Followers

Friday, January 27, 2012

வந்தது பணத்துக்காக! கிடைத்ததோ சிறந்த வாழ்க்கை!

அமெரிக்க தொழிலதிபராகவும் பைலட்டாகவும் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ரிச்சர்ட் பெட்டர்ஸன் ஒரு காண்டராக்ட் விஷயமாக சமீபத்தில் ரியாத் வருகை புரிந்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகமாக இவரது கம்பெனி ஒப்பந்தம் எற்படுத்த இருந்தது. இதனால் இங்கு மூன்று மாதங்கள் தங்க வேண்டிய நிர்பநதம் ஏற்பட்டது. கோடீஸ்வரரான இவரது கம்பெனியின் மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும். இரண்டு விமானங்களுக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களுக்கும் சொந்தக்காரர்.



சவுதியில் தங்கியிருந்த ஒரு நாள் இரவு இவரை அழைப்பு வழிகாட்டுதல் மையத்திற்கு பார்வையாளராக அழைததிருந்தனர். அங்கு வந்தவுடன் கூடாரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் யாவும் அவரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் முன்பு இஸ்லாம் பற்றி படித்திருந்ததற்க்கும் தற்போது அவர் காணும் காட்சிகளுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளதை உணர்ந்து கொண்டார். அங்குள்ள விழா ஏற்பாட்டாளர்கள் அவரிடம் அன்போடு நடந்து கொண்ட முறை அவரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிறகு என்ன... வழக்கமான மாற்றம். ஆம்... இவரது மனதையும் இஸ்லாம் ஆட்கொள்ளத் தொடங்கியது. மேலும் பல சந்தேகங்களை அறிஞர்களிடம் கேட்டறிந்து கொண்டார். சில நாட்களிலேயே மன மாற்றம் வந்தது. ரிச்சர்ட் பெட்டர்ஸன் தனது மார்க்கத்தை மாற்றிக் கொண்டு தனது பெயரையும் அப்துல் அஜீஸாக மாற்றிக் கொண்டார்.

எலலாப் புகழும் இறைவனுக்கே!

“I came to the Kingdom for a commercial deal. I was so thrilled to make the best deal of my life with God Almighty by converting to Islam,” said Abdulaziz, during the conversion ceremony, commending the Saudi attire and describing it as comfortable and beautiful.

'பணம் சம்பாதிக்குகும் நோக்கில் நான் சவுதி அரேபியா வந்தேன். ஆனால் சிறந்த வாழ்க்கையை தற்போது சம்பாதித்துக் கொண்டு செல்கிறேன். இந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பாக என்னிடம் பழகினர். மார்க்கத்தை அனைவரும் தொடர்ந்து கடை பிடிக்கின்றனர். தங்களின் சகோதரனாக என்னை நினைத்து மிகுந்த அன்பு பாராட்டினர்.



நீங்கள இஸ்லாத்தை வெறுமனே படிப்பதால் எதனையும் அறிந்து கொள்ள முடியாது. என்னைப் போல் முஸ்லிம்களோடு ஒன்றாக கலந்து பழகுங்கள. பிறகு இஸ்லாத்தின் சுவையை நீங்களும் பருகலாம். அடுத்த முறை எனது நண்பர்களையும சவுதி அழைத்து வருவேன். நான் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிப்பேன்' என்கிறார் சகோ அப்துல் அஜீஸ்.

25-01-2012
-அரப் நியூஸ்


இஸ்லாத்துக்கு எதிராக அமெரிக்கா காய் நகர்த்துவதை இது போன்ற கோடீஸ்வரர்கள் இஸ்லாத்தை ஏற்பதின் மூலம் ஓரளவு மட்டுப்படுத்த முடியும் என்பது என் எண்ணம்.

இந்த செய்தியை படித்த ஒரு கிறித்தவர் கோபத்தில் அரப் நியூஸில் இட்ட பின்னூட்டம்:

WILLIAM JACKSON
Jan 28, 2012 00:08
“A Kuwaiti prince embraced Christianity “- :-)


டிஸ்கி: கண்டிப்பாக இவர் பணத்தாசையால் இஸ்லாத்தை தழுவியிருக்க மாட்டார். ஏனெனில் இவர் கோடீஸ்வரர். அடுத்து இவர் இனி தனது சொத்துக்களை கணக்கிட்டு அதில் 2.5 சதவீதத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

'நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள். தீமையைத் தடுக்கிறீர்கள்.'
-குர்ஆன் 3:110

25 comments:

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

மாஷா அல்லாஹ்....!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ அப்துல் பாஸித்!

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

மாஷா அல்லாஹ்....!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

இனிமேல் உங்களுக்கு நான் அற்புதமான பதிவு என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் எல்லா பதிவுகளுக்கும் அப்படி சொல்லி சொல்லி போர் அடித்துவிட்டது.
இனி சரி இல்லாவிட்டால் மட்டும் சரி இல்லை, மொக்கை என்று கூற உள்ளேன். உட்காருக(நிற்க).

நாம் இஸ்லாத்தை சரியான முறையில் கடை பிடித்தால் மாற்று மத சகோதரர்கள் கண்டிப்பாக மனம் மாறுவார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம். என்னை நான் திருத்திக் கொள்ள நெறைய இருக்கு சகோ. உங்கள் பதிவுகள் எங்கள் பொறுப்புக்களை மேலும் மேலும் அதிகம் ஆக்குகிறது. நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த
அல்லாஹ் போதுமானவன், பேராற்றல் உள்ளவன்.

டிஸ்கி 1 : நல்ல வேலை, நல்ல அரபிகளை சந்தித்து இருப்பார் போல். கழிசடைகளை சந்தித்து இருந்தால் இஸ்லாம் பற்றிய அவரது தவறான கணிப்பு உறுதியாகி இஸ்லாத்தின் மீது
வெறுப்பு அல்லவா கூடி இருக்கும் ???

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

நான் சவூதியில் இருந்தும் இது பற்றி தெரியாது அறிய தந்தமைக்கு நன்றி

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ சிராஜ்!

//ஏனெனில் எல்லா பதிவுகளுக்கும் அப்படி சொல்லி சொல்லி போர் அடித்துவிட்டது.
இனி சரி இல்லாவிட்டால் மட்டும் சரி இல்லை, மொக்கை என்று கூற உள்ளேன். உட்காருக(நிற்க).//

ஹா...ஹா... எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். போர் அடிக்கிறது என்று பின்னூட்டம் இடாமலும் ஓட்டளிக்காமலும் இருந்து விட வெண்டாம். :-)

//டிஸ்கி 1 : நல்ல வேலை, நல்ல அரபிகளை சந்தித்து இருப்பார் போல். கழிசடைகளை சந்தித்து இருந்தால் இஸ்லாம் பற்றிய அவரது தவறான கணிப்பு உறுதியாகி இஸ்லாத்தின் மீது
வெறுப்பு அல்லவா கூடி இருக்கும் ???//

உண்மைதான் சகோ! அரபிகளில் அதிகமானோர் தங்கள் மொழியில் அருளப்பட்டிருக்கும் இந்த வேதத்தை இன்னும் விளங்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இறைவனின் இடத்தில் வேறு நபர்களை வைப்பதில்லை. அந்த விஷயத்தில் மட்டும் இவர்களை பாராட்டலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஹைதர் அலி!

//நான் சவூதியில் இருந்தும் இது பற்றி தெரியாது அறிய தந்தமைக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Barari said...

நல்ல வேலை, நல்ல அரபிகளை சந்தித்து இருப்பார் போல். கழிசடைகளை சந்தித்து இருந்தால் இஸ்லாம் பற்றிய அவரது தவறான கணிப்பு உறுதியாகி இஸ்லாத்தின் மீது
வெறுப்பு அல்லவா கூடி இருக்கும் ???
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத்தை வழங்குகிறான்.அவர் எந்த கழிசடைகளை சந்திருத்திருந்தாலும் சரியே //

suvanappiriyan said...

சகோ பராரி!

//அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத்தை வழங்குகிறான்.அவர் எந்த கழிசடைகளை சந்திருத்திருந்தாலும் சரியே //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ...
மாஷா அல்லாஹ்...நல்ல செய்தி...

http://knrtimes.blogspot.com/ said...

அஸ்ஸலாமு அலைக்கும்..
மாஷா அல்லாஹ்...

http://knrtimes.blogspot.com/ said...

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்...

suvanappiriyan said...

சலாம்!

//சலாம் சகோ...
மாஷா அல்லாஹ்...நல்ல செய்தி...//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ ஹாஜா மைதீன்!

suvanappiriyan said...

சகோ சாதிக்!

//அஸ்ஸலாமு அலைக்கும்..
மாஷா அல்லாஹ்...//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ.

niyaz said...

masa allaha.............

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்..

மாஷா அல்லாஹ்

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

எல்லாப் புகழும் இறைவனுக்கே..

பதிவுக்கு நன்றி சகோ..

suvanappiriyan said...

//masa allaha.............//

வருகைக்கு நன்றி சகோ நியாஸ்!

suvanappiriyan said...

//அஸ்ஸலாமு அலைக்கும்..

மாஷா அல்லாஹ்//

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆயிஷா பேகம்!

//அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

எல்லாப் புகழும் இறைவனுக்கே..

பதிவுக்கு நன்றி சகோ..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

shiva said...

டேய் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா...மத பிரசாரமும் தீவிரவாதத்தை பரப்புவதை தவிர வேறு ஒண்டும தெரியாதா...

suvanappiriyan said...

சிவா!

//டேய் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா...மத பிரசாரமும் தீவிரவாதத்தை பரப்புவதை தவிர வேறு ஒண்டும தெரியாதா...//

'முஹம்மதே! இறைவனின் அருள் காரணமாகவே அவர்களிடம் நீர் நளினமாக நடந்து கொள்கிறீர். முரட்டுத் தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திரந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக!'

-குர்ஆன் 3:159

இப்னு அப்துல் ரஜாக் said...

நெகிழ்ச்சியான பதிவு.

Seeni said...

மாஷா அல்லா!

நல்ல பதிவு !
எனக்கு இது புதிய தகவல்!

Seeni said...

மாஷா அல்லா!

நல்ல பதிவு !
எனக்கு இது புதிய தகவல்!

Anonymous said...

தவறான தகவல் என் நினைக்கிறேன்.... வளர்க இஸ்லாம்