம்?

 

1. பெண்களின் மார்பை அளந்து அதன் வளர்ச்சிக்கு ஏற்ப வரி விதித்து வசூலித்தது நமது முந்தய கலாசாரம்.

 

2. சூத்திரன் வேதம் ஓதினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும் என்று சொன்னது நமது கலாசாரம்.

 

3. அக்ரஹாரம், சேரி என்று வாழும் இடங்களையே பிரித்து அதனை நியாயப்படுத்துவது நமது கலாசாரம்.

 

4. மனிதனை பல்லக்கில் தூக்க வேண்டும் என்று இன்றும் போராடுவது நமது கலாசாரம்.

 

5. மனிதர்களை பார்பனன், வைஷியன்,சூத்திரன் என்று பிளவுபடுத்தி இன்று கோவில்களிலும் அவரவர் தகுதிக்கேற்ப இடங்களை ஒதுக்கி வைப்பது நமது கலாசாரம்.

 

6. பெண் கல்வி கூடாது, மாதவிடாய் தீட்டு என்று கூறி பெண்களை மூலையில் முடங்க வைத்தது நமது கலாசாரம்.

 

இது போன்ற இன்னும் பல பெருமைகளை கொண்டது நமது கலாசாரம். இதில் எந்த கலாசாரத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பின்பற்ற வேண்டும் என்று சங்கிகள் விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவரும் பின்பற்ற வசதியாக இருக்கும்.

 

ஆக்கம்

சுவனப்பிரியன்