Followers

Sunday, April 24, 2022

#மருத்துவர்_அனுரத்னா_அவர்களின்_பதிவு!


 


#மருத்துவர்_அனுரத்னா_அவர்களின்_பதிவு!



ஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம் ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அனைத்தும் இரத்தத்தில் தோய்ந்த நிலையில் வந்தார்.

 

அவரை பரிசோதித்துவிட்டு அவரை வார்டுக்குள் நான் அனுப்ப வேண்டும்.உடனிருப்பவரை வரச்சொல்,''உடையை மாற்றுப்பா'' என சொல்லிகொண்டே கருவுற்று இருக்கும் அடுத்த பெண்ணை பரிசோதிக்க தொடங்கிவிட்டேன். நீண்ட நேரமாகியும் கர்ப்பம் கலைந்த பெண் துணி மாத்தாமல் இருக்க,நான் கோபத்தில் ''என்னம்மா செய்ற,சீக்கிரம் மாத்தும்மா துணியை'' என கத்தினேன். 'மேடம் நான் காதல் திருமணம் புரிந்துகொண்டவள்,நானும் கணவரும் மட்டும் தான்,அவரோ வேலைக்கு போய்விட்டார்,நான் fancy பொருள் கடையில் வேலை பார்க்கிறேன்,வேலை பார்த்த இடத்தில் இருந்து கரு கலைந்த உடன் அப்படியே இங்க வந்துட்டேன்'' என அழுதார்.

 

அவரை தேற்றுவதா,அவர்கு எந்த உடையை கொடுப்பது,விடுதியில் மாணவிகளிடம் கேட்டு உடை வாங்குவோமா என சிந்தித்து கொண்டிருக்கும் போதே அடுத்த cases உடைய உறவினர்கள் என்னிடம் சண்டைக்கு வந்துட்டாங்க.அந்த ஒரு case மட்டுமே பார்க்குறிங்க,என் மகளை பார்,என் மருமகளை பார்,எங்க பிள்ளைங்க பிரசவ வலியில் இருப்பது தெரியலயா என சிலர் கத்தினார்கள்.இவர்கள் கத்திக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் முஸ்லிம் மதத்தை சார்ந்த பெண் ஒருவர் அமைதியாக அந்த கருகலைந்த பெண்ணிற்கு உடை மாற்றிக்கொண்டு இருந்தார்.அவராக முன்வந்து இது மனதார செய்தார்.

 

இந்து மதத்தை சார்ந்தோர் 30பேர் இருந்த இடத்தில் சக இந்து பெண்ணிற்கு உடை மாற்ற யாரும் முன்வரவில்லை.அங்கிருந்து ஒரே முஸ்லிம் பெண் தன் மகளின் பிரசவத்திற்காக வந்தவர் யாரும் கேட்காமல் தானாக உதவ முன்வந்தார்.காரணம் அவர் மற்ற உயிர்களை உயிர்களாக மட்டுமே பார்த்திருக்கார்.அவரை மனமுவந்து பாராட்டினேன்.அவர் மகளை மிகச்சிறப்பான முறையில் பிரசவம் பார்த்து அனுப்பி வைத்தேன்.


முஸ்லிம் மக்களோடு பழகிப்பார்த்தவர்களுக்கு தான் அவர்களின் ஈகை குணம் தெரியும்.பழகிப்பாருங்கள்.அவர்களின் வீடுகளுக்கு போய் பாருங்கள்.அந்த பெண்கள் எவ்வளவு கனிவாக உபசரிக்கின்றனர் என தெரியும்.
இந்திய சுதந்திர போராட்டம் முதல் இன்றைய தூத்துக்குடி பிரச்சனை வரை நம்மோடு துணை நிற்பவர்கள் முஸ்லிம் சகோதரர்கள்.

 

அவர்களை வாழ்த்துவோம்!அவர்கள் இந்தியர்கள்.


நாம் அனைவரும் இனத்தால் ஒன்றே.


நாம் அனைவரும் இணைந்தால் நன்றே!

இனிய ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.

மருத்துவர்.அனுரத்னா
15/6/18
நன்றி: Anu Ratana 

Thursday, April 21, 2022

காவல்துறையில் பணியாற்றிவர் சிலையன்.


 


20.4.1995

கூரியூர் ஷஹித் முகமது அலி ஜின்னா அவர்கள் RSS பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தினம் இன்று...



தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் பிறந்துகாவல்துறையில் பணியாற்றிவர் சிலையன்.


சாதியின் பெயரால் தாமும் தமது சமூகமும் அடைந்த துன்பங்களுக்கு எதிராக வெகுண்டெழுந்து இராமநாதபுரத்தில் சாதி ஒழிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். தம்முடைய காவலர் பணியையும் துறந்துவிட்டு பொதுவாழ்வில் இறங்கினார் கம்யூனிஸம் உட்பட உலகில் எந்த ஒரு தத்துவமும் சாதி ஒழிப்புக்கு உதவவில்லை என்பதை உணர்ந்த சிலையன் இஸ்லாமை கண்டுணர்ந்தார் உச்சிமுகர்ந்தார்..இஸ்லாத்தை ஏற்று ஜின்னாவாக மாறினார்.. அதன் பிறகு அவர் வசிக்கும் கூரியூர் எனும் கிராமம் மொத்தமுமே இஸ்லாத்தை எற்றுக் கொண்து.



இராமநாதபுரம், சிவகங்கை,மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்கள் அணி அணியாக ஜின்னாவை பின்பற்றி இஸ்லாத்தை ஏற்க தொடங்கினர்..



கூரியூர் ஜின்னா சாஹிபு முயற்சியால் சுமார் 40 ஆயிரம் நபர்கள் இறை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.



ஆண்டாண்டுகாலமாக தங்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த தலித் மக்கள் இந்தியாவின் தென்கோடி மூலையில் சாரைசாரையாக இஸ்லாத்தை நோக்கி செல்வதை கண்ட பார்ப்பன RSS கும்பல் ஓடோடி வந்து '' ''எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் ,ஆனால் இஸ்லாத்துக்கு போகாதீர்கள் '' என கெஞ்சினார்கள் . ஆரிய சமாஜம், சுத்தி மார்க்கம் மூலமாக ''தாய் மதம் திரும்புங்கள் ''என வீடுவீடாக சென்று அழைத்தார்கள் .ஒருவர் கூட கதவை திறக்கவில்லை .



அப்போது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளோடு நெருக்கமாக இருந்த எம்ஜியார் அரசு அதிகாரிகளை அனுப்பி '' உங்களுக்கு இலவச கறவை மாடுகள் அரசு நிலம் வீடுகள் தருகிறோம் ''என ஆசைகாட்டிப்பார்த்தார்கள். இவர்கள் மனம் மாறவில்லை கடைசியில் மிரட்டிப்பார்த்தார்கள் .'' உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் ''என்று ஜின்னா சாஹிப் கூறிவிட்டார் .



ஜின்னா சாஹிப் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஜமாத்தே இஸ்லாமி வேலூர் தாவா சென்டர் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் அரசு அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால் அவர்களும் தங்கள் பணியை நிறுத்தி வைத்தனர் துவண்டுவிடவில்லை ஜின்னா சாஹிப் .தன் சமுதாயத்திற்கு நல்வழிகாட்ட* கூரியூரில் ஒரு பள்ளிவாசல் கட்டி அங்கு அந்த மக்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை அறிமுகம் செய்தார் .



தன் சிறுவயதில் ராமநாதபுரம் அக்ரஹாரத்தின் வழியே நடந்து சென்ற ஒரே காரணத்துக்காக ஓடஓட விரட்டி அடிக்கப்பட்ட சிலையனுக்கு ஆழமான காயம் மனதில் ஏற்பட்டது பின்னாளில் ஜின்னா சாஹிப்பாக மாறியவுடன் எந்த அக்கிரகாரம் ஓடஓட விரட்டியதோ அதே அக்கிரஹாரத்தின் மையப்பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடியேறினார் .



தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகளை தனது சமுதாயம் தொடர்ந்து அனுபவிக்க கூடாது என்ற உந்துதலில் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்தார் . ஜின்னா சாஹிப்பின் முனைப்பான பிரசாரத்தால் நாளுக்குநாள் கிராமம் கிராமமாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தனர் . இதனால் எம்.ஜி.ஆர் அரசு அவரை மீண்டும் மிசா சட்டத்தின் கீழும் பல்வேறு பொய் வழக்குகளின் கீழும் சிறையில் அடைத்தனர். சுமார் 35 வழக்குகள் அவர் மீது போடப்பட்டும் அவரின் வேகம் அதிகரித்தால் அரசு அதிகாரி தங்கள் முயற்சியை கைவிட்டனர் .



ஜின்னா சாஹிப்பின் இஸ்லாமிய அழைப்பு பணியை எம்ஜியார் அரசு மூலம் சட்டரீதியாக தடுக்கமுயன்ற RSS கும்பல் தோல்வியை சந்தித்ததால் வேறொரு வழியை கையாண்டது. சாதிரீதியான தங்களின் ஆதிக்கத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் சவப்பெட்டி தயாராவதை கண்ட RSS கும்பல் மார்ச் 18.1995 இல் ராமேஸ்வரத்தில் '' மதமாற்றம் எதிர்ப்பு மாநாடு '' என ஒன்று கூடினர் .அங்கு பேசிய அனைவருமே மதமாற்றங்களுக்கு முக்கிய காரணமே '' கூரியூர் முஹம்மது அலி ஜின்னா '' தான் என குறிப்பிட்டனர் .மாநாடு முடிந்ததும் மதமாற்றங்களுக்கு காரணமாக இருக்கும் தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் செயல் வீரர்களை அடிப்படையாக வைத்து கொலைப்பட்டியல் தயார் செய்தனர் அதில் முதல் பெயர் '' கூரியூர் ஜின்னா.



''20.4.95 வியாழன் அன்று ராமநாதபுரத்தில் இரவு தொழுகை முடித்துவிட்டு TVS சேம்ப் வண்டியில் கூரியூரிலுள்ள வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார் .இரவு 8.30 மணிக்கு கூரியூர் மசூதிக்கும் அவர் வீட்டுக்கும் இடையில் அடைக்கலம் காத்தான் என்ற பகுதியில் உள்ள கோவிலை நெருங்கியதும் ''அத்தா ! கொஞ்சம் நில்லுங்க .'' என்று பழக்கப்பட்ட குரல் கேட்டதும் கொஞ்சம் வண்டியை நிறுத்திய ஜின்னா சாஹிப்பை மூன்று பேர் சரமாரி வெட்டிவிட்டு ''ஓம் காளி ! ஜெய் காளி ! என ஊளையிட்டுக்கொண்டே ஓடினார்கள். வெட்டுக்காயங்களுடன் தட்டுதடுமாறி தன் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்திவிட்டு ''அல்லாஹு அக்பர் ! '' என சாய்ந்தார் பயோனியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நள்ளிரவு 12.30 மணிக்கு மலர்ந்த முகத்துடன் இறைவனடி சேர்ந்தார் .



இவர் உடலடக்கதிற்கு சாதிமத பேதமின்றி மக்கள் திரண்டதால் ராமநாதபுரத்தில் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது . தங்கள் அன்பிற்கினிய சகோதரன் RSS பார்ப்பன கும்பலால் கொலை செய்யப்பட்டத்தை கண்டு தாழ்த்தப்பட்ட மக்களும் வெகுண்டெழுந்துள்ளதால் பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக மதுரை இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்து கொலையாளிகள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கம் போலவே இந்த கொலையிலும் நீதிமன்றத்தால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை .



ஜின்னா சாஹிப்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி கொலையாளிகளை ஏவிவிட்ட முக்கிய RSS பிரமுகர்கள் கைது செய்யப்படவே இல்லை. இக்கொலையில் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராமநாதபுரம் RSS தலைவர் வழக்கறிஞர் குப்புராம் என்பவர் அவர் வீட்டில் வைத்து வெட்டப்பட்டார் .


இந்த வழக்கில் இஸ்லாத்தை தழுவிய சகோதரன் அப்துல்லாஹ் மற்றும் ஏர்வாடி காசிம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சுமார் ஏழாண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டனர்


ஜின்னா சாஹிப்பை வெட்டி வீழ்த்திய பார்ப்பன RSS கும்பலால் அவர் விதைத்து விட்டு போன செய்தியை வீழ்த்த முடியவில்லை .அவர் சிலையனாக இருந்த போது எந்த அக்கிரகாரத்தில்நடந்து சென்றதுக்காக ஓடஓட விரட்டி அடிக்கப்பட்டாரோ அதே அக்கிரகாரத்தில் அவர் ''முஹம்மது அலி ஜின்னா ''வாக மாறிய பின்பு அங்கு ஒரு வீடு வாங்கி குடியேறினார் .அவர் வழியில் அவர் மக்கள் அந்த அக்கிரகாரத்தில் ஒரு மசூதியே கட்டி இஸ்லாமிய அழைப்பு பணி செய்து வருகிறார்கள்.


Anwar Hussain