Followers

Monday, August 31, 2020

இந்து குடும்பங்களை தேடிச் சென்று உதவி வரும் எஸ்டிபிஐ!

 இந்து குடும்பங்களை தேடிச் சென்று உதவி வரும் எஸ்டிபிஐ!


இஸ்லாமிய இயக்கங்கள் தவ்ஹீத் ஜமாத்தாகட்டும், தமுமுகவாகட்டும், எஸ்டிபிஐ ஆகட்டும்  பெரும்பாலும் எல்லா மதத்தவரையும் அரவணைத்து செல்கிறது. இந்து ஏழை மாணவர்கள் படிப்பு உதவி தொகையாகட்டும்., நிவாரண உதவிகள் வழங்குவதாகட்டும், ரத்த தானமாகட்டும். அனைத்திலும் முன் நின்று இந்து மத சகோதரர்களுக்கு உதவுகின்றன.


இவ்வாறு என்றாவது இந்து முன்னணியோ, ஆர்எஸ்ஸோ. பஜரங்தள்ளோ மாற்று மதத்தவர்களை அரவணைத்து சென்றுள்ளதா? இந்திய மக்களை பிரித்து அவர்களை மோத விட்டு ரத்தம் சிந்த வைத்ததைத் தவிர இவர்கள் நாட்டுக்கு செய்த நன்மைதான் என்ன? பெரும்பான்மை மக்கள் சிந்திக்க வேண்டும்.




பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தமிழ் குடும்பங்கள்.....

 பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தமிழ் குடும்பங்கள்.....

பல தலைமுறைகளாக பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தமிழர்கள். இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்தாலும் இந்த மக்களை யாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று கட்டாயப்படுத்தவில்லை. தங்களின் குல தெய்வ கடவுள்களை வணங்குவதற்கு எவரும் தடை போடவில்லை. 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று இந்தியாவில் கட்டாயப்படுத்துவது போல் அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஏனெனில் இஸ்லாமிய மார்க்கம் கட்டாய மத மாற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

--------------------------------------------

‘இம்மார்க்கத்தைத் தழுவுவதில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது.'
அல் குர்ஆன்(2:256)

‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.’
அல் குர்ஆன்(109:6)

‘சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே! எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக!'
அல் குர்ஆன்(18:29)




சவுதி அரேபியாவில் பேரீச்சை பழ சந்தை...

 

சவுதி அரேபியாவில் பேரீச்சை பழ சந்தை...

 

பாலைவனமெல்லாம் சோலை வனமாகின்றன.... நாமோ ஐந்து வழி சாலை என்று கூறி சோலைவனங்களை எல்லாம் மரங்களை வெட்டி பாலைவனங்களாக மாற்றி வருகிறோம்.




Sunday, August 30, 2020

'பேட்டி பசாவ்' என்று பிரதமர் கூறுகிறார்....

 சுற்றிலும் குண்டர்கள்.....

'பேட்டி பசாவ்' என்று பிரதமர் கூறுகிறார்....

பலகீனமான நான் என்ன செய்வேன்....

என்னைப் போன்ற லட்சோப லட்சம் பெண்கள்.....

இந்திய நாடெங்கும் கண்ணீர் வடிக்கின்றனர்.....

இதுதான் ராம ராஜ்யமா?

இன்னும் எத்தனை காலத்துக்கு வேடிக்கை பார்க்கப் போகிறீர்கள்.....

என்னை காக்காத இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகட்டும்.




திருவள்ளுவர் வர்ணாசிரமத்துக்கு எதிரானவர்!

 திருவள்ளுவர் வர்ணாசிரமத்துக்கு எதிரானவர்!

கடவுள் வாழ்த்தில் தலையை போற்றி பாடாமல் காலைப் போற்றி பாடுகிறார்.

ஒருக்கால் வள்ளுவர் பாடல் எழுதிய காலத்தில் வர்ணாசிர கோட்பாடு தலை தூக்கியிருந்திருக்கலாம்.

அதனை உடைப்பதற்காக காலை உயர்த்தி 'அடியைப் போற்றி' என்று கடவுள் வாழ்த்தில் ஏழு பாடல்களை வள்ளுவர் பாடியுள்ளார். தலையை போற்றி என்று ஒரு பாடலையும் இயற்றவில்லை




ராம ராஜ்ஜியம் கொண்டுவரப்பட்டால் பெண்களின் நிலை எப்படி இருக்கும்?

 


யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித்துக்கு நிகழ்ந்த கொடூரம்!

 யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித்துக்கு நிகழ்ந்த கொடூரம்!

எவ்வளவு பெரிய தவறுகளை இவர்கள் செய்திருந்தாலும் சட்டத்தை கையிலெடுக்க இவர்கள் யார்? காவல்துறையும், நீதி மன்றங்களும் என்ன செய்கிறன்றன? அவர்களின் கைகள் ஏற்கெனவே கட்டப்பட்டு விட்டது. எனவே தான் 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' ஆகிறான்.

இது போன்ற நிகழ்வுகள் வட மாநிலங்களில் தினமும் நடக்கும் நிகழ்வாகி விட்டது. தென் மாநிலங்களில் இது போன்ற குற்ற செயல்கள் வன் கொடுமைகளை செய்ய ஆதிக்க சாதியினருக்கு தைரியம் வருவதில்லை. அந்த அளவு பெரியார் இந்த மண்ணில் தனது கருத்துக்களை விதைத்து விட்டுச் சென்றுள்ளார்.

தாமரையை மலரச் செய்வோம் என்று பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் சற்று வட மாநிலங்களின் பக்கம் உங்கள் பார்வையை செலுத்தி விட்டு வாருங்கள்.




Saturday, August 29, 2020

வருங்காலத்தில் பிஜேபியின் நிர்வாகியாகக் கூட நியமிக்கப்படலாம். திறமை இருக்கிறது :-)

 


முஹர்ரம் 9,10 நோன்பும் பாகிஸ்தானிகளும்!

 முஹர்ரம் 9,10 நோன்பும் பாகிஸ்தானிகளும்!

நேற்று முஹர்ரம் 9 நோன்பிருந்து மாலையில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். 'நஜீர் பாய்... தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாய்... வா... ஒன்றாக நோன்பு திறப்போம்' என்றார் பக்கத்து அறையில் வசிக்கும் பாகிஸ்தானி.

'இல்லை... என் நண்பரையும் வரச் சொல்லியுள்ளேன்... நன்றி' என்றேன்.

'நண்பன் வந்தால் என்ன? அவரையும் அழைத்து வா...' என்றார்.

'சரி... நான் தயார் செய்வதையும் நீங்கள் தயார் செய்வதையும் சேர்த்து வைத்து நோன்பு திறப்போம்' என்றேன்.

'சரி' என்றார்.

என் சார்பாக நம் ஊர் ஸ்பெஷலான மெது வடையும், சுண்டலும், வாழைப்பழங்களும் கொண்டு சென்றேன். அவர்கள் தரப்பில் பேரித்தம் பழம், திராட்சைப் பழம், ஃரெஷ் மாம்பழ ஜூஸ், மட்டன் குருமா தயார் செய்து வைத்திருந்தனர். நானும், நண்பரும் அவர்கள் அறையில் நோன்பு திறந்தோம். இங்கு எங்காவது வெறுப்பு தலை தூக்குகிறதா? அன்பும் பண்பும் விருந்தோம்பலும்தான் இங்கு காணக்கிடைக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே!

இதற்கெல்லாம் ஒரு பதிவா? என்று நீங்கள் சலிப்படையலாம். இதிலும் சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது. பாகிஸ்தானிகள் என்றாலே முரடர்கள், இந்தியர்களை வெறுப்பவர்கள், இந்தியாவை துண்டாடியவர்கள் என்ற எண்ணம் பரவலாக நம் இந்தியர்களிடத்தில் உள்ளது. உண்மையில் நாம் நினைப்பது போல் அத்தனை மோசமானவர்கள் அல்ல பாகிஸ்தானிகள். எப்படி நமது நாட்டில் 3 சதவீதமே இருக்கும் ஒரு சிறு கும்பல் ஒட்டு மொத்த 97 சதவீத மக்களையும் அடக்கி ஆண்டு அவர்களின் கருத்தை திரிக்கிறார்களோ அதுபோல் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தானிகள் சொற்பமானவர்களே.... இந்தியர்களோடு அன்போடும் பாசத்தோடும் பழகவே அவர்களும் விரும்புகின்றனர். ஆனால் இரு நாட்டு அரசுகளும் ஒருவரையொருவர் பகைமை பாராட்ட வைத்து அதன் மூலம் தங்களை வளமாக்கிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகள் செய்யும் சித்து விளையாட்டில் அப்பாவி மக்கள் பலியாகிக் கொண்டுள்ளனர்.

நமது நாடு பல உளவாளிகளை அங்கு அனுப்பியுள்ளது. அதே போல் பாகிஸ்தானும் நமது நாட்டுக்கு பல உளவாளிகளை அனுப்பி வேவு பார்க்கிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் இவ்விரு நாடுகளும் பாதுகாப்புக்காக எத்தனை கோடிகளை விரயமாக்குகின்றன? இதனால் பலனடைவது வல்லரசு நாடுகளே... ரஃபேல் விமானங்களிலிருந்து தற்போது வாங்கப் போகும் விமானங்களையும் சேர்த்து கணக்கிட்டால் அந்த பணத்தில் பல வளர்ச்சி திட்டங்களை இரு நாடுகளும் முன் எடுக்கலாம். எல்லைகள் திறந்து விடப்பட்டால் இரு நாடுகளுக்கும் பல பயன்கள் உண்டு. ஆனால் இரு நாடுகளும் சேர்ந்து விடக் கூடாது என்பதில் வல்லரசுகள் மிகக் கவனமாக உள்ளன. இரு நாடுகளின் பிடிவாதத்தால் காஷ்மீர் மக்களும் சொல்லொணா துயரத்தை தினமும் அனுபவித்து வருகின்றனர். நாம் முன்பே வாக்களித்தபடி இரு நாடுகளும் விலகிக் கொண்டு காஷ்மீரை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் பல பிரச்னைகள் தீர வாய்ப்புண்டு.

இந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளாமல் இரு நாட்டு மக்களும் ஒருவரையொருவர் வெறுத்து வருகிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவளித்தாலும் அவரை தேச துரோகியாக்கி அழகு பார்க்கிறது இந்துத்வா. இந்நிலைகள் எல்லாம் மாறி இரு நாடுகளும் கைகோர்த்தால் மிக உயர்ந்த இடத்தை நாம் அடையலாம். ஆனால் சங்கிகள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். அதே போல் பாகிஸ்தானில் உள்ள ஒரு குழுவும் இதற்கு சம்மதிக்காது. இரு நாட்டு எதிர்ப்பாளர்களும் ஒன்றாகி விடாமல் வல்லரசுகள் காய்களை நகர்த்தி வரும். இரு நாட்டு அரசியல்வாதிகளும் அதற்கு தூபம் போடுவர். தற்போதய பாகிஸ்தான் தலைவர் இம்ரான்கான் நம் நாட்டோடு கை கோர்க்கவே விரும்புகிறார். ஆனால் துரதிஷ்டவசமாக நம் புறத்தில் இருந்து சாதகமான பதில் செல்லவில்லை. இதனை ஒரு பேட்டியிலும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். தற்போதய பாகிஸ்தான் தலைமையை பயன்படுத்தி இந்தியா நட்பை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அசாதாரணமான சூழல் மற்றும் பகைமையில் இருந்து இரு நாட்டையும் இறைவன் காப்பானாக!




Friday, August 28, 2020

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்?

 நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்?

இஸ்லாத்திற்க்கு மாறியதால் வந்த மாற்றம் என்ன?

இஸ்லாம் எனக்கு தூய்மையை முதலில் கற்று கொடுத்தது நகம் வெட்டுவதில் இருந்து எப்படி சாப்பிட வேண்டும் என கற்று கொடுத்தது. ஒழுக்க மாண்புகளை கற்று கொடுத்தது. உறவினர்களை ஆதரிக்க கற்று கொடுத்தது. இரத்த பந்த உறவுகளை ஆதரிக்க கற்று கொடுத்தது. பாதையில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் சிறு கல்லோ அல்லது சிறு முல்லையோ அகற்றுவது தர்மம் என கற்று கொடுத்தது. மரணத்திற்க்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டு இறைவனை பிடித்தமான நிலையில் வாழ்ந்து விடு இல்லையெனில் நெருக்கடியான வாழ்வு இருக்கிறது என கற்று கொடுத்தது. அண்டை வீட்டுகாரர்களை ஆதரித்து வாழ், அனாதைகளின் மீது இரக்கம் காட்டு, என கற்று கொடுத்தது.

இதற்கு மேலாக முஸ்லீம்கள் காட்டிய பேராதரவு என்னை திகைக்க செய்தது .ஒரே தட்டில் சாப்பிடுவதும் ஒரே வரிசையில் தோளோடு தோள் உரசி தொழுகையில் நிற்பதும் எந்த பாரபட்சமின்றி முஸ்லீம் சகோதர்கள் என்னுடன் பழகுவதும் பேரானந்தம்.

இஸ்லாமிய மார்க்கத்திற்காக இறைவன் என்னை தேர்ந்தெடுந்த இறைவனுக்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன். இறைவனுக்கு இணை வைத்து கொண்டு ஆதிக்க ஜாதியினரால் நசுக்க பட்டு கூனி குறுகி நிற்பவர்களை பார்க்கும் போதெல்லாம் இதோ... இதோ... சத்திய மார்க்கம் அழைக்கிறது இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள் என என் நெஞ்சம் கூறுகிறது. இறைவன் நாடினால் தானே ஹிதாயத்.

ஆனால் இந்த ஹிதாயத்துல்லாஹ் என் இறைவனின் மார்க்கம் மேலோங்க போராடி கொண்டே இருப்பான் இன்ஷா அல்லாஹ் ..

இஸ்லாம் எனக்கான வாழ்வியல் மட்டுமல்ல... ஒட்டு மொத்த உலக மானிடர்களுக்கும் அது மாபெரும் அருட்கொடை.....

அல்லாஹ்வின் நேசன்.

@Mp.ஹிதாயத்துல்லாஹ்.......

Mp Hithayathulla Mp Hithayathulla





Thursday, August 27, 2020

சுதந்திர தினத்தை கொண்டாடிய இஸ்லாமிய பெண்கள்!

 டெல்லி ஷாஹின் பாக்கில் நமது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடிய இஸ்லாமிய பெண்கள்!

உண்மையான தேசப்பற்று ஒவ்வொரு பெண்மணியின் முகத்திலும் ஒளிர்கிறது...

ஜெய் ஹிந்த்.....




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ரியாத் மண்டலத்தின் #மனித_நேயப்_பணிகள்..

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ரியாத் மண்டலத்தின் #மனித_நேயப்_பணிகள்..

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் சிங்காரச் செல்வம் கடந்த பிப்ரவரியில் கனரக வாகன ஓட்டுனர் பணிக்காக சவூதி அரேபியா, ரியாத்திற்கு வந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் பணியில் இருந்த பொழுது தனது வாகனம் ரியாத்திக்கு அருகே ரூமாஹ் என்ற பகுதியில் பழுதடைந்துள்ளது.

அதனை சரி செய்வதற்காக வாகனத்தின் அடியில் சென்ற சகோதரர் எதிர்பாராத விதமாக வாகனத்தின் ஹேண்ட் பிரேக் ரிலீஸ் ஆகி விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

.அதையடுத்து ரியாத்திலுள்ள மன்னர் சல்மான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் ஜித்தாவில் உள்ள அச்சகோதரரின் அண்ணன் சகோ. ராஜா அவர்கள் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையின் வேண்டுகோளுக்கினங்க அவசர இரத்தனமாக 6 யூனிட் இரத்தம் இரண்டு கட்டங்களாக ரியாத் மண்டலம் பத்தாஹ் கிளையின் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

மேலும், தற்போதைய கொரோனோ நோய்ப் பரவலின் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக விரைவாக தாயகம் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்னாரின் குடும்பத்தார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார்கள்.

அந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது இயக்கப்படும் தனி விமான ஏற்பாட்டாளர்கள் மூலம் அவர்களின் உதவியுடன் இலவசமாக விமானத்திற்கான பயணச் சீட்டு பெறப்பட்டு தாயகம் கொண்டு செல்வதற்கான சட்டரீதியான அனைத்து பணிகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு முடித்தது.

சகோதரர் சிங்காரச் செல்வம் இன்று 25-08-2020 மதுரை விமான நிலையதிற்கு நசீம் கிளைத் தலைவர் சகோ.அப்துல் ஹமீத் மற்றும் மண்டல நிர்வாகியான சகோ.ஜெய்லானி அவர்களின் உதவியுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக குடும்பத்தாரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த உன்னதமான மனிதநேயப் பணியை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சகோதரர் ராஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகிகளை மண்டல அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசும் பொழுது, தாங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பேருதவி. இது எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாம் அனைவரும் ஒரு தாய், ஒரு தந்தையிலிருந்து வந்தவர்கள் என்ற சகோதரத்துவத்துடன் மட்டுமே இப்பணி மேற்கொள்ளப்பட்டது தவிர, வேறு எந்த பலனையும் எதிர்பார்த்து செய்யவில்லை என்றும் இதற்கான கூலியை இறைவனிடத்தில் மட்டுமே எதிர்பார்க்கிறோம் என்றும் அவருக்கு ஆறுதல் கூறப்பட்டது.

மருத்துவமனையில் மேல் சிகிச்சைப் பெற்று வரும் அச்சகோதரர் முழுமையாக குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

இதுவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மற்றும் ஜித்தா மண்டல வழிகாட்டுதல் மற்றும் உதவியின் மூலம் சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் தமிழகத்தின் பல்வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





Tuesday, August 25, 2020

ஜாகிர் நாயக்கை மேலும் பிரபலப்படுத்துகிறார்கள்.

 ஜாகிர் நாயக்கை மேலும் பிரபலப்படுத்துகிறார்கள்.

சென்னை ராயபுரத்தில் ஒரு தொழிலதிபரின் மகள் லண்டனில் படித்து வருகிறார். அங்கு படித்து வரும் வங்க தேசத்தை சேர்ந்த நஃபீஸ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறியுள்ளது. முடிவில் அந்த பெண் இஸ்லாமிய மதத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன அவரது பெற்றோர் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.

இது வரை ஓகே.... ஆனால் அதன் பிறகுதான் விளையாட்டு ஆரம்பமாகிறது. பெண்ணை காதலித்த நஃபீஸ் என்ற இளைஞன் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளனாம். எனவே நஃபீஸ், நஃபீஸின் தந்தை, மற்றும் ஜாகிர் நாயக்கின் மேலும் வழக்கு பதிந்துள்ளது என்ஐஏ.இதை படிக்கும் எவருமே இதில் உள்ள பாசிச எண்ணத்தை விளங்கிக் கொள்வர். ஒருவரை கட்டாயமாக எந்த காலத்திலும் மத மாற்றம் செய்ய முடியாது. அதற்கு இஸ்லாமும் அனுமதிக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம்களின் மேல் ஒருவித வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்ஐஏ.

லண்டன் போன்ற நகரங்களில் படிக்க செல்லும் பெண்கள் இவ்வாறு காதல் வலையில் வீழ்ந்து மதமும் மாறுவது சர்வ சாதாரணம். இதற்கும் மலேசியாவில் வசிக்கும் ஜாகிர் நாயக்குக்கும் என்ன சம்பந்தம்? மஹாராஸ்ட்ர அரசு ஜாகிர் நாயக் மேல் இருந்த வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டது. இதனால் கடுப்பான இந்துத்வாவாதிகள் இந்த வழக்கில் அவரை கோர்த்து விடப் பார்க்கிறார்கள். என்னதான் ஆட்சி அதிகாரம் இருந்தாலும் முடிவில் உண்மைதான் வெல்லும். இதனை இந்துத்வாவாதிகளும், மோடிக்களும், அமித்ஸாக்களும் விரைவிலேயே புரிந்து கொள்வர்.

-------------------------------------------------

இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் பிரிந்து தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

அல்குர்ஆன்: 2:256

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே இறை நம்பிக்கை கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் நம்பிக்கை கொண்டோராக ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?

அல்குர்ஆன்: 10:99

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

அல்குர்ஆன்:109:6




அண்ணாத்தெ மயிலோடு விளையாடிக் கொணடுள்ளார்.

 வட மாநிலங்களில் வறுமையின் பிடியால் ரேஷன் பொருட்கள் வாங்க க்யூவில் நிற்கின்றனர். தங்களின் இடத்தை ரிசர்வ் செய்வதற்காக பொருட்களை அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். இன்று மட்டும் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 60 ஆயிரத்து 975 என்கிறது சன் டிவி.


இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் நம்ம அண்ணாத்தெ மயிலோடு விளையாடிக் கொணடுள்ளார். 



பிரியாணி அண்டாக்களை திருடி.... :-)

 

எத்தனை லட்சம் லிட்டர் பால் வீணாகிறது?

 எத்தனை லட்சம் லிட்டர் பால் வீணாகிறது?

மத சடங்கு என்பதற்காக ஒரு குடம் பாலை சிலைகளின் மேல் ஊற்றி விட்டு மீதமாகும் பாலை வீடின்றி தவிக்கும் தெருவோர ஏழை இந்துக்களுக்கு தரக் கூடாதா? அவ்வாறு தந்தால் இறைவன் கோபிக்க மாட்டாரே....

முஸ்லிம்கள் இறைவனுக்காக அறுக்கும் ஆடு மாடுகளின் பெரும் பகுதியை ஏழை களுக்கே தரச் சொல்கிறது இஸ்லாம். இதே போல் இந்து மத பண்டிதர்கள் வீணாகும் பாலை ஏழைகளின் வீடுகளை சென்றடையச் செய்வார்களாக!





அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்!

 அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்!

ஐரோப்பாவில் பெலாரஸ் எனும் ஒரு நாடு இருக்கிறது. அதன் ஆட்சியாளார் பெயர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ. சோவியத் ரஷ்யா காலத்திலிருந்தே அதிகாரத்திலிருந்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் என்று வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறார்.

இந்த மாதம் ஒன்பதாம் தேதி தாம் 80% வாக்குகள் தேர்தலில் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துக்கொண்டார். ஆனால் மக்கள் நம்பவில்லை. வாக்குப் பெட்டிகளில் தில்லுமுல்லு செய்து விட்டதாக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். லட்சத்திற்கும் அதிகமானோர் ஒன்று திரண்டு போராடினர். அரசு செய்வறியாது ராணுவத்தைக் கொண்டு அடக்கப் பார்க்கிறது. இருப்பினும், ஜனாதிபதியின் படத்தோடு ”உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க வேண்டும்!” என்று எழுதி வைத்துக்கொண்டு போராடி வருகின்றனர்.

15 ஆம் நாளாக தொடரும் போராட்டத்தைத்தான் நாம் இப்போது வீடியோவாக பார்க்கிறோம்.

மக்கள் சக்திக்கு முன்னால் எந்த ராணுவமும் எதுவும் செய்ய இயலாது. இதனை உலக அரசியல்வாதிகளும், நம் நாட்டு அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் நல்லது.



பாஜகவில் யோக்கியன் என்று எவருமே இல்லையா?

 

சங்கிகள் இந்த நாட்டை சுடுகாடாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல.

 கர்நாடகாவில், முஸ்லீம் பெண் போல உடையணிந்து, பிள்ளையார் சிலையை உடைக்க சென்ற காவி கூட்டம்.

கையும் மெய்யுமாக காவல்துறையிடம் பிடிபட்டது.

சங்கிகள் இந்த நாட்டை சுடுகாடாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல.




ஐயா... எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்.

 ஐயா... எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்.



உபியில் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!

 உபியில் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!

உபியின் பாலியா தாலுக்காவில் ரத்தன் சிங் (வயது 45) என்ற பத்திரிக்கையாளர் தனது இரு மகள்கள் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சில வாரங்கள் முன்பு விக்ரம் ஜோஸி என்ற பத்திரிக்கையாளர் மகள் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டதும் இதே உபியின் காஸியாபாத்தில் என்பது நினைவிருக்கலாம்.

இந்துத்வாவின் ஆட்சி என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அது இந்துக்களுக்கும் எதிரானது என்பதை இந்த துப்பாக்கி சூடுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தகவல் உதவி
இந்தியா டுடே
25-08-2020



Monday, August 24, 2020

விநாயக சதுர்த்தியும் குத்தாட்டமும்.....

 விநாயக சதுர்த்தியும் குத்தாட்டமும்.....

பக்தி என்பது மனதில் உதிப்பது. இறைவனை அன்போடும் பக்தியோடும் அணுகி நமது கோரிக்கைகளை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு நடப்பது பக்தியா? 10 வயது சிறுவனும் 20 வயது இளைஞர்களும் சாராயத்தை உள்ளே தள்ளி விட்டு கடைகளை உடைப்பதும் நடைபாதைகளை சேதப்படுத்துவதும்தான் விநாயக சதுர்த்தியா?

இங்கு குத்தாட்டம் போடும் சிறுவர்களில் யாராவது ஹெச்.ராஜா குடும்பத்து பார்பன குழந்தைகள் உண்டா? நாராணயன், கே.டி. ராகவன் குடும்பத்து பிள்ளைகள் யாராவது இந்த கும்பலில் இருக்கிறார்களா. கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். கலவரம் வரலாம்: வெட்டு குத்துகள் நடக்கலாம்: வழக்கும் பதியப்படலாம். எனவே இங்கெல்லாம் ஹெச்.ராஜா தனது குடும்ப உறுப்பினர்களை அனுப்ப மாட்டார். ஆண்மையற்ற அரசு என்று அறிக்கை விடும் ஹெச்.ராஜா தனது குடும்பத்து உறுப்பினர்களை இந்த கூட்டத்துக்கு அனுப்பியிருக்க வேண்டுமல்லவா?

பார்பன குழந்தைகள் சிறந்த பள்ளி, கல்லூரிகளாக பார்த்து தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இருப்பார்கள். மறந்தும் ராஜாக்களும் நாராயணன்களும் தங்களின் குழந்தைகளை ஊர்வலத்துக்கு அனுப்ப மாட்டார்கள்.

இங்கு பின்னால் இருந்து ஹெச்.ராஜா, ராகவன் போன்றவர்கள் பணம் கொடுத்து பிரியாணியும், சாராயத்தையும் கொடுத்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள். இனி விநாயகர் சதுர்த்தியில் குத்தாட்டம் போடும் இந்த இளைஞர்களின் வாழ்வு இப்படியே தான் கழியும். குற்றப் பரம்பரைகளாக வளருவர். இதைத்தான் ஹெச்.ராஜா போன்றவர்கள் விரும்புகின்றனர். இதனை உணர்ந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அப்பாவி மக்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுவார்களோ?



வடமாநில முஸ்லீம் சமூகத்தில் மாறி வரும் கல்வி விழிப்புணர்வு..

 வடமாநில முஸ்லீம் சமூகத்தில்

மாறி வரும் கல்வி விழிப்புணர்வு..

இந்திய முஸ்லிம் சமூகம் பெரிதும் கற்பதற்கு ஆசைப்படாத வழக்கறிஞர் கல்வியை கற்றதோடு நிற்காமல் தங்கள் லட்சிய கனவான நீதிபதிக்கான தேர்விலும் சாதித்து காட்டியுள்ளனர் வட மாநிலங்களை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்கள்..

இந்திய முஸ்லிம்கள் கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்ட பீகார், உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளம் முஸ்லிம் வழக்கறிஞர்கள் தங்களது மாநிலங்களில் நடைபெற்ற பணியாளர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நீதிபதிகளாக பணியில் சேரவுள்ள சந்தோஷ வார்த்தைகள் வெளியாகி உள்ளது..

கடந்த டிசம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் வெளியான சிவில் ஜட்ஜ் தேர்வு முடிவுகளில் 18 பெண் வழக்கறிஞர் உட்பட 38 முஸ்லிம்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 பெண் வழக்கறிஞர் உட்பட 6 முஸ்லிம்களும் நீதிபதிகளாக தேர்ச்சி பெற்ற நிலையில் பீகாரில் 7 பெண்கள் உட்பட 22 முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்...
அலிகார், ஜாமிஆ மில்லியா, ஹம்தர்த் ஸ்டடி சென்டர் போன்ற நிறுவனங்கள் இவர்களின் தேர்ச்சிக்கு பின்னால் இயங்கி வருகிறது..

தமிழகத்தில் கூட கையெட்டும் தூரத்தில் தான் நமது சந்ததிகளின் சிறப்பான எதிர்காலம் உள்ளது..
போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள ஊக்குவிப்பதுடன் ஜமாஅத் தோறும் கல்வி வழிகாட்டி மையங்கள் அமைப்பது காலத்தின் கட்டாயம்....



உன் ரொட்டியைத் திருடுகிறார்கள்

 உன் ரொட்டியைத்

திருடுகிறார்கள்

பிறகு அதில் ஒரு துண்டை
உனக்குத் தருகிறார்கள்

பிறகு அவர்களின்
தயாள குணத்திற்காக
அவர்களுக்கு
நீ நன்றி பாராட்ட வேண்டுமென்று
கட்டளையிடுகிறார்கள்.

என்னே அவர்களின் கயமை!

#ஃகஸ்ஸான்_கன்ஃபானி

ﻳﺴﺮﻗﻮﻥ ﺭﻏﻴﻔﻚَ
ﺛﻢَّ ﻳﻌﻄﻮﻧﻚ ﻣﻨﻪ ﻛِﺴﺮﺓ
ﺛﻢَّ ﻳﺄﻣﺮﻭﻧﻚ ﺃﻥ ﺗﺸﻜﺮﻫﻢ ﻋﻠﻰ ﻛﺮﻣﻬﻢ
ﻳﺎﻟﻮﻗﺎﺣﺘﻬﻢ !

"غسان كنفاني"



Sunday, August 23, 2020

ஹிட்லர் தன்னை தானே விலங்குகளின் காவலன் என சொல்லிக் கொள்வான்.....

 ஹிட்லர் தன்னை தானே விலங்குகளின் காவலன் என சொல்லிக் கொள்வான்.....

அதனை படம் பிடித்து விளம்பரப்படுத்துவான்......

சைவ உணவு உண்பவன்....

ஆனா.. மகா கொலைகாரன்....




ஜே பால்ப்ரே (Jay Palfrey), பிரிட்டனை சேர்ந்த பயண ஊடகவியலாளர்

 ஜே பால்ப்ரே (Jay Palfrey), பிரிட்டனை சேர்ந்த பயண ஊடகவியலாளர், சிரியா மீட்பு மற்றும் முன்னேற்ற அமைப்பின் தூதர் மற்றும் பிரபல YouTube-பர். ஆன்மீகத்தை நோக்கிய தன்னுடைய நீண்ட நாள் பயணம் இஸ்லாமில் முடிவடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார் ஜே. துருக்கி இஸ்தான்புல் சுலைமானியா பள்ளிவாசலில் தான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக கூறி அந்த காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்.

சுமார் 25 இலட்சம் பார்வைகளை இதுவரை பெற்று வைரலாகி இருக்கின்றது இந்த வீடியோ. ஜிம்பாப்வே நாட்டின் தலைமை இமாமும், உலகின் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராகவும் பார்க்கப்படும் முப்தி மென்க், ஜே-விற்கான தன்னுடைய செய்தியில், 'இறைவன் உங்களுடைய இஸ்லாமிய பயணத்தை எளிதாக்கி, சுவனத்தில் நம்மை சந்திக்க வைப்பானாக, ஆமீன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரபல தென்கொரிய YouTube-பரான தாவுத் கிம், 'ஜே, உங்களின் இந்த முடிவிற்காக நான் பெருமைப்படுகிறேன்' என்று கூறியிருக்கிறார். தன்னுடைய இஸ்லாம் நோக்கிய பயணத்தில் தாவுத் கிம்-முடன் தொடர்பில் இருந்தவர் ஜே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

"சிறு வயதில் ஏழ்மையின் காரணமாக என்னால் ஒரு நல்ல உடையை கூட பள்ளிக்கு அணிந்து செல்ல முடியாது. இதன் காரணமாக நான் கிண்டலுக்கு ஆளாகினேன். ஒல்லியான என்னுடைய தேகம் கேலிக்கான மற்றுமொரு காரணமாக அமைந்தது. டீனேஜ் பருவத்தில் என்னுடைய நெருங்கிய உறவினருடைய மரணம் என்னை நிலைக்குலைய செய்தது. மன உளைச்சலில் தவித்த நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறினோம். மன அமைதிக்கான என்னுடைய பயணம் இங்கிருந்து தான் துவங்கியது.

பல்கலைக்கழகத்தில் தான் பயணங்கள் குறித்த ஆர்வம் அதிகரித்தது. பல்வேறு நாடுகளுக்கும் பயணப்பட்டேன். ஈராக், எகிப்து, துருக்கி நாட்டு மக்களின் விருந்தோம்பலும், குடும்ப அமைப்பும் என்னை மிகவும் கவர்ந்தன. நான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் அற்புதமான மக்கள் அவர்கள். இந்த மக்கள் மூலமாக இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. இஸ்லாம் போதிக்கும் ஓர் இறை தத்துவம், சகோதரத்துவம் மற்றும் அமைதிக்கான விடை ஆகியவை என்னை இஸ்லாம் குறித்து மேலும் ஆராய தூண்டின.

மிக அழகான மன அமைதியை என்னால் இஸ்லாமில் பெற முடிந்தது. பல ஆண்டுகள் நீடித்த அமைதியை நோக்கிய என்னுடைய ஆன்மீக பயணம் இஸ்லாமில் முடிவடைந்திருக்கிறது. இன்று எனக்குள் காணப்படும் இந்த அற்புதமான உணர்வு நான் இதுநாள் வரை அனுபவிக்காதது" என்கிறார் ஜே பால்ப்ரே.

முதலில் இந்த காணொளியை பதிவேற்ற தயங்கியதாகவும், இருப்பினும் தன்னுடைய பயணத்தின் மூலம் ஊக்கத்தையும், அமைதியையும் பெற்றவர்களுக்காக இதனை பதிவேற்றுவதாகவும் தெரிவித்துள்ள அவர், இனி தான் செல்லும் இடங்களிலெல்லாம் தன் மார்க்கத்தின் positivity-யை பரப்புவேன் என்றும், உலகை சிறந்த இடமாக மாற்ற உழைக்கும் மக்களின் வாழ்வையும் காட்சிப்படுத்துவேன் என்கிறார்.

ஜே பால்ப்ரே பதிவேற்றியுள்ள சாட்சி கூறுதல் (ஷஹாதா) வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=EXZFyqGWkyE



ஹிந்து சகோதரிகளை இந்து முறைப்படி திருமணம் முடித்து கொடுத்துள்ளார்.

 மகாராஷ்டிராவில் இஸ்லாமியர் தான் வளர்த்த இரண்டு ஹிந்து சகோதரிகளை இந்து முறைப்படி திருமணம் முடித்து கொடுத்துள்ளார்.

இந்து முஸ்லிம்களை பிரிக்க ஒரு புறம் மோடியும் அமித்ஷாவும் காய்களை வஞ்சகமாக நகர்த்தி வருகின்றனர். மறுபுறம் மனித நேயத்தை போற்றும் பல நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் உள்ளது.

தனது வளர்ப்பு தந்தையை பிரிய மனமில்லாமல் கதறி அழும் அந்த இள மங்கைகளை பாருங்கள். மனித நேயம் என்ன என்பது விளங்கும்.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து அதனுள் இருந்த சிசுவையும் எடுத்து தீயில் இட்ட மோடி பக்தர்களுக்கு இந்த மனித நேயம் விளங்க வாய்ப்பில்லை.




Saturday, August 22, 2020

அர்ச்சகர் மற்றும் அவரது கள்ளக் காதலி கொலை வழக்கில் கைது!

 

விநாயக சதுர்த்திக்கு ஸ்டாலின் ஏன் வாழ்த்துக்கள் சொல்வதில்லை?

 விநாயக சதுர்த்திக்கு ஸ்டாலின் ஏன் வாழ்த்துக்கள் சொல்வதில்லை? என்று ஹெச்.ராஜா கேட்டுள்ளார்.

ஸ்டாலின் இந்து மத வர்ணாசிரமத்தை ஏற்காதவர். ஆனால் இந்து மதத்தை ஏற்ற வர்ணாசிரம தத்துவத்தை ஏற்ற இந்த மூவரிடமும் ராஜாவால் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து வாங்கி விட முடியுமா? எத்தனை ஆண்டு ஆனாலும் வாழ்த்தை பெற முடியாது. எனவே ராஜா முதலில் ஆத்திகர்களிடமிருந்து இதனை ஆரம்பிக்கலாமே....

- திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்
- அகோபில மடம் அழகியசிங்கர்
- ISKCON மது பண்டித தாசா!





கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில்

 மலேசிய மற்றும் அரபு நாடுகளை போன்று கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் முதன் முதலாக பெட்ரோல் பங்கில் பொதுமக்கள் தொழக்கூடிய தொழுகை பள்ளிவாசல் ஆரம்பம்.

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் அமைந்துள்ள M.M.K. பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆண் | பெண் இரு பாலரும் தொழக்கூடிய தொழுகை கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்காக நேற்று திறக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே!






பெரும்பாலான இந்துக்களின் நிலையும் இதுதான்.

 பக்தி அரசியலாக்கப்படுவதால் வரும் விபரீதங்கள் இவை.... நன்றி நண்பரே! பெரும்பாலான இந்துக்களின் நிலையும் இதுதான்.



இறைவன் இந்த சகோதரிக்கு நேர் வழியைக் காட்டுவானாக!

 மிக அழகிய பேச்சு!

சொர்க்கத்துக்கு போக ஒரு மார்க்கம் உடன்கட்டை ஏறச் சொல்கிறது: மற்றொரு மார்க்கமோ பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்த்தாலே சொர்க்கம் செல்லலாம் என்கிறது.


அன்புராஜ் போன்ற பாசிசத்துக்கு அடிமையாகிப் போனவர்கள் இந்த பேச்சை கேட்டாவது திருந்துவார்களாக!


இறைவன் இந்த சகோதரிக்கு நேர் வழியைக் காட்டுவானாக!




ஆரம்ப கால இஸ்லாமிய அறிவியல்

 சில நாட்களுக்கு முன்பு, நேஷனல் ஜியோகிராபிக் (National Geographic) ஊடகம், 'ஆரம்ப கால இஸ்லாமிய அறிவியல் எப்படி மருத்துவதுறையை முன்னேற்றியது' என்ற தலைப்பில் மிக ஆழமான, படிப்பதற்கு பார்ப்பதற்கு அரிய செய்தி மற்றும் படங்களுடன் ஆச்சர்யமளிக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

958-ல், ஸ்பெயினின் வடக்கு பகுதியை ஆண்ட ரோமன் கத்தோலிக்க மன்னரான சான்சோவின் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் அகற்றப்படுகிறது. புரட்சிக்கான காரணம் வித்தியாசமானது. மன்னர் தன் அரசாங்க கடமைகளை நிறைவேற்ற முடியாத அளவு குண்டாக இருக்கிறார் என்பதே காரணம். சான்சோவின் பாட்டி இந்த சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என ஸ்பெயினின் தெற்கு பகுதியை ஆண்ட இஸ்லாமிய கலீபாவிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.


இஸ்லாமிய ஆட்சியின் திறன்மிகு மருத்துவர்கள், கலீபாவின் உத்தரவின் பெயரில் சான்சோவின் உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாட்டு மருத்துவ முறைகளை பரிந்துரைக்கின்றனர். ஓரிரு வருடங்களில் மருத்துவர்களின் முயற்சியின் பலனாக உடல் எடை குறைந்து ஒல்லியாகிறார் சான்சோ. பின்னர் இஸ்லாமிய படைகளின் உதவியோடு இழந்த ஆட்சியை மீட்கிறார் என்ற வரலாற்று செய்தியோடு கட்டுரையை தொடங்குகிறது நேஷனல் ஜியோகிராபிக்.

'அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை, முதுமையை தவிர' என்பது போன்ற நபிமொழிகள் இஸ்லாமிய மருத்துவ அறிவியலுக்கு அடிப்படையாக இருந்ததாக குறிப்பிடும் கட்டுரை, இன்று வரை நாம் மருத்துவதுறையில் பயன்படுத்தும் பல்வேறு யுக்திகளை கண்டுபிடித்தது இஸ்லாமிய மருத்துவ உலகம் தான் என்கிறது.
உதாரணத்திற்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு தையல் போட பயன்படும் நரம்பிக் கம்பிகளை (Catgut) சுட்டிக் காட்டுகிறது. நரம்புக்கம்பிகள் என்பவை விலங்குகளின் குடல் தசைநாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழையாகும். மற்றுமொரு உதாரணமாக, உலக வரலாற்றில் நுரையீரல் சுழற்சியை (Pulmonary Circulation) முதன் முதலில் விளக்கியது இஸ்லாமிய மருத்துவ அறிஞர்கள் தான் என்கிறது அக்கட்டுரை (படம் 2).
பள்ளிவாசல்களுடன் இணைந்திருக்கும் மதரசாக்கள் மருத்துவ கல்வியை போதிப்பதில் சிறந்து விளங்கியிருக்கின்றன. இங்கிருந்து மாணவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்த்து செயல்முறை பயிற்சியை பெற்றிருக்கின்றனர். ஆம், இன்று மருத்துவ கல்வி எப்படி செயல்படுகிறதோ அதனை அப்போதே செயல்படுத்தி காட்டியிருக்கிறார்கள். சில இடங்களில் பள்ளிவாசலை ஒட்டியே மருத்துவமனைகளும் கட்டப்பட்டிருக்கின்றன (படம் 1)

இன்று ஆங்கிலம் பொதுவான மொழியாக இருப்பது போல அன்று அரபி மொழி இருந்திருக்கின்றது. அரபியை அறிவியலுக்கான மொழியாகவே அன்றைய உலகம் அணுகியதாக கூறுகிறது நேஷனல் ஜியாகிராபிக். பல்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரத்தை பின்னணியாக கொண்ட மருத்துவர்கள், அரபியை பொது மொழியாக கொண்டே விவாதங்கள் மற்றும் கற்பித்தலை முன்னெடுத்து சென்றதாகவும் கூறுகிறது கட்டுரை. இஸ்லாமிய ஸ்பெயினின் Corboda நகரம், அன்றைய ஐரோப்பாவின் பெரிய நகரமாகவும், மிகச் சிறந்த கலாச்சாரத்தையும் கொண்டிருந்ததால் 'உலகின் ஆபரணம்' என சிலரால் அழைக்கப்பட்டதையும் மறக்காமல் நினைவுபடுத்துகிறது கட்டுரை.

உண்மையில், இப்படியான கட்டுரைகள் நேஷனல் ஜியோகிராபிக் போன்ற ஊடகங்களில் வருவதையெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் இன்றோ விக்கிப்பீடியா முதற்கொண்டு பல்வேறு நன்கறியப்பட்ட ஊடகங்களும் இஸ்லாமிய அறிவியல் பொற்காலத்தையும், அறிஞர்களையும், அவர்கள் நவீன உலகிற்கு அளித்த பங்களிப்புகளையும் துறைச்சார்ந்து பட்டியலிடுகின்றன. ஆதாரங்களுடன் கூடிய தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் மேற்கொண்டு வருவதே இதற்கு காரணம். இந்த தலைப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயமாக மிஸ் பண்ணாமல் நேஷனல் ஜியோகிராபிக் கட்டுரையை படியுங்கள்.

படம் 1: பதிமூன்றாம் நூற்றாண்டு திவ்ரிகி பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டி கட்டப்பட்ட மருத்துவமனை, துருக்கி.

படம் 2: நுரையீரல் சுழற்சியை விளக்கும் 13-ஆம் நூற்றாண்டு பிரதி.

படம் 3: பல் வலியை நீக்க சூட்டுக்கோல் முறையில் மேற்கொள்ளப்படும் அன்றைய பற்சிகிச்சை.

படங்களுக்கு நன்றி: NATIONAL GEOGRAPHIC
நேஷனல் ஜியோகிராபிக் கட்டுரையை முழுமையாக படிக்க: https://www.nationalgeographic.com/…/muslim-medicine-scien…/

சகோ @Aashiq Ahamed ன் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.





கர்வம், ஆணவம், திமிர், அனைத்தையும் களைய முயற்சிப்போம்.

 

Thursday, August 20, 2020

நித்தி திரும்பவும் களத்தில்.... :-)

 நித்தி திரும்பவும் களத்தில்.... :-)


'அட லூசுப் பசங்களா? ஏண்டா இப்படி வயிறு எறியுறீங்க... நான் அதிபர் என்பதற்கு முன்பாக நான் கடவுள் என்பதை ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்டா....'



இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.....

 Asafoetida

படத்தில் உள்ள தாவரம்தான் Asafoetida எனப்படும் பெருங்காயத் தாவரம். (இப்போது கடைகளில் விற்கப்படும் பெருங்காயம் கலப்படம் நிறைந்தது.)

பெருங்காயம்
சமையலில் சாம்பார் போன்ற உணவில் இது சேர்க்கப்படுகிறது. இந்த மூலிகை வாயுத்தொல்லையை நீக்கப் பயன்படுகிறது.

இந்த தாவரத்தின் பூர்வீகம் வடஆப்ரிக்கா என கருதப்பட்டாலும் அங்கு இந்த தாவரம் முற்றிலுமாக அழிந்து விட்டது.

ஈரான், மற்றும் ஆபிகானிஸ்தானில் பண்டைய காலம் முதல் இப்போதுவரை விளைவிக்கப் படுகிறது.

பிராமணர்களின் சாம்பாரில் பெருங்காயம் இன்றியமையாதது அவர்களே இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.....

பார்ப்பனர்களின் பூர்வீகம் எதுவென்று!




Wednesday, August 19, 2020

#பெங்களூரு கலவரம் பற்றி அறிய வேண்டுமா???

 #பெங்களூரு கலவரம் பற்றி அறிய வேண்டுமா???

கீழே தரப்படுபவற்றை வரிசையாக படிக்கவும், சிந்திக்கவும்!

1) "#முஸ்லிம் போர்வையில்" கொலைகளை செய்வதும், கோயில்களில் மாட்டுக்கறியை எறிவதும், #பாகிஸ்தான் கொடி ஏற்றுவதும், கலவரத்தை தூண்டுவதும், பழியை முஸ்லிம்களின் மீது போடுவதும் #இந்துத்துவா செயல்பாடு - நிகழ்கால நாட்டு நடப்பு

2) கோவிலைச் சுற்றி மனிதச் சங்கிலியாக நின்று இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண் - ஊடகச் செய்தி

3) கலவரம் செய்தவர்கள் (முஸ்லிம்கள்?????) போதையில் இருந்தனர் - அந்த பகுதி "சமூக செயற்பாட்டாளர்"(?!?!) மணிவண்ணன் பத்திரிகை செய்தியில்.

குறிப்பு: நபிகள் (சல்) அவர்களை அவமதித்ததற்காக கலவரம் செய்த முஸ்லிம்கள் (?!) இஸ்லாத்தில் நரகத்துக்கு இட்டுச்செல்வதாய் நம்பப்படும் தடுக்கப்பட்ட மது போதையில் இருந்தனராம்!!!!!!

4) கலவரம் நடந்த கர்நாடக மாநிலத்தை ஆளுவது இஸ்லாமிய விரோத, இஸ்லாமியர்களை கொன்று அழிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிடாத காட்டுமிராண்டி #பாஜக.

5) கலவரத்தை தடுத்து அமைதிக்கு முயற்சித்த முஸ்லிம்களை சுட்டுக்கொன்றது பாஜக வின் போலிஸ் - #SDPI/#PFI

6) முஸ்லிம் இயக்கமான SDPI யை நாடு முழுதும் தடை செய்ய வேண்டும் - தமிழக பாஜக பயங்கரவாதிகள் நாறவாய் நாராயணன் & கல்யாணி ராமன்.

7) SDPI/PFI ஐ தடை செய்ய அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்! - கர்நாடக அமைச்சர் அசோக்

8) எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லிம் இளைஞர்கள். இந்த கலவரம் வெறும் ஃபேஸ்புக் பதிவுக்கு எதிரானதல்ல, என் அண்ணனின் (எம்எல்ஏ) அரசியல் எதிர்காலத்தை சிதைப்பதற்கானதே - ஃபேஸ்புக் பதிவால் கலவரத்துக்கு வித்திட்ட நவீனின் தாயார் ஜெயந்தி.

குறிப்பு: புலிகேசி நகர் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி - #காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்

9) ஃபாசிச பாஜக வின் ஜென்ம அரசியல் எதிரி காங்கிரஸ். பாஜக தீவிரமாக வெறுக்கும் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். தேசிய அளவில் ஆர்எஸ்எஸ் அதிகமாக பயப்படும் சமுதாய இயக்கம் PFI/SDPI!

10) திரும்பவும் முதல் பாயிண்டை படிக்கவும்....

இப்போது கூட்டிக்கழித்துப்பாருங்கள்....யார் கலவரக்காரர்கள், யார் பாதிப்படைந்தவர்கள், இதனால் பயனடைபவர்கள் யார் என்று!!

இன்னும் புரியவில்லை என்றால்.... உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்!

#FascistBJP
#BengaluruRiots
#PoliticalVengeance
#NeechPolitics
#BanRSS
#SaffronTerrorism
#BJPHypocricy


"பாசிசத்தின் நீதி படுகொலை"

 "பாசிசத்தின் நீதி படுகொலை"


கொடுமை.


ஆளும் BJP அரசு கொண்டு வந்த சுற்றுசூழல் EIA 2020 சட்டத்தை விளக்கம் கேட்டு பதிவு செய்த ஒரே காரணத்திற்காக , சங்கிகளால் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண்.


ஏன் BJP / RSS / சங்பரிவாரக் கும்பல்களை இந்திய குடிமக்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத்திரும்ப சாட்சியாக உள்ளன.


கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள்.


அன்று இந்தப் பெண்ணை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து அவர்கள் இன்று அய்யோ என்ற பதிவோடு அமைதி காத்து அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள், ஆனால் இந்த பெண்ணிற்கு நீதி என்று ஒன்று இருந்தால், அதை யார் பெற்று தருவது.


சங்கிகளின் டார்கெட் : ஆண்களாக இருந்தால் தேசதுரோகி பட்டம், மாவோயிஸ்டு, பாகிஸ்தான் ஆதரவாளன் கடைசில் படுகொலை.


பெண்களாக இருந்தால் பலாத்கார மிரட்டல்,  கூட்டுகற்பழிப்பு, முகத்தில் ஆசிட் அடிப்பது, துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது.


ஆனால் இந்த சங்கிகளையும் ஆதரிப்பதற்கு என்று சில கும்பல்கள் உலாவிக் கொண்டு தான் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டுப் பெண்ணிற்கு எவ்வாறு அநியாயம் நடந்தால் ஏற்றுக் கொள்வார்களா ? மாட்டார்கள் தானே.


நடுநிலையாளர்கள் சிந்திக்கவும்.


இந்தியா ஒரு ஜனநாயக நாடு தானே அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்களை கேள்வி கேட்கக் கூடாதா ?அதற்கு கூட குடிமக்களுக்கு குறைந்தபட்சம் உரிமை இல்லையா?


அன்று கல்புர்கிகளையும், கௌரிலங்கேஷ்களையும், 

ஆசிபாவையும், 

அனிதாவையும் 


அசால்டாக விட்டதன் விளைவு இன்று தொடர்ந்துகொண்டிருக்கிறது.


இந்திய நடுநிலை பொதுமக்களே இதற்கு முடிவு கட்ட வேண்டும்.


பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை உடலளவிலும் மனதளவிலும் அத்துமீறி கொடுமைபடுத்துபவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை என்பதே தீர்வாக இருக்கும்.



Monday, August 10, 2020

இனியாவது சங்கிகள் மொழி திணிப்பை நிறுத்திக் கொள்ளட்டும்.

 'இந்தி எங்களின் தேசிய மொழி அல்ல. பெங்காளி மொழியை மரியாதையாக நடத்துங்கள். இல்லை என்றால் இம்மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்.'

மேற்கு வங்க சுவர்களை அலங்கரிக்கும் பதாகைகள்.

ஒரு மொழியை திணித்தால் இப்படித்தான் எதிர் வினை இருக்கும்.

தமிழகத்திலும் இது நடந்தால் ஆச்சரியமில்லை.

இனியாவது சங்கிகள் மொழி திணிப்பை நிறுத்திக் கொள்ளட்டும்.