Followers

Sunday, November 13, 2011

வஞ்சப் புகழ்ச்சி என்பது இதுதானோ!- தினமலரின் குசும்பு!




அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.

கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர்.இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள!
ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! மனித உரிமை மரித்து விட்டதா இந்தத் தாய்த் தமிழ்நாட்டில்? அல்லது இனமானச் சிங்கங்கள், இருட்டில் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டதாக, அவர்களுக்கு இறுமாப்பா?மாற்றுத் திறனாளி மட்டுமில்லை; கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, ஆதிக்க சக்திகள் எல்லாம் ஒன்று கூடி, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன!
இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா அல்லது தமிழினத் தலைவர்கள் வாளாவிருந்துவிடுவர் என நினைத்து விட்டார்களா?

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். அருமைத் தமிழர் கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே, என் அருமை மக்களே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?

அப்பாவித் தமிழன் கோவிந்தசாமிக்கு இவ்வளவு சாதக அம்சங்கள் இருந்தும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், அடுத்த தமிழ்ப் பெருந்தலைவராக உருவெடுக்க உள்ள வேல்முருகன் என, ஒருத்தர் கூட குரல் கொடுக்காதது ஏன்?


ஒரு வேளை முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ !

-தினமலர் 14-11-2011

கிண்டலாக எழுதிய ஒரு இடுகையை சீரியஸாக எடுத்துக் கொண்டு சில வாசகர்கள் 'கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கி தினமலர் தனது தரத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று பின்னுட்டத்தில் பொங்கி இருக்கிறார்கள்.

32 comments:

கோவி.கண்ணன் said...

//ஒரு வேளை முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ ! //

சங்கராமன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனைக் கிடைத்தால் தினமலர் இது போல் எழுதாது :)

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****

.

Unknown said...

ஒரு பெண்ணை கற்பழிச்சு கொலை பண்ணி இருக்கான் அவனுக்கு தூக்கு தண்டனை குடுக்காமல் தூக்கி வைத்து கொண்டாட சொல்லறீங்கள????????தமிழனா என்ன கொம்பா முளைத்திருக்கு................நானும் தமிழன்தான்............நீங்க வேணும்னா சொல்லுங்கள் தமிழச்சியை கற்பழிகிறேன்..............அப்போ உங்களுக்கு எப்படி கோபம் வருதுன்னு பார்க்குறேன்...................

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

இந்த கயவன் போல ராஜீவ் காந்தி கொலையாளிகள் நேரடியாக ராஜிவை பாலியல் வல்லுறவு கொண்டுவிட்டு கொல்லவில்லையே..!

இதேபோல அவர்களுக்கு தூக்கு ஒன்றும் ஒன்பதே மாதங்களில் தரப்படவில்லையே..? 20 வருஷம் கழித்தல்லவா..? அந்த வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு வேண்டிய இந்த ஒப்புமை மிக அவசியம் அல்லவா..?

அதேபோல... இந்த கயவனுக்கும்... இந்திய சட்டப்படி கொலைக்கு ஆயுள் தண்டனையான 16 வருஷமும் அப்புறம் கற்பழிப்புக்கு 7 வருஷமும் ஆக மொத்தம் 23 வருஷம் முடிந்து தூக்கில் போட முயன்றால் நானும்தான் அதை எதிர்ப்பேன்..!

இதில்... சாதிவெறி, மொழிவெறி, இனவெறி என்று பல விஷங்களை கலக்க முயற்சி செய்கிறது இந்த தினசரி.

இதை "தினமல*" என்று மக்கள் தூற்றுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. இதுவும் திருந்துவது மாதிரியும் தெரியவில்லை.

என்னவொரு சகுணித்தனம்..!

suvanappiriyan said...

@கோவிக் கண்ணன்!
//சங்கராமன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனைக் கிடைத்தால் தினமலர் இது போல் எழுதாது :)//

சரியாகச் சொன்னீர்கள். அவாள்களுக்கு என்றால் அந்த காலம் தொட்டே இன்று வரை தனி அந்தஸ்து அனைத்து மட்டத்திலும் கொடுக்கப்படுகிறது அல்லவா? இப்படித்தான் எழுதுவார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.//

வருகைக்கும் சுட்டியை பதிந்தமைக்கும் நன்றி வாஞ்சூர் பாய்!

suvanappiriyan said...

ஹலோ....அபு சனா!

//ஒரு பெண்ணை கற்பழிச்சு கொலை பண்ணி இருக்கான் அவனுக்கு தூக்கு தண்டனை குடுக்காமல் தூக்கி வைத்து கொண்டாட சொல்லறீங்கள????????தமிழனா என்ன கொம்பா முளைத்திருக்கு..............//

இங்கு தூக்கு தண்டனையை தினமலர் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் பரவலாக தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் வருகிறதல்லவா அதை நக்கலாக புகழ்வது போல இகழ்கிறது. அதாவது தமிழர்களில் பெரும்பாலோர் மடையர்கள் என்றும் ஆரியர்களான தாங்களே சிறந்த அறிவாளிகள் என்றும் மறைமுகமாக சொல்கிறது தின மலர். அதே சமயம் தான் தெய்வமாக வணங்கும் கோவிலில் சதா காலமும் ஊழியம் செய்து வந்த சங்கரராமனை போட்டுத் தள்ளிய அவாள்களைப் பற்றி மட்டும் மூச்சு விடாது தின மலர். அதுதான் இனப்பற்று.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆசிக்!

//அதேபோல... இந்த கயவனுக்கும்... இந்திய சட்டப்படி கொலைக்கு ஆயுள் தண்டனையான 16 வருஷமும் அப்புறம் கற்பழிப்புக்கு 7 வருஷமும் ஆக மொத்தம் 23 வருஷம் முடிந்து தூக்கில் போட முயன்றால் நானும்தான் அதை எதிர்ப்பேன்..!

இதில்... சாதிவெறி, மொழிவெறி, இனவெறி என்று பல விஷங்களை கலக்க முயற்சி செய்கிறது இந்த தினசரி.//

உங்கள் வாதத்திலும் நியாயம் இருக்கிறது.

//என்னவொரு சகுணித்தனம்..!//

இது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்லவே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

@வேதம் கோபால்

//@Suvanppiriyan
அம்பேத்கர் இந்து மதத்தில் மரியாதையில்லை ஆதலால் இந்தியாவிலேயே தோன்றிய வேறு மதத்திற்கு தான் மாற சொன்னாரே தவிற அன்னிய மதங்களான கிருஸ்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் அல்ல. அவ்வாறு இந்த மிலேச மதங்களுக்கு மாறினால் நமது தேசியத்திற்கு பெரும் ஆபத்து வரும் அதோடு நமது பண்பாடும் பாரம்பரியமும் கலாசாரமுன் குலைக்கப்படும் என்றார்.//

இதுதான அம்பேத்கார் தனது வாழ்நாளிலேயே செய்த மிகப் பெரிய தவறு.

இந்தியாவிற்கென்று வரலாறு எழுதப்பட்ட நாட்களிலிருந்து பெருமைபடக் கூடிய கலாசாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்? ஆதி காலம் தொடடே தமிழகத்தில் தீண்டாமைதானே மனிதர்களின் முதல் கலாசாரமாகவும் பண்பாடாகவும் இருந்தது.! இப்படிப்பட்ட ஒரு கலாசாரம் நமக்கு தேவையா?

//அவர் கூற்றுப்படியே புத்தமதத்திற்கு மாறிய தலித்துகள் இன்று அதே புத்த மதத்தில் நவ பௌதர்கள் என்று ஒதுக்கப்பட்டுள்ளார். மதம் மாறினால் ஜாதி மாறிவிடும் என்று காவ்யா அவர்கள் கூறுகிறார். ஆனால் இன்று மதம் மாறிய பின்பும் ஜாதி தொடர்ந்து வருவதும். அதைவைத்து கிருஸதுவ முஸ்லீம் தலித்துகள் நாடார்கள் வன்னியர்கள் என்று இடஒதுக்கீடு பிரச்சனையை எழுப்புவது ஏன் ?//

முஸ்லிம்கள் அனைவருக்குமேதான் தனியான இட ஒதுக்கீடு கேட்டு வருகிறோம். ஆனால் அரசு சில நேரம் தலித் முஸ்லிம் என்ற வார்த்தையை உபயோகிககும் போது அதனை முதலில் எதிர்ப்பவர்கள் முஸ்லிம்களே! 'தலித் முஸ்லிம்' என்ற ஒரு பிரிவே இல்லாத போது அரசு எவ்வாறு இட ஒதுக்கீடு கொடுக்க முடியும?

முன்பு 'மீனாட்சிபுரம்' 'ரஹ்மத் நகராக' மாறியதல்லவா? அங்கு சென்று தற்போதய நிலையை பாருங்கள். பரம்பரை முஸ்லிம்களோடு பெண் எடுத்து பெண் கொடுத்து வரும் அழகிய காட்சியை பார்க்கலாம். இன்று அவர்களின் உடையும் கலாசாரமும் முற்றிலும் மாறி உள்ளதை நேரிலேயே சென்று பார்க்கலாம். பலர் வெளிநாடுகளும் வந்து பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகின்றனர். அடுத்த தலைமுறையில் தலித் என்ற இழிவு முற்றிலுமாக நீங்கி விடும். இன்று தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவர்களே! இன்று அவர்களைப் பார்த்து யாராவது தலித் என்று கூற முடியுமா? அராபிய வம்சாவளியோடு இரண்டற கலந்ததனால் நிறமும் கூட மாறி விட்டதே!

நிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

மானங்கெட்ட தின மலமே,பெண்களோடு கொஞ்சி குலவிய உமது லோக குருவை கண்டித்த சங்கரராமனை தெய்வம் குடிகொண்ட கோவிலில் வைத்தே கொன்றார்களே,அந்த ஜ்ன்மத்திற்கு கூச்சமின்றி ”வெளம்பரம்” கொடுக்கும் கேடுகெட்ட பத்திரிகை நீ ராஜிவ்கொலையாளிகள் விவகாரத்தை ஒப்பிட்டு நக்கல் செய்ய யோக்கியதை என்ன இருக்கிறது? த்தூ....

வலிப்போக்கன் said...

பத்திரிக்கை
(ஜாதி) தர்மத்தில் எழுதியிருக்கிறார்கள்

suvanappiriyan said...

சகோதரர் நிவாஸின் பின்னூட்டம் சிறு திருத்தலுக்குப் பின்……

இது தின மலர் இல்லை, தினமலம் என்று சொல்லலாம்

தினம் தினம் இதுபோல் மலம் வைத்து கொடுக்காவிட்டால் இந்தர்க்கு தூக்கமே வராது போலும்

கற்பழிப்பை பற்றி கரப்பு என்பதையே அறியாத இந்தக்கும்பல் பேசிகிறது

காந்தி கொலை முதல்
சங்கராமன் கொலைவரை எதைபற்றியும் இப்படி எழுத்து இந்த தின(மலம்)மலர்

எவ்வளவு காரி உமிழ்ந்தாலும் சில ஜென்மங்கள் திருந்துவதில்லை என்பதற்கு சரியான உதாரணம் இந்த தின(மலம்)மலர்

தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழில் வெளிவரும் ஒரு குப்பை பத்திரிகை எப்பொழுதும் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது

இதுபோன்ற …….களை முதலில் விரட்டினால் போதும்

தமிழன் தானாகவே உணர்ந்துகொள்வார்

இன்னும் ஒரு பெரியார் வந்தால் தான் இந்த ……..களின் கொட்டத்தை ஒடுக்க முடியும்

suvanappiriyan said...

@வேதம் கோபால்!

//தலித் விடுதலை மத தாவுதலினால் அல்ல… அறிவு கொள்ளுதனிலால் தான்.. அதனால் தான் அம்பேத்கார், கற்பி… என்ற பதம் உப்யோலித்துள்ளார்.//

படித்து விட்டால் தீண்டாமை மறைந்து விடும் என்றுதான் நாமும் காலகாலமாக சொல்லி வருகிறோம். ஆனால் நடைமுறையில் இன்னும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நீதிபதியே வன்கொடுமை படுத்தப்படுவதை அதுவும் உச்ச நீதிமன்றத்திலேயே சமீபத்தில்கூட பத்திரிக்கையில் படித்தோமே! இது சம்பந்தமாக நான் அளித்த பதிவின் சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமான்யனின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

http://suvanappiriyan.blogspot.com/2011/11/blog-post_05.html

//மேலும் அரேபியர்கள், மஸ்கட் இனத்தினரை தாழ்வாக நடத்துவார்கள். இங்கு யாருக்கும் நடப்பது என்னவென்று தெரியாது என்று எழுத வேண்டாம்.//

புது விஷயமாக இருக்கிறது. அரபுகள் அனைவரும் பெண் கொடுத்து எடுப்பதிலோ பள்ளிவாசல்களிலோ பொது இடங்களிலோ உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. ஒரு சிலர் அவ்வாறு பார்த்தால் அதற்கு குர்ஆன் தடையாக இருக்கிறது. இஸ்லாத்தை சரியாக விளங்காதவர்கள்தான் தீண்டாமையை கடைபிடிப்பர். நம் நாட்டிலேயே இஸ்லாத்துக்கு மாறியவுடன் மசூதிக்கு முதல் ஆளாக வந்தால் அவன் அரிஜனாக இருந்தாலும் முதல் வரிசையில் நிற்க வைக்கப்படுவார். மக்காவிலும முதல் ஆளாக சென்றால் முதல் வரிசையிலேதான் நிற்க வைக்கப்படுவார்.

ஆனால் தமிழ்நாட்டிலோ நேற்றுதான் உத்தமபுரத்தில் தலித்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவேபட்டிருக்கிறார்கள். இதை பெருமையோடு வேறு சொல்லிக்கொள்கிறோம். இது போன்ற மாற்றம் வர வேண்டிய ஊர்கள் தமிழகத்தில் இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளது.

suvanappiriyan said...

ரா.செழியன்!

//அந்த ஜ்ன்மத்திற்கு கூச்சமின்றி ”வெளம்பரம்” கொடுக்கும் கேடுகெட்ட பத்திரிகை நீ ராஜிவ்கொலையாளிகள் விவகாரத்தை ஒப்பிட்டு நக்கல் செய்ய யோக்கியதை என்ன இருக்கிறது? த்தூ....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வலிபோக்கன்!

//பத்திரிக்கை
(ஜாதி) தர்மத்தில் எழுதியிருக்கிறார்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ. நிவாஸ்!

எவ்வளவுதான் நமக்கு கோபம் இருந்தாலும் உடன் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இப்படி கோபத்தில் வரும் பின்னூட்டத்தைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். பின்னூட்டம் கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறிய திருத்தங்கள் செய்தேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாசகன் said...

அது தான் 'மலம்' என்று தெரிந்தும், வலிய போய் அதற்கு வலைப்பூ பன்னீர் தெளிக்கிறீங்களே சு.பி

தன்மலத்தை கடை விரிக்க அவன் எப்பூடி வேணும்னாலும் எயுதுவான், நாமதான் மூக்கைப் பிடிச்சிகிட்டு நகர்ந்து போவணும், மனசுலாயா?

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

திமனல(ம்)ர் முன்பை விட இப்போது ரொம்ப வேளிப்படையாய் செயல்படுவது போல் இருக்கு

விரைவில் அந்த பத்திரிக்கை நடுநிலையாளர்களால் புறக்கனிக்கப்படும்

suvanappiriyan said...

@தங்கமணி!

//ஆனால் இன்று மட்டுமல்ல எந்த எதிர்காலத்திலும் முஸ்லிம் பெண்கள் மசூதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.//

தவறான தகவல். முகமது நபி காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதார்கள். ஆண்களைப் போல் பெண்கள் அவசியம் பள்ளிக்கு வந்து தொழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. விரும்பினால் பள்ளியில் வந்து தொழலாம். விருப்பமில்லாவிட்டால் வீட்டிலேயே தொழுது கொள்ளலாம். இந்த சட்டத்தை பயன்படுத்தி நமது நாட்டிலும் பாகிஸ்தானிலும் பெண்களை அறவே பள்ளிக்கு வருவதை தடை செய்து விட்டனர். அது தவறு என்று விளக்கி வருகிறோம். பல ஊர்களில் பெண்கள் பள்ளிக்கு வருகின்றனர். எனது மனைவியும் தாயும் கூட பெருநாள் தொழுகை, வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கு செல்கின்றனர். சவுதியில் ஒவ்வொரு பள்ளியிலும் பெண்கள் தொழுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். மெக்காவில் காஃபாவில் பெண்கள் தொழுவதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கவில்லையா?

உங்கள் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி கேட்டால் (கணவர்களாகிய) நீங்கள் அவர்களை தடுக்க வேண்டாம்
அறிவிப்பவர் (இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரி 865,873,5238)

இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்காதீர்கள்
அறிவிப்பவர் (இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரி 899)

நபி(ஸல்) அவர்களின் பள்ளியை சுத்தம் செய்ய ஒரு பெண் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆதாரம்:புகாரி அறிவிப்பவர் (அபூஹூரைரா(ரலி) 458,460)

suvanappiriyan said...

வாசகன்!

//தன்மலத்தை கடை விரிக்க அவன் எப்பூடி வேணும்னாலும் எயுதுவான், நாமதான் மூக்கைப் பிடிச்சிகிட்டு நகர்ந்து போவணும், மனசுலாயா?//

மனசுலாயி....:- )

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

//விரைவில் அந்த பத்திரிக்கை நடுநிலையாளர்களால் புறக்கனிக்கப்படும்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

@தங்கமணி!

//நல்லது சுவனப்பிரியன்
அதே மாதிரி எல்லோரும் கோவிலுக்கு போகலாம் என்பதை இந்துக்களும் எல்லோருக்கும் விளக்கி வருகிறார்கள்.//

ஒரு முஸ்லிமிடம் சென்று 'பெண்களை பள்ளிக்கு அனுப்பு! தீண்டாமை பாராட்டாதே! தர்ஹாக்கு செல்லாதே! வரதட்சணை வாங்காதே' என்று குர்ஆனையும் நபிமொழிகளையும் வைத்து ஒரு பாமர முஸ்லிமிடம் என்னால் வாதாட முடியும். அவனும் குர்ஆனுக்கு கட்டுப்பட்டு தனது தவறான கொள்கைகளை விட்டு விடுவான்.

இதே வார்த்தயை ஒரு இந்துவிடம் சொன்னால் 'நன்னா சொன்னேள் போங்கோ! பெரியவாளே தீண்டாமை சேமமானது என்று சொல்லியிருக்காளே! நம்ம மனு ஸ்ருமிதி தீண்டாமையையும், பெண்களையும் பற்றி பல கருத்தகளை சொல்லுகிறதே! தீண்டாமைக்கு ஆதாரம் ராமாயணததிலேயே இருக்கிறதே! அப்படியென்றால் இந்து மத சட்டங்களை எல்லாம் என்னை விட்டு விட சொல்கிறீரா ஓய்...' என்று உங்களிடம் எதிர் கேள்வியை வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்.

நிவாஸ் said...

@சுவனப்பிரியன் - உண்மைதான் சகோ

கோவப் படுவதில் பலனில்லை என்று எனக்கு தெரியும், இருந்தாலும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?

இவர்களில் இதுபோன்ற இழிவுச் செயல் அந்த எல்லையை தாண்டும்போது, நாம் நமது கட்டுபாட்டை இழக்க நேரிடிகிறது.

நல்ல பதிவு

உங்கள் கருத்திற்கும் உடன் படுகிறேன்
மிக்க நன்றி

நெல்லி. மூர்த்தி said...

இரட்டுற மொழிதலில் தங்கள் எண்ணங்களை ஓங்கி ஒலிக்க கையாண்ட விதத்தினிலியே சிலர் பின்னூட்டங்களை அமைத்திருந்தாலும் பலர் அப்பாவியாய் மறுதலித்திருப்பது நன்றாகவே புரிகின்றது. இருப்பினும் பதிவர்கள் பலர் (வினவு உட்பட)அவர்கள் பாணியிலேயே காஞ்சி ஜெயேந்திரரையும் கோர்த்துக் கொண்டுள்ளனர். நம்மைப்போன்றோரின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதால் உண்மையான காட்டமான விமர்சனங்கள் அவர்கள் தளங்களில் முழுமையாக பிரசுரிக்கபடவில்லை என்பது முற்றிலும் உண்மை! இன்னமும் திருவாளர் பொதுஜனங்களில் பலர் தாளில் உள்ளதை கண்மூடித்தனமாக நம்புவதை எண்ணிதான் வருந்த வேண்டியுள்ளது.

suvanappiriyan said...

திரு நெல்லி மூர்த்தி!

//இரட்டுற மொழிதலில் தங்கள் எண்ணங்களை ஓங்கி ஒலிக்க கையாண்ட விதத்தினிலியே சிலர் பின்னூட்டங்களை அமைத்திருந்தாலும் பலர் அப்பாவியாய் மறுதலித்திருப்பது நன்றாகவே புரிகின்றது.//

முதல் வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

//வேதத்தை ஏற்றுக் கொண்டு கடவுளை மட்டும் ஏற்காதவன் நாஸ்திகன்; வேதத்தையும், கடவுளையும் ஏற்றுக்கொள்பவன் ஆஸ்திகன். வேதத்தையும், கடவுளையும் ஒருசேர ஏற்காதவர்கள்தான் சாருவாகனர்கள் போன்றோர். நாம் நடைமுறையில் பயன்படுத்தும் நாத்திகம் என்ற சொல்லும் அப்படி இரண்டையும் மறுப்பவர்களைக் குறிக்கின்றன என்றாலும் பார்ப்பனிய இந்து மதத்தின் அளவு கோலின் படி நாஸ்திகன் என்றால் மேலே சொன்ன பொருள்தான். அதன்படி பாகிஸ்தானின் பாட நூல்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான். பாய்கள் இந்துமதத்தை சரியாக புரிந்து வைத்திருக்கும்போது, அம்பிகள் இப்படி அசட்டு பிசட்டு அம்மாஞ்சிகளாய் இருக்கிறார்களே?//-Vinavu

அடடே! இது எனக்கு இப்போதுதான் தெரியும். தகவலுக்கு நன்றி!

இனியவன் தஞ்சை said...

வாழ்த்துக்கள்...! கேரளா அரசிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....! நண்றி....! இச்செய்தியை வெளியிட்ட நண்பருக்கு...!

மனித உயிர் என்றால் உங்களுக்கு கேவலமா?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்கிற நக்கீரரின் கூற்றுப்படி யார் தவறு செய்தாலும், எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் தவறு செய்தாலும் குற்றம்தான். இதை யாராலும் மறுக்கமுடியாது. கொலைக்கு சட்டரீதியாக மரணத்தண்டனை வழங்கினால்தான் நாளை இதுபோன்ற குற்றங்களை செய்வதற்கு அஞ்சுவார்கள்.

ஏன் இதற்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க சொல்றீங்கள். தமிழ் நாட்டிற்குதான் குற்றங்களை தண்டிக்க எந்த அருகதையுமில்லை. ஆனால் கேரளா அரசாவது தண்டனையை உடனே கொடுக்கிறதே என்பதை நினைத்து பெருமிதப்படுங்கள் நண்பர்களே.

தமிழன் உயிர் மட்டும் உயர்வா? அடுத்த நாடு, மாநிலத்தை சார்ந்தவர்களின் உயிர் என்றால் கேவலமா? எல்லாரும் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் தான். தண்டனை கொடுப்பதில் பாகுபாடு பார்க்கக்கூடாது. அப்படியில்லை என்றால் அந்த நாட்டில் நீதியில்லை, மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதுதான் அர்த்தம். சட்டத்திற்குமுன் அனைவரும் சமமே.

ஒருபெண் வேலைமுடித்து வீட்டிற்குச் செல்கிறாள் அவளை பலவந்தமாக கொலைசெய்து கற்பழித்திருக்கிறார். இதுவென்ன மனிதச் செயலா? மிருகங்களாவது செத்துப்போன மிருகத்தை சீன்டிப்பார்க்கது (உயிரற்றப் பிராணிகளை திங்கும் விலங்கினத்தை தவிர). விலங்கினமே இறைவன் அதற்கு வழங்கிய வழியில் நடக்கிறது ஆனால் நாமோ ஆறு அறிவுப்பெற்ற மனிதன் மிகவும் கீழ்த்தரமாக செயல்படுகிறோம். மரணம் என்பது இறைவனால் வருவது. எல்லாம் அவன் நாட்டப்படித்தான் நடக்கும். ஏதும் நம்கையில் இல்லை. ஆனால் குற்றம் செய்தவர்களுக்காக வக்காலத்து வாங்குவது என்பது நாம் நேர்மையானவர்கள் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர வேற யாருக்கும் இந்த உரிமையில்லை என்பதையும் உணர்ந்து கொள்ளவும்.

தண்டனை கொடுக்கட்டும். கொடிப்பிடிப்பவர்கள் உறனட்டும். இந்த தண்டனையைப் பார்த்தாவது நமக்குள்ளே வெட்கப்பட்டு வேதனையோடு திருந்துவதற்கு முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ்..!

suvanappiriyan said...

இனியவன் தஞ்சை!

//தண்டனை கொடுக்கட்டும். கொடிப்பிடிப்பவர்கள் உறனட்டும். இந்த தண்டனையைப் பார்த்தாவது நமக்குள்ளே வெட்கப்பட்டு வேதனையோடு திருந்துவதற்கு முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ்..!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கட்டுரையை இன்னொரு முறை பொறுமையாக படிக்கவும்.

PUTHIYATHENRAL said...

தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

இந்தியா உடையும்! ஆனா உடையாது! http://www.sinthikkavum.net/2011/11/blog-post.html

suvanappiriyan said...

@தங்கமணி!

//இவ்வாறு அவதூறு எழுதுவது இதுவே கடைசியாக இருக்கட்டும்.//

//ஆனால் இன்று மட்டுமல்ல எந்த எதிர்காலத்திலும் முஸ்லிம் பெண்கள் மசூதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.//

இந்த வார்த்தை உங்களுக்கு அவதூறாக படவில்லையா? முதலில் ஆரம்பித்து வைத்தது நீங்கள்தானே!

இந்த வார்த்தையில் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்து மத சட்டங்களை இந்திய சட்டமாக்க முயல்பவர்களில் பெரும்பான்மையோர் பிராமணர்களே! எனவேதான் நான் அவ்வாறு எழுத நேர்ந்தது. இன்று வரை வர்ணாசிரமம் தழைக்க வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபடுபவர்களும் பிராமணர்களே! இதனை உங்களால் மறுக்க முடியுமா?

//தீண்டாமை என்பது திருக்குறளிலோ, மனுதர்மத்திலோ எந்த ஒரு இந்து சட்டத்திலோ இல்லை.//

திருக்குறளில் இல்லை. நானும் ஒத்துக் கொள்கிறேன். மனு தர்மத்தில் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்த ஒரு உண்மையை எப்படி மறைக்கிறீர்கள்? ஆதாரங்களை நான் தரட்டுமா? இந்து மதத்தில் வர்ணாசிரம கொடுமை இல்லாமல் இருந்திருந்தால் எனது முன்னோர்கள் இந்த மண்ணின் மதமான இந்து மதத்தை விட்டு விட்டு அரேபியாவில் உதித்த இஸ்லாததை ஏற்க வேண்டிய அவசியம் வந்திருக்காதல்லவா!

//மொகலாயர்கள் இந்தியாவில் தங்களிடம் தோற்ற வீர பரம்பரையின்ரை அடிமைப்படுத்தவும் தங்கள் பெண்களை வீட்டுக்குள்ளே வைப்பதால் அவர்களது மலத்தை அள்ள இவர்களை உருவாக்கியதால் உருவான பழக்கம்.//

வரலாற்றை எந்த அளவு திரிக்க முடியுமோ அந்த அளவு முயற்ச்சிக்கிறீர்கள். இந்து மத வேதங்களையும் ஸ்மிருதிகளையும் உண்டாக்கியதே மொகலாயர்கள்தான் என்று சொன்னாலும் சொல்வீர்கள்.

//Muhammad is also recorded to have said: “The best places of prayer for women are the innermost apartments of their houses”[20]//

பெண்களுக்கு குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. வீட்டை பாதுகாக்கும் பொறுப்பும் உளளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கான சமையல் வேலைகளை பார்ப்பதும் பெண்களின் பொறுப்பாக இருக்கிறது. இவ்வளவு வேலைகளை செய்யும் அனைத்து பெண்களுக்கும் ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் மசூதியில் சென்று தொழுவது சிரமமான காரியம். எனவேதான் மசூதிக்கு வர வசதியுடையவர்கள் வரட்டும். மற்றவர்கள் வீட்டிலேயே தொழட்டும் என்ற கட்டளை. ஆனால் ஆண்கள் கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும். இங்கு பெண்களின் வேலையின் தன்மையை அனுசரித்தே இந்த விலக்கு அளிக்கப்பட்டது. வேறு காரணங்கள் அல்ல.

VANJOOR said...

CLICK AND READ


****
முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி. தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்.

“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “ என்ற‌ தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.
****