Followers

Saturday, February 10, 2007

பிச்சை எடுத்து சாப்பிடலாமா? ஓர்அலசல்.

இன்று உலகில் வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. சிலர் உடல் உழைப்பில் சம்பாத்தியத்தை தேடுவார்கள். ஒரு சிலர் வட்டி பணத்தின் மூலம் ஏழைகளை சுரண்டி வயிறு வளர்ப்பார்கள். அரசாங்க உத்தியோகம், டேபிள் சேர் வேலை என்று அதிகம் பேர் இன்றைய காலகட்டத்தில் பணம் பண்ணுகிறோம். இவற்றை எல்லாம் தாண்டி பிச்சை எடுத்தே வாழ்வை ஓட்டுபவர்களை உலகெங்கும் பரவலாக பார்க்கிறோம். இப்படி பிச்சை எடுத்து தங்கள் வாழ்வை ஓட்டலாமா என்பதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிறிது அலசுவோம்.

முகமது நபி கூற நான் கேட்டேன்...

'உங்களில் யார் மக்களிடம் யாசகம் கேட்டு தன் வாழ்நாளை ஓட்டுகிறாரோ அவர் மறுமை நாளில் முகத்தில் சதையின்றி எழுப்பப்படுவார்.'
அறிவிப்பவர் : அபுஹீரைரா நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ

'யார் யாசிப்பதில்லையோ அவருக்கு சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'
அறிவிப்பவர்: அபுஹீரைரா நூல்: அபுதாவுத், நஸயீ

'யாரிடமும் யாசகம் கேட்க வேண்டாம். உன் குதிரையின் சாட்டை கீழே விழுந்தாலும் அதை நீயே எடுப்பாயாக! அதை எடுப்பதற்காக மற்றவரை ஏவாதே' என்றார்கள். அதன்படியே என் வாழ்நாளை அமைத்துக் கொண்டேன்.'
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் அவ்ப் நூல்கள் : புகாரி, முஸ்லிம்

ஹக்கீம் இப்னு ஹிஸாம் என்ற நபித் தோழர் சில தேவைகள் பொருட்டு யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். ஒரு முறை இருமுறை அல்ல. மூன்று முறை சென்றார். நான்காவது முறையும் யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். அப்போது முகமது நபி ஹக்கீமைப் பார்த்து

'ஹக்கீமே! செல்வம் பசுமையும் இனிமையும் நிறைந்தது. யார் அதை நிறைந்த மனத்தோடு பெறுகிறாரோ அவருக்கு அதிலே அபிவிருத்தி செய்யப்படும். எவர் பொருளை யாசகமாகப் பெற்று ஊதாரித்தனமாக செலவழிக்கிறாரோ அவருக்கு அப்பொருளால் அபிவிருத்தி செய்யப்பட மாட்டாது. யாசிக்கும் கரத்தை விட யாசகம் கொடுக்கும் கரமே சிறந்தது. எனவே யாசிப்பதை விட்டுவிடுவீராக' என்று அறிவுரை பகர்ந்தனர்.

ஹக்கீம் இப்னு ஹிஸாம் கூறுகிறார் 'இறைவன் மீது ஆணையாக! உலகை விட்டு பிரியும் வரை இனி நான் யாரிடமும் யாசகம் கேட்க மாட்டேன் என்று அன்று உறுதி எடுத்துக் கொண்டேன்'

முகமது நபிக் காலத்துக்குப் பிறகு மேற்கண்ட நபர் மிகவும் வறுமையில் இருப்பதைக் கேள்விப்பட்ட கலீபாக்கள் அபுபக்கரும் உமரும் அவருக்காக பொருளுதவி செய்ய முன் வருகிறார்கள். 'முகமது நபிக்கு முன்னால் நான் வாக்கு கொடுத்துள்ளேன். எனவே நான் யாரிடமும் எதையும் யாசகமாகப் பெறமாட்டேன்' என்று கடைசி வரை யாரிடமும் கை நீட்டாமலேயே வாழ்ந்து சென்றதைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.

இதன்மூலம் யாசகத்தையே தொழிலாக வைப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. இன்று கை கால்கள் நல்ல நிலையில் உள்ள எத்தனையோ இனைஞர்கள் கூச்சமின்றி யாசகம் கேட்பதைப் பார்க்கிறோம்.

ஒரு வருடம் முன்பு நான் அலுவலகத்தில் பணியில் இருந்தேன். ஒரு பாகிஸ்தானியர் நாற்பது வயது மதிக்கத் தக்கவர் வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய பணம் இல்லை என்றும் பணம் தந்துவவுமாறும் கேட்டுக் கொண்டார். என்னோடு வேலை செய்து வரும் எகிப்தியர் அவருக்கு 20 ரியால் கொடுத்தார். எனக்கு அந்த பாகிஸ்தானி மேல் நம்பிக்கை வரவில்லை. நான் எதுவும் தரவில்லை. அதே பாகிஸ்தானியை இரண்டு நாள் கழித்து கடைத்தெருவில் சந்தித்தேன். அங்கு சிலரிடம் 'என் அரபி முதலாளி மோசம் செய்து என்னை எமாற்றி விட்டார். நான் பாகிஸ்தான் செல்ல உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி ரியாலை திரட்டிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் 'ஆபரேஷன் முடிந்து விட்டதா?' என்று கேட்டேன். என்னை அடையானம் கண்டு கொண்ட அந்த நபர் எனக்கு பதில் தராமல் அந்த இடத்தை விட்டு உடன் நகர்ந்து விட்டார். இது போல் அன்றாடம் பல மோசடிப் பேர்வழிகளை நாம் வாழ்நானில் சந்தித்து வருகிறோம். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களையும் சந்தேகத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.

இதேபோல் பள்ளிவாசல்களிலும், கோயில்களிலும், சர்ச்களிலும் பிச்சை எடுப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். இவர்களில் சிலர் பரம்பரையாக பிச்சை எடுக்கும் தொழிலைச் செய்பவர்கள். பிரார்த்தனையை முடித்து விட்டு வரும் பக்தர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று சில்லரையாக போட்டு வருவதையும் நாம் பார்க்கிறோம். இது போன்ற பழக்கத்தினால் பிச்சைக்காரர்களை நாமே ஊக்கப்படுத்துகிறோம். இப்படி சில்லரையாகப் போடுவதைவிட வாழ்நானில் நம் வசதிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவனுக்கு தையல் இயந்திரம், சிறிய தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்கான மூலதனம் போன்றவற்றைக் கொடுத்து உதவலாம். 'இனி நீ பிச்சை எடுத்தால் நான் கொடுத்த பணத்தை திருப்பித் தந்து விட வேண்டும்' என்ற உத்தரவாதத்தையும் உதவி பெறுபவரிடம் நாம் பெற வேண்டும். இது போன்ற செயல்கள் பிச்சை எடுப்பவர்களை ஓரளவு மட்டுப்படுத்தும்.

இது போன்ற நேரங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதை இனிப் பார்ப்போம்.

'தொழுகையை நிலை நாட்டுங்கள். ஏழை வரியைக் கொடுங்கள்' - குர்ஆன் 2 :110

தொழுது கொள்ள எங்கெல்லாம் இறைவன் கட்டளை இடுகிறானோ அதற்க்கடுத்து ஏழைகளுக்கு உதவவும் வேண்டும் என்று கட்டளை இடுவதன் மூலம் இந்த ஏழை வரியின் முக்கியத்துவம் விளக்கப் படுகிறது.

'இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நள்றி கெட்ட எந்த பாவியையும் இறைவன் விரும்ப மாட்டான்.' -குர்ஆன் 2 : 276

இதன் மூலம் தர்மம் செய்வது செல்வத்தை பெருகச் செய்யும் என்று இறைவன் வாக்களிக்கிறான்.

'உங்களின் விளை நிலங்கள் பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள். அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய கடமையை (ஏழை வரியை) வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.' -குர்ஆன் 6 : 141

இதன் மூலம் விளை நிலங்களுக்கும் கணக்கிட்டு ஏழை வரியைச் செலுத்த வேண்டும் என்று விளங்குகிறோம்.

'நம்பிக்கைக் கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். இறைவனின் வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். 'இறைவனின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு' என்று எச்சரிப்பீராக' -குர்ஆன் 9 : 34

நம்மில் பலர் இத்தகைய உதவிகளை மத குருமார்களுக்கு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்தகைய உதவிகள் ஏழைகளைச் சென்றடைய வேண்டியது என்று இறைவன் அறிவுறுத்துகிறான்.

'யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை சேகரிப்பவர்களுக்கும், இஸ்லாத்தின்பால் உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டோருக்கும், இறைவனின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது இறைவனின் கடமை. இறைவன் அறிந்தவன். ஞானமிக்கவன்.'
-குர்ஆன் 9 ; 60

மேற்சொன்ன வகையில் அடங்குபவர்களே தர்மத்தின் செல்வத்தினை அனுபவிக்கத் தகுதியானவர்கள். யாசிப்போர்,ஏழைகள், நாடோடிகள் போன்றோர் யார் என்பதற்கும் விரிவான விளக்கங்கள் இருக்கிறது.

'தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். 'நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காவும், உறவினர்க்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் செலவிட வேண்டும்.' நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்தவன்' எனக் கூறுவீராக.
-குர்ஆன் 2 : 215

இந்த வசனத்தின் மூலம் உறவினர்களையும் கவனிக்கச் சொல்லி இறைவன் கட்டளை இடுகிறான். தன் சித்தப்பனும், உடன்பிறந்தவர்களும் வயதான காலத்தில் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடிக் கொண்டிருக்க 'கொடை வள்ளல்' என்று பெயரெடுப்பதற்காக ஊருக்கும்,பள்ளிவாசல்களுக்கும், கோவில்களுக்கும் பிறர் மெச்ச வேண்டி செலவிடுபவர்களையே நாம் அதிகம் பார்க்கிறோம்.

'யார் கஞ்சத்தனம் செய்து தேவையற்றவராகத் தன்னைக் கருதி நல்லதை நம்ப மறுக்கிறாரோ சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்ப்படுத்துவோம்.' -குர்ஆன் 92 : 8,9,10

கஞ்சத்தனம் செய்வோரையும் இவ்வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான்.

'தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப்பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச்சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.' - குர்ஆன் 2 : 271

நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு பாவங்களெல்லாம் தர்மத்தின் மூலம் அழிக்கப்படுகிறது என்று குர்ஆன் நமக்கு விளக்குகிறது.

'தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.' -குர்ஆன் 2 : 188

லஞ்சம் வாங்குபவர்களை இந்த வசனம் கடுமையாக சாடுகிறது.

இந்த சட்டங்களையும் இது போன்ற மேலும் பல சட்டங்களையும் படிக்கும் போது இவையனைத்தும் ஏறத்தாழ கம்யுளிஸத்தை ஒத்து வருவதைப் பார்க்கிறோம். கம்யுளிஸ்டுகள் இறைவனை மறுத்து முதலானித்துவத்தை ஒழித்து சமதர்ம சமுதாயம் மலர வேண்டும் என்று கூறுவார்கள். இஸ்லாமோ இறைவனின் நம்பிக்கையை ஊட்டி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் உலக நடைமுறைக்கு உகந்ததே என்று கூறி அந்த வித்தியாசத்திலும் சம தர்ம சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது. உலகம் முழுவதும் அதில் வெற்றியும் கண்டுள்ளது.

இன்று அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அதே நேரம் சீனா கம்யுளிஸத்தை விடுத்து இன்று பொருளாதாரத்தில் மேன்மையுறுவதையும் காண்கிறோம். முதலாளித்துவத்தையும், கம்யுனிஷத்தையும் பின்பற்றக் கூடிய பல நாடுகள் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததாக நாம் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவின் வளர்ச்சியை ஒரு பேட்டை ரவுடியின் வளர்ச்சியாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்துடையவர்கள் தங்கள் கருத்தைப் பதிப்பார்களாக!

நான் எழுத நினைத்த தலைப்பு ஒன்று. ஆனால் அது என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது.

இறைவனே மிக அறிந்தவன்.

10 comments:

bala said...

//'உங்களில் யார் மக்களிடம் யாசகம் கேட்டு தன் வாழ்நாளை ஓட்டுகிறாரோ அவர் மறுமை நாளில் முகத்தில் சதையின்றி எழுப்பப்படுவார்.'
அறிவிப்பவர் : அபுஹீரைரா நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ//

சுவனப்பிரியன் அய்யா,

நல்லா தான் சொல்லியிருக்காறு,நபிகள் நாயகம்.ஆனா இதை பாகிஸ்த்தான் பசங்க புரிஞ்சிண்டதா தெரியலா.ஏன்னா, எனக்கு தெரிஞ்சி அவங்க 60 வருஷமா அமெரிக்கா போடற பிச்சையில தான் வாழ்ந்துண்டு இருக்காங்க.Arms கூட alams மாதிரி தான் வாங்கறாங்க அமெரிக்க பசங்க கிட்ட.ஓசி அடித்தே பிழைக்கும் கும்பல்னா,அதை அங்க தான் பாக்கமுடியும்.

பாலா

suvanappiriyan said...

பாலா!

//நல்லா தான் சொல்லியிருக்காறு,நபிகள் நாயகம்.ஆனா இதை பாகிஸ்த்தான் பசங்க புரிஞ்சிண்டதா தெரியலா.ஏன்னா, எனக்கு தெரிஞ்சி அவங்க 60 வருஷமா அமெரிக்கா போடற பிச்சையில தான் வாழ்ந்துண்டு இருக்காங்க.Arms கூட alams மாதிரி தான் வாங்கறாங்க அமெரிக்க பசங்க கிட்ட.ஓசி அடித்தே பிழைக்கும் கும்பல்னா,அதை அங்க தான் பாக்கமுடியும்.//

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவுவதன் நோக்கமே இந்தியாவோடு ஆயுதப்போட்டியை வளர்த்து அதன் மூலம் அவர்களின் துருபிடித்த ஆயுதங்கள் விற்பனையாக வேண்டும் என்பதே! ரஷ்யாவை ஒழித்தாகி விட்டது. அடுத்து அமெரிக்காவோடு போட்டியிட தயாராக இருப்பது சீனாவும் இந்தியாவுமே! எனவே எந்த வகையிலாவது நம் நாட்டை பலவீனப்படுத்த அமெரிக்கா பல தந்திரங்களை செய்து வருகிறது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள விருப்பமில்லையென்றாலும் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிர்பந்தம் முசாரப்புக்கு. இது போன்ற காரசாரமாண விவாதங்களெல்லாம் என்னோடு பணி புரியும் பாகிஸ்தானியர்களோடு நிறைய செய்துள்ளேன். தங்கள் நாடு செய்யும் தவறுகளை அவர்கள் பலமுறை என்னிடம் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

சாலிசம்பர் said...

பாலா அய்யா,
உங்க கொள்கையும், அமெரிக்காவின் கொள்கையும் ஒன்று தானே அய்யா.
உங்களைப் போன்றோர் அமெரிக்காவை கண்டித்து வைக்கலாமே அய்யா.

suvanappiriyan said...

வாங்க அசலமோன்!

//பாகிஸ்தானுக்கு மாத்திரம் அல்ல இந்தியாவை ஒழிக்க, அல்லது சீனாவை ஒழிக்க என்ன செய்ய முடியுமோ அது எல்லாம் செய்வார்கள் இந்த அமெரிக்கா சாத்தான்கள். காலம் பதில் சொல்லும்.இறைவன் நாடினால்.//

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று கொடுத்துள்ள அறிக்கையைப் படித்தீர்களா? 'அமெரிக்கா உலகை கட்டி ஆள நினைக்கிறது. இதனால் உலகையே பெரும் சிக்கலில் மாட்ட வைத்துள்ளது அமெரிக்கா' என்று புடின் பேசியுள்ளார். சாதாரண மனிதனுக்கும் தெரிந்த இந்த உண்மையை உணர ரஷ்ய அதிபருக்கு இத்தனை காலம் பிடித்துள்ளது.

வருகைக்கு நன்றி!

suvanappiriyan said...

ஜாலி ஜம்பர்!

//உங்க கொள்கையும், அமெரிக்காவின் கொள்கையும் ஒன்று தானே அய்யா.
உங்களைப் போன்றோர் அமெரிக்காவை கண்டித்து வைக்கலாமே அய்யா.//

ஓ.... பாலாவுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா? கொஞ்சம் கவனிங்க பாலா!

Unknown said...

அன்பின் சுவனப்ரியன். அஸ்ஸலாமு அலைக்கும்.
'இன்று அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.'

என்ற உங்கள் எழுத்தை ஒருவர் இங்கு
http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_6745.html விமரிசித்துள்ளார்.

அதற்கு, நான் இங்கு
http://sultangulam.blogspot.com/2007/02/blog-post_11.html
ஒரு பதில் பதிவு இட்டுள்ளேன். இயன்றால் பார்க்கவும்.

suvanappiriyan said...

நண்பர் உணர்வுகள் என் பதிவு சம்பந்தமாக ஒரு தனி பதிவு இட்டுள்ளார். அவருக்கு என் பதில்கள்.

//அது போதாதென்று "இன்று அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்" என்கிறார் சுவனப்பிரியன்//

பொருளாதார ஏற்றத் தாழ்வு பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளது என்று தான் கூறியுள்ளேன். இங்கு யாரும் சவுதி அரசாங்கத்தை தூக்கிப் பிடிக்கவில்லை. மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு ஷரீயாவை அமுல்படுத்துவதில் சவுதி முன்னிலை வகிக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். இளவரசரை ஏன் தண்டிக்கவில்லை என்று கேட்கிறீர்கள். இது அந்த நாட்டு மக்களின் பிரச்னை நண்பரே! இதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாக முடியும்? இளவரசர் தவறு செய்து அதற்கு தண்டனை பெறவில்லை என்றால் இறைவன் முன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவார் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. எனவே அவர் எந்த வகையிலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

//நான் சொல்ல வருவதென்னவென்றால் சில முஸ்லீம்கள் பெருமையடித்துக் கொள்வது போல் ஒன்றும் கிடையாது, எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு, எல்லா மதங்களிலும் குறைபாடுகள் உண்டு என்பது தான்.//

இதை நான் மறுக்கவில்லையே! உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம்கள் பின்பற்றியிருந்தால் பல நாடுகள் என்றோ இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்களாகியிருக்கும். குறை முஸ்லிம்களிடத்திலும் உள்ளதை நான் மறுக்கவில்லை.

//மொழியால் வரும் இணைப்புத் தான் பலமானதே தவிர மதத்தால் அல்ல.//

மொழி என்பது நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக எற்படுத்தப்பட்ட ஒன்று. என் தாய்மொழியான தமிழின் மேல் என்றுமே எனக்கு பற்று உண்டு. இனத்தால் நான் திராவிடனாகவும் இருக்கிறேன். ஆனால் இறைவனை வணங்குவதற்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். நான் இஸ்லாமியனாக இருப்பதால் அரபி தேவபாஷை என்று கூறலாமா என்றால் உண்மை முஸ்லிம் அவ்வாறு கூறக் கூடாது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' -குர்ஆன் 14 : 4

முகமது நபி அரபியராக இருந்ததால் குர்ஆன் அரபியில் இறங்கியது. நபி தமிழராக இருந்திருந்தால் குர்ஆனும் தமிழிலேயே இறங்கியிருக்கும். எனவே இங்கு மார்க்கத்தையும் மொழியையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் நண்பரே. இந்த மொழி வெறியினால்தான் ஒரே நாட்டவரான கன்னடரும் தமிழரும் இன்று ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

suvanappiriyan said...

நண்பர் சுல்தான்!

//உடல் நலமும் பொருள் வளமும் உள்ளவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு முறையாவது மக்காவில் உள்ள அந்த புனிதத்தலத்தை தரிசிப்பது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையாக இருப்பதால், எல்லா முஸ்லீம்களும் அந்த புனிதத்தலத்தை நினைவிலிருத்துகின்றனர்.

கல்லையும் மண்ணையும் கடவுளாக வணங்கி வந்த எங்களுக்கு, இஸ்லாம் என்ற மார்க்கத்தை எடுத்துச் சொன்னவர், அராபியாவிலிருந்து வந்ததால், அந்த பூமியின் மீது சிலருக்கு அன்பு இருக்கலாம். அஃதொன்றும் தவறல்லவே.//

//சவூதியாவில் எந்த மனிதராயிருந்தாலும், அவர் கறுப்பராயிருந்தாலும் வெள்ளையராயிருந்தாலும், அவர் முன்னே வந்தால் முன்னே நின்று தொழுகிறார். அங்கு எவரும் 'கடவுள் முன்னிலையில் தாம் தான் உயர்ந்தவர்' என்று சொல்வதில்லை.
எமக்கு இஸ்லாம் கற்றுத் தந்துள்ளபடி, 'கடவுள் முன்னிலையில் இரண்டு சாரார்தான். ஒரு சாரார் இறையச்சம் நிறைந்த சிறந்த மனிதர்கள் - உயர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இறையச்சம் குறைந்தவர்கள் (அல்லது இறையச்சம் இல்லாதவர்கள்) -தாழ்ந்தவர்கள்.'
யாரோ ஒரு குழுமத்தில் பிறந்ததால் அவர் உயர்ந்தவர், வேறொரு குழுமத்தில் பிறந்ததால் அவர் தாழ்ந்தவர் என்று, அவர் செய்யாத தவறுக்கு, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத, இந்த சமத்துவம்தான் சொல்லப்படுகிறது. //

//கையை காலை வெட்டும் ஷரியா தவறென்றால், அத்வானி போன்றவர்களே கற்பழிப்புக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று கேட்டதை யோசியுங்கள்.
தவறு செய்பவர்கள்தான், 'கையையும் காலையும் இழப்போமே' என்று வருந்த வேண்டும். 'இந்த தண்டணைகளால் தவறு செய்ய நினைப்பவர்களும் திருந்துவார்களே' என்று நல்லவர்களும், நீதி நியாயத்தின்படி வாழ நினைப்பவர்களும் எண்ணாமல் கலக்கமடைவது ஏன் என்பது புதிர். //

//இந்தியாவையும் சவூதியையும் ஒப்பு நோக்குங்கள். ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லப்படவில்லை. பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதாகத்தான் சொல்கிறார். தவறென்கிறீர்களா?
அங்கு போய் வந்தவர்களைக் கேளுங்கள். அங்கு அந்நாட்டு அரபிகளில், எத்தனை பேர் வீடு வாசலின்றி, தெருவோரம் தூங்கி, பிச்சையெடுத்து அலைகின்றனர் என்று. பின்னர் ஒப்பு நோக்குங்கள். பெருமளவு என்பதன் பொருள் புரியும்.//

//நான்கில் ஒரு பங்கு என்று மிக மிகக் கூடுதலாக சொல்லப்பட்டுள்ளது.
வேலையில்லாதவர்களும், அவர்களின் தேவைகளுக்கான வசதியோடு இருப்பதைப் பார்க்கத் தவறுவது ஏன்?
அங்குள்ள களில் பலவற்றையும் வெளி நாட்டினர் செய்து அதற்கான ஊதியம் பெறுகின்றனர்.
'மற்ற மாநிலத்தவர் இங்கு வருவதால் இந்த மாநிலத்தார்க்கு வேலை கிடைப்பதில்லை' என்று ஒரே இந்தியாவில், ஒரு மாநிலத்தார் மற்றவர்களை அடித்துத் துரத்துகிறோம். உதாரணம்: நேற்று மும்பையிலும் பெங்களுருவிலும், இன்று அஸ்ஸாம்.
அங்கு, இப்போது, வெளிநாட்டவரை......//

//அங்கு சரியான தொடர்பில்லாத யாரும் வேலையில் இல்லையா? அல்லது அங்கு வேலையிலிருப்பவர்கள் எல்லாம் சரியான தொடர்பு வைத்திருப்பவர்கள்தானா?

வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத நாடு எது? சவூதியில் உள்ளதை மட்டும் ஊதிப் பெரிதாகக் காட்டும் அவரின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளாதது ஏன்?//

நண்பர் உணர்வுக்கு விளங்க வேண்டும் என்ற உணர்வுகளோடு அழகாக பதிலளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி சுவனப்ரியன். இயன்றால் அதன் தொடர்ச்சியை இங்கே
http://sultangulam.blogspot.com/2007/02/blog-post_13.html சென்று பார்க்கவும்.

suvanappiriyan said...

நண்பர் சுல்தான்!

பல வேளைகளுக்கு மத்தியில் இரவு 4 மணிவரை பதிவை எழுதி முடித்திருக்கிறீர்கள். உங்களின் ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தொடரட்டும் உங்கள் பணி.

நண்பர் ஆரூரானுக்கு இலங்கை தமிழ் இந்துக்களும், தமிழ் முஸ்லிம்களும் ஏன் ஒன்றுபடவில்லை என்பதை ஒரு இலங்கையரை வைத்தே பதிலளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.