Followers

Monday, January 27, 2020

சகோ சலீமின் இந்த காணொளியை கவனத்துடன் கேளுங்கள்.

மலேசியால் ஹிண்டராப் செய்த அதே பணியை இந்திய முஸ்லிம்களும் செய்ய வேண்டும். சட்டம் படித்த இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மத நண்பர்கள் இதற்கான வழி காட்டுதலை தர வேண்டும். சுதந்திரம் தந்த இங்கிலாந்து இதற்கு சரியான ஆள்.

போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கட்டும் பன்னாட்டு கோர்ட்டுக்கு குடியுரிமை பிரச்னையை கொண்டு செல்வோம். ஆட்சியில் அமர்ந்திருப்போர் நீதி தவறி நடக்கும் போது நமக்கு வேறு வழி இல்லை. இந்துத்வாவாதிகள் தங்கள் முயற்சியில் வெற்றியடைய போவதில்லை. இருந்தாலும் நம்மால் முடிந்த எதிர்ப்புகளை சட்ட ரீதியாக செய்து கொண்டே இருப்போம்.

சகோ சலீமின் இந்த காணொளியை கவனத்துடன் கேளுங்கள்.


Sunday, January 26, 2020

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!
உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.
இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.
நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.
அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.
என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.
இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.
துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.
அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.
பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.
நன்றி: ரவி சங்கர் - இந்து தமிழன்…முகநூல் பக்கத்திலிருந்து…..
இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனது பாரத பூமியை ரத்த காடாக மாற்றத் துடிக்கும் இந்துத்வாவாதிகளின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பில்லை.
-----------------------------
சவுதி வேலை வாய்ப்பில் இந்தியர்கள் முதலிடம்!
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளி நாட்டவர்களில் எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 85 சதவீத வேலை வாய்ப்பினை பகிர்ந்து கொள்கின்றனர் என்று அமெரிக்க அய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி சவுதி கெஜட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் வழக்கம் போல் முதல் இடத்தை நம் இந்தியர்களே பிடித்துள்ளனர். துபாய், பஹ்ரைன், கத்தார், என்று வளைகுடா எங்கு நோக்கினும் இந்திய தலைகளே! எனவே தான் இத்தனை இமாலய ஊழல்களுக்கு மத்தியிலும் நமது இந்திய பொருளாதாரம் தொடர்ந்து ஒரு நிலையான இடத்தைப் பெற்று வருகிறது.
இந்தியர்கள் 1.76 மில்லியன், பாகிஸ்தானிகள் 1.32 மில்லியன், பங்களாதேஷ் 1.31 மில்லியன், பிலிப்பைன்ஸ் 1.03 மில்லியன், இலங்கை 150000 என்று பல நாடுகளையும் பட்டியலிட்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.
வாழ்க இந்தியா! வளர்க அதன் பொருளாதாரம் வளைகுடா பணத்தால்! ஆனால் பல இந்துத்வாவாதிகளுக்கு இஸ்லாத்தைக் கண்டால் பிடிக்காது. அந்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து தினம் பெறப்படும் அந்நிய செலாவணியை மட்டும் பிடிக்கும்.
என்ன உலகமடா இது?
தகவல் உதவி
சவுதி கெஜட்
09-09-2014




Saturday, January 25, 2020

பெரியாரின் கைத்தடி... :-)


முரண்பாடுகளின் மொத்த உருவமே! உனக்கு பெயர்தான் இந்துத்வா!



இந்தியாவுக்கு எதிராக போராடியவர் பாடகர் அதனான் சாமியின் தந்தை. அத்னான் சாமிக்கு குடியுரிமை மற்றும் பத்மஸ்ரீ பட்டம்:
கார்கில் போரில் நமது நாட்டுக்காக போராடிய ராணுவ வீரருக்கு குடியுரிமை இல்லை என்று சிறையில் அடைப்பு!
முரண்பாடுகளின் மொத்த உருவமே! உனக்கு பெயர்தான் இந்துத்வா!
நாட்டை படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கும் மோடியையும் அமித்ஷாவையும் வீழ்த்த வாங்க குடியரசு தினம் கொண்டாடுவோம். 


அநியாயக்கார அரசுகளின் தவறான முடிவுகளால் வரலாறுகள் மாறுகிறது....

10 லட்ச உய்குர் முஸ்லிம்களுக்கு தடுப்பு முகாம்களை ஏற்படுத்திய சீன அரசு தனது 110 லட்ச மக்களுக்காக ஊஹனில் அதே தடுப்பு முகாம்களை கட்டிக் கொண்டுள்ளது....
இரண்டு பக்கமும் அப்பாவி மக்கள் அவதிப்படுகிறார்கள்.....
அநியாயக்கார அரசுகளின் தவறான முடிவுகளால் வரலாறுகள் மாறுகிறது....


சங்கிகள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்?


Friday, January 24, 2020

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா!

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா!
24-01-2020 வெள்ளிக் கிழமை அன்று ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவுக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். நண்பர்கள் இல்யாஸ், சாட் கார்கோ சையது பாய், அமீர் பாய், சிராஜ் சகிதம் அரங்குக்கு சென்றோம். சென்ற நேரம் மஹ்ரிப் தொழுகை. அருகில் இருந்த ஒரு இஸ்த்ராஹாவில் தொழுகையை முடித்து விட்டு அரங்கில் சென்று அமர்ந்தோம்.
எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம். அரங்கு நிரம்பி வழிந்தது. பிறகு வெளியிலிருந்து நாற்காலிகளை கொண்டு வந்து நின்று கொண்டிருந்தவர்களை சமாளித்தனர் ஏற்பாட்டாளர்கள். வழியில் நின்று கொண்டு நிகழ்ச்சிக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர்களை இம்தியாஸ் பாய் சரி செய்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். பட்டி மன்ற பேச்சாளர் மோகன சுந்தரமும் அரங்குக்கு வந்தார்.
குர்ஆன் ஓதுதலோடு நிகழ்ச்சி ஆரம்பமானது.
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் தெரிந்தவன். - குர்ஆன் 49:13.
பல மதங்களும் சங்கமித்த அந்த நிகழ்வில் பொருத்தமான வசனத்தை தேர்வு செய்திருந்தனர். அதற்கடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கியது. அதன் பிறகு அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு பரிசுகளும் பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.
அடுத்து தழிழ்க் குழந்தைகள் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்வித்தனர். அதன் பிறகு பட்டி மன்றம் தொடங்கியது. சரவண பவன் தங்கள் ஸ்டாலை அரங்கில் அமைத்திருந்தனர். விலை சற்றே கூடுதலானாலும் தரமாக இருந்தது. கால நிலை கடும் குளிர். எனவே நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே கிளம்பி விட்டோம். பத்ஹா வந்து ஆர்டியில் இரவு உணவு முடித்து விட்டு இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.





Thursday, January 23, 2020

"நீ பணத்துக்காகத்தானே முஸ்லிம் மதத்துக்கு மாறுன...?"

"நீ பணத்துக்காகத்தானே முஸ்லிம் மதத்துக்கு மாறுன...?"
நான் முஸ்லிம்களிடம் ஒரு ரூபாய்கூட காசு வாங்கியதே கிடையாது. யாசகம் வாங்கக்கூடாது; மாறாக, தர்மம் செய்யச்சொல்லி வலியுறுத்தும் மார்க்கம்தான் இந்தப் புனித இஸ்லாம்.
"நீ முஸ்லிம் பொண்ண லவ் பண்ணிருக்க. அத கல்யாணம் பண்ணதான் மதம் மாறிருக்க; பள்ளிவாசலுக்கும் போற"
நான் காதல் கீதல் எல்லாம் செய்வதில்லை. நான் எனது வாழ்க்கையில் எந்தவொரு முஸ்லிம் பெண்ணிடமும் நேரில்கூட பேசியதே கிடையாது. முஸ்லிம்களது நேரடித் தொடர்பில்லாமல் இஸ்லாத்திற்கு வந்தவன் நான். அதையெல்லாம் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை உங்களுக்கு இல்லை.
"பிரியாணிக்கு ஆசப்பட்டு மதம் மாறிட்டான் போல"
பிரியாணிக்கு ஆசைப்பட்டெல்லாம் யாரும் மதம் மாற மாட்டார்கள். ஆசைவந்தால் காசு கொடுத்து கடையில் வாங்கி சாப்பிடுவோம். இதற்காகவெல்லாம் மதம் மாற மாட்டோம்.
- - - - * - - - -
மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்களுக்காக யாரேனும் இஸ்லாத்திற்கு வந்தால், அவர்கள் வந்த வேகத்திலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவர். இறைவனால் தூக்கி எறியப்படுவார். அதாவது, இழிவுபடுத்தப் படுவார். இஸ்லாம் வேறு; நீங்கள் சொல்லும் காரணங்கள் வேறு. இதற்காகவெல்லாம் நான் இங்கு வரவில்லை. இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமே கிடையாது. நான் மதங்களை ஆராய்ந்தேன். இஸ்லாத்தை ஆராய்ந்தேன். இஸ்லாம்தான் இறைவனின் உண்மை மார்க்கம் என்பதை உணர்ந்ததால்தான் இஸ்லாத்தையே தழுவினேன்.
Ramu Raj தனது அனுபவத்தை பதிவாக தந்துள்ளார். இனியாவது உண்மையை இந்துத்வாவாதிகள் உணர்வார்களாக!


Wednesday, January 22, 2020

குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் தீவிரவாதி பிரபேஷ்!

குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் தீவிரவாதி பிரபேஷ்!
சென்ற ஜனவரி 16 அன்று கேரள பொன்னியம் நயனார் ரோட் கதிருர் காவல் நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வீசப்பட்டது. குறி சற்று தவறியதால் இரண்டு காவலர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
வெடி குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் தீவிர உறுப்பினர் பிரபேஷ் என்பவனை கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது காவல் துறை கைது செய்துள்ளது.
கம்யூனிஷ்டுகள் வெடி குண்டு வீசியதாக நம்ப வைக்கப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ண முயற்சித்துள்ளான். போலீஸார் கைது செய்த போது நன்றாக சாராயம் அருந்தியிருந்தான். இவனுக்கு வேறு எங்கெல்லாம் தொடர்புண்டு என்று போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தகவல் உதவி
இந்து ஆங்கில நாளிதழ்
22-01-2020


இந்துக்களையும் விட்டு வைக்கவில்லை இந்துத்வாவாதிகள்!

இந்துக்களையும் விட்டு வைக்கவில்லை இந்துத்வாவாதிகள்!
ராபின் வர்மா என்ற இந்து சகோதரர் உபி லக்னோவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டார். ஒரு குடி மகன் என்ற முறையில் தனது எதிர்ப்பை தெரிவிக்க முழு உரிமையுள்ளது. ஆனால் உபி காவல் துறை அவரிடம் நடந்து கொண்ட விதத்தை விளக்குவதை கேளுங்கள்.
'சென்ற 20ந்தேதி டிசம்பர் மாதம் நானும் எனது நண்பன் உமர் ரஷீதும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த காவல் துறை எங்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அழைத்தது. அங்கு சென்றவுடன் எங்களின் செல் போன்களை பிடுங்கிக் கொண்டனர். எங்கள் வீடுகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. கழிவறைக்கு செல்லக் கூட எங்களை அனுமதிக்கவில்லை. தாகம் எடுத்து தவித்தபோது தண்ணீரும் தரவில்லை.
'நீ ஒரு ஹிந்து. நீ ஏன் போராட்டத்தில் கலந்து கொண்டாய்? உனக்கு இதனால் என்ன பாதிப்பு?'
'ஒரு முஸ்லிம் உனக்கு எப்படி நண்பனாக இருக்க முடியும்? ராபின் என்ற பெயரை ஏன் வைத்துக் கொண்டாய்?
'எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் உனது மனைவியையும் மகளையும் விபசாரத்தில் தள்ளி விடுவோம். உன்னையும் பிணையில் வர முடியாத பெரும் வழக்குகளில் சிக்க வைத்து விடுவோம்'
இவை எல்லாம் காவல் துறை என்னிடம் கேட்ட கேள்விகள். நான் மிகவும் மனம் உடைந்து போயுள்ளேன்.'
இந்து மத வெறியானது இஸ்லாமியருக்கு மட்டும் சிரமத்தை தராது. நடு நிலையான இந்துக்களையும் கொடுமைபடுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியதாக ராபின் வர்மா மேல் வழக்கு பதிந்துள்ளது காவல் துறை. உபியின் நிலைமை நாம் நினைப்பதை விட மிக மோசமாக உள்ளது. இறைவன் அந்த மக்களை பாசிசவாதிகளின் கொடுமையிலிருந்து காப்பாற்றுவானாக!
மொழிபெயர்ப்பு
சுவனப்பிரியன்


Tuesday, January 21, 2020

மாற்று மதத்தினர் இவர்கள் கிராமத்துக்கு வரக் கூடாதாம்!

மாற்று மதத்தினர் இவர்கள் கிராமத்துக்கு வரக் கூடாதாம்!
எங்கள் கிராமம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். கிட்டத்தட்ட 2000 வீடுகளுக்கு மேல் உள்ள கிராமம். காலை ஆறு மணி ஆகி விட்டால் பால் கொண்டு வந்து வீடு வீடாக போடுபவர்கள் இந்துக்கள். காலை எட்டு மணி ஆகி விட்டால் காய்கறிகளை தலையில் வைத்து வீடு வீடாக சென்று விற்பனை செய்வது இந்துக்கள். காலை 9 மணி ஆகி விட்டால் ஆசாரி, கொத்தனார், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர், சித்து ஆட்கள் என்று ஒரு பெரும் படையே எங்கள் கிராமத்தை நோக்கி வரும். அனைவரும் இந்துக்கள். எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள அரிசன மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் கிராம இந்துக்களின் வாழ்வாதாரமே இஸ்லாமிய கிராமத்தை நம்பித்தான் உள்ளது. எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து இந்துக்களும் நல்ல வளமாக உள்ளனர். தின சம்பளம் 500, 600 என்று வாங்குகிறார்கள்.
அப்போ முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கலாம். சவுதி, துபாய் போன்ற அரபு நாடுகளுக்கும், மலேஷியா, சிங்கப்பூர், புருணை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருளீட்ட சென்று விடுகிறார்கள். அரசு வேலை பார்ப்பவர்கள் சொற்ப எண்ணிக்கையே. பலர் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர் சொந்த கடை வைத்து வியாபாரம் பார்க்கிறார்கள்.
இவ்வாறு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கின்றனர். தமிழகம் முழுக்க இது தான் நிலைமை. ஒரு இடத்திலேயே பொருளாதாரம் குவியாமல் இவ்வாறு பரந்து சென்றால்தான் எல்லோரும் நிம்மதியாக வாழ முடியும்.
மேலே உள்ளது போல் ஒவ்வொரு கிராமத்திலும் போர்டு வைக்க ஆரம்பித்தால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டுக்கு இது அழகல்ல. எனவே சம்பந்தப்பட்டவர்கள் கலந்து பேசி அவர்களாகவே இந்த போர்டை எடுக்க முயற்சிக்க வேண்டும். இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் மக்களை பிரித்து அதன் மூலம் அவர்கள் சுகமாக வாழ முயற்சிக்கின்றனர். இதற்கு தமிழர்கள் பலியாகி விடக் கூடாது.


தோழர் ராஜூவின் ஆழமான உரை!


சங்கிகளின் பொய் தகவலை ஆதாரத்துடன் கிழித்து எரியும் இந்து சகோதரர்!

ஆங்கிலத்தில் பேரணி அழைப்பு...

ஆங்கிலத்தில் பேரணி அழைப்பு...


Monday, January 20, 2020

இவ்வாறு உலகம் முழுக்க முஸ்லிம்கள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர்?


இவ்வாறு உலகம் முழுக்க முஸ்லிம்கள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர்? முஸ்லிம்கள் செய்த குற்றம்தான் என்ன? மோடியும் அமீத்ஷாவும் ஏன் முஸ்லிம்களை மட்டும் நாடற்றவர்களாக்க முயற்சிக்கின்றனர்?
காரணங்கள் இதுதான்.....
ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார்கள்....
மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து தங்களின் சுயமரியாதையை இழக்க வேண்டாம் என்கிறார்கள்....
மனிதர்களில் சாதி வேற்றுமை கூடாது என்கின்றனர்.
மத குருமார்களையும், பாதிரிமார்களையும், வணங்க வேண்டாம் என்கிறார்கள்.
வட்டி, மது, திருட்டு, விபசாரம், பெண்அடிமை, பொருளாதார ஏற்றத் தாழ்வு கூடாது என்கிறார்கள்..
இதெல்லாம் நடைமுறைக்கு வந்தால் தங்களின் மேட்டிமைத்தனம் சென்று விடுமே என்ற கோபத்தில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர்: பொய்யான குற்றச்சாட்டுக்களில் கைது செய்கின்றனர்: கொலையும் செய்கின்றனர்: இஸ்லாமிய பெண்களை மான பங்கப்படுத்துகின்றனர். தாய் மதம் திரும்புங்கள் என்று வலுக்கட்டாயப்படுத்துகின்றனர். சீனாவானாலும், இந்தியாவானாலும், பர்மாவானாலும், ஐரோப்பிய நாடுகளானாலும் பாசிசவாதிகளின் இலக்கு முஸ்லிம்களே என்பது விளங்கும்.
உண்மையான இறை நம்பிக்கையாளனுக்கு இந்த உலகம் ஒரு சிறைச்சாலை என்று நபிகள் நாயகம் சொல்லிச் சென்றுள்ளனர். எனவே எத்தகைய இன்னல்களை கொடுத்தாலும் சகித்துக் கொள்வோமேயொழிய இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் எக்காலத்திலும் விட்டு விட மாட்டோம்.
மோடியும், அமித்ஷாவும், உலகின் பாசிச வாதிகளும் கண்டிப்பாக முஸ்லிம்களிடம் தோல்வியையே தழுவுவார்கள். இறைவன் நாடினால் அதனை இந்திய வரலாறும் வருங்காலத்தில் பதிவு செய்யும்.
ஆக்கம்: சுவனப்பிரியன்
-------------------------------------------------------
2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
2:214 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏
2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)




டெல்லியில் நிர்மலா சீதாராமன் எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்தார்.

டெல்லியில் நிர்மலா சீதாராமன் எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்தார்.
2020 பட்ஜெட் எல்லோருக்கும் வழக்கம் போல 'அல்வா' தான் என்று உணர்த்துவதற்காக எல்லோருக்கும் சுவையான அல்வா பரிமாறி அசத்தினார் நிர்மலா சீதாராமன்! இன்று திங்கட்கிழமை அதற்கான நிகழ்வும் நடைபெற்றது.
நாளை என்னவெல்லாம் பகீர் வரிகள் வரப் போகிறதோ! யார் யாருக்கெல்லாம் வரி என்ற பெயரில் 'அல்வா' வோ... 
பொறுத்திருந்து பார்போம்.


Sunday, January 19, 2020

இந்து தீவிரவாதம் - அவுட்லுக் விவரிக்கிறது

இந்து தீவிரவாதம் - அவுட்லுக் விவரிக்கிறது
இந்து தீவிரவாதம் என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு-களில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19, 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்-டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடு-கிறோம்.
2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்-தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதி-களின் செயல் என்று வழக்கை விசா-ரித்துவந்த காவல்துறையும், ஊடகங்-களும் பிரச்சாரம் செய்துவந்தன. முஸ்லிம்களின் புனிதத்தலமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்க-ளுக்கு எழலாம். ஆனால், இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைது-செய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைகாட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அனைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளா-னார்கள். ஆனால் இப்போது இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.
2007ஆம் ஆண்டு மே மாதம் அய்த ராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி- இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJi) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று அய்தராபாத் காவல்துறை அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டா-யப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள-வைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்-படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஅய் கைது செய்தது.
அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்-படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்-போனும் சிம் கார்டும் கொண்டு இயக்-கப்பட்ட அதேவகையான வெடிகுண்டு-தான் அய்தராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்-பட்டிருப்பதை சி.பி.அய் கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்பு-முனை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்-பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.அய் இயக்குநர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்ப-தாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.அய். கண்டுபிடிக்-கும்வரை அய்தராபாத் காவல் துறையின்கட்டுக்கதையே தொடர்ந்தது.
அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்-செய்-துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே, ஜெர்மன் பேக்கரி குண்டு-வெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள்மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்பு-களை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்-பட்டனர். சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்-பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஷ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்புப் படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால், அப்துல் சமது மீது இந்த குண்டு-வெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்-சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஷ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மாலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது; கை-காட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைத்-தான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும். அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன. 2002 _-03வாக்கில் போபால் இரயில் நிலையத்-தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடி-குண்டுகள் தொடர்பாக இராம்நாராயண் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள்மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து-விட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்-டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதை-வைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடி-குண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டி-னார்.
2006ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடி-விபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஷ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் சிறிய குண்டு-வெடிப்புகள் நடந்துள்ளன. நண்-டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்-காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-- _ ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்த-போது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்க-லாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.
கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவண்ணம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படாமலேயே இருக்கின்றன என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.
மெக்கா மசூதி, மாலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசார-ணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.அய் இப்போதுதான் ஆலோசித்து வருகிறது .
2008 செப்டம்பர் 29இல் மாலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்-பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்-தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்க-வைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்-டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் சிறீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உள்பட 13 பேர் கைது-செய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்த-போது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்-கும் ஆர்.டி.-எக்ஸ் வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்-ளான். அய்தராபாத் காவல்துறை ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-- இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்ட-தனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும், மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும். 4,528 பக்கங்களை கொண்ட மாலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகை-யில் அபிநவ் பாரத் அமைப்பின் பிர-மாண்டமான முழுவடிவமும் அத-னோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்து புனிதத்-தலங்களில் நடந்த குண்டுவெடிப்பு-களுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்றும் தனி இந்து தேசத்தை உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும், மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005--_06 ஆண்டு வாக்கில் புனேவில் தற்-போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, தனி இந்து தேசம் அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினை-வாக மாலேகானில் ஒரு இடத்திற்கு கர்கரே சந்திப்பு என்று பெயரிட்டுள்-ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலே-கானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்-பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மாலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்-திருக்கவில்லை. ஆனால் காவல் துறை யால் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்-டி-ருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப் பதற்கு ஒரு மாதம் முன்புவரை காவல் துறை காவலில்-தான் இருந்துள்ளார்.
அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்-தான் தீவிரவாத ஒழிப்புப் படை நம்பு-கிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்-படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மாலேகான் குண்டுவெடிப்பை நடத்திய-தாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS 68 பாகிஸ்தானியர்கள் கொலை-செய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியி-டப்படாத சாட்சி ஒருவர் புரோகித்-துடன் நடத்திய தொலைபேசி உரை-யாடலை ஆதாரமாகக் காட்டுகிறது .
இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயண் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உள்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சி-கரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஷ்ட்ரா, இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைது-செய்யப் பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் _ கல்சங்கரா என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர், மெக்கா மசூதி, மாலேகான், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் மற்றும் பல குண்டுவெடிப்பு-களும் ஒரு பெரிய சதித் திட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்தச் சம்பவங்களை-யெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஅய் வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.
(Source: Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, Published in ‘The Outlook’, a weekly news magazine, dated july 19,2010).




இந்தமாதிரி உரிமையா ஒரு கோயில்ல போய் படுத்துக்கிடக்க முடியுமா?

இந்தமாதிரி உரிமையா ஒரு கோயில்ல போய் படுத்துக்கிடக்க முடியுமா?
எனக்கு சொந்தமான கோயிலுக்குள்ள போய் ஒரு அரைமணி நேரம் உக்காந்துருந்தாலே நம்மள சந்தேகப்படுவாங்கெ. இல்லனா பைத்தியம்னு சொல்லுவாங்கெ.
நா முஸ்லிமான பிறகு பாருங்க... எல்லா பள்ளிவாசலுக்குள்ளயும் உரிமையா போறேன்; படுத்து ரெஸ்ட் எடுக்குறேன். புத்தகங்கள எடுத்துப் படிக்கிறேன். என்ன எவனாவது ஒருவார்த்தை தப்பா சொல்ல முடியுமா?
எவ்வளவு சுதந்திரமா இருக்கேன் பாருங்க. வாய்ப்புகள பயன்படுத்திக்கணும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களால் நமக்கு நல்லதுதானே தவிர, ஒரு கெடுதியும் கிடையாது.
எவ்வளவு மரியாதை, முன்னுரிமை கிடைக்குது தெரியுமா?
இதையெல்லாம் விட்டுட்டு எவன்எவன் கால்லயோ போய் விழுந்து கெடக்குறீங்க. அவன் உங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் புடிங்கி திண்ணுகிட்டு, உங்கள அடிமையாவே வச்சிருக்கான். மதிக்கிறானா உங்கள? கொஞ்சமாவது அறிவைக் கொண்டு சிந்திக்கணும்னுதான் இதெல்லாம் சொல்றோம்.
இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட சகோ ராமுராஜ் பதிவிலிருந்து....
--------------------------------------------
கோவிலில் சென்று சுதந்திரமாக படுப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் கோவிலுக்குள்ளேயே விடுவார்களா? கருவறை பக்கம் சென்று விட முடியுமா? பார்பனர்களுக்கு உள்ள உரிமை மற்ற சாதியினருக்கு வழங்கப்படுமா?


மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவு.

மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவு.
ஆனால் பணம் கொழிக்கும் கிரிக்கெட் துறைக்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை பாருங்கள். எந்த அளவு தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது விளங்கும்.


உபியில் உள்ள பனாரஸில் சர்ச்சைக்குரிய கட்அவுட்!



உபியில் உள்ள பனாரஸில் சர்ச்சைக்குரிய கட்அவுட்!
'முஸ்லிம்களே! இந்து மதத்துக்கு மாறுங்கள். உங்களுக்கு NRC, CAA போன்ற சட்டங்களால் எந்த பாதிப்பும் வராது'
இந்து மத வர்ணாசிரம கொடுமைகளிலிருந்து தப்பிக்கவும் சுய மரியாதையுடன் வாழவுமே எங்களின் முன்னோர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்தனர். உயிர் போகும் நிலை வந்தாலும் எங்களின் உயிரை விடுமேயொழிய பார்பனிய வாழ்வு முறையை எங்கள் வாழ்வு முறையாக மாற்றிக் கொள்ளவே மாட்டோம்.
அமித்ஷா இந்த சட்டங்களை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி கொண்டு வரத் துடிப்பதன் உள் நோக்கம் புரிகிறதா?
----------------------------------------------------
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற பூர்வ சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
குர்ஆன் 40:21


சுட்டுக் கொல்லப்பட்ட 23 இஸ்லாமிய இளைஞர்கள்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 23 இஸ்லாமிய இளைஞர்கள். அவர்கள் செய்த குற்றம் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமித்ஷா கொண்டு வர துடிக்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியதான்.
இறந்த அனைவருமே வறுமையான குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவரும் இன்று மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள். பாசிசத்தினை இந்திய நாட்டை விட்டு ஓட ஓட விரட்டும் நாளை எதிர்பார்த்து மண்ணில் உறங்கிக் கொண்டுள்ளார்கள். இறைவன் துணையால் அந்நாள் வெகு தொலைவில் இல்லை.


82 வயதான போராளி மோடியை நோக்கி வைக்கும் கேள்விகள்!

82 வயதான போராளி மோடியை நோக்கி வைக்கும் கேள்விகள்!
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி ஷஹீன் பாக் மைதானத்தில் 24 மணிநேரமும் அமர்ந்து பெண்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். பெருங்கூட்டமாக அதிகரித்துக்கொண்டுள்ள அப்பெண்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியபின்பு, அவர்களை 'கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள்' என்று நேற்று பாஜக இழிவாக அவதூறு கூறியது. அதைக்கேட்டு வெகுண்டெழுந்த பெண்கள் சரமாரியாக கேள்விகள் கேட்கின்றனர். அதில் ஒரு 82 வயதான போராளி பேசுவதை கேளுங்கள்.
'மோடிஜீ.... நாங்கள் பணத்துக்கு அழைத்து வரப்பட்டதாக உங்கள் ஆட்கள் கூறுகின்றனர். அது போன்ற பணத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம. ஐந்து வேளை இறைவனை நினைத்து தொழுகிறோம்: நோன்பு வைக்கிறோம்: இஸ்லாமிய வாழ்வை கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.
'நாங்கள் இந்த நாட்டில் வாழ்வதும் உணவு உண்பதும் எங்களை படைத்த இறைவனின் கிருபையாலாகும். உங்களை பற்றி நீங்கள் என்ன நினைத்து கொண்டுள்ளீர்கள்? மக்களாகிய நாங்கள்தான் உங்களை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளோம். தேர்ந்தெடுத்த நாங்களே உங்களை பதவியிலிருந்து இறக்க ஒரு நொடி போதும். NRC, CAA போன்ற மக்களை பிரிக்கும் சட்டங்களை இனியும் நீக்கவில்லை என்றால் உங்களை ஆட்சியிலிருந்தே அகற்றுவோம். 500 ரூபாய்க்கு அழைத்து வரப்பட்டதாக கூறியுள்ளீர்கள். நீங்கள் இங்கு வந்து அமருங்கள். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறோம்.'


BJP ஆட்சியைத் திணறடிக்கும் பெண்கள்

BJP ஆட்சியைத் திணறடிக்கும் பெண்கள்
================
ஷகீன் பாக் என்ற இடம் தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஓர் பகுதி. யமுனை நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, 14 டிசம்பர் 2020 அன்று மாலை பத்து/ பதினைந்து பெண்கள் இப்போராட்டத்தைத் துவக்கினர். 11 டிசம்பர் அன்றுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
10 / 15 பெண்கள் பங்கேற்க சிறிய அளவில் துவங்கிய போராட்டம், அதன் பின் சூடுபிடித்தது. மேலும், மேலும் கூடுதல் பெண்கள் போராட்டத்தில் அமர ஆரம்பித்தனர். இரவு பகல் என்று முழு நாளும் போராட்டம் நீடித்தது. இன்றுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக சுதந்திர இந்தியாவில் வெகு நீண்ட காலம் நீடிக்கின்ற ஒரே போராட்டம் இதுதான்.
புர்காவும், தலையை மறைக்கும் துணியையும் அணிந்த முஸ்லீம் பெண்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்கள் ஏறக்குறைய அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லாத "இல்லத்தரசிகள்".
ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டத்தின் எண்ணிக்கை பத்து ஆயிரத்தைத் தாண்டிவிடுகிறது. குதூகலத்துடன் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
பாரோ நிஷா என்ற பெண் தொழிலாளி தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு முழுநேர போராட்டக்காரர் ஆகியிருக்கிறார் என்று CNN செய்தி தெரிவிக்கிறது. "அவர்கள் எங்கள் குழந்தைகளின் குரல்வளையை நசுக்குகிறார்கள். எனவே, தாய்களாகிய நாங்கள் எதிர்த்து நிற்கத் துணிந்தோம் " என்று நிஷா சொல்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த ஜாமியா மில்லா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. 15, டிசம்பர் 2019 அன்று தெற்கு டெல்லியை ஒட்டிய ஒரு முக்கியமான நெடுஞ்சாலையைப் பெண்கள் மறித்தனர். அவர்கள் வன்முறையில் இறங்கவில்லை. ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும் இருந்தனர். 18 ஜனவரி 2020 என்ற இன்றுவரை அவர்கள் மறியலை விட்டுத் தரவில்லை.
இந்த மறியலின் காரணமாக, 20/25 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தைச் சுற்றுப் பாதையில் கடப்பதற்கு 2 அல்லது 3 மணி நேரம் ஆகிறது. ஏறக்குறைய ஒரு லட்சம் வாகனங்களின் இயக்கம் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மட்டுமல்ல, மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், மாணவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையும் இந்தப் பெண்கள் எதிர்க்கின்றனர்.
கடந்த சில நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் வந்து கலந்துகொண்டிருக்கின்றனர். போராட்டப் பந்தல் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் போராட்டத்திற்குத் தலைவர்கள் கிடையாது. தலைவர்கள் இல்லாத போராட்டத்தை ஒடுக்குவது போலீசுக்கு சிரமமானதாக இருக்கிறது. சாலையை மறிக்கும் பெண்களை வன்முறையைப் பயன்படுத்தி விரட்டுவதற்குக் காவல்துறை தயங்குகிறது.
ஜனவரி 17, 2020 அன்று டெல்லியின் துணை ஆளுநர் அனில் பைஜல் காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுத்து உத்தரவிட்டிருக்கிறார். 19 ஜனவரி 2020 துவங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த ஒருவரையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய டெல்லி போலீசுக்கு அவர் அதிகாரம் அளித்துள்ளார்.
ஆனால், பெண்கள் அசைவதாக இல்லை. லட்சக்கணக்கான மக்களின் நடமாட்டம் பாதிக்கப்படுகிறது என்று காரணம் சொல்லி கலைப்பதற்கு போலீஸ் அதிகாரிகள் முயல, போக்குவரத்தைச் சீரமைக்க நாங்கள் உதவுகிறோம், ஆனால், போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பெண்கள் மறுத்துவிட்டனர்.
பெரிய பத்திரிகைகள், ஊடகங்கள் கண்டுகொள்ளாத, இப்போராட்ட பந்தல் ஒரு நூலகமாகவும், பள்ளியாகவும் இயங்குகிறது. சிறார்கள் இங்கே படிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ பற்றி விவாதிக்கிறார்கள். இந்தியக் கொடியை வரைகிறார்கள். யோசித்துத்தான் இந்தப் போராட்டத்திற்கு வந்திருக்கிறேன் என்று பேசுகிறார்கள். ஒரு புதிய போராட்ட கலாச்சாரத்தை ஷகீன் பாக் முன்னிறுத்துகிறது.
திணறிக் கொண்டிருக்கும் மோடி- ஷா அரசு என்ன செய்யும்? போராட்டத்தை ஒடுக்க வன்முறையில் இறங்குமா? அப்படியானால், அது ஜாலியன்வாலாபாக் போன்ற ஒன்றாக மாற வாய்ப்பிருக்கிறது.
சர்வாதிகாரிகளின் ராட்சத பலத்தைப் பெண்கள் தங்கள் உறுதியினால் தடுமாற வைக்கிறார்கள்.
எப்படி ஆனாலும், எது நடந்தாலும், புதுவிதமான சத்தியாகிரக மக்கள் போராட்டத்தின் முன் மாதிரியாக, புதிய பாதையாக ஷகீன் பாக் நீடிக்கும்.
Mathi Vanan


சேட்டன்களுக்கு ஒரு சபாஷ்

சேட்டன்களுக்கு ஒரு சபாஷ்
பள்ளிவாசலில் இந்து திருமணம்
இந்து முறைபடி திருமணம் நடத்தி வைத்த பள்ளி ஜமாத்தார்கள்.
மனிதநேயத்திற்க்கும் மத நல்லிணக்கத்திற்க்கும் எடுத்துகாட்டாய் விளங்கிய அபூர்வ திருமணம்
கேரள காயங்குளம் சேராவள்ளி கிராமத்தை சேர்ந்த அசோகன் பிந்து தம்பதிகளின் மகள் அஞ்சு. அஞ்சுவிற்கு சரத் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அசோகன் காலமாகி குடும்பம் கஷ்டத்தில் இருந்ததால்,
தன்னுடைய மகளின் திருமணத்திற்கு உதவி செய்யுமாறு அண்டை வீட்டுக்காரரான நஜுமுதின் உதவியை நாடினார் பிந்து.
சேராவள்ளி ஜமாத் நிர்வாகியான நஜுமுத்தீன், ஜமாத் சார்பாகவே இந்த திருமணத்தை நடத்தி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
மணமகளுக்கு 10 பவுன் நகையும் 2 லட்சம் ரூபாயும் கொடுத்ததோடு, திருமண செலவையும் ஏற்றெடுத்து, சேரப்பள்ளி ஜும்மா மசூதி மண்டபத்திலேயே இந்து முறைப்படி திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. ஜமாத்தார்களே வந்திருந்த அனைத்து மக்களுக்கும் விருந்து அளித்து உபசரித்ததை கண்டு அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.
இத்திருமண நிகழ்வை அறிந்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட பல தலைவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அன்போடு பழகி சுக துக்கங்களில் பங்கு கொண்டு வாழும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து நாட்டை பிளவுபடுத்த பாசிசவாதிகள் முயலுகின்றனர். இந்நேரத்தில் இந்நிகழ்வு இந்துத்வாவாதிகளுக்கு சிறந்த பதிலை கொடுத்துக் கொண்டுள்ளது.


Saturday, January 18, 2020

பசுவை தீயில் இறக்கி நேர்ச்சை!

பசுவை தீயில் இறக்கி நேர்ச்சை!
கர்நாடக மாநிலம் மைசூர், மாண்ட்யா போன்ற பகுதிகளில் ஜனவரி 15 அன்று பசுக்களை, காளைகளை அதன் உரிமையாளர் மாலை போட்டு அலங்கரித்து கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் இறக்கி விடுகின்றனர். இந்த விநோத பழக்கத்திற்கு 'கிச்சு ஹயிசுவுடு' என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். இவ்வாறு நெருப்பில் இறக்கி விடுவதால் உரிமையாளர்களின் தரித்திரங்கள் விலகி நல் வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பால் உற்பத்தி குறைந்த மாடுகளை ஏழைகள் புரத உணவுக்காக அறுத்தால் கும்பலாக இந்துத்வா வெறியர்கள் தாக்கி கொலையும் செய்கிறார்கள்.
ஆனால் உயிரோடு திடகாத்திரமாக உள்ள பசுக்களை இவ்வாறு நெருப்பில் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கலாமா? இது கொடுமை அல்லவா? பீட்டா போன்ற அமைப்புகள் ஏன் இதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை? என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்பீர்கள்.
எதற்கும் உங்களுக்கு பதில் கிடைக்காது.
தகவல் உதவி
இந்தியா டைம்ஸ்
17-01-2020




Friday, January 17, 2020

சாமியாரிடம் விபசாரத்திற்கு ஒத்துழைக்காத மனைவியை கொன்றவன்!

சாமியாரிடம் விபசாரத்திற்கு ஒத்துழைக்காத மனைவியை கொன்றவன்!
உத்தர பிரதேசம் ஆக்ராவில் வசித்து வந்துள்ளனர் மான்பால் மற்றும் அவரது மனைவி ரஜினி. திருமணமாகி 9 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் மன்பால் தொழிலில் நஷ்டமடைந்துள்ளார். அந்த நேரத்தில் சந்தான் ஜார்கண்டி என்ற சாமியாரின் நட்பு கிடைத்துள்ளது. தொழிலில் முன்னுக்கு வர மன்பால் அவரது மனைவியை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார் சாமியார். இந்த கிறுக்கனும் அதற்கு ஒத்துக் கொண்டு தனது மனைவி ரஜினியிடம் 'நமது தொழில் முன்னுக்கு வர நீ சாமியாரோடு படுக்கையை பகிர்ந்து கொள்' என்று சொல்லியுள்ளான். ஆனால் அதற்கு அந்த பெண் ஒத்துழைக்கவில்லை. இதனால் கோபமுற்ற கணவன் மனைவியை கொன்றுள்ளான். காவல் துறை சாமியாரையும், மன்பாலையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்களின் நிலைமை இந்த லட்சணத்தில் உள்ளது. இதில் இந்துத்வாவை நாடு முழுக்க பரவலாக்க அமீத்ஷா முயற்சி எடுத்து வருகிறார். நாடு முழுக்க இந்துத்வா சட்டங்களை நடைமுறைபடுத்தினால் இந்து பெண்கள் அதிகம் பாதிப்படைவர். இந்து மதம் வேறு இந்துத்வா கொள்கை வேறு என்பதை நாம் பிரித்துப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
15-06-2019


Thursday, January 16, 2020

'எலும்புகளை டிஎன்ஏ டெஸ்ட் செய்து உறுதிபடுத்திக் கொள்'

'எலும்புகளை டிஎன்ஏ டெஸ்ட் செய்து உறுதிபடுத்திக் கொள்'
'இதோ... இது எனது தாத்தாவின் அடக்கஸ்தளம். பக்கத்தில் இருப்பது எனது சிறிய தந்தையின் அடக்கஸ்தளம். அதற்கு அடுத்து உள்ளது எனது தந்தையின் அடக்கஸ்தளம். அனைத்து சமாதிகளையும் தோண்டினால் எலும்புகள் கிடைக்கும். அந்த எலும்புகளை சேகரித்து டிஎன்ஏ டெஸ்ட் செய்து நான் இவருடைய பிள்ளை தான் என்பதை உனது ரிஜிஸ்டரில் பதிவு செய்து கொள். அந்த காலத்திய எனது தாதாவின் பிறப்பு சான்றிதழை எடுக்கும் ஒரே முயற்சி இதுதான். இதைத் தவிர அவர்களைப் பற்றிய மேலதிக விபரங்கள் எங்களிடம் இல்லை'
அடடே.... இந்த பதிலும் கூட ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளதே... 
மூன்று தலைமுறை பிறப்பு சான்றிதழை முட்டாள் அதிகாரிகள் கேட்டால் அதற்கு இந்த வகையில் பதில் சொல்லி திருப்பி அனுப்புவோம்.


ஐயப்ப பக்தர்கள் இந்த பள்ளிவாசலில் இரவு தங்கிவிட்டு ....

கன்னியாகுமரி மாவட்டம், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய இரவிபுதூர் கடை பள்ளிவாசல்.
கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் இந்த பள்ளிவாசலில் இரவு தங்கிவிட்டு உணவருந்தி விட்டு பிறகு சென்றனர்.
இதை குறிப்பிட காரணம் இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவெங்கும் சகோதர வாஞ்சையுடனேயே பழகி வருகின்றனர்.
இந்துத்வா இந்த சகோதரர்களுக்கிடையே பகைமையை உருவாக்கி வர்ணாசிரமத்தை இந்த நாட்டில் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை இங்கு குறிப்பிடுகிறோம்.