Followers

Monday, September 26, 2022

கத்தார்... சென்ற வெள்ளிக்கிழமை

 கத்தார்...

சென்ற வெள்ளிக்கிழமை பள்ளியில் தொழ வைக்க இமாம் வருவதற்கு தாமதமானது. பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒரு ஆப்ரிக்கர் தான் இமாமாக நிற்பதாக சொன்னவுடன் மக்களும் அனுமதித்தனர். உடனே அவர் அழகிய சொற்பொழிவை நிகழ்த்தினார். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தொழுகையை சிறப்பாக முடித்தது பலராலும் பாராட்டப்பட்டது.
எந்த மதரஸாவிலும் சென்று பட்டம் பெறவில்லை: மார்க்க அறிஞருக்கான எந்த தோற்றமும் இல்லை. இறைவன் உள்ளங்களையே பார்க்கிறான்.
இது நமது நாட்டில் சாத்தியப்படுமா? முறையாக ஓதுவார்கள் பட்டம் பெற்றவர்கள் கோவிலில் அர்ச்சகராக முடிகிறதா?
-------------------------------
“நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-5012



Friday, September 16, 2022

சகோ பட்டுக்கோட்டை யஹ்யா முகநூல் பக்கத்திலிருந்து

 //சகோ #பட்டுக்கோட்டை_யஹ்யா முகநூல் பக்கத்திலிருந்து//

ஆச்சரியம்
நாங்கள் இருவரும் முன்பிருந்த மார்க்கத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.
ஒரே மார்க்கத்தை சித்தாந்தத்தை பின்பற்றியவர்களாக இருப்பினும் உறவு ரீதியாக எங்களுக்குள் எவ்வித பந்தமும் கிடையாது.
ஆனால்...?
நாங்கள் இப்போது உறவினர்கள் என்பதுதான் ஆச்சரிய அதிசயம்.
காரணம்..?
இறைவனின் பேரருளால் 37 வருடங்களுக்கு முன்பு ராமானுஜம்,இவர் தற்போது ரஹ்மத்துல்லாஹ்வாகவும்,10 வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து எனும் நான் தற்போது முஹம்மது யஹ்யாவாகவும் ஓரிறைக் கொள்கையை ஏற்று இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம்கள் நாங்கள்.
பிறப்பின் அடிப்படையில் எங்கள் இருவருக்கும் இருக்கக்கூடிய சொந்த பந்தங்களை விட அதன் பாச நேசத்தை விட... கொள்கைக்காக எங்களுக்குள் ஏற்பட்ட அன்பும் பாசமும் அளப்பரியது.
நாங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவருக்கொருவர் நேசிக்கின்றோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டமைத்த இறை மார்க்க அடிப்படையிலான சகோதரத்துவம் இது.
எங்கள் இருவருக்காகவும் எங்களின் குடும்பத்தினருக்காகவும் துஆ செய்யுங்கள்.
பட்டுக்கோட்டை யஹ்யா



Tuesday, September 13, 2022

மனு ஸ்ம்ரிதி என்பதே நூலே அல்ல. ஸ்ம்ரிதி என்றால் உபதேசம். நீங்கள் குறிப்பிடும் நூல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயனால் திரித்து எழுதப்பட்டது. அதை படித்து ஹிந்துக்கள் மத்தியில் குழப்பத்தையும் வெறுப்பையும் வளர்த்த வெள்ளையர்களின் அடிமையான திராவிட இயக்கம் ஹிந்து விரோத கூட்டமே.

-----------------------------------------


 அது சரி நாராயணா... கீழே தரப்பட்டுள்ள ஆதாரங்கள் யார் எழுதியது? கிருத்தவ மிஷினரியா? பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா நாராணயா?


பிரம்ம சூத்திரம்
சூத்திரற்கு சமீபத்தில் அத்தியயனம் (வேதம் ஓதல்) செய்ய ஒண்ணாது. "வேதத்தை கேட்குங்கால் உருக்கிய ஈயத்தினாலும் மெழுகினாலும் நிறைக்க. வேதங்களை உச்சரிக்குங்கால் நாவை இரண்டாக சேதித்தல் (வெட்ட) வேண்டும். மனசிற்றரித்து (மனப்பாடம் செய்து) வைத்திருந்தால்.. ...சரீரம் பேதிக்கப்படல் (துண்டாக்க) வேண்டும்" என்னும் ஸ்ம்ரிதியானது வேதத்தை சிரவணம் செய்யும் (கேட்கும்) சூத்திரற்கு தண்டம் விதிக்கின்றது.

ஸ்ருதி, ஸ்ம்ரிதிகளினால் சூத்திரர் சமீபத்தில் அத்தியயனம் முதலியன செய்வது நிஷேதிக்க படுகின்றமையின் (தடை செய்யப்பட்டதால்) அவர்க்கு..வேதார்த்த விசாரம் எங்கிருந்தாகும்? (சூத்திரர் வேதம் கேட்பதே தடை செய்யப்பட்டிருக்கும் போது, அவர்கள் எப்படி வேதம் படிக்க முடியும்?). ஆகலின், எப்பிராகாரத்தினாலும் பிராமணனுக்கு எட்டாம் வயசில் செய்யப்படும் உபநயன சம்ஸ்காரமின்றி வேதாத்தியயனம் எவ்விடத்தும் எவனுக்கும் எய்யாதென்பது.. ..சித்தமாயிற்று (பிராமணர்களுக்கு எட்டாம் வயதில் செய்யப்படும் உபநயனம் அதாவது பூணூல் சடங்கு சூத்திரற்கு கிடையாது என்பதால் அவர்களுக்கு வேதம் ஓத அதிகாரம் இல்லை).

ஆகலின் சூத்திரர் பிரம்ம வித்தைக்கு அருகர் அல்லர் (அருகதை இல்லாதவர்) காஞ்சி சங்கர மட வலைத்தளத்தில் இருக்கும் பிரம்ம சூத்திர நூல் இன்னும் ஒரு படி மேலே சென்று "சூத்திரர்கள் நடமாடும் சுடுகாடு" என்றும் அவர்கள் காதுபட வேத ஓத கூடாது என்றும் கூறுகிறது.




Sunday, September 11, 2022

'எழுதுகிறேன் ஒரு கடிதம்’ போட்டி -சீஸன் 6

 

ரியாத் தமிழ்ச் சங்க நண்பர்கள் நடத்திய கடிதப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் எனது கடிதமும் தேர்வு செய்யப்பட்டு பரிசும் அறிவித்துள்ளார்கள்.... தேர்வு செய்த குழுவுக்கு நன்றி.... இனி பரிசுக்காக எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு....

 

'எழுதுகிறேன் ஒரு கடிதம்’ போட்டி

-சீஸன் 6

 

அன்புள்ள மகனுக்கு உனது அம்மா எழுதிக் கொள்வது

...

நீயும் உனது மனைவியும் எனது பேரக் குழந்தைகளும் நலமா?

 

உன்னை நேரில் சந்தித்து கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாகிறது! அப்படி என்ன தவறு செய்து விட்டேன்? நமது குடும்ப கவுரத்தை காப்பாற்றத்தானே நான் முயற்சித்தேன். உனது மனைவி ஆடம்பர செலவுகள் செய்வதையும், 'க்ளப் போகிறேன்' என்று மணிக்கணக்கில் வெளியில் சுற்றுவதையும் கண்ட பெண்களோடு பார்ட்டி என்ற பெயரில் பொருளை விரையமாக்குவதையும் தானே நான் கண்டித்தேன். நான் நடந்து கொண்ட விதம் உனக்கோ உன் மனைவிக்கோ பிடிக்கவில்லை என்றால் அதனை பக்குவமாக என்னிடம் சொல்லியிருக்கலாமே... உறவினர் வீட்டுக்கு போகிறோம் என்று சொல்லி என்னை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டாயே மகனே! உன் தந்தை இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்குமா?

 

ஒன்பது மாதம் நீ என் வயிற்றில் இருந்தபோது நான் பட்ட துன்பங்களை எண்ணிப் பார்த்தாயா? சரியாக சாப்பிடாமல், சரியாக உறங்க முடியாமல், நடக்கவும் சிரமப்பட்டு உன்னை பெற்றெடுத்தேனே... அதன் பிறகு இரண்டு வருடங்கள் உன்னை என் கண் போல் காத்து வளர்த்தேனே மகனே!?

சிறு வயதில் நீ டைபாய்டு காய்ச்சலில் கிடந்தபோது ஒரு வாரம் இரவு கண்முழித்து உன்னை என் கண் போல் காத்தேனே?

 

சைக்கிளிலிருந்து ஸ்கூட்டர் வரை நீ கேட்ட போது அப்பாவிடம் சண்டையிட்டு உனக்கு வாங்கிக் கொடுத்தேனே?

 

அவ்வளவு பணக் கஷ்டத்திலும் நீ விரும்பிய கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக அப்பாவிடம் போராடி எனது நகைகளை விற்று உன்னை சேர்த்து விட்டேனே

 

'இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன்' என்று நீஅடம் பிடித்தாய். உன் தந்தையோ 'நம் குடும்பத்துக்கு இவள் சரி வர மாட்டாள்' என்று தடுத்தபோது 'மகனின் ஆசையை நிறைவேற்றுங்கள்' என்று அவரிடம் சண்டையிட்டு உனது விருப்பப்படியே திருமணத்தை முடித்தேனே!

புதிதாக உனது அப்பா வாங்கிய இரண்டு ஃப்ளாட்டுகளை என் பெயரில் பதிவு பண்ண முயன்றபோது 'பையன் வளர்ந்து விட்டான்: அவனது பெயரிலேயே பதிவு பண்ணி விடுங்கள்' என்று கூறி உனது பெயரில் பதிவு செய்ய வைத்தேனே!

 

இவை எல்லாம் நீ என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவதற்காகவா மகனே!

 

பரவாயில்லை... இங்கு என்னைப் போல் நூற்றுக்கணக்கான வயதான பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இனி என் உலகம். அவரவர் குடும்ப பிரச்னைகளை சொல்லி நேரத்தை போக்குவோம். ஒரு சில சகோதரிகள் 'என் மகனா இப்படி?' என்று குமுறி அழுகின்றனர். அவர்களை நான்தான் தேற்றுகிறேன். ஓராயிரம் சோகங்களை எனக்குள் சுமந்தவளாக

பலரும் என்னிடம் சொல்கிறார்கள்... 'இன்று உனது மகன் உன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளான். நாளை அவன் மகனும் தந்தையை இதே போன்று முதியோர் இல்லத்தில் சேர்ப்பான்' என்று. ஆனால் நான் இறைவனிடம் வேண்டுவது எனக்கு ஏற்பட்ட இந்த நிலை என் மகனுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதுதான். நான் முதியோர் இல்லத்தில் இருப்பதால் உனக்கும் உனது மனைவிக்கும் சந்தோஷம் கிடைக்கிறது என்றால் இறப்பு வரை நான் இங்கேயே இருந்து விடுகிறேன் மகனே! ஆனால் மாதம் ஒரு முறையாவது பேரக் குழந்தைகளோடு வந்து என்னை பார்க்க வருவாயா?

என்றும் உனது அன்புக்காக ஏங்கும்

 

உனது தாய்....

 

 

 

Thursday, September 08, 2022

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

 முகமன் கூறுதல்


                          (4)


ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?


முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.


முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.


இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.


திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78


இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.


உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.


(திருக்குர்ஆன்:60:4)


உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான் என்று (இப்ராஹீம்) கூறினார்.


(திருக்குர்ஆன்:19:47)


அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில் உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.


முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.


அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் . இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.


உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.


முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.


ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறியலாம்.


மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும் அடங்குவார்கள்.


அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ஸலாம் எனக் கூறுவார்கள்.


(திருக்குர்ஆன்:25:63)


வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம் எனவும் கூறுகின்றனர்.


(திருக்குர்ஆன்:28:55)


என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர் என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.


(திருக்குர்ஆன்:43:88,89.)


மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.


வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நூல் : புகாரி 6258


வேதமுடையோர் ஸலாம் கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.


வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.


யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927


யஹூதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.

சங்கிகள் திருந்துவது எப்போது?

 பெங்களூரு

பல்கலைக் கழக வளாகத்துக்குள் சங்கி அரசானது கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டது. அங்கு வந்த மாணவர்கள் 'ஒழுங்கான நூலகம் எங்களுக்கு இல்லை. அதனை முதலில் கட்டிக் கொடுங்கள். எங்களுக்கு கோவில் வேண்டாம்' என்று தடுத்து நிறுத்தியதை பார்க்கிறோம்.
ஹிஜாப் அணிந்து வந்தால் அது மத அடையாளம்: ஒரு ஓதுக்குப் புறத்தில் தொழுகை நடத்தினால் அது மத அடையாளம். ஆனால் பல்கலைக் கழக நடுவே கோவிலை நிர்மாணித்தால் அது மத அடையாளமாகாதா?
சங்கிகள் திருந்துவது எப்போது?



'கிரிக்கெட்டில் உங்களுக்கு பிடித்த ஆட்டக்காரர் யார்?'


 


'கிரிக்கெட்டில் உங்களுக்கு பிடித்த ஆட்டக்காரர் யார்?'

 

'விராட் கோலி... எங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்'

 

ஒரு பாகிஸ்தானிய சிறுவன் அவன் நாட்டு வீரர்களை சொல்லாமல் நமது நாட்டு வீரரை தனது நெஞ்சில் கை வைத்து தனது அன்பை வெளிப்படுத்துகிறான். அந்த நாட்டில் யாரும் இவனை தேச துரோகி என்று சாடவில்லை. விளையாட்டுக்கு நாடோ, மொழியோ, மதமோ கிடையாது.

 

ஆனால் இதே போல் ஒரு இந்திய சிறுவன் பாகிஸ்தானிய வீரர்களை புகழ்ந்து விட்டால் என்ன நிலைமை? சங்கிகள் அவனுக்கு கொடுக்கும் பட்டம் என்ன? நாம் அறிந்தது தானே!

 

நமது முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கே இந்த சிறுவனை பாராட்டி ட்விட் செய்துள்ளார். இதே இந்தியாவில் நடந்தால் நிலைமை என்னவென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Wednesday, September 07, 2022

உத்தர பிரதேசம் - பனாரஸ்

 உத்தர பிரதேசம் - பனாரஸ்


நரேந்திர மோடியின் தொகுதி. இங்குள்ள வீரா பட்டி என்ற கிராமத்தில் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போயின. பலருக்கும் அதிர்ச்சி.  முடிவில் குழந்தைகள் கடத்துவது அங்கு சுற்றித் திரியும் சாமியார்கள் என்ற உண்மை தெரிய வந்தது. கையும் களவுமாக மக்கள் சாதுக்களை பிடித்துள்ளனர். குழந்தைகளை கமத்தி அவர்களின் கிட்னியை எடுத்து விட்டு குழந்தைகளை கொன்று விடுவது இவர்களின் வழக்கம். பல லட்ச ரூபாய்க்கு அதனை விற்று விடுகின்றனர். இவ்வாறாக இது வரை 28 சாதுக்ளை காவல் துறை கைது செய்துள்ளது. 


மோடி தொகுதி என்பதால் மீடியாக்கள் கள்ள மவுனம். குழந்தைகளை மிக கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் குழந்தைகள் திருட்டு நிறைய நடக்கிறது.