Followers

Monday, April 09, 2012

படைப்புக் கொள்கையைப் பற்றி சில ஆய்வுகள்!

//பெரு வெடிப்பு கொள்கை, குரானில் சொல்லப்பட்ட படைப்பு கொள்கையில் இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//- சகோ நரேன்!



'வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'
-குர்ஆன் 40:57

'படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்'
-குர்ஆன் 79:27


வானங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய இம் மாபெரும் பேரண்டத்தை இறைவன் 'ஆகு' என்ற ஒரு வார்த்தையில் உண்டாக்கினான் என்பதை குர்ஆனின் துணை கொண்டு முன்பு பார்த்தோம். அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் ஆராய்ச்சியின் வழியாக அறிவியல் பூர்வமாகவும் குர்ஆனின் வார்த்தை உண்மையானது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அதன் பிறகு படைப்புக் கொள்கைக்கு வருவோம்.



இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்த எனக்கு மனிதர்களாகிய உங்களை படைப்பது எனக்கு வெகு சுலபமே என்று மனிதர்களைப் பார்த்து இறைவன் குர்ஆனில் கூறுகிறான். பேரண்டத்தைப் படைக்க இறைவனின் ஆற்றல் அவசியம் என்பது போல் மனிதனைப் படைப்பதற்கும் இறைவனின் ஆற்றல் இங்கு அவசியமாகிறது. (ஒரு செல் உயிரி பரிணாமம் அடைந்து குரங்கு வரை வந்து பிறகு மனிதனானது என்ற வாதம் நாத்திகத்தை கொண்டு செல்ல டார்வினால் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கால கட்டம் வரை அறிஞர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. உலக முடிவு நாள் வரையில் அவர்களால் நிரூபிக்கவும் முடியாது.)

'பூமியில் உங்களை அதிகாரத்துடன் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வாழ்க்கைக்குரிய வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்'
-குர்ஆன் 7:10

'நீங்கள் எவைகளை எல்லாம் இறைவனுக்கு இணை கற்ப்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்ட கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.'
-குர்ஆன் 27:61


மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் இந்த பூமியை மனிதர்களுக்காக பிரத்யேகமாக இறைவன் உண்டாக்கியுள்ளான் என்பதை அறிகிறோம். இந்த பூமியானது தானாகவே மனிதர்களுக்கு எற்றவாறு மாற வில்லை என்பதும் இறைவன் அத்தகைய ஏற்பாட்டை கொண்டு வந்தான் என்பதையும் விளங்குகிறோம். பிரபஞ்சத்தின் வேறு எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது என்பதையும் இதிலிருந்து விளங்குகிறோம்.



பெரு வெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகி வரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதானது. இதையே நாம் அறிவியல் பார்வையில் பார்க்க வேண்டுமானால் மிக மிக மிக கடினமான காரியமாகும்.

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளுமே மனிதன் வாழ தகுதியுடையதாக இல்லை பூமியைத் தவிர. பூமியைப் படைத்த இறைவன் அதை மனிதனுக்காக பிரத்யேகமாக படைத்ததாகவும் கூறுகிறான். இந்த பூமியை மனிதனுக்காக படைக்கவில்லை என்றால் மற்ற உயிரினங்களைப் போலவே எந்த சட்ட திட்டங்களும் இல்லாமல் சாதாரணமாக இருந்திருப்பான். ஆடு மாடுகளைப் போல் எப்படி வேண்டுமானாலும் மனிதனும் இருந்து கொள்ளலாம். நன்மை தீமைகளை பிரித்தறியும் கடமையும் அவனக்கு இருந்திருக்காது. இத்தனை வசதி வாய்ப்புகளை நமக்காக ஏற்படுத்திய இறைவன் அவன் சொல்படி நாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்பும் நியாயமான ஒன்றே!

பூமியைப் போன்ற ஒரு கோள் அல்லது துணைக்கோள் உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலார் ஷெப்லி அவர்கள் கூறுகின்றார். அது என்னவென்று பார்ப்போம்:

1. அந்தக்கோள் நட்சத்திரங்களிலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.

2. அந்தக் கோள் சரியான வெப்ப நிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப் பாதை (Orbit) அதற்க்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

3. அந்தக் கோளுக்கு விஷம் கலவாத ஒரு வளி மண்டலம் (Atmosphere) இருக்க வேண்டும்.

4. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுகள் (Sources) இருக்க வேண்டும்.

5. காற்றும் நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயனக் கலவையாக (Chemical Composition) இருக்க வேண்டும்.

6. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலை நிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.

ஆதாரம்: OF STARS AND MEN, PAGE 66-67.

மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வு குறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால் மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக் கோள் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் பார்ப்போம்:

7. அந்தக் கோள் மனிதனின் உணவிற்க்கும் ஏனைய உபயோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியைப் பெற்றிருக்க வேண்டும்.

8. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.

9. இரவு பகல் மாறி வருவதற்க்கேற்ப அக்கோள் சீரான அச்சின் சுழற்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

10. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்ற விதத்திலான புவியீர்ப்பு விசையை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.

இங்கு நாம் இந்த இடத்தில் நமது அறிவைக் கொண்டு சற்று சிந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான விண் மீன்கள் கோளகள் குறுங்கோள்களையுடைய இந்த பேரண்டத்தில் பூமியில் இத்தகைய வசதி வாய்ப்புகள் உருவானது எவ்வாறு? தானாகவே அசெம்பிள் பண்ணிக் கொண்டதா? அதை நமது அறிவு ஏற்கிறதா?

மனிதனின் உடலமைப்பு நீரில் வாழ உகந்ததாக இல்லை. ஆனால் கடலில் வாழும் மீன்களே செல்ல முடியாத ஆழத்துக்கு சில உபகரணங்களின் துணையால் மனிதன் சென்று விடுகின்றான். தனக்கு இறக்கை இல்லாவிட்டாலும் பறவைகளே போக முடியாத தூரத்துக்கு வானத்தின் மேல் பறந்து காட்டுகிறான். காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் சொல்வதை எல்லாம் கேட்கும்படி பழக்கி விடுகிறான். இந்த ஆற்றல் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கல்வித் திறனால் வந்தது. இல்லை என்றால் விலங்குகளைப் போலவே மரங்களிலும் குகைகளிலும் தனது வாழ்க்கையை இன்றும் கழித்து வந்திருப்பான் மனிதன். சிங்கம் புலி ஆடு மாடு போன்றவை தங்களது அறிவை மெருகேற்றி இன்று தங்களுக்கென்று ஒரு குடிலை அமைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் அமைத்துக் கொடுத்தால் அதில் வந்து அமர்ந்து கொள்ளும். இல்லை என்றால் மரத்து நிழல்களிலோ காடுகளிலோ தங்களது இருப்பிடத்தை அமைத்து கொள்ளும்.



இவ்வளவு அறிவையும் ஆளும் திறனையும் மனிதனுக்கு அள்ளித் தந்த இறைவன் அந்த மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அடுத்து இன்றைய அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்க்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என சொல்லி வருகிறது. இப்பேரண்டம் இருப்பதால்தான் மனிதனின் சிந்தனை விரிவடைந்து மேலும் மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாள் தோறும் வெளியிட்டு வருகிறான். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இப்பேரண்டம் அவசியம் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. பிற்காலத்தில் இன்னும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது இப்பேரண்டத்தின் முக்கியத்துவத்தை மனித குலம உணர்ந்து கொள்ளும். அதுவரை நாமும் பொறுப்போம்.

26 comments:

Rabbani said...

ஸலாம் சகோ
பதிவு போட்டு 5 நிமிடத்துல வாசகர் பரிந்துரை அப்பறம் மைனஸ் புலிகளின் தாக்குதல்
இம்ம்
பார்க்கலாம்

மைனஸ் வோட் குத்த ஒரு கூட்டம் வெறியா அலையுது போல ஹாஹாஹாஹாஹாஹா
உங்க பதிவுனால ரொம்பவே பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என நினைக்கிறேன்

suvanappiriyan said...

சலாம் சகோ ரப்பானி!

//மைனஸ் வோட் குத்த ஒரு கூட்டம் வெறியா அலையுது போல ஹாஹாஹாஹாஹாஹா
உங்க பதிவுனால ரொம்பவே பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என நினைக்கிறேன்//

நான் எழுதிய பதிவுகளில் அறிவியலுக்கு மாற்றமான கருத்து ஏதும் இருந்தால் அது இன்னதுதான் என்று எடுத்துக் கூற வேண்டும். தவறு இருந்தால் திருத்திக் கொள்வேன். அதை விடுத்து 30 அல்லது 35 மைனஸ் ஓட்டுக்களை குத்துவதால் நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்பது உறுதியாகிறது. அந்த வேகத்தில் விழுவதுதான் இந்த மைனஸ் ஓட்டுகள். ஏக இறைவனை பிரசாரம் செய்யும் எவருக்குமே எந்த நாட்டிலுமே எதிர்ப்பு அதிகமாகவே இருக்கும். எதிர்ப்பில் வளர்ந்ததுதானே இஸ்லாம்.

எனவே அறியாத அந்த மக்கள் நேர்வழி பெற பிரார்த்திப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Barari said...

மைனஸ் ஒட்டுக்கென்றே ஒரு கோவி (காவி) கும்பல் அலைகிறது .இந்த கூட்டத்தை அலட்சியபடுத்தி இன்னும் வீரியமாக உங்கள் பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள் .

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//1.அத்வைதம் என்றால் என்ன?//

அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) - அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் தத்துவம்.

கி.பி. 788-820ம் காலத்தே வாழ்ந்த சங்கரராய் (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.[1]
-Wiki pedia

//3.இந்து புராணம் என்று எதனை சொல்கிறீர்கள்?//

நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதி அதனை இந்து மத புராணம் என்று சொன்னாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். யார் வேண்டுமானாலும் எழுதலாம். இதற்கு ஒரு வரைமுறை கிடையாது. ராமாயண் கதையே பத்துக்கு மேல் பல மாடல்களில் இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

//4. இப்போது எப்படி, என்ன சத்வீதம்,யார் செய்தது மிக்ஸிங் என விள்க்குங்கள்!//

ஒரிஜினல் இருந்தாலல்லவா மிக்ஸிங்கைப் பற்றியும் சதவீதத்தைப் பற்றியும் பேசமுடியும். அனைத்தையும்தான் திறமையாக அழித்து விட்டீர்களே!

//5.ஓசூர் இராஜன் பதிவில் "அவர் சொல்வது சூஃபிக்களால் இந்தியாவில் இஸ்லாம் பரவியது" என்பதை ஆமாம் அய்யா போடும் நீங்கள்,இங்கு சூஃபிக்களை இஸ்லாமியர்கள் அல்ல என எதிர்ப்பதாக் போடுவது இரட்டை வேடம்.//

எங்கு ஆமாம் போட்டேன் என்பதை ஆதாரத்தோடு கூறவும்.

அடுத்து இவர் இஸ்லாமியர் என்று யாரையும் என்னால் சொல்ல முடியாது. அது இறைவனுக்கு தெரிந்த ரகசியம்

//6. உன்மையான் வஹாபி இஸ்லாம் இந்தியாவிற்கு வந்து 30+ வருடங்கள் மட்டுமே ஆகிறது.இதற்கு முன் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல!.சூப்பரப்பு.//

அப்படி நான் சொல்லவில்லை. அது உங்களின் கற்பனை.

//7. குந்தவைக்கு இபோதும் முஸ்லிம் பெண்கள் வழிபாடு செய்வதாக ஓசூர் இராஜன் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு ஏன் தெரிவிக்க வில்லை?//

தர்ஹா வணக்கம் இஸ்லாத்துக்கு புறம்பானது என்று பல இடங்களிலும் சொல்லி வருகிறேன். முகமது நபி அடக்கஸ்தலத்தை வணங்கினாலும் இஸ்லாமிய பார்வையில் தவறு. எனவேதான் மதினாவில் இன்றும் காவலர்கள் நின்று அறியாத மக்கள் வணங்கக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

.

kannan said...

இந்த பதிவு முற்று பெற வில்லை என்று நினைக்கிறேன். infroamtion / comparission not enough.

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

suvanappiriyan said...

சகோ சாமி கண்ணன்!

//இந்த பதிவு முற்று பெற வில்லை என்று நினைக்கிறேன். infroamtion / comparission not enough.//

பதிவு அதிக நீளமாக இருந்தால் படிப்பவர்கள் சோர்வடைந்து விடக் கூடும். எனவேதான் சில ஆதாரங்களை மட்டும் வைத்தேன். முடிந்தால் இதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் இடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ பராரி!

//மைனஸ் ஒட்டுக்கென்றே ஒரு கோவி (காவி) கும்பல் அலைகிறது .இந்த கூட்டத்தை அலட்சியபடுத்தி இன்னும் வீரியமாக உங்கள் பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள் .//

அவர்கள் அவர்களின் வேலைகளை சளைக்காது செய்து கொண்டிருக்கட்டும். நாமும் நமது வேலையை தொய்வின்றி செய்து வருவோம்.

ஒவ்வொரு மைனஸ் ஓட்டுகளும் நமக்கு ஒரு விட்டமின் மாத்திரை. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சார்வாகன் said...

ஹா ஹா ஹா

பெருவெடிப்பு அல்லா நிகழ்த்தினார் என்றால் ,.அதே போல் பல பெரும் பெரும் வெடிப்புகளும் பலரால் தினமும் நடத்தப்பட்டு வருகின்றன.இப்படிஅல்லா நடத்தினார் என குரான் சொல்கிறது என்பதை நம்ப உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு!

அறிவியல் சொல்வதை அல்லாவும் (அன்றே) சொன்னால் (மட்டுமே) அவர் கடவுள்!!!!!!

இது ஒரு பெரிய விடயமா !!!!!!!!

பெருவெடிப்பு என்பதே கால்ச்சகரத்தின் சிறு பகுதி என்று இந்து மதவாதிகள் போட்டுத் தாககிவிட்டார்கள்.பிரபஞ்சம் சுழற்சி முறயிலானது என்று அவர்கள் இபோதே கூறுகிரார்கள்.ஒருவேளை இது ந்டூபிக்கப்பட்டால ஏதேனும் மாற்றிப்போட வசனம் தயாராக் வைக்கவும்.

இந்து மத கூறும் விடயங்கள் எவ்வளவு உண்மையோ அதே அள்வு குரான் கூறும் விடயங்களும் உணமை.

என் மத சார்பின்மையை எப்படி அழகாக நிரூபித்தேன் பார்த்தீர்களா!

இந்த வசனத்தில் சரியாக அறிவியல் இல்லையே.கொஞ்சம் பாருங்கள்.
“16:8. இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.”

அப்புறம் உங்க கோஷ்டி ஆள் ஒருவர் ஓட்டுப்பட்டை மறைத்து + ஓட்டு மட்டும் வாங்கு இரகசியத்தை கண்டுபிடித்தாலும் சில காஃபிர்கள் மைனஸ் ஓட்டு கொஞ்சம் போட்டு விட்டார்கள்.அந்த தொழில் இரகசியத்தை கற்று தாவா பணியை மேம்படுத்த ஓர் ஆலோச்னை.!!
பிறகு வருகிறேன்.நன்றி

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//“16:8. இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.”//

'இன்னும் அறியாதவற்றையும் படைக்க இருக்கிறான்' ஆஹா என்னவொரு அறிவியல் வாக்கியம். ராக்கெட், விமானம், கப்பல், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என்று அந்த மக்கள் அறியாத புதிய வாகனங்கள் பிற்காலத்தில் படைக்கப் போகிறேன் என்ற நிதர்சனமான ஒரு அறிவியல் தொக்கி நிற்பதை பார்க்க வில்லையா சார்வகன்! டார்வினிஷ்டாக இல்லாமல் சார்வாகனகாக சிந்தித்துப் பாருங்கள். பல உண்மைகள் விளங்கும்.

//அப்புறம் உங்க கோஷ்டி ஆள் ஒருவர் ஓட்டுப்பட்டை மறைத்து + ஓட்டு மட்டும் வாங்கு இரகசியத்தை கண்டுபிடித்தாலும் சில காஃபிர்கள் மைனஸ் ஓட்டு கொஞ்சம் போட்டு விட்டார்கள்.அந்த தொழில் இரகசியத்தை கற்று தாவா பணியை மேம்படுத்த ஓர் ஆலோச்னை.!!
பிறகு வருகிறேன்.நன்றி//

நமக்கு ஓட்டைப் பற்றி எல்லாம் கவலையில்லை. நாம் எழுதும் எழுத்து நாலு பேரை போய் அடைய வேண்டும். அவர்கள் தெளிவு பெற வேண்டும். அது போதும்.

சார்வாகன் said...

சகோ சு.பி
நான் குறிப்பிட்டது பயணம் குறித்து அல்ல!

நான் குறிப்பிட்ட கோவேறு கழுதையை படைத்தான் என்பதில் அறிவியல் பிழை இருக்கிற‌து.

நாம் நக்கீரர் பரம்பரை ஆமாம்.

கோவேறு கழுதை என்பது என்ன???????

ஏன் கூறுகிறேன் என்பதை போட்டிக் கம்பெனி சக விஞ்ஞானி ஆஸிக் அகமது அல்லது விஞ்ஞானி கார்பன் கூட்டாளி அவர்களிடம் கேடகவும்

நன்றி

Anonymous said...

அன்புடன் சுவனப்பிரியன்,

////6. உன்மையான் வஹாபி இஸ்லாம் இந்தியாவிற்கு வந்து 30+ வருடங்கள் மட்டுமே ஆகிறது.இதற்கு முன் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல!.சூப்பரப்பு.//

அப்படி நான் சொல்லவில்லை. அது உங்களின் கற்பனை.//

மேற்படி கருத்தைக் கூறியவரின் அறியாமையை என்னவென்பது! இலங்கையின் கண்டி மாவட்ட நீதிமன்றில் 1908 ஆம் ஆண்டு (அதாவது இன்றைக்கு 104 ஆண்டுகளுக்கு முன்னர்) நடைபெற்ற வழக்கொன்றில் மலபாரிகள், அதாவது இன்றைய கேரளத்தைச் சேர்ந்தவர்கள் வஹ்ஹாபியக் கொள்கையை இலங்கையிற் பரப்ப வந்திருப்பதாகக் குற்றஞ் சுமத்தி வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், அதற்கு முற்பட்ட காலத்திலேயே வஹ்ஹாபிகள் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாவதுடன் மேற்படி நபரின் 30+ ஆண்டுகள் என்ற வாதம் தவறானது என்பது நிரூபணமாகின்றது.

இவண்,
முஹம்மது

அன்பு ஆமீரா said...

'நீங்கள் எவைகளை எல்லாம் இறைவனுக்கு இணை கற்ப்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்ட கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.'
-குர்ஆன் 27:61//
அண்ணா அல்லாஹ் எல்லொராலும் புரிந்துகொள்ளமுடியாதவ்ர். அற்புதமானவர்

suvanappiriyan said...

சகோ அன்பு ஆமிரா!

//அண்ணா அல்லாஹ் எல்லொராலும் புரிந்துகொள்ளமுடியாதவ்ர். அற்புதமானவர்//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//மேற்படி கருத்தைக் கூறியவரின் அறியாமையை என்னவென்பது! இலங்கையின் கண்டி மாவட்ட நீதிமன்றில் 1908 ஆம் ஆண்டு (அதாவது இன்றைக்கு 104 ஆண்டுகளுக்கு முன்னர்) நடைபெற்ற வழக்கொன்றில் மலபாரிகள், அதாவது இன்றைய கேரளத்தைச் சேர்ந்தவர்கள் வஹ்ஹாபியக் கொள்கையை இலங்கையிற் பரப்ப வந்திருப்பதாகக் குற்றஞ் சுமத்தி வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், அதற்கு முற்பட்ட காலத்திலேயே வஹ்ஹாபிகள் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாவதுடன் மேற்படி நபரின் 30+ ஆண்டுகள் என்ற வாதம் தவறானது என்பது நிரூபணமாகின்றது.//

வருகைக்கும் சார்வாகனுக்கு உண்மையை விளக்கியமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//நாம் நக்கீரர் பரம்பரை ஆமாம்.//

மெய்யாலுமா! சொல்லவேயில்லே! :-)

//கோவேறு கழுதை என்பது என்ன???????

ஏன் கூறுகிறேன் என்பதை போட்டிக் கம்பெனி சக விஞ்ஞானி ஆஸிக் அகமது அல்லது விஞ்ஞானி கார்பன் கூட்டாளி அவர்களிடம் கேடகவும்//

அவர்களிடமெல்லாம சென்று கேட்கும் அளவுக்கு சிக்கலான கேள்வி ஒன்றும நீங்கள் கேட்டு விட வில்லை.

கழுதையும் குதிரையும் இணைந்து உண்டான புதிய இனத்தை கோவேறு கழுதை என்கிறோம். கழுதையையும் குதிரையையும் படைத்தது யார்? அந்த ஏக இறைவன். அந்த படைப்பிலிருந்து வெளியான விந்துத்துளியிலிருந்தும் கரு முட்டையிலிருந்தும் உருவானதே கோவேறு கழுதை.

எனது தாயும் தந்தையும் இணைந்து என்னை உருவாக்கினார்கள். இப்படியே வழி வழியாக பின்னோக்கி சென்றால் இறைத்தூதர் ஆதமில் சென்று இந்த தொடர் முடிவடையும். இப்பொழுது சொல்லுங்கள் என்னை படைத்தது யார்? நபி ஆதமை படைக்க யார் காரணமாக இருந்தானோ அவன்தான் என்னையும் படைத்தான். ஆதமுடைய ஜீன்தான் உலக மக்கள் அனைவரிடத்திலும் உள்ளது.

இங்கு அறிவியலில் என்ன முரண்பாட்டைக் கண்டு விட்டீர்கள்?

விந்துத் துளியையும் கரு முட்டையையும் விஞ்ஞானிகளே உருவாக்கி ஒரு புதிய உயிரினத்தை உண்டாக்கினால்தான் உங்கள் வாதம் எடுபடும். எனவே இந்த இடத்திலும் நீங்கள் சறுக்கி விட்டீர்கள் நண்பரே!

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//சூஃபியீயம் என்பது தவறு என்றால் உங்களின் பிரிவான வஹாபியீயம் எப்படி சரி என்று சொல்கிறீர்கள்?.//

உறவுகளிலிருந்து நீங்கி உலக ஆசைகளைத் துறந்து சன்னியாசியாகி தவக்கோலம் தரித்து, நிஷ்டையில் திளைத்து காண்பதெல்லாம் இறைவன் என்ற முக்தியைப் பெறுவதே ஸூஃபியிசம். துறவு வழியாக அனைத்துப் பொருள்களும் இறைவன் என்றாகி இறுதியில் தானும் இறைவன் என்ற உச்ச நிலையை எட்டுவதே ஸூஃபியிசக் கொள்கை!
ஷரீஅத் மட்டுமில்லாமல் தரீகத், ஹகீகத், மஃரிஃபத் என மார்க்கத்தோடு மேலதிகக் கொள்கைக் கோட்பாடுகளைச் சேர்த்துக்கொண்ட ஸூஃபித் துறவற அத்வைதிகள் சம்சாரி வாழ்க்கையைப் புறக்கணித்து, சிற்றின்பங்களைத் துறந்தால் பிறகு ''நீ தான் இறைவன், இறைவன் தான் நீ'' என்று ஆகிவிடுவாய் என பாமரமக்களை ஏமாற்றுகின்றனர். பீர் முரீது பைஅத் - குரு சிஷ்யன் எனக் கூறி குருவின் விருப்பபடியெல்லாம் சிஷ்யனை நடத்தலாம் என்று மனித சுயமாரியாதையை இழக்கும் அளவுக்கு முற்போக்குக் கொள்கையுடைய சூஃபியிசக் கொள்கையை இஸ்லாமுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும்.

இன்னும் துறவு நெறியில் முற்றிய சூஃபி ஞானிகள் தன்னைக் காதலனாக்கி, இறைவனைக் காதலியாக்கி வர்ணித்து முட்டை பொறித்து முழுக்கோழியும் பொறித்து, தட்டைப் பீங்கனில் வைத்துக் கொடுத்து, குணங்குடி மஸ்த்தான் களிப்பாடல்கள் பாடிய சங்கதிகளும் உண்டு. துறவறத்தின் மூலம் இறைவனும் மனிதனும் ஒன்றாகக் கலந்திடலாம் வாருங்கள் என்ற அத்வைதக் கொள்கைக்கு அழைப்பதே சூஃபியிசமாகும். இஸ்லாமில் துறவறத்துக்கு அறவே இடமில்லை.

''அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.''
- (அல்குர்ஆன் 57:27)

குர்ஆன் துறவு வாழ்க்கையை கண்டித்திருக்க சூஃபிகள் துறவு வாழ்க்கையை மேற்கொள்வது இஸ்லாத்துக்கு மாற்றமல்லவா?

அடுத்து வஹாபியிசத்துக்கு வருவோம். வஹாபிசம் என்று இஸ்லாத்தில் தனியாக ஒன்றும் இல்லை. தவ்ஹீத், ஏகத்துவம், வஹாபி என்று அந்தந்த ஊரில் பிரபலமான பெயரை வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். இநத மூன்று பிரிவினரும் குர்ஆனையும் முஹமது நபி அவர்களின் ஆதாரபூர்வமான ஹதீதுகளையும் பின்பற்றக் கூடியவர்கள். இஸ்லாம் கூறுவதும் அதுதான். குர்ஆனின் கட்டளையும் அதைத்தான் சொல்கிறது.

'வேதத்துக்கு முரண்படுவோர் உண்மையிலிருந்து தூரமான முரண்பாட்டிலேயே உள்ளனர்'
-குர்ஆன் 2:176

இது போன்று பல இடங்களில் வேதத்துக்கு முரண்படக் கூடாது என்று முஸ்லிம்களைப் பார்த்து இறைவன் எச்சரிக்கிறான். எவ்வளவு பெரிய சூஃபி ஞானியாக இருந்தாலும் அவரது கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதனை புறந்தள்ள வேண்டும். குர்ஆனில் நாம் ஆராய்ந்து வெளியிடும் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்காததாக இருக்க வேண்டும். குர்ஆனின் முழு விளக்கத்தையும் முகமது நபியை தனது வாழ்நாளில் விரிவாக விளக்கி விட்டார். தற்போது அதனை மொழி மாற்றம் தான் செய்து வருகிறோம். அப்படி மொழி மாற்றம் செய்யும் போது தற்கால அறிவியல் கருத்துகளோடும் குர்ஆன் வசனத்தைப் பொருத்திப் பார்க்கிறோம். அப்பொழுது கூட முகமது நபியின் விளக்கவுரைக்கு எதிர் கருத்தாக நமது கருத்தும் அமைந்து விடக் கூடாது. இதிலெல்லாம் தவ்ஹீத்வாதிகள்(வஹாபிகள்) கவனமாக இருப்பர். சூஃபி பக்தர்கள் இதிலெல்லாம் கவனத்தை செலுத்தாது தங்களின் தலைவர் என்ன சொல்கிறாரோ அதற்கு மறு பேச்சு பேசாமல் அவருக்கு தலையாட்டுபவர்களாக முடிவில் மாறி விடுகின்றனர். இதைத்தான் நாம் கண்டிக்கிறோம்.

suvanappiriyan said...

திரு கல்வெட்டு!

//ஆனால் சூஃபியிசம் என்பது இஸ்லாமல்லாத தனிமதம் என்பது மட்டும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. :-)))))//

உண்மைதான். குர்ஆனில் ஒரு முஸ்லிம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டளை வருகிறது. இறைவனை இப்படித்தான் நெருங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதெல்லாம் எனக்கு தேவையில்லை. என் மனம் எப்படி இறைவனை நாடுகிறதோ அதுபோல தான் நானும் நாடுவேன் என்பது இறைவனுக்கு நாம் பாடம் எடுப்பதாகி விடும். எனவேதான் அதனை தவறு என்கிறோம்.

சகோ சார்வாகன்!

// நத்தர்வெளி என்னும் சூஃபியால் இராசராச சோழனின் அக்கா குந்தவை இஸ்லாமிய மதம் மாறினார்,அவர்தான் துலுக்க நாச்சியார்,ஆகவே பல முஸ்லிம் பெண்கள் அவருக்கு சீரங்கம் கோயிலில் வழிபாடு செய்கின்றார் என்றால் என்று கூறுவதற்கு அதனை பொய் செய்தி என்று மறுக்கவில்லையே!.அது இஸ்லாம் அல்ல சூஃபியம் என பொங்கவில்லையே!.

சோழ அரசி மட்டும் சூஃபியாக் இருப்பது இஸ்லாமுக்கு பெருமை.அப்போது சூஃபி=இஸ்லாம் ,ஒரு ஏழை,சாமான்யன் சூஃபியாக் இருப்பது சிறுமையா?//

இந்த வரலாறுகளை எழுதி வரும் ஓசூர் ராஜனே இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பிப்பதாக கூறுகிறார். எனக்கு அந்த ஆராய்ச்சி நூல்களைப் பற்றி தெரியாததால் நான் ஒன்றும் கேட்கவில்லை. ஆரியர்கள் செய்த சூழ்ச்சியினால் நமது தொன்மையான வரலாறுகள் பல மறைக்கப்பட்டுள்ளதை பல அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். குந்தவைக்கு அன்றைய காலகட்டத்தில் ஒரு சூஃபி ஞானி இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இறைவனுக்கு இணை வைக்காமல் ஒருவன் முஸ்லிமாக மாறினால் அவன் சூஃபியாகவே இருந்தாலும் கடைசியில் குறைந்த மார்க்கிலாவது பாஸாகி விடுவான். இஸ்லாத்துக்கு மாறாமல் மரணிப்பதை விட ஒரு சூஃபி இஸ்லாமியனாக மரணிப்பது இஸ்லாமிய பார்வையில் சிறந்ததே! அதற்காக துறவறம் பூணுவதும் தர்ஹாக்களே கதி என்று கிடப்பதும் பரதேசிகளாக ஊர்ஊராக அலைந்து திரிந்து பிச்சை எடுத்து சாப்பிடுவதும் இஸ்லாம் காட்டாத வழி அல்லவா! மனிதனுக்கு சுய மரியாதை அவசியம் இல்லையா!

உழைத்து சாப்பிடுங்கள்: குர்ஆன் சொன்னதற்கு மேல் அதிகப்பிரசங்கித்தனமாக வணக்கங்களை புதிதாக உருவாக்காதீர்கள்: திருமணம் முடித்து குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக இருங்கள். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து நிறைவேற்றுங்கள். உங்களுக்கு நீங்களே ஏன் சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறிர்கள் என்றுதான் கேட்கிறோம்.

suvanappiriyan said...

ராமநாதபுரம் அருகே ஊரை விட்டு குடும்பம் ஒதுக்கி வைப்பு

தீண்டாமைக் கொடுமை : இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற குருசாமி குடும்பம்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த குருசாமி என்பவரது குடும்பத்தை இரண்டு ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள் எனவே சகோதரத்துவத்தை போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியுள்ளனர்.

எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி, கிணறுகளில் குடிநீர் எடுக்கவும், ஊரணியில் குளிக்கவும் தடை விதித்தனர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் கிராம மக்கள் பேசினால், அபராதம் விதிக்கப்படுவதால், யாரும் பேசுவதில்லை. இது குறித்து தமிழக முதல்வர் உட்பட பலருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை". இதனால், மனமுடைந்த மகன் புகழேந்திரன், மனித குலத்தின் இயற்கை மார்க்கத்திற்கு திரும்பினார்..
-Anbu selvan

Anonymous said...

ஆகா அற்புதமய்யா அற்புதம். எமக்கு முன்னரே நீர் நோபல் பரிசு வாங்கிவிடுவீர் போலிருக்குதே.

பிக்பாங்கு பற்றி எழுதி பின்னி பிடலெடுத்துவிட்டீர்.சபாசு! இனி குரானில் குவான்டம் மெக்கானிக்ஸ் பற்றி எழுதி சகோ சார்வாகன் வாயை அடையும்.

//இப்பேரண்டம் இருப்பதால்தான் மனிதனின் சிந்தனை விரிவடைந்து மேலும் மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாள் தோறும் வெளியிட்டு வருகிறான். //

ஆனால் இறைவனின் இந்த திட்டம் வெள்ளைக்காரனுகளிடம் மட்டும்தான் வேலைசெய்யவது ஏன் என்று தெரியவில்லை. அதுவும் நமது சகோ'களுக்கு சிந்தனை என ஒன்று வளரவே இல்லை போலிருக்குதே. இதுவரை 7 பேருதான் நோபல் பரிசு வாங்கியுள்ளார்கள். ஆனால் நமது எதிரி கும்பலான யூதர்கள் மைனாரிட்டியாக இருந்தாலும் இதுவரை 177 பரிசு வாங்கிவிட்டார்கள். இனியாவது நான் நீங்கள், கார்பன் கூட்டாளி ஆசிக் என அனைத்து சகோக்களும் நோபல் நோபல் என ஆளுக்கு ஒண்ணு வாங்கி கணக்கை கூட்டுவோம். இன்ஷா அல்லா!

suvanappiriyan said...

By ARAB NEWS

Published: Apr 10, 2012 02:04 Updated: Apr 10, 2012 02:13

JEDDAH: Saudi Arabia has been listed the 26th happiest nation in the world in a survey released by the United Nations. Its GCC neighbor the United Arab Emirates held 17th position while two other GCC states, Kuwait and Qatar, ranked 29th and 31st.

The list of happiest nations is dominated by North European nations. Denmark was ranked at the top of the scale, ahead of Finland, Norway, the Netherlands and Canada.

According to statistics published by the Ministry of Economy and Planning last year, annual per capita income in the Kingdom reached SR49,000. The country’s per capita income remained unchanged because of dramatic population increase.

The unhappy nation list is dominated by the poor African countries. At the bottom of the rankings are Togo, Benin, Central African Republic, Sierra Leone, Burundi, Comoros, Haiti and Tanzania, said the 150-page report.

Seeni said...

nalla thakaval!

Anonymous said...

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு

naren said...

வாங்க நண்பர் சுவன்ப்பிரியன்,

நல்ல பதிவு- LOL

கொஞ்சம் நேரமின்மை, பிறகு வருகிறேன்.

Anonymous said...

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு

Anonymous said...

//Anonymous said...

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு//

பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்... சகோஸ்,
சகோ "பன்முகம்" சுவனப்பிரியன் அவர்களே,
கோவேறு கழுதையின் பிறப்பின் வரலாற்றை ரொம்ப நல்லா சொல்லி இருக்கிறீங்க ...கூடிய விரைவில் சகோ சார்வாகன் தாய் மார்கத்துக்கு
வருவார்(இறைநாடினால்) சர்வாகான் என்கிற பெயரிலே...