Followers

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Saturday, January 11, 2020

சாமி கும்பிட வந்தவரின் வாயில் மூத்திரத்தை கொடுத்த கொடூரம்!



கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கருவனூர் கிராமத்தை சேர்நத தலித் சமுதாயத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 20) வெல்டராக பெங்களூரில் பணி புரிந்து வந்தார். சென்ற மார்ச் 2 ந்தேதி தனது கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கருவனூர் வந்துள்ளார் அரவிந்தன். இது பற்றி அரவிந்தன் கூறியதாவது....

'எனது உறவினர் தினேஷை (வயது 20) அழைத்துக் கொண்டு திருவிழா நடக்கும் கோவிலுக்கு சென்றேன். சில உயர் சாதி இந்துக்கள் நாங்கள் கோவிலுக்குள் வந்ததை ஜீரணிக்க முடியவில்லை. உடன் அவர்கள் கும்பலாக எங்களை சூழ்ந்து கொண்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். எங்கள் இருவரையும் கழிவறை இருக்கும் இடம் வரை இழுத்தச் சென்றனர். அங்கும் எங்கள் இருவரையும் தாக்க ஆரம்பித்தனர். அடி தாங்காமல் நான் கீழே வீழ்ந்தேன். அப்போது மிகுந்த தண்ணீர் தாகம் எடுத்தது. 'தண்ணீர்... தண்ணீர்' என்று பிதற்றினேன். உடனே உயர் சாதி இளைஞன் ஒருவன் எனது வாயில் மூத்திரத்தை பெய்தான். எனது உறவினர் தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடி எனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தான். பிறகு எனது உறவினர்கள் வந்து என்னை மீட்டனர்' என்கிறார் அரவிந்தன் என்ற தலித் இளைஞர்.

மறுநாள் அரசு ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்படுகிறார். அருகில் உள்ள கல்லாவி காவல் நிலையத்தில் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி நீதி கேட்டுள்ளார். ஆனால் காவலர்களோ வன்கொடுமை சட்டத்தில் கேஸை புக் பண்ணாமல் சாதாரண அடிதடி கேஸில் வழக்கு பதிந்துள்ளனர்.

'தமிழ்நாடு குறவர்கள் பழங்குடியின மக்கள் சங்கத்தின்' தலைவர் ரவி சொல்கிறார் 'காவல் துறையைச் சார்ந்த சிலர் என்னிடம் வன் கொடுமை சட்டத்தில் கேஸ் புக் பண்ணாமல் இருப்பதற்காக மேல் சாதியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளதாக சொல்கின்றனர். இதனை நாங்கள் விடப் போவதில்லை. நீதி மன்றத்துக்கு இந்த சம்பவத்தை எடுத்துச் செல்வோம்' என்கிறார்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
18-03-2015

தான் வணங்கும் சாமியை கும்பிட வந்தது அவ்வளவு பெரிய தவறா? மூத்திரத்தை அந்த இளைஞன் வாயில் ஊற்றும் அளவுக்கு அவன் செய்த குற்றம்தான் என்ன என்பதை இந்துத்வாவாதிகள் விளக்குவார்களா?

இந்து மதத்தில் உள்ள இது போன்ற தவறுகளை எல்லாம் களைந்தால் ஏன் மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடப் போகிறார்கள்? இந்து மதத்தை காக்க NRC போன்ற சட்டங்களும் தேவையில்லையே? மோடியும் அமித்ஷாவும் சிந்திப்பார்களா? 
...

Tuesday, October 10, 2017

ஆரியர்கள் தமிழகத்தில் காலூன்றியது எவ்வாறு?



ஆரியர்கள் நம் நாட்டின் பூர்வ குடிகள் அல்ல என்பதை அவர்களின் தோற்றங்களையும் பேசும் முறைகளையும் வைத்தே நம்மால் ஊகித்து விட முடியும். இது பற்றிய பல செய்திகளை ஆதாரங்களோடு 'வழிப்போக்கன்' என்ற பதிவர் தனது தளத்தில் பதிவுகளாக பதிந்துள்ளார். அதனை இனி பார்போம்.

அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத்தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்"
என்றே "பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்" என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

Saturday, July 22, 2017

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

காக்கிநாடா: ஆந்திராவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பராமரிக்கப்பட்ட, 46 பசுக்கள், நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு, பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நகரில், ஆதரவற்ற விலங்குகளை பராமரிக்கும் அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு, 480 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.


மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இங்குள்ள பசுக்களில் சில, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. உணவுப் பற்றாக்குறையால், பல பசுக்கள், பசியால் வாடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், கடந்த சில நாட்களாக, நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட, 46 பசுக்கள் பரிதாபமாக இறந்தன.


இது குறித்து, தகவல் அறிந்த, மாநில கால்நடைத் துறை அதிகாரிகள், மாடுகள் பராமரிக்கப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பசுக்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மிகச் சிறிய இடத்தில், அதிகப்படியான பசுக்கள் பராமரிக்கப்படுவதே, அவற்றின் நோய் தாக்கத்திற்கு காரணம். 150 பசுக்கள் மட்டுமே பராமரிக்க கூடிய இடத்தில், இந்த அமைப்பினர், 480 பசுக்களை பராமரித்து வருகின்றனர். மழைக் காலம் என்பதால், பசுக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.


அனைத்து பசுக்களுக்கும் போதிய உணவளிக்க முடியாததால், அவற்றில் சில, பட்டினியால் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நிமோனியா நோய் பாதிப்பாலும், சில பசுக்கள் பலியாகியுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தின மலர்
23-07-2017


இந்த பசுக்கள் விவசாயிகளிடம் இருந்திருந்தால் நல்ல விலைக்கு விற்று அதனை காசாக்கியிருப்பார்கள். உழைக்கும் மக்களுக்கு உணவாகவும் சென்றிருக்கும். அதை விடுத்து 'கோமாதா எங்கள் தெய்வம்: அதனை இறைச்சிக்காக அறுக்கக் கூடாது: அதனை நாங்களே பராமரிக்கிறோம்' என்று கோமாளித்தனமான முடிவை எடுத்ததனால் இன்று 64 பசுக்கள் இறந்துள்ளன. சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன. இந்த கோமாளிகளான இந்துத்வா ஆட்சியாளர்கள் இதனை என்றுதான் உணருவார்களோ!


Sunday, March 06, 2016

'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தோடு சர்ச் உடைக்கப்பட்டது!



சட்டீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் கிருத்தவர்களின் சர்ச் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்துத்வா அமைப்பில் ஒரு பிரிவான 'பஜ்ரங் தள்' அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 வெறியர்கள் (மனித உருவில் உலவும் மிருகங்கள்) சர்ச்சின் உள்ளே புகுந்து அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். அவ்வாறு உடைக்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பியுள்ளனர். இவர்களின் ராமன் கிருத்தவர்களின் வழி பாட்டுத் தலத்தை உடைக்க சொன்னாரா? என்பதை இந்துத்வாவாதிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

காவல் துறையினர் விபரமறிந்து சர்ச்சில் பிரவேசித்தவுடன் வெருண்டோடியிருக்கிறது இந்த வானரக் கூட்டம். போலீஸார் ஏழு நபர்களை கைது செய்துள்ளனர். இந்துத்வாவாதிகளைப் பொருத்த வரை தேச பக்தி என்பது இதுதான். தலைவன் எவ்வழியோ அவ்வழியே இந்துத்வாவினரும் செயல்படுகின்றனர்.

எனது நாட்டு எதிர்காலத்தினை நினைத்து கவலை கொள்கிறேன். கன்ஹயா போன்ற இளைஞர்களின் கையில் இந்த நாடு செல்ல வேண்டும்.

தகவல் உதவி
NDTV.COM
07-03-2016

http://www.ndtv.com/india-news/7-arrested-for-attacking-church-in-chhattisgarh-during-sunday-prayer-1284615

Tuesday, February 23, 2016

35 சீக்கியர்களை கொன்று குவித்த மாபாவிகள் யார் தெரியுமா?

பில் கிளிண்டன் வருகையின் பொது முப்பந்தைந்து சீக்கியர்கள் காஷ்மீர் சத்தீசிங் புராவில் கொல்லப் பட்டார்கள். அதைச் செய்தவர்கள் என ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதுபழியைப் போட்டார்கள். அவர்களை கொலை செய்து வழக்கை முடித்துக் கொண்டார்கள்.

முன்னால் அமெரிக்க உள்துறைச் செயலாளர் மெடலின் ஆல்பிரைட் 'தி மைட்டி அண்ட் ஆல் மைட்டி' என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு பில் கிளிண்டன் முன்னுரை எழுதியுள்ளார். கிளிண்டன் இந்தியா வந்த வேளையில் தான் இந்தப் படுகொலைகள் நடந்தன. இந்தப் படுகொலைகளை நடத்தியது ஹிந்துத்துவ வாதிகள் என்று பில் கிளிண்டன் அந்த நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்தப் படுகொலைகளைச் செய்தது கஷ்மீர் தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி வழக்கம் போல் ஐந்து கஷ்மீரிகளை இராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆம்னஸ்டி இண்டர் நேஷனல், பஞ்சாபி மனித உரிமைகள் அமைப்பு, அரச ஒடுக்குமுறைக்கான இயக்கம் (The movement against state repression) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையின் விவரங்களைச் சுட்டிக் காட்டித்தான் பில் கிளின்டன் இவ்வாறு கூறியுள்ளார்.

சீக்கியர்களை படுகொலை செய்தவர்கள் ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். சீக்கியர்களைச் சூழ்ந்து அவர்கள் சீக்கியர்கள் தானா என்று பரிசோதித்து உறுதிப்படுத்திய பின் குருத்வாராவின் சுவரைப் பார்க்குமாறு திருப்பி நிறுத்தி கொலைகாரர்கள் அந்த அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றார்கள். படுகொலைகளை நிகழ்த்தி விட்டு திரும்பிப் போகும் போது ஹிந்துத்துவ கோஷங்களை எழுப்பினார்கள் அந்தக் கொலைகாரர்கள்.

சீக்கிய பெருங்குடி மக்கள் அன்று அமைதி காத்தார்கள். அதனால் முஸ்லிம்களைத் தாக்கிடவில்லை. (ஒரு வேளை அவர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்கலாம்.)

அப்போது முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி எஸ்.ஆர். பாண்டியன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஓர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் பாண்டியனுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இதனால் நீதிபதி பாண்டியன் தன பொறுப்பை சரி வர நிறை வேற்ற இயலாது என்று கூறி இராஜினாமா செய்து விட்டார். பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் கைகளுக்குச் சென்றது. அவர்கள் இது எதிர் தாக்குதல் அல்ல மாறாக பட்டவர்த்தனமான படுகொலை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கொல்லப் பட்ட அந்த ஐந்து முஸ்லிம்களும் நமது ராணுவச் சிறையில் பல மாதங்கள் இருந்தவர்கள். அந்த முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்து விட்டு எதிர் தாக்குதல் என்ற எண்கவுண்டரில் கொன்றதாக அறிவித்து விட்டார்கள்.

மத்திய புலனாய்வுத் துறை ஒரு லெப்டினென்ட் கலோனல்,இரண்டு மேஜர்கள், ஒரு சுபேதார் போன்றவர்கள் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதே போல் கஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சோறு பதம்.

Source: India today. May 9. 2006, “The Mighty And Almighty” –Medlin Albret

Thursday, January 21, 2016

திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை





26-11-2015 அன்று குஞ்சம்மாள் என்ற என்பது வயதைக் கடந்த மூதாட்டி இயற்கை எய்தியுள்ளார். ஊரே வெள்ளக்காடாக இருந்த நேரம் அது. குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல முயற்சிக்கின்றனர், ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி புகார் கொடுக்கிறார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் மூன்று நாள் கடக்கிறது. பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில் “சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை நிர்பந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்ற சூழலில் 29-11-2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வயல்வெளி வழியாகச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.

அடுத்த ஒரு மாதத்தில் 90 வயதைக் கடந்த குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து 03-01-2016 அன்று இயற்கை எய்துகிறார். பேரன் கார்த்தி இரவோடு இரவாக சென்னை சென்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 04-01-2016 அன்று நீதிமன்றம் “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அவசர கோலத்தில் வயல்வெளியில் பாதை ஏற்படுத்தி உள்ளனர். வாய்க்கால்களில் மண்மூட்டைகளை அடுக்கி, சாலைகளை இணைத்துள்ளனர். தங்கள் நிலையில் உறுதியாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லமுத்து சடலம் வைத்துள்ள வீட்டில் ஒன்று குவிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி பகுதிக்கு மின் தொடர்பை துண்டித்துள்ளனர். “ஊரில் சாவு மின்தொடர்பை துண்டிக்கக் கூடாது” என்று கடைநிலை ஊழியர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “மேலிட உத்தரவு அமல்படுத்துங்கள்” என்று கடைநிலை ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தங்களது இயலாமையையும், கையறு நிலையையும் கண்கலங்கியபடியும், தயக்கத்துடனும் மின்துறை ஊழியர்கள் வெளிப்படுத்தினர். திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் மின்வாரிய அதிகாரிகளையும் இணைக்கப்படவேண்டும்.

குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாத்துள்ளனர். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்கியுள்ளனர். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

நிலைமை கட்டுமீறவே மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து சாலை பிரியும் இடத்தில் தடிஅடி நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றி வயல்வழியே எடுத்துச் சென்றது காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தேவர் – இமானுவேல் குருபூசை பாதுகாப்பு புகழ் ஜெயசந்திரன் காவல் துறையினரைப் பிணம் தூக்க வைத்து சாதனை படைத்துள்ளார். குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

500-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்து சம்பவத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர். மயிலாடுதுறையிலும், திருவாரூலும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நிலவிய கள்ள மௌனத்தைக் கலைத்துப் பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.

நன்றி வினவு

http://www.vinavu.com/2016/01/21/thirunalkondacheri-caste-atrocity-report/

இப்படி ஒரு கொடுமை உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா? அவர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தானே! இறந்த பிணத்தை தெரு வழியாக தூக்கிச் செல்வதில் அப்படி என்ன கௌரவம் குறைந்து போய் விடும். திட்டமிட்டு பிணம் அழுக வேண்டும் என்பதற்காக மின்சாரத்தையும் துண்டித்திருக்கிறார்கள்? வயல் பாதை கரடு முரடாக இருக்கும் என்பதால் மணல் மூட்டைகளை போட்டு தற்காலிக சாலை அமைத்துள்ளதை பாருங்கள். சிரமப்பட்டு மணல் மூட்டை கொண்டு சாலைகள் அமைப்பார்கள். ஆனால் தெரு வழியாக பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். என்னவொரு அழகிய மனிதாபிமானம்.

மனித குலம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வு இது.

Wednesday, January 20, 2016

எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!





எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!

கடந்த 4 ஆண்டுகளில் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்!

டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!

தமிழ் இந்து நாளிதழ்
21-01-2016

Thursday, January 14, 2016

தர்ஹா கலாசாரம் இந்து சகோதரர்களையும் வழிகெடுக்கிறது!

தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: ...

Posted by Nazeer Ahamed on Thursday, January 14, 2016

தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: சாமி சிலைக்கு புடவை கட்டி விடுவது போல சமாதிக்கு சால்வை போர்த்துவது: அங்கு பால் ஊற்றினால் இங்கு சந்தனம் பூசுவது: அங்கு தேர் இழுத்தால் இங்கு சந்தனக் கூடு இழுத்தல்: அங்கு மந்திரம் ஓதி திண் பண்டங்கள் கொடுப்பது: இங்கு ஃபாத்திஹா ஓதி தின்பண்டங்கள் வழங்குவது:

அத்தனையும் பார்பனிய கலாசாரம்: அதனை அப்படியே சில பெயர் மாற்றங்களோடு தர்ஹாக்களில் அரங்கேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.

முன்பு யூதர்கள் நபிகள் காலத்தில் இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமியராக மாறி பல கட்டுக்கதைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றியதை நாம் அறிவோம். அந்த நபி மொழிகளை எல்லாம் தரம் பிரித்து தற்போது அறிஞர்கள் உண்மையை கண்டறிந்துள்ளனர்.

அதே போல்தான் இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க பலர் இஸ்லாமியராக மாறி இது போன்ற பழக்கங்களை புகுத்தி விட்டனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு அன்று அந்த மக்களிடம் இல்லாததால் தர்ஹா கலாசாரத்தை அன்றைய மக்கள் அவ்வளவாக எதிர்க்கவில்லை.. அது இன்று இஸ்லாத்தின் ஒரு அங்கமாகவே இந்தியாவில் மட்டும் மாறி விட்டது.

தர்ஹாக்களின் செயல்பாடுகளை வைத்து இன்று வரை எந்த இந்துவாவது இஸ்லாத்தை ஏற்றிருக்கிறாரா? பல வருடங்கள் தர்ஹாவுக்கு வரும் இந்துக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியாது. தர்ஹாவுக்கும் போவார்: காளி கோவிலுக்கும் போவார்: மாதா கோவிலுக்கும் போவார்: அவரைப் பொருத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை. இது மத ஒற்றுமையை கொடுக்காது. மேலும் குழப்பத்தைத்தான் உண்டு பண்ணும்.

சன் டிவியின் இந்த சீரியலையும் பாருங்கள். இதனை எடுத்த டைரக்டரும் கதாசியரியரும் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்? இன்றைய அறிவியலுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் குர்ஆன் எங்கே? மயிலிறகால் வருடி ஊதி விடும் இந்த மூடன் எங்கே? வர்ணாசிரமத்தையும், புரோகிதத்தையும், மூடப்பழக்கத்தையும் ஒழிக்க வந்த இஸ்லாத்தின் பெயரால் இந்த கொடூரங்கள் பரவலாக அரங்கேற்றப்படுகிறது.

ஏகத்துவ வாதிகள் கடந்த 30 வருடங்களாக செய்த தொடர் பிரச்சாரத்தின் காரணமாக இன்று இறைவனின் உதவியால் தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைய தலைமுறையினர் தர்ஹா மாயையிலிருந்து விடுபட்டுள்ளனர். விலகி நிற்கும் மற்ற இஸ்லாமியர்களும் ஏகத்துவவாதிகளோடு கைகோர்த்து தர்ஹா வழிபாட்டை இல்லாதொழிப்பார்களாக!

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

குர்ஆன் 72:18


ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு சமாதியையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1662)

Sunday, January 10, 2016

இஸ்லாமிய பெண்கள் கடத்தலில் தொடர்புடைய பிஜேபி எம்பி!



'ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ்'(AIMMM) ன் உண்மை அறியும் குழு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. 12 லிருந்து 15 வயது நிரம்பிய இஸ்லாமிய பெண்களை கிராமங்களிலிருந்து கடத்திச் செல்வது: பிறகு அவர்களை சில காலம் தங்க வைத்து பல இந்து இளைஞர்களைக் கொண்டு வன்புணர்வு செய்விக்க வேண்டியது. சில காலம் கழித்து அந்த பெண்களை இந்து இளைஞர்களோடு வாழ நிர்பந்திக்கப்படுத்துவது. மேலும் சிலருக்கு வாழ்வை சீரழித்து கிராமத்தில் திரும்ப விட்டு விடுவது. இது கடந்த ஒரு வருடங்களாக தொடர்ச்சியாக நடப்பதாக உத்தர பிரதேசத்தின் பல கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உத்தர பிரதேசத்தின் குஷி நகரில்தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இவ்வாறு கடத்தப்பட்ட சிறுமிகள் உபியின் கோரக்பூர் நகருக்கு கொண்டு வரப்படுகின்றனர். இவ்வாறான கடத்தல்களுக்கு ஆதரவாக இருந்து செயல்படுபவர் பிஜேபியின் எம்பி யோகி ஆதித்யநாத் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை 'முஸ்லிம் மஜ்லிஸ்' கண்டுபிடித்துள்ளது. ஒரு யோகியின் வேலையை பார்த்தீர்களா? இறை பக்தி உடைய ஒருவன் செய்யக் கூடிய செயலா இது? இந்து மதத்துக்கே இது ஒரு இழுக்கல்லவா? இந்து மதத்தை வளர்க்கும் வழி இதுதானா?

-----------------------------------------------

இதே போன்ற வழி முறைகள்தான் சற்று மாறுதலாக தமிழகத்தில் அரங்கேற்றப்படுகின்றன. கல்லூரிக்குச் செல்லும் இளம் இஸ்லாமிய மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து பின்னர் அவர்களை இந்துக்களாக மணம் புரிந்து கொள்கின்றனர். பெரும்பாலான பெண்களை சுகம் அனுபவித்து விட்டு அவர்களின் ஊருக்கே திருப்பி அனுப்பி விடும் கொடுமையும் நடந்து வருகிறது. இதற்கு பெண்ணை பெற்ற பெற்றோர்களும் காரணம் என்று சொல்வேன். வயது வந்த பெண்களை தக்க ஆண் துணையின்றி கல்லூரிக்கு அனுப்புவதே முதலில் தவறு. தன்னை ஒருவன் 'அழகி' என்று வர்ணித்து விட்டால் மயங்கி விடும் பெண்களே அதிகம். அவர்களின் வயது அப்படி. சினிமாக்களாலும் சீரியல்களாலும் சீரழிந்த சமூகத்துக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். கல்லூரிக்கு பாதுகாப்பாக உங்களால் அனுப்ப முடியவில்லையா... அஞ்சல் வழி மூலம் கல்லூரி படிப்பை தொடரச் சொல்லுங்கள். யாரிடம் செல் போனில் பேசுகிறாள் என்பதையும் கண்காணியுங்கள். 'என் மகள் அப்படி எல்லாம் போக மாட்டாள்' என்ற பெற்றோரின் நம்பிக்கையே பல பெண்களின் வாழ்வை சீரழித்துள்ளது. குடும்ப மானமா? பெண்ணின் கல்லூரி படிப்பா என்பதை முடிவு செய்ய வேண்டியது நமது கைகளில்தான் இருக்கிறது.

நம் அனைவரின் குடும்ப பெண்களின் மானத்தையும் இந்த கயவர்களிடம் இருந்து இறைவன் காத்தருள்வானாக!

http://www.coastaldigest.com/index.php/news/82800-yogis-hindu-yuva-vahini-accused-of-abducting-raping-teenage-muslim-girls

இந்து சகோதரருக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!

இந்துத்வாவுக்காக தினம் தினம் பதிவுகள் எழுதி விவாதித்துக் கொண்டிருக்கும் ராம் நிவாஸ் கல்யாண ராமன் கைதையொட்டி நேற்று ஒரு பதிவு இட்டார். அதை அப்படியே தருகிறேன்.....

//வழமையா... ஃபத்வா போட்டு... தக்பீர் சொல்ல பிளான் பண்றவய்ங்க... புதுசா... போலீசு... கோர்ட்டுன்னு... போயிருக்காங்கே...

ஒருவேளை அறிவு வளர்ந்திடுச்சோ....

அய்யய்யோ... இவிங்களுக்கு அறிவுலாம் வளர்ந்திச்சுன்னா...

1400 வருசத்துக்கு முந்தின அரேபிய கலாச்சாரத்தை இங்கே எப்படி நிலைநாட்ட முடியும்..?...

போச்சா.. போச்சா... பி.ஜேவோட இம்புட்டு வருச உழைப்பு மண்ணோட மண்ணாப்போச்சா.....

பார்த்துக்கிட்டே இருங்க..... குரான்ல, ஹதீஸ்ல...... போலீஸ், கோர்ட்டுங்கிற வார்த்தைலாம் இல்லை...
அதனால ஏக இறை கொள்கையை ஏத்துக்கிட்ட ஈமாந்தாரிகள்..... போலீஸ், கோர்ட்டுன்னு போகக்கூடாதுன்னு... ‪‎புதுசா ஒரு‬.....‎ஃபத்வா போடப் போறாய்ங்க‬.....//

நாம் நேரான வழியில் சென்றால் அவர்களுக்கு எரிகிறது பார்த்தீர்களா? நாமும் நரகல் நடையில் எழுத வேண்டும்: அவர்களின் கடவுள்களை திட்டி பதிவு எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் பிஜேபிக்கு ஆள் பிடிக்க முடியும்.

------------------------------------------------------------

இனி இந்து பிற்படுத்தப்பட்ட சகோதரர் ஒருவரின் பதிவையும் அவரின் உண்மையான அன்பையும் இனி பார்போம்.

//இந்துத்துவா சித்தாந்தம் பேசுபவர்களின் வெற்றி இசுலாமியர்களின் உணச்சிவசப்படுதலில் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டால் இந்துத்துவா கொள்கை பேசுபவர்களை தோல்வியடைச் செய்யலாம்.

இசுலாமியர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்காக எந்த ஒரு இந்துவும் செயல்படுவதில்லை இந்துத்துவா சிந்தணையுடையவர்கள் அதை சரியாக செய்கின்றார்கள்.

இசுலாமியர்கள் அறிவுவசப்பட வேண்டும் உங்களுக்கு எதிரான தாக்குதல்களை அறிவுவசப்பட்டு எதிர்த்து வெற்றி காண வேண்டுமே தவிற உணர்ச்சிவசப்படுதலின் மூலம் அல்ல.

அறிவுவசப்பட்டு எடுக்கும் முடிவும் சட்டத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் ஃபேஸ்புக்கில் மத நல்லிணக்கத்தை சீர் குழைக்கும் வகையில் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்த கல்யாண் ராமன் போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி எப்படி சிறையில் அடைத்தீர்களோ அப்படி தான் இருக்க வேண்டும்.

உங்களை அசிங்கப்படுத்துபவர்களை சட்டபடி எதிர் கொள்ளுங்கள் அறவழியில் போராட்டம் செய்யுங்கள் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள் உங்கள் மீது தவறு இல்லையென்றாலும் அதையே காரணம் காட்டி உண்மையின் பக்கம் இருக்கும் இந்துக்களை உங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள் இந்துத்துவா சக்திகள்.

உங்களின் நல்ல மனதை நான் அறிவேன் நான் புரிந்துக் கொண்டது போல் உண்மையின் பக்கம் நின்று பேச கூடிய இந்துக்களின் மனங்களை கவரும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.

அனைவரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து விட முடியாது ஆனால் சிறுக சிறுக முடியும்.

பெரியார் மண்ணில் மதவெறி அரசியல் செய்ய முடியாது பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடம் இல்லை.

இசுலாமியர்கள் தடித்த வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள் மென்மையாகவே பேசுங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எல்லோருக்கும் அழகான முறையில் எடுத்து கூறுங்கள் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என் மனதில் அவ்வளவு வலிகள் இருக்கிறது ஒவ்வொன்றாக பின் வரும் நாட்களில் கூறுகிறேன்.
என்னை இசுலாமியர் என்று கூறி திட்டும் என் சொந்த மதத்தவர்களை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் அவர்கள் காழ்புணர்ச்சியில் பேசுகிறார்கள் இந்துத்துவா கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் புரிதல் இல்லாமல் திட்டி தீர்த்து கொண்டு இருக்கிறார்கள் மென்மையான விளக்களின் மூலம் நான் பதில் கூறி கொள்கிறேன்.

இந்துக்களும் இசுலாமியர்களும் ஒற்றுமையாக என்றென்றும் இருக்க வேண்டும் என்பதே இந்த சாமாணியனின் விருப்பம். நன்றி

Senthil Prakash Selvaraj

செந்தில் பிரகாஷ் //


இந்து சகோதரர்களையும் இந்துத்வா வெறியர்களையும் பிரித்துப் பார்க்க நாம் பழகிக் கொண்டு விட்டால் நம் நாட்டில் 90 சதமான மத மோதல்களை தடுத்து விடலாம். எனது நாட்டை காவி வெறியர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவானாக!

Friday, January 08, 2016

எச்சில் இலையில் புரண்டால் நோய் தீர்ந்து விடுமா?



கர்நாடகாவில் பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு கோவில் இது.

இந்த கோவிலின் சிறப்பம்சம்... பிராமணர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலை மீது பிற ஜாதியினர் படுத்து உருண்டால் அவர்களுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் வராது என்று இந்த கோவிலை நிர்வகிக்கும் பிராமணர்கள் எழுதி வைத்துள்ள ஐதீகமாம். பிராமணர் அல்லாத பிற ஜாதியினர் வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வந்து எச்சில் இலை மீது படுத்து உருண்டு விட்டு செல்கிறார்கள்.

இதை தவறு என்று விளங்காமல் உலகில் எவ்வளவு பெரிய படிப்பை நீ படித்து இருந்தாலும் நீ ஒரு முட்டாளே. நாங்கள் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ள கூடிய எந்த இந்துத்வா அமைப்பும் இதை கண்டிக்காது. காரணம் இது பிராமணர் நலன் சார்ந்த விஷயம்.

இந்த கொடுமையை, கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் பகுத்தறிவுவாதி மட்டும் தான் கண்டிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆறறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனும் இதை கண்டிக்க வேண்டும்.

- அருண்குமார்

-------------------------------------------------

சுய மரியாதையுடைய இந்துக்கள் இது போன்ற பழக்கங்களால் வெறுப்புற்று இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இதனை பார்த்து வெறுப்புற்ற இந்துத்வாவினர் இஸ்லாமியரின் மீது வன்முறையை ஏவுகின்றனர்.

இந்துத்வாவாதியினரே! உங்கள் மதத்தில் உள்ள குறைகளை களைந்து விட்டாலே மத மாற்றங்களை தடுத்து விடலாம். ஆனால் அதனை செய்ய மாட்டீர்கள். ஏனெனில் காலாகாலத்துக்கும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டுமென்பதே பார்பனியத்தின் நோக்கம். இந்த நோக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மதமாற்றங்களை உங்களால் தடுக்க முடியாது.

Wednesday, January 06, 2016

பதான்கோட் சண்டை: 'ராணுவம் அருகே இருக்க, என்எஸ்ஜி-யை வரவழைத்தது ஏன்?'



பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களை ஈடுபடுத்தியது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பதான்கோட்டுக்கு அருகே ஆயிரக்கணக்கான ராணுவ வீர்ர்கள் கைவசம் இருக்கும் போது, முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக டெல்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை வரவழைக்கப்பட்டது பெரிய தவறு, மேலும், உடனடி நடவடிக்கைகளில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, சில என்.எஸ்.ஜி. படையினரை வரவழைத்ததால் கால தாமதம் ஏற்பட்டது என்று ராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டார நிபுணர்கள் சாடியுள்ளனர்.

இது குறித்து பதான்கோட்டுக்கு அருகே பிரிகேடியராக இருக்கும் வீரர் ஒருவர் கூறும்போது, “அவர்கள் செய்ததை எங்களில் பலரால் நம்பவே முடியவில்லை. அருகிலேயே இரண்டு இன்ஃபாண்ட்ரி பிரிவுகளும், இரண்டு ஆயுதப் படைப்பிரிவுகளும் உள்ளன. வடக்கு ராணுவ தலைமைச் செயலகமும் உள்ளது. இந்தப் படையினர் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஆனால் விமானப்படை தளத்துக்கு என்.எஸ்.ஜி. படையினர் சிலரை வரவழைத்தது காலதாமதத்துக்கே வழிவகை செய்தது” என்றார்.

லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கடோச், கூறும்போது, “ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தாக்க என்.எஸ்.ஜி. கமாண்டோ பயன்படும், ஒட்டுமொத்த பகுதியையும் அதனால் கையாள முடியாது. என்.எஸ்.ஜி.யை அனுப்பியதில் தீங்கொன்றும் இல்லை. ஆனால், திட்டவட்டமான கட்டளைகளும், கட்டுப்பாடும் இருப்பது அவசியம். எல்லையோர காவல் படை, என்.எஸ்.ஜி. ஆகியவற்றை மனம் போன போக்கில் அழைத்து விட முடியாது. இங்கு ஏதேனும் கட்டளைகளும், வழிகாட்டுதலும், கட்டுப்பாடும் இருந்ததா? இதற்கெல்லாம் ராணுவமே சிறந்தது” என்றார் அவர்.

முன்னாள் ராணுவ தளபதி வி.பி.மாலிக், 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “என்.எஸ்.ஜி. சரியான தேர்வா என்பது எனக்கு ஐயமாக உள்ளது. அவர்கள் டெல்லியிலிருந்து வந்தனர். மாறாக உள்ளூரை நன்கு அறிந்த படையினரிடமே பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும்” என்றார்.

ராணுவ சேவையில் இருக்கும் ஒரு அதிகாரி கூறும்போது, “10 சிறப்புப் படைப் பிரிவுகள் கொண்ட ராணுவம், அல்லது குறைந்தது உதாம்பூரில் இருந்து ஒரேயொரு படை பதான்கோட்டுக்கு 2 மணி நேரங்களில் வந்திருக்க முடியும். நாங்கள் இத்தகைய திடீர் தாக்குதல்களை முறியடிக்கவே சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளோம்.

மாறாக நீங்கள் என்.எஸ்.ஜி. கமாண்டோக்களை அனுப்பினீர்கள். அவர்கள் வெறும் 160 கமாண்டோக்களுடன் 24 சதுர கிலோமீட்டர் பகுதியை அவர்களால் சிறப்பாக பாதுகாக்க முடியும் என்று யார் கூறினார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதாவது உள்ளூர் ராணுவப்படை இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள தயாராகப் பயிற்சியில் இருந்துள்ளது, ஆனால் சமயம் வரும்போது இவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படாதது பெரும் தவறு என்று பலரும் கருதுகின்றனர்.

முன்னாள் ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநரான லெப்.ஜெனரல் விநோத் பாட்டியா 'தி இந்து' (ஆங்கிலம்) இதழில் கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எப்படிக் கையாளப்பட வேண்டுமோ அப்படி கையாளப்படவில்லை. உண்மை என்னவெனில் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ராணுவம் அழைக்கப்பட்டிருந்தால் அதன் பலத்துக்கு இன்னும் விரைவில் முறியடிக்கப்பட்டிருக்கும்” என்றார்

"இந்திய ராணுவம் பல ஆண்டுகளாக பயங்கரவாத எதிர்ப்புச் சண்டைகளை திறம்பட கையாண்டு வருகிறது. ராணுவத்திடம் ஒப்படைத்திருந்தால் உயிரிழப்புகளும் கூட இருந்திருக்காது. காஷ்மீருக்கு எத்தனை முறை இத்தகைய பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்காக என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளனர்? அங்கு ராணுவம்தான் இதனை திறம்பட முறியடித்து வருகிறது” என்று பணியிலிருக்கும் மற்றொரு ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

ஏகப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கையில் ஈடுபட்ட போது யார் இந்த அமைப்புகளுக்கு கட்டளைகளை வழங்கினர்? அதாவது யார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ
06-01-2016

நான் முன்பு எதை எல்லாம் சொன்னேனோ அது உண்மைதான் என்பதை இந்த கட்டுரை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இன்னும் உண்மைகள் தோண்ட தோண்ட வரும்.

Tuesday, January 05, 2016

நிரஞ்சனின் தந்தை தனது மகனைப் பற்றி உருக்கம்!



பஞ்சாபில் இறந்த நிரஞ்சனின் தந்தை சிவராஜனின் உருக்கமான பேட்டி.....

"பள்ளியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற நிரஞ்சன் எம்.வி. இன்ஸ்ட்டியூட்டில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தான். அங்கும் சிறப்பாக படித்து முடித்ததால், கேம்பஸ் இண்டர்வியூ-வில் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டு, மலையேற்ற பயிற்சிக்கு போனான்.

நிரஞ்சன் 2003-ல் தன் விருப்பப்படியே புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்றான். தேசியப் பாதுகாப்பு படையில் வெடிகுண்டு நிபுணராக சேர்ந்தான். 2012-ல் நிரஞ்சனுக்கும், பாலக்காட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராதிகாவும் திருமணம் நடந்தது. இப்போது ஒன்றரை வயதில் விஸ்வமாயா என்கிற பெண் குழந்தை இருக்கிறாள். கடந்த சனிக்கிழமை காலை போனில் பேசும்போது கூட, ''அப்பா, பதான்கோட் விமானப்படை தளத்துக்கு போகிறேன். நீங்கள் நேரத்துக்கு சாப்பிட்டு, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள்''என சொன் னான். நிரஞ்சனின் மரணத்தை தாங்க முடியவில்லை. இருப்பினும் நாட்டுக் காக, அவனது விருப்பப்படியே ராணுவ உடையிலே உயிர்த் துறந் திருக்கிறான். கடைசியாக செப்டம்பர் மாதம் ஓண‌ம் பண்டிகையின் போது வீட்டுக்கு வந்தான். மீண்டும் ஜனவரி 26-ம் தேதி நீண்ட விடுமுறையில் வந்து, பெங்களூருவில் தங்குவதாக சொல்லிவிட்டு போனான். இப்போது பிணமாக வந்திருக்கிறான்."

--------------------------------

இந்தியாவும் பாகிஸ்தானும் உயர் மட்ட அளவில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கவலையற்று இருக்கிறார்கள். இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்கள் இந்தியாவிலும் இருந்து கொண்டு பொது மக்களை கொன்று குவிக்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தங்கள் இடத்தில் பிர்சனை விஸ்வரூபம் எடுத்தால் உடன் எல்லையில் பத்ட்டத்தை உண்டு பண்ணி மக்களை திசை திருப்புகிறார்கள். பதான் கோட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்த்தப்பட்டுள்ளது. எல்லையில் ராணுவம் என்ன செய்கிறது. இத்தனை கிலோ மீட்டர் இத்தனை ஆயுதங்களோடு உள்ளே எப்படி வந்தார்கள். முன்பு கார்கில் யுத்தம் நடந்த போதும் பல கிலோ மீட்டர் உள்ளே வந்து கூடாரம் அடித்து தங்கியுள்ளார்கள். பாராளுமன்ற தாக்குதலும் நடந்து பல ஜவான்கள் உயிரிழந்தது ஞாபகம் இருக்கலாம். பிஜேபி ஆட்சியில் மட்டும் ஏன் தொடர்ந்து இவ்வாறெல்லாம் நடக்கிறது. உங்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ள எதிரி நாட்டோடும் கூடிக் குலாவுவீர்களா? சொந்த மக்களையே பலிகடா ஆக்குவீர்களா?

இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாக்கி விடுங்கள். அல்லது இந்தியாவையும் பாகிஸ்தானையும் நிரந்தரமாக பிரித்து விடுங்கள். இனிமேலும் நீங்கள் கோடிகளில் புரள்வதற்காக அப்பாவி ராணுவ வீரர்களின் உயிரை காவு கொடுக்காதீர்கள்.

பாகிஸ்தான் சிம் கார்டுடன் துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் கைது!







பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டின் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திநமது ஜவான்கள் பலர் உயிரிழந்தது அறிந்திருக்கலாம். நேற்று சந்தேகத்திற்கிடமாக காரில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை போலீஸார் நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் அவர்கள் போலீஸாரை நோக்கி சுட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட போலீஸார் அவர்களை வளைத்து உயிரோடு பிடித்துள்ளனர்.

பிடிபட்டவர்களின் பெயர் போலு (வயது 20) சந்தீப் சிங் (வயது 25) ஜதிந்தர் சிங் (வயது 34) இவர்கள் மூவரும் பஞ்சாiபை சேர்ந்தவர்கள். போலீஸாரால் தேடப்பட்டு வரும் சமூக விரோதியான ஜௌபால் என்பவனின் நெருங்கிய கூட்டாளிகள் இம்மூவரும் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரட்டை குழல் துப்பாக்கிகள், பாகிஸ்தான் சிம் கார்டுகள், 190 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பதான் கொட்டில் நடந்த தாக்குதலில் கண்டிப்பாக இவர்களுக்கும் தொடர்பிருக்கும். பாகிஸ்தான் ஏஜண்டுகளாக இவர்கள் செயல்பட்டுள்ளார்களா மேலும் எத்தனை பேர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் விசாரணையில் தெரிய வரும். நம் நாட்டு இந்துத்வாவாதிகளின் செயலாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

தகவல் உதவி
hindustantimes
ndtv
04-01-2016

MOHALI: Three people have been arrested in Punjab's Mohali with Pakistani sim cards, a Pakistan-made automatic rifle and other weapons, the police have said.

The arrest of the three men, described by the Mohali police as heroin smugglers, comes as operations are still on against Pakistani terrorists who attacked an air force base in Pathankot, also in Punjab.

Senior police officer GPS Bhullar ruled out any connection between the men arrested in Mohali and the terrorists. Smugglers who operate across the Indo-Pak border in Punjab routinely use Pakistani sim cards to communicate with their contacts, he said.

He said the three men arrested today belonged to a cartel smashed earlier by the police.

Mohali is adjacent to Chandigarh, the shared capital of Punjab and Haryana.

Terrorists suspected to belong to the Pakistan-based terror group Jaish-e-Mohammad, attacked the Pathankot air base early on Saturday morning and an operation to eliminate them has been on since then.

All six terrorists who launched the attack on the Air Force base on Saturday morning have been killed after an offensive operation that lasted for over 60 hours.

http://www.ndtv.com/others-news/3-gangsters-arrested-in-punjabs-mohali-with-pakistani-sim-cards-1261985

http://www.hindustantimes.com/punjab/3-held-with-sim-card-arms-ammunitions-in-sas-nagar/story-HFVgMMeL97gEuRlwinZVDJ.html

Monday, January 04, 2016

ஹாஜா மைதீனை கொன்ற கொலைபாதகர்கள்

கொலை செய்தவர்களுக்கும் கொலை செய்யப்பட்ட ஹாஜாவுக்கும் முன் பகை ஏதுமில்லை. கலவரத்தை உண்டு பண்ணி இந்து முஸ்லிம் முறுகல் நிலையை உண்டாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த கொலை நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்த நாய்களை வெளியில் விட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மேலும் சீர்கெடும்.

எனவே இந்த குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் மேற் கொண்டு முக்கிய ஆவணங்களை காவல் துறை வசமோ அல்லது நீதி மன்றத்திலோ ஒப்படைக்க நம்மவர்கள் முயற்சிக்க வேண்டும்.

உணர்ச்சி வசப்படாமல் அமைதி காத்ததால் உண்மை குற்றவாளிகளை வெளி கொண்டு வந்துள்ளோம். இது வரை இதைப் பற்றி தமிழக பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் கவனியுங்கள். விஜயகாந்த் 'த்தூ' என்று துப்பியதில் தவறேதும் இல்லை.

'ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முதலில் அறிமுகப்படுத்தியது யார்?



ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர் ஜைனுல் ஆபிதீன் ஹஸன்!

இதுவரை எல்லோரும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற துடிப்பான முழக்கத்திற்கு சொந்தக்காரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என நம்பியிருந்தார்கள். ஆனால், நரேந்திர லூதர் எழுதிய ‘LEGENDOTES OF HYDERABAD’ என்ற நூலில் இன்னொரு வரலாறு கூறப்பட்டுள்ளது.
நேதாஜியின் செயலாளரான ஜைனுல் ஆபிதீன் ஹஸன் என்பவர்தாம் ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் தெரிவித்தார் என்பதாகும்.

லூதரின் இந்நூலில் நேதாஜியுடனான பேட்டி, ஆவண ரீதியான ஆதாரங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து ’ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கம் எவ்வாறு உருவானது என்று விவரிக்கப்படுகிறது.

ஜைனுல் ஆபிதீன் ஹஸன், ஜெர்மனியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது நேதாஜிக்கு அறிமுகமானார்.

நேதாஜியின் ராணுவத்தில் இணைந்தபோது ஹஸனிடம், ராணுவத்தை சந்திக்கும்போது முழக்கமிட ஒரு வார்த்தை தேவை என்று நேதாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போழுது ஹஸன் கூறிய வார்த்தைதான் ‘ஜெய் ஹிந்த்’.

இவ்வாறு நாட்டின் அதிகாரப்பூர்வ முழக்கமாக ’ஜெய் ஹிந்த்’ மாறியது என்று இந்நூல் கூறுகிறது.

- By Abdul Gafoor February 25, 2014 08:28

NEW DELHI: Many believe that Subhash Chandra Bose coined the slogan 'Jai Hind' but a book on legends and anecdotes of Hyderabad says it was first used by a man from that city who gave up his engineering studies in Germany to become Netaji's secretary and interpreter.

In his book " Lengendotes of Hyderabad", former civil servant Narendra Luther presents a number of interesting articles, based on documentary evidence, interviews and personal experiences, on the city that is much celebrated for its romantic origin and composite culture.

One interesting titbit is on the origin of the slogan 'Jai Hind'. According to the author, it was coined by Zain-ul Abideen Hasan, son of a collector from Hyderabad, who went to Germany to study engineering.

During World War II, Netaji had escaped to Germany to canvass support for an armed struggle to liberate India, Luther says.
"He addressed meetings of Indian prisoners of war and other Indians exhorting them to join him in his struggle. Hasan met him and inspired by his patriotism and spirit of sacrifice, he told him that he would join him after finishing his studies.

"Netaji taunted him that if he was worried about small things like these, he could not take up big causes. Stung by that rebuke, Hasan gave up his studies and became Netaji's secretary and interpreter," the book, published by Niyogi, says.

Hasan became a major in the INA and participated in the march from Burma (now Myanmar) across the Indian frontier. The army reached Imphal. It was severely handicapped in supplies and armaments and so had to retreat, the author says.

"Netaji wanted to introduce an Indian form of greeting for his army, and for independent India. Various suggestions came. Hasan suggested 'Hello'. Netaji snubbed him. Then he suggested 'Jai Hind'. Netaji liked it and it became the official form of greeting in INA and the revolutionary Indians. Later it was adopted as the official slogan of the country," he says.

The book mentions about 70 legends, anecdotes and personal accounts beginning from the beautiful rocks of the Deccan plateau to Bhagamati, to the developments during the era of Nizams and beyond.

There is another interesting incident mentioned in the book that is related to late chief minister T Anjaiah. Luther says during a concert in the early 80s, Anjaiah mixed up the name of legendary table player Allah Rakha Khan and called him 'Allah-Ho-Akbar'. This faux pas led the audience break into loud laughter.

"Anjaiah looked perplexed and asked, 'Have I said anything wrong?' One of his aides whispered into his ear, that he had not taken the correct name of the table maestro. Thereupon Anjaiah said, 'Oh, does it matter? After all Allah Rakha and Allah-Ho-Akbar are not very different," says the author, adding this led to more peals of laughter.

Other stories mentioned in the book include the much-debated tale of romance that gave birth to Bhagnagar, Stalin's orders on the red revolt and a dog made to sit on a throne by Sultan Tana Shah in recognition of it raising an alarm spotting an intruder.
http://timesofindia.indiatimes.com/…/articlesh…/30939048.cms

Thursday, December 31, 2015

தலித் என்பதால் பாஜக ஒதுக்கியது! இன்று இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துள்ளார்!



ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளராக பதவி உயர்வுக்கு தன்னை பரிசீலிக்காத காரணத்தினால் அம்மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான உம்ராவ் சலோதியா தான் விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்ததோடு இஸ்லாம் மதத்தையும் தழுவினார்.

உம்ராவ் சலோதியா என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் 1978-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் சீனியாரிட்டியின் படி இன்று (வியாழக்கிழமை) மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வசுந்தரா ராஜே அரசு ஏற்கெனவே உள்ள தலைமைச் செயலாளர் சி.எஸ். ராஜன் என்பவரின் பதவிக்காலத்தை 2016 மார்ச் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் தான் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காக சாதிப்பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய உம்ராவ் சலோதியா, இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எழுதிய கடிதத்தில், “நாடு விடுதலையடைந்த பிறகு SC/ST பிரிவைச் சேர்ந்த நான் முதல் முறையாக மாநிலத்தின் தலைமைச் செயலாளராக வியாழக்கிழமையான இன்று சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் நடப்பு தலைமைச் செயலாளர் சி.எஸ்.ராஜனின் பதவிக்காலம் 2016 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனக்கான வாய்ப்பை மறுப்பதாகும்.

ஆகவே 3 மாதகால நோட்டீஸ் அடிப்படையில் நான் அனைத்திந்திய பணி அலுவல் விதிமுறைகளின் படி பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன். எனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும், ஏனெனில் ஜூனியர் அதிகாரியின் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இதனினும் ஒருபடி மேலே போய் உம்ராவ் சலோதியா இஸ்லாம் மதத்தையும் இன்று தழுவுவதாக அறிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “இஸ்லாம் மதத்தில் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, இந்து மதம் சாதி அடிப்படையில் பாகுபாடு உடையது. மதம் மாறிய பிறகு எனது பெயர் உம்ராவ் கான்.” என்றார்.

ராஜஸ்தான் மாநில அரசு மறுப்பு:

இவரது அதிரடி அறிவிப்பை அடுத்து ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர ராத்தோர், கூறும்போது, “சலோதியா அரசுக்கு எதிராக பேசியதன் மூலம் சட்டத்தை மீறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ராஜஸ்தான் அரசு சாதிப்பாகுபாடு அடிப்படையில் செயல்பட்டிருந்தால் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தலைவராக SC/ST பிரிவைச் சேர்ந்த கைலாஷ் மேக்வால் இருந்திருக்க முடியாது.

இது குறித்து ராஜஸ்தான் அரசு விசாரணை செய்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் சலோதியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

பாஜக அரசு மீது காங்கிரஸ் தாக்கு:

தலித் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நடந்து கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று கூறிய சச்சின் பைலட், “சலோதியா விருப்ப ஓய்வு கேட்டுள்ளது ராஜஸ்தான் ஆளும் கட்சியான பாஜக-வின் செயல்கள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பாஜக அரசின் அலட்சியப்போக்கினால் மூத்த அதிகாரி இஸ்லாம் மதத்தை தழுவ நேரிட்டுள்ளது வருந்தத்தக்கது” என்றார்.

உம்ராவ் சலோதியா ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2015

பிஜேபி என்பது பார்பனர்களின் நலனை தக்க வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு என்பது இதிலிருந்தும் விளங்குகிறது. வசுந்தராவின் பிஜேபி கட்சி என்றுமே தலித்களுக்கு சேவை செய்யப் போவதில்லை. 'உம்ராவ் கான்' ஆக மாறிய இவரை இஸ்லாம் இரு கரம் நீட்டி வரவேற்கிறது. இனி நீங்கள் உலக முஸ்லிம்களின் சகோதரராக மாறி விட்டீர்கள். பிறக்கின்ற இந்த புது வருடம் உங்களை புது மனிதனாக உருவாக்கும். சூத்திரன் என்ற இழி சொல்லும் இன்றிலிருந்து உங்களுக்கு நீங்குகிறது.

Wednesday, December 30, 2015

தினமும் ஏழைகளுக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்!

'மழையோ வெயிலோ... எப்படி இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு எங்களுக்கு சாப்பாடு வந்து விடும்''சாப்பாட்டுக்கு பணம் வாங்குவதி...

Posted by Nazeer Ahamed on Wednesday, December 30, 2015

'மழையோ வெயிலோ... எப்படி இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு எங்களுக்கு சாப்பாடு வந்து விடும்'

'சாப்பாட்டுக்கு பணம் வாங்குவதில்லை. அதோடு அன்பாக பரிமாறுகிறார்கள்'

'சாதி மதம் பார்க்காமல் தினமும் 100 லிருந்து 150 பேருக்கு வயிறு நிறைய சாப்பாடு போடகிறார் அஜர் பாய்'

மக்கள் இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக் கொள்வதையே நாம் மேலே பார்த்தது.

அமிதாப்பச்சன்:

நம் முன் அமர்ந்திருக்கும் அஜர் பாய் தினமும் 200 பேருக்கு ஹைதராபாத்தின் மேம்பாலத்துக்குக் கீழ் உள்ள பகுதியில் மதிய உணவு இலவசமாக கொடுத்து வருகிறார். அஜர் பாய்! கொஞ்சம் வருகிறீர்களா?

(அஜர் அமிதாப்பை நோக்கி வருகிறார்)

'அஜர் பாய்! உங்களின் அனுபவங்களைச் சொல்லுங்கள். தினமும் எத்தனை பேருக்கு உணவு வழங்கி வருகிறீர்கள்?

அஜர்: நூறிலிருந்து நூற்று முப்பது பேர் வரை.... (பலத்த கைத் தட்டல்)

அமிதாப் பச்சன்: உங்களின் அனுபவத்தை எங்களிடம் பகிருங்களேன்.

அஜர்: நான்கு வருடம் முன்பு எனது சகோதரனோடு ரயில்வே பகுதி சமீபமாக போய்க் கொண்டிருக்கும் போது டயர் பஞ்சராகி விட்டது. வண்டியை ஓரமாக்கி விட்டு சரி செய்ய காத்திருந்தோம். அப்போது ஒரு ஓரத்தில் ஒரு பெண் ஏதோ உளறிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களிடம் 'இந்த பெண்ணுக்கு என்ன ஆனது' என்று கேட்டேன்.

'இந்த பெண்ணின் மகன் இரண்டு நாளாக இவரைப் பார்க்க வரவில்லை. சாப்பிடாததனால் பசியில் இவ்வாறு அரற்றிக் கொண்டுள்ளார்' என்று சொன்னவர்.

நான் ஆச்சரியம் அடைந்தவனாக 'ஏன்.. நீங்கள் இந்த பெண்ணுக்கு உணவளிக்கக் கூடாதா?' என்று கேட்டேன்.

'எங்களுக்கே உணவு பற்றாமல் இருக்கும் போது இந்த பெண்ணுக்கு நாங்கள் எங்கிருந்து கொடுப்பது?' என்றனர்.

இதைக் கேட்டவுடன் எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. உடன் பக்கத்தில் இருந்த உணவகத்துக்குச் சென்று உணவு வாங்கி வந்து அந்த பெண்ணுக்கு கொடுத்தேன். இந்த நிகழ்வு என் மனத்தை மிகவும் பாதித்தது. நடந்த விபரங்களை என் மனைவியிடம் கூறினேன். அன்று எங்கள் வீட்டில் செய்த சிறிது உணவை எடுத்துக் கொண்டு ரெயில்வே பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கொடுத்தோம். அந்த உணவை பார்த்தவுடன் ஏதோ காணாததைக் கண்டது போல் இரு கைகளால் அள்ளி அள்ளி சாப்பிட்டதைப் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. என் இளமைக்கால் வாழ்வும் எனது ஞாபகத்துக்கு வந்தது.

அமிதாப் பச்சன்: உங்களின் இளமைக்கால வாழ்வைப் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? பசியின் கொடுமையை உணர்திருக்கிறீர்களா?

அஜர்: என் தந்தை இறந்த போது எனக்கு நான்கு வயதிருக்கும். என் தாயார் என்னை மிகவும் சிரமத்தில் வளர்த்தார். எனது நானா வீட்டிலிருந்து தினமும் ஒரு வேளை உணவு வரும். அதை வைத்து அனுசரித்து சரி செய்து கொள்வோம். இவ்வளவு வறுமையிலும் என்னை எனது தாயார் வேலைக்கு அனுப்பவில்லை. 'நீ நன்றாக படி' என்று தான் என்னிடம் சொன்னார் (சொல்லும் போது அழுகிறார்) உறவினர் வீட்டில் எங்காவது விருந்துக்கு சொல்லியிருந்தார்கள் என்றால் எட்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவலோடு இருப்பேன். அந்த ஒரு நாளில் வயிறு நிறைய சாப்பிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் காத்திருப்பேன். பசி என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை என்னை விட யாரும் சரியாக அறிந்திருக்க முடியாது.

அமிதாப் பச்சன்: இங்கு வந்திருக்கும் உங்கள் தாயாரிடம் பேசுவோம்....

'அம்மா! உங்கள் குடும்பம் 20 வருடங்களுக்கு முன்பு சாப்பாட்டுக்கே சிரமப்பட்டது. இன்று உங்கள் மகன் பல பேருக்கு சாப்பாடு போடுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'

அஜரின் தாயார்: இதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது (நா தழு தழுக்கிறது. அதற்கு மேல் பேச முடியாமல் மைக்கை தருகிறார்.)

Tuesday, December 29, 2015

தலித் மக்கள் மீதான தாக்குதலில் 7 பேர் கைது:



கர்நாடகத்தில் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியதில் கர்ப்பிணி உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந் தனர். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 22 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில் துர்விஹால் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நடுவில் தலித் அமைப்பினர் வைத்திருந்த பேன‌ர் மீது, கடந்த 24-ம் தேதி வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தினார். மேலும் அந்த பேனரில் இருந்த அம்பேத்கரின் படத்தையும் அவர் அவமதித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தலித் அமைப்பை சேர்ந்த‌ இளைஞர்கள் மறுநாள் விசாரித்தபோது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, “ஊருக்கு நடுவில் அம்பேத்கரின் பேனரை வைக்கக்கூடாது. மீறி வைத்தால் தலித் மக்களை ஊரை விட்டே விரட்டுவோம்” ஆதிக்க சாதியினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலித் மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கு மாறு துர்விஹால் போலீஸாரிடம் மனு அளித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினர் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, அங்குள்ள தலித் காலனிக்குள் நுழைந்து, தலித் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 3 மாத கர்ப்பிணி உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 25 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இதையடுத்து 29 பேர் மீது துர்விஹால் போலீஸார் 5 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 22 பேரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ரெய்ச்சூர் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில், காவல் கண்காணிப்பாளர் சேத்தன் சிங் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பீர் பாஷா தலைமையிலான உண்மை ஆராயும் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விவரம் கேட்டறிந்தனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
30-12-2015

ஒரு சுதந்திர நாட்டில் தனக்கு பிடித்தமான தலைவரின் படத்தை வைக்கக்கூட அனுமதி இல்லை என்றால் ஆதிக்க சாதியினரின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

Monday, December 28, 2015

'ரொட்டி வங்கி' தொடங்கி சேவையாற்றி வரும் யூசுப் முகாட்டி!



மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கா பாத்தில் யூசுப் முகாட்டி என்பவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கி ஏழை களின் பசியை போக்கி வருகிறார். இந்த உன்னத சேவைக்கு அவருடைய மனைவி, சகோதரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் உதவி வருகின்றனர்.

இந்தியாவில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பசியை போக்க உத்தரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் என்ற பகுதியில் ஒருவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கினார். அதேபோல் இப்போது மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் யூசுப் முகாட்டி என்பவர் கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கி தொடங்கி உள்ளார். ‘ஹாரூண் முகாட்டி இஸ்லாமிக் சென்டர்’ என்ற அமைப்பையும் நிறுவி ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். தவிர துணிக்கடையும் சிறிதாக நடத்திவருகிறார். இந்த ரொட்டி வங்கி ஜின்சி - பைஜிபுரா சாலையில் இயங்கி வருகிறது.

அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற அவுரங்காபாத்தில், யூசுப்பின் சேவைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து 38 வயதாகும் யூசுப் கூறியதாவது:

ஏழைகள் குறிப்பாக முஸ்லிம்கள் பலர் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுவதை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். பல குடும்பங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவராக இருக்கிறார். அவர்களால் வயிறார உணவு உண்ண கூட வருவாய் கிடையாது. இது மிகவும் பரிதாபமான விஷயம்.

என் மனைவி கவுசர் மற்றும் திருமணமான 4 சகோதரிகள் சீமா ஷாலிமார், மும்தாஜ் மேமன், ஷாநாஸ் ஷபானி, ஹூமா பரியானி ஆகியோருடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் எல்லோரும் மனதார ஒப்புக் கொண்டு உதவ முன்வந்தனர். கடைசியில் நினைத்தபடி கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கியை திறந்து விட்டோம். முதலில் 250 பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

ரொட்டி வங்கியை திறந்த பிறகு, இந்த பக்கம் போவோர் வருவோர் எல்லாம் விசாரிக்க தொடங்கினர். மிக உன்னதமான சேவை என்று அவர்கள் பேசி சென்றனர். ரொட்டி வங்கியில் உறுப்பினராக சேர ஒரு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் தனி கோட் நம்பர் தருவோம். மேலும் கோட் நம்பருடன் தனி பை ஒன்றும் தருகிறோம்.

உறுப்பினர்கள் தினமும் குறைந்தபட்சம் புதிதாக செய்யப்பட்ட 2 ரொட்டிகள் மற்றும் சைவ, அசைவ உணவு குழம்புகளை வங்கியில் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுடைய வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதை கொடுத்தால் போதும். அவ்வளவுதான். இதை நாங்கள் சொன்ன பிறகு, 15 நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து விட்டது. மேலும் மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கி பெருகும் வாய்ப்பு உள்ளது.

காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை ரொட்டி வங்கி செயல்படும். பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இங்கு ரொட்டிகளையும், சைவ, அசைவ உணவுகளையும் வழங்கி விட்டு செல்கின்றனர். சில வேளைகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவு உணவு கிடைத்து விடுகிறது. சுமார் 500 பேருக்கு ரொட்டி வங்கி மூலம் தினமும் உணவு வழங்கி வருகிறோம்.

ரொட்டி வங்கி உணவு வழங்கும் உறுப்பினர்கள் மற்றும் உணவு பெற்று செல்லும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம் அல்லாதவர்கள். எங்கள் ரொட்டி வங்கி பற்றி கேள்விப்பட்ட திருமண ஏற்பாட்டாளர்களும், கூடுதலாக உள்ள உணவு வகைகளை அனுப்பி தொடங்கி உள்ளனர். இதுபோல் 6 இந்து திருமண ஏற்பாட்டாளர்கள், 12 முஸ்லிம் திருமண ஏற்பாட்டா ளர்கள் மிகச்சிறந்த சைவ, அசைவ உணவுகளை அனுப்பி வைத்தனர்.

உணவு அதிகமாக வருவதால் அவை கெட்டு போகாமல் இருக்க மிகப்பெரிய பிரீஸரில் வைத்து பயன்படுத்துகிறோம். இதேபோல் பெரிய ரெஸ்டாரன்டுகள், டிலக்ஸ் ஓட்டல்கள், கார்ப்பரேட், தொழிற் சாலை கேன்டீன்கள், பயணிகள் விமான கிச்சன், மெகா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மிச்சமாகும் உணவு பொருட்களை அனுப்பி வைத்தால் ஏழைகளுக்கு வழங்க முடியும். மேலும், உணவு பொருட்களும் வீணாகாது.

வங்கிக்கு வரும் உணவு தரமான தாக, புதிதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தே வாங்குகிறோம். ஏழை மக்கள், வயதானவர்கள், நோயுற்றவர்கள், வேலை இல்லாதவர்கள் போன்றோர் எந்த நேரத்திலும் வந்து அவர்களுக்கு தேவையான, விருப்பமான சைவ அல்லது அசைவ உணவுகளை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பட்டினி கிடக்கும் அவல நிலை ஏற்படாது. இவ்வாறு யூசப் கூறினார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-12-2015

இந்த சேவையை இஸ்லாமிய இயக்கங்கள் இந்தியா முழுக்க செயல்படுத்தினால் பல ஏழைகள் ஒரு வேளை உணவாவது வயிறார உண்ண வழி ஏற்படும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்கர் (ரலி) 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள். அறிவிப்பவர்:

அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1865)