Followers

Sunday, November 27, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? பு(து)த்தகம்




தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர்
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)


பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)


ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?

ஆசிரியர் பி.ஜெய்னுல்லாபுதீன்.

23 comments:

suvanappiriyan said...

திரு தருமி!

//எல்லா மனிதர்களும் சகோதரர்களே என்பது உங்கள் மதத்திற்கு மட்டுமான ஏகத்துவக் கருத்தாக நிறுவ - ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று எப்போதோ சொல்லிவிட்ட ஒரு சமூகத்தில் பிறந்த நீங்கள் - எப்போதும் முயற்சியெடுக்கிறீர்கள். கிறித்துவ மதத்திலும் இதே கருத்துதானுண்டு. மற்ற மதங்கள் பற்றித் தெரியாது. சகோதரத்துவம் இஸ்லாமிற்கு மட்டுமேயானதில்லை.//

ஏகத்துவக் கொள்கையை எல்லா மதங்களும் மார்க்கங்களும் சொன்னாலும் நடை முறையில் எந்த அளவுக்கு அந்த மார்க்கங்களால் கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதல்லவா!'

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' அருமையான வரிகள். இந்த கருத்தை இந்துக்களில் 10 சதம் கூட பின்பற்றவில்லை. ஊருக்கு ஒரு சாமி: சாதிக்கு ஒரு சாமி: மொழிக்கு ஒரு சாமி: அதோடு உயிரோடு உள்ள சாமியார்கள்: என்று பட்டியல் நீளுகிறதே! இதை தடுக்கப் போய் கடைசியில் நாத்திகர்களாக ஆனதுதான் மிச்சம்.

அதே போல் ஓரிறைக் கொள்கை பைபிளைக் கொண்டே எவ்வாறு தரை மட்டமாக்கப்பட்டது என்பதை என்னை விட நீங்களே நிறைய அறிவீர்கள்.

தமிழகத்தில் நாத்திகம் இந்த அளவு வளர்ந்ததில் இந்து மதத்துக்கும் கிறித்தவ மதத்துக்கும் பெரும் பங்குண்டு. இதற்கு காரணம் இந்த இரண்டு மதங்களிலும் உள்ள பலகீனமான கருத்துக்களே!

//நமது பதிவுலகில் சமீபத்தில் தமிழ்மணப் பதிவுகளை இஸ்லாமிய நாடுகளில் நிறுத்தி விடுவதாக எப்படி ஒருமித்த ‘சவுண்டு’! அதேபோல் நிறுத்தியும் விட்டீர்கள். (மறுபடி அங்கு மீண்டும் ஆரம்பித்து விட்டார்களா என்பதும் எனக்கு இன்னும் தெரியவில்லை.) எப்படியும் இப்படி ஒன்றுபடுகிறீர்களே, இதையே நான் உங்கள் மதத் தீவிரவாதம் என்றுதான் எண்ணுகிறேன்.//

தமிழ்மணத்தை சவுதியில் தடை செய்ததில் எனக்கு இன்று வரை உடன்பாடு இல்லை. தமிழ்மண நிர்வாகியே இஸ்லாமிய முகமனை கிண்டல் அடித்ததுதான் பலரை கொதிப்படைய வைத்தது. மற்ற நிர்வாகிகள் அதற்கான விளக்கத்தைக் கொடுத்து பிரச்னையையும் முடித்து விட்டார்கள். இங்கு யாரும் தவறான வார்த்தை பிரயோகத்தை உபயோகிக்க வில்லை. 'நீயா நானாவிலும், தமிழ்மண பிரச்னையிலும் சாத்வீகமான முறையிலேயே போராடினோம். அது கூட தவறு என்கிறீர்களா?

//மதப் பெரும்பான்மை இருந்தால் மதரஸாக்கள், முல்லாக்கள், ஹஸரத்துகள், இமாம்கள் - இவர்களின் ராஜ்ஜியம் தான் நடக்கும். இதில் யாருக்கு சந்தேகம்?//

தவறான வாதம். உண்மையான இஸ்லாமிய வாழ்வில் புரோகிதத்துக்கு துளி கூட இடமில்லை. மெக்காவில் உள்ள காஃபாவில் உலக முஸ்லிம்கள் வருடந்தோறும் வந்து குவிகிறார்கள். அந்த இடத்தில் எந்த ஒரு முல்லாவோ, ஹஜ்ரத்தோ நின்று கொண்டு உங்களுக்கு தீட்சிதை வழங்கிக் கொண்டிருப்பதில்லை. ஐந்து வெளை தொழுகையை தவிர மற்ற வணக்கங்களெல்லாம் முல்லா இல்லாமலேயே நடத்தப்படுவது. குர்ஆனை விளங்காதவன்தான் முல்லாவின் தயவை நாடி ஓட வேண்டும்.

//தலிபான் ஆட்சியும் நினைவுக்கு வருகிறது. அதுவும் இஸ்லாமிய மதச் சார்பான அரசாட்சிதானே!//

தாலிபான்களின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி என்று யார் சொன்னது? இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்டது தாலிபான்களின் குற்றம். கலீபா உமருடைய ஆட்சியில் மாற்று மதத்தவர் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை சற்று படித்துப் பாருங்கள். அதுதான் உண்மையான இஸ்லாமிய ஆட்சி!

//எல்லாம் ஒன்று என்றும் உங்களால் சொல்ல முடியாது.//

எல்லாம் எப்படி ஒன்றாக முடியும்? ஒருவர் ஏசுவை கடவுள் என்கிறார். மற்றொருவர் அவரை முகமது நபியைப் போன்ற தூதர் என்கிறார். அவரவர் கொள்கை அவரவர்களுக்கு: வற்புறத்தல் கூடாது என்கிறது இஸ்லாம். அனைத்து மக்களையும் அன்புடன் அரவணைத்து செலலவே குர்ஆன் கட்டளையிடுகிறது.

Anonymous said...

Nearly 5,000 sign petition calling for release of Afghan rape victim
http://www.cnn.com/2011/11/27/world/asia/afghanistan-rape-victim/index.html?hpt=hp_t1

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

.

suvanappiriyan said...

//திருப்பதி மலையில் மாதா சிலையை யாரும் வைக்கவில்லை. சுவிசேசப் பிரச்சாரம்தான் முயற்சி பண்ணப்பட்ட்து என்றறிகிறேன். பின்னர் ஆந்திர அரசு சட்டம் போட்டு மலையில் அப்படி அன்னிய மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டது.
கீழ் திருப்பதியில் தாராளமாக சுவிசேசக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன/. ஆந்திராவில் கிருத்துவம் நன்றாகச் செழிக்கிறது. காளகஸ்தி செல்லும் வழியில் உள்ள கிராமங்களிலெல்லாம் சுவிசேச கூட்டங்களில் மக்கள் அமர்ந்திருப்பதைக் காணலாம். கிராமவாசிகள், மற்றும் ஏழைமக்களெல்லாம் இந்துக்களல்ல. பணக்காரர்களும் உங்களைப்போன்ற பிராமணாளும்தான் இந்துக்கள். இன்றைய இந்து மதம் இன்றைய தமிழ்நாடு காங்கிரசு கட்சி மாதிரி: பண்ணையார்க்கட்சி. பாமர மக்களை விட்டு ஓடி விட்டது.
இதையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி, ஆந்திர முழுவதும் இந்துக்களைத்தவிர வேறு எவருமே வாழக்கூடாது என்று சட்டம் போட்டால் மட்டுமே சாத்தியம்.
திருப்பதி மலையில் மத மாற்றம் என்று சொல்லும் நீங்கள் ஒன்றைக்கவனித்தீர்களா ? அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறீர்களா ? திருப்பதி மலையில் இருப்பவர் திருப்பதி வெங்கடாஜலபதி. ஆனால் ஒரிஜினல் கடவுள் புத்தர். அச்சிலையை இரவோடு இரவாக வெங்கடாஜலபதியாக மாற்றிவர் இராமானுஜர் என்று சொல்கிறார்களே. உண்மையா பொய்யா ?
ஆக, நீங்களே டுபாக்கூர் வேலைபாரத்து, பவுத்தர்களையும் ஜைனர்களையும் விழுங்கினீர்களே ? அவர்கள் சிலைகளையெல்லாம் உடைததீர்கள். விகாரங்களையும் சமணக்கோயில்களையும் இந்துக்கோயிலகளாக மாற்றவில்லையா ? திருமங்கை யாழ்வார் புத்தர் சிலைகளை உடைத்தெறிந்து தங்க புத்தர் சிலையைக்கொள்ளையடிக்கவில்லையா ? சமணர்களை மதுரையை விட்டே விரட்ட வில்லையா சம்பந்தர் பாண்டியனின் மனைவியோடு சேர்ந்து. அச்செயலுக்காகவே பாண்டிய ராணியை நாயனாராக்கி விட்டீர்களே ?
இன்று தமிழ்கத்தில் ஏராளமான புத்த விகாரங்களும், சமணக்கோயில்களும் இருந்திருக்கும். அவர்கள் உங்களை விட சிற்ப்பாக தமிழ் இலக்கியம் படைத்திருப்பவர். இருந்த காலத்திலும் அசத்தினார்கள்; அவர்கள் எழுதிய நூற்களையெல்லாம் வைகையாற்றில் தூக்கியெறிந்து அழித்தவர்களான நீங்கள் பிறமதங்களைப்பற்றிப்பேசிகிறீர்கள். மத மாற்றங்களைப்பற்றிபேசுகிறீர்கள். சாத்தான் வேதம் ஓதுகிறது.//

--காவ்யா

இந்து மதத்தில் இருந்து கொண்டே அதன் உண்மைகளை தெளிவாக விளக்கிய காவ்யா பாராட்டுக்குரியவர்.

ஷர்புதீன் said...

பொறுமையில் சொல்லப்படும் எல்லா வித கருத்துக்களையும் குறைந்தபட்சம் படிக்கவாவது நன்றாக இருக்கிறது., கருத்தில் உடன்பாடு இல்லை என்பதற்காக திட்டுவதைதான் அடியேன் வெறுக்கிறேன். நன்றாகவே இருக்கிறது உங்களின் நம்பிக்கையும், அதனை மற்றவர்களிடம் நீங்கள் சொல்லும் பாங்கும் !

suvanappiriyan said...

திரு கோவிந்த் கோச்சா!

//அரசர்கள் கோவில் கட்டிய அளவு பள்ளிகூடங்களை கட்டியிருக்கலாம், மருத்துவமனையை கட்டியிருக்கலாம். சக மனிதனின் தேவைக்கான விஷயம் எதையுமே செய்யாமல் ஹீப்ருவானாலும், அரபிக் ஆனாலும், சமஸ்கிருதம் ஆனாலும் புரியாத பாசையில் பூஜை மட்டும் செய்தால், அப்ப கடவுள் என்னைப் படைத்தாரென்றால் அவருக்கு இந்த 3 மொழிகள் தவிர எதுவும் தெரியாதா…?//

'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4


மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.

“மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்”

மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.

suvanappiriyan said...

அனானி!

//Nearly 5,000 sign petition calling for release of Afghan rape victim
http://www.cnn.com/2011/11/27/world/asia/afghanistan-rape-victim/index.html?hpt=hp_t1//

நமது நாட்டின் புள்ளி விபரங்களை வெளியிட்டால் இதை விட அதிகமாக இருக்கும். குற்றம் செய்பவர்கள் எல்லா நாட்டிலுமே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அந்த குற்றவாளிகளை தடுக்கத்தான் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதே போல் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் மிகவும் நேர்மையாக வாழக் கூடிய மக்களும் எல்லா நாட்டிலும் உள்ளார்கள். இவர்களால் மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

அடுத்து தாலிபான்களின் ஆட்சியோ தற்போதய ஆப்கானின் ஆட்சியோ இஸ்லாமிய ஆட்சி கிடையாது. அதனால் அங்கு நடைபெறும் குளறுபடிகளுக்கு இஸ்லாம் காரணமாகாது.

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,//

சிறந்த சுட்டியை தந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு ஷர்புதீன்! சௌக்கியமா?

//பொறுமையில் சொல்லப்படும் எல்லா வித கருத்துக்களையும் குறைந்தபட்சம் படிக்கவாவது நன்றாக இருக்கிறது., கருத்தில் உடன்பாடு இல்லை என்பதற்காக திட்டுவதைதான் அடியேன் வெறுக்கிறேன். நன்றாகவே இருக்கிறது உங்களின் நம்பிக்கையும், அதனை மற்றவர்களிடம் நீங்கள் சொல்லும் பாங்கும் !//

உங்களின் தமிழ் நடை வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது. தொடருங்கள். குர்ஆனின் வார்த்தைகளை சிந்தியுங்கள். இறைவன் நேர் வழி காட்ட போதுமானவன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

Mr.சுவனப்பிரியன்
நலம். நலமே நாடல்!

உங்களின் பாராட்டுக்கு நன்றி! எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்பதுதான் அடியேன் உயிர்வாழ்ந்துகொண்டிருப்பதன் அர்த்தமாக நினைக்கிறேன்! சரியானவை, சரியான நாட்களில் சரியானவர்களை அடைந்துவிடும் என்றே ஒரே நம்பிக்கையில்.... :-)

suvanappiriyan said...

திரு நோ!

//நண்பர் திரு சுவனப்பிரியன்

// தவறான புரிதல்// - இடைச்சொருகல் மறுப்பு என்பது இதுதான்! எனது சாரம் - மதத்தின் பெயரால் உலக உண்மைகளை திரித்து விட்டு நீங்களே உருவாக்கிக்கொண்டுள்ள உயர்வு சித்தாந்த்தம் + எனதே உயர்வு என்ற அழிக்க முடியாத மன பிம்பம் + ஆகையால் மற்றவர் மற்றவை எல்லாம் கீழனதே என்று முடியும் கடைசி விவாதம் = ஆகியவற்றின் மொத்த சேர்க்கையினால் உருவான மனமே உங்களுடையது!//

நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.'
26 : 196 - குர்ஆன்

சங்கீதத்தையும், தோராவையும், சுவிஷேஷங்களையும் தவிர்த்து முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

'நபியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'
16 : 43,44 – குர்ஆன்

இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 –குர்ஆன்

இங்கு குர்ஆன் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் கொடுத்தது ஒரே இறைவன் என்றுதானே குர்ஆன் சொல்கிறது. இந்த வசனங்களே உங்கள் வாதங்களை மறுத்துக் கொண்டிருக்கிறதே!

//வெளிவந்த பக்த கோடிகளின் தன்மையை நியு யார்க்கிலும் மற்றும் இந்தியாவிலும் பல முறை பார்த்தாகிவிட்டது! உலகமே பார்த்து விட்டது!//

எண.ணெய் வளங்களை சுரண்டுவதற்காக இஸ்ரேலின் துணையோடு முஸ்லிம் நாடுகளில் அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் செயல் உங்களுக்கு நியாயமாக படுகிறதா? பாதிக்கப்பட்டவன் அமெரிக்காவை குறி வைக்கிறான். அதற்காக பொது மக்களை குண்டு வைத்து கொல்வதை இஸ்லாம் தடுக்கிறது. கோபத்தை அமெரிக்க ராணுவத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் காட்ட வேண்டும்.

இந்தியாவில் மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, பாபரி மசூதி தகர்ப்பு அனைத்தும் யாருடைய வேலை என்பதை உளவுத் துறை கண்டு பிடித்து சொன்ன பிறகுமா இந்திய பிரச்னைக்கு முஸ்லிம்களை காரணமாக்குகிறீர்கள்?

//எப்படி சொல்லுகின்றேன் என்றால் உங்களின் மதம் உலகமெங்கும் சந்தேகத்துடனும் பயத்துடனும் பார்க்கப்படுகிறது!//

அதற்கு காரணம் மீடியாக்களின் திட்டமிட்ட பொய் பிரச்சாரமே! இஸ்லாத்தை வாதத்தால் வீழத்த முடியாதவர்கள் சூழ்ச்சிகளால் வீழ்த்த முயற்ச்சிக்கிறார்கள். இதிலும் தோல்வியையே தழுவுவார்கள்.

naren said...

சுவனப்பிரியன், மறுமொழியில் மறுமொழியை வெளியிடாமல் பதில் கூறுவது, என்ன செய்தியைபற்றி என்று சிறிது குழப்பம் ஏற்படுகின்றது. ஏனென்றால் பதிவை தெளிவுப்படுத்தவது மறுமொழிகள்தான்.

அது உங்கள் உரிமை அதை குறைகூற முடியாது.

சரி பதிவிற்கு வருவோம்.

பதிவில் பெண்கள் சம்பந்தமாக சில உரிமைகள் சொல்லப்பட்டுள்ளது. உலகில் அதுவே சிறந்தது, கடவுள் தந்த வழிமுறை,இதை தவிர சிறப்பானது வேறு ஒன்றுமில்லை என்று வைத்துக் கொள்வோம்.

மாற்று மதத்தினர் கேள்வி கேட்க முடியாத வகையில் விளக்கங்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது எனது கேள்வி.

1) இஸ்லாமிய சமுதாயத்தில் இந்த நடைமுறை முற்றிலுமாக நடைமுறைப் படுத்தப் படுகிறதா. எந்த ஜமாத்து இதை முழுமையாக தருகின்றது. இதை கோரி நீதிமன்றத்திற்கு அல்லவா செல்ல வேண்டியுள்ளது.

2) அப்படி இல்லை என்று தானே அண்ணன் பி.ஜே தனி ஜமாத்து ஆரம்பித்தார். அப்பொழுது மற்ற மாநில தேசங்களில் இதே நிலைமை தானே.

3) இஸ்லாமிய சமுதாயமே ஏற்று நடைமுறை படுத்த முடியாத உரிமைகளா ?, ஏனென்றால் இதை நடைமுறைப் படுத்த இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் பிரச்சாரம் செய்யப்பட்டு இயக்கமாக நடைமுறைப் படுத்தப் படுகிறது. பிரச்சாரம் ஒய்ந்தால் இதுவும் விட்டுப் போய்விடும்.

4) ஒருவன் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாதாலே முழுமையான் முஸ்லிமாக ஆகிவிடமாட்டான் என்று தானே வருகின்றது.

5) நீங்கள் சொல்லும் உண்மைகள் நன்னெறிகள் போலத்தான். ஒருவன் விரும்பினால் மட்டுமே அதை நடைமுறைப் படுத்துவான். அதனால் நீங்கள் சொல்லிய உரிமைகள் ஒரு சதாரான நன்னெறிதானே.

suvanappiriyan said...

நரேன்!

//சுவனப்பிரியன், மறுமொழியில் மறுமொழியை வெளியிடாமல் பதில் கூறுவது, என்ன செய்தியைபற்றி என்று சிறிது குழப்பம் ஏற்படுகின்றது. ஏனென்றால் பதிவை தெளிவுப்படுத்தவது மறுமொழிகள்தான்.//

நாம் மற்ற தளங்களில் ஆதாரங்களை கொடுத்து பின்னூட்டம் இட்டால் அதை சில நேரம் எடிட் செய்து(குறிப்பாக தமிழ்இந்து) வெளியிடுகிறார்கள். எனவேதான் அங்கு இடும் பின்னூட்டங்களின் காப்பியை எனது பதிவிலும் பேஸ்ட் செய்வது. குழப்பம் வராமல் இருக்கத்தான் அவர்களின் கேள்வியையும் முதலில் எழுதி எனது பதிலை வெளியிடுகிறேன்.

//இஸ்லாமிய சமுதாயத்தில் இந்த நடைமுறை முற்றிலுமாக நடைமுறைப் படுத்தப் படுகிறதா. எந்த ஜமாத்து இதை முழுமையாக தருகின்றது. இதை கோரி நீதிமன்றத்திற்கு அல்லவா செல்ல வேண்டியுள்ளது.//

உலகில் எந்த ஜமாத்தும் 100 சதவீதம் சரியாக நடப்பதாக சொல்ல முடியாது. மனிதன் பலஹீனமாகப் படைக்கப்பட்டிருக்கிறான். தவறே செய்யாத படைப்புகள் என்றால் மலக்குகளை(தேவர்கள்)த்தான் சொல்ல வேண்டி வரும். ஏனெனில் முகமது நபியே சில இடங்களில் மனிதன் என்ற முறையில் தவறு எற்பட்டு பிறகு இறைவனால் அது சுட்டிக் காட்டப்படுகிறது.

நம்மையறியாமல் செய்து விடும் சிறு சிறு தவறுகளை ஒவ்வொரு வேளை தொழுகையிலும் மன்னிக்கப்ட்டு விடுவதாக ஹதீதுகள் இருக்கின்றன.

இது போன்ற சிக்கல்கள் கோர்ட்டுக்கு சென்றாலும் அங்கும் குர்ஆனை வைத்துதான் வாதிட வேண்டும். நமது இந்தியாவிலும் அந்த முறைதானே கடைபிடிக்கப்படுகிறது!

//2) அப்படி இல்லை என்று தானே அண்ணன் பி.ஜே தனி ஜமாத்து ஆரம்பித்தார். அப்பொழுது மற்ற மாநில தேசங்களில் இதே நிலைமை தானே.//

மற்ற மாநிலங்களுக்கும் ஏன் ஏனைய பிற நாடுகளுக்கும் இந்த தவ்ஹீத்(ஏகத்துவம்) பணியை எடுத்துச் செல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

சமீபத்தில் அண்ணன் பிஜேயின் (கிட்டத்தட்ட 10) புத்தகங்களை உலக மொழிகள் பலவற்றில் (குறிப்பாக அரபி, உர்து, பெங்காளி, மலையாளம், பிலிப்பைன்(தகாலோ), சீன) மொழிகளில் சவுதி அரசு மொழியாக்கம் செய்து இலவசமாக பல நாடுகளுக்கும் விநியோகித்தது. அந்த புத்தகங்களிலிருந்து 10 கேள்விகளை எடுத்து அதற்கு சரியான பதில் எழுதும் 50 பேரை ஒவ்வொரு மொழியிலும் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுத்ததில் போன வருடம் நான் இரண்டாம் இடத்துக்கு வந்து 17000 ரூபாய் பரிசாகப் பெற்றேன். சிடிக்கள் தமிழிலிருந்து பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. சவுதியின் மதினா பல்கலைக் கழகத்தில் பிஜேயின் புத்தகங்களை ஆய்வுக்காக எடுத்துக் கொள்கிறார்கள். வெளி உலகங்களை சகோ ஜாகிர்நாயக்கும், சகோ அத்னானும் பார்த்துக் கொள்கின்றனர்.

//3) இஸ்லாமிய சமுதாயமே ஏற்று நடைமுறை படுத்த முடியாத உரிமைகளா ?, ஏனென்றால் இதை நடைமுறைப் படுத்த இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் பிரச்சாரம் செய்யப்பட்டு இயக்கமாக நடைமுறைப் படுத்தப் படுகிறது. பிரச்சாரம் ஒய்ந்தால் இதுவும் விட்டுப் போய்விடும்.//

“எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது”
-குர்ஆன் 2:233

இந்த வசனத்தின் மூலம் நம்மால் முடியாத செயல்களை செய்யவில்லை என்றால் அதனை இறைவன குற்றம் பிடிக்க மாட்டான்.

நின்று கொண்டு தொழ முடியவில்லையா? உட்கார்நது தொழுது கொள்ளுங்கள். உட்கார்ந்தும் தொழ முடியவில்லையா படுத்துக் கொண்டே தொழுங்கள். உடல் நிலை சரியில்லையா? நோன்பை விட்டு விடுங்கள். உடல் நிலை சரியான பிறகு நோன்பை வைத்துக் கொள்ளுங்கள். வணக்கத்தில் சிறு தவறுகள் ஏதும் செய்து விட்டீர்களா? சில ஏழைகளுக்கு உணவளித்தால் அந்த குற்றத்தை இறைவன் மன்னித்து விடுவதாக குர்ஆனிலே கூறுகிறான். எனவே என்னால் இதனை நடைமுறைப் படுத்த முடியாது என்று எந்த குர்ஆனிய சட்டத்தையும் ஒதுக்க முடியாது.

ஆதமுக்கு பிறகு பல தூதர்கள் நோவா, ஆப்ரஹாம், மோசே, ஈசா என்று வரிசையாக வந்து முகமது நபியோடு முற்றுப் பெற்றது. அதன் பிறகு அபுபக்கர், உமர், அலி, உஸ்மான் என்று பல கலீபாக்களை இறைவன் உண்டாக்கினான். அதன் பிறகு பல அறிஞர்கள் இன்று வரை பிரசாரம் செய்து வருகின்றனர். ஒரு பிஜே சென்றால் இவரைப் பொன்று ஆயிரம் நபர்களை இறைவன் உருவாக்குவான். மறப்பது மனிதர்களின் இயல்பு. நினைவு படுத்திக் கொண்டே இருப்பது நல்லோர்களின் பணி.

suvanappiriyan said...

நரேன்!

//4) ஒருவன் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாதாலே முழுமையான் முஸ்லிமாக ஆகிவிடமாட்டான் என்று தானே வருகின்றது.//

ஏக இறைவனை ஒத்துக் கொண்டு இறுதி நபியாக முகமது நபியையும் ஒத்துக் கொள்பவர் இஸ்லாமிய வட்டத்துக்குள் வந்து விடுகிறார்.

மற்ற கடமைகளாகன தொழுகை, நோன்பு, ஏழை வரி, ஹஜ் போன்ற காரியங்களை தன்னால் இயன்ற வரை செய்ய முயற்ச்சிக்க வேண்டும். இது அல்லாமல் மற்ற நல்ல அமல்களையும் செய்ய ஆசைப்பட வேண்டும். இவை எல்லாம் நமது தரத்தை இறைவனுக்கு முன்னால் உயர்த்த பயன்படும்.

//5) நீங்கள் சொல்லும் உண்மைகள் நன்னெறிகள் போலத்தான். ஒருவன் விரும்பினால் மட்டுமே அதை நடைமுறைப் படுத்துவான். அதனால் நீங்கள் சொல்லிய உரிமைகள் ஒரு சதாரான நன்னெறிதானே.//

நன்னெறிகள் அனைத்தும் திருக்குறள் உட்பட நீங்கள் விரும்பினால் பின்பற்றலாம். 'ராமாயணத்தை கொளுத்துவேன்' என்று சொன்ன பெரியாரும் அம்பேத்காரும் இந்துமதத்திலேயேதான் இருப்பார்கள். ஆனால் குர்ஆனையும் முகமது நபியையும் ஒத்துக் கொள்ளாதவன் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவன் இஸ்லாமியனாக முடியாது. பிறப்பால் இஸ்லாமியனாக முடியாது: அவனது செயலால்தான் இஸ்லாமியனாக முடியும். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

suvanappiriyan said...

தருமி!

// No அவர்களின் மேற்கோள் ஒன்றைக் கொடுத்து அடுக்கடுக்காய் குரானின் வசனங்களைக் கொடுத்துள்ளீர்கள், இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை just a series of quotations would not make any sense//-dharumy
//உயர்வு சித்தாந்த்தம் + எனதே உயர்வு என்ற அழிக்க முடியாத மன பிம்பம் + ஆகையால் மற்றவர் மற்றவை எல்லாம் கீழனதே என்று முடியும் கடைசி விவாதம்//-No

அதாவது திரு நோ சொல்ல வருவது குர்ஆனைத் தவிர மற்ற வேதங்கள் மற்ற தூதர்கள் எல்லாம் கீழானவர்களே என்ற எண்ணத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக சொல்கிறார். அதாவது மற்ற இந்துக்களை பிராமணர்கள் நினைப்பது போல....

அதைத்தான் தவறு என்று குர்ஆன் வசனங்களின் மூலம் சுட்டிக் காட்டினேன். அதாவது உலகில் உள்ள வேதங்கள், தூதர்கள் அனைவருமே ஒரே கடவுளிலிருந்து உருவானவையே என்று குர்ஆனே கூறுவதால் வர்ணாசிரமத்தை இங்கு புகுத்த முடியாது என்று சொல்ல வந்தேன்.

suvanappiriyan said...

நோ!

//எவை முட்டாள்தனம் என்று கருதப்படுகிறதோ அதை ஏற்க்க மறுத்து விட்டார்கள், அல்லது அட்லீஸ்ட் இந்த காலத்திற்கு இது பொருந்தாது ஆகையால் அவை வேண்டாம் என்று தள்ளி வைத்து விட்டார்கள்!!//

இங்கு உங்கள் வாதம் சரியான திசையில் செல்கிறது. இந்து மதத்திலும் கிறித்தவ மதத்திலும் வேதங்கள் பாதுகாக்கப்படவில்லை. இன்றைய அறிவியலோடு ஒத்துப் போகவில்லை. நவீன காலத்தில் அந்த சட்டங்களை கடைபிடிக்கவும் முடியாது. எனவே ஒதுக்கி விட்டீர்கள். நான் இந்துவாகவோ கிறித்தவனாகவோ இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்.

//ஆனால் நீங்களோ பட்டுவர்த்த்னமான வெறியை தூண்டும் மற்றும் மற்றவர்களை அழிக்க சொல்லும் உங்கள் மத வாசகங்களை நீக்கவோ அல்லது அட்லீஸ்ட் அதெல்லாம் இந்நாளில் தவறு என்று சொல்லவோ துணியவில்லை.//

இங்குதான் தவறிழைக்கிறீர்கள். இந்து மதமான என் மதம் வீணாகி விட்டது. எனவே இஸ்லாமியனான நீயும் உன் மதத்தை விட்டு வெளியில் வா என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? நீங்கள் குறிப்பிடும் போர்க்கள வசனங்களை போர்க் களத்தில் மட்டுமே வைத்து பார்க்க வேண்டும். மகாபாரதத்தில் பைபிளில் இது பொன்ற போர்க்களக் காட்சிகள் நிறையவே வருகிறது.

நான் முன்பே கேட்டதுதான்: ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்களை உடைய குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?

குர்ஆன் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் பேசவில்லை. கோள்களின் சஞ்சாரம்: இரவு பகல் ஏற்படுதல்: பிரபஞ்சத்தின் தோற்றம்: பிக்பேங் தியரி: கடல்கள்: மேகங்கள்: மலைகள்: உயிரினங்களின் உற்பத்தி: என்று அறிவியல் கருத்துகள் விரிந்து கொண்டே செல்கிறது.

//குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் சுத்தமாக எடுபடவில்லை!//

எடுபடவில்லையா? பள்ளியில் இடம் கிடைக்காமல் பிரான்சில் ரோட்டில் தொழுகை நடக்கிறதாம். காணொளி கேட்டீர்கள் என்றால் தருகிறேன். அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் முண்ணனியில் நிற்கின்றன.

//என் போன்று நம்பிக்கை இல்லாதவனுக்கும் எனக்கிருக்கும் உரிமை அத்தனையும் கொடுப்போம் என்று அரசியல் சட்டம் முதல் , நாட்டின் வேறு சட்டங்கள் வரை எந்த நாடுகளில் எல்லாம் எழுதப்பட்டிருக்கிரதோ அதுவே சமத்துவம் பாராட்டும் நாடுகள்!//

நீங்கள் விரும்பும் சட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும். உங்களின் உரிமை என்பது என்ன? எதை ஒட்டி இருக்க வேண்டும். அப்படி பின்பற்றக் கூடிய நாடு எது என்பதை கொஞ்சம் விளக்கமாகவே சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

VANJOOR said...

//சுவனப்பிரியன் said...
நோ!

பள்ளியில் இடம் கிடைக்காமல் பிரான்சில் ரோட்டில் தொழுகை நடக்கிறதாம். காணொளி கேட்டீர்கள் என்றால் தருகிறேன்.//


பள்ளியில் இடம் கிடைக்காமல், பள்ளிகள் இல்லாமல் பிரான்சிலும் பிற நாடுகளிலும் ரோட்டில் தொழுகை நடக்கிறது

இதோ இந்த சுட்டியை சொடுக்கி விடியோக்கள் காணுங்கள்.

**** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.
மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
****

.

VANJOOR said...

//சுவனப்பிரியன் said...
அதாவது திரு நோ சொல்ல வருவது குர்ஆனைத் தவிர மற்ற வேதங்கள் மற்ற தூதர்கள் எல்லாம் கீழானவர்களே என்ற எண்ணத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக சொல்கிறார். அதாவது மற்ற இந்துக்களை பிராமணர்கள் நினைப்பது போல....

அதைத்தான் தவறு என்று குர்ஆன் வசனங்களின் மூலம் சுட்டிக் காட்டினேன். //

இதோ மீண்டும் ……

2:285 آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.


.

naren said...

//அந்த புத்தகங்களிலிருந்து 10 கேள்விகளை எடுத்து அதற்கு சரியான பதில் எழுதும் 50 பேரை ஒவ்வொரு மொழியிலும் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுத்ததில் போன வருடம் நான் இரண்டாம் இடத்துக்கு வந்து 17000 ரூபாய் பரிசாகப் பெற்றேன்.//

i am really jealous of you.

suvanappiriyan said...

திரு செந்தில்!

//4. வேதத்தை யார் படிக்கலாம்.. படிக்க கூடாது என்பது சாஸ்திரத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.. அதை மாற்ற நீங்கள் யார்.. உங்களுக்கு என்ன தகுதி.. அதை முதலில் சொல்லுங்கள்.. காலம் காலமாக பிராமனர்கள் தான் முறியாக வேதத்தை பயின்று பாதுகாத்து வந்துள்ளார்கள்.. அவர்களுக்கே சாஸ்திரத்தை மாற்றும் உரிமை இல்லதபொழுது, இங்கே இருக்கும் துபாஷி பிராமணர்களுக்கும் மற்ற இந்துதுவவாதிகளுக்கும் எப்படி உரிமை வந்தது..//

உண்மையை உள்ளபடி உரத்துக் கூறியதற்கு நன்றி!

அதே சமயம் 'நம் இந்து மதத்தில் நமக்கு வேதம் படிக்க முடியாது. வேதம் படிக்க அனுமதிக்கும் இஸ்லாத்தையோ கிறித்தவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்' என்று ஒரு பிற்படுத்தப்பட்டவன் முயற்ச்சித்தால் அங்கும் வந்து அவனுக்கு முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகை நியாயம.

ஒன்று இந்து மத வேதங்களை திருத்த வேண்டும். அல்லது விருமபுபவர்கள் வேறு மதத்துக்கு சென்று விடலாம் என்று பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அதுதானே நியாயாம்?

suvanappiriyan said...

நரேன்!

//i am really jealous of you.//

ஹா...ஹா...ஹா...

போட்டி வரலாம். ஆனால் பொறாமை வரக் கூடாது. அடுத்த வருடம் இந்த போட்டியில் நீங்களும் கலந்து கொண்டு பரிசை பெறுங்கள். கேள்விகளை மின்னஞ்சலில் உங்களுக்கு அனுப்புகிறேன்.

ஒரு சராசரி இஸ்லாமியரை விட அதிகமாகவே நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து வைததிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

George said...

//குர்ஆன் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் பேசவில்லை. கோள்களின் சஞ்சாரம்: இரவு பகல் ஏற்படுதல்: பிரபஞ்சத்தின் தோற்றம்: பிக்பேங் தியரி: கடல்கள்: மேகங்கள்: மலைகள்: உயிரினங்களின் உற்பத்தி: என்று அறிவியல் கருத்துகள் விரிந்து கொண்டே செல்கிறது.//
அடேங்கப்பா, இவ்வளவு அறிவியல் அந்த ஒரு புத்தகத்தில் அல்லா வைத்திருக்கிறார். ஆனால் அதை சிந்தித்து கண்டு பிடிக்கும் மூளையை தான் காபிர்களுக்கு கொடுத்து விட்டார் . கஷ்டப்பட்டு கண்டு பிடிப்பவன் ஒருத்தன், கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அல்லா சொல்லிட்டாரு, அல்லா சொல்லிட்டாரு என்று ஈனத்தனமாக கூச்சல் போடுகிறீர்கள். மூளையை பயன்படுத்தி இவற்றை எல்லாம் கண்டு பிடித்தவர்களை ஏன் சார் கேவலப்படுத்துறீங்க. எதுக்கு இந்த ஈன பொழப்பு. பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த அறிஞர்கள் யாரும் நன்றாக வயிறுமுட்ட தின்றுவிட்டு பல்லை குத்திக்கொண்டு இந்த கண்டுபிடிப்புகளை செய்யவில்லை. மாறாக பல சிரமங்கள் துன்பங்களுக்கு இடையில் உழைத்தார்கள். அவர்களது உழைப்பின் வெளிப்பாடுதான் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள். புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்த நியூட்டன், தான் படுத்திருந்த மரத்தில் இருந்து பழம் ஏன் கீழே விழுகிறது என்று சிந்தித்தார் அதனால் புவிஈர்ப்பு விசை என்ற ஒன்றை கண்டுபிடித்தார், குரானை படித்து அல்ல. இது போன்று பல சின்ன விசயங்களை சிந்தித்ததால் ஏற்பட்டதன் விளைவுகள் தான் பல கண்டுபிடிப்புகள் அல்லாவின் பிள்ளைகளால் அதற்கெல்லாம் முடியாமல் போயிருக்கலாம். அதற்காக கஷ்டப்பட்டு உழைத்தவர்களை கேவலபடுத்தாதீர்கள்.
//ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்களை உடைய குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன்.//
அறிவியலுக்கு முரண் இல்லாத ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்களை வைத்திருக்கும் நீங்கள் அறிவியலுக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதை கட்டுங்களேன்.
//தமிழகத்தில் நாத்திகம் இந்த அளவு வளர்ந்ததில் இந்து மதத்துக்கும் கிறித்தவ மதத்துக்கும் பெரும் பங்குண்டு. இதற்கு காரணம் இந்த இரண்டு மதங்களிலும் உள்ள பலகீனமான கருத்துக்களே!//
//தாலிபான்களின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி என்று யார் சொன்னது? இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்டது தாலிபான்களின் குற்றம்.//
எதை பலவீனமான கருத்துகள் என்கிறீர்கள் சுவனப்பிரியன் அவர்களே, உங்கள் கருத்துகள் பலமானதாக இருந்தால் தலிபான்கள் ஏன் தீவிரவாதத்தின் பக்கம் போகிறார்கள். பாகிஸ்தானியர்கள் ஏன் காட்டுமிராண்டிகளாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் தவறாக விளங்கி கொண்டார்கள் என்றால். தலிபான்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் உங்களால் உண்மை இஸ்லாமை கூற முடியவில்லை. நீங்கள் என்ன பலமான கருத்தை கூறி உலகிற்கு வழி கட்ட போகிறீர்கள். ஒருவேளை தலிபான்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் அதனால் தவறாக புரிந்து கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு கல்வி அறிவு புகட்ட முடியாத உங்கள் மார்க்கம் எப்படி உலகிற்கு நல்வழி காட்டபோகிறது. எந்த விதத்தில் கிறிஸ்தவம் நாத்திகத்தை வளர்த்தது. மதத்தை விட்டு வெளியேறினால் கொலை செய்வேன் என்று கூறும் ஒருமதம் உலகிற்கு எந்த வகையில் நல்வழி காட்டும் என்று எனக்கு புரியவில்லை.

UNMAIKAL said...

சுவனப்பிரியன் said... //தமிழகத்தில் நாத்திகம் இந்த அளவு வளர்ந்ததில் இந்து மதத்துக்கும் கிறித்தவ மதத்துக்கும் பெரும் பங்குண்டு. இதற்கு காரணம் இந்த இரண்டு மதங்களிலும் உள்ள பலகீனமான கருத்துக்களே!//

George said... // மதத்தை விட்டு வெளியேறினால் கொலை செய்வேன் என்று கூறும் ஒருமதம் உலகிற்கு எந்த வகையில் நல்வழி காட்டும் என்று எனக்கு புரியவில்லை.//

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1.
கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ? –



2.
ம‌த‌ம்மாற்ற‌ செய்ய‌ மொள்ள‌மாரித்த‌ன‌ம். –



3.
மதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம். –



4.
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி -


5.
கொல்லப்படுவீர்கள்? ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்தால்.. –



6.
கல்லெறிந்து கொல்லுங்கள்?அடங்காத துஷ்டப்பிள்ளைகளை



7.
திருமணத்துக்கு முன் மனைவி கன்னியா? சோதிக்க?? –



8.
ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்ய??


9.
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39)

** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? **

ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா?
** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா?
என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.**

புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல்
“ இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்..

இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி;

நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.**

ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** என்று

இயேசு போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..


George said... //ஒருவேளை தலிபான்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் அதனால் தவறாக புரிந்து கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு கல்வி அறிவு புகட்ட முடியாத உங்கள் மார்க்கம் எப்படி உலகிற்கு நல்வழி காட்டபோகிறது.//

10.
பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது? – பூமி உருண்டை அல்ல தட்டையாம் ? பூமிக்கு அஸ்திவாரமாம்?, பூமிக்கு தூண்களாம் ? பூமிக்கு நான்கு மூலைகளாம்?. சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!
விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.!!! கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் ஸ்லோக‌ங்களில் சில‌.



.