Followers

Showing posts with label தவ்ஹீத் எழுச்சி. Show all posts
Showing posts with label தவ்ஹீத் எழுச்சி. Show all posts

Sunday, November 22, 2015

ஏகத்துவ கொள்கை எப்படி மாற்றி விடுகிறது?



"முதல் படம் :- குடி , கூத்து , கும்மாளம்!

இரண்டாவது படம் :- ஏகத்துவமே எனது உயிர் மூச்சு!

அல்ஹம்துலில்லாஹ்!" - முஹாஜிரின் புது மடம்

--------------------------------------

முகநூலில் எனது நண்பர் 'முஹாஜிரின் புது மடம்' தனது பழைய புகைப்படத்தையும் ஏகத்துவ கொள்கைக்கு வந்தவுடன் தான் எவ்வாறு மாறியுள்ளேன் என்பதையும் தனது முகநூல் கணக்கில் பதிவேற்றியுள்ளார். அது உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.

ஒரு இளைஞனை ஏகத்துவ கொள்கை எப்படி மாற்றி விடுகிறது?

நானும் ஆரம்ப காலங்களில் பெரும் சினிமா பைத்தியமாக இருந்துள்ளேன். 'சலங்கை ஒலி' படத்தை படிக்கும் காலங்களில் மூன்று நாள் தொடர்ந்து தியேட்டரில் போய் பார்த்துள்ளேன். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களில் எனது பெரும்பாலான நேரங்களை வீணில் செலவழித்துள்ளேன். என்னோடு படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். டெஸ்க்கின் மேலேயே மிருதங்கம் மற்றும் தபேலா மிக அருமையாக வாசித்து பாடலும் பாடுவேன்.

ஏகத்துவ கொள்கையை ஏற்றவுடன் சினிமா மயக்கமும், இசை மயக்கமும் என்னை விட்டு சென்று விட்டது. சினிமா படம் முழுமையான ஒன்றை பார்த்து பல வருடங்களாகிறது. எனது நிலை மட்டுமல்ல... தமிழகத்தின் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் நிலையும் இதுதான்.

நேரான வழியை காட்டித் தந்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Friday, November 20, 2015

கிளி கூட்டமல்ல... கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்டம்!

//இந்திய தேசியத்திற்கு எதிராக சவுதி தேசியத்தை விதைவைத்து நீர் ஊற்றி முளைக்கச்செய்யும் டி.என்.டி.ஜே கிளிக்கூட்டம் மற்றும் கிளிக்கூட்ட ஓனர் பி.ஜேவுக்கும் எதிரானதாக என்றும் என்றென்றும் தொடரும் எம்முடைய எதிர்ப்பு.....
இதில் மாற்றுக்கருத்தென்பதே இல்லை.....// RAM NIVAS

பார்பனியத்துக்கு ஆப்பு வைக்க வந்தது கிளி கூட்டமல்ல.. ராம்...

அந்த ஏக இறைவனை மட்டுமே வணங்கும் ஏகத்துவ கூட்டம்..

உங்களுக்கு தர்ஹா வணங்கிகளைப் பற்றி பிரச்னை இல்லை!

உங்களுக்கு தப்லீக் ஜமாத்தைப் பற்றியும் பிரச்னையில்லை...

உங்களுக்கு ஷியா கூட்டத்தைப் பற்றியும் பிரச்னையில்லை...

ஹனபி, ஷாஃபி, ஹம்பலி, மாலிகியாலும் பிரச்னையில்லை

தவ்ஹீத் ஜமாத்தினால்தான் உங்களுக்கு பிரச்னையில்லையா?

எனவேதான் சொல்கிறோம் நாங்கள் கிளி கூட்டமல்ல...

உங்களுக்கு கிலி எற்படுத்தியிருக்கும் ஏகத்துவ கூட்டம்....

பட்டி தொட்டி எல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற

நிகழ்ச்சி நடத்தி மத மோதல்களை தடுத்தவர் பிஜே அண்ணன்....

உமது தலைவன் ராம் கோபாலய்யரிடம் சொல்லி இதே போல்

ஒரே ஒரு நிகழ்ச்சியையாவது நடத்திவிட முடியுமா உம்மால்...

சவால் விட்டு கேட்கிறேன்... 'இந்து ஓர் இனிய மார்க்கம்' என்ற

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதற்கு எங்களை அழைக்கலாமே...

அங்கு வந்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரலாமே...

ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக்கான செலவுகள் அனைத்தையும்

நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்... முடியுமா உங்களால் ராம்...

முடியவே முடியாது... இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும்...

எங்களைப் போன்ற நிகழ்ச்சி நடத்த உங்களால் முடியாது...

எனவேதான் நான் மீண்டும் சொல்கிறேன்... நாங்கள் கிளி கூட்டமல்ல

உங்கள் பிடறியை பிடித்து கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்டம்





Sunday, October 11, 2015

ஏகத்துவ வாதிகளின் எழுச்சி மிகு பணிகள்!



மறுமை வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு இரவு பகல் பாராது ஏகத்துவ சிந்தனையை மக்கள் மனதில் எத்தி வைக்க பாடுபடும் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்' இளம் வீரர்கள்.

அஜீத்துக்கும் விஜய்க்கும் ரசிகர் மன்றங்கள் அமைத்து தங்கள் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் இதே தமிழகத்தில்தான் ஏகத்துவ இளைஞர்களும் உள்ளனர். இறைவன் இந்த இளைஞர்களின் மகத்தான பணியை பொருந்திக் கொண்டு தமிழகத்தில் ஏகத்துவம் எழுச்சி பெற அருள் புரிவானாக! இந்த இளைஞர்களையும் பொருந்திக் கொள்வானாக!

Monday, September 21, 2015

தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைப் பற்றி இந்து பத்திரிக்கை புகழாரம்!



700 மருத்துவ முகாம்களை நடத்தி 10000 ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ பரிசோதனை களையும் மருந்துகளையும் பெற்றுச் செல்கின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பின்தங்கிய ஊரான மேலப் பாளையத்தில் 350 நபர்கள் தங்கள் கண்களை பரிசோதித்துக் கொண்டு மருத்துவ உதவிகளையும் பெற்றுச் செல்கிறார்கள். இது கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பக்ரீத் பெருநாளன்று திருநெல்வேலி டிஎன்டிஜே கிளை சார்பாக 15 டன் இறைச்சியை 15000 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர். மேலப் பாளையம், பாளையங்கோட்டை, ஏர்வாடி, அம்பா சமுத்திரம், பொட்டல் புதூர், கடைய நல்லூர், தென்காசி, புளியங்குடி, சங்கரன் கோவில், செங்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இந்த இறைச்சியை வருடா வருடம் பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பின்பற்றி வேறு சில அமைப்புகளும் தற்போது மருத்துவ முகாம்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

தகவல் உதவி
தி ஹிந்து நாளிதழ்
15-09-2014

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் வைத்து நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஆபரேசன் செய்ய வேண்டிய நோயாளிகளை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முதல் வேன்.. 19-09-2015



அரசியலில் ஓட்டுக்காக எவரிடம் இந்த அமைப்பு செல்வதில்லை. அரசு அதிகாரங்கள் எதுவும் இந்த அமைப்பிடம் இல்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட பல லட்சம் இளைஞர் பட்டாளம் மட்டுமே இந்த அமைப்பின் சொத்து. மக்களின் நன்கொடைகளை வைத்தே ஒரு அரசாங்கத்தைப் போன்று இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பஜ்ரங்தள் போன்ற இந்துத்வா அமைப்புகள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் இருந்து பாடம் பயின்று கொள்ளட்டும். பல சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு மத அமைப்பு எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தவ்ஹீத் ஜமாத்தை முன்னோடியாகக் கொண்டு இந்துத்வாவாதிகள் தங்களை திருத்திக் கொள்வார்களாக! மதுவிலும், மூடப் பழக்கத்திலும் சாதி வெறியிலும் சிக்கி சிதறிக் கிடக்கும் எனது சகோதர இந்து மக்களை இனியாவது அழிவின் பக்கம் கொண்டு செல்லாமல் ஆக்கபூர்வ பணிகளை இந்துத்வாவாதிகள் முன்னெடுப்பார்களாக!

Tuesday, September 08, 2015

தஞ்சை பாபநாசத்தில் புதிய பள்ளி வாசல் திறப்பு!







இறைவனை மட்டுமே வணங்கி வழிபடக் கூடிய தவ்ஹீத் மர்கஸ் இன்ஷா அல்லாஹ் 19-09-2015 அன்று பாபநாசத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த பள்ளி உருவாவதற்கு அல்லும் பகலும் உழைத்த நல்லுள்ளங்களின் உழைப்பை இறைவன் ஏற்றுக் கொண்டு தக்க கூலியை வழங்குவானாக!

இந்த பள்ளியில் மவ்லூது ஓதப்படாது: தட்டு தாயத்துகள் மந்திரித்து கொடுக்கப்பட மாட்டாது: நாகூர் ஆண்டவர், முஹைதின் ஆண்டவர்களுக்கெல்லாம் இங்கு ஃபாத்திஹா ஓதப்பட மாட்டாது. வரதட்சணை வாங்கும் திருமணங்கள் இந்த பள்ளியில் நடத்தப்பட மாட்டாது: மொத்தத்தில் அன்று நபிகள் நாயகம் காலத்தில் இறை இல்லங்கள் எவ்வாறு செயல்பட்டதோ அதே போன்று இந்த பள்ளியும் இன்ஷா அல்லாஹ் இயங்கும்.

Sunday, August 02, 2015

ஆடுதுறை மற்றும் மன்னார்குடியில் எதிர்ப்பை மீறி உடல் அடக்கம்!



ஆடுதுறை சம்பவத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மார்க்கம் அறியாத மூடர்கள் நபி வழியில் இறந்த உடலை அடக்கம் செய்ய மறுத்தனர். இதற்கு காவல் துறையும் துணை போனது.

இந்த அடாவடித்தனத்தைக் கண்டு பொறுக்காத தவ்ஹீத் ஜமாத்தினர் தடையை மீறி உடலை அடக்கம் செய்தனர். ஆடுதுறையிலும் இதே போன்று தடையை மீறி இறந்த உடலை அடக்கம் செய்துள்ளனர். இனி மேல் எதிர்ப்பு தெரிவித்தால் இதே போன்று தடையை மீறி உடலை அடக்கம் செய்ய தமிழகம் முழுவதும் தவ்ஹீத் வாதிகள் தயாராக வேண்டும்.

இதே போன்று சென்ற ரமலானில் பண்டாரவாடையில் இறந்த உடலை அடக்கம் செய்ய ஒரு கூட்டம் மறுத்தது. பள்ளி வாசலின் உள்ளே ஒரு இளைஞன் சரியான குடி போதையில் இடையிடேயே வெளியே வந்து 'உயிரே போனாலும் உடலை அடக்க விட மாட்டோம்' என்று வெறித் தனமாக கத்தி விட்டு சென்றான். காவலுக்கு நின்ற போலீஸ்காரர் ஒருவர் 'எங்கள் கோவிலில் தான் இது போன்று சாராயத்தை குடித்து விட்டு அலம்பல் செய்வார்கள். உங்கள் பள்ளி வாசலில் இவ்வாறு ஒருவன் குடித்து விட்டு கத்திக் கொண்டு நிற்பதை முதல் முறையாக பார்க்கிறேன்' என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

பண்டாரவாடையில் இவ்வாறு பிரச்னை நடந்து கொண்டிருந்தபோது மாலை நேரத் தொழுகைக்கும் இரவு நேரத் தொழுகைக்கும் பாங்கு கொடுக்கப்பட்டது. பாங்கு கொடுத்தவுடன் சுன்னத் ஜமாத் பெரிய பள்ளியின் உள்ளே 'உடலை அடக்கக் கூடாது' என்று கோஷமிட்ட ஒரு பெரும் கும்பல் பள்ளிக்கு வெளியே தொழாமல் வந்தது. சில அடி தூரத்தில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியின் வெளியே கூடியிருந்த அனைத்து மக்களும் தொழ பள்ளிக்கு சென்றனர். ஆனால் தொழ பள்ளியில் இடமில்லை. இரண்டாவது ஜமாத், மூன்றாவது ஜமாத், நான்காவது ஜமாத் என்று தொழுது தங்கள் கடமையை தவ்ஹீத் இளைஞர்கள் நிறைவேற்றினர்.

பெரிய பள்ளியில் குடித்து விட்டு கும்மாளமிட்ட சுன்னத் ஜமாத் இளைஞர்களையும் ஆறு நோன்பு வைத்துக் கொண்டு கடமையான தொழுகைகளையும் நிறைவேற்றிய தவ்ஹீத் பள்ளியில் தொழுத ஏகத்துவ இளைஞர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். சாராயத்தில் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களின் நேர்வழிக்காக பிரார்த்தனை செய்தேன்.

ஐந்து வேளை தொழாதவன், சாராயம் குடிப்பவன், வட்டி வாங்குபவன், விபசாரம் புரிந்தவன், பள்ளி வாசல் சொத்தை கொள்ளை அடித்தவன், அரபு நாடுகளில் வேலை செய்து கம்பெனி பணத்தை சுருட்டிக் கொண்டு வந்து ஊரில் பெரிய மனிதனாக உலா வருபவன் இவனது குடும்பத்தாருக்கெல்லாம் இறந்த உடலை அடக்கம் செய்ய எந்த வித கட்டுப்பாடுகளையும் பள்ளிவாசல் நிர்வாகம் விதிப்பதில்லை.

ஆனால் நபி சென்னபடி தனது வாழ்வை அமைத்துக் கொண்டு ஏகத்துவத்தைக் கடை பிடிக்கும் இளைஞனின் வீட்டு இறந்த உடலை இந்த பள்ளி நிர்வாகிகள் அடக்க இடம் தர மறுக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களை இந்த உலகிலேயே இறைவன் இழிவுபடுத்துவான். மறு உலகிலும் உலக மக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனையை தருவான். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

இராஜகிரி தவ்ஹீத் பள்ளியில் ஒரு அழகிய பயான்!



சில நாட்களுக்கு முன்பு தவ்ஹீத் ஜமாத் ராஜகிரி கிளையில் ஜூம்ஆ தொழுகைக்கு சென்றிருந்தேன். குத்பா பிரசங்கத்துக்கு வாரம் ஒரு புது முகங்கள் வருகை புரிவர். இந்த வாரம் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனையொத்த தோற்றத்தோடு ஒரு சகோதரர் பயான் செய்ய வந்திருந்தார். வழக்கமாக நாம் நீண்ட தலைப்பாகை, நீண்ட ஜிப்பா, நீண்ட தாடி போன்ற தோற்றத்தோடு மார்க்க அறிஞர்களை பார்த்து பழக்கப்பட்டுள்ளோம். நமக்கு இந்த வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தது புதிதாக பள்ளிக்கு வருபவருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். இந்த சிறு வயதில் என்ன பேசப் போகிறாரோ என்று அலட்சியமாக அமர்ந்திருந்தேன். பேச ஆரம்பித்தவுடன்.... ஆஹா.... அருவிபோல சரளமாக அவரது பேச்சு சென்று கொண்டிருந்தது. 'ரமலானில் நாம் பெற்ற படிப்பினைகள்' என்ற தலைப்பில் அழகிய முறையில் முக்கால் மணி நேரம் மிகச் சிறந்த உரையை இந்த சகோதரர் நடத்தி முடித்தார்.


தமிழகத்தில் பள்ளி வாசல்களின் பெரும்பாலான ஜூம்ஆ உரைகளில் மக்கள் தூங்கி வழிவதைத்தான் பார்த்து வருகிறோம். குர்ஆனையும் ஹதீஸையும் வெள்ளி மேடைகளில் மக்களுக்கு சொல்லாமல் இமாம்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களை மத்ஹப் கிதாபுகளின் கருத்துக்களை வலிந்து திணிப்பதாலேயே இந்த நிலை. இனி வருங்காலங்களிலாவது வெள்ளி மேடைகள் குர்ஆனையும் நபி மொழிகளையும் போதிக்கட்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை சீராக்கும் வகையில் அமையட்டும்.

Friday, July 10, 2015

இவர்கள் சுன்னத் ஜமாத்தா? அல்லது தவ்ஹீத் ஜமாத்தா? :-)



இவர்கள் சுன்னத் ஜமாத்தா? அல்லது தவ்ஹீத் ஜமாத்தா?

சில சுன்னத் ஜமாத் பள்ளிகளில் நான் கண்ட காட்சி.....

தராவீஹ் தொழுகைக்கு கலந்து கொள்ளும் பலர் 8 ரகஅத் முடிந்தவுடன் எழுந்து பள்ளியை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

அடுத்த ஒரு குரூப் 12 ரகஅத் முடிந்தவுடன் நேராக வந்து தராவீஹ் ஜமாத்தில் கலந்து கொள்கிறார்கள். இதே காட்சியை மக்கா மதினாவிலும் நாம் காணலாம்.

மக்கா ஹரமில் தொழ வைக்கும் இமாமும் 8 ரகஅத் முடிந்தவுடன் எழுந்து சென்று விடுவார். மற்றொரு இமாம் வந்து மீதி தொழுகையை பூர்த்தி செய்வார்.

ஆக.... நம் தமிழகத்தின் பெரும்பாலான சுன்னத் ஜமாத் பள்ளி வாசல்கள் மெக்கா ஹரமின் வழியை பின்பற்றுவதாகவே நினைக்கிறேன். எப்படியோ நபி அவர்களின் ஒரு சுன்னத் உயிர்ப்பிக்கப்படுகிறது.

Thursday, July 02, 2015

ரமலான் இரவு நேர (சஹர் நேர) மார்க்க விளக்க நிகழ்ச்சி!





ரமலான் இரவு நேர (சஹர் நேர) மார்க்க விளக்க நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சால்மியா கிளை நடத்தும் மார்க்க விளக்க நிகழ்ச்சி!

இந்நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மாநில பேச்சாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் "நன்றிக்கெட்டோர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்கள்.

குவைத்தில் நிகழும் அசாதாரண சூழலிலும் நள்ளிரவு வேளையிலும் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தங்களின் வேலைகளை முடித்து விட்டு இந்த வெயில் காலங்களில் சற்று ஓய்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களே அதிகம். அந்த ஓய்வு நேரங்களையும் தியாகம் செய்து மார்க்கத்தை அதன் தூய்மையான வழியில் அறிந்து கொள்ள வேண்டும் என்று பெருந் திரளாக கூடியுள்ள இந்த ஆண்களையும் பெண்களையும் தொடர்ந்து நேரான வழியில் செல்ல பிரார்த்திப்போம்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Friday, June 26, 2015

பிஜேயின் புத்தகங்கள் சவுதி அரேபியாவில் இலவசமாக!





நான் ரியாத்தில் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு பக்கத்தில்தான் 'சவுதி அழைப்பு வழிகாட்டுதல் மையம்' கிளை ஒன்று அமைந்துள்ளது. உலகத்தின் பல மொழிகளில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அதில் பிரதானமாக நமது தமிழகத்தின் மார்க்க அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீனின் பல புத்தகங்கள் ஆங்கிலம், அரபி, பிலிப்பைன், இந்தோனேஷியா, உருது, பெங்காள் போன்ற பல மொழிகளில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தாவா சென்டர் நடத்தும் பல போட்டிகளுக்கு பிஜே அவர்களின் புத்தகத்தையே அங்குள்ள ஆலிம்கள் தேரிவு செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. 'திருமறையின் தோற்றுவாய்' 'பித்அத் ஓர் ஆய்வு' போன்ற புத்தகங்களை நானே பல இஸ்லாம் அல்லாத நண்பர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளேன்.

அமெரிக்காவுக்கு ஆதரவாக சவுதி அரசு எடுக்கும் பல முடிவுகளை பகிரங்கமாக எதிர்த்தவர் பிஜே. அப்படியிருந்தும் அவரது ஆய்வுத் திறனை மதிப்பில் எடுத்து அவரது புத்தகங்களை இலட்சக் கணக்கில் அச்சடித்து விநியோகிக்கிறது சவுதி அரசு. இவ்வாறு பதிப்பிட்டு வெளியிடுவதற்கு ராயல்டியாக லட்சக் கணக்கில் பிஜேக்கு பணம் வர வேண்டும். ஆனால் அந்த பணத்தையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார் பிஜே. இது சவுதி ஆலிம்களை பிஜேயை பற்றிய மதிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. மதினா பல்கலைக் கழகத்தில் பிஜேயின் புத்தகங்களை மாணவர்கள் ஆய்வு படிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு பிஜே அவர்களை கௌரவ விருந்தினராக ஹஜ் கிரியைகளுக்காக முன்பு ஒரு முறை அழைப்பு விடுத்திருந்தது சவுதி அரசு. ஆனால் அந்த நேரத்தில் தமிழகத்தில் பிஜேயின் நிகழ்ச்சிகள் பல இருந்ததால் அந்த அழைப்பை பிஜே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இவரின் அருமை தெரியாமல் தமிழக இஸ்லாமியர்களில் பலர் பிஜே யை வைத்து இல்லாததும் பொல்லாததும் சொல்லி தங்களை முன்னிலைப்படுத்தப் பார்க்கிறார்கள். ஷைபுதீன் ரஷாதி, ஜமாலி, போன்றவர்கள் பிஜேயை எதிர்த்தே பிரபலமானவர்கள் :-) இங்கு பிஜேயை வைத்து பிரபலமடையலாம். நாளை மறுமையில் எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டே மக்களை வழி கெடுத்தாயே என்று ஷைபுதீன் ரஷாதியையும், ஜமாலியையும் இறைவன் உலுக்கி கேட்கும் பொது என்ன பதிலை வைத்துள்ளார்கள்?

இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

Saturday, June 13, 2015

திருப்பந்துருத்தியில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு!







சென்ற வெள்ளிக் கிழமை 12-06-2015 திருப்பந்துருத்தியில் நடந்த வரதட்சணை ஒழிப்பு மாநாட்டுக்கு நண்பர்களோடு சென்றிருந்தோம். அந்த ஊர் மூடப் பழக்கங்களில் அதிகம் ஊறிய ஊர். தர்ஹா வழிபாடு, மவுலூது, தட்டு, தாயத்து போன்ற இஸ்லாம் வெறுக்கும் செயல்களை மார்க்கமாக செய்து வருபவர்கள் அதிகம் கொண்ட ஊர். எனவே ஊரில் இந்த கூட்டத்துக்கு மிகவும் எதிர்ப்பு கிளம்பியது. ஊரில் கலவரம் வரும் என்று ஊரில் உள்ள பலரால் காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல் துறை தகுந்த பாதுகாப்பையும் கொடுத்தது.

எங்களை வரவேற்றதே காவல் துறைதான். வரிசையாக காவல் துறையினரின் அணி வகுப்பு. கூட்டம் நடக்கும் இடம் வரை இருந்தது. ADSP தலைமையில், 1 DSP, 6 INSPECTORS மற்றும் 100க்கும் அதிகமான காவல் துறையைச் சேர்ந்தவர்களின் கண்காணிப்பில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு மிக சிறப்பாக நடந்தேறியது. மவ்லூதின் தீமைகள், சமாதி வழிபாட்டில் உள்ள தவறுகள், வரதட்சணையினால் சமூகம் படும் சிரமங்கள் போன்றவற்றை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் யூசுஃபும், மாவட்ட பேச்சாளர் இமாம் அலியும் சிறப்பாக எடுத்துக் கூறினர். 10 மணி அளவில் கூட்டம் இனிதே நிறைவுற்றது. எங்கு திரும்பினாலும் இளைஞர்கள் கூட்டம். சினிமாவில் வாழ்வை தொலைத்துக் கொண்டு ஒரு பெரும் கூட்டம் தமிழகத்தில் உள்ளபோது அதே போன்ற இஸ்லாமிய இளைஞர் பட்டாளம் தங்கள் நெஞ்சில் குர்ஆனை சுமந்து கொண்டு பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருப்பதை பார்க்க சந்தோஷமாக இருந்தது.

மூடப் பழக்கங்களில் ஊறிய அந்த ஊரில் இனி தவ்ஹீன் செயல்பாடுகள் சிறிது சிறிதாக இறைவன் உதவியால் நிறைவேற்றப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே!

Monday, June 01, 2015

மேலப் பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய ஒரு மாநாடு!







நேற்று மேலப் பாளையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் வரலாற்று சிறப்பு மிக்க மாநாட்டையே நாம் பார்கிறோம்.

இதே மேலப் பாளைத்தில் 20 வருடங்களுக்கு முன்பு ஏகத்துவத்தை சொன்ன காரணத்திற்காக சமாதி வழிபாட்டாளர்களாலும், புரோகிதர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப் படை பிஜே அவர்களை அரிவாளைக் கொண்டு வெட்டியது. ஏகத்துவத்தை இந்த கொலையின் மூலம் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பது எதிரிகளின் திட்டம். அப்போது அந்த கூட்டத்தில் 50 பேர் கூட இருந்திருக்கவில்லை. இறைவன் கிருபையால் அன்று பிஜே அந்த கொலை முயற்சியிலிருந்து தப்பி விட்டார்.

ஆனால் அதே இடத்தில் நேற்று ஏகத்துவத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவை பார்க்கிறீர்கள். இந்த கூட்டம் பிரியாணி பொட்டலத்துக்கு ஆசைப் பட்டு வந்த கூட்டமல்ல. ஏகத்துவத்தை தமிழகம் தாண்டி அகில உலகுக்கும் எடுத்துச் செல்வோம் என்று சூளுரைக்க வந்த கூட்டம். தங்களின் சொந்த கை காசை போட்டு வெளியூர்களில் இருந்து வந்து குழுமிய கூட்டம். இந்த கூட்டத்தை எங்களின் கிராமத்திலும் காணொளியாக காட்டப்பட்டது. காணொளியைக் காணுவதற்கும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, May 09, 2015

வழுத்தூரில் 'மஸ்ஜித் தவ்ஹீத்' புதிய பள்ளி வாசல் திறப்பு!









சென்ற வெள்ளிக்கிழமை எனது இளைய மகனின் நண்பன் 'வழுத்தூரில் தவ்ஹீத் பள்ளி' திறப்பு விழா! அவசியம் வந்து விடு' என்று சொல்ல 'நீங்களும் வருகிறீர்களா?' என்று என் மகன் கேட்க.... நானும் சரி என்று சொன்னேன். 12 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்படுவதாக எற்பாடு.

இடையில் எனது மகனின் வெறோரு நண்பன் போன் செய்து 'டேய்... வழுத்தூரில் எல்லாம் புது பள்ளி திறப்பு கிடையாது. கண்டியூரில்தான் புது பள்ளி திறக்கிறார்கள்' என்று குட்டையை குழப்பிவிட என் மகனோ சரியாக விசாரிக்காமல் என்னையும் அழைத்துக் கொண்டு கண்டியூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் ஒரு புது பள்ளி திறப்பு விழா நடந்து கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால் 'முஹைதீன் ஆண்டவர்கள் புதிய பள்ளி வாசல் திறப்பு விழா' என்ற அலங்கார பந்தல் எங்களை வரவேற்றது. ஆஹா.... இடம் மாறி வந்து விட்டோம் என்று அப்போதே நினைத்தேன்.

"இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றை பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயிகளில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையில் இவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு." (2:114)

என்ற இறை வசனத்தை விளங்காமல் கண்டியூர் ஜமாத் 'முஹைதீன் ஆண்டவர்' என்று அந்த பள்ளிக்கு பெயரிட்டுள்ளனர். ஆக்ரோஷமாக உரையாற்றிக் கொண்டிருந்த ஏ.கே.அப்துல் ரஹ்மானும் இதனைக் கண்டிக்கவில்லை. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்ட ஒரு இறையடியாரின் பெயரை இறைவனுக்கு மட்டுமே உபயோகப்படுத்தும் 'ஆண்டவர்' என்ற அடை மொழியையும் சேர்த்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வைத்தார்கள் என்று விளங்கவில்லை. இறைவன் இந்த ஜமாத்துக்கு நேர் வழி காட்டுவானாக!

என் மகன் என்னிடம் மெதுவாக 'அப்பா.... தவறான இடத்துக்கு வந்து விட்டோம் என்று நினைக்கிறேன்' என்றார் மெதுவாக....

'உன் நண்பனிடம் இன்னொரு முறை சரியாக கேள்' என்று நான் சொல்ல உடன் செல் போனில் தனது நண்பனோடு தொடர்பு கொண்டார்.

'டேய் என்னடா... இது சுன்னத் ஜமாத் பள்ளி திறப்பு விழா..... கண்டியூர்ல நிக்கிறேன்டா... என் அப்பாவையும் அழைத்து வந்திருக்கேன்டா...'

'உன்னை எங்கடா போகச் சொன்னேன்? ... கண்டியூர் ஏண்டா போனே... தவ்ஹீத் பள்ளி திறப்பு விழா வழுத்தூர்லடா...' என்று என் மகனின் நண்பன் கலாய்க்க என் மகனுக்கோ ஏக டென்ஷன். 'வெளியூர் கிளம்புவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக விசாரிக்கக் கூடாதா?' என்று கடிந்து கொண்டேன்.

வந்தது வந்து விட்டோம். இங்கேயே தொழுது விடலாம் என்று நினைத்தால் 'முஹைதீன் அண்டவர் பள்ளிவாசல்' போர்டு ஞாபகம் வரவே அங்கு தொழ மனமில்லாமல் 'சரி... புறப்படு வழுத்தூருக்கு செல்வோம்' என்றேன். கண்டியூரில் இருந்து கிளம்பும் போது மணி 12:45. வழுத்தூரில் இடத்தை விசாரித்துக் கொண்டு சரியாக சென்று விட்டோம். மேல வழுத்தூரிலிருந்து மாங்குடி செல்லும் வழியில் பல வீடுகளுக்கு மத்தியில் அழகிய தோற்றத்தில் 'மஸ்ஜித் அத் தவ்ஹீத்' கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. ஜூம்ஆ பேருரை மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்று 15 நிமிடத்தில் தொழுகையும் ஆரம்பமானது. புதிய பள்ளியில் தொழுது விட்டு அங்கிருந்து வீடு கிளம்பினோம்.

-----------------------------------------------------------------


வழுத்தூரைப் பொருத்த வரையில் அங்கு ஆரம்பம் முதலே தவ்ஹீத் கொள்கைகளுக்கு மிக அதிக எதிர்ப்பு இருந்தது. மார்க்கத்துக்கு முரணான 'கொடி சீலை' என்ற ஒரு நிகழ்வை வருடா வருடம் மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். அங்குள்ள பள்ளி வாசலுக்கு 'முஹைதீன் ஆண்டவர் பள்ளி வாசல்' என்று பெயர் வைத்திருப்பார்கள். அஷ் ஷைகு ஷா என்ற பெயரில் பெரிய தர்ஹா ஒன்று ரோட்டோரத்திலேயே இருக்கும். அது மட்டும் அல்லாமல் சிறு சிறு தர்ஹாக்களும் உண்டு. :-) இவ்வாறு குர்ஆன் காட்டித் தராத செயல்களை செய்வதில் அதிக அக்கறை காட்டுவர். எனவே ஆரம்ப காலங்களில் தவ்ஹீத் பிரசாரத்துக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தது. எங்கெல்லாம் ஏகத்துவ கொள்கையை அதிகம் எதிர்க்கிறார்களோ அங்கெல்லாம் இறைவன் தவ்ஹீதை வெகு சீக்கிரத்தில் வளர்க்கிறான். இதற்கு நாகூர் ஒரு சிறந்த உதாரணம். இன்று வழுத்தூரில் கம்பீரமாக தவ்ஹீத் கொள்கைகளை பறை சாற்ற ஒரு பள்ளி எழுப்பப்பட்டு விட்டது. இதற்காக உடலாலும் பொருளாலும் தங்கள் பங்களிப்பை அளித்த அனைத்து மக்களுக்கும் இறைவன் மேலும் அபிவிருத்தியை நல்குவானாக!


தனியாக இவ்வாறு தனிப் பள்ளி கட்டிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நமது ஊர் பள்ளியிலேயே அந்த மக்களை திருத்த முயல வேண்டும். அந்த நாள் கை கூடி வரும் போது இவ்வாறு தனிப் பள்ளி கட்டிக் கொண்டு செல்லும் வழக்கமும் ஒழியும். அத்தகைய நாட்களை இறைவன் நம் தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் ஏற்படுத்துவானாக!




Tuesday, April 28, 2015

'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' இனி அவ்வளவுதானா?

சகோ முஹம்மத் ஆஷிக்!

//இப்பல்லாம் த்த்ஜவை விட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டு இருக்காங்க. அவர்களின் பேச்சும் ஒழுக்கமும் பண்பும் அகபாவமும் மரியாதைக்கெட்டத்தனமும் எல்லாம் தெரிஞ்ச ஈகோத்தனமும் மக்களை வெறுக்க வைத்து விட்டன. நானும் த்த்ஜவ விட்டு விலகி தள்ளிப்போனவன் தான். நான் கொஞ்சம் சீக்கிரம்... மத்தவங்க கொஞ்சம் லேட்டு அவ்வ்ளோதான்....

இப்ப உள்ளமாதிரியே தப்பு தப்பா பத்வா தந்துட்டு இருந்தா கடைசியா த்க்லீது செய்யிறவங்க மட்டும் தா ன் ததஜவில் மீதி இருப்பாஙக. குர் ஆன் ஹதீசை சிந்திக்கிறவ்ங்க எல்லாரும் வெளியேறிடுவாங்க//


மீண்டும் தவறான புரிதல். தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறிய பாக்கராகட்டும், தமுமுகவிலேயெ தங்கி விட்ட ஜவாஹிருல்லாவாகட்டும் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இந்த ஜமாத்தை விட்டு விலகிச் சென்றாலும் விலகியவர்கள் தவ்ஹீத் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். பாக்கர் அண்ணன் என்றாவது தர்ஹாவில் சென்று தலை முட்டியதை பார்த்திருக்கிறீர்களா? அல்லது அண்ணன் ஜவாஹிருல்லா ஏகத்துவ கொள்கைக்கு எதிராக என்றாவது பேசியாவது பார்த்திருக்கிறீர்களா? எனவே தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் இயங்காமல் வேறு பெயர்களில் இயங்கினாலும் அது தாய்க் கழகதத்துக்கு பெருமைதானே!

லட்சக் கணக்கான மக்கள் அங்கம் வகிக்கும் தவ்ஹீத் ஜமாத்தில் சில முறுகல்கள் வருவது இயற்கை. பிஜே அண்ணன் ஓரு முக்கியஸ்தரின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் உள்ளனர். :-) சிலருக்கு அரசியல் ஆசை வந்தது. அதனால் தமுமுக என்று பிரிந்து சென்று தங்களின் பணியை செய்து கொண்டுள்ளனர். அங்கும் 50 சதவீதத்துக்கு மேல் தவ்ஹித் வாதிகளே! நிர்வாகத்தில் சில முறுகல்கள் வரலாம். உலக ஆதாயம் கருதி சிலர் தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி வரலாம். அந்த ஆதாயம் கிடைக்காதவர்கள் சில நாட்களில் விலகியும் செல்லலாம். எனக்கு மரியாதை தரவில்லை என்ற அற்ப காரணங்கள் கூட இந்த ஜமாத்தை விட காரணமாக இருக்கலாம். எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு விலகிச் சென்றாலும் தவ்ஹீத் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழ மாட்டார்கள். எனவே தவ்ஹீத் நாளுக்கு நாள் வளர்கிறதே யொழிய தேயவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து தவ்ஹீத் சகோதரர்கள் கோபமாகவும் வரம்பு மீறியும், தரம் தாழ்ந்தும் விமரிசிப்பதாக குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். தவ்ஹீத்வாதிகள் ஒன்றும் மலக்குகள் அல்ல. அவர்களும் மனிதர்களே. அவ்வாறு எழுதுபவர்களின் பதிவுகளுக்கு சென்று நானும் அறிவுரை வழங்கியுள்ளேன். அவர்களும் திருத்திக் கொண்டுள்ளார்கள்.

குர்ஆனையும் நபி மொழிகளையும் நாம் வாழ்வியலாக கொண்டுள்ளோம். தியாகங்களோடு வாழ்ந்து வரும் நம்மை ஊர் விலக்கம் செய்கிறார்கள்: பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை: இறந்த உடலை அடக்க அனுமதி தருவதில்லை என்ற ஆதங்கத்தினால் சிலரிடமிருந்து கண்ணிய குறைவான வார்த்தைகள் வந்து விடுகின்றன. போகப் போக அவையும் சரியாகும் இன்ஷா அல்லாஹ். தமிழகத்தில் உள்ள அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளிகளிலும் 'யாரும் எந்த முறையிலும் தொழுது கொள்ளலாம்' என்ற ஒரு சிறு அறிவிப்பை மட்டும் அறிவித்து விட்டால் 90 சதவீதமான ஐந்து வேளை தொழுகையாளிகள் தவ்ஹீத் ஜமாத்துக்கு வந்து விடுவர். ஊர் ஜமாத்துக்கு பயந்து கொண்டே பெரும்பாலான மக்கள் தவ்ஹீத் கொள்கையை மனதுக்குள் வைத்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் சில ஆண்டுகளில் அவர்களும் தங்களை வெளிக்காட்டிக் கொள்வர்.

தர்ஹா வணக்கம், தட்டு தாயத்து, மூரீது, பேய் ஓட்டுதல், மந்திரம், சூன்யம், வரதட்சணை என்று அனைத்து மூடப்பழக்கங்களையும் எவ்வாறு கடந்த 25 வருடங்களாக தவ்ஹீத் ஜமாத் பாடுபட்டு ஒழித்துக் கட்டியதோ அதே வீரியத்தோடு வரும்காலத்திலும் பணியாற்றும் இன்ஷா அல்லாஹ்.

எனவே ஒரு சிலர் விலகுவதை வைத்து அல்லது நீங்கள் இந்த ஜமாத்தை விட்டு விலகுவதை வைத்து தவ்ஹீத் ஜமாத்துக்கு ஏதோ மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதாக எண்ணி குதூகலிக்க வேண்டாம். ஏக இறைவனையும், நபிகள் நாயகத்தின் உண்மையான சொற்களையும் பரப்புவதையே தனது வேலையாக கொண்டிருக்கும் இந்த தவ்ஹீத் ஜமாத்தை காப்பாற்றும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்வான். அது பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை சகோ.

Monday, April 27, 2015

ரத்ததானம் - நெகிழ வைத்த நிகழ்வு



(தங்களின் ரத்தத்தை யாரோ ஒருவருக்கு தானமாக கொடுக்க வரிசையில் நிற்கும் தவ்ஹித் சகோதரர்கள். துபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் லதீஃபா மருத்துவ மனையில் நடத்திய ரத்த தான முகாமையே நாம் படத்தில் பார்கிறோம்.)

நேற்று மாலை நேர தொழுகைக்கு தவ்ஹீத் பள்ளிக்கு தொழச் சென்றிருந்தபோது ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்கைக்காக இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. அந்த குடும்பத்தினர் ராஜகிரி தவ்ஹீத் ஜமாத் கிளையை அணுகினர். உடன் தவ்ஹீத் சகோதரர்கள் இரண்டு பேர் சென்று ரத்தம் கொடுத்துள்ளனர். ரத்தம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் அன்பளிப்பாக ரத்த வங்கியில் அளிப்பார்களாம். அந்த பணத்தை வாங்காது 'அந்த ஏழை குடும்பத்துக்கே அந்த பணத்தை சேர்ப்பித்து விடுங்கள்' என்று அந்த இரு தவ்ஹீத் சகோதரர்களும் சொல்லி விட்டு வந்துள்ளனர்.

யாரோ ஒருவருக்காக தனது ரத்தத்தையும் கொடுத்து அதற்காக அளித்த அன்பளிப்பையும் அந்த ஏழை குடும்பத்துக்கே கொடுத்த அந்த தவ்ஹீத் இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது போன்ற மனித நேயப் பணி தமிழகமெங்கும் சத்தமில்லாமல் ஏதோ ஒரு மூளையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே வேளை தவ்ஹீத் ஜமாத்தின் மேல் காழ்ப்புணர்ச்சியால் தினமும் ஏதாவது ஒரு அவதூறுகளும் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டக் கொண்டிருக்காமல் சமூகத்தில் சத்தமில்லாத மறுமலர்ச்சி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர். அந்த சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக ஏகத்தவ வாதிகள் உள்ளனர். இந்த சிறிய அமைப்பு பல ஆண்டுகளாக தமிழகத்தில் ரத்த தானம் கொடுப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. சத்தமில்லாத ஆர்பாட்டமில்லாத புரட்சி.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு!



எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு :

- புதிய நிர்வாகிகள் தேர்வு!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 16வது பொதுக்குழு ஈரோட்டிலுள்ள பிளாட்டினம் மஹாலில் 26.04.15 ஞாயிறு நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலாவின் படி மாநில மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தியது. மேலாண்மைக்குழு நியமனம் செய்யும் தேர்தல் அதிகாரி ஒருவர் தேர்தலை நடத்துவார் என்ற பைலா விதியின் படி மாநில மேலாண்மைக்குழு நிர்வாகம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தேர்தல் அதிகாரியாக நியமித்தது.

அந்த அடிப்படையில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக முன்னின்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தினார்.
அதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் :

மாநிலத் தலைவர் : ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி
மாநிலப் பொதுச் செயலாளர் : முஹம்மது யூசுப்
மாநிலப் பொருளாளர் : கலீல் ரசூல்
மாநிலத் துணைத் தலைவர் : எம்.ஐ.சுலைமான்
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்: தவ்ஃபீக்
மாநிலச் செயலாளர்கள் :
எம்.எஸ்.சுலைமான்
சிராஜுதீன்
ஆவடி இப்ராஹீம்
திருவாரூர் அப்துர்ரஹ்மான்
மயிலை அப்துர்ரஹீம்
இ.முஹம்மது
நெல்லை சையது அலி
நெல்லை யூசுப் அலி
சேப்பாக்கம் அப்துல்லாஹ்
இ.ஃபாரூக்

இந்த புதிய நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். தாவா பணிகளை வீரியமாக கொண்டு செல்ல வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
ஷம்சுல்லுஹா ரஹ்மானி
மாநில மேலாண்மைக்குழு தலைவர்

Saturday, April 18, 2015

ஜமாலியின் புகாரை வாங்க மறுத்த கமிஷனர் ஜார்ஜ்!





நபிகள் நாயகத்தின் அடக்கத்தலத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள பச்சை நிற டூம் அன்னை ஆயிஷா அதனை வீடாக பயன்படுத்தியபோது இருக்கவில்லை. இது போன்று தனது அடக்கத்தலத்துக்கு மேல் கட்டடம் கட்டச் சொல்லி இறைத் தூதரும் சொல்லவில்லை. அதற்கு எதிராகத்தான் சொல்லியுள்ளார்கள். அவ்வாறு கட்டுபவர்களை நபிகள் நாயகம் சபித்துள்ளார்கள். முதன் முதலாக சுல்தான் கலாவூன் சாலிஹி என்ற ஆட்சியாளர் ஹிஜ்ரி 678ல் மரியாதை நிமித்தமாக மரத்தால் ஆன ஒரு டூமை நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தின் மேல் கட்டுகிறார். அதன் பிறகு சிமெண்டால் கட்டப்பட்டு வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு ஹிஜ்ரி 1253ல் துருக்கி உதுமானிய சுல்தான் அப்துல் அல் ஹமீத் அந்த டூமின் மேல் பச்சை வர்ணத்தை பூசுகிறார். அதுவே இன்று வரை தொடர்கிறது. தற்போதய ஆட்சியாளர்களிடம் சவுதி அரேபியாவை ஒப்படைக்கும் போது 'தாங்கள் செய்வித்த மாற்றங்களை இடிக்க வேண்டாம் அப்படியே விட்டு வைத்திருங்கள்' என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். தராவீஹ் மெக்காவில் இருபது ரக்ஆத்துகள் தொழ வைக்கப்படுவதும் இதனை பின் பற்றியே. அந்த ஒப்பந்தத்தை மீற முடியாமல்தான் சவுதி அரசு அந்த பச்சை நிற டூமை தகர்க்காமல் விட்டு வைத்துள்ளார்கள். காவலர்களையும் அங்கு நிறுத்தி வணங்க முற்படுபவர்களை தடுத்து நிறுத்தி பள்ளிக்கு தொழ அனுப்புவார்கள். எனவே மதினாவில் உள்ள அந்த டூமுக்கு எந்த புனிதத்துவமும் இல்லை என்பதை இதிலிருந்து விளங்குகிறோம். இதை சுட்டிக் காட்டித்தான் டிஎன்டிஜே யின் தலைவர் சையது இப்றாஹிம் 'இஸ்லாமிய சட்டங்களின் படி அந்த டூம் இடிக்கப்பட வேண்டும்' என்று கூறியது. இதனை இவர் இன்று புதிதாக சொல்லவில்லை. பல அறிஞர்கள் இதற்கு முன்பே மதினாவில் உள்ள டூமை இடிக்க வேண்டும் என்ற மார்க்க கட்டளையைக் கொடுத்துள்ளனர்.

தர்ஹாக்களை வைத்தே பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் மார்க்க கோமாளி ஜமாலி கமிஷனர் ஜார்ஜிடம் சென்று சையது இப்றாஹிமை கைது செய்ய புகார் அளித்தாராம். ஆனால் அதற்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். வெளி நாட்டில் உள்ள ஒரு கட்டிடத்தை பற்றிய விமரிசனங்களுக்கெல்லாம் இங்குள்ள காவல்துறை எதன் அடிப்படையில் கைது செய்யும் என்ற அடிப்படை அறிவு கூட ஏழு வருடம் மதராஸாவில் ஓதிய இந்த மார்க்க கோமாளிக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. :-) இது போன்ற இரண்டாந்தர ஆலிம்களிடம் மார்க்க அறிவும் இல்லை. உலக அறிவும் இல்லை. ஜமாலி போன்றவர்கள் மார்க்கத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் என்பது தெரிந்தும் இவருக்குப் பின்னாலும் இன்னும் ஒரு சிலர் இருந்து வருவது மேலும் ஆச்சரியத்தை தருகிறது.

சையது இப்றாஹிம் சில நேரம் வார்த்தைகளை சற்று கடுமையாக பிரயோகிப்பதை நானும் ஆதரிக்கவில்லை. அதனை பல பதிவுகளில் சுட்டிக் காட்டியும் இருக்கிறேன். ஆனால் அதனை காரணமாக வைத்து அவர் சொல்லும் எல்லாவற்றிலும் குறை கண்டு அதனை பதிவுகளாக்கி சிலர் மகிழ்கின்றனர். ஒருவர் தனது பின்னூட்டத்தில் 'உணர்வு அலுவலகத்தில் பத்திரிக்கை பண்டல் போட்டுக் கொண்டிருந்தவர் சையது இப்றாஹிம்' என்று கிண்டலடிக்கிறார். பத்திரிக்கை பண்டல் போட்டுக் கொண்டிருந்தவர் மார்க்கம் சொல்லக் கூடாதா? இது போன்ற சாமான்யர்களையும் மார்க்க மேதைகளாக மாற்றியது குர்ஆனின் எளிய நடை என்றால் மிகையாகாது. எனவே விமரிசனம் வையுங்கள். அது ஆக்கபூர்வமாக இருக்கட்டும்.

வீண் அபாண்டங்களையும் பழிச் சொற்களையும் சுமத்தி தவ்ஹீத் ஜமாத் பிரசாரகர்களுக்கு மேலும் நன்மையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை. :-) தவறிலும் ஒரு நன்மை என்று இதனை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

Sunday, March 01, 2015

பர்கிட் மாநகர இளைஞர்களின் பொது நலப் பணி!







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பர்கிட் கிளை சார்பாக 22-02-2015 அன்று தெருக்களை சுத்தமாக்கும் பணி தொடங்கியது. பல இளைஞர்களும் முன் வந்து தெருக்களை சுத்தம் செய்தனர். தேவையற்ற புற்களும், குப்பைகளும் அகற்றப்பட்டன.

எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறிக் கொண்டு இருக்காமல் இளைஞர்கள் செயலில் இறங்கியது பாராட்டப்பட வேண்டியது. ஊர்களில் கழிவு நீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் உற்பத்தி ஆவதால் பாதிப்பு நமக்குதானே! அரசியல்வாதிகள் யாரும் மக்கள் பணி ஆற்றுவதற்காக வருவதில்லை. தேர்தலில் போட்ட முதலை வட்டியும் முதலுமாக எப்படி சேர்பது என்றுதான் சிந்திப்பார்கள். எனவே அரசு செய்யும் என்று இனியும் தாமதிக்காமல் பர்கிட் மாநகரக் கிளை செய்தது போல் ஒவ்வொரு தமிழக கிராமமும் செயலில் இறங்க வேண்டும்.

மூடப் பழக்கத்தை எதிர்ப்பது மட்டும் ஏகத்துவ வாதிகளின் பணியல்ல. சுத்தத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்வதும் ஒரு ஏகத்துவவாதியின் பணி என்பதை நிரூபித்த இளைஞர்களுக்கு ஒரு சலாம்! கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்து நேரத்தை ஓட்டிய இளைஞர்கள் இன்று பொது நலப் பணியில் ஆர்வம் காட்டுவதற்கு மற்றொரு சலாம்!

Saturday, February 14, 2015

மார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை!

மார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை!



ஏழு வருடம் மதரஸாவில் ஓதி பட்டம் பெற்றவர்கள்தான் மார்க்கத்தை சொல்ல வேண்டும். இஸ்லாத்தை போதிக்க நாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற எழுதப்படாத விதி முன்பு தமிழகத்தில் இருந்தது. அதனை எல்லாம் உடைத்து மார்க்கத்தை சொல்ல ஆலிம் பட்டம் தேவையில்லை. பயிற்சி இருந்தால் சாமான்யனும் சொல்லலாம் என்ற நிலையை இன்று தமிழகம் பார்த்து வருகிறது. புரோகிதம் இஸ்லாத்தில் இல்லை என்பதை இன்று உலகுக்கு நிரூபித்து வருகிறோம்.

அந்த வகையில் சொற்பொழிவு எப்படி ஆற்றுவது? தலைப்புகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? மக்களை சலிப்படைய செய்யாமல் எவ்வாறு நமது பேச்சு இருக்க வேண்டும்? ஜூம்ஆ சொற்பொழிவு எதன் அடிப்படையில் அமைய வேண்டும்? என்பதை எல்லாம் விளக்கும் முகமாக திருச்சியில் கருத்தரங்கு நடைபெற்றது. அதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியையே நாம் பார்கிறோம்.

சென்ற பெருநாள் தினத்தன்று எனது மகனிடம் தொலைபேசினேன். அப்போது வெளியூரில் இருப்பதாக சொன்னார். பெருநாள் தினத்தன்று வெளியூரில் என்ன பண்ணுகிறாய்? என்று கேட்டேன். தவ்ஹீத் பள்ளியில் பெருநாள் பயான் பண்ண எனது நண்பனோடு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளோம். இரண்டு மணி நேரம் கழித்து ஊருக்கு வந்து விடுவேன் என்றார். கல்லூரியில் படிக்கும் எனது மகனுக்கும் மகனின் நண்பனுக்கும் ஆர்வம் எவ்வாறு திசை திருப்பப் பட்டுள்ளது என்பதை பார்க்கிறோம். சினிமா கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றங்கள் அமைத்து பாலாபிஷேகம் செய்து வரும் இந்நாளில் பெருநாள் தொழுகை சொற்பொழிவுக்காக வெளியூர் செல்லும் இந்நாள் இளைஞர்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்திய அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

Tuesday, February 10, 2015

எனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்!



ஒவ்வொருவருக்கும் வாழ்வில் மறக்க முடியாத இடங்கள் என்று சில இருக்கும். அந்த வகையில் எனது வாழ்விலும் மறக்க முடியாத இடத்தை இந்த பள்ளி வாசல் பெற்றுள்ளது. எனது அலுவலகத்துக்கு பின்புறம் இந்த பள்ளி அமைந்துள்ளது. வாழ்நாளில் அதிக நாட்களை இந்த பள்ளியில் செலவழித்துள்ளேன். தமிழகத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியை தவிர்த்து அதிகம் தொழுதுள்ளது இந்த பள்ளியாகத்தான் இருக்கும்.

சில நேரங்களில் வேலை அதிகமாகி விட்டால் கூட்டு தொழுகைக்கு சற்று தாமதமாக சென்று விடுவதுண்டு. அது போன்ற நேரங்களில் கூட்டு தொழுகையானது முடிந்து விடும். எனவே பின்னால் தாமதமாக வந்தவர்கள் அவர்களுக்குள் ஒரு தலைவரை ஏற்படுத்திக் கொண்டு தொழுவது வழக்கம். தனியாக தொழுவதை விட இவ்வாறு கூட்டாக தொழுவது பல மடங்கு நன்மை பயக்கும் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் சேர்ந்து தொழுவதையே விரும்புவர். ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இவ்வாறு தாமதமாக வந்தவர்கள் பல முறை கூட்டாக நின்று தொழுவதை சவுதியின் ஒவ்வொரு பள்ளி வாசலிலும் தினமும் பார்கலாம்.

அந்த வகையில் நேரம் கழித்து செல்லும் போது தொழுகைக்கு வருபவர்களில் பலர் என்னை கை காட்டி தொழ வைக்க சொல்வர். சில நேரங்களில் மறுத்தாலும் பல நேரங்களில் கட்டாயப்படுத்தி நிறுத்த வைக்கப்படுவேன். இவ்வாறு கிட்டதட்ட நூறு தடவைக்கு மேல் நான் இந்த பள்ளியில் தொழ வைத்திருப்பேன். என்னை பின் பற்றி சவுதி, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், சூடான், ஏமன் போன்ற நாட்டைச் செர்ந்த முஸ்லிம்கள் தொழுதுள்ளனர். நான் யார்? நான் எந்த மொழி? எந்த நாட்டைச் சேர்ந்தவன்? எனது நிறம் என்ன? எந்த குலத்தைச் சேர்ந்தவன்? என்றெல்லாம் அந்த மக்கள் பார்கவில்லை. நான் ஒரு முஸ்லிம் என்றுதான் பார்கிறார்கள். நான் புரோகித படிப்பு படித்துள்ளேனா? நான் புரோகிதனா? புரோகிதன்தானே தொழ வைக்க வேண்டும்? என்று அந்த மக்கள் என்னை தடுத்து நிறுத்தவில்லை. இஸ்லாம் எங்களுக்கு கொடுத்த மிகப் பெரிய பாக்கியங்களில் இந்த கூட்டுத் தொழுகையும் ஒன்று. இந்த கூட்டு தொழுகைதான் இனவெறி, மொழி வெறி, நிற வெறியை முஸ்லிம்களிடத்தில் ஒழித்துள்ளது என்றால் மிகையாகாது.

10 வருடத்துக்கு முன்பு நான் தமிழகம் சென்றிருந்த போது எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் தொழுகைக்கு சற்று தாமதமாக சென்றேன். நான் படித்த பள்ளிக் கூடத்துக்கு அருகில் உள்ள பள்ளி வாசல் அது. என்னைப் போலவே மூன்று பேர் தாமதமாக தொழுகைக்கு வந்தனர். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கூட்டாக தொழுக ஆரம்பித்தோம். சிறிது நேரம் கழித்து இன்னும் மூன்று பேர் வரவே அவர்களும் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். தொழுகை முடிந்தவுடன் பள்ளியின் இமாம்(தலைவர்) கோபத்தோடு என்னை நோக்கி...

'இரண்டாவது ஜமாத்(கூட்டு தொழுகை) வைப்பது ஹனபி மத்ஹபின்(சாதி) படி தடை செய்யப்பட்டது. இது தெரியாதா உங்களுக்கு?'

'நான் ஹனபியை பின்பற்றவில்லை. நான் பின் பற்றுவது நபிகள் நாயகத்தை'

'என்ன இப்படி பேசுகிறீர்கள்? லால் பேட்டை மதரஸாவிலிருந்து இரண்டாவது ஜமாத் வைப்பது தடுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கை வந்துள்ளது. அதன் காப்பி என்னிடம் உள்ளது'

'லால் பேட்டை மதரஸாவின் கருத்தை எல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை. நான் பின் பற்றுவது குர்ஆனையும், நபி மொழிகளையும். அதில் இரண்டாவதாக கூட்டாக தொழுவது தடை செய்யப்பட்டுள்ளதா? பல மடங்கு நன்மை என்றல்லவா வருகிறது?'

வாக்கு வாதம் முற்றவே அங்கு தொழுகைக்கு வந்தவர்கள் எல்லாம் எங்களை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

'அப்போ லால்பேட்டை மதரஸா கருத்தை ஓரத்தில் வைக்கச் சொல்கிறீர்களா?'

'நான் நபிகள் நாயகத்தின் வழிமுறையை சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் லால் பேட்டை அறிக்கையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எது முக்கியம்?

'எனக்கு லால்பேட்டை மதரஸா அறிஞர்களின் கருத்துதான் முக்கியம். அதன்படிதான் இந்த பள்ளி இயங்குகிறது'

'நபிகள் நாயகத்தை விட லால் பேட்டை மதரஸாவின் அறிக்கைதான் உங்களுக்கு முக்கியம் என்றால் அதனை தூக்கி குப்பையில் வீசுங்கள்''

'நான் ஏன் வீச வேண்டும். உங்கள் கொள்கையை தூக்கி குப்பை தொட்டியில்..........' என்று சொன்னவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார். கோபத்தில் நபிகள் நாயகத்தை அல்லவா சொல்கிறோம் என்ற நினைப்பு வரவே 'எல்லாம் இந்த 10 வருடமாகத்தான் குளறுபடிகளே! யாரெல்லாம் மார்க்கம் பேசுவது என்று வரைமுறையே இல்லாமல் போய் விட்டது' என்றார் கோபமாக.

குரல் இருவருக்கும் உயர்ந்து வருவதைப் பார்த்து தொழ வந்தவர்கள் இரண்டு பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

எனது மாமனாரிடம் சென்று அந்த இமாம் 'மருமகப் பிள்ளையை கண்டித்து வையுங்கள். எல்லோர் முன்னாடியும் என்னோடு சண்டைக்கு வந்து விட்டார். என்னை அவமானப்படுத்தி விட்டார்' என்று குறை பட்டுக் கொண்டுள்ளார்.

'அவர்கிட்டே மார்க்க விஷயமா என்னால எதுவும் பேச முடியாது. நான் ஒரு கேள்வி கேட்டா திருப்பி 10 கேள்வி என்கிட்டே கேட்கிறார். எனக்கு பதில் சொல்லவும் தெரியல. அவரு 2 மாதம் அல்லது 3 மாதம் இருந்து விட்டு சவுதி சென்று விடுவார். அவரிடம் பிரச்னை வைத்துக் கொள்ளாதீர்கள்.' என்று ஆலோசனை வழங்கி உள்ளார்.

'மருமகப் பிள்ளையை விட்டுக் கொடுத்துக்க மாட்டீங்களே' என்று கலாய்த்துக் கொண்டாராம் அந்த இமாம். :-). இந்த செய்தி என் மனைவி மூலமாக என்னிடம் வந்தது. :-)

அந்த இமாமுக்கும் தெரியும் இவ்வாறு கூட்டாக தொழ வைப்பதுதான் சிறந்தது என்று. ஏன் தடுக்கிறார் என்றால் இவ்வாறு எல்லோரும் தொழ வைக்க ஆரம்பித்தால் அவருக்கு மதிப்பில்லாமல் போய் விடும். அவருக்கு வேலை போய் விடும். இதன் காரணமாகத்தான் அவர் இரண்டாவதாக நடத்தப்படும் கூட்டுத் தொழுகைகளை தடுக்க முயற்சிக்கிறார். இஸ்லாமிய சட்டங்களைப் பொருத்த வரை புரோகிதத்துக்கு இடமே இல்லை. நன்கு ஓதத் தெரிந்த இஸ்லாமிய சட்டங்களை ஓரளவு தெரிந்த யாருமே தொழ வைக்கலாம். மதரஸா சென்று ஆலிம் பட்டம் வாங்கியவர்தான் தொழ வைக்க வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. சொல்லப் பொனால் உலகமெங்கும் புரோகிதத்தை ஒழிக்க வந்ததுதான் இஸ்லாம் என்றால் மிகையாகாது.

என்னை தடுத்த அந்த மார்க்க அறிஞரின் மேல் கோபம் வரவில்லை. பரிதாபமே ஏற்பட்டது. அற்ப உலக சுகத்துக்காக நபியின் ஒரு நடைமுறையை தடை செய்து நாளை மறுமையில் இறைவனின் முன்னால் குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்படுவாரே என்ற வருத்தமும் ஏற்பட்டது.

நான் தொழ வைத்தால் எந்த எதிர்பும் சொல்லாமல் பார்த்துக் கொண்டு சென்ற மதினா பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் வாங்கிய அந்த சவுதி இமாமையும், கூட்டுத் தொழுகையை தடுத்த எங்கள் ஊர் இமாமையும் ஒப்பிட்டு பார்த்தேன். மறுமையில் எங்கள் ஊர் இமாமின் இழிந்த நிலைக்காக வருத்தப்பட்டு அவருக்கு நேர் வழி கிடைக்கட்டும் என்று பிரார்தித்தேன்.

அந்நிய நாடான சவுதியில் 100 தடவைக்கு மேல் தொழ வைத்த பொது வராத எதிர்ப்பு சொந்த மண்ணில் ஒரு முறை தொழுததற்காக பிரச்னையானது. ஆனால் தற்போது நிலைமை நிறைய மாறியுள்ளது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல இன்று தனியாக கூட்டு தொழுகை நடத்தினால் யாரும் தடுப்பதில்லை. அது நபிகள் நாயகத்தால் வலியுறுத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்பதை மக்களும் விளங்கிக் கொண்டனர். மார்க்க அறிஞர்களும் வேறு வழியின்றி எதிர்ப்பை குறைத்துக் கொண்டனர். அதே போல் தொப்பி போடாமல் பள்ளிக்கு வந்தால் முன்பெல்லாம் தடுத்து நிறுத்தப்படுவர். தற்போது அந்த கட்டுப்பாடுகளெல்லாம் உடைத்தெறியப்பட்டுள்ளது.

எல்லா புகழும் இறைவனுக்கே!